எங்களது மண் சார்ந்த உறவுகள் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் அவர்களது எண்ணங்கள் இந்த மண்ணிலே தான் இருக்கின்றது என நாடாளுமன்ற உறுபபினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி - உருத்திரபுரம் விளையாட்டு மைதானத்தில் பார்வையாளர் அரங்கு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், நாங்கள் இந்த மண்ணிலே நீண்ட பாரம்பரியத்தோடும், அடையாளங்களோடும் வாழ்ந்த இனம்.
கிளிநொச்சி மாவட்டத்தைப்பற்றி பேசுகின்றபோது வரலாற்று சிறப்புமிக்க உருத்திரபுரிஸ்வரர் ஆலயத்தை பேசுகின்றோம்.
இது போன்ற பல அடையாளங்களை பேசுகின்றோம், அதுபோல இந்த மண்ணிலே வாழ்ந்து இந்த மண்ணுக்குப்பெருமை சேர்த்த திரு திருமதி முருகேசு நல்லம்மா குடும்பத்தினர் அடையாளமாக வாழ்ந்திருக்கின்றார்கள்.
அவர்களது நினைவாக அவர்களது அடையாளமாக கிளிநொச்சி மாவட்டத்திலேயே முதலாவது பார்வையாளர் அரங்கை அமைத்து வழங்கியிருக்கின்றார்கள்.
புலம்பெயர்ந்திருக்கின்ற இவர்களது குடும்பத்தினர் புலம்பெயர்ந்த வாழ்ந்தாலும் அவர்களது எண்ணங்களும் சிந்தனைகளும் இந்த மண்ணை நோக்கி இருக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments
Post a Comment