அர்ச்சுனாவுக்கு மார்ச் 25 இல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை!தங்கத்தின் நிலை என்ன? சிறைத்தண்டனை வழங்கப்படுமா?
Monday, January 12, 2026
அர்ச்சுனாவுக்கு மார்ச் 25 இல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை!தங்கத்தின் நிலை என்ன? சிறைத்தண்டனை வழங்கப்படுமா?
அர்ச்சுனாவுக்கு மார்ச் 25 இல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை!தங்கத்தின் நிலை என்ன? சிறைத்தண்டனை வழங்கப்படுமா?
அனுராதபுரம் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் உத்தியோகத்தர்கள் பணியில் இருந்தபோது அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மார்ச் 25 ஆம் திகதி வாசிக்க அனுராதபுரம் தலைமை நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, மார்ச் 25 ஆம் திகதி சந்தேகத்திற்குரிய நாடாளுமன்ற உறுப்பினரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தலைமை நீதவான் மேலும் உத்தரவிட்டார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு மீண்டும் அனுராதபுரம் தலைமை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சந்தேகத்திற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுன நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. சந்தேகத்திற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி சுனந்த தென்னகோன், தனது கட்சிக்காரரான நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுன இன்று நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பங்கேற்றதே இதற்குக் காரணம் என்று கூறிய சட்டத்தரணி, அதன்படி வழக்கை வேறு நாளில் அழைக்குமாறு கோரினார்.
வழக்குத் தொடுப்பவர் தரப்பில் ஆஜரான அனுராதபுரம் காவல்நிலைய வழக்கு நடவடிக்கைப் பிரிவின் சார்ஜென்ட் (47818) இளங்கசிங்க, சந்தேக நபர் எம்.பி., காவல்நிலைய போக்குவரத்து உத்தியோகத்தர்களின் கடமையைத் தடுத்ததும், குற்றவியல் பலத்தைப் பயன்படுத்தியதும் சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவாகியுள்ளதாகக் கூறினார். தேவைப்பட்டால், சந்தேக நபர் எம்.பி.யின் சட்டத்தரணிக்கு சி.சி.டி.வி. காட்சிகளை வழங்க முடியும் என்றும் சார்ஜென்ட் கூறினார். சந்தேக நபர் எம்.பி. இராமநாதன் அர்ச்சுன தனது மோட்டார் வாகனத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு பயணித்தபோது, அனுராதபுரம் சாலியபுர பகுதியில் பணியில் இருந்த அனுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரது மோட்டார் வாகனத்தை ஆய்வு செய்தனர். எம்.பி. இராமநாதன் அர்ச்சுனவிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை.
பின்னர், காரில் இருந்த தனது ஓட்டுநர் உரிமம் மற்றும் பிற ஆவணங்களை சரிபார்க்க விடாமல், போக்குவரத்து காவல்நிலைய உத்தியோகத்தர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
புத்தளத்தில் இரவிரவாக உல்லாசம்! பெண்ணின் அந்தரங்கத்தினுள் சொருகப்பட்ட 2 பியர் போத்தல்கள் ! 2 ஆண்களும் பெண் முதலாளியும் கைது!! அதிர்ச்சி வாக்குமூலம் இதோ!
வயிற்று வீக்கம் மற்றும் அதிக இரத்தப்போக்கு காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கருப்பையில் இருந்து இரண்டு கண்ணாடிப் போத்தல்களை மாரவில ஆதார மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் நாத்தாண்டியா பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய பெண். கடந்த மாதம் 9 ஆம் திகதி 1990 அவசரசேவை நோயாளர் காவு வண்டி மூலம் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்தப் பெண்ணுக்கு பல பரிசோதனைகள் செய்யப்பட்டன. மேலும் அவரை ஸ்கான் செய்ய பரிந்துரைத்த பிறகு, பெண்ணின் வயிற்றில் இரண்டு போத்தல்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த அறுவை சிகிச்சையின் போது இரண்டு போத்தல்களையும் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
இது தொடர்பாக நோயாளியை மேலும் விசாரித்தபோது, அவர் தேங்காய் சார்ந்த உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், ஜனவரி 1 ஆம் திகதி நிறுவனத்தின் உரிமையாளரின் வீட்டில் ஒரு விருந்து நடைபெற்றதாகவும் கூறினார். விருந்தின் போது, நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு நபர்களுடன் மது அருந்தியதாகவும், குடிபோதையில் இருந்தபோது, அவர்கள் மீண்டும் மீண்டும் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாகவும், பின்னர் இரண்டு போத்தல்களை அவரது அந்தரங்க உறுப்புகளில் செருகியதாகவும் அவர் கூறியுள்ளார்.
உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த சில நாட்களாக தனியார் சிகிச்சை பெற்று வந்ததாகவும், தனது உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
நத்தாண்டிய-வலஹாபிட்டிய மற்றும் பனங்கொட பகுதிகளைச் சேர்ந்த 51 மற்றும் 56 வயதுடைய இருவரையும், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும் 47 வயதுடைய பெண்ணையும் மாரவில பொலிசார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் மூவரையும் மாரவில நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய பின்னர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Sunday, January 11, 2026
மன்னாரில் கணவனுடன் வைத்தியசாலை சென்ற 21 வயது சகாயகீர்த்தனா கணவனைக் கைவிட்டு யாருடன் ஓடினார்!! பொலிசார் தீவிர தேடுதல்!!
மன்னாரில் கணவனுடன் வைத்தியசாலை சென்ற 21 வயது சகாயகீர்த்தனா கணவனைக் கைவிட்டு யாருடன் ஓடினார்!! பொலிசார் தீவிர தேடுதல்!!
மன்னார் சௌத்பார் பகுதியில் வசித்து வந்த 21 வயதுடைய பெண்ணை காணவில்லை என்று உறவினர்களால் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மன்னார் சௌத்பார் பகுதியில் வசித்து வந்த அ. கான்சியூஸ் சகாயகீர்த்தனா வயது (21) எனும் திருமணமான பெண்ணை அவரது கணவர் நேற்றைய தினம் ( 10-1-2025) மன்னார் பொது மருத்துவமனைக்கு பற்சிக்ச்சைக்காக அழைத்துச் சென்று பின்னார் அங்கிருந்து கணவர் வீடு திரும்பி மீண்டும் மனைவியை அழைத்துவர சென்ற போது அந்த பெண் அங்கு இல்லை
இது தொடாபாக மருத்துவமனையிலும் விசாரணை செய்து மன்னார் நகரம் முழுவது தேடியும் பெண் தொடர்பான தகவல் இல்லை என்பதால் உறவினர்களால் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
பொலிஸார் தொடர்ச்சியாக மேற்கொண்ட விசாரணையில் குறித்த பெண் மன்னார் வைத்தியசாலையில் இருந்து முச்சக்கர வண்டி ஒன்றில் மன்னார் பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து வவுனியா செல்லும் பேருந்தில் சென்று வவுனியா குழு மாட்டுச் சந்தியில் இறங்கி வேறு ஒரு முச்சக்கர வண்டியில் சென்றதாக குறித்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்தார்கள்
இன்றைய தினமும் வவுனியா குழு மாட்டுச் சந்தி உட்பட பல இடங்களிலும் பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் தேடி வந்த போதும் பெண் குறித்த எந்த தகவல்களும் கிடைக்கவில்லை காணாமல் போன இந்த இந்த பெண் தொடர்பாக தகவல்கள் தெரிந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கும் அவர்களது 0763302475 இந்த தொலைபேசிக்கும் அழைத்து தெரியப்படுத்துமாறு பெண்ணின் உறவினர்கள் கவலையுடன் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Saturday, January 10, 2026
வவுனியாவில் 15 வயது மகள், 37 வயது தாய் இருவரையும் கர்பமாக்கிய ஜேர்மனி தர்மேந்திரா! அப்பாவிக் காதல் கணவன் நடுவீதியில்! காமுக நாய்கள் திருந்துமா?
வவுனியா ஓமந்தையிலிருந்து துணுக்காய் நோக்கிச் செல்லும் வீதியில் பண்ணை ஆரம்பிப்பதற்காக ஜேர்மனியிலிருந்து வந்த 51 வயது காமுகனின் செயற்பாட்டால் அழகிய ஒரு குடும்பம் சீரழிந்து சின்னபின்னமாகியது.
இறுதி யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் தாயையும் தந்தையையும் வன்னியில் பறி கொடுத்து தனது சகோதரனுடன் அநாதையாக நின்ற 20 வயது யுவதியை வவுனியா தடுப்பு முகாமில் இருக்கும் போது காதலித்து திருமணம் முடித்தான் ராஜ். ( பெயர் மாற்றம்). தடுப்பிலிருந்து வெளியே வந்து தனது மனைவியை வவுனியா வடக்கில் தனது பெற்றோருடன் வசிக்கவிட்டு உழைப்பதற்காக அரபு நாட்டுக்கு சென்றான் ராஜ். 2010ம் ஆண்டு அரபு நாட்டுக்குச் செல்லும் போது மனைவி நிறை மாத கர்ப்பிணி. பெண் குழந்தை பிறந்து 2 வயது வந்த பின்னரே ராஜ் திரும்ப மனைவியுடன் வந்து இணைந்தான். அதன் பின்னர் அரசி ஆலை, மேசன் வேலை என பல வேலைகள் செய்து தனது குடும்பத்தை நன்றாக கவனித்துக் கொண்டிருந்தான். 2021ம் ஆண்டு நண்பனுடன் மேசன் வேலை செய்து கொண்டிருந்த போது கட்டடம் ஒன்றில் இருந்து தவறி வீழ்ந்து இடுப்புப் பகுதியில் அடியுண்டு செயற்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டான் ராஜ். இதன் பின்னர் ராஜின் உறவினர்களின் தயவிலும் ராஜின் மனைவி அப்பகுதியில் சிறு சிறு வேலைகள் செய்து உழைத்த பணத்திலும் ராஜ் குடும்பம் வாழ்ந்து வந்தது. இருப்பினும் ஒரு வருடகாலப்பகுதிக்குள் ராஜ் ஓரளவு எழுந்து நடமாடும் அளவுக்கு குணமடைந்தான். அதன் பின்னர் சிறு சிறு வேலைகள் செய்து வந்தான். இவ்வாறான நிலையில் ஜேர்மனியிலிருந்து வவுனியாவுக்கு வந்து தங்கியிருந்த தர்மேந்திரா மூன்று முறிப்புக்கு செல்லும் வழியில் துணுக்காய் செல்லும் பாதைக்கு அருகாமையில் பண்ணை ஒன்றை நிறுவி வந்தான். அந்தப் பண்ணையில் தங்கியிருந்து வேலை செய்ய ஒரு குடும்பம் தேவை என பலரிடம் கேட்டிருந்த போது ராஜிற்கு இந்த தகவல் தெரியவந்து தர்மேந்திராவை சந்தித்துள்ளான்.
உடனடியாகவே தனது பண்ணையில் அமைத்திருந்த வீட்டில் ராஜ் மற்றும் அவனது மனைவியையும் மகளையும் குடியமர்த்தியுள்ளான் தர்மேந்திரா. ராஜின் மகளுக்கு அப்பகுதியில் கல்வி கற்க பாடசாலை செல்வது சிரமமாக இருந்துள்ளது. இதனை காரணமாக வைத்து தர்மேந்திரா ராஜின் மனைவியையும் மகளையும் வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் உள்ள தனது சகோதரி ஒருவரின் வீட்டில் தங்க வைத்துள்ளான். அவ் வீ்ட்டு உரிமையாளரான சகோதரியும் புலம்பெயர் நாட்டில் உள்ளார். அதன் பின்னர் ராஜ் பண்ணையில் இன்னும் இரு வேலைகாரர்களுடன் தங்கியிருந்து வேலை செய்ததுடன் தனது மனைவி, பிள்ளையைப் பார்ப்பதற்காக தாண்டிக்குளம் சென்று வந்துள்ளார். அக் காலப்பகுதியில் மகளுக்கு பூப்புனிதநீராட்டு விழாவும் அங்கு வைத்தே செய்துள்ளாா்கள்.
இவ்வாறான நிலையில் தனது மனைவியின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படுவதை ராஜ் அவதானித்துள்ளான். தனக்குத் தெரிவிக்காது மனைவி மோட்டார் சைக்கிள் செலுத்துவதற்கான சாரதி அனுமதிப்பத்திரம் எடுத்திருந்தது அவனுக்கு அதிர்சியை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன் வங்கியில் கணக்கிலக்கம் ஒன்றும் அவளால் ராஜிற்கு தெரியாது திறக்கப்பட்டிருந்தது. அவளிடம் ஏரி.எம அட்டையும் காணப்பட்டது. அத்துடன் சிமாட் போன் ஒன்றும் மனைவியிடம் காணப்பட்டது. இவற்றை எல்லாம் கணவன் விசாரித்த போது மனைவி அவற்றுக்கு சரியான பதில் வழங்காது கணவனை புறந்தள்ளத் தொடங்கியிருந்தாள். இதனால் கடும் கோபமுற்ற ராஜ் மனைவியை அந்த வீட்டிலிருந்து வெளியேறி தன்னுடன் வந்து தங்குமாறு கூறவே மனைவி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளாள். இதனால் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பில் முடிவுற்று ராஜ் மனைவியை தாக்கியிருந்தான். இதன் காரணமாக பொலிசாரிடம் மனைவி முறையிட்டு ராஜ் எச்சரிக்கப்பட்டுள்ளான்.
தனது மனைவியை அந்த வீட்டிலிருந்து வெளியேற்றுமாறு ராஜ் தர்மேந்திராவுக்கு கூறிய போது தர்மேந்திரா அதனை மறுத்ததால் ராஜ் தர்மேந்திராவின் பண்ணைக்கு வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டான். அதன் பின்னரும் மனைவியை அந்த வீட்டிலிருந்து வெளியேறி தன்னுடன் வருமாறு சண்டையிட்டு வந்துள்ளான். தனது மகளை தன்னுடன் வருாறு கூறிய போதும் மகளும் ராஜடன் செல்ல மறுத்துள்ளாள்.
இந் நிலையில் தர்மேந்திர கடந்த வருட தொடக்கத்தில் ஜேர்மனியிலிருந்து வவுனியாவுக்கு வந்துள்ளான். அங்கு வந்த தர்மேந்திரா தனது பண்ணையில் காணப்பட்ட சில பெறுமதி வாய்ந்த பொருட்கள் மற்றும் உழவு இயந்திர உபகரணங்களை ராஜ் திருடி விட்டதாக கூறி பொலிசாரிடம் முறையிட்டு ராஜ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தான். அதே நேரம் தர்மேந்திரா ராஜின் மனைவி தங்கியிருந்த வீட்டில் சென்று வசிக்கத் தொடங்கியுள்ளான். இதனை அறிந்த ராஜ் அங்கு சென்று பெரும் அமளிதுமளிப்படவே பொலிசாரிடம் அறிவித்து ராஜ் அங்கிருந்து பொலிசாரால் பிடித்துச் செல்லப்பட்டு மீண்டும் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தான்.
குறித்த காலப்பகுதிக்குப் பின் ஒரு வருடங்களுக்கு மேலாக மனைவியுடன் எந்தவித உடல் தொடர்பும் ராஜ் வைக்கவில்லை எனத் தெரியவருகின்றது. தற்போது தனது மனைவி கர்ப்பமாக உள்ளதாகவும் அதே நேரம் 2010.11.06ம் திகதி பிறந்த 15 வயதான மகளும் கர்ப்பமாக உள்ளதாகவும் ராஜ் கூறுகின்றான். தனது மனவைி மற்றும் மகள் கர்ப்பமாக உள்ளதால் அவர்கள் இருவரையும் அவன் வவுனியாவிலிருந்து வெளியேற்றி கொழும்பில் தங்க வைத்துள்ளதாக கூறி வருகின்றான். இது தொடர்பாக ராஜ் அப்பகுதி கிராமசேவையாளர் மற்றும் பொலிசார் மற்றும் மகள் கற்கும் பாடசாலை போன்றவற்றுக்கு தெரியப்படுத்தியும் எந்தவித பிரயோசனமும் இல்லை என கூறுகின்றான்.
தனது மனைவி கர்ப்பமடைந்துள்ளமை தொடர்பாக அவள் வாழ்ந்து வந்த வீட்டுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு தெரியும் என கூறியும் கிராமசேவகர் அதனைப் பொருட்படுத்தவில்லை எனவும் மகளின் நிலை தொடர்பாக கூறியும் அதனையும் அவர் காதில் வாங்கவி்லலை எனவும் ராஜ் கூறுகின்றான்.
வெளிநாடுகளிலிருந்து வந்து குடும்பங்களைக் குலைத்து நடுத்தெருவில் விடும் கேவலம் கெட்ட வேலைகளை செய்யும் காமுகர்களில் தர்மேந்திராவும் ஒருவனாக உள்ளான்.
Friday, January 9, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல் இன்றைய வானிலை முன்னறிவித்தல் !
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது இன்று (10) அதிகாலை 4.00 மணியளவில் திருகோணமலையிலிருந்து வடகிழக்கு திசையில் சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து இன்று அதிகாலை 5:30 மணியளவில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக (Depression) வலுவிழந்து, இன்றைய பகல் வேளையில் திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் இலங்கைக் கடற்கரையூடாகக் கடந்து செல்ல அதிக வாய்ப்புள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளது.
பல கொட்டைகளை பார்த்த யாழ்ப்பாண சுவிஸ் அன்ரி!
பிருத்தானியா குடும்பப் பெண்களை உணர்ச்சிவசப்படுத்தி மோசடி!! கொழும்பு ஊடகக் காவாலி பிரசாத் மீது பொலிசில் முறைப்பாடு!!
பிருத்தானியா குடும்பப் பெண்களை உணர்ச்சிவசப்படுத்தி மோசடி!! கொழும்பு ஊடகக் காவாலி பிரசாத் மீது பொலிசில் முறைப்பாடு!!
பிரித்தானியாவில் இலங்கைப் பெண்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக, மற்றுமோரு இலங்கையருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் வசிக்கும் ஊடகவியலாளரான மோக்ஷ பிரசாத் தங்களிடமிருந்து பெருந்தொகை பணத்தை மோசடி செய்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பாதிகப்பட்ட பெண்கள் பிரித்தானிய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
பெருந்தொகை பண மோசடி
லண்டனில் வசிக்கும் ஷானிகா மற்றும் நாதினி ஆகிய இரண்டு இலங்கைப் பெண்களால் இந்தப் முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டன. குறித்த இலங்கி பெண்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 25 ஆம் திகதி கிறிஸ்துமஸ் தினத்தன்று, முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இசைக்கலைஞர் ரொமேஷ் சுகதபாலா நடத்தும் வெள்ள நிவாரணத் திட்டத்திற்காக குற்றம் சாட்டப்பட்டவர் தங்களிடமிருந்து பெருந்தொகை பணத்தை மோசடி செய்ததாகவும் பெண்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பிரித்தானிய பொலிஸார் இலங்கை பொலிஸ் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு தகவல் வழங்கியுள்ளனர். இந்த முறைப்பாட்டு அளித்த பெண்களில் ஒருவர், தனக்கும் மோக்ஷவுக்கும் தொலைபேசி அழைப்புகளுக்கு மட்டுமே தொடர்பு இருந்ததாகக் கூறியுள்ளார்.
அதோடு மோக்ஷ தன்னை ஏமாற்றி பலமுறை பணம் மற்றும் பரிசுகளை பெற்றதாக பிரித்தானிய பொலிஸாரிடம் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பான வட்ஸ்அப் கணக்கு தகவல் மற்றும் செய்திகளின் நகல்களும் பிரித்தானிய பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக் கலியாணம்!! கள்ள மாப்பிளைக்கு காசு கொடுக்காததால் லண்டன் செல்லும் கனவில் இருந்த பெண்ணுக்கு நடந்த கதி!!
கள்ளக் கலியாணம்!! கள்ள மாப்பிளைக்கு காசு கொடுக்காததால் லண்டன் செல்லும் கனவில் இருந்த பெண்ணுக்கு நடந்த கதி!!
லண்டனில் வசிக்கும் நபர் ஒருவர் தனது மனைவி எனக் காட்டி போலி திருமணச் சான்றிதழைத் தயாரித்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் இடபெற்றுள்ள இச்சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது,
லண்டன் நபருக்கும் பெண் குடும்பத்திற்கும் பண தகராறு
இந்தியா குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில், போலி திருமண மற்றும் விவாகரத்து ஆவணங்களைப் பயன்படுத்தி, ஒரு பெண் ‘சார்ந்திருப்பவர் விசா’ (Dependent Visa) மூலம் ஐக்கிய இராச்சியத்திற்கு (UK) செல்ல முயன்ற சட்டவிரோத குடியேற்றத் திட்டத்தைப் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்த மோசடியில் பெண்ணின் கணவர் என்று ஆவணங்களில் காட்டப்பட்ட நபருக்கும், பெண்ணின் குடும்பத்தாருக்கும் இடையே ஏற்பட்ட பணத் தகராறே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வரக் காரணமாகியுள்ளது.
சட்டவிரோத குடியேற்றத்திற்காகப் பேசப்பட்ட பணம் சரியாக வழங்கப்படாததால், அந்த நபர் காவல்துறையில் முறைப்பாடளித்துள்ளார்.
விசாரணையில், இந்த சட்டவிரோதத் திட்டம் 2024 பெப்ரவரி மாதம் அரங்கேறியது தெரியவந்துள்ளது. லண்டனில் வசிக்கும் ஒருவர் தனது மனைவி எனக் காட்டி போலி திருமணச் சான்றிதழைத் தயாரித்துள்ளார்.
அதன் பின் பெண் வீட்டாரிடம் ஏற்பட்ட பணத் தகராறு குறித்த மோசடியை அம்பலப்படுத்த உதவியாக அமைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Thursday, January 8, 2026
கனடாவில் 57 வயத மனைவி மீது சந்தேகம்!! கட்டி வைத்து அந்தரங்கத்தை தைத்த 62 வயது குகநேசன் கைது!! மனைவியின் அதிர்ச்சி வாக்குமூலம் இதோ!
கனடாவை வசிப்பிடமாகக் கொண்டவரும் யாழ் தீவப்பகுதியைச் சொந்த இடமாகக் கொண்டவருமான 62 வயது கதிாகாமதம்பி குகநேசன் தாய்லாந் பொலிசாரால் Khao Yai National Park காட்டுப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் கைது செய்யப்பட்டள்ளார். தனது மனைவியை குறித்த விடுதியில் வைத்து கடுமையான சித்தரவதை புரிந்தமை மற்றும் மனைவியின் அந்தரங்க உறுப்பினை ஊசி நுாலால் தைத்து சித்தரவதை செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்களில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.தற்போது குகநேசன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தற்போது குகநேசனின் மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக கனடாவில் உள்ள குகநேசனின் பிள்ளைகளுக்கு பொலிசார் மற்றும் குகநேசனின் மனைவி தெரியப்படுத்தியதை அடுத்து குகநேசனின் மூத்த மகன் தாய்லாந் சென்றுள்ளதாகத் தெரியவருகின்றது.
தாய்லாந்தில் காணப்படும் kratom என்ற இயற்கையான போதை மருந்து ஒன்றை பாவித்த பின்னரே குகநேசன் மனைவியை கட்டி வைத்து சித்திரவதை புரிந்துள்ளார் என மனைவி பொலிசாருக்கும் தனது பிள்ளைகளுக்கும் தெரிவித்துள்ளார். குறித்த போதைப்பொருளை அவர் வாங்கி வந்து தீமையற்ற ஆரோக்கியமான இயற்கை மூலிகை என கூறி தனக்கு தெரிவித்து அவர் பாவித்ததாகவும் அதை பாவித்து சிறிது நேரத்தின் பின் குகநேசன் தன்னுடன் உறவு கொண்டு பின்னர் தன்னை கட்டி வைத்து வாய்க்குள் உள்ளாடைகள் அடைந்த பின் சித்தரவதை செய்ததாகவும் பொலிசாருக்கு வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.இதே வேளை தாய்லாந் பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் போது குகநேசன் மனைவி மீது தற்செயலாக சித்திரவதை செய்யவில்லை என்றும் திட்டமிட்ட ரீதியிலேயே சித்தரவதை செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்கள். போதை மருந்து பாவிக்கும் முன்னரே குகநேசன் செருப்பு தைக்கும் ஊசி மற்றும் பிளாஸ்டிக் நுால் ஆகியவற்றை கொள்முதல் செய்துள்ளார். இது மனைவிக்கு தெரியாது கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த kratom என்ற போதைப்பொருள் வீரியம் கூடிய போதைப்பொருள் அல்ல எனவும் பொலிசார் நீதிமன்றில் கூறியுள்ளார்கள்.
இதே வேளை கனடாவில் உள்ள தனது மகன் வயதான இளைஞனையும் தன்னையும் தொடர்புபடுத்தி தன்னை கட்டி வைத்து குகநேசன் சுயநினைவற்ற நிலையில் சித்திரவதை புரிந்ததாக மனைவி தனது பிள்ளைகளுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
குகநேசனும் மனைவியும் அடிக்கடி பல்வேறு நாடுகளுக்கும் சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தவர்கள் என்பதுடன் எந்தவித சண்டை சச்சரவுகளும் இன்றி வாழ்ந்து வந்தவர்கள் என குகநேசனுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளார்கள். கடந்த வருடம் குகநேசன் தம்பதிகள் இந்தியா முழுவதும் சுற்றுலா சென்று வந்தவர்கள் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
முல்லைத்தீவில் பெண் பிரதேசசபை செயலாளரை கண்டம் பண்ண முற்பட்ட உபதவிசாளர் காவாலி அனோஜன்!!
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் செயலாளரை மக்கள் மத்தியில் அவதூறாக பேசிய தாக்க முயற்சித்த உப தவிசாளரின் நடவடிக்கை குறித்து உயர் மட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துறைப்பற்று பிரதேச சபை பேசுபொருளாக காணப்படுகின்றது
இந்த நிலையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜக்கியமக்கள் சக்தி கட்சியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்டு றிசாட்பதியூதீன் அவர்களின் கட்சியால் தெரிவுசெய்யப்பட்டுள்ள யோகேஸ்வரன் அனோஜன் என்ற மக்கள் பிரதிநிதி கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் உபதவிசாளராக செயற்பட்டு வருகின்றார்.
கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் செயலாளராக இராஜயோகினி ஜெக்குமார் அவர்கள் கடமையாற்றி வருகின்றார்.
இன்று (08) குமாரபுரம் பகுதியில் பிரதேச செயலகத்தால் தற்காலிகமாக வீதி புனரமைப்பு பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது ஒப்பந்த தாரர்களுக்க அந்த வீதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரதேச சபையின் ஜே.சி.பி இயந்திரத்தினை குறித்த உபதவிசாளர் குறித்த பகுதிக்கு தேவை என கோரியுள்ளார் இந்த வீதி ஒப்பந்த வேலை என்ற காரணத்தினால் கனரக இயந்திரத்தினை கொடுக்கமறுத்துள்ளார்
பிரதேச சபையின் வேலைக்காக இயந்திரங்கள் பயன்படுத்தப்படுமாயின் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் பார்வையிட்ட பின்னரே இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் குறித்த வீதியினை பார்வையிடுவதற்காக பிரதேச சபையின் செயலாளர் சென்றுள்ளார் அந்த இடத்தில் கிராம சேவையாளர் அபிவிருத்தி உத்தியோகத்தர் பொதுமக்கள் என பலர் நின்ற வேளை உபதவிசாளரும் குறித்த இடத்தில் நின்று பிரதேச சபை செயலாளரை அவதூறாக பேசியதுடன் பெண் அதிகாரி என்று பார்க்காமல் அடிப்பதற்கும் முயற்சி செய்துள்ளார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
உபதவிசாளரின் இந்த நடவடிக்கை தொடர்பில் உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதுடன்
கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் இவ்வாறு அநாகரிகமான முறையில் நடந்துகொண்டுள்ளதுடன் பெண்அதிகாரியினையும் தாக்கமுற்பட்ட சம்பவத்தினை தொடர்ந்து அரச ஊழியர்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.










