This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

50% OFFICERS 👇👇🔴👇👇

50% OFFICERS 👇👇🔴👇👇
I found this great deal on Daraz! Check it out! Product Name: MAVIC 3 Clone Aerial Drone with Camera - Explore the Skies with Confidence Product Price: Rs.15,000 Discount Price: Rs.7,189

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, June 30, 2025

வவுனியாவில் பெற்றோல் பதுக்கு வைத்தவர்களுக்கு நடந்த கதி!! சுவாமி அறை எரிந்தது!!


வவுனியாவில் பெற்றோல் பதுக்கு வைத்தவர்களுக்கு நடந்த கதி!! சுவாமி அறை எரிந்தது!!

வவுனியா – பண்டாரிக்குளத்தில் உள்ள வீட்டில் திடீரென தீ பற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் பள்ளி தெரியவருவதாவது சாமி அறையில் விளக்கு ஏற்ற தேங்காய் எண்ணெயிணைக்கு பதிலாக பெற்றோலை பயன்படுத்தியதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

கதிர்காமத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற பஸ் கோர விபத்தி சிக்கியது!!


கதிர்காமத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற பஸ் கோர விபத்தி சிக்கியது!!

கதிர்காமம் சென்று திரும்பிய யாத்திரிகர்களை மட்டக்களப்பு ஆரையம்பதியில் இறக்கிவிட்டு திரும்பிய பேருந்து கிரான்குளத்தில் விபத்தி சிக்கிய நிலையில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று காலை (30) மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

கதிர்காமம் புனித யாத்திரையை நிறைவு செய்த யாத்திரிகர்களை ஆரையம்பதியில் இறக்கி விட்டு மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதி வழியே தேற்றாத்தீவு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த பேருந்து கிரான்குளம் சரஸ்வதி வித்தியாயலயத்திற்கு அருகாமையில் பயணிக்கும் போது வீதியை விட்டு விலகி வீதியோரமிருந்த வம்மி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து இடம்பெறும் போது பேருந்தில் சாரதியும், உதவியாளர்கள் இருவர் இருந்துள்ள நிலையில் மூவரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தோர் பாண்டிருப்பு களுதாவளை பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.விபத்தில் பேருந்து பாரிய சேதத்துக்குள்ளான நிலையில் வம்மி மரமும் முறிந்து வீதியில் விழுந்துள்ளது. விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

நாகலோக முனிவர்கள் என கூறி சரணாலயத்துக்குள் திரிந்த 3 சிங்களவர்கள் கைது!!


நாகலோக முனிவர்கள் என கூறி சரணாலயத்துக்குள் திரிந்த 3 சிங்களவர்கள் கைது!!

நாகலோகத்திலிருந்து வந்ததாக கூறி ரித்திகலை சரணாலயத்தின் கொட்டிகல கந்த பகுதிக்குள் அனுமதியின்றி நுழைந்து சிக்கித் தவித்த இருவரை ரிதிகலை வனவிலங்கு சரணாலய அலுவலக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அனுராதபுரம், ராஜாங்கனை மற்றும் மாத்தளை, லக்கல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்.

நாகலோக முனிவர்
காட்டுக்குள் அனுமதியின்றி பிரவேசிப்பது தடை என அறிவித்தல் பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இருவரும் சட்டவிரோதமான முறையில் காட்டுக்குள் பிரவேசித்துள்ளனர்

வனவிலங்கு அதிகாரிகள் விசாரித்தபோது, ​​அவர் நாகலோகத்திலிருந்து வந்த ஒரு முனிவர் என்றும், தியானத்திற்காக ரிதிகலாவுக்கு வந்ததாகவும் கூறினார். மற்ற நபர் தன்னைச் சார்ந்தவர் என்று கூறியுள்ளார்.

சந்தேக நபர்கள் 35 வயதுக்குட்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.

அவர்களிடம் இருந்து லைட்டர்கள், ஒரு புகைப்படம் மற்றும் வீடியோ கேமரா, பல ஆடைகள், ஒரு கொக்கி, எலும்புகளால் ஆன மாலை உள்ளிட்ட பல பொருட்களை வனவிலங்கு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் கஹட்டகஸ்திகிலிய நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

ஒரே பாடசாலை மாணவிகள் 3 பேரை மடக்கி உறவு கொண்ட மென்பொருள் பொறியியலாளர் கைதானது எப்படி?


ஒரே பாடசாலை மாணவிகள் 3 பேரை மடக்கி உறவு கொண்ட மென்பொருள் பொறியியலாளர் கைதானது எப்படி?

ஒரே பாடசாலையில் படிக்கும் மூன்று மாணவிகளை தனது ஆடம்பர வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த மென்பொருள் பொறியாளரை கைது செய்துள்ளதாக களுத்துறை -மொரகஹஹேன பொலிஸார் கூறுகின்றனர்.
கைதான சந்தேக நபர் 30 வயதான திருமணமானவர் என பொலிஸார் கூறியுள்ளனர். 16 வயது சிறுமியை பாடசாலைக்கு நடந்து சென்றுக்கொண்டிருந்த போது, அந்த மாணவிக்கு உதவுவதாகக் கூறி தனது காரில் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவளுடன் நட்பு கொண்டுள்ளார்.
சொகுசு காரையும், ஸ்மார்ட்போனையும் பொலிஸார் பறிமுதல்
அதன் பின்னர், மதியம் யாரும் இல்லாதபோது மூன்று முறை தனது வீட்டிற்கு மதியவேளையில் அழைத்துச் சென்றதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம், ஒரு வருடத்திற்கு முன்பு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இதனையடுத்து சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு, இந்த மாணவி தான் படிக்கும் அதே பாடசாலையில் எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை அழைத்து, தன்னிடமிருந்த சந்தேகநபரின் புகைப்படத்தைப் பார்க்கச் சொல்லியுள்ளார்.
அதன்படி, 16 வயது சிறுமி, 13 வயது சிறுமியின் தாயாரின் அலைபேசிக்கு வாட்ஸ்அப் மூலம் சந்தேக நபரின் புகைப்படத்தை அனுப்பியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாட்ஸ்அப் மூலம் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்ட பிறகு, கடந்த வெள்ளிக்கிழமை (27) ஒருவரையொருவர் சந்திக்க முடிவு செய்தனர். சந்தேக நபருடன் தொலைபேசியில் தொடர்பில் இருந்த 13 வயது சிறுமி, இது குறித்து தனது தோழியிடம் தெரிவித்து, அவளுடன் தனது காதலனைச் சந்திக்கச் செல்ல ஒப்புக்கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அங்கு, சந்தேக நபர் இரண்டு சிறுமிகளையும் தனது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.
பாலியல் வன்கொடுமைக்கு சிறுமிகள் மருத்துவ பரிசோதனைக்காக ஹொரணை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சிறுமிகளை கடத்துவதற்காக வீட்டிற்கு அழைத்துச் செல்ல பயன்படுத்திய சொகுசு காரையும், சந்தேக நபர் பயன்படுத்திய ஸ்மார்ட்போனையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளார். மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Sunday, June 29, 2025

ஆழ்கடலில் வைத்து வாழைச்சேனை மீனவனின் உயிரைக்காவு கொண்ட மீன் !


ஆழ்கடலில் வைத்து வாழைச்சேனை மீனவனின் உயிரைக்காவு கொண்ட மீன் !

ஆழ்கடலில் வைத்து மீன் குத்தி ஏற்பட்ட காயத்தினால் ஒருவர் மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

கடந்த 24.06.2025ம் திகதியன்று ஆழ்கடலுக்கு தொழிலுக்காக படகில் சென்ற மூவர் நேற்று (29.06.2025) ஞாயிற்றுக்கிழமை மீன் பிடித்து கொண்டிருக்கும் போது வலையில் பட்ட பெரிய மீனைத் தூக்குவதற்கு காலை 10.30 மணியளவில் முயற்சி செய்யும் போது தவறி கடலில் விழுந்தவரை மீனின் கொம்பு வயிற்றுப்பகுதியில் தாக்கி நிலையில் காயத்துடன் படகில் ஏறியவர் தனக்கு மீன் குத்தி விட்டதாகவும் நோவு அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மற்ற இருவரும் அவரை கரைக்கு கொண்டு வரும் நோக்கில் வரும் வழியில் மதியம் 12 மணியளவில் அவரது உயிர் பிரிந்துள்ளது.

நேற்றிரவு 11 மணியளவில் இறந்தவரின் உடல் வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்தை வந்தடைந்தது.

மரணமடைந்தவர் கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் பாலைநகர் ரஹ்மானிய ஜும்ஆ பள்ளிவாயல் வீதியைச்சேர்ந்த 47 வயதுடைய மீராலெப்பை சஹாப்தீன் என அடையாளங் காணப்பட்டுள்ளார்.

இம்மரணம் தொடர்பான விசாரனைகளை வாழைச்சேனை பொலிஸாரும் மீன்பிடித்துறைமுக கடலோரப்பாதுகாப்புப் படையினரும் நடாத்தி வருகின்றனர்.

எஸ்.எம்.எம்.முர்ஷித்.

யாழ் மருத்துவ பீட மாணவியான காதலி வைத்தியருடன் கள்ளத் தொடர்பு என அறிந்து மருத்துவபீட மாணவன் தற்கொலை முயற்சி!!


யாழ் மருத்துவ பீட மாணவியான காதலி வைத்தியருடன் கள்ளத் தொடர்பு என அறிந்து மருத்துவபீட மாணவன் தற்கொலை முயற்சி!!

யாழ் மருத்துவபீட மாணவர் ஒருவர் தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளார். தென்பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன் தனது வீட்டு மின் விசிறியில் கயிற்றை கட்டி துாக்கில் தொங்கிய வேளை மின் விசிறி அறுந்து விழுந்ததால் ஏற்பட்ட சத்தத்தை அடுத்து அவர் காப்பாற்றப்பட்டதாகத் தெரியவருகின்றது. தற்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும் அவரது காதலியான மருத்துவபீடத்தைச் சேர்ந்த பெரும்பாண்மையின மாணவி யாழ் வைத்தியசாலையில் கடமையாற்றும் திருமணமான தமிழ் வைத்தியர் ஒருவருடன் கள்ளத்தொடர்பைப் பேணுவதை அறிந்த பின்னரே அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் அவரது யாழ்ப்பாண நண்பர்கள் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த மாணவன் தனது காதலிக்கு அனுப்பிய வட்சப் தகவல்கள் மற்றும் குரல்பதிவுகள் போன்றவற்றை வைத்து மாணவனின் பெற்றோர் பொலிசாரிடம் முறையிட்டு மாணவியின் கள்ளக்காதலனான வைத்தியருக்கு நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சி செய்து வருவதுடன் வைத்தியரின் மனைவியிடமும் முறையிடவுள்ளதாகவும் மாணவர்கள் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணத்தில் குழந்தைகளுடன் எவரும் காணாமல் போகவில்லை!! செம்மணியில் எலும்புகளாக மீட்கப்பட்டவர்கள் இவர்களா?



யாழ்ப்பாணத்தில் 1996ம் ஆண்டு காலப்பகுதியில் கிருசாந்தி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பின் கிருசாந்தியை கொன்றவர்களில் ஒருவனான இராணுவச் சிப்பாய் கூறிய தகவல்களின் படி 600 தமிழர்களுக்கு மேல் செம்மணிப் பகுதியில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்தாக மரணதண்டனை விதிக்கப்பட்ட காலத்தில் கூறியிருந்தான். 1996ம் ஆண்டு மே மாதம் தொடங்கி 1996ம் ஆண்டு குறித்த இராணுவச்சிப்பாய் பிடிபடும் வரையான ஒக்ரோபர் மாத காலப்பகுதியில், கிட்டத்தட்ட 180 நாட்களில் யாழ்ப்பாணத்தில் காணாமல் போனவர்களில் எவரும் குழந்தைகளுடன் காணாமல் போகவில்லை. அதே நேரம் யாழ் அரியாலை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கிட்டதட்ட 50 க்கும் குறைவானவர்களே காணாமல் போனவர்கள். இவர்கள் பற்றி எம்மிடம் உள்ள தரவுகளின் அடிப்படையில் பலரின் பெயர் விபரங்களை நாம் வெளியிடுவோம்.

யாழ் குடாநாட்டில் காணாமல் போனவர்களில் பெருமளவானர்கள் தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்களோ அல்லது யாழ்ப்பாணத்தின் எனைய பகுதிகளில் காணாமல் போனவர்களோ செம்மணிப் பகுதிக்கு கொண்டு வந்து கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் ஒவ்வொரு பிரதேசமும் ஒவ்வொரு கட்டளைத்தளபதிகள் மற்றும் பிரிகேடியர்களின் பொறுப்பில் இருந்த பிரதேசங்களாகும். எந்த எந்த இடங்களில் காணாமல் ஆக்கப்பட்டார்களோ அப்பிரதேசங்களிலேயே அவர்கள் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம். அதே நேரம் குடாநாட்டில் காணாமல் போனவர்கள் ஒரே நாளில் காணாமல் போகவில்லை. ஒவ்வொரு நாளும் காணாமல் போனார்கள். அவர்களை ஓரிடத்தில் வைத்து கும்பலாக கொல்வதற்கு சாத்தியமில்லை.

செம்மணியில் எலும்புகளாக மீட்கப்பட்டவர்கள் யாராக இருக்கும்.?

நிச்சயம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான பூநகரி, நாச்சிக்குடா மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலிருந்து புலிகளுக்கு தெரியாமல் படகில் வந்து அரியாலை கிழக்குப் பகுதியில் இறங்கிய அப்பாவிகளே செம்மணிப்பகுதியில் புதையுண்டுள்ளார்கள். இவர்களில் பெருமளவானவர்கள் பணக்கார குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அரியாலைப் பகுதியில் இராணுவத்திடம் வந்த போது இவர்களைப் பிடித்து கொட்டுக்கிணற்றடி இராணுவ முகாமுக்கு கொண்டு சென்று அவர்களிடமிருந்த நகைகள், பணங்களை கொள்ளையடித்து பெண்களை கொடூரமாக கற்பழித்த பின் பெண்கள், குழந்தைகள் என்று பாகுபாடு இன்றி அடித்துக் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டவர்களே தற்போது எலும்புகளாக மீட்கப்பட்டுள்ளார்கள்.

1996ம் ஆண்டு முல்லைத்தீவு இராணுவ முகாம் தாக்குதலின் பின்னர் உடனடியாகவே ஆனையிறவிலிருந்து கிளிநொச்சி நோக்கி படைநகர்வு ஆரம்பிக்கப்பட்டது. அந்தப் படைநகர்வில் இடம்பெயர்ந்து சென்ற மக்களுக்கு , ஐ.நாவின் உதவிகளில் வாழ்விடங்களை அமைத்துக் கொள்வதற்கான கூடாரத்திற்கான படங்குகள் மற்றும் பிள்ளைளுக்கான புத்தகப்பைகள் என்பன கொடுக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒரு பையே தற்போது மீட்கப்பட்டிருக்கலாம்.

அரியாலை கிழக்கில் குடும்பம் குடும்பமாக வந்து இறங்கிய அப்பாவிகளை ஒவ்வொரு கடும் சித்திரவதை செய்து கொலை செய்து கூட்டம் கூட்டமாக 5 மாதத்துக்குள் குறித்த பகுதியில் படையினர் புதைத்துள்ளார்கள்.

Saturday, June 28, 2025

பொம்பிளைக் கள்ளனான பொலிஸ் அமலதாஸ் உடனடியாக இடமாற்றம்!!



பொம்பிளைக் கள்ளனான பொலிஸ் அமலதாஸ் உடனடியாக இடமாற்றம்!!

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்துவந்த காவாலி அமலதாஸுக்கு அதாரடியாக இன்று முதல் (28) இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நாம் வெளியிட்ட செய்தி

குறித்த பொலிஸ் காவாலி பல்வேறு விதமான காவாலி செயற்பாடுகளிலும், பிச்சை எடுக்கும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்ததால், வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபாலவினால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் காவாலி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் இருந்து வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளான்.

இந்த இடமாற்றத்தை வழங்கி வட்டுக்கோட்டை மக்களை பாதுகாத்த வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபாலவுக்கு மக்கள் நன்றிகளை தெரிவிக்கின்றனர்.

இவன் ஏற்கனவே கடமை புரிந்த பொலிஸ் நிலையங்களிலும் காவாலி செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தமை அம்பலமாகியுள்ளது.

வல்வெட்டித்துறை பகுதியில் இவன் காவாலித்தனத்தில் ஈடுபட்டால் உடனடியாக எமது செய்திப் பிரிவுக்கு தெரியப்படுத்தவும்.

Thursday, June 26, 2025

யாழில் காருக்குள் அர்ச்சுனாவும் தங்கமும் ஜல்சா பண்ணிய காட்சிகள் வெளியாகியுள்ளன!! வீடியோ


யாழில் காருக்குள் அர்ச்சுனாவும் தங்கமும் ஜல்சா பண்ணிய காட்சிகள் வெளியாகியுள்ளன!! வீடியோ

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்….

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும் அவரது தங்கம் என அழைக்கப்படும் கௌசல்யாவும் காருக்குள் நெருக்கமாக இருந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

குறித்த இருவரும் தாங்கள் அண்ணன் – தங்கை என் வெளியுலகத்துக்கு கூறிவந்தாலும் அது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போலவே உள்ளது என மக்கள் விமர்சிக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காருக்குள் இருவரும் இருந்தவேளை அர்ச்சுனாவின் தோளில் கௌசல்யா சாய்ந்து படுத்திருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

அர்ச்சுனா கடந்த காலத்தில் தமிழ்ப் பெண் ஒருவரை திருமணம் செய்த நிலையில் அவருக்கு ஒரு பிள்ளையும் உள்ளது. இந்நிலையில் தனது மூத்த மனைவியை துன்புறுத்தி அவரிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டு சிங்கள பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். அதன்பின்னர் வேறொரு சிங்கள பெண்ணுக்கும் அர்ச்சுனாவுக்குமிடையே தவறான உறவும் காணப்படுவதாக அறியமுடிகிறது.

இவ்வாறு சூழ்நிலையில் தங்கம் என்று அழைக்கப்படும் கௌசல்யாவுடனும் அவர் முறையற்ற உறவை பேணி வருவது அம்பலமாகியுள்ளது.

அர்ச்சுனாவின் எம்.பி பதவி யூலை 2ம் திகதியுடன் முடிவுக்கு வரலாம்!! நீதிமன்றில் நடந்தது என்ன?



அர்ச்சுனாவின் எம்.பி பதவி யூலை 2ம் திகதியுடன் முடிவுக்கு வரலாம்!! நீதிமன்றில் நடந்தது என்ன?

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் பதவி தொடர்பான வழக்கு ஜுலை 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்றையதினம் (26.06.2025) கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இதன்போதே, வழக்கை ஜுலை 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சியில் எரிபொருள் பாரவூர்தி விபத்து: கசிந்த டீசலை அள்ளிச் சென்ற மக்கள்.! Photos



கிளிநொச்சி, இயக்கச்சிப் பகுதியில் இன்று (26) அதிகாலை இடம்பெற்ற எரிபொருள் பாரவூர்தி விபத்தில், பாரவூர்தியில் இருந்து கசிந்த டீசலை பொதுமக்கள் அள்ளிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்டுநாயக்கவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி எரிபொருள் ஏற்றிச் சென்ற பாரவூர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. வேகக் கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி, வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தினால் பாரவூர்தியின் எரிபொருள் தாங்கியில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக டீசல் பெருமளவில் வீதியில் கசியத் தொடங்கியது. இதை அறிந்த அப்பகுதி மக்கள், பாத்திரங்கள் மற்றும் பக்கெட்டுகளுடன் வந்து கசிந்த டீசலை அள்ளிச் சென்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்து மக்களை அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர்.

விபத்தில் பாரவூர்தியின் சாரதி மற்றும் உதவியாளர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Tuesday, June 24, 2025

யாழில் தீயில் எரிந்து நாகேந்திரம் பலி!!



யாழில் தீயில் எரிந்து நாகேந்திரம் பலி!!

யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் தீ விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் ஒருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். இதன்போது அராலி தெற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அம்பலவாணர் நாகேந்திரம் (வயது 69) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நடக்க முடியாத நீரிழிவு நோயாளி ஆவார். கடந்த 22 ஆம் திகதி விசிய பலத்த காற்றுடன் கூடிய மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதன்போது மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது. ஏற்றப்பட்ட மெழுகுவர்த்தியானது அவரது ஆடையில் பற்றில் அவர் தீ காயங்களுக்கு உள்ளாகினார்.

இந்நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் (23) உயிரிழந்தார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கணவன் வெளிநாட்டில்! அம்பாறையில் வெட்டிக் கொல்லப்பட்ட குடும்பப் பெண் விதுசா கொலை! இரட்டை சகோதரிகள் கைதானது ஏன்?



கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்ணின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் சகோதரிகளான இரட்டையர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனித்திருந்த 38 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் கடந்த மே மாதம் 30 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இரண்டு பிள்ளைகளின் தாயான குறித்த பெண்ணின் கழுத்து பகுதியில் காயங்கள் ஏற்படக் கூடிய வகையில் வெட்டப்பட்டு தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, பொதுமக்களின் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்ட குறித்த சம்பவம் தொடர்பில் பல தரப்பினரும் விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில், 24 நாட்களின் பின்னர் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவில் இணைக்கப்பட்ட உப பரிசோதகர் ஏ.எல்.எம். அஸீம் தலைமையிலான அணி குறித்த படுகொலை தொடர்பில் 34 வயதுடைய இரட்டையரான சகோதரிகளை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படுகொலை இடம்பெற்ற வேளை, மரணமடைந்த குடும்ப பெண்ணின் கணவர் வெளிநாடு ஒன்றில் தொழில் நிமிர்த்தம் தங்கி இருந்ததுடன் சம்பவம் நடைபெற்ற வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராவில் பதிவான காட்சிகளை சேமிக்கும் கருவி (DVR) கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களால் எடுத்துச் செல்லப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Monday, June 23, 2025

இவர்தான் அந்த மோசடிமிக்க நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர்; முறைப்பாடுகளை வழங்கலாம்!



இவர்தான் அந்த மோசடிமிக்க நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர்; முறைப்பாடுகளை வழங்கலாம்!

ஸ்ரீஜெயவர்தனபுர மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மகேஷி சுரசிங்க விஜேரத்னவால் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகள் தொடர்பாக சிக்கல் நிறைந்த சூழ்நிலைகளை எதிர்கொண்ட நோயாளிகள் உட்பட பல்வேறு தரப்பினரிடமிருந்து தகவல்களைச் சேகரிக்க இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

அறுவைச் சிகிச்சைகளால் பாதிக்கப்பட்ட சுமார் 77 பேரிடமிருந்து ஆணைக்குழு இதுவரை வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

EVD மற்றும் VP SHUNT எனப்படும் நரம்பியல் அறுவைச் சிகிச்சை கருவிகளைப் பயன்படுத்தி இந்த மருத்துவ நிபுணர் செய்த அறுவைச் சிகிச்சைகள் குறித்து முக்கியமாக சிக்கல்கள் எழுந்துள்ளன.

இந்த நிபுணர் மருத்துவர் வெளியார் நிறுவனங்களிலிருந்து அறுவைச் சிகிச்சை கருவிகளைப் பெற நோயாளிகளுக்கு அறிவுறுத்துவதால் நோயாளிகள் இழப்புகளைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு வெளியிட்ட 2025/066 அறிக்கையில் இது தொடர்பாக வேறு பல குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் அல்லது இந்த முறைகேடுகள் குறித்து தகவல் உள்ள வேறு நபர்கள் ஆணைக்குழுவுக்கு மேலதிக தகவல்களை வழங்குமாறு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கோரியுள்ளது.

மேலும், 1954 என்ற எண்ணுக்கு அல்லது ciaboc_gen@ciaboc.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தகவல்களை வழங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவில் நடந்த சம்பவத்தை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது, மேலும் விசேட மருத்துவரின் நடவடிக்கைகள் குறித்து முறையான விசாரணை நடத்தவும் செயற்பட்டு வருகிறது.

இந்த விசாரணையின் முக்கிய நோக்கம் நோயாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதும் மருத்துவமனை அமைப்பில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதும் ஆகும் என்று ஆணைக்குழு கூறுகிறது.

மட்டு’வில் கார் விபத்து!! சாரதி சஞ்சய், முதலாளி மகள் தவஸ்வாணியும் பலி!! முதலாளியம்மா படுகாயம்!!



மட்டு’வில் கார் விபத்து!! சாரதி சஞ்சய், முதலாளி மகள் தவஸ்வாணியும் பலி!! முதலாளியம்மா படுகாயம்!!

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலையில் இருந்து களுவங்கேணி நோக்கி பிரயாணித்த கார் வீதி இரண்டாவது மையில்கல் பகுதியில் வேககட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி பனைமரத்துடன் மோதிய விபத்தில் காரை செலுத்தி சென்றவர் மற்றும் 15 வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழந்ததுடன் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று திங்கட்கிழமை (23)அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு சின்ன ஊறணி கருவப்பங்கேணி செலியன் வீதி இரண்டாம் குறுக்கைச் சேர்ந்த ஜெந்திரகுமார் சஞ்சய் , கருவப்பங்கேணி மற்றும் நாவலர் வீதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியான பிரதீபன் தவஸ்வாணி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருந்துவரும் நிலையில் உயிரிழந்த சிறுமியான மகளுடன் கருவப்பங்கேணியில் உள்ள அவர்களது பன்றிவளர்க்கும் பண்ணையை பார்ப்பதற்காக சம்பவதினமான இன்று  அதிகாலை 3.00 கார் சாரதியுடன் பயணித்தபோது கார் வேககட்டுப்பாட்டை மீறி பணைமரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதியும் 15 சிறுமியும் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்த சிறுமியின் தாயாரான பாலச்சந்திரன் மோகனகாந்தி மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளா

யாழில் தோட்டக் கிணற்றில் குடும்பப் பெண் கலாவின் சடலம்!!



யாழில் தோட்டக் கிணற்றில் குடும்பப் பெண் கலாவின் சடலம்!!

யாழ்ப்பாணம் – வசாவிளான் பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றிலிருந்து மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரது சடலம் மீட்கப்பட்டது. வசாவிளான் – சுதந்திரபுரம் பகுதியைச் சேர்ந்த கிருபாமூர்த்தி கலா (வயது 55) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண் அண்மைய நாட்களில் மன அழுத்தத்துடன் காணப்பட்டுள்ளார். நேற்று காலை அவரை காணவில்லை.

அந்தவகையில் அவரை தேடியவேளை தோட்ட கிணற்றில் சடலமாக காணப்பட்டார். சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

சடலத்தின் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். அவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சுவிஸ்லாந்திலிருந்து வந்த மன்மதன் மனைவியின் அக்காவின் 16 வயதுடன் மகளுடன் மாயம்!! வீடியோ


சுவிஸ்லாந்திலிருந்து வந்த மன்மதன் மனைவியின் அக்காவின் 16 வயதுடன் மகளுடன் மாயம்!!
 வீடியோ🔴👉  Click here 

Sunday, June 22, 2025

கொழும்பில் சிங்கள யுவதி, அவளது அம்மாவுடன் ஒன்றா ஜல்சா பண்ணிய வவுனியா தமிழ் வர்த்தகரின் வீடியோ!!



கொழும்பில் சிங்கள யுவதி, அவளது அம்மாவுடன் ஒன்றா ஜல்சா பண்ணிய வவுனியா தமிழ் வர்த்தகரின் வீடியோ!!

சிங்கள சமூகவலைத்தளம் ஒன்றில் வ்ந்த பதிவின் தமிழாக்கத்தை தந்துள்ளோம்.

ஒரே நேரத்தில் தாயுடனும் மகளுடனும் ஒன்றாக ஜல்சா பண்ணிய வவுனியாவைச் சேர்ந்த நகை வர்த்தகரின் அஜால் குஜால் வீடியோ காட்சிகள் தவறான சிங்கள சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. வவுனியா நகரப்பகுதியில் நகைக்கடை வைத்திருக்கும் ஒருவரது வீடியோவே வெளியாகியுள்ளது. தற்போது குறித்த வர்த்தகர் இது தொடர்பாக கொழும்பில் பொலிசாரிடம் முறையிட்டுள்ளதாகவும் அதன் பின்னர் அந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளதுடன் குறித்த வீடியோவை ஏனைய சமூகவலைத்தளங்கள் பதிவிட்ட போதும் அந்த வலைத்தளங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. கல்கிசைப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் குறித்த காட்சிகள் பதிவாகியுள்ளது.

இரான் அணுசக்தி மையத்தை தாக்கிய அமெரிக்க நவீன விமானத்தின் முழுமையான தகவல் இது

திட்டமிட்டவகையில் அந்த விடுதியில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கமரா மூலமே குறித்த வர்த்தகரின் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகி்ன்றது. கொழும்பில் நடந்த மதுவிருந்தொன்றில் அறிமுகமாகிய பெண் ஒருவரை பெண்ணின் வீட்டில் இறக்கி விடுவதற்காக காரில் ஏற்றிக் கொண்டு சென்ற போது தனியார் கல்லுாரியில் கற்கும் தனது மகளையும் ஏற்றிக் கொண்டு செல்லுமாறு தாய் கூறியதால் மகளையும் காரில் ஏற்றிச் சென்றதாகவும் அவர்களே தன்னை ஏமாற்றி அந்த விடுதிக்கு கொண்டு சென்று சாராயம் அருந்தச் செய்து தன்னை தகாத வழிக்கு தள்ளியதாகவும் குறித்த வர்த்தகர் பொலிசாரிடம் முறையிட்டுள்ளாராம்.

யாழில் மின் தூக்கியில் உயிரிழந்த டிலக்க்ஷன் – வெளியான காரணம்.!



யாழில் மின் தூக்கியில் உயிரிழந்த டிலக்க்ஷன் – வெளியான காரணம்.!

இன்றையதினம் யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் பணியாற்றிய இளைஞன் ஒருவர் மின் தூக்கியில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார்.

இதன்போது அச்செழு வடக்கு நீர்வேலியைச் சேர்ந்த வைரவநாதன் டிலக்க்ஷன் (வயது 19) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞன் ஹோட்டல் முகாமைத்துவ கற்கைநெறியை பூர்த்தி செய்த பின்னர் குறித்த ஹோட்டலில் பயிற்சியாளராக இணைந்து பணியாற்றி வந்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற மின் தூக்கியானது திறந்த வெளியான மின் தூக்கியாக காணப்படுகிறது. அதனை இயக்கும் ஆழியும் (switch) கீழேயே காணப்படுகிறது. குறித்த மின்தூக்கியை கீழிருந்து ஒருவர் இயக்கும்போது அது மேலே செல்லும். மின் தூக்கியினுள் இருப்பவரால் அதனை இயக்க முடியாது.

அந்தவகையில் குறித்த இளைஞன் அந்த மின் தூக்கியில் ஏறிய பின்னர் அவர் தயார் நிலையில் இருப்பதற்கு முன்னர் அந்த மின் தூக்கியை இயக்கினர். இதன்போது குறித்த இளைஞனின் தலை இரும்பு கேடர் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Saturday, June 21, 2025

யாழில் கொள்ளை, வாள்வெட்டுக்களில் ஈடுபட்ட காவாலிகள் 3 பேர் இந்தியா தப்பிச் செல்லும் வேளையில் கைது!! நடந்தது என்ன?



யாழில் கொள்ளை, வாள்வெட்டுக்களில் ஈடுபட்ட காவாலிகள் 3 பேர் இந்தியா தப்பிச் செல்லும் வேளையில் கைது!! நடந்தது என்ன?

யாழ்ப்பாணத்தில் பல்வேறு குற்றச்செயல்கள் புரிந்த மூவர் நேற்றிரவு தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த குறித்த மூவரும் யாழ்ப்பாணம், கோப்பாய், பருத்தித்துறை மற்றும் அச்சுவேலி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற கொலை, கொள்ளை, வாள்வெட்டு ஆகிய குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் மூவரும் இலங்கை – தலைமன்னாரில் இருந்து கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயற்சித்தவேளை கடலில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளானர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

திருகோணமலையில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்து ; இருவர் உயிரிழப்பு..!



திருகோணமலையில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்து ; இருவர் உயிரிழப்பு..!

திருகோணமலை – கண்டி பிரதான வீதி 98 ஆம் கட்டை சந்தியை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (21) மாலை இடம் பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

மூதூர் வலயக் கல்வி அலுவலகத்துக்கு சொந்தமான கெப் ரக வாகனத்துடன் குறித்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது இவ்வாறு உயிரிழந்த இருவரும் 48 மற்றும் 50 வயது மதிக்கத்தக்கதாகவும் ஒருவர் 5 ஆம் கட்டை பகுதியை சேர்ந்தவர் எனவும் மற்றவர் கல்மெடியாவ, வடக்கு பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரியவருகிறது.

குறித்த வீதியின் அருகே வயல்வெளி வீதி ஊடாக தனது வீட்டுக்கு செல்வதற்கு திருப்ப முற்பட்ட வேலையில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய சாரதியை தம்பலகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த இரு சடலங்களும் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Friday, June 20, 2025

புற்றுநோய் மருந்தென கூறி உப்புத்தண்ணீர் செலுத்தியது அம்பலம்: கோட்டாவின் ஆட்சிக்காலத்தில் நடந்த மற்றொரு கொடூரம்!



புற்றுநோய் மருந்தென கூறி உப்புத்தண்ணீர் செலுத்தியது அம்பலம்: கோட்டாவின் ஆட்சிக்காலத்தில் நடந்த மற்றொரு கொடூரம்!

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்து ஒப்பந்தம் தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் 11 சந்தேக நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் இறுதி அறிக்கையை நேற்று (19) மதியம் சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இந்த வழக்கு நேற்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இங்கு, உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் பெற்ற ஜெர்மன் ஆய்வகம், கேள்விக்குரிய மனித இம்யூனோகுளோபுலின் மருந்தில் மனித உடலுக்கு நச்சுத்தன்மையுள்ள பாக்டீரியா நீர் இருப்பதாக அறிக்கை அளித்துள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.

மேலும், சந்தேக நபர் வழங்கிய ரிட்டுக்ஸிமாப் கரைசலை பரிசோதித்தபோது, ​​புற்றுநோய் எதிர்ப்பு மருந்து என்று விளம்பரப்படுத்தப்படும் ரிட்டுக்ஸிமாப் கரைசலில், புற்றுநோயை எதிர்த்துப் போராடக்கூடிய எந்த புரதமும் இல்லை என்றும், உப்பு மட்டுமே இருந்தது என்றும் சோதனை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சோதனைக்காக வழங்கப்பட்ட கரைசல்களின் உள்ளடக்கம் குறித்து நீதிமன்றத்திற்கு பகுப்பாய்வு அறிக்கையை சமர்ப்பித்த சட்டமா அதிபர் துறை, குற்றப் புலனாய்வுத் துறையின் விசாரணைகளில் உப்பு நீர் மற்றும் பாக்டீரியாவால் மாசுபட்ட கரைசலை வழங்க அரசாங்கம் 14.44 மில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

வழக்கை மீண்டும் ஜூலை 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்ட நீதவான், சந்தேக நபரை அந்த திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Thursday, June 19, 2025

பிரான்சில் தமிழர்களின் நடமாட்டம் குறைந்தது..! விசா அற்றவர்களை தேடி அதிரடி.



பிரான்சில் தமிழர்களின் நடமாட்டம் குறைந்தது..! விசா அற்றவர்களை தேடி அதிரடி.

பிரான்சில் சட்டவிரோத குடியேறிகளைத் தேடிப்பிடிக்கும் 48 மணிநேர சிறப்பு நடவடிக்கை இடம்பெற்றுவரும் நிலையில் வதிவிட உரிமை அற்ற தமிழ்மக்கள் தமது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.

தொடருந்துகள், தொடருந்து நிலையங்கள் மற்றும் பேருந்துகளில் தற்போது அதிரடியான சோதனைகள் நடத்தப்பட்டுவருகின்றன.

இந்த நடவடிக்கையில் 4,000 க்கும் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுவருவதாக அந்நாட்டு உள்துறை அமைச்ர் புருனோ ரீடெய்ல்யூ தெரிவித்துள்ளார்.

தமிழ் வணிக நிலையங்கள் அதிகம் உள்ளதும் தமிழர்கள் அதிகம் நடமாடும் பகுதியுமான லா சப்பல் பகுதிக்கு அண்மையில் உள்ள பிரான்சின் வடபிராந்தியத்துக்கு தொடருந்துகள் அதிகம் செல்லும் கார்த் நோட் தொடருந்து நிலையப்பகுதியிலும் இந்த நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன.

கடந்த மாதம் சட்டவிரோத குடியேறிகளை பிடிக்கும் வகையில் நடத்தபட்ட இரண்டு நாட்களுக்குரிய நடவடிக்கையில் 750 க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டதை அடுத்து நேற்றும் இந்த 48 மணிநேர நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையில் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் தொடருந்துகள் மற்றும் பேருந்துகளில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் செங்கன் வலைய நாடுகளில் எல்லைக்கட்டுப்பாடற்ற பயண சலுகை நடைமுறையில் உள்ளதால் சட்டவிரோத குடியேறிகள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் ஊடாக பிரான்சுக்கு வந்து அங்கு தங்கியிருந்து ஆங்கிலக்கால்வாயை கடந்து சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்கு பயணிக்க முனைவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பிரான்சில் முன்னரை விட கடும் எல்லைக் கட்டுப்பாடுகளை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளதாக நேற்று அறிவித்த உள்துறைஅமைச்சர், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து இதுவரை 47,000 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நீர்கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த 19 வயது யுவதியை சீரழித்த வைத்தியருக்கு விளக்கமறியல்!!


நீர்கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த 19 வயது யுவதியை சீரழித்த வைத்தியருக்கு விளக்கமறியல்!!

நீர்கொழும்பு மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வந்த சீதுவ பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை பாலி யல் வன் கொ டுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நீர்கொழும்பு மருத்துவமனையில் பணிபுரியும் வைத்தியர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அடையாள அணிவகுப்புக்காக ஆஜர்படுத்தப்பட்டார்.

அடையாள அணிவகுப்பின் போது சந்தேக நபரான மருத்துவரை இளம் பெண் அடையாளம் கண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சந்தேக நபரை இம்மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீர்கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பாலி யல் வன் கொ டுமை
நீர்கொழும்பு மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வந்திருந்த இந்த இளம் பெண், அப்போது மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவில் பணிபுரிந்த குறித்த வைத்தியரிடம் சிகிச்சை பெறும் போது இளம் பெண் பா லியல் வன் கொ டுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் சம்பவம் மார்ச் 31 ஆம் தேதி பதிவாகியுள்ளது.

அதன்படி, மறுநாள், அந்த இளம் பெண் இந்த சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு மருத்துவமனையின் நிர்வாகத்திடம் முறைப்பாடு அளித்துள்ளார்.

சந்தேகத்திற்குரிய வைத்தியர் தொடர்பாக நீர்கொழும்பு மருத்துவமனை மற்றும் சுகாதார அமைச்சு தனித்தனி விசாரணைகளை மேற்கொண்டதுடன், வெளிநாட்டு பயணத் தடையையும் விதிக்கப்பட்டது.

மேலும், சந்தேகத்திற்குரிய வைத்தியர் சுமார் 2 மாதங்களாக, தலைமறைவாக இருந்ததுடன் பின்னர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

இதன் போது வைத்தியரை 02 வார காலத்திற்கு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதுடன் அடையாள அணிவகுப்பின் பின்னர் மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மனைவியைப் பழி வாங்க மனைவியின் தங்கையைக் கர்ப்பமாக்கிய கனடா செந்துாரனின் திருவிளையாடல்!!



மனைவியைப் பழி வாங்க மனைவியின் தங்கையைக் கர்ப்பமாக்கிய கனடா செந்துாரனின் திருவிளையாடல்!!

கனடாவை வதிவிடமாகக் கொண்ட மகாலிங்கம் செந்துாரன் எனும் 2 பிள்ளைகளின் தந்தையான 39 வயது குடும்பஸ்தர் யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப் பெண் ஒருவரை சட்டவிரோதமாக திருமணப் பதிவுகள் அற்ற நிலையில் சேர்ந்து வாழ்ந்து வருவதுடன் அப் பெண்ணை 5 மாத கர்ப்பிணியாக்கியுள்ளதாகவும் செந்துாரனின் மனைவி பொலிசாரிடம் முறையிட்டுள்ளார்.

2010ம் ஆண்டு கனடா சென்ற யாழ்ப்பாணம் அளவெட்டிப்பகுதியைச் சேர்ந்த செந்துாரன் 2016ம் ஆண்டளவில் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த யுவதியை திருமணம் முடித்து கனடாவுக்கு வரவழைத்துள்ளார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. இவ்வாறான நிலையில் கடந்த ஆண்டு செந்துாரன் தன்னை கடுமையாகத் தாக்கியதாக கூறி பொலிசாரிடம் முறைப்பாடு செய்து செந்துாரன் சில நாட்கள் சிறையில் இருந்துள்ளதுடன் சிறையிலிருந்து வந்த பின்னரும் மனைவியின் வீட்டுப் பக்கம் செல்லக்கூடாது என்ற கடும் நிபந்தனை பொலிசாரால் விதிக்கபட்டிருந்தது.

இதனையடுத்து அங்கிருந்து யாழ்ப்பாணம் வந்த செந்துாரன் தனது மனைவியின் தங்கையுடன் சேர்ந்து வாழத்தொடங்கியுள்ளார். மனைவியின் தங்கையும் பதிவுத்திருமணம் முடித்தவர் என்பதுடன் அவரது கணவன் சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்டு தற்போது பெலாறஸ் என்ற நாட்டில் பிடிபட்டு அங்குள்ள சிறையில் இருப்பதாக தெரியவருகின்றது. செந்துாரனின் மனைவியின் தங்கை தற்போது சிறையில் இருக்கும் கணவனை காதலித்தே திருமணம் முடித்திருந்தாராம. தற்போது செந்துாரனால் 4 மாத கர்ப்பமாகியுள்ள மனைவியின் தங்கையை செந்துாரன் வைத்தியசாலை மற்றும் கிளினிக்குகளுக்கு ஏற்றி இறக்கி வருகின்றார்.

இந்நிலையில் தற்போது பிள்ளைகளுடன் கொழும்பு வந்துள்ள செந்துாரனின் மனைவி தனது கணவனின் சட்டவிரோத திருமணம் தொடர்பாக பொலிசாரிடம் முறையிட்டுள்ளதுடன் நீதிமன்றில் சட்டநடவடிக்கையும் எடுக்கவுள்ளதாக ஊடகங்களுக்கு தகவல் அனுப்பியுள்ளார்.
online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job