This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, September 23, 2023

யாழில் பிரபல வர்த்தகரின் மகளான பிரபல பாடசாலை மாணவியின் வீட்டு கட்டிலுக்கு கீழ் பிடிபட்ட மாணவன்!!

யாழ் நல்லுார் பகுதியில் பிரபல வர்த்தகரின் வீட்டு அறை ஒன்றின் கட்டிலுக்கு அடியிலிருந்து 18 வயதான பிரபல பாடசாலை மாணவன் பிடிக்கப்பட்டார். கள்ளன் என நினைத்து கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கடந்த வியாழன் தனது வர்த்தக தேவை நிமிர்த்தம் வர்த்தகர் கொழும்பு சென்றுள்ளார். இதன் பின்னர் அந்த வீட்டில் வர்த்தகரின் மனைவி மற்றும் மனைவியின் தாய், தந்தையும் வர்த்தகரின் பிள்ளைகளும் இருந்துள்ளார்கள். 

யாழ் நகர்பகுதிக்கு சற்று தொலைவில் உள்ள பிரபல தனியார் பெண்கள் பாடசாலையில் ஏ.எல் படிக்கும் 18 வயதான வர்த்தகரின் மூத்த மகள் தனது வீட்டின் மேல் தளத்தில் தனி அறையில் தங்கியிருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார். நேற்று நள்ளிரவு இயற்கை உபாதைக்காக எழுந்த தாத்தா, தனது பேரப்பிள்ளையின் அறைக்குள் வித்தியாசமான முனகல் சத்தம் எழுவதை அவதானித்தானித்துள்ளார். இதனையடுத்து வீட்டின் மேல்தளத்திற்கு செல்ல முற்பட்ட போது வெளிப்பக்க படிகள் உள்ள கதவு திறந்திருந்ததை அவதானித்து அதிர்ந்துள்ளார். 

கள்ளன் மேல்தள வீட்டினுள் புகுந்து தனது பேரப்பிள்ளையை தாக்குவதாக நினைத்து அந்த இடத்திலிருந்து குக்குரல் இட்டு கத்தியுள்ளார். இதனையடுத்து அயலவர்கள் மற்றும் அயலில் உள்ள நிறுவனம் ஒன்றில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த தனியார் பாதுகாப்பு நிறுவன காவலாளி உட்பட்ட பலர் வர்த்தகரின் வீட்டுக்குள் சென்றுள்ளார்கள். இவ்வளவு அமளிதுமளி நடந்து கொண்டிருந்த போதும் மேல் தளத்தில் தங்கியிருந்த மாணவியின் அறைக்கதவு திறக்கப்படவில்லை. 

கள்ளன் மேல் தளத்தில் உள்ளதாக அயலில் உள்ளவர்களுக்கு தாத்தா கூறியுள்ளார். இதனையடுத்து மேல்தளத்திற்கு விரைந்த அயலவர்கள் ஏனைய அறைகளை சோதனையிட்ட பின் மாணவி தங்கியிருந்த அறையை தட்டியுள்ளார்கள். நீண்ட நேரமாக மாணவி கதவைத் திறக்காத காரணத்தாலும் மாணவி எந்தவித சத்தமும் கொடுக்காத காரணத்தால் வீட்டில் உள்ளவர்கள் மாணவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதி கத்தத் தொடங்கியுள்ளார்கள். அதே நேரம் குறித்த அறைக் கதவு அயலவர்களால் உடைக்கப்பட்டது.

இவ்வளவு சம்பவமும் நடந்த போதும் மாணவி போர்த்திக் கொண்டு துாக்கமாக இருப்பதாக நடித்துக் கொண்டு படுத்திருந்ததாக அயலவர்கள் மூலம் தெரிவருகின்றது. மாணவியை தட்டி எழுப்பி ”எதற்காக சத்தமிட்டுக் கொண்டிருந்தாய்” என தாத்தா கேட்டுள்ளார். தான் கனவில் சிலநேரம் ஏதாவது உளறியிருக்கலாம் என மாணவி கூறியதுடன் அங்கிருந்தவர்களை வெளியே செல்லுமாறு கத்தத் தொடங்கியுள்ளார்.

 இந் நிலையில் மாணவியின் தாய் கட்டிலுக்கு அடியில் தற்செயலாக பார்வையிட்ட போது அங்கு ஒருவன் மேலாடைகள் அற்ற நிலையில் ஜட்டியுடன் இருப்பதை அவதானித்து அலறியுள்ளார். இதனையடுத்து கட்டிலுக்கு கீழ் இருந்த மாணவன் அயலவர்களால் இழுத்து வரப்பட்டு நையப்புடைக்கபட்டு விசாரணை மேற் கொள்ளப்பட்டது. அதன் போதே தான் மாணவியின் காதலன் என குறித்த மாணவன் அவர்களுக்கு தெரிவித்துள்ளான். இதன் பின்னர் மாணவியிடமும் விசாரணைகளை குடும்பத்தினர் மேற்கொண்ட போதே மாணவன் கூறியது உண்மை என தெரியவந்தது.

குறித்த மாணவன் யாழ் நகரப்பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் ஏ.எல் படிப்பவர் எனவும் மாணவியும் அவனும் ஒரே ரியூசனில் கற்பவர்கள் எனவும் அதன் மூலமாக காதல் வந்ததாகவும் மாணவன் கூறியுள்ளார். மாணவியே தன்னிடம் வருமாறு கூறுி அழைத்ததாகவும் அதனாலேயே தான் அங்கு வந்ததாகவும் மாணவன் தெரிவித்துள்ளார்.  தனது தாய், தந்தைக்கு தனது நண்பனான இன்னொரு மாணவனின் வீட்டில் தங்கி கற்க போவதாகத் தெரிவித்தே மாணவன் தனது வீட்டிலிருந்து வந்த விடயம் தெரியவந்தது.

அதன் பின்னர் முகம் மற்றும் தலைப் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டிருந்த நிலையில் குறித்த மாணவன் மாணவியின் தாத்தாவால் காரில் ஏற்றிச் செல்லப்பட்டு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைக்கு அனுமதித்ததாக அப்பகுதியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் குறித்த மாணவன் பிடிபட்டு தாக்கப்பட்ட போது அயலவர்கள் மற்றும் தனியார் பாதுகாப்பு ஊழியர் போன்றவர்களால் தொலைபேசி மூலம் எடுக்கப்பட்ட வீடியோக்களை அழிக்குமாறு தாத்தா அவர்களிடம் சென்று கேட்டு அழித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

Friday, September 22, 2023

24 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த நீதி: 55 வயதில் அரசு ஆசிரியராகும் ஆந்திர பிச்சைக்காரர்!


ஆந்திராவில் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் யாசகம் கேட்டு வாழ்ந்து வரும் 55 வயது நபருக்கு, நீதி மன்ற உத்தரவால் அரசு ஆசிரியர் பணி கிடைத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Chitra Ramaraj
24 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த நீதி: 55 வயதில் அரசு ஆசிரியராகும் ஆந்திர பிச்சைக்காரர்!
அதிர்ஷ்டம் திடீரென கதவைத் தட்டினால், வாழ்க்கை ஒரே நாளில்கூட மாறி விடும் என்பதற்கு உதாரணமாய் ஆந்திராவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. வேலை இல்லாமல், சாப்பாட்டுக்கே பணம் இல்லாமல் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்த நபர், 24 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்ற உத்தரவு மூலம் ஆசிரியர் ஆகி இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், பட்டபட்டினம் மந்தல் பகுதியிலுள்ள சீடி கிராமத்தைச் சேர்ந்தவர் கேதாரேஸ்வர் ராவ் (55). கைத்தறி நெசவாளர் குடும்பத்தில் பிறந்த இவர், ஆசிரியர் ஆகும் கனவில் பி.எட் படித்து முடித்தார். அதனைத் தொடர்ந்து, கடந்த 1994ம் ஆண்டு டிஎஸ்சி (DSC- District Selection Committee) தேர்வை எழுதியுள்ளார். நூலிழையில் அதில் ஆசிரியர் பணியைத் தவற விட்டர் கேதாரேஸ்வர், மனம் தளராமல் மீண்டும் 1998ம் ஆண்டு அதே தேர்வை எழுதியுள்ளார்.

andhra teacher
அவரது கடின உழைப்பிற்கு பலனாக அம்முறை ஆசிரியர் தேர்வில் இவர் தேர்ச்சி பெற்றார். ஆசிரியர் ஆகி விடுவோம் என்ற கனவோடு இருந்தவருக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது. அந்த ஆண்டு ஆசிரியர் தேர்வில் முறைகேடு நடந்ததாக, சிலர் நீதிமன்றத்தை நாடினர். இதனால், அந்த ஆண்டு தேர்வானவர்கள் யாரும் அரசு பள்ளி ஆசிரியர் ஆக முடியவில்லை.

இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்ததால், வேறு வேலைக்குச் செல்ல முடியாமல், சைக்கிளில் ஊர் ஊராகச் சென்று கைத்தறி துணிகளை விற்கத் தொடங்கினார் கேதாரேஸ்வர் ராவ் . ஆனால், எதிர்பார்த்த வருமானம் அதில் கிடைக்கவில்லை. தொடர்ந்து ஏழ்மையில் வாடியதால், அவரால் நல்ல ஆடைகளைக்கூட அணியமுடியவில்லை.

ஆடைகளை விற்பவரே முறையாக ஆடை அணியாமல், அழுக்குத் துணியுடன் சுற்றினால், அவரிடம் மற்றவர்கள் எப்படி துணி வாங்குவார்கள். இதனால் தொடர்ந்து கேதாரேஸ்வர் ராவால் ஆடை வியாபாரத்தை மேற்கொள்ள இயலவில்லை.

இதற்கிடையே, கேதாரேஸ்வர் ராவின் பெற்றோரும் இறந்து விட, உடன் பிறந்தவர்களும் அவரைக் கைவிட்டனர். இதனால் ஆதரவுக்கு யாரும் இல்லாமல் தனிமரமானார் அவர். என்றாவது ஒருநாள் தான் ஆசிரியர் ஆவேன் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தபோதும், அந்த நம்பிக்கையை மட்டும் நம்பி யாரும் அவருக்கு பெண் தரவும் முன்வரவில்லை. இதனால் தான் வசித்து வந்த பாழடைந்த வீட்டைத் தவிர வேறு எதுவும் இல்லாமல் கஷ்ட ஜீவனம் நடத்தி வந்தார் கேதாரேஸ்வர் ராவ்.

சாப்பாட்டுச் செலவுக்காக பழைய பேப்பர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பொறுக்கி, அதை விற்று வந்தார். அதற்கும் வாய்ப்பில்லாத நாட்களில், பிச்சை எடுத்தும் பிழைப்பை நடத்தியுள்ளார். கிழிந்த அழுக்கு ஆடையுடன் சுற்றி வந்த அவரை, அந்த கிராமத்தார் அனைவரும் மாஸ்டர் என்றே அழைத்து கிண்டல் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், 1998ம் ஆண்டு அரசு ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் அனைவருக்கும் அரசு ஆசிரியர் பணி நியமனம் வழங்குமாறு சமீபத்தில் நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. இதனால் கேதாரேஸ்வர் ராவுக்கும் பணி நியமன உத்தரவு வீடு தேடி வந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்தார் அவர். அந்த ஒரே நாளில் அவரது வாழ்க்கை மாறி விட்டது.

அதுவரை அவரை யாசகம் கேட்பவராக கிண்டல் செய்து வந்த மக்களுக்கு, அவர் மீது ஆசிரியர் என்ற மரியாதை வந்து விட்டது. கிராமத்தார் அனைவரும் சேர்ந்து கேதாரேஸ்வர் ராவுக்கு, அவரது ஆசிரியப் பணிக்கு உதவும் வகையில் புதிய செல்போன் ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளனர்.

அதேபோல், பல நாட்கள் அவர் யாசகம் கேட்டு திரிந்த ஒரு தெருவில் வசித்து வரும் வியாபாரி ஒருவர், கேதாரேஸ்வர் ராவுக்கு புதிய சட்டைகள், ஜீன்ஸ் பேண்டுகளையும் வாங்கிக் கொடுத்து பாராட்டியுள்ளார்.

மேலும் பணிக்கு செல்வதற்கு ஏதுவாக கேதாரேஸ்வருக்கு தேவையான செறுப்பு, ஷூ போன்ற பொருட்களையும் வாங்கிக் கொடுத்துள்ள கிராம மக்கள், கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். 
கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை, யாசகம் கேட்பவராக மற்றவர்களால் ஒதுக்கப்பட்டு வாழ்ந்து வந்த கேதாரேஸ்வர் ராவ், இன்று ‘மாஸ்டர்.. மாஸ்டர்..’ என எல்லாராலும் மரியாதையாக அழைக்கப்படுகிறார்.

நல்லவேளையாக அவரது கல்வி சான்றிதழ்களை, வறுமை சாப்பிட்டுவிடவில்லை. எனவே, அரசு தரும் பணியை ஏற்றுக் கொண்டு மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆர்வமுடன் இருக்கிறார் கேதாரேஸ்வர் ராவ். முடியைத் திருத்தி, நல்ல நேர்த்தியான ஆடைகளை அணிந்து, இப்போதே ஆசிரியர் என்ற மிடுக்குடன் தன்னம்பிக்கை நடைபோடத் தொடங்கி விட்ட அவர்,

‘தன் 24 வருட நம்பிக்கை வீண் போகவில்லை...’ என மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிலர் இவரது வாழ்க்கையை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட, இப்போது அந்தக் கிராமத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே பிரபலமாகி விட்டார் கேதாரேஸ்வர் ராவ் மாஸ்டர்.

பணி ஓய்வு பெறும் வயதை அடைவதற்கு இன்னமும் சில ஆண்டுகளே உள்ள நிலையில் அவருக்கு அரசுப்பணி கிடைத்திருக்கும் தகவல் சமூகவலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.

Thursday, September 21, 2023

சுவிஸ்லாந்திலிருந்து வவுனியா வந்த இளம் குடும்பஸ்தர் அரவிந்தன் துாக்கில் சடலமாக மீட்பு!! புகைப்படங்கள்


தோணிக்கள் லக்ஸபானா வீதியில் உள்ள வீடொன்றில் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று ஒன்று மீட்கப்பட்டுள்ளது.சுவிஸ் நாட்டை சேர்ந்த 27வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சிறிதரன் அரவிந்தன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.

சுவிஸ் நாட்டிலிருந்து விடுமுறைக்காக தனது தாயாரின் வீட்டில் தங்கியிருந்த நிலையிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளது.மனைவி மற்றும் பிள்ளை சுவிஸ்நாட்டில் வசித்து வருவதாகவும் குடும்பத்தை பிரிந்த நிலையில் வாழ்ந்து வந்ததாதகவும் அளவுக்கு அதிகமான மன அழுத்தத்தில் இருந்தவர் என்றும் உறவினர்களால் தெரிவிக்கப்படுகிறது

Wednesday, September 20, 2023

அன்ரிகள் மீது அடங்காத ஆசை!! 16 வயது மாணவன் கடத்தி கடுமையாக தாக்கப்பட்டு உறுப்பில் மிளகாய் துாள் பூசப்பட்டது!!


 அன்ரிகள் மீது அடங்காத ஆசை!! 16 வயது மாணவன் கடத்தி கடுமையாக தாக்கப்பட்டு உறுப்பில் மிளகாய் துாள் பூசப்பட்டது!!

குடும்பப் பெண்ணுக்கு தொல்லை கொடுத்ததாக தெரிவித்து, 16 வயது மாணவன் வாகனத்தில் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

தெவல்பொல கனிஹிமுல்ல பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவன் கடந்த 19ஆம் திகதி பிற்பகல் கடத்தப்பட்டுள்ளார்.தாக்குதலுக்கு உள்ளான மாணவன் தனது வீட்டிற்கு அருகில் தங்கியிருந்த போது கார் ஒன்று வந்து அவரை கடத்தி சென்றுள்ளது.பெண்ணின் கணவர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் காரில் வந்து மாணவனை கடத்திச் சென்றனர். 

அவர்கள் மாணவனை முதலில் கனிஹிமுல்ல பிரதேசத்தில் உள்ள பெண்ணின் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். கடத்தி வரப்பட்ட மாணவன் தான் தொல்லை கொடுத்தாரா என, கணவன் தனது மனைவியிடம் வினவியுள்ளார். 

மனைவி மாணவனை அடையாளம் காட்டியதையடுத்து, மாணவன் கொடூரமாக தாக்கப்பட்டார்.மாணவன் பொல்லால் தாக்கப்பட்டு, ஆடைகளை களைந்து, அந்த ரங்க உறுப்பில் மிளகாய் தூள் தூவப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

10 நாளில் 100 ரூபாவில் இருந்து 10000 ரூபா சம்பாதிப்பது எப்படி? 100 to 10000 making money in 10 days


 10 நாளில் 100 ரூபாவில் இருந்து 10000 ரூபா சம்பாதிப்பது எப்படி?

100 ரூபாவில் இருந்து 10000 ரூபா சம்பாதிப்பது என்பது ஒரு சவாலான செயல். ஆனால், அதை சாத்தியமாக்குவதும் முடியும். அதற்கு தேவையான திட்டமிடல், உழைப்பு மற்றும் சரியான வாய்ப்புகள்.

100 ரூபாவில் இருந்து 10000 ரூபா சம்பாதிக்க சில வழிகள்:

ஆன்லைன் சர்வேக்கள்: ஆன்லைனில் பல்வேறு நிறுவனங்கள் சர்வேக்கள் நடத்துகின்றன. இதில் பங்கேற்று பணம் சம்பாதிக்கலாம்.
ஆன்லைன் வேலைகள்: ஆன்லைனில் பல்வேறு வகையான வேலைகள் கிடைக்கின்றன. அதாவது, டிசைன், எழுத்து, மொழிபெயர்ப்பு, தரவு உள்ளீடு போன்ற வேலைகள். இவற்றில் ஒன்றை தேர்ந்தெடுத்து செய்து பணம் சம்பாதிக்கலாம்.
பிராண்ட் அம்பேசடர்: உங்களுக்கு பிடித்த பிராண்டின் பிராண்ட் அம்பேசடராக ஆகலாம். இதன் மூலம், பிராண்டின் பொருட்களை விளம்பரப்படுத்தி பணம் சம்பாதிக்கலாம்.
வீட்டு வேலைகள்: உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள வீடுகளில் வீட்டு வேலைகள் செய்து பணம் சம்பாதிக்கலாம்.
சிறு வியாபாரம்: உங்களுக்கு ஏதாவது ஒரு திறமை இருந்தால், அதைப் பயன்படுத்தி சிறு வியாபாரம் தொடங்கலாம்.
10 நாளில் 10000 ரூபா சம்பாதிக்க சில குறிப்புகள்:

உங்கள் நேரத்தை சரியாக பயன்படுத்துங்கள்: 10 நாட்களில் 10000 ரூபா சம்பாதிக்க, உங்கள் நேரத்தை சரியாக பயன்படுத்துவது அவசியம்.
உங்கள் திறமைகளை மேம்படுத்தவும்: உங்களுக்கு இருக்கும் திறமைகளை மேம்படுத்திக் கொள்ளுங்கள். இதனால், அதிக பணம் சம்பாதிக்க முடியும்.
வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துங்கள்: சரியான வாய்ப்புகள் கிடைத்தால், அவற்றை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
10 நாளில் 10000 ரூபா சம்பாதிப்பது ஒரு சவாலான செயல்தான். ஆனால், அதை சாத்தியமாக்குவது முடியும். அதற்கு தேவையான திட்டமிடல், உழைப்பு மற்றும் சரியான வாய்ப்புகள்
#howtomakemoneyonline #makemoneyonline #howtoearnmoneyonline #earnmoneyonline #howtomakemoney #howtoearnmoney

Tuesday, September 19, 2023

3 பிள்ளைகள் லண்டனில்!! யாழில் நிறை வெறியில் படுத்திருந்து அன்ரி செய்த திருவிளையாடல்!!


தனித்து வாழ்ந்த பெண்மணியொருவர் மயக்கமடைந்து காணப்பட்டதையடுத்து, அவசர நோயாளர் காவு வண்டிக்கு அழைப்பு விடுக்க முயன்றனர் உறவினர்கள்.எனினும், அந்த பகுதியிலுள்ள தாதியொருவர் பரிசோதித்த பின்னரே, அந்த பெண்மணி போதையில் மயங்கியிருக்கும் விடயம் வெளிப்பட்டுள்ளது.நேற்று (16) சனிக்கிழமை, வடமராட்சி பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.பிரித்தானியாவில் 3 பிள்ளைகள் வசித்து வரும் நிலையில், தாயார் வடமராட்சி பகுதியில் தனித்து வாழ்ந்து வருகிறார். அவரது 3 பிள்ளைகளும் கடந்த மாதம் விடுமுறையில் ஊருக்கு வந்து போயிருந்தனர்.

அந்த பெண்ணிற்கு அருகிலுள்ள வீடொன்றிலிருந்து தினமும் உணவு கொண்டு வரப்படுவது வழக்கம்.நேற்று, பெண்ணொருவர் உணவு எடுத்துக் கொண்டு அந்த வீட்டுக்கு சென்றுள்ளார்.அவர் சென்றபோது, வீட்டு கதவு திறந்து காணப்பட்டுள்ளது. எனினும், பெண்ணின் நடமாட்டம் இருக்கவில்லை.வீட்டின் உள்பகுதியில், பெண்மணி தரையில் விழுந்து காணப்பட்டார். அவர் பேச்சின்றி இருந்ததால், சத்தமிட்டு அயலவர்களை அழைத்துள்ளார்.அயலவர்கள் அங்கு வந்து பார்த்து விட்டு, அந்த பெண் உயிராபத்தான நிலையில் இருப்பதாக தெரிவித்து, நோயாளர் காவு வண்டிக்கு அழைப்பு விடுக்க தீர்மானித்தனர்.எனினும் அங்கிருந்த யாருக்கும் எந்த இலக்கத்திற்கு அழைபேற்படுத்தி தகவல் வழங்குவதென தெரிந்திருக்கவில்லை. அந்த வீட்டிலிருந்து சுமார் 500 மீற்றர்கள் தொலைவில் வசித்து வந்த தாதியொருவருக்கு தகவல் வழங்கியுள்ளனர்

தாதி அங்கு வந்து பரிசோதித்த பின்னர், அவரது உடல் நிலை சீராக இருப்பதாக குறிப்பிட்டு, அவர் மது அருந்தியிருக்கலாமென சந்தேகம் வெளியிட்டுள்ளார்.இதையடுத்து,மயக்கமடைந்திருந்த பெண்ணின் சகோதரியின் மகள், வீட்டுக்குள் சோதனையிட்ட போது, அறையொன்றுக்குள் மதுபான போத்தல் திறந்த நிலையிலும், அருகில் கப் ஒன்றும் காணப்பட்டுள்ளது.மதுபானம் அருந்தி விட்டு, அந்த பெண் போதையில் விழுந்திருப்பது தெரிய வந்தது.அந்த பெண்ணின் மூத்த மகன், தனது மனைவியின் தந்தைக்கு கொடுப்பதற்காக வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்த மதுபான போத்தலொன்று, கொடுக்கப்படாமல் அந்த வீட்டிலேயே இருந்ததும், வீட்டு பெண்மணி அதை அருந்தியுள்ளதும் பின்னர் தெரிய வந்தது.

Saturday, September 16, 2023

இன்றைய இராசிபலன்கள் (17.09.2023)


மேஷம்
இன்று தாய் மற்றும் தாய் வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கி உற்சாகம் துளிர்விடும். எவருக்காகவும் பரிந்து பேசுவதோ ஜாமின் கையெழுத்து போடுவதோ கூடவே கூடாது. அறிமுகம் இல்லாதவர்களிடம் பழக்கம் வைக்கும் போது கவனமாக இருக்கவும். அவர்களை நம்பி எந்த பெரிய முடிவும் எடுக்க கூடாது. கணவன் மனைவிக்குள் அனுசரித்து போகவும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

ரிஷபம்
இன்று பணவரவு அதிகரிக்கும். வீண் செலவுகளை செய்யாதீர்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதை சில நாட்கள் தள்ளி போடவும். பொது இடத்தில் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்யும் போது ஜாக்கிரதையாக இருக்கவும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. நீர்நிலைகளில் செல்லும்போதும் கவனம் தேவை. எதிலும் யோசித்து செயல்படவும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மிதுனம்
இன்று நீங்கள் நல்லது சொன்னாலும், செய்தாலும் விமர்சனம் செய்யப்படலாம். கவனம். நீங்கள் யாருக்கெல்லாம் நல்லது செய்தீர்களோ அவர்களில் சிலர் அதையெல்லாம் மறந்து விட்டு சண்டையிடலாம். யாரிடமும் அளவாகப் பழகுங்கள். ஆடை அணிகலன்கள் சேரும். விஐபிக்களின் நட்பு கிடைக்கும். அரசாங்க அனுகூல்யம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

கடகம்
இன்று சிலர் உங்களை பணம் கேட்டு தொந்தரவு செய்யலாம். கடன் வாங்குவதையோ மற்றும் கொடுப்பதையோ தவிர்க்கவும். வெளிநாட்டு தொடர்புகள் அதிகரிக்கும். வெளிநாடு மற்றும் வெளியூர் செல்ல நேரிடலாம். குடும்ப ரகசியங்களை வெளியில் விவாதிக்க வேண்டாம். வாழ்க்கைத்துணையை சந்தேகப்படும் அளவுக்கு உங்களது நடவடிக்கைகள் இருக்காவண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

சிம்மம்
இன்று வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி பெற பல பேரிடம் ஆலோசனைகளை கேளுங்கள். அதன்பின் முடிவெடுங்கள். பிள்ளைகள் மற்றும் உடன்பிறந்தோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும். வியாபாரத்தில் அதிரடியாக புதிய வியூகங்களை அமைப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் சுமூக உறவு இருக்கும். உண்மையான நன்பர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கன்னி
இன்று சிறுசிறு உஷ்ண சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம். தூக்கத்தைக் கட்டுப்படுத்தாதீர்கள். எந்த பிரச்சனையாக இருந்தாலும் உடனே மருத்துவரை அணுகவும். குடும்ப வாழ்வில் பொறுமை தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6

துலாம்
இன்று எடுத்த காரியத்தில் உறுதியாக இருங்கள். வீண் பேச்சு கூடவே கூடாது. வியாபார ரீதியாக போட்டிகள் வரலாம். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். வம்பு வழக்கு கூடவே கூடாது. மனக்குழப்பம் ஏற்பட்டால் அருகிலிருக்கும் கோவிலுக்கு சென்று வரவும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

விருச்சிகம்
இன்று பெற்றோரது ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிவட்டடரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். எந்த மனிதரையும் விமர்சனம் வெளியில் வைத்து விமர்சனம் செய்ய வேண்டாம். அரசு விஷயாதிகளில் நிதானத்தையும், பொறுமையையும் கடைபிடிக்கவும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பிரியமானவர்களிடம் அடிக்கடி உரையாடுங்கள். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

தனுசு
இன்று சொத்து சிக்கல்களில் பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேளுங்கள். தாய் மற்றும் தாய் வழி உறவினர்களிடம் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டு சரியாகும். அலைச்சகள் நிறைந்த பயணங்கள் நிரம்ப இருக்கும். பணத்தட்டுப்பாடு குறையும். தியானம் யோகா போன்றவற்றில் மனம் செலுத்துங்கள். முடிந்த வரை இரவு நேர பயணங்களை தவிருங்கள். தடைபட்டிருந்த கட்டிட வேலைகள் முடிவடையும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6

மகரம்
இன்று சுபகாரியங்களில் கலந்து கொள்வீர்கள். வியாபாரம் மற்றும் உத்தியோகத்தில் சந்தர்பம் அறிந்து செயல்படுங்கள். கொடுக்கலில் வாங்கலில் கவனம் தேவை. கடன் கொடுக்கவும் வாங்கவும் கூடவே கூடாது. பங்குதாரர்களை அனுசரித்து போகவும். நம்பிக்கைக்கு உரியவர்களிடம் ஆலோசனைகள் பெற்று காரியங்களில் இறங்கவும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 9

கும்பம்
இன்று சம்பளம் உயரும். இடமாறுதல் கிடைக்கும். அடுத்தவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள். மணமாகாதவர்களுக்கு மணமாகும். சுபச்செலவுகள் இருக்கும். குழந்ததயில்லாதவர்களுக்கு பாக்கியம் கிட்டும். வீடு, வாகனம், மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை அதிர்ஷ்ட எண்: 5, 6

மீனம்
இன்று மேற்படிப்பு விஷயமாக வெளிநாடு செல்வோர் மிகுந்த கவனமாக செயல்படவும். முடிந்தவரை வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும். மாணவமணிகளுக்கு உயர்கல்வி கிடைக்கும். நினைத்த மதிப்பெண்களை கொஞ்சம் முயற்சி செய்தால் அள்ளலாம். கலைஞர்கள் விருதுகள் பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 1,2

வெளிநாட்டில் மனைவி - புதிய வீடு நிர்மாணித்த கணவருக்கு நேர்ந்த துயரம் | Young Husband Killed In Sri Lanka


 வெளிநாட்டில் மனைவி - புதிய வீடு நிர்மாணித்த கணவருக்கு நேர்ந்த துயரம்

கட்டுகஸ்தோட்டை, மெனிக்கும்புர பிரதேசத்திலுள்ள மூன்று மாடி வீடொன்றில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலாளி, வீட்டின் உரிமையாளரை கொலை செய்துள்ளார்.

நேற்றைய தினம் கூரிய ஆயுதத்தால் தாக்கி அவரை படுகொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது மனைவி வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாகவும் குறித்த நபர் இந்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புதிய வீடு நிர்மாணம்

குறித்த வீடு புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருவதனால் வீட்டை பார்வையிடுவதற்கு குறித்த நபர் அடிக்கடி அங்கு வருவதாகவும் அந்த வீட்டின் பாதுகாப்பிற்காக காவலாளியாக சந்தேக நபர் நியமிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கொலைக்கு பயன்படுத்திய கூரிய ஆயுதத்துடன் ஆற்றில் குதிக்க முற்பட்டுள்ளார். இதன் போதே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கட்டுகஸ்தோட்டை பொலிஸார்

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Thursday, September 14, 2023

கிளிநொச்சியில் காணாமற்போன மாணவி தொடர்பில் திடீர் திருப்பம் | Kilinochchi Student Missing Get New Information


 கிளிநொச்சியில் காணாமற்போன மாணவி தொடர்பில் திடீர் திருப்பம்

கிளிநொச்சியில் காணாமற்போன மாணவி தாயாருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சியில் பிரத்தியேக வகுப்பிற்கு சென்ற 18 வயதான புவனேஸ்வரன் - ஆர்த்தி என்ற மாணவி காணாமற் போயுள்ளதாக பெற்றோர் காவல்துறையில் முறைப்பாடு அளித்திருந்தனர்.அத்துட்ன அவரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியையும் கோரியிருந்தனர்.

காணாமற்போன மாணவி

இந்த நிலையில் காணாமற்போனதாக தெரிவிக்கப்பட்ட மாணவி தாயாருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து கதைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி பிரத்தியேக வகுப்பிற்கு சென்று அது நடத்தப்படாத நிலையில் அங்கிருந்து வெளியேறிய மாணவி நண்பகல் 12.15 மணியளவில் தாயாருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்துள்ளார்.

மாணவியின் சிம் அட்டை

தான் பாதுகாப்பாக இருப்பதாகவும் தாயை அழவேண்டாம் எனவும் தங்கையை நன்றாக பாரத்துக் கொள்ளுமாறும் தான் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மாணவி அழைப்பை ஏற்படுத்திய தொலைபேசி இலக்கத்தின் சிம் அட்டை குறித்த மாணவியான தமது மகளின் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளதாக தாயார் தெரிவித்துள்ளார்.

Tuesday, September 12, 2023

நல்லூர் ஆலய பின் பக்க வாயில் சனநெரிசலில் சிக்கி 8பேர் வைத்திய சாலையில் அனுமதி!


 நல்லூர் ஆலய பின் பக்க வாயில் சனநெரிசலில் சிக்கி 8பேர் வைத்திய சாலையில் அனுமதி!

விரைவாக பகிருங்கள்!! நல்லூர் ஆலய நிருவாகமே உடனே முடிவெடுங்கள்

மக்கள் நெரிசலில் ஏதும் விபரீதங்கள் நடக்கலாம், நல்லூரில் நல்லூரானே கோவிக்காதே பக்தர்களாகிய நாங்களும் நீங்கள் சொன்னபடி ஒத்துழைப்பு தருகிறோம் அதேபோல எங்களுக்கும் நீங்கள் சில ஒத்துழைப்புகளை தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அதோடு கோயில் பின் பகுதியில் ஒரு வழி வசால் உள்ளது.மக்கள் செல்வது கடினமாக உள்ளதால் மற்ற வாசலையும் திறந்து மக்களை கஷ்டப்படுத்தாம இலகுவாக செல்ல விடுங்கள்

முன் பகுதியில் போட்டு இருக்கிற இரும்புத் தடை பெரும் ஒரு ஆபத்தாக இருக்கிறது,  நெருக்கடியான நேரத்தில் போய் வருவது கஷ்டமாக இருக்கிறது தயவுசெய்து நல்லூர் நிர்வாகம் கருத்தில் கொண்டு நாளைய தேர் திருவிழாவிற்கு ஆவது அதனை விலக்ல் செய்ய வேண்டும்.

இதை சொன்னால் நல்லூருக்கு நாங்கள் துரோகியாக இருக்கலாம் மக்கள் பக்தர் நலம் கொண்டு இதனைக் கவனத்தில் கொள்ளவும் என பக்தர் ஒருவர் பகரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ் திருநெல்வேலி Bright in விடுதி அறைக்குள் 12 வயது சிறுமியின் சடலம்!! கொலை என சந்தேகம்!!


 யாழ் திருநெல்வேலி Bright in விடுதி அறைக்குள் 12 வயது சிறுமியின் சடலம்!! கொலை என சந்தேகம்!!

யாழ்ப்பாணம் – திருநெல்வேலிப் பகுதியில் உள்ள Bright in விடுதி ஒன்றில் 12 வயது சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இச் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.குறித்த சிறுமி தனது பாட்டியுடன் இங்கு வந்ததாகவும் மூன்று நாட்களுக்கு முன்னரே சிறுமி இறந்து விட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.இச் சம்பவம் கொலை என சந்தேகிக்கப்படுகின்றது. மேலதிக தகவல்கள் விரைவில்….

Sunday, September 10, 2023

யாழில் இளம் ஆசிரியரை ஒரே நேரத்தில் ரீச்சரும், மாணவியும் காதலித்த சம்பவம்!! பெற்றோர்களே அவதானம்..நடப்பது என்ன?


பெற்றோர்களே… உங்களது இளவயது பெண் பிள்ளைகளை மிகவும் எச்சரிக்கையுடன் வளர்த்துக் கொள்ளுங்கள்… அவர்கள் செய்யும் சில செயற்பாடுகள் உங்களுக்கு ஒரு போதும் புரியாது… தெரியாது இருக்கலாம்… மிகவும் அமைதியாக நீங்கள் சொல்வதற்கு எல்லாம் கட்டுப்பட்டு நன்றாகப் படிக்கும் உங்கள் மகளின் மீது நீங்கள் மிகவும் நம்பிக்கை வைத்திருப்பீர்கள்… ஆனால் அப்படி செய்யாதீர்கள்.. அந்தப் பிள்ளையையும் அவதானியுங்கள்… பிள்ளையின் பாடசாலை புத்தகப் பைகளை அடிக்கடி பரிசோதியுங்கள்.. பிள்ளைக்கு கொடுக்கும் தொலைபேசியில் காணப்படும் வட்சப், வைபர் சற்றிங்குகளை பாருங்கள்… சிலவேளை உங்கள் பிள்ளை அவற்றை அழித்திருக்கலாம்.. அழிக்கப்பட்ட தகவல்களை மீளப்பெறும் ”அப்” கள் மூலம் அவற்றை மீளப் பெற்று வாசித்து பாருங்கள்..

இந்த உண்மைச் சம்பவத்தை வாசித்த பின்னர் நீங்களே அறிந்து கொள்வீர்கள்.. உங்கள் பிள்ளைகளின் நடத்தைகளை…

ஆசிரியர் மற்றும் பலர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கருதுவதால் இங்கு தரப்படும் தகவல்களில் சில தகவல்களை நாங்கள் குறிப்பிட்டுச் சொல்லவில்லை…….

யாழில் உள்ள பிரபல பாடசாலையில் முக்கிய பாடம் ஒன்றை கற்பிக்கும் ஆசிரியர் பிரகாஷ். (பெயர் மாற்றம்). திருமணமாகாத பட்டதாரி ஆசிரியர். அழகானவர். இவரது புகைப்படங்கள் சிலவற்றுடன், வைபர் சற்றிங்குகள் சிலவற்றின் ஸ்கிறீன்சொட்கள் அடங்கிய தகவல்கள், எமது இணையத்தள பேஸ்புக் ஒன்றிற்கு இனந்தெரியாத முகப்புத்தகத்திலிருந்து அனுப்பபட்டது. பிரகாஷ் கற்பிக்கும் பாடசாலையின் பெயர், விபரங்களுடன் பிரகாஷ் அந்த பாடசாலையில் கற்கும், இந்த வருடம் ஓ.எல் எடுக்கும் மாணவியுடன் அந்தரங்க தொடர்பில் இருப்பதாக தெரிவித்து, அந்த மாணவியுடன் மேற்கொண்ட சற்றிங்குகள் அடங்கிய குற்றச்சாட்டாகவே அந்த தகவல்கள் வந்திருந்தன. அத்துடன் அந்த ஆசிரியரின் தொலைபேசி இலக்கமும், அதிபரின் தொலைபேசி இலக்கமும் எமக்கு அனுப்பபட்டிருந்தது.

அந்த சற்றிங் ஸ்கிறீன் சொட்களை அவதானித்த போது, குறித்த 16 வயது மாணவியின் காதல் வெறி அதில் தெரிந்தது. அந்த வெறிக்கு ஈடுகொடுக்குமளவுக்கு ஆசிரியர் சற்றிங் செய்யாதது போல் காணப்பட்டது அந்த சற்றிங். இதன் பின்னர் யாழில் உள்ள எம்முடன் தொடர்புபட்ட ஒரு ஊடகச் செயற்பாட்டாளருக்கு குறித்த தகவல்களை தெரிவித்திருந்தோம்.

அந்த ஊடகச் செயற்பாட்டாளர் அந்த ஆசிரியருக்கு தொடர்பேற்படுத்தியுள்ளார். அவர் மேற்கொண்ட புலனாய்வு தகவல்களின் பின்னர் ஆசிரியர் பிரகாஷ், மாணவி உட்பட்ட இரண்டு பெண்களால் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள தகவல் வெளிவந்தது.

பாடசாலையில் முக்கிய பாடம் ஒன்றை கற்பிக்கும் பிரகாஷிற்கு, க.பொ.த சாதாரன தரத்தில் குறித்த ஒரு வகுப்பில் கற்கும் மாணவி காதல் வலை வீசிவந்துள்ளார். பிரகாஷிற்கு பிறந்தநாளின் போது வகுப்பில் மட்டுமல்லாது, தனிப்படவும் வட்சப்பில் வாழ்த்து தெரிவித்ததில் இருந்து மாணவியின் இந்த விளையாட்டு தொடர்ந்துள்ளது. ஆரம்பத்தில் இதனை பொருட்படுத்தாது திறமையான, நன்றாக கற்கக் கூடிய மாணவி, தன்னில் நம்பிக்கை வைத்து இவ்வாறு செய்கின்றார் என ஆசிரியர் பேசாது விட்டுள்ளார். ஆசிரியர் வகுப்பில் கற்பிக்கும் போது, குறித்த மாணவி ஆசிரியரை அங்கு வைத்தே தொலைபேசியில் புகைப்படங்கள் எடுத்து இரவில் ஆசிரியருக்கு அனுப்பத் தொடங்கியுள்ளார். இதனை ஆசிரியர் மெசேஜ் மூலமாக எச்சரித்து இவ்வாறு செயற்படவேண்டாம் என எச்சரித்துள்ளார். ஆனாலும் மாணவி தொடர்ச்சியாக சில இசகு பிசகான சற்றிங்குகளை மேற்கொண்டுள்ளாள். இதனால் தர்மசங்கடத்திற்குள்ளான ஆசிரியர் வகுப்பில் இது தொடர்பாக எச்சரித்தால் மற்றைய மாணவிகளும் அலேட் ஆகி இந்த தகவலை பரப்பி பின்னர் பல்வேறுபட்ட சிக்கல்கள் ஏற்பட்டுவிடும் என அஞ்சி பேசாது இருந்துள்ளார். அத்துடன் மாணவி இரவு வேளைகளில் அனுப்பும் சற்றிங் எல்லாவற்றுக்கும் எச்சரிக்கை செ்ய்தே பதிவு செய்து அந்த நம்பரையும் புளொக் செய்துவிட்டிருந்தார். பின்னரும் வேறு இலக்கத்திலிருந்து பிரகாஷ்க்கு அதே மாணவி சற்றிங் தொடங்கியுள்ளார். மாணவியின் சற்றிங் வேறு நம்பர்களில் இருந்து வரத் தொடங்கிய பின்னர் பிரகாஷ் அதற்கு எந்தவித பதிலோ ரியாக்சனோ காட்டாது இருந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் வாத்தி பட பாடல், மற்றும் சில வாத்தியர் மாணவி காதல் செய்யும் படங்களில் இருந்து பெறப்பட்ட பாடல்கள் எல்லாம் பிரகாஷ்க்கு மாணவியால் அனுப்பபட்டுள்ளது. கிஸ், மற்றும் கட்டிப்பிடிக்கும் எமோசன்களும் பிரகாஷ்க்கு அனுப்பட்டுள்ளன. வகுப்பில் மிகவும் அமைதியாக கெட்டிக்காரப் பிள்ளையாக இருக்கும் குறித்த மாணவி தன்னுடன் காட்டும் இவ்வாறான சேட்டைகளை பார்த்து பிரகாஷ் அதிர்ச்சியடைந்துள்ளார். மாணவியின் புத்தகப் பை ஒரு தடவை பிரகாஷ் பரிசோதிக்கப்பட்டுள்ளது. அங்கு தொலைபேசி எதுவும் இருக்கவில்லை. ஆனால் அதே நாள் பிரகாஷ் வகுப்பில் படிப்பிக்கும் போது எடுத்த போட்டோ அன்று இரவு பிரகாஷ்க்கு அனுப்பபட்டதை கண்டு பிரகாஷ் அதிர்ச்சியடைந்தார். மாணவி எங்கு தொலைபேசியை ஒளித்து வைத்திருந்து புகைப்படம் எடுக்கின்றாள் என தெரியாது தடுமாறியுள்ளார்.

ஆசிரியருக்கு இரவு 9 மணிக்குப் பின்னர் நேரடியாகவே தொலைபேசியில் தொடர்பு கொள்ள முற்பட்டுள்ளார் மாணவி…. ஒரு மணித்தியால இடை வெளிக்குள் 25 தடவைகள் மாணவி பிரகாஷ்க்கு மிஸ்ட் கோல் கொடுத்துள்ளார். மாணவியின் காதல் வெறி கட்டுக்கடங்காமல் தொடர்ந்ததால் பதற்றமடைந்த பிரகாஷ் மாணவியின் செயற்பாடு தொடர்பாக தன்னுடன் நெருங்கிய நட்பில் இருந்த அதே பாடசாலையில் கல்வி கற்கும் இன்னொரு ஆசிரியைக்கு கூறியுள்ளார்.

குறித்த ஆசிரியை பிரகாஷை விட 2 வயது மூத்தவராவார். அவருக்கும் திருமணம் ஆகவில்லை. பிரகாஷிற்கு பல்வேறுபட் உதவிகளையும் குறித்த ஆசிரியை செய்து கொடுத்துள்ளதாக தெரியவருகின்றது. இவ்வாறான நிலையிலேயே பிரகாஷ் குறித்த ஆசிரியையை மாணவியின் காதல் வெறியை அடக்குவதற்காக அணுகியுள்ளார்.குறித்த ஆசிரியை உடனடியாக நடவடிக்கையில் இறங்கியுள்ளார். பாடசாலையில் உள்ள மாணவிகளின் மனநல ஆலோசனைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்த ஆசிரியைக்கு இது தொடர்பாக குறித்த ஆசிரியை முறையிட்டதுடன் மாணவியை அந்த ஆசிரியையிடம் வரவழைத்து எச்சரிக்கையும் செய்யப்பட்டுள்ளது. குறித்த இரு ஆசிரியைகளுக்கும் முன்பாக அந்த மாணவி தான் பிரகாஷ் சேரை உயிரு்ககு உயிராக காதலிப்பதாகவும் தனது கற்றல் நடவடிக்கை முடிவடைந்து 20 வயதுக்கு வந்த பின்னர் அவர் தன்னை திருமணம் முடிப்பதாக தனக்கு தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். இதனால் இரு ஆசிரியைகளும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

இதனையடுத்து பிரகாஷிடம் இரு ஆசிரியைகளும் விசாரணை செய்த போது அந்த மாணவி கூறியது பொய் என பிரகாஷ் கூறியுள்ளார். இருப்பினும் பிரகாஷிடம் நெருக்கமாயிருந்து ஆசிரியை அவரை நம்பாது தொடர்ச்சியாக மாணவி தொடர்பாக பிரகாஷிடம் கேள்வி கேட்டும் நெருக்கடிகளைக் கொடுத்துமுள்ளார். அத்துடன் மாணவியின் நடவடிக்கை தொடர்பில் அதிபர் மற்றும் சம்மந்தப்பட்டவர்களுக்கு முறைப்பாடு கொடுக்கமாறு பிரகாஷை வற்புறுத்திய போது பிரகாஷ் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் விசாரணை செய்யப்பட்டால் மாணவி தன்மீது உள்ள வெறி காரணமாக பொய் கூறினாலும் அதை விசாரிப்பவர்கள் உண்மை என்று எண்ணி தன்னை சிறைக்குள் அடைக்க செய்துவிடுவார்கள் என பிரகாஷ் குறித்த ஆசிரியைக்கு கூறியுள்ளார்.

இதே வேளை குறித்த ஆசிரியையும் தன்னை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதை பிரகாஷ் அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். நீ்ர் கலியாணம் கட்டாமல் திரிவதால்தான் உம்மை அவள் காதலிக்கிறாள்…. எனக்கு உம்மை பிடித்துள்ளது. உமக்கு ஓ.கே என்றால் நாம் சந்தோசமாக இருக்கலாம் என குறித்த ரீச்சர் நேரடியாகவே பிரகாஷை கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பிரகாஷ் எதுவும் பேசாது அந்த இடத்தை விட்டு அகன்று அதன் பின்னர் குறித்த ஆசிரியையுடன் கதைப்பது மற்றும் சந்திப்பது போன்ற தொடர்பை நிறுத்தியுள்ளார்.

இதன் பின்னரே குறித்த ஆசிரியையின் மற்றுமொரு காதல் தொல்லை பிரகாஷிற்கு ஏற்பட்டது. தொடர்ச்சியாக ஆசிரியை பிரகாஷிற்கு தொலைபேசி மூலம் தொடர்பை ஏற்படுத்தி அச்சுறுத்த தொடங்கியுள்ளார். அந்த மாணவிக்கு 16 வயது. அந்த மாணவி ஆசைப்பட்டாலும் உமக்குத்தான் சிக்கல். நீர் அவளுடன் ஏதோ ஒரு முறையில் ஆசையை தெரிவித்துள்ளீர். அதனால்தான் அவள் உம்மை சுற்றுகின்றாள்… இது வெளியில் தெரிந்தால் நீர் ஜெயிலுக்கு போகவேணும்… என்னை கலியாணம் கட்ட ஏன் பின்நிற்கின்றீர்… வயது வித்தியசமா… ? இவ்வாறு தொடர்ச்சியாக ஆசிரியையும் தொல்லை கொடுக்க தொடங்கிய போது குறித்த ஆசிரியைக்கு மிகக் கடினமான வார்த்தைப் பிரயோகங்களுடன் பிரகாஷ் ஏசியுள்ளார். இதனையடுத்து அந்த ஆசிரியை நம்பி பிரகாஷ் கொடுத்த மாணவியின் சற்றிங் அடங்கிய வட்சப் ஸ்கிறீன் சொட்கள் மற்றும் தொலைபேசியில் மிஸ்ட் கோல் செய்த ஸ்கிறீன் சொட்கள் போன்றவற்றை தான் அதிபரிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்கப் போவதாக கடும் தொனியிலும் தகாத வார்த்தைப் பிரயோகங்களுடனும் குறித்த ஆசிரியை ஏசிய பின்னர் தொலைபேசியை துண்டித்துள்ளார்.

அதே வேளை குறித்த மாணவியும் பிராகாஷ் உடன் மேலும் கடுமையான வெறியில் சற்றிங் மற்றும் தொலைபேசித் தொடர்புகளை மேற்கொண்டவாறு இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத பிரகாஷ் மாணவியுடன் உரையாடி மாணவி செய்யும் முட்டாள்தனமான காதல் தொடர்பான விளக்கங்களை கொடுத்து அதனை ஒலிப்பதிவும் செய்திருந்தார். மாணவியுடனான உரையாடலின் போது பிரகாஷ் எந்தவித துாண்டுதலும் மாணவிக்கு கொடுக்கவில்லை என்பதும் மாணவியே பிரகாஷை ஒருதலையாக காதலித்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது,

மாணவி மற்றும் ஆசிரியை ஆகியோருடன் பிரகாஷ் கதைத்து பதிவு செய்ய ஓடியோக்கள் எம்மிடம் உள்ளது.

பிரகாஷடன் முரன்பட்ட குறித்த ஆசிரியை மாணவியின் காதல் விடயம் தொடர்பாக பாடசாலை அதிபரிடம் முறையிட்டு விசாரணையும் நடைபெற்று பிரகாஷில் எந்தவித பிழையும் இல்லை என அறியப்பட்டுள்ளது. மாணவியின் பெற்றோர் அழைக்கப்பட்டு அவர்களுக்கு மாணவியின் செயற்பாடு அதிபரால் நிதானமாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. பெற்றோருக்கு மாணவியின் குறித்த காதல் வெறி தொடர்பாக கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தனது மகளா இவ்வாறு செயற்பட்டால் என ஏங்கியுள்ளார்கள். பெற்றோர்கள் இருவரும் அரச ஊழியர்கள். அத்துடன் தந்தை அரச துறையில் முக்கிய பதவி ஒன்றில் உள்ளார்.

மாணவியின் காதல் வெறிக்கு ஓரளவு கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டபின்னர் பிரகாஷில் வெறியாக இருந்த வயது கூடிய ஆசிரியைக்கு அந்த வெறி அடங்காது பழிதீர்க்கும் வெறியாக மாறியுள்ளது. அதன் பின்னரே குறித்த வட்சப் தகவல்கள் எமது ஊடக பேஸ்புக் பக்கத்திற்கு அடையாளம் தெரியாத முகவரியிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது.

இதை அனுப்பியமை தொடர்பாக ஊடகச் செயற்பாட்டாளர் குறித்த ஆசிரியையை தொடர்பு கொண்டு கேட்ட போது ஆசிரியை பிரகாஷைப் பற்றி சில தகவல்களை கூறினார்.

பிரகாஷ் தன்னுடன் நெங்கி பழகியவர் என்றும் அவரது செயற்பாடுகள் காதலிப்பது போலவே இருந்ததாகவும் கூறினார். அத்துடன் அவர் மாணவியுடனும் அவ்வாறே கதைத்திருப்பார் என்று தான் நம்புவதாகவும் கூறினார். உதாரணமாக தான் அணிந்து வரும் சாறிகளில் இந்த சாறி எனக்கு பிடித்திருக்குது… இந்த சாறி எனக்கு பிடிக்கவில்லை என்றும் கூறுவாராம். அத்துடன் தனக்கு என்ன சாப்பாடு செய்து கொண்டு வந்தீர்கள்? உங்கட சாப்பாட்டையே தொடர்ச்சியாக சாப்பிடனும் போல இருக்குது என்றும் கூறுவாராம்…. ஏனைய ஆசிரியைகளுடன் இவ்வாறு கதைப்பதில்லை என்றும் தன்னுடனே இவ்வாறு நெருக்கமாக கதைத்து பழகியதாகவும் ஆனால் அந்த மாணவி காதலிக்க தொடங்கிய பின்னர் தன்னுடன் இவ்வாறு கதைக்காது விட்டதாகவும் குறித்த ஆசிரியை எமது ஊடக செயற்பாட்டாளருக்கு கூறியுள்ளார். அது உண்மையாகவும் இருக்கலாம்.

பிரகாஷ் பேசிப் பேசியே பெண்களை கவிழ்ப்பவராகவும் இருந்திருக்கலாம். ஆனால் பிரகாஷ் அந்த ஆசிரியையுடன் காதல் என்ற ரீதியில் கதைத்தற்கான எந்தவிதமான வார்த்தைப் பிரயோகங்களோ அல்லது எந்தவித ஆதாரங்களுமோ குறித்த ஆசிரியையிடம் இல்லை. அத்துடன் தன்னடன் தனிமையில் நெருக்கமாகவோ வேறு எந்தவிதமான காதலர்கள் செய்யும் செயற்பாடுகளிலோ பிரகாஷ் ஈடுபடவில்லை என்று குறித்த ஆசிரியையே கூறியுள்ளார்.

இதனையடுத்து ஒரு ஆசிரியர் நம்பி கொடுத்த விபரங்களை அதுவும் ஒரு மாணவியின் நலன்களில் பாதிப்பு ஏற்படுத்தும் தகவல்களை பலருக்கு அனுப்புவது தவறு என ஊடகச் செயற்பாட்டாளர் கூறிய போது குறித்த ஆசிரியை கடும் தொனியில் அவருடன் கதைத்ததுடன் தன்னைப் பற்றி இணையத்தளங்களில் செய்தி வெளியிட்டால் தனக்கு தொலைபேசி எடுத்து அச்சுறுத்தியதற்காக பொலிசாரிடம் முறையிடப் போவதாகவும் கூறியுள்ளார். ஆசிரியையுடன் தொலைபேசியில் குறித்த ஊடகச் செயற்பாட்டாளர் கதைத்த ஓடியோவும் எம்மிடம் உள்ளது. ஆகவே ஆசிரியையின் அச்சுறுத்தலுக்கு ஊடகச் செயற்பாட்டாளர் அஞ்சப்போவதில்லை. ஆசிரியையின் புகைப்படங்களை நாம் பெற்றுள்ளோம். இருப்பினும் ஆசிரியை இனிவரும் காலமும் பிரகாஷ் மீது தொடர்ச்சியாக காதல் வெறியுடன் செயற்பட்டால் அவரின் புகைப்படங்களுடன் தகவல்களை வெளியிடத் தயங்கமாட்டோம்.

உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைப் பாதுகாத்து கொள்ள வேண்டுமானால்...இந்தப் பதிவை கவனமாகப் படியுங்கள்.


 உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைப் பாதுகாத்து கொள்ள வேண்டுமானால்...இந்தப் பதிவை கவனமாகப் படியுங்கள். 

உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருப்பதாக கூறி , உங்கள் விவரங்களை உள்ளிடும்படி கேட்டு மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி (ஈமெயில் , வாட்சப்ப் , பேஸ்புக் , டெலிகிராம் )  ஊடக வரலாம் .  அந்த செய்தியில் ஒரு இணைப்பு (Link ) சேர்க்கப்பட்டிருக்கும் .  அந்த லிங்க் ஐ கிளிக் செய்து  இணைப்பின் ஊடாக செல்லும்போது இலங்கை தபால் சேவையின் இணையதளத்தை ஒத்த இணையத்தளத்திற்குள் நுழைகிறீர்கள். 

👉ஆனால் அது உண்மையான இலங்கை தபால் சேவை இணையத்தளம் அல்ல.  அஞ்சல் இணையதளம் போல் தோற்றமளிக்க உருவாக்கப்பட்ட போலி இணையதளம். 

👉 அந்த போலி மெயில் இணையதளத்திற்கு சென்றதும், அது உங்கள் பெயர் மற்றும் முகவரி விவரங்களை உள்ளிடும் படி கேட்கும் . 

👉 இவ்வாறான விபரங்களை வழங்கிய பின்னர் 99/= ரூபா கட்டணம் ஒன்றை செலுத்துமாறு கேட்கும் . 

👉 அந்த 99/= ரூபாயை செலுத்த உங்கள் வங்கி அட்டையை உள்ளிட சொல்லும் . 

👉 உங்கள் வங்கி அட்டையை உள்ளிட்ட பிறகு உங்கள் வங்கி கணக்கு மிகுதி பூச்சியமாக  மாறி உங்கள் பணம் பறிபோனதை அவதானிப்பீர்கள் . 

👉 இதை பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தவும் .  ஏமாறாதீர்கள்   குறிப்பாக ஆன்லைன் ஆர்டர்கள் மூலம் பொருட்களை கொள்வனவு செய்பவர்கள் அவதானமாக இருக்கவும் . Verfied செய்யப்பட்ட இணையதளங்களில் மாத்திரம் உங்கள் வங்கி அட்டை இலக்கங்களை உள்ளிடுங்கள் அவதானமாக  இருங்கள்.

சமூக வலைத்தளங்களில் வந்த செய்தி ஒன்று , அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்ற நோக்கில் பதிவிடுகிறோம் .

Saturday, September 9, 2023

தன்னை விட வயது குறைந்த பொடியளுடன் முல்லைத்தீவை சேர்ந்த இளம் மனைவி உறவு-இணையத்தில் பார்த்த கணவன் கட்டாரில் தவறான முடிவு..!

முல்லைத்தீவைச் சொந்த இடமாகக் கொண்ட வவுனியாவில் வசிக்கும் 27 வயதான இளம் குடும்பப் பெண்ணின் தவறான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் பரவியை கண்டு அவரின் கணவன் கட்டாரில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பெண் தன்னிலும் விட வயது குறைந்த 21 வயதான வவுனியா மற்றும் மன்னாரைச் சொந்த இடமாகக் கொண்ட நபர்களுடன் தவறாக நடந்து கொள்ளும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை கணவர் கட்டாரில் இருந்து பெண்ணுக்கு தொடர்ச்சியாக பணம் அனுப்பிக் கொண்டிருந்துள்ளான்.

ஆனால் குறித்த பெண்ணின் தவறான நடவடிக்கைகள் தொடர்பில் கணவனின் தாயார் இது தொடர்பாக அவருக்கு பல தடவைகள் எச்சரிக்கை விடுத்ததுடன் தனது மகனிடம் அவளின் நடவடிக்கைகள் தொடர்பாக கூறவில்லை எனத் தெரியவருகின்றது.

இந்நிலையில் குறித்த பெண் தனது மாமியாரையும் தனது 4 வயது குழந்தையையும் விட்டுவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன் மாயமாகியுள்ளார்.

பின்னர் கணவனுக்கு அழைப்பை எடுத்த குறித்த பெண், தான் தவறான நடத்தை உடையவள் என தன்னை உனது அம்மா பலரிடம் கூறி வருவதாலும் தனது தம்பி போல இருக்கும் நபர்களுடன் தனக்கு தொடர்பு இருப்பதாகவும் உனது அம்மா கூறி வருவதால் தனக்கு உன்னுடன் வாழப் பிடிக்கவில்லை என கணவனுக்கு கூறி தான் அனாதை மடத்தில் போய் தங்கவுள்ளதாகவும் தெரிவித்து விட்டு உனக்குப் பிறந்த தனது குழந்தையையும் உனது அம்மாவுடன் விட்டுவிட்டு செல்வதாக கட்டாரில் உள்ள கணவனுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து கட்டாரில் இருந்து கணவன் துடிதுடித்து தனது தாயாருடன் தொடர் கொண்டு ஏசிய பின்னர் அந்த பெண்ணை பலரையும் வைத்து தேடி வந்துள்ளார்.

இந்நிலையிலேயே குறித்த பெண்ணின் தவறான காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இதனை அறிந்த பின்னரே கட்டாரில் உள்ள கணவன் தற்கொலைக்கு முயன்றதாக தாயாருக்கு அங்கிருப்பவர்களால் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான துர்நடத்தை கொண்ட பெண்களால் அப்பாவி ஆண்களும் அவர்களது குழந்தைகளும் நடுத்தெருவில் விடப்படும் நிலை தொடர்ந்து உருவாகி வருகின்றது.

பிருத்தானியாவிலிருந்து கொழும்பு வந்து 13 வது மாடியிலிருந்து மர்மமாக வீழ்ந்து பலியான தமிழ் யுவதி!! 6 கேன் பியர் குடித்து மட்டையான காதலனின் வாக்குமூலம்!!!


நாளை (10) வெளிநாடு செல்ல தயாராகிக் கொண்டிருந்த 27 வயதுடைய இளம் பெண் சின்னையா அழகேஸ்வரன் ரொமினா, கல்கிஸ்ஸையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இருந்து விழுந்து உடல் சிதறி உயிரிழந்துள்ளார்.இங்கிலாந்து குடியுரிமை பெற்ற குறித்த பெண், தனது 29 வயது காதலனுடன் சுமார் 6 மாதங்களாக அங்கு தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.கல்கிஸ்ஸை அல்விஸ் மாவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 13வது மாடியில் இருந்து இளம் பெண் ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளதாக இன்று (09) அதிகாலை 2.40 மணியளவில் கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

வெள்ளவத்தையில் வசிக்கும் 29 வயதுடைய சட்டக்கல்லூரி மாணவனான தனது காதலனை சந்திப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி குறித்த பெண் நாட்டுக்கு வந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பின்னர் இருவரும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றாக வசித்து வந்ததுடன், குறித்த இளைஞனும் கடந்த வருடம் சுவிட்சர்லாந்தில் கல்வி பயின்று நாட்டிற்கு வந்துள்ளார்.ஃபேஸ்புக் மூலம் இருவரும் காதல் உறவை வளர்த்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும், குறித்த பெண் நாளை அதிகாலை மீண்டும் இங்கிலாந்து செல்லவிருந்த வேளை இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

காதலனிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில், நேற்று இரவு இருவருக்கும் இடையே மதம் தொடர்பாக சிறு வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.மேலும் நேற்று இரவு சுமார் 6 பியர் கேன்களை குறித்த இளைஞர் அருந்தியுள்ள நிலையில், இரவு உறங்கச் சென்ற போது காதலியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என தெரிவித்துள்ளார்.பின்னர் காதலியை தேடிய போதே சடலத்தை கண்டதாக பொலிஸாரிடம் இளைஞர் கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று பிற்பகல் சம்பவம் இடம்பெற்ற இடத்தை கல்கிஸ்ஸை பதில் நீதவான் ரத்ன கமகே பார்வையிட்டார்.நாளை (10) இடம்பெறவுள்ள பிரேத பரிசோதனையின் பின்னர் இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தெரியவரும் எனவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பிருத்தானியாவிலிருந்து காதலனைத் தேடி வெள்ளவத்தை வந்த தமிழ் யுவதி ரொமினா மர்மமாக 13வது மாடியிலிருந்து வீழ்ந்து பலி!!


கொழும்பு, அல்விஸ் பிளேஸில் உள்ள ப்ளூ ஓஷன் வீட்டுத் தொகுதியில் தங்கியிருந்த இளம் யுவதியொருவர் 13வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சின்னையா அழகேஸ்வரன் ரொமினா என்ற இளம் யுவதியே உயிரிழந்துள்ளார். இவர் பிரித்தானிய குடியுரிமை பெற்ற யுவதி.இந்த யுவதி நாளை மீண்டும் இங்கிலாந்து செல்லவிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் இன்று அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பிரித்தானியாவில் வசித்த இந்த யுவதிக்கு, பேஸ்புக் ஊடாக கொழும்பு வெள்ளவத்தைப் பகுதி இளைஞன் ஒருவருடன் காதல் வசப்பட்டிருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை வந்துள்ளார். அதற்கு முன்னதாக இணையம் ஊடாக அல்விஸ் மாவத்தையில் அடுக்குமாடி குடியிருப்பொன்றை முன்பதிவு செய்து பெற்றுள்ளார்.அந்த வீட்டில் காதலனுடன் தங்கியிருந்தார். காதலன் சட்டக்கல்லூரி மாணவர்.கலகிஸ்ஸ பதில் நீதவான் திருமதி ரத்னா கமகே நீதவான் விசாரணைகளை மேற்கொண்டார். கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்? குறித்த பெண்ணுடன் தங்கியிருந்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன

Friday, September 8, 2023

வவுனியாவில் தொட்டியில் மூழ்கி இறந்த 2 வயது தீபிகாவின் அடக்கம் செய்த உடலைக் காணவில்லை!!

 

வவுனியாவில் நீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த 2 வயது சிறுமியின் சடலம் மயானத்தில் புதைக்கப்பட்ட நிலையில், தற்போது மாயமாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த மாதம் 26ஆம் திகதி சிறுமி உயிரிழந்திருந்தார்.லிங்கராசா தீபிகா (2) என்ற சிறுமி வீட்டு கிணற்றுக்கு அருகில் இருந்த நீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். 

சிறுமியின் சடலம் மரண விசாரணைகளின் பின்னர் உறவினர்களும் ஒப்படைக்கப்பட்டது.இராசேந்திரங்குளம் பகுதியில் அமைந்துள்ள மயானத்தில் சிறுமியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.இந்த நிலையில், அடக்கம் செய்யப்பட்ட இடத்திலிருந்து சிறுமியின் சடலம் மாயமாக உள்ளமை தற்போது தெரியவந்துள்ளதுடன். இது தொடர்பில் பொலிசாரும் தடயவியல் பொலிசாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Wednesday, September 6, 2023

வவுனியாவில் கனடா மோகத்தில் இருந்தவர்களை ஏமாற்றிய கில்லாடிகளுக்கு நடந்த கதி!! (Photos)

வவுனியாவில் கந்தபுரத்தை வசிப்பிடமாக கொண்ட சர்வகுலேந்திரன் என்ற நபரை கடந்த மாதம் ( 09.06.2023 ) தனி நபர் ஒருவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் கொடுத்த முறைப்பாட்டுக்கமைய வவுனியா குற்றத்தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு இரண்டு கிழமை சிறையில் அடைக்கப்பட்டார் . அதன் பின்னர் நீதிமன்றத்தில் பிணையில் விடுவிக்காட்டார்.

இரண்டு தவணைகளுக்கு நீதிமன்றத்துக்கு வருகை தராததால் ம் இவருக்கு ( சர்வகுலேந்திரன் ) பிணைக்கு ஒப்பமிட்ட இவரது மகனை வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் நேற்று இரவு ( 04.09.2023 ) கைது செய்து ( 05.09.2023 ) நீதிமன்றத்துக்கு முன்னிலையில் கொண்டு சென்றனர். இந்த வழக்கில் இரண்டு நபர் சரீர பிணையில் சர்வகுலேந்திரனின் மகன் விடுவிக்கப்பட்டார்.

இந்த மாதம் 18.09.2023 ஆம் திகதி வழக்கிற்கு சர்வகுலேந்திரன் மூன்று மாதம் செலுத்த வேண்டிய மொத்த பணம் 9 இலட்சம் ரூபா பணத்தினை கட்ட வேண்டும். தவறும் பட்சத்தில் சர்வகுலேந்திரனின் பிணையாளர்கள் மூவரும் மற்றும் சர்வகுலேந்திரனின் மகனின் பிணையாளர்கள் இருவரும் மொத்தமாக 5 பிணையாளர்களும் கைது செய்யப்படுவார்கள் என நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.

அதுமட்டுமில்லாமல் கனடாவுக்கு தொழில் நிமித்தம் அனுப்புவதாக கூறி பல நபர்களிடம் பல இலட்சம் ரூபா காசுகளை பெற்று பல போலியான ஆவணங்களை கொடுத்து ஏமாற்றிய ரவிசங்கர் , சிபான் மற்றும் சுஜீதரன் ஆகியோரையும் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவர்களிடம் ஏமாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த புகைப்படத்திலுள்ள நபரால் ஏமாற்றப்பட்டவர்கள் யாரும் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு பொலிசார் தெரிவித்துள்ளார்கள் .

 

எனது குடும்பத்துடன் சனல் 4 க்கு வரலாற்றுப் பகை – வீடியோக்களை நீக்கியது ஏன்..? நாமல் கேட்கின்றார்…..


 ராஜபக்ஷேக்களுடன் செனல் 4 இற்கு 2009 ஆம் ஆண்டு யுத்த முடிவிலிருந்து வரலாற்று ரீதியிலான பகை இருப்பதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் செனல் 4 வெளியிட்ட காணொளிகளில் நம்பகத்தன்மை இருக்குமானால் அதை எதற்காக அவர்கள் தமது இணையத்தளத்திலிருந்து நீக்க வேண்டுமென இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பயங்கரவாதத்தை ஒழித்ததற்காக ராஜபக்ஷேக்களைப் பழி வாங்குவதற்கான இன்னுமொரு முயற்சியாக இது இருக்கலாம், அல்லது சிலரின் அரசியல் நோக்கங்களைத் திருப்திப்படுத்துவதற்காக செனல் 4 புதிய வீடியோவை வெளியிட்டு இருக்கலாம் என நாமல் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

2009 ஆம் ஆண்டு யுத்த முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின் எனது குடும்பத்துடனும் எனது தந்தை மற்றும் ராஜபக்ஷ என்ற பெயருடனும் செனல் 4 வரலாற்றுப் பகையைக் கொண்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் குறுகிய அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படக் கூடாது, அது அரசியல் மயமாக்கப்படுவது சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்குத் தடையாக அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Tuesday, September 5, 2023

2019 ஈஸ்ரர் குண்டுவெடிப்பு தொடர்பாக பிள்ளையானின் வலதுகையாக செயற்பட்ட அசாத் மௌலானாவின் வாக்குமூலம்


2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 அன்று மைதிரிபாலா சிறிசேனா  ஜனதிபதியாக தெரிவு செய்யப்பட்டார் 

இதற்கு 3 நாட்களுக்குப் பின்னர் மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே எங்களை ஹபரணவுக்கு வரச் சொன்னார். 
மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே அவர்கள் என்னிடமும் பிள்ளையானிடமும் அரசாங்கம் மாறி விட்டது. 
எந்த நேரமும் என்னவும் நடக்கலாம். 
ஆயுதங்களை ஒளியுங்கள் 
தன்னையும் இடம் மாற்றலாம். 
இராணுவ சம்பளம் சிலவேளை  தொகையாகக் கொடுக்க விட மாட்டார்கள் . 
ஆட்களுக்கு நேரடியாகத்தான் கொடுக்க வேண்டி வரும் என பல விடயங்களை சொன்னார் .

எதற்கும் 15 பொய்  பெயர்களை எழுதித்தாருங்கள் . 
அந்த பெயர்களை இராணுவ சம்பள பட்டியலில்  சேர்த்து விடுகிறேன் என நம்பிக்கை தந்தார் 
பொய்ப் பெயர்களை எங்களுக்கு பொறுப்பான புலனாய்வு அதிகாரி மொகமட்டுக்கு  அனுப்பி இருந்தேன்   
எங்களுக்கு இராணுவ சம்பளம் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்தது 

2015 பொதுத்தேர்தலிற்கு பின்னர்  பிள்ளையானை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்தார்கள். 
5 மாதம் 4ம் மாடியில் வைத்திருந்தார்கள் 
 நான் பிள்ளையானை ஒவ்வொரு சனிக் கிழமையும் அனுமதி பெற்றுச் சந்திப்பேன்.  
5 மாதங்களுக்குப் பிறகு பிள்ளையானை மட்டக்களப்புச் சிறைக்கு மாற்றினார்கள். 

பிள்ளையானுக்கு  வழக்காட சட்டத்தரணியை ஏற்பாடு செய்ய  பசில் ராஜபக்சவிடம்   உதவி பெறும்படி சுரேஸ் சாலே  அறிவுறுத்தி இருந்தார் 
இதற்கிடையில் சுரேஸ் சாலே மலேசியா தூதரகத்துக்கு பாதுகாப்பு பிரதானியாக இடம் மாற்றப்பட்டார்.

ஜனாதிபதி சட்டத்தரணி  அணில் சில்வா அவர்களை பசில் ராஜபக்சே  ஏற்பாடு செய்து தந்தார் 
பிள்ளையான் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது . 
  வழக்கினை முன்கூட்டியே முடிக்க ஒத்துழைக்க வேண்டாம் என அறிவுறுத்தி இருந்தார் சுரேஸ் சாலே.
வழக்கு தவணையின் போது நேரம்  கேட்டு ஒத்திவையுங்கள் என சொல்லி இருந்தார்   
நாங்கள் சட்டத்தரணியோடு கதைத்து அந்தத் தந்திரோபாயத்தைக் கடைப் பிடித்தோம். 

நான் ஒவ்வொரு வாரமும் அனுமதி பெற்று பிள்ளையானைப் போய்ப் பார்த்தேன். 
மட்டக்களப்பு  சிறைச்சாலையில்  பிள்ளையானுக்கு தனியான ஒரு பெரிய அறை கொடுத்திருந்தார்கள். 
பிள்ளையான் சிறைக்குள் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தினார். 
அந்தத் தொலைபேசி சிறைக்காவலர் ஒருவர் ஊடாக நான்தான் அனுப்பி வைத்தேன். 
அந்தத் தொலைபேசியில் இரவில் என்னோடு கதைப்பார்.

 2017 ஆவணி மாதம்  சந்திக்கப் போன போது பிள்ளையான் சிறையில் தங்க வைக்கப்பட்டு இருந்த காத்தான்குடி முஸ்லீம் நபர்களை என்னை சந்திக்கும் படி சொன்னார் 
2017 ஆவணி மாதம்  2 வது கிழமை  சிறைச்சாலைச் அத்தியட்சர்  அக்பரின் அனுமதியுடன் ஒரு சிறைக்காவலர் அவர்களில் ஒருவரை என்னுடன் பேச அழைத்து வந்தார். 
நானும் பிள்ளையானும் அவரும் சந்தித்தோம்  

அவர் தன் பேர் சைனி மௌலவி என்று சொன்னார்.( தற்கொலை குண்டுதாரிகளின் தலைவர்  சஹரான் மௌலவியின்  சகோதரர்.). 

சில சம்பாஷணைகளுக்கு  பிறகு அவர் போய்விட்டார். 
சந்திப்புக்கு பின்னர் இவர்கள் கடும் விஷயமான ஆக்கள் என பிள்ளையான்  சொன்னார் 
இவர்கள்  வழக்கு முடிந்து வெளியில் வருவாங்கள். 
கஷ்டத்தில் இருக்கிறார்கள.; அவர்களுக்கு உதவி செய்வோம் . 
அவர்கள் பின்பு எங்களுக்கு உதவி செய்வார்கள் என சொன்னார் 

குறிப்பாக சைனி மௌலவியின் மனைவியின் தம்பியிடம் ரூபா 50,000 கொடுக்க சொன்னார் . 
அடுத்தநாள் சைனி மௌலவியின் மச்சான் தொலைபேசி எடுத்தார்.  

நான் எங்கள் காரியாலயம் மட்டக்கிளப்பு லேக் றோட்டில் இருக்கு. அங்கு வரச் சொன்னேன். 
அங்கு அவர் வந்தார். அவருக்கு ரூபா 50,000 கொடுத்தேன். 

சம நேரத்தில் பிள்ளையான் சுரேஸ் சாலே யோடு  2 முறை தொலைபேசியில் கதைத்தார் 
2017 புரட்டாதி முதல் கிழமை சுரேஸ் சாலே  பிள்ளையானைச் சந்திப்பதற்கு  சில்வா என்கிற ஒருவரை அனுப்பி இருந்தார்  
அந்த நபர்  எங்கள் காரியாலயத்துக்கு வந்தார். 
நானும் அவரும் என்னுடைய வாகனத்தில் சிறைச்சாலைக்குப் போனோம். 
சில்வா  தமிழ் நன்றாகக் கதைத்தார். 
சிறைச்சாலைக்குள் போவதற்கு என்னுடைய பேரில் பதிந்து கூட்டிக் கொண்டு போனேன். 

20 நிமிடம் கதைப்பதற்கு அனுமதி தந்தார்கள். 
20 நிமிடம் கதைக்கப் போனவர் 2 மணித்தியாலங்கள் ஆகியும் கதையை நிறத்தவில்லை. 
சிறைக்காவலாளி தனக்குப் பிரச்சனை வரப்போகுதென்று பயப்படத் தொடங்கினார். 
நான்  பிள்ளையானும் சில்வாவும் கதைத்து கொண்டுவிருந்த சிறை அறைக்குள் புகுந்ததன் பின்னரே  அவர்கள் கதைப்பதை நிறுத்தினார்கள் . 

அதன் பின் அவரைச் சந்திக்கவில்லை. 
சில்வா வந்து போன பிறகு மேற்குறிப்பிட்ட முஸ்லீம் ஆட்களைப் பிணை எடுக்க வேண்டும். 
காசு கொஞ்சம் ஒழுங்கு பண்ண பிள்ளையான் சொன்னார் . 
ரூபா இரண்டரை லட்சமளவில் வேண்டும். 
சுரேஸ் சாலேயிடம்  கேட்க வேண்டும் என்று பிள்ளையான் சொன்னார். 
நான் சுரேஸ் சாலேயிடம்  பிணையெடுப்பதற்கு காசு இரண்டரை லட்சம் தரும்படி கேட்டேன். 
சுரேஸ் சாலே தான் மொகமட் அவர்களிடம்  சொல்லி ஒழுங்கு பண்ணுகிறன் என்று சொன்னார். 

எங்கள் செப்டம்பர் மாதச் சம்பளத்தோடு சேர்த்து இரண்டரை லட்சம் மேலதிமாகத் தரப் பட்டது. 
நான் அந்தக் காசை சைனி மௌலவியின் மச்சானிடம் கொடுத்தேன். 
பின்பு பிணை எடுப்பதற்கு ஓட்டமாவடி சட்டத் தரணி ராசிக் ஐ  ஒழுங்குபடுத்திக் கொடுத்தேன். 

அவர்கள் 24.10.2017 பிணையில் வெளியில் வந்தார்கள். 
2018 ஜனவரி மாத கடைசியில் மேற்படி  பிணையில் வந்தவர்களைச் சுரேஸ் சாலே  சந்திக்க விரும்புவதாகப் பிள்ளையான் சொன்னார். 
அந்தக் கலந்துரையாடலுக்கு ஒழுங்குபடுத்திக் கொடுக்க சொன்னார் . 
அந்தக் கலந்துரையாடலுக்கு என்னையும் போகச் சொன்னார். . இராணுவ வாகனத்தில் போக அறிவுறுத்தினார் 

நான் சைனி மௌலவிக்குப் முதல்நாளே போன் பண்ணி எனக்கு இப்படி ஒரு கூட்டம்  இருக்கு. நீங்கள் உங்கடை ஆட்களைக் கூட்டிக் கொண்டு வர சொல்லி இருந்தேன்   
தனக்குப் பிள்ளையான் ஏற்கனவே தொலைபேசியில் சொன்னதாகச் சொன்னார். 
சுரேஸ் சாலே  தொலைபேசி எடுத்தார். தானும் வந்து கொண்டிருக்கிறேன் என உறுதிப்படுத்தினார் 

புத்தளம் வனாத்துமுல்லையில் தென்னமரங்கள் சோலைபோல் வளர்ந்திருந்த தோட்டத்தில் கூட்டம் ஒழுங்கு படுத்த பட்டு இருந்தது . 
அங்கு எனக்கு சைனி மௌலவி ஒருத்தரை மட்டும்தான் தெரியும். 
சைனி மௌலவி தான் எனக்கு  தனது சகோதரரை அறிமுகப் படுத்தினார். 

அவர் தனது பெயர் சஹ்ரான் என்று சொன்னார். 
சுரேஸ் சாலே அவர்களிடம் சஹ்ரான் மௌலவியை  நான்  தான் அறிமுகப் படுத்தினேன் 

இவரைப் பற்றி ( சுரேஷ் சாலே ) நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேன் என்று சஹ்ரான் சொன்னார். 
உடனேயே அவர்கள் எல்லோரும் வீட்டுக்குள்ளே நுழைந்தார்கள் . 
அங்கு  கதிரைகள் போட்டு எல்லாம்  இருந்தது. நான் போகவில்லை. என்னைக் கூப்பிடவும் இல்லை. 
நான் வெளியில் நின்றிருந்தேன். கூட்டம்  3 மணித்தியாலங்களுக்கு மேல் நடைபெற்றது. 
நான் வெளியிலே காத்துக் கொண்டிருந்தேன். 

கூட்டத்திற்கு பிறகு சுரேஷ் சாலே  தனியாக என்னைக் கூப்பிட்டு எனக்குச் சொன்னார். 
பிள்ளையான் சிறையிலிருந்தும் வழக்கிலிருந்தும் வெளியிலை வாறதென்றால் கோத்தபாயா  ஜனாதிபதியாக வந்தால் மாத்திரம்தான் முடியும்.  
இல்லாவிட்டால் பிள்ளையான் மட்டுமல்ல எல்லோரும் உள்ளே போக வேண்டி வரும் என எச்சரித்தார் . 

அடுத்தநாள் பிள்ளையானைச் சந்தித்து  நடந்த விபரங்கள் எல்லாவற்றையும் சொன்னேன். 
பிள்ளையான் கோத்தபாயாவை வெல்ல வைக்கிறதுக்கு சுரேஸ் சாலே  பெரிய பிளானில் வேலை செய்கிறார். 
நாங்கள் அதுக்கு உதவி செய்ய வேணும். அப்பதான் நான் வெளியிலை வரலாம் என சொன்னார் 

11.2.2018 செப்டம்பரில் எங்கள் எல்லோரையும் சந்திக்க கோட்டபாய  வரச் சொன்னார். 
நான், பிரசாந்தன், தேவராஜ், இனியபாரதி ஆகியோர் கொகுவலை வீட்டில் கோட்டாபய அவர்களை சந்தித்தோம்   
அங்கு  ஓய்வுபெற்ற தேசிய புலனாய்வுத்துறைத் தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தாவிதாரண விராதனை இருந்தார். 
அந்தக் கூட்டத்தில் கோத்தபாயா  நான் ஜனாதிபதி தேர்தலில் வென்றால் பிள்ளையானை விடுவிக்க முடியும் என்றும் தனக்காக முழுமையாக வேலை செய்யுங்கோ என்றும் சொன்னார் 

மேற்படி சந்திப்பு  நடந்து 2 மாதத்துக்குப் பிறகு, சுரேஸ் சாலையும் சஹிரானும் வனாத்துமுல்லையில் சந்தித்து 14 மாதங்களின் பின்; ஜனாதிபதி தேர்தலுக்கு 7 மாதங்களுக்கு முன் உதிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு நடந்தது. 

இதன் போது நான் மட்டக்களப்பில் இருந்தேன். . 

நான் உடனடியாகப் பிள்ளையானைச் சந்திக்கப் 11 மணிக்குப் போனேன். 

பிள்ளையானுக்கு நான் போவதற்கு முன்னர் எல்லாம் தெரிந்திருந்தது. 

யாருக்கும் ஒன்றும் தெரியாத நேரத்தில் பிள்ளையான்  நீ வாயை மூடிக்கொண்டு எதுவும் தெரியாதது போல் இரு அது போதும்

இது எங்களுடைய கூட்டாளிகளுடைய வேலையாகத்தான் இருக்கும்.  சுரேஸ் சாலே கூட்டாளிகளுடைய வேலையாகத்தான் இருக்கும்.

இது நமக்கு நல்லது. அரசாங்கம் எப்படியும் மாறும் என சொன்னார்...

 ஐப்பசி 15, 2021 தேதி  சுரேஸ் சாலே அவர்களை கோத்தபாயா அதிகாரத்திற்கு வந்த பின்னர் மீண்டும் சந்தித்தேன் 

தனது அறைக்குள் வைத்துத் தனது  கணனியில் பாராளமன்றத்தில் ஹரின் பெர்னாண்டோ பேசிய வீடியோவை என்னைப் பர்க்கும்படி சொன்னார். 

அதே போல ஆயர் சிறில்  காமினி, அவர்கள் பேசிய   வீடியோவை பார்க்க சொன்னார் 

பாராளமன்ற உறுப்பினர்  நளின் பண்டார  அவர்களின் வீடியோவையும் பார்க்க சொன்னார் 

'இவர்கள் சகரான் குழுவுக்கும் இராணுவப்புலனாய்வுப் பிரிவுக்கும் தொடர்பு இருக்கிறது  என சொல்லுவது பற்றி தெரியுமா என கேட்டார் 

நான் சஹ்ரானைச் சந்தித்தது எனக்கும் உனக்கும் பிள்ளையானுக்கும் தான் தெரியும். 

நீ  தான் சொல்லியிருக்க வேண்டும்.

அதுக்குப்பிறகு என்னைக் கடுமையாக விசாரித்தார். 

நான் அதுபற்றி யாரோடும் கதைக்கவில்லை. என்னுடைய கைத்தொலைபேசியை வாங்கினார். 
நான் கடவுச்சொல்லைச் சொன்னேன். 
என்னுடைய கைத்தொலைபேசியைப் பூரணமாகச் சோதனை செய்தார்.

2007 இல் இருந்து அவரை எனக்குத்தெரியும். அவர் மிகக் கடுமையாக இருந்தது இம்முறைதான். 10 மணிக்குப் போனேன். 1 மணிக்குத்தான் வெளியே விட்டார்.

இவர் என்னைக் கடுமையாகச் சந்தேகிக்கிறார் என்று எனக்கு விளங்கி விட்டது. 

வெளியே வந்து பிள்ளையர்னுக்குத் தொலைபேசி எடுத்தேன். சுரேஸ் சாலை என்னைக் கூப்பிட்டுக் கடுமையாக விசாரித்தார். சந்தேகப் படுகிறார். எனக்குப் பயமாகக் இருக்கின்றது என சொன்னேன்

ஒக்டோபர் 16 ஆம் தேதி பிள்ளையான் தனியே சுரேஷ் சாலேவை  சந்தித்த விடயம் அமலன் (சாரதி) மூலமாக எனக்கு தெரியவந்தது 

சுரேஷ் சாலே ஐ சந்தித்தது குறித்து பிள்ளையான் என்னிடமும் சொல்லவில்லை .

பிள்ளையானும் சுரேஷ் சாலே போல என்னை சந்தேகிக்க தொடங்கி விட்டார் போல இருந்தது 

இராணுவத்தை நான் காட்டி கொடுத்ததாக அவர்கள் நினைக்க தொடங்கியதாக அஞ்ச தொடங்கினேன் .

ஐபோன் 15 புதிய அப்டேட்


ஐபோன் 15 புதிய அப்டேட்

ஆப்பிள் நிறுவனம் அதன் அடுத்த தலைமுறை ஐபோன், ஐபோன் 15 ஐ அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த புதிய ஐபோன் சில முக்கிய அம்சங்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதில் பின்வருவன அடங்கும்:

  • USB-C துறைப்புழக்கம்: ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் ஆகிய இரண்டு மாடல்களிலும் யுஎஸ்பி-சி துறைப்புழக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஐபோன் மாடல்களில் முதன்முறையாக இருக்கும்.
  • டைனமிக் தீவு: ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் ஆகிய இரண்டு மாடல்களிலும் டைனமிக் தீவு என்ற புதிய டிஸ்ப்ளே வடிவமைப்பு இருக்கும். இது ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • புதிய A16 Bionic சிப்: ஐபோன் 15 ஐப்போன் 14 ஐபோனில் உள்ள A15 Bionic சிப்பை விட சக்தி வாய்ந்த A16 Bionic சிப்புடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • புதிய கேமராக்கள்: ஐபோன் 15 புதிய கேமரா தொழில்நுட்பத்துடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது புதிய சென்சார்கள் மற்றும் லென்ஸ்களைக் கொண்டிருக்கலாம்.
  • புதிய iOS 16: ஐபோன் 15 iOS 16 இயங்குதளத்துடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது புதிய அம்சங்கள் மற்றும் மேம்பாடுகளைக் கொண்டிருக்கும்.

ஐபோன் 15 இன் அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், இந்த புதிய ஐபோன் வரும் செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Meta Connect tamil என்றால் என்ன?


Meta Connect 2023 இல் இணையுங்கள்

மெட்டா கனெக்ட் என்பது டெவலப்பர்கள், படைப்பாளிகள், தொழில்நுட்ப ஆர்வலர்கள் மற்றும் விர்ச்சுவல் மற்றும் ஆக்மென்ட்டட் ரியாலிட்டிக்குள் இணைப்பின் எதிர்காலத்தை உருவாக்க நிறுவனத்தின் சமீபத்திய முயற்சிகளைப் பற்றி கேட்க விரும்பும் மெட்டாவின் வருடாந்திர மாநாடு ஆகும். இந்த நிகழ்வு செப்டம்பர் 27-28, 2023 தேதிகளில் நடைபெறும், மேலும் முக்கிய உரைகள், பிரேக்அவுட் அமர்வுகள் மற்றும் ஹேண்ட்-ஆன் டெமோக்கள் இடம்பெறும்.

முக்கிய உரையை மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் வழங்குவார், அவர் மெட்டாவர்ஸிற்கான நிறுவனத்தின் பார்வை பற்றி விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மெட்டா குவெஸ்ட் 3 ஹெட்செட் மற்றும் ப்ராஜெக்ட் கேம்ப்ரியா ஆக்மென்டட் ரியாலிட்டி கண்ணாடிகள் போன்ற மெட்டாவின் சமீபத்திய தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள் பற்றிய புதுப்பிப்புகளையும் அவர் பகிர்ந்து கொள்வார்.

பிரேக்அவுட் அமர்வுகள் AI, VR மற்றும் AR தொடர்பான தலைப்புகளின் வரம்பை உள்ளடக்கும். கேமிங், கல்வி, சுகாதாரம் மற்றும் பலவற்றில் புதிய அனுபவங்களை உருவாக்க இந்தத் தொழில்நுட்பங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை பேச்சாளர்கள் விவாதிப்பார்கள். பங்கேற்பாளர்கள் மற்ற டெவலப்பர்கள் மற்றும் படைப்பாளர்களுடன் நெட்வொர்க்கிற்கான வாய்ப்புகளும் இருக்கும்.

முக்கிய உரை மற்றும் பிரேக்அவுட் அமர்வுகளுக்கு கூடுதலாக, Meta Connect 2023 ஆனது சமீபத்திய VR மற்றும் AR தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களின் நேரடி டெமோக்களையும் கொண்டிருக்கும். பங்கேற்பாளர்கள் இந்த தயாரிப்புகளை தாங்களாகவே முயற்சித்து, புதிய மற்றும் புதுமையான அனுபவங்களை உருவாக்க அவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை அறியும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

Meta Connect 2023 ஒரு இலவச நிகழ்வு, இதில் கலந்துகொள்ள யார் வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். இந்த நிகழ்வு பல்வேறு சமூக சேனல்களில் நேரலையாக ஸ்ட்ரீம் செய்யப்படும், எனவே நீங்கள் உலகில் எங்கிருந்தாலும் டியூன் செய்யலாம்.

மெட்டாவேர்ஸ் அல்லது புதிய அனுபவங்களை உருவாக்க VR மற்றும் AR எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பற்றி மேலும் அறிய நீங்கள் ஆர்வமாக இருந்தால், Meta Connect 2023 உங்களுக்கான நிகழ்வாகும். இன்றே பதிவுசெய்து, இணைப்பின் எதிர்காலத்தை ஆராயும்போது எங்களுடன் சேருங்கள்.

மெட்டா கனெக்ட் 2023 இல் எதிர்பார்க்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் இதோ:

Meta Quest 3 ஹெட்செட் மற்றும் Project Cambria ஆக்மென்டட் ரியாலிட்டி கண்ணாடிகள் போன்ற Meta இன் சமீபத்திய VR மற்றும் AR தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள் பற்றிய புதுப்பிப்புகள்.
மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கின் முக்கிய உரை, அங்கு அவர் மெட்டாவர்ஸிற்கான நிறுவனத்தின் பார்வை பற்றி விவாதிப்பார்.
கேமிங், கல்வி, சுகாதாரம் மற்றும் பல போன்ற AI, VR மற்றும் AR தொடர்பான தலைப்புகளின் வரம்பில் பிரேக்அவுட் அமர்வுகள்.
சமீபத்திய VR மற்றும் AR தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களின் டெமோக்கள்.
பிற டெவலப்பர்கள் மற்றும் படைப்பாளர்களுடன் பிணையத்திற்கான வாய்ப்புகள்.
Meta Connect 2023 இல் கலந்துகொள்ள நீங்கள் ஆர்வமாக இருந்தால், நீங்கள் செய்ய வேண்டிய படிகள் இங்கே:

நிகழ்வுக்கு பதிவு செய்யவும். பதிவு இலவசம் மற்றும் Meta Connect இணையதளத்தில் செய்யலாம்.
நீங்கள் எப்படி கலந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இந்த நிகழ்வு பல்வேறு சமூக சேனல்களில் நேரலையாக ஸ்ட்ரீம் செய்யப்படும், எனவே நீங்கள் உலகில் எங்கிருந்தாலும் டியூன் செய்யலாம். கலிபோர்னியாவின் மென்லோ பூங்காவில் உள்ள மெட்டா தலைமையகத்தில் நீங்கள் நேரில் கலந்து கொள்ளலாம்.
உங்கள் அட்டவணையைத் திட்டமிடுங்கள். நிகழ்வில் பல்வேறு அமர்வுகள் மற்றும் செயல்பாடுகள் இடம்பெறும், எனவே நீங்கள் எதையும் தவறவிடாமல் உங்கள் அட்டவணையைத் திட்டமிட சிறிது நேரம் ஒதுக்குங்கள்.
உற்சாகமாகுங்கள்! Meta Connect 2023 என்பது சமீபத்திய VR மற்றும் AR தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய அனுபவங்களை உருவாக்க அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பற்றி அறிந்து கொள்வதற்கான சரியான வாய்ப்பாகும். தவறவிடாதீர்கள்!

Join us virtually for Meta Connect 2023

Meta Connect is Meta's annual conference for developers, creators, tech enthusiasts, and others who want to hear about the company's latest efforts to build the future of connection within virtual and augmented reality. The event will be held virtually on September 27-28, 2023, and will feature keynote addresses, breakout sessions, and hands-on demos.

The keynote address will be delivered by Meta CEO Mark Zuckerberg, who is expected to discuss the company's vision for the metaverse. He will also share updates on Meta's latest products and technologies, such as the Meta Quest 3 headset and the Project Cambria augmented reality glasses.

The breakout sessions will cover a range of topics related to AI, VR, and AR. Speakers will discuss how these technologies are being used to create new experiences in gaming, education, healthcare, and more. There will also be opportunities for attendees to network with other developers and creators.

In addition to the keynote address and breakout sessions, Meta Connect 2023 will also feature hands-on demos of the latest VR and AR products and technologies. Attendees will have the chance to try out these products for themselves and learn how they can be used to create new and innovative experiences.

Meta Connect 2023 is a free event, and anyone can register to attend. The event will be streamed live on various social channels, so you can tune in no matter where you are in the world.

If you are interested in learning more about the metaverse or how VR and AR are being used to create new experiences, then Meta Connect 2023 is the event for you. Register today and join us as we explore the future of connection.

Here are some of the key things to expect at Meta Connect 2023:

Updates on Meta's latest VR and AR products and technologies, such as the Meta Quest 3 headset and the Project Cambria augmented reality glasses.
Keynote address by Meta CEO Mark Zuckerberg, where he will discuss the company's vision for the metaverse.
Breakout sessions on a range of topics related to AI, VR, and AR, such as gaming, education, healthcare, and more.
Hands-on demos of the latest VR and AR products and technologies.
Opportunities to network with other developers and creators.
If you are interested in attending Meta Connect 2023, here are the steps you need to take:

Register for the event. Registration is free and can be done on the Meta Connect website.
Choose how you want to attend. The event will be streamed live on various social channels, so you can tune in no matter where you are in the world. You can also attend in person at Meta Headquarters in Menlo Park, California.
Plan your schedule. The event will feature a variety of sessions and activities, so take some time to plan your schedule so you don't miss anything.
Get excited! Meta Connect 2023 is the perfect opportunity to learn about the latest VR and AR technologies and how they are being used to create new experiences. Don't miss it!

யாழ் போதனா வைத்தியசாலையில் 8 வயது சிறுமியின் கை துண்டிக்கப்பட்டமை தொடர்பாக பெற்றோரின் அறிக்கை இதோ!!


குஞ்சிதபாதம் சாண்டில்யன்,
சாண்டில்யன் சர்மிளா,
14, சந்திரவாசம்,
மல்லாகம், யாழ்ப்பாணம்.
03.09.2023.
பணிப்பாளர்,
யாழ் போதனா வைத்தியசாலை,
யாழ்ப்பாணம்.
ஐயா,
சாண்டில்யன் வைசாலியின் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டமை தொடர்பான நடவடிக்கை கோரல்
எமது மகளான எட்டு வயதுடைய சாண்டில்யன் வைசாலியின், இடது கை மருத்துவ நிபுணர் திரு.
N.S. சரவணபவானந்தனின் குழந்தைநல விடுதியில் தங்கி சிகிச்சை பெற்றபோது 12ஆம் விடுதியைச்
சேர்ந்த வைத்திய நிபுணர், வைத்தியர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்களின் வேண்டுமென்ற
பிழையான செயலின் விளைவாக நேற்றைய தினம் அதாவது 02.09.2023 ஆம் திகதியன்று
மணிக்கட்டுடன் அகற்றப்பட்டது.

இது தொடர்பான விரிவான விடயங்கள் பின்வருமாறு:
எமது மகளான சாண்டில்யன் வைசாலிக்கு காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக நாம் எமது குழந்தையை வண்ணை மேற்கு வைத்தியசாலையில் (கெங்காதரன் Hospital) இல் 23.08.2023 அன்று வைத்திய ஆலோசனைக்காக குழந்தை நலமருத்துவ நிபுணர் திரு.
N.S. சரவணபவானந்தனிடம் காட்டினோம்.
காய்ச்சல் குறையாமையினால் 24.08.2023 அன்றும் வண்ணை மேற்கு வைத்தியசாலையில் (கெங்காதரன் Hospital) இல் வைத்திய ஆலோசனைக்காக
குழந்தையைக் காட்டினோம்.
அங்கு வழங்கப்பட்ட ஆலோசனையின்படி;
தனியார் வைத்தியசாலையான Northern Hospital இல் 24.08.2023 ஆம் திகதியன்று
குழந்தைநல வைத்திய நிபுணர் திரு. N.S. சரவணபவானந்தன் அவர்களின் சிகிச்சைக்காக
Northern Hospital இன் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
24.08.2023 மற்றும் 25.08.2023 ஆகிய இரு நாட்களும் அங்கு தங்கி சிகிச்சை பெற்ற
பின்னர் நோய்நிலையின் தன்மை அதிகரித்தமையாலும் கூடுதல் பராமரிப்புக்காகவும்
குழந்தைநல வைத்திய நிபுணர் திரு. N.S. சரவணபவானந்தன் அவர்களின்
ஆலோசனையின் பேரில் 25.08.2023 ஆம் திகதியன்று இரவு எமது மகள் Northern Hospital இலிருந்து மாற்றப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் குழந்தைநல வைத்திய
நிபுணர் திரு. N.S. சரவணபவானந்தன் அவர்களுக்குரிய 12ஆம் இலக்க விடுதியில்
அனுமதிக்கப்பட்டார்.
தனியார் வைத்தியசாலையிலிருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டமை
குழந்தைவைத்திய நிபுணர் திரு. N.S. சரவணபவானந்தன் அவர்களின் ஆலோசனையின்
பேரிலேயே நடைபெற்றது.
Northern Hospital இல் Canula வைசாலியின் வலது கையில் மணிக்கட்டின்
வெளிப்புறத்தில் இடப்பட்டு குறித்த Canula ஊடாக மருந்து ஏற்றப்பட்டிருந்தது.
Northern Hospital இல் Canula வலது கையில் இடப்பட்டிருக்கையிலும் மருந்து
ஏற்றப்பட்டபோதும் எவ்வித பிரச்சனையும் இருக்கவில்லை.
இதன்பின்னர் யாழ் போதனா வைத்தியசாலை 12ஆம் விடுதியில் வைத்து வெள்ளிக்கிழமை
இரவு ழேசவாநசn ர்ழளிவையட இல் போடப்பட்ட உயரெடய ஊடாகவே மருந்து ஏற்றப்பட்டது.
 பின்னர் அடுத்த நாள் 26.08.2023 ஆம் திகதி சனிக்கிழமை காலை அவருக்கு இடது கையின்
மணிக்கட்டின் உட்பகுதியில் உயரெடய பொருத்தப்பட்டது.
Canula மூடியை திறந்து மருந்து ஏற்ற முயற்சித்த ஒவ்வொரு வேளையிலும் இரத்தம் பாய்ந்து
நிலத்தில் சிதறியது. இது தொடர்பில் தாயாரான எனக்கு சந்தேகம் இருந்தமையினால்
கடமையில் இருந்த வைத்தியரிடம் (HO) இதைக்கூறிய போது அது வழமை என எனக்கு
விளக்கம் அளிக்கப்பட்டது.
சனிக்கிழமை காலையிலிருந்து Saline இல் மருந்து கலக்கப்பட்டு குறித்த இடது கையில்
போடப்பட்ட Canula வழியாக ஏற்றப்பட்டு வந்தது.
இதன்பின்னர் 27.08.2023 ஆம் திகதியன்று அதாவது ஞாயிற்றுக்கிழமை எமது மகள்
உறங்கிக் கொண்டிருந்த சமயத்தில் இரவு 12.00 மணிக்குச் செலுத்தப்படவேண்டிய
Clindamycin என்ற மருந்தினை குறித்த 12 ஆம் விடுதியைச் சேர்ந்த தாதிய உத்தியோகத்தர்
ஒருவர் இரவு 11.45 மணிக்கு Saline உடன் கலக்காது ஊசி மூலம் Canula இனுள் நேரடியாக
செலுத்தினார்.
மேற்குறித்தவாறு மருந்து நேரடியாக Canula ஊடாக ஏற்றப்பட்டவுடன் உறங்கிக்
கொண்டிருந்த எமது மகள் விழித்து எழுந்து வலியால் துடிக்கத் தொடங்கினார்.
இதனையடுத்து மகளுடன் இருந்த நான் (சாண்டில்யன் சர்மிளா) அங்கு கடமையிலிருந்த
தாதிய உத்தியோகத்தர் ஒருவரிடம் இது குறித்து தெரிவித்தேன். அவர் Antibiotic மருந்தின்
தன்மையால் அப்படித்தான் இருக்கும் என்று கூறிவிட்டார்.
தொடர்ந்தும் மகள் வலியால் துடித்தவண்ணம் இருந்ததால் மீண்டும் நான் விடுதியிலுள்ள
தாதியர் நிலையத்துக்குச் சென்று அறிவித்ததையிட்டு முதலில் நான் கூறிய தாதிய
உத்தியோகத்தரும் மருந்தினை ஏற்றிய தாதிய உத்தியோகத்தரும் வந்து மகளைப்
பார்வையிட்டனர்.
இரு தாதிய உத்தியோகத்தர்களும் இணைந்து தனியே Saline மட்டும் Canula ஊடாக ஏற்ற
முயற்சித்த போதும் வெறும் Saline இனைக் கூட அந்தக்கையில் போடப்பட்ட Canula ஊடாக
ஏற்ற முடியவில்லை.
இதனையடுத்து 28.08.2023 ஆம் திகதியன்று அதிகாலை 4.00 மணியளவில் வைத்திய
அதிகாரியும் தாதிய உத்தியோகத்தர்களும் வந்து பார்வையிட்டு குறித்த இடதுகையில்
போடப்பட்ட Canula அகற்றப்பட்டது.
7.30 மணியளவில் Ward Round வந்த பெண் வைத்திய அதிகாரி ஒருவர் பிள்ளையின்
கைவீக்கத்தை பார்த்து விட்டு பிள்ளையின் கையில் Mopping கொடுத்தார்.
பின்னர் காலை 10.00 மணியளவில் குழந்தைநல வைத்திய நிபுணர் திரு. N.S.சரவணபவானந்தன் அவர்கள் வந்து குளிர்ந்து நீலம் பாரித்து இருந்த கையினைபார்வையிட்டுச் சென்றார்.
இதனையடுத்து மீள வருகை தந்த குழந்தைநல வைத்திய நிபுணர் திரு. N.S.சரவணபவானந்தன் அவர்கள் குழந்தையின் அருகாமையிலிருந்தே உடனடியாக தொலைபேசியூடாக கதைத்ததையடுத்து வைத்திய நிபுணர் திரு.மதிவாணன் அவர்கள் வந்து
கையினை பரிசோதித்து கையில் நாடித்துடிப்பு இ;ல்லை என்பதையும் கையில் இரத்த ஒட்டத்தில்
ஒட்சிசன் இல்லை என்பதையும் பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தி CT Scan பரிசோதனைக்காக உத்தரவிட்டார்.
இதனையடுத்து அன்றைய தினம் அதாவது 28.08.2023 ஆம் திகதியன்று மதியம் CT Scan
பரிசோதனை செய்யப்பட்டது.
மீண்டும் சத்திரசிகிச்சைக் கூடத்திற்கு எடுக்கப்பட்டு இடது கையில் ஏற்படும் அதீத வலியைக்
கட்டுப்படுத்துவதற்காக உணர்விழக்கச் செய்யும் ஊசி கையில் ஏற்றப்பட்டதாக கூறப்பட்டது.
அன்றைய தினம் இரவு 8.00 மணிக்கு மீண்டும் சத்திரசிகிச்சைக் எடுக்கப்பட்டு கையில்
அழுத்தத்தைக் குறைப்பதற்காக இழையத்தை வெட்டிச் செய்யப்படும் சத்திரசிகிச்சை
செய்யப்பட்டது.
இதன்போது கையில் இரத்தகட்டி உருவாகியுள்ளதாகவும், கையில்
இதன்காரணமாக இரத்தோட்டம் தடைப்பட்டிருப்பதாகவும் இந்த சத்திரசிகிச்சை
செய்யப்படவிருப்பதாக கூறப்பட்டது.
இரத்தக்கட்டியை கரைக்கும் Heparin எனப்படும்
மருந்தும் தொடர்ச்சியாக ஏற்றப்படவிருப்பதாக வைத்திய நிபுணரால் தெரியப்படுத்தப்பட்டது.
குறித்த சத்திரசிகிச்சையின் பின்னர் எமது மகள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை 29.08.2023 ஆம் திகதியன்று மதியம் மீளவும்
சத்திரசிகிச்சைக் கூடத்திற்கு எடுக்கப்பட்டு இரத்தக்கட்டியைக் கரைப்பதற்கான சத்திரசிகிச்சை
செய்யப்பட்டு தொடர்ந்தும்Heparin ஏற்றப்பட்டு வந்தது.
தொடர்ந்தும் அடுத்து வந்த இரு நாட்களுக்கு அதாவது 30.08.2023 மற்றும் 31.08.2023அதாவது புதனும் வியாழனும் மருந்து ஏற்றப்பட்டு வந்தது.
ஆயினும் இந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என்பதோடு மகளின் கை பழைய நிலைக்குத்
திரும்பவில்லை.
மாறாக கையின் கறுப்பு நிறம் அதிகரித்துக் கொண்டு சென்றதோடுதொடர்ந்தும் குளிர்ந்த நிலையில் காணப்பட்டது.
01.09.2023 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிதீவிர சிகிச்சைப்பிரிவுக்கு வருகை தந்த
பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணரால் மேலதிக கிருமித்தொற்று நிலையையும்
உயிராபத்தையும் தடுக்க எமது மகளின் இடது கை மணிக்கட்டுக்குக் கீழான பகுதி அகற்றப்பட
வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதன்பிரகாரம் அடுத்த நாள் 02.09.2023 சனிக்கிழமை காலை 9.00 மணியளவில்சத்திரசிகிச்சைக் கூடத்திற்கு எமது மகள் எடுக்கப்பட்டு இடது கை மணிக்கட்டின் கீழான பகுதிமுற்றாக அகற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து எமது மகள் இன்னமும் அதிதீவிர சிசிக்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று
வருகிறார்.
இது தொடர்பில் பின்வரும் விடயங்களை தங்களது கவனத்திற்குக் கொண்டுவருகிறோம்.
1. எமது மகள் வைசாலி காய்ச்சல் காரணமாகவே விடுதியில் அனுமதிக்கப்பட்டார்.
2. காய்ச்சலுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தவறான முறையிலும் உரிய நடைமுறைகளைப்
பின்பற்றாமலும் வழங்கப்பட்டுள்ளது.
3. Cannula வைத்தியரால் போடப்பட்டிருக்கவில்லை. தாதிய உத்தியோகத்தராலேயே
குறித்த Cannula போடப்பட்டது.
4. அவ்வாறு தாதிய உத்தியோகத்தரால் போடப்பட்ட குறித்த Cannula சரியான முறையில்
போடப்பட்டிருக்கவில்லை.
5. மருந்து உரிய முறையில் உட்செலுத்தப்படவில்லை. Saline உடன் கலந்து ஏற்றப்படவேண்டிய மருந்து Cannula ஊடாக நேரடியாக உட்செலுத்தப்பட்டது.
6. மருந்து அவ்வாறு நேரடியாக உட்செலுத்தப்பட்டதும் ஏற்பட்ட வலி மற்றும் தாக்கங்கள்
குறித்து உடனடியாக தாயாரால் தாதிய உத்தியோகத்தர்களுக்கு
அறிவிக்கப்பட்டபோதிலும் பாரதூரமான அலட்சியத்தாலும் கவனக்குறைவாலும் குறித்த
கையின் நிலை குறித்து உடனடியாக கவனத்தில் எடுக்கப்படாமை, உரிய நேரத்தில்
நடவடிக்கை எடுக்கபடாமை
மேற்குறித்த நடவடிக்கைகள் மூலம் எமது எட்டு வயதான மகளின் கை மணிக்கட்டுடன்
அகற்றப்பட்டு எமது மகளின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குட்படுத்தப்பட்டு சவாலானாக
மாற்றப்பட்டுள்ளது.
இது எமக்கும் எமது மகளுக்கும் நிரந்தர சேதத்தை உண்டுபண்ணியதோடு ஈடுசெய்யமுடியாத இழப்பு நேர்ந்துள்ளது.
எமது மகளின் இந்நிலைக்கு 12ஆம் விடுதியின் தாதிய
உத்தியோகத்தர்களும் வைத்தியர்களும் வைத்திய நிபுணரும் வைத்தியசாலை நிர்வாகமுமே
காரணமாகும்.
குறித்த 12 ஆம் விடுதியில் சம்பவம் நடைபெற்ற போது உத்தியோகபூர்வமாக கடமையில் இருந்த House Officer, Senior House Officer குறித்த விடுதிக்கு பொறுப்பான
குழந்தைநில வைத்திய சிகிச்சை நிபுணர் திரு. N.S. சரவணபவானந்தன், வைத்திய சாலை
பணிப்பாளரான தாங்கள் என அனைவரும் பொறுப்புக்கூற வேண்டிய கடமைவாய்ந்த
உத்தியோகத்தர் ஆவர்.
எனவே எமது மகளுக்கு நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக குறித்த தாதிய
உத்தியோகத்தரை பணிநீக்கம் செய்ய வேண்டும் எனவும், குறித்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட
வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், விடுதிக்குப் பொறுப்பான வைத்திய சிகிச்சை நிபுணர்
அனைவருக்கும் எதிராக உரிய விசாரணைக்கு உத்தரவிடப்படுவதுடன் சட்ட நடவடிக்கையும் எடுக்க
வேண்டும்.
பிள்ளைக்கு ஏற்பட்ட உடல் உளரீதியான மீள முடியாத தாக்கத்திற்காகவும் எமக்கும் எமது
குடும்பத்திற்கும் ஏற்பட்ட மீள முடியாத தாக்கத்திற்காகவும் தங்களிடமிருந்து நீதியான
விசாரணையையும் நியாயமான தீர்ப்பையும் எதிர்பார்த்து நிற்கின்றோம்.
விசாரணை முடிவில் குறித்த சம்பவத்துக்கான (கை அகற்றப்பட்டதற்கான) சரியான மருத்துவ
காரணத்தையும் எழுத்து மூலம் அறியத்தர வேண்டும் எனவும், எதிர்காலத்தில் இவ்வாறான மருத்துவ
நிராகரிப்புக்களினால் உயிர் இழப்புக்கள் அவய இழப்புக்கள் ஏற்படா வண்ணம் எங்களுடைய
சமூகத்தை பாதுகாக்கும்படி பாதிக்கப்பட்ட எங்களது குழந்தையின் சார்பில் வேண்டி நிற்கின்றோம்.
பி.கு. எதிர்காலத்தில் எடுக்கப்படவுள்ள குற்றவியல் மற்றும் குடியியல் வழக்கு நடவடிக்கைகளை
மட்டுப்படுத்தாமலும், அதற்கு பங்கம் ஏற்படாதவாறும் இக்கடிதம் அனுப்பப்படுகிறது.
…………………………………….
குஞ்சிதபாதம் சாண்டில்யன்,
சாண்டில்யன் சர்மிளா
Mathiaparanan Abraham Sumanthiran
Douglas Devananda
Shritharan Sivagnanam
Mano Ganesan
Charles Nirmalanathan

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job