வவுனியாவில் மற்றுமொரு கழுத்தறுப்பு!! குடும்பப் பெண் கணவனால் படுகொ லை!! கணவனும் தனது கழுத்தை அறுத்து படுகாயம்!! வீடியோ
Friday, December 19, 2025
வவுனியாவில் மற்றுமொரு கழுத்தறுப்பு!! குடும்பப் பெண் கணவனால் படுகொ லை!! கணவனும் தனது கழுத்தை அறுத்து படுகாயம்!! வீடியோ
வவுனியாவில் மற்றுமொரு கழுத்தறுப்பு!! குடும்பப் பெண் கணவனால் படுகொ லை!! கணவனும் தனது கழுத்தை அறுத்து படுகாயம்!! வீடியோ
வவுனியா, ஈச்சங்குளம் – கருவேப்பங்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொ லை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று வெள்ளிக்கிழமை (19) அதிகாலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் கருவேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.சடலம் அதே இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குடும்பத் தகராறு காரணமாக உயிரிழந்தவரின் கணவர் இந்தக் கொலையைச் செய்ததாக தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரும் காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பில் ஈச்சங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இளங்குமரன் எம்.பி எனது ஆ்ண் உறுப்பை நோக்கி வேகமாக தன்னுடையதை துாக்கி குத்தினார்!! நான் தந்திரோபாயமாக பின்னால் வளைந்தேன்!! கிளிநொச்சி விதானையின் பரபரப்பு வாக்குமூலம் இதோ!!
இளங்குமரன் எம்.பி எனது ஆ்ண் உறுப்பை நோக்கி வேகமாக தன்னுடையதை துாக்கி குத்தினார்!! நான் தந்திரோபாயமாக பின்னால் வளைந்தேன்!! கிளிநொச்சி விதானையின் பரபரப்பு வாக்குமூலம் இதோ!!
கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட டித்வா புயல் அனர்த்த நேரத்தில் கிளிநொச்சிப் பகுதியில் வெள்ளத்தால் இடம்பெயர்ந்தத மக்கள் தங்கியிருந்த முகாம் ஒன்றிற்கு சமைத்த உணவு கொண்டு சென்ற யாழ் மாவட்ட NPP நாடாளுமன்ற உறுப்பினரை, அந்த முகாமுக்கு பொறுப்பாக இருந்து நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்த கிராமசேவகர், சமைத்த உணவுகள் அரச சுற்றுநிரூபத்தின்படி சுகாதாரப் பரிசோதகரின் பரிசோதனையின் பின்னரே பரிமாற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினருக்கு விளக்கபடுத்தி ணவு வழங்குவதை தடுத்து நிறுத்தியதும் அதன் பின்னர் அதனைக் கேட்காது எம்.பி கிராமசேவகரை தாக்கியதாக அப்பகுதி மக்கள் மற்றும் கிராம சேவகர் கூறியிருந்தமையும் அனைவருக்கும் தெரிந்ததே.
மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட கிராம சேவையாளர் பொலிஸாருக்குக் கொடுத்த முறைப்பாட்டில், இளங்குமரன் எம்.பி. தம்மை – தமது ஆணுறுப்பை – இலக்கு வைத்து காலால் எட்டி உதைத்தார் எனினும், தான் தந்திரோபாயமாக வளைந்தமையால் அந்த உதை தமது அடிவயிற்றில் விழுந்தது என்றும் தெரிவித்திருக்கிறார். இதன் பின்னரும் இளங்குமரன் எம்.பியை பொலிசார் கைது செய்யவில்லை என அறிந்து கிராமசேவகர்கள் கவனயீர்ப்பு மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர் குறித்த சம்பவம் தொடர்பில் தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தரான சுமந்திரனின் கவனத்திற்கு பல கிராமசேவகர்கள் அறியப்படுத்தியதுடன் கண்கண்ட சாட்சிகளாக 46 பேரின் கையொப்பத்துடன் மேற்படி கிராம சேவையாளரை நாடாளுமன்ற உறுப்பினர் காலால் உதைத்து தாக்கிய விடயத்தை தெரிவித்து ஜனாதிபதிக்கு கடிதம்டிஎழுதியிருந்தார்கள்.
அதன் அடிப்படையில் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் ஒன்றை முன்வைத்து விடயத்தை மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்த சுமந்திரன்,“சம்பந்தப்பட்டவர் நாடாளுமன்ற உறுப்பினர். அவரது நகர்வுகளும் நடவடிக்கைகளும் எல்லோருக்கும் தெரியும். அத்தகைய ஒருவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு பொலிஸார் 10 மாத காலம் கோரியிருப்பது பெரும் அபத்தம். இதில் பெரும் அரசியல் தலையீடுகள் இருக்கின்றன” – என்று மன்றுக்குச் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய மோசமான தாக்குதல் குறித்து நடவடிக்கை எடுக்க பொலிஸார் நீதிமன்றில் 10 மாத கால அவகாசம் கோரி பெற்றிருப்பது மிக வேடிக்கையான விடயம். சுமந்திரன் சுட்டிக்காட்டிய விடயங்களை அடுத்து, ஜனவரி 16ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினரைக் கைது செய்து மன்றில் நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படி கிளிநொச்சி பொலிஸின்
குற்றவியல் விடயங்களுக்குப் பொறுப்பான அதிகாரிக்கு நீதிவான் கிருஷாந்தன் உத்தரவிட்டார் எனத் தெரிய வருகிறது.
அதன் பின்னரே இளங்குமரன் எம்.பி நீதிமன்றில் ஆயரானதாகத் தெரியவருகின்றது. குறித்த தாக்குதல் சம்பவத்தில் பொலிசார் இளங்குமரன் எம்.பிக்கு மிகவும் ஆதரவாக நடந்துள்ளார்கள் என கிராமசேவகர்கள் தரப்பிலிருந்து குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Thursday, December 18, 2025
காய்ச்சலுக்கு போடப்பட்ட தடுப்பூசியால் பலியானி திவ்யாஞ்சலி!!
காய்ச்சலுக்கு போடப்பட்ட தடுப்பூசியால் பலியானி திவ்யாஞ்சலி!!
களுத்துறை – மத்துகம வைத்தியசாலையில் தடுப்பூசி விஷமானதால் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 23 வயதுடைய சந்தமினி திவ்யாஞ்சலி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் உயிரிழந்த பெண்ணுக்கு அவரது பெற்றோரும் உறவினர்களும் நீதி கோரியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
கடந்த 12 ஆம் திகதி காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளவதற்காக IDH வைத்தியசாலைக்கு சந்தமினி சென்றிருந்தார்.
அவரைப் பரிசோதித்த வெளிநோயாளர் பிரிவில் இருந்த வைத்தியர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். ஆனால் படுக்கைகள் இல்லாததால் அறைக்குள் அனுமதிக்கவில்லை. நோயாளி வெளியேறத் தயாராகும் போது அவர் மயக்கமடைந்துள்ளார்.
பின்னர் நோயாளி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 14 ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகன்றது.
இறந்த பெண்ணுக்கு நீதி வழங்கவும், இதுபோன்ற ஒழுங்கற்ற செயல்களால் மேலும் உயிரிழப்புகளைத் தடுக்கவும் அவரது பெற்றோரும் உறவினர்களும் அதிகாரிகளை வலியுறுத்துகின்றனர்.
வடமராட்சி பகுதியில் பாடசாலை மாணவி தீயில் எரிந்து பலி - கம்பர்மலையில் துயரம் !
வடமராட்சி பகுதியில் பாடசாலை மாணவி தீயில் எரிந்து பலி - கம்பர்மலையில் துயரம் !
பாடசாலை மாணவி ஒருவர் தனக்கு தானே பெற்றோல் ஊற்றி தீ வைத்து பாடுகாமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று வியாழக்கிழமை பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது கடந்த வியாழக்கிழமை 11-12-2025 அன்று குறித்த மாணவி தாயார் திட்டியதை அடுத்து தனக்கு தானே தீ வைத்து எரிந்ததாக அறியமுடிகின்றது , தாயார் ஆசிரியராகவும் தந்தை அரச தொழில் புரிந்து வருகின்றனர் ,
சம்பவத்தில் கம்பர்மலை வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்று வரும் பார்த்தீபன் கபிஷ்னா வயது 15 என்ற மாணவியை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்
சடலம் உடற்கூற்று சோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது ,
பாடசாலை மாணவி ஒருவர் தனக்கு தானே பெற்றோல் ஊற்றி தீ வைத்து பாடுகாமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று வியாழக்கிழமை பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது கடந்த வியாழக்கிழமை 11-12-2025 அன்று குறித்த மாணவி தாயார் திட்டியதை அடுத்து தனக்கு தானே தீ வைத்து எரிந்ததாக அறியமுடிகின்றது , தாயார் ஆசிரியராகவும் தந்தை அரச தொழில் புரிந்து வருகின்றனர் ,
சம்பவத்தில் கம்பர்மலை வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்று வரும் பார்த்தீபன் கபிஷ்னா வயது 15 என்ற மாணவியை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்
சடலம் உடற்கூற்று சோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது ,
கிளிநொச்சியில் டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு – டிப்பர் குடைசாய்ந்து விபத்து!
கிளிநொச்சியில் டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு – டிப்பர் குடைசாய்ந்து விபத்து!
கிளிநொச்சியில் சட்டவிரோத மணலுடன் சென்ற டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் டிப்பர் வாகனம் தடம்புரண்டு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்ந்து எடுத்து சென்ற டிப்பர் வாகனத்தினை பொலிஸார் வழிமறித்த வேளை பொலிசாரின் சமிக்ஞையை மீறி டிப்பரை சாரதி ஓட்டி சென்றுள்ளார்.
அதனை பொலிஸார் துரத்தி சென்ற வேளை உள்ளக வீதியூடாக தப்பி செல்ல முற்பட்ட நிலையில் , டிப்பரின் சில்லுகளை இலக்கு வைத்து பொலிஸார் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டதில் டிப்பர் குடைசாய்ந்து விபத்துக்கு உள்ளானது.
அதனை அடுத்து தப்பியோட முற்பட்ட சாரதியை பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்தனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கொக்குவிலைச் சேர்ந்த 16 வயது அக்சயா யாருடன் சென்றாள்!! பெற்றோர் தேடுகின்றார்கள்!!
கொக்குவிலைச் சேர்ந்த 16 வயது அக்சயா யாருடன் சென்றாள்!! பெற்றோர் தேடுகின்றார்கள்!!
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியோ தந்துள்ளோம்
மட்டக்களப்பு சத்துருக்கொண்டானைச் சேர்ந்த அருளானந்தம் அக்சயா (16 வயது) என்பவரை கடந்த 23 ம் திகதியிலிருந்து காணவில்லை. இவர் காணாமல் போனமை தொடர்பில் மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.குறித்த சிறுமியை எவ்விடத்திலாவது கண்டால் கீழ் காணும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பினை ஏற்படுத்தி தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. (0740455935)
Wednesday, December 17, 2025
மட்டக்களப்பில் தவராசா பிட்டுக் கேட்டதால் மனைவி கொன்றாளா? உண்மையில் நடந்தது என்ன?
மட்டக்களப்பில் தவராசா பிட்டுக் கேட்டதால் மனைவி கொன்றாளா? உண்மையில் நடந்தது என்ன?
சமூகவலைத்தளப் பதவினை அப்படியே தந்துள்ளோம்….
மட்டக்களப்பு வாகனேரிப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை (15) காலை உணவு புட்டு தயாரித்து தருமாறு கோரிய கணவனான தவராசாவை கத்தியால் கழுத்தை வெட்டியும் கோடாரியால் மண்டையை பிளந்தும் கொலை செய்துவிட்டு, பொலிஸ் நிலையத்தில் கத்தியுடன் சென்று சரணடைந்த மனைவி கைது செய்துள்ளதாக வெளியாகிய செய்தின் உண்மை என்னவெனின்
தவராசா போதைக்கு அடிமையானவர் என்பதுடன் போதையில் மனைவியை தொடர்ச்சியாக சித்திரவதை செய்து வந்துள்ளார். இதன் காரணமாக பல தடவைகள் பொலிசாரிடம் மனைவி முறையிட்டு பொலிசாரும் தவராசாவை எச்சரித்து வந்துள்ளார்கள். இறுதியாக கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் தவராசாவின் சித்திரவதை தாங்காத மனைவ பொலிஸ் நிலையத்திற்கு சென்று இனிமேல் நான் உங்களிடம் வருவது என்றால் அவனைக் கொலை செய்துவிட்டுத்தான் வருவேன் என கூறிச் சென்றுள்ளார். அதன் பின்னரே மனைவி தவராசாவை கொலை செய்துள்ளதாக தெரியவருகின்றது.
ஏற்கனவே நாம் வெளியிட்ட செய்தி
தான்மீதான நீண்ட நாட்களாகிய கணவரின் துன்புறுத்தல் தான் பெண்ணை அந்த பொறுமை இழந்த செயலுக்கு இட்டுச் சென்றிருப்பதாக அறிய முடிகிறது
இதற்கான பிரதான காரணம் என்னவென்று பார்த்தால் கணவன் அருந்தும் மதுபோதையே பெண்ணை தினமும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி உள்ளது
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னும் கணவரால் தான் துன்புறுத்தப்படுவதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார் இதற்கான தீர்வை பெற்றுத்தரவிடில் அடுத்த முறை நான் இங்குவரும் போது
கணவரை கொலை செய்துவிட்டுத்தான் வருவேன் என அவர் சொன்னதாகவும் அறிய முடிகிறது.
கடந்த காலத்தில் கணவரால் தொடர்ந்து தாக்கப்பட்டதால் காது கேளாது போயுள்ளதாகவும் சொல்லப்படுகிறது
எந்த அளவுக்கு தான் கணவரால் தொடர்ந்து துன்பப்பட்டிருப்பார் இந்த செயலை செய்யும் மனநிலைக்கு மாறுவதற்கு என்று நினைத்து பார்த்தால் ஒவ்வொரு கணவர்களும் தங்கள் மனைவிகள் மீது அதித அக்கறை கொள்ள வேண்டும் என சொல்ல வேண்டியுள்ளது.
ஆனாலும் கணவர் பொதுப்பார்வைக்கு ஏன் என்பார்வைக்கு கூட அமைநியான நபராகவே அல்லுத்தொல்லுக்கு போகாத நபராகவே பார்க்கப்பாட்டார்
ஆனால் அவரை மதுபோதைதான் இந்த நிலைக்கு இட்டுச் சென்றிருப்பதை அறியும் போதுதான் அவரின் நிலைமை அறிய முடிகிறது
குறித்த சம்பவத்தினை பொதுவாக நாம் எப்படி பார்க்கின்றோம் என்பதைத் தாண்டி, கணவன் மனைவி மீது கவனத்துடனும் மனைவி கணவன் மீது கண்ணியத்துடனும் இணையான வாழ்வில் பரஸ்பர விட்டுக் கொடுப்போடு அதிக அழுத்த திணிப்புகளை தவிர்த்து வாழ இருவருக்கும் இடையே நம்பிக்கையும்
இருவருக்கிடையே மனநிறைவான புரிந்துணர்வுடன் வாழ தங்களை தயார்ப்படுத்திக் கொண்டு வாழ்வை நகர்த்தும் போதுதான்.
தாம்சார்ந்த குடும்பத்தில் உள்ள சந்தோசத்தையும் மகிழ்ச்சியையும் தாங்கி கொள்ளும் தருணத்தில் தங்களின் பிள்ளைகளின் எதிர்காலத் தேடல் சிறப்பாக அமையும் காலத்தை நெருக்கும் போது புதுமை காலத்தை அன்னியோன்னியத்துடன் களிக்க கைகொடுக்கும்.
இல்லையெனில் நான்கு பிள்ளைகளை பெற்றெடுத்த குடும்பம் இன்று இருபிள்ளைகளை அப்பா இல்லாது. அம்மா சிறையிலும் உள்ள நிலையில் மணமுடித்த இருபிள்ளைகள் ஒருபுறமும் எதிர்கால கனவுகளை சுமக்கும் இருபிள்ளைகள் துணையாக யாருமில்லாத நிலைமைக்கும் தள்ளப்பட்டதை போன்ற வாழ்வையே மதுபோதை தந்துவிடலாம் நம்மில் பலருக்கு.
ஆக கணவன் மனைவி இருவருக்கிடையே உள்ள சண்டை சச்சரவுகள் நான்பெரிது நீபெரிது நீசெய்வது பிழை நான் செய்வது சரியென எழும் பேச்சை இருவருக்குமான அறைக்குள் பேசித் தீர்த்துக் கொள்ள முனையும் போதுதான் வாழ்க்கை எனும் காலத்தின் அத்தியாயத்தை புரட்டி கண்ணியத்தோடு நகர்ந்த வழிவகை செய்யும் மாறாக ஈட்டிக்கு போட்டியாக பேச நினைத்தால் .
வாகனேரியில் பிட்டு பிரச்சனையில் ஆணில் உயிர் போனது போல் இன்னுமொரு ஊரில் பிரிதொரு விடையத்தின் காரணத்தால் கணவனையோ மனைவியையோ தாய் தகப்பன் இழக்க ஒன்றுமே அறியாத பிள்ளைகளின் வாழ்க்கையே கேள்விக்குறியாக மாறலாம்,!
Moorththy Dinu
மரணங்களுக்கு தரமற்ற மருந்துகள் காரணமா?... 10 இந்திய மருந்துகளை பயன்பாட்டிலிருந்து விலக்க முடிவு!
தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை, ஒரு இந்திய நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட சக்திவாய்ந்த நுண்ணுயிர் எதிர்ப்பிகள் உட்பட பத்து வகையான மருந்துகளை உடனடியாக பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது.
பாதுகாப்பு மற்றும் இடர் எச்சரிக்கை துணைக்குழுவின் முடிவுகள் மற்றும் கண்டி தேசிய மருத்துவமனையின் ஆலோசகர் நுண்ணுயிரியலாளரின் ஆரம்ப விசாரணை அறிக்கைகள் தொடர்பாக தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையால் பெறப்பட்ட தொடர்ச்சியான, பாதகமான மருந்து எதிர்வினை அறிக்கைகளின் அடிப்படையில் அதிகாரசபை இந்த முடிவை எடுத்துள்ளது.
வரலாற்றில் முதல் முறையாக, தரம் மோசமடைதல் மற்றும் ஒவ்வாமை எதிர்வினைகள் குறித்த சந்தேகம் காரணமாக மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் பத்து வகையான மருந்துகளை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2024 மற்றும் 2025 க்கு இடையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளில் வாந்திக்கு ஒன்டெரெஸ்ட்ரோன் ஊசி, செஃபோடாக்சைம், கோ-அமோக்ஸிகிளேவ், இமிபெனம், மெராபெனம், பிபராசிலின், டோசாபாக்டு, காய்ச்சல், வலிப்புத்தாக்கங்கள் மற்றும் மனநோய்க்கான ஹாலோபெரிடோல், இரும்புச்சத்து குறைபாட்டிற்கான இரும்பு சுக்ரோஸ் மற்றும் மற்றொரு சக்திவாய்ந்த நுண்ணுயிர் எதிர்ப்பி சல்பாக்டர்ன் செஃபோபெராசோன் ஊசி ஆகியவை அடங்கும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், தரப் பிரச்சினைகள் காரணமாக, சம்பந்தப்பட்ட ஒரே நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஒன்டெரெஸ்ட்ரோன் மருந்துத் தொகுதிகளை பயன்பாட்டிலிருந்து நீக்க மருந்துகள் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளதாக மருத்துவம் மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்கக் கூட்டணி தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சகம், தேசிய ஔடதங்கள் அதிகாரசபை மற்றும் அரச மருந்துக் கூட்டுத்தாபனம் ஆகியவை கடந்த காலத்தில் நாட்டின் மருந்து விநியோகத்தை முறையாக நிர்வகிக்க தவறியதால், மருந்து ஒழுங்குமுறை கட்டுப்பாட்டை மீறி சரிந்துள்ளது என்றும் கூட்டணி கூறுகிறது.
குறிப்பிட்ட மருந்து நிறுவனத்தால் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து மருந்துப் பொருட்களையும் நிறுத்தி வைப்பதற்கும் தேசிய ஔடதங்கள் அதிகாரசபை முடிவு செய்துள்ளது.
'ஒன்டெஸ்ட்ரான் தடுப்பூசி' பயன்படுத்தியதால் ஏற்பட்டதாகக் கூறப்படும் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளன. ஐ.டி.ஹெச். மருத்துவமனையால் அறிவிக்கப்பட்ட இரண்டு இறப்புகள் ஹபரகட பகுதியைச் சேர்ந்த 37 வயது பெண்மணி மற்றும் மதுகம பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம் பெண்.
இந்த மருந்தைப் பயன்படுத்திய பிறகு ஏற்பட்ட சிக்கல்கள் குறித்த அறிக்கைகளைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சகம் அதை பயன்பாட்டிலிருந்து திரும்பப் பெற நடவடிக்கை எடுத்தது. அவர்களின் இறப்புக்கு தரமற்ற மருந்து காரணமா என்பதை தீர்மானிக்கும் வரை தடை அமலில் இருக்கும்.
ஒன்டான்செட்ரான் தடுப்பூசியால் இறந்தாரா என சந்தேகிக்கப்படும் மதுகமத்தைச் சேர்ந்த சந்துமினி திவ்யாஞ்சலியின் (23) பெற்றோரும் உறவினர்களும் நீதி கோருகின்றனர். சந்துமினி கொழும்பில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த 12 ஆம் திகதி டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற ஐடிஹெச் மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். அவரைப் பரிசோதித்த வெளிநோயாளர் பிரிவில் இருந்த மருத்துவர்கள் தடுப்பூசி போடவில்லை, ஆனால் படுக்கைகள் இல்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை. பின்னர், நோயாளி வெளியேறத் தயாராகும் போது மயக்கமடைந்தார்.
பின்னர் நோயாளி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு 14 ஆம் திகதி இறந்தார்.
யாழில் இளம் குடுமப் பெண் ஜூலக்சனா கள்ளக்காதலனுடன் தலைமறைவு? 6வயது மகள் சோர்ந்து போனாள்!! கணவன் தேடுகின்றார்!
யாழில் இளம் குடுமப் பெண் ஜூலக்சனா கள்ளக்காதலனுடன் தலைமறைவு? 6வயது மகள் சோர்ந்து போனாள்!! கணவன் தேடுகின்றார்!
சங்கானை வைத்தியசாலை வீதியில் வசித்து வந்த கபில் ஜூலக்சனா என்பவர் கடந்த நாற்பது நாட்களாக காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண்ணிற்கு 6 வயதுடைய பெண் குழந்தை ஒன்று உள்ளது எனவும் அக் குழந்தை தாய் காணாமல் போனதில் இருந்து ஏக்கத்துடன் காணப்படுவதாக கூறப்படுகிறது
குறித்த சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எனவே, குறித்த பெண் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் 0712100557 எனும் அவரது கணவரின் தொலைபேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் – கணவர்
Tuesday, December 16, 2025
லண்டனில் இலங்கைத் தமிழரின் சாராயக்கடை முற்றுகை!! விசா இல்லாதவரை வேலைக்கு அமர்த்தினாராம்!! 2 கோடி அபராதம்!!
லண்டனில் இலங்கைத் தமிழரின் சாராயக்கடை முற்றுகை!! விசா இல்லாதவரை வேலைக்கு அமர்த்தினாராம்!! 2 கோடி அபராதம்!!
இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்….
கடந்த வாரம் இலண்டனில், இலங்கைத் தமிழர் ஒருவருக்குச் சொந்தமான மதுபான விற்பனை நிலையத்தில் (Off Licence) பிரித்தானிய குடிவரவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையானது, புலம்பெயர் தமிழ் வணிக சமூகத்தின் மத்தியில் ஒரு முக்கியமான விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.
அங்கு வதிவிட உரிமையற்ற (விசா இல்லாத) ஒருவரைப் பணிக்கு அமர்த்திய குற்றத்திற்காக, அந்த வர்த்தக நிலைய உரிமையாளர் கைது செய்யப்பட்டதுடன், அவருக்கு 45,000 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, இத்தகைய கைதுகளும், கணிசமான அபராதங்களும் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன.
இருப்பினும், தற்போதைய சூழலில் பிரித்தானிய அரசின் குடிவரவுச் சட்ட அமலாக்கம் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்குத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, சட்டவிரோதப் பணியமர்த்தலுக்கான அபராதத் தொகை, முன்பு இருந்த 10,000 பவுண்டுகளிலிருந்து தற்போது 45,000 பவுண்டுகள் வரை பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வளவு கடுமையான சட்ட நெருக்கடிகளும், மிகப்பெரிய பொருளாதார இடர்களும் இருப்பது தெளிவாகத் தெரிந்திருந்தும், சில தமிழ் வர்த்தகர்கள் ஏன் தொடர்ந்து சட்டத்திற்குப் புறம்பான வகையில், வதிவிட உரிமையற்றவர்களைப் பணிக்கு அமர்த்தும் அபாயகரமான முடிவை எடுக்கிறார்கள்?
இதற்கான காரணங்களை நாம் மேலோட்டமாகப் பார்க்காமல், அவர்களின் மனநிலை மற்றும் பொருளாதாரக் காரணிகள் அடிப்படையில் ஆராய வேண்டியுள்ளது.
சில வணிகர்களிடம், “தங்களைச் சட்டம் நெருங்காது” அல்லது “தப்பித்துக் கொள்ளலாம்” என்ற ஒரு விதமான மிதமிஞ்சிய தன்னம்பிக்கை (Overconfidence) காணப்படுகிறது. இது பல ஆண்டுகளாகப் பிடிபடாமல் இருந்த அனுபவத்தினால் ஏற்பட்ட ஒரு தவறான பாதுகாப்பு உணர்வாகக் கூட இருக்கலாம்.
“எத்தகைய சிக்கல் வந்தாலும் பணத்தால் தீர்த்துவிடலாம்” என்ற ஒரு தவறான கண்ணோட்டம் சிலரிடம் உள்ளது. 45,000 பவுண்டுகள் என்பது ஒரு மிகப்பெரிய தொகை என்பதை அவர்கள் உணர்ந்திருந்தாலும், தமது தற்போதைய பணப்புழக்கத்தைக் கொண்டு தரமான சட்டசேவைகளை விலைக்கு வாங்கி அதைச் சமாளித்துவிடலாம் என்ற ஒருவித பொருளாதார இறுமாப்பு, அவர்களை இத்தகைய தவறான முடிவுகளை எடுக்கத் தூண்டக்கூடுவதாக இருக்கலாம்.
குறுகிய கால இலாப நோக்கம் மற்றும் தவறான பொருளாதார திட்டமிடுதல் மிக முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
ஒரு பணியாளரைச் சட்டரீதியாக அமர்த்தும்போது, அவர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் (Minimum Wage) வழங்க வேண்டும், National Insurance Contributions செலுத்த வேண்டும், மற்றும் பிற சட்டரீதியான சலுகைகளை வழங்க வேண்டும்.
இவற்றைத் தவிர்ப்பதற்காக, சட்டவிரோதப் பணியாளர்களை அரைவாசிச் சம்பளத்திற்கு அமர்த்துவதன் மூலம் கிடைக்கும் உடனடி இலாபத்தை மட்டுமே இவர்கள் கணக்கில் கொள்கிறார்கள்.
ஆனால், அவ்வாறு சேமிக்கும் சிறிய தொகையை விட, பிடிபட்டால் செலுத்த வேண்டிய 45,000 பவுண்டுகள் அபராதம் பல மடங்கு அதிகம் என்பதை அவர்கள் உணர்வதில்லை.
இது, “ஊசி போகிற இடத்தைப் பார்ப்பாராம், உலக்கை போகிற இடத்தைப் பாராராம்” என்ற பழமொழியை நினைவூட்டும் ஒரு முதிர்ச்சியற்ற பொருளாதாரக் கணக்கீடு என்றால் மிகையாகாது.
இந்தப் பிரச்சினையின் தாக்கம் வெறும் 45,000 பவுண்டுகள் அபராதத்துடன் நின்றுவிடுவதில்லை. அதன் தொடர் விளைவுகள் மிகவும் கடுமையானவை.
சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவது உறுதிசெய்யப்பட்டால், வணிக நிலையத்தின் மதுபான விற்பனை உரிமம் (Off Licence) உள்ளூர் சபையினால் (Council) முழுமையாக ரத்து செய்யப்படும் அபாயம் உள்ளது.
ஒரு Off Licence-ன் பிரதான வருமானமே இந்த உரிமத்தில்தான் தங்கியுள்ளது. அது பறிபோகும்போது, அவர்களின் மொத்த வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகிவிடும்.
இத்தகைய சட்ட நடவடிக்கைகளால் ஏற்படும் தீவிரமான மன அழுத்தம் (Severe Stress), உரிமையாளரையும் அவர் தம் குடும்பத்தினரையும் உடல், மன ரீதியாகப் பெரும் பாதிப்புக்குள்ளாக்கி, நோயாளிகளாக்கும் நிலைக்குத் தள்ளக்கூடும்.
மிக முக்கியமாக, இது ஒரு தனிநபர் சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல, ஒரு சமூகப் பிரச்சினையுமாகும். பிரித்தானிய ஊடகங்களில் அடிக்கடி “இலங்கைத் தமிழருக்குச் சொந்தமான கடை உரிமையாளர் கைது” என்ற செய்திகள் வெளியாகும்போது, அது ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் ஒரு கறையை ஏற்படுத்துகிறது.
பல தசாப்தங்களாகக் கடின உழைப்பின் மூலம் புலம்பெயர் மண்ணில் கட்டியெழுப்பப்பட்ட “இலங்கை தமிழர்கள் நேர்மையான உழைப்பாளிகள்” என்ற நற்பெயர் சிதைக்கப்பட்டு, இலங்கை தமிழர்கள் என்றாலே சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் “நம்பகத்தன்மையற்றவர்கள்” (Dodgy Sri Lankans) என்ற தவறான பிம்பம் பிரித்தானிய பொதுச் சமூகத்தில் உருவாகச் சிலரின் இத்தகைய பொறுப்பற்ற செயல்கள் காரணமாக அமைகின்றன.
மேற்கூறிய காரணிகளையும் விளைவுகளையும் ஆராயும்போது, இது வெறும் சட்ட அறியாமை மட்டுமல்ல, அதையும் தாண்டிய ஒரு “பேராசை” (Greediness) சார்ந்த மனநிலை என்பது தெளிவாகிறது.
உடனடிப் பணலாபத்திற்காக, தமது சொந்த வாழ்வாதாரத்தையும், குடும்பத்தின் நிம்மதியையும், ஒட்டுமொத்த சமூகத்தின் நற்பெயரையும் பணயம் வைக்கும் ஒரு ஆபத்தான விளையாட்டை உடனடியாக கைவிடுங்கள்.
online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job










