நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, September 6, 2023

வவுனியாவில் கனடா மோகத்தில் இருந்தவர்களை ஏமாற்றிய கில்லாடிகளுக்கு நடந்த கதி!! (Photos)

வவுனியாவில் கந்தபுரத்தை வசிப்பிடமாக கொண்ட சர்வகுலேந்திரன் என்ற நபரை கடந்த மாதம் ( 09.06.2023 ) தனி நபர் ஒருவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் கொடுத்த முறைப்பாட்டுக்கமைய வவுனியா குற்றத்தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு இரண்டு கிழமை சிறையில் அடைக்கப்பட்டார் . அதன் பின்னர் நீதிமன்றத்தில் பிணையில் விடுவிக்காட்டார்.

இரண்டு தவணைகளுக்கு நீதிமன்றத்துக்கு வருகை தராததால் ம் இவருக்கு ( சர்வகுலேந்திரன் ) பிணைக்கு ஒப்பமிட்ட இவரது மகனை வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் நேற்று இரவு ( 04.09.2023 ) கைது செய்து ( 05.09.2023 ) நீதிமன்றத்துக்கு முன்னிலையில் கொண்டு சென்றனர். இந்த வழக்கில் இரண்டு நபர் சரீர பிணையில் சர்வகுலேந்திரனின் மகன் விடுவிக்கப்பட்டார்.

இந்த மாதம் 18.09.2023 ஆம் திகதி வழக்கிற்கு சர்வகுலேந்திரன் மூன்று மாதம் செலுத்த வேண்டிய மொத்த பணம் 9 இலட்சம் ரூபா பணத்தினை கட்ட வேண்டும். தவறும் பட்சத்தில் சர்வகுலேந்திரனின் பிணையாளர்கள் மூவரும் மற்றும் சர்வகுலேந்திரனின் மகனின் பிணையாளர்கள் இருவரும் மொத்தமாக 5 பிணையாளர்களும் கைது செய்யப்படுவார்கள் என நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.

அதுமட்டுமில்லாமல் கனடாவுக்கு தொழில் நிமித்தம் அனுப்புவதாக கூறி பல நபர்களிடம் பல இலட்சம் ரூபா காசுகளை பெற்று பல போலியான ஆவணங்களை கொடுத்து ஏமாற்றிய ரவிசங்கர் , சிபான் மற்றும் சுஜீதரன் ஆகியோரையும் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவர்களிடம் ஏமாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த புகைப்படத்திலுள்ள நபரால் ஏமாற்றப்பட்டவர்கள் யாரும் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு பொலிசார் தெரிவித்துள்ளார்கள் .

 

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job