Showing posts with label மனைவியை காதலனோடு சேர்த்து வைத்த கணவன்!! திரைபடபாணியில் நடந்த திருமணம். Show all posts
Showing posts with label மனைவியை காதலனோடு சேர்த்து வைத்த கணவன்!! திரைபடபாணியில் நடந்த திருமணம். Show all posts
Friday, June 1, 2018
மனைவியை காதலனோடு சேர்த்து வைத்த கணவன்!! திரைபடபாணியில் நடந்த திருமணம்
வாழ்ந்தால் என் காதலுடன் தான் வாழுவேன் என்று கூறிய மனைவியை அவரின் காதலுடனே சேர்த்து வைத்துள்ள கணவருக்கு சமூக வளைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்துவருகிறது.
கான்பூர் அருகிலுள்ள சானிக்வன் கிராமத்தைச் சேர்ந்தவர் கோலு. இவருக்கும் அருகிலுள்ள ஷ்யாம்நகர் பகுதியைச் சேர்ந்த சாந்திக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. அடுத்த சில நாட்களிலே, 'நான் எங்க வீட்டுக்குப் போகணும் போல இருக்கு’ என்றார். இதனால் மனைவியின் ஆசை போல அவரும் ஊருக்கு அனுப்பிவைத்தார். ஆனால் அங்கு சென்ற சாந்தி திரும்பிவரவே இல்லை.
இதனால் மாமியார் வீட்டிற்கு சென்ற கோலு ‘ஏன் எங்க வீட்டுக்கு வரலை?’ என்று கேட்டார். அதற்குள் அவர், கண்ணீருடன் ‘நான் லக்னோவை சேர்ந்த ரவி என்பவரை காதலிக்கிறேன். ஆனால் எங்கள் வீட்டில் சம்மதிக்கவில்லை. திடீர்னு உங்களுக்கு கல்யாணம் செய்து வைத்துவிட்டார்கள். மனசுல ஒருத்தனை வச்சுகிட்டு உங்களோட வாழ பிடிக்கலை’ என்று கண்ணீர் விட்டார் சாந்தி.
மனைவியை தன் காதலனோடு சேர்த்து வைக்க களத்தில் இறங்கினார் சுஜித். நேராக லக்னோ சென்று ரவியை சந்தித்தார். "உங்க காதல் மேட்டர் எனக்கு தெரியும். உங்க ரெண்டு பேருக்கும் நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன். நான் சொல்றபடி கேளுங்க”என்று பேசினார். ரவியும் சம்மதித்தார். பிறகு தனது வீட்டிலும் சாந்தியின் வீட்டிலும் பேசினார். சாந்தி வீட்டில் இதை ஏற்கவில்லை. பிறகு அந்த ஊர் பெரிய மனிதர்களைச் சந்தித்தார்.
‘ஒரு முறை வாழப்போறோம். மனசுக்குப் பிடிச்சவங்களோட வாழ்ந்துட்டு போகட்டுமே’ என்று பெரியவர்கள் தத்துவமாகச் சொல்ல, அந்த ஒப்புதலுடன் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் விஷயத்தைச் சொன்னார். அவர்கள் ’என்ன பிரச்னை வந்தாலும் நாங்க பார்த்துக்கிறோம்’ என்றனர்.
இதையடுத்து சானிக்வன் பகுதியில் உள்ள ஹனுமன் கோவிலில், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இருவருக்கும் திருமணத்தை நடத்திய சுஜித், ‘நல்லாருங்க’ என்று வாழ்த்தி அனுப்பி விட்டார். இதையடுத்து சுஜித்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.










