நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, September 4, 2023

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியில் இவர்கள் தான்: செனல் - 4 இல் அம்பலமான திட்டம்


 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியில் இவர்கள் தான்: செனல் - 4 இல் அம்பலமான திட்டம்

இலங்கையில் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ராஜபக்ஷ குடும்பத்துக்கு விசுவாசமான இலங்கை அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்தின் செனல் - 4 இல் நாளை (05) ஒளிபரப்பப்படவுள்ள நேர்காணல் ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

தற்போது புகலிடம் கோரி சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் வசிக்கும் பிள்ளையானின் முன்னாள் பேச்சாளர் ஆசாத் மௌலானவே இந்த காணொளியின் முதன்மையான ஆதாரமாக இருப்பதாக தகவலறிந்த தரப்புகள் தெரிவித்தன.

கோட்டாபயவை அதிபராக்குவதற்கு

ராஜபக்ஷர்களை மீண்டும் அதிகாரத்தில் அமர்த்துவதற்காக இராணுவ உளவுத்துறை அதிகாரியான சுரேஷ் சாலி மற்றும் இஸ்லாமிய அரசுடன் இணைந்த நபர்களுடன் ஒரு சதித்திட்டம் தீட்டுவதற்காக 2018 இல் ஒரு சந்திப்பு இடம்பெற்றதாகவும் அந்த நேர்காணலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பு இடம்பெற்றுதுடன் சுரேஷ் சாலி என்னிடம் வந்து ராஜபக்ஷக்களுக்குத் தேவை இலங்கையில் பாதுகாப்பற்ற சூழல். அப்போது தான் கோட்டாபய ராஜபக்ஷவை அதிபராக்குவதற்கு ஒரே வழி” எனக் கூறியதாக ஹன்சீர் ஆசாத் மௌலானா கூறுகிறார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஆறு மாதங்களுக்குப் பின்னர் பாதுகாப்பை மீட்டெடுப்பதாக வாக்குறுதி அளித்ததன் பேரில் கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சியைப் பிடித்தபோது சுரேஷ் சாலி இராணுவப் புலனாய்வுத் தலைவராக பதவி உயர்வு பெற்றார் என்றும் அவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

"தாக்குதல் திட்டம் என்பது ஓரிரு நாட்களில் செய்யப்பட்ட திட்டம் அல்ல, இது இரண்டு, மூன்று ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job