This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

50% OFFICERS 👇👇🔴👇👇

50% OFFICERS 👇👇🔴👇👇
I found this great deal on Daraz! Check it out! Product Name: MAVIC 3 Clone Aerial Drone with Camera - Explore the Skies with Confidence Product Price: Rs.15,000 Discount Price: Rs.7,189

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, August 27, 2025

யாழில் புலம்பெயர்தமிழனிடம் கொள்ளையில் ஈடுபட்ட பயங்கரக் கொள்ளையர்கள்!!

யாழில் புலம்பெயர்தமிழனிடம் கொள்ளையில் ஈடுபட்ட பயங்கரக் கொள்ளையர்கள்!! 

வடமராட்சி அல்வாய் கிழக்கு பகுதியில் புலம் பெயர்ந்த நாட்டில் இருந்து விடுமுறைக்கு வந்து தனது வீட்டில் வசித்து வந்த ஒருவரின் வீட்டில் ஒரு கோடியை ஆறுபது இலட்சம் பெறுமதியான இலங்கை ரூபாவை கொள்ளை அடித்த கொள்ளையர்கள் தனது சக நண்பர்களுடன் சிறிது நாட்களாக மோட்டார் சைக்கிள், புதிய தொலைபேசி வாங்குவது, மற்றும் பொழுது போக்கு செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். நெல்லியடி பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவு அதிரடி நடவடிக்கையால் குறித்த கொள்ளையுடன் தொடர்புடைய 10 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

நெல்லியடி பகுதியில் களவு, போதைப் பொருள் பாவனை மற்றும் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக சிரேஷ்ட பொலிஸ் மா அதிபரினால் கரவெட்டி நெல்லியடி பொலீஸ் பிரிவிற்கு பொலீஸ் பரிசோதகர் கஜான் புத்திக நியமிக்கப்பட்டார்.

அவரின் வழிநடாத்தலில் பாரிய கொள்ளைச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுவிஸ்லாந்து நாட்டில் இருந்து தாயகம் திரும்பி நெல்லியடியில் வசித்து வந்த நபரின் பணத்தினை களவாடிய குற்றச்சாட்டில் கைதானவர்களை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்தியதை அடுத்து அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் 03 பெண்களும் 2 ஆண்களையும் தேடி வருவதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சுவிஸ் நாட்டவரிடம் திருடிய பணத்தில், 75 இலட்ச ரூபாய் பணம், 09 ஆயிரம் சுவிஸ் பிராங், அதிநவீன மோட்டார் சைக்கிள் ஒன்று, அதிநவீன கையடக்க தொலைபேசிகள் – 05 என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சுவிஸ் நாட்டில் வேலையில் இருந்து ஓய்வு பெற்று , ஓய்வு கொடுப்பனவான பெருந்தொகை பணத்துடன், தாயகம் திரும்பி நெல்லியடி பகுதியில் பகுதியில் வயோதிபர் ஒருவர் வசித்து வந்துள்ளார்.

அவர் தனது வீட்டில் வெளிநாட்டு நாணய தாள்கள் உள்ளிட்ட சுமார் ஒரு கோடியே 40 லட்சத்திற்கும் அதிகமான பணத்தினையும் வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக தனது பணம் காணாமல் போவதனை அறிந்து , அது தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , குறித்த நபரின் வீட்டுக்கு வேலைக்கு வந்து செல்லும் இருவர் தொடர்பில் சந்தேகமடைந்து இருவரையும் கைது செய்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் அவர்கள் இருவரும் , தாம் பணத்தினை வீட்டில் இருந்து சிறிது சிறிதாக திருடி வந்ததாகவும், அவற்றினை நண்பர்கள் , தெரிந்தவர்கள் ஊடாக நெல்லியடி பகுதியில் உள்ள வெளிநாட்டு பணங்களை மாற்றி கொடுக்கும் நிலையத்தில் பணத்தினை மாற்றியதாகவும் கூறியுள்ளனர்.

அதன் அடிப்படையில் தொடர் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், திருட்டுக்கு உடந்தையாக செயற்பட்டமை , திருடப்பட்ட பணத்தினை உடைமையில் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் மேலும் 10பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களை விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் புதன்கிழமை நீதிமன்றில் முற்படுத்திய வேளை 08 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெற்றோரை கொன்றவரை கொன்று, எரித்து, புதைத்த மகன் கைது - 2019 சம்பவத்திற்கு பழிக்குப் பழி வாங்கிய கடற்படை வீரர்!


பெற்றோரை கொன்றவரை கொன்று, எரித்து, புதைத்த மகன் கைது - 2019 சம்பவத்திற்கு பழிக்குப் பழி வாங்கிய கடற்படை வீரர்!

கலேவெல, தேவஹுவ பகுதியில் ஆறு வருடங்களுக்கு முன்பு தமது பெற்றோரைக் கொலை செய்ததற்கு பழிவாங்கும் விதமாக, ஒருவரைத் தாக்கி கொலை செய்து, அவரது உடலை எரித்ததாக சந்தேகத்தின் பேரில் கடற்படையில் பணியாற்றும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கலேவெல மகுலுகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கலேவெல, தேவஹுவ பகுதியைச் சேர்ந்த 59 வயதான ஏ.ஜி. விமலசேன என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர் கடந்த 25 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக மகுலகஸ்வெவ பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

அதற்கமைய, இறந்தவர் சார்பில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டை உடனடியாக விசாரித்த பொலிஸார், நேற்றையதினம் (26) காலை விடுமுறையில் இருந்த ஒரு கடற்படை வீரரைக் கைது செய்துள்ளனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது குறித்த கொலை குறித்த தகவல்கள் தெரிய வந்துள்ளன.

கடந்த 2019 ஏப்ரல் 16ஆம் திகதி, தேவஹுவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த ஒரு தம்பதியினர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலையைத் தொடர்ந்து, தம்பதியரின் இரண்டு மகன்களும் தனிமையில் அநதாரவாகியுள்ளனர்.

இளைய மகன் அப்போது கடற்படையில் இணைந்து தனது பயிற்சி முடித்திருந்தார்.

குறித்த தம்பதியினரை இறந்த பெண்ணின் இரண்டு சகோதரர்கள் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். காணித் தகராறுதான் கொலைக்குக் காரணமென பொலிசார் தெரிவிக்கின்றனர்.

​​அவர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்த நிலையில், அவர்களுக்கு பிணை வழங்கப்பட்ட பின்னர் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.

2019 ஆம் ஆண்டு தமது பெற்றோரின் கொலையில் தொடர்புடையதாகக் கூறப்படும், நீதிமன்றத்தில் இருந்து பிணையில் வந்த இறந்த பெண்ணின் சகோதரதே இவ்வாறு கொலை செய்யப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

#tamilnewsupdates #NewsUpdate #srilanka #TamilNews #SriLankaNews #news #newsfeed

Tuesday, August 26, 2025

news

News sle 

Monday, August 25, 2025

சுவிஸ்லாந்தில் பொலிஸ் துரத்தியதில் 17 வயது இளைஞன் பலி!! பொலிசாருடன் மோதிய இளைஞர்கள்!!


சுவிஸ்லாந்தில் பொலிஸ் துரத்தியதில் 17 வயது இளைஞன் பலி!! பொலிசாருடன் மோதிய இளைஞர்கள்!!

லொசானில்  நேற்று மாலை விபத்து ஒன்றை அடுத்து, இளைஞர்கள் பொலிசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.

பொலிசாரிடமிருந்து தப்பிச் செல்லும் போது ஏற்பட்ட விபத்தில்  17 வயது இளைஞன் இறந்த செய்தியை அறிந்ததும் நேற்று இரவு 9:30 மணி பிரெலாஸ் மாவட்டத்தில் சுமார் நூறு இளைஞர்கள் கூடியிருந்தனர்.

முகமூடி அணிந்த இளைஞர்கள் வாணவேடிக்கை பொருட்களால் பொலிசாரை குறிவைத்தனர். வீதியில் குப்பைக் கொள்கலன்களையும் அவர்கள் தீயிட்டு எரித்தனர்.

 லொசான் போக்குவரத்து நிறுவனமான TL க்கு சொந்தமான பேருந்தும்  சேதமாக்கப்பட்டது. நள்ளிரவுக்குப் பிறகு அமைதி திரும்பியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். எனினும் அங்கு தொடர்ந்தும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைக் குற்றவாளிகளான சுவிஸ் குமார் உட்பட்டவர்கள் விடுதலையாகும் சாத்தியம் உள்ளதா?

 


புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைக் குற்றவாளிகளான சுவிஸ் குமார் உட்பட்டவர்கள் விடுதலையாகும் சாத்தியம் உள்ளதா?

யாழ்ப்பாணத்தில் 2015 ஆம் ஆண்டு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை நவம்பர் 6 ஆம் திகதி விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் பிரீத்தி பத்மன் சூரசேன, அச்சலா வெங்கப்புலி மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் இன்று (25) விசாரிக்கப்பட்டன.

பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்து, வழக்கின் தமிழ் மொழி பெயர்ப்புகளைப் பெற நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக ஆனதாக சுட்டிக்காட்டினார்.

அதன்படி, மேல்முறையீட்டு விசாரணைக்கு குறுகிய கால அவகாசம் வழங்குமாறு பிரதிவாதி வழக்கறிஞர் நீதிமன்றத்தை கோரினார்.

இந்த மேல்முறையீடுகளை விரைவாக விசாரிக்க குறுகிய கால அவகாசம் வழங்கப்படும் என்று தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன தெரிவித்தார்.

அதன்படி, தொடர்புடைய மேல்முறையீட்டை நவம்பர் 6 ஆம் தேதி விசாரிக்க நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.

2015 மார்ச் 3 ஆம் திகதி பாடசாலையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது சிவலோகநாதன் வித்யா என்ற 18 வயதான மாணவியைக் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததற்காக “சுவிஸ் குமார்” உட்பட 7 பிரதிவாதிகளுக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் 2017 ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.

பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட விதம் சட்டத்துக்கு முரணானது என்றும், எனவே அவர்களை விடுதலை செய்து குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும் கூறி, பிரதிவாதிகள் தங்கள் சட்டத்தரணி கள் மூலம் உயர் நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

Sunday, August 24, 2025

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் சுஜிதா ஜேர்மனியில் பலியானது


யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் சுஜிதா ஜேர்மனியில் பலியானது ஏன்?

யாழ் வடமராட்சி பொலிகண்டி சேர்ந்த பெண் ஜேர்மனியில் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்து கடந்த வருடம் ஜேர்மனி சென்ற குறித்த பெண் உயிரிழந்துள்ளார் .தயாபரன் சுஜிதா வயது 39 என்ற பெண்ணே 21-08-2025 அன்று இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் , இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

Saturday, August 23, 2025

கனடாவில் நிரந்தர வதிவிட உரிமைக்கு இனி இலகுவான வழி-ஓடித் தப்ப நினைக்கும் இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்..!

 


கனடாவில் நிரந்தர வதிவிட உரிமைக்கு இனி இலகுவான வழி-ஓடித் தப்ப நினைக்கும் இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்..!

கனடா நிரந்தர வதிவிட விண்ணப்பதாரர்களுக்கான ஆங்கில சோதனைகளில் புதிய மாற்றம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கமைய, TOEFL Essentials எனும் புதிய தெரிவை கனடா அரசாங்கம் ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இந்தியா, இலங்கை உள்ளிட்ட பட நாடுகளிலிருந்து நிரந்தர வதிவிட உரிமைக்காக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோர் அதிக வசதியை பெற முடியும்.

TOEFL Essentials test தற்போது Express Entry உள்ளிட்ட முக்கிய வதிவிட வழிகளுக்குப் பொருந்தும்.

இதில் Federal Skilled Worker Program, Federal Skilled Trades Program மற்றும் Canadian Experience Class ஆகியவை அடங்கும்.

Atlantic Immigration Program மற்றும் பல மாநில தெரிவு திட்டங்களிலும் (PNPs) இந்த தெரிவு ஏற்கப்படும். ஆனால், மாநிலங்கள் தனித்தனியாக முடிவெடுப்பதால், அங்குள்ள விதிகள் மாறுபட வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், TOEFL Essentials test குறித்த கீழ்வரும் முக்கிய தகவல்கள் கவனிக்கப்பட வேண்டியவை,

இந்த தெரிவு 90 நிமிடங்கள் நீளமுடையது

கேட்கும் திறன், வாசிப்பு, எழுத்து, மற்றும் பேசும் திறன் ஆகிய நான்கு பகுதிகளையும் மதிப்பீடு செய்கிறது

தெரிவுக்குப் பின் கேட்கும் மற்றும் வாசிப்பு திறனுக்கான முடிவுகள் உடனே கிடைக்கும்

முழுமையான மதிப்பீடு 6 நாட்களில் வெளியிடப்படும்

சுவிஸ்லாந்தில் தமிழ் போதகர் குமார் பல யுவதிகள், சிறுமிகளுடன் லீலை!! பெர்ன் உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு என்ன?


சுவிஸ்லாந்தில் தமிழ் போதகர் குமார் பல யுவதிகள், சிறுமிகளுடன் லீலை!! பெர்ன் உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு என்ன?

பெர்னில் தமிழ் சுதந்திர திருச்சபையின் தலைவரான போதகர் குமார் வில்லியம்ஸ் பெர்ன் உயர் நீதிமன்றத்தால் குற்றவாளியாக காணப்பட்டு,  5,600 சுவிஸ் பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஐந்து ஆண்டுகள் நாட்டில் வசிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மோசடி செய்ய தூண்டுதல், ஆவணங்களை மோசடி செய்தல் மற்றும் சமூக உதவியை சட்டவிரோதமாகப் பெறுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அவருக்கு நேற்று இந்த தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

போதகர் குமார் வில்லியம்ஸ் தனது தேவாலயத்திலிருந்து வருமானத்தை மறைத்து, அதே நேரத்தில் கோனிஸ் சமூகத்திடமிருந்து சமூக உதவியைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

எனவே சமூக நல அலுவலகம், ருண்ட்ஷாவ் தெரிவித்தபடி, மோசடி மற்றும் சமூக உதவியை து ஷ்பிர யோகம் செய்ததாக புகார் அளித்தது.

அண்மைய ஆண்டுகளில், போதகர்  வில்லியம்ஸ் மீண்டும் மீண்டும் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.

சிறார்கள் உட்பட பல பெண்கள் அவர் மீது பா லி யல் து ஷ்பிர யோகம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். வில்லியம்ஸ் எப்போதும் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார்.

2023 ஆம் ஆண்டில், போதகர் வில்லியம்ஸ் நெருக்கமான வீடியோ அரட்டைகளில் ஈடுபடுவதைக் காட்டும் வீடியோக்கள் வெளிவந்தன.

ஒரு கிளிப்பில், அவர் ஒரு பெண்ணை ஆடைகளை அவிழ்க்க உத்தரவிடுகிறார்.

இந்த காட்சிகள் திருச்சபையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தின என்று, முன்னாள் சபை உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.

அதைத் தொடர்ந்து, மற்ற பெண்கள் முன்வந்து இதே போன்ற அனுபவங்களை விவரித்தனர்.

வில்லியம்ஸ் ஒரு தேவதை போன்ற ஆன்மீக வேடங்களில் நடித்து பா லிய ல் து  ன்பு றுத்தல் செய்ததாக சில பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

மற்றொரு பெண், பேய்களை விரட்டுவதாக சாக்குப்போக்கில் தனது தனிப்பட்ட அங்கத்தை  தொட்டதாக கூறினார்.

உயர் பிராந்திய நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் இறுதியானது அல்ல என்றும் அவர்,  பெடரல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, August 22, 2025

“கழுதையே. உன்னை இல்லாமல் ஆகிவிடுவேன்” என கூறி 2015ல் பதிவியை விட்டு துரத்திய ரணிலை சிறைக்கு அனுப்பிய அந்த கெட்ட பயல் யார்?


“தொலைந்து விடு, கழுதையே. உன்னை இல்லாமல் ஆகிவிடுவேன்” – இவை அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2015-ல், மத்திய வங்கி பிணை மோசடியை விசாரித்த CID இயக்குநர் ஷானி அபேசேகரக்கு கூறிய வார்த்தைகள்.

பின்னால், ஷானி அபேசேகர சில போலிக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, சுமார் ஒரு வருடம் மறியலில் இருந்தார்.

சரியாக 10 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், ஓய்வு பெற்ற ஷானி, இன்று CID இயக்குனராக மீண்டும் நியமிக்கப்பட்டு, ரணிலை மறியலுக்கு அனுப்பியுள்ளார்.

கெட்டபய சார் இந்த ஷானி!

ரணிலை கொஞ்சம் மரியாதையாக நடத்தியிருக்கலாம் என்பதில் நியாயம் இருந்தாலும், சமயங்களில் சட்டத்தின் ஆட்சியில் ரணில் சதுரங்கம் விளையாடியதை நினைவில் கொள்ள வேண்டிய தருணம் இது.

1988-களின் “பட்டலந்த” சித்தரவதை முகாம் போன்ற பழைய பைல்களை மறந்தாலும்,

இறுதியாக ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில்:

– உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர்களை நியமிக்காமல் இழுத்தடித்தமை,

– தேர்தல்களை தாமதப்படுத்தியமை அல்லது தடுத்தமை,

– உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை பாராளுமன்றத்தில் மறுபரிசீலனை செய்ய முயற்சித்தமை,

என சில உதாரணங்களை கூறலாம்

ரணில் ஒரு சட்டத்தரணியாக இருந்தும் இவ்வாறு செயற்பட்டது கவலைக்குரியது. இன்றும் கூட நீதிமன்றத்தில் காலுக்கு மேல் கால் போட்டு ரணில் இருந்தது, சட்டவாட்சியின் மீதும், நீதித்துறையின் மீதமுள்ள அவரது மனநிலையை வெளிப்படுத்துகிறது.

ரணில் விக்கிரமசிங்க நாட்டிற்குச் செய்த சேவையை மதிக்கும் அதேவேளை, இந்த நிகழ்வை, எந்தத் தலைவரும் சட்டத்திற்கு மேலானவர் அல்ல என்பதையும், ஜனநாயகத்தில் சட்டத்தின் ஆட்சியை மதிப்பது கட்டாயம் என்பதையும் வலியுறுத்தும் தருணமாகவே பார்க்கப்பட வேண்டும்.

ரணில் விக்ரமசிங்க கைது!


 ரணில் விக்ரமசிங்க கைது!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று அவர் முன்னிலையாகியிருந்தார்.

ஜனாதிபதியாக இருந்த காலத்தில்உத்தியோகபூர்வ அழைப்பின்றி பிரித்தானியாவுக்கு விஜயம் செய்தபோது, ​​16.9 மில்லியன் ரூபா அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக குறித்த விசாரணை இடம்பெற்றது.

முன்னதாகவே அரசாங்கத்துக்கு மிகவும் நெருக்கமான யூடியூபர் ஒருவர் இன்றைய தினம் (22) ரணில் கைது செய்யப்படுவது உறுதி என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.     

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job