அர்ச்சுனாவுக்கு மார்ச் 25 இல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை!தங்கத்தின் நிலை என்ன? சிறைத்தண்டனை வழங்கப்படுமா?
Monday, January 12, 2026
அர்ச்சுனாவுக்கு மார்ச் 25 இல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை!தங்கத்தின் நிலை என்ன? சிறைத்தண்டனை வழங்கப்படுமா?
அர்ச்சுனாவுக்கு மார்ச் 25 இல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை!தங்கத்தின் நிலை என்ன? சிறைத்தண்டனை வழங்கப்படுமா?
அனுராதபுரம் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் உத்தியோகத்தர்கள் பணியில் இருந்தபோது அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மார்ச் 25 ஆம் திகதி வாசிக்க அனுராதபுரம் தலைமை நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, மார்ச் 25 ஆம் திகதி சந்தேகத்திற்குரிய நாடாளுமன்ற உறுப்பினரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தலைமை நீதவான் மேலும் உத்தரவிட்டார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு மீண்டும் அனுராதபுரம் தலைமை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சந்தேகத்திற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுன நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. சந்தேகத்திற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி சுனந்த தென்னகோன், தனது கட்சிக்காரரான நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுன இன்று நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பங்கேற்றதே இதற்குக் காரணம் என்று கூறிய சட்டத்தரணி, அதன்படி வழக்கை வேறு நாளில் அழைக்குமாறு கோரினார்.
வழக்குத் தொடுப்பவர் தரப்பில் ஆஜரான அனுராதபுரம் காவல்நிலைய வழக்கு நடவடிக்கைப் பிரிவின் சார்ஜென்ட் (47818) இளங்கசிங்க, சந்தேக நபர் எம்.பி., காவல்நிலைய போக்குவரத்து உத்தியோகத்தர்களின் கடமையைத் தடுத்ததும், குற்றவியல் பலத்தைப் பயன்படுத்தியதும் சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவாகியுள்ளதாகக் கூறினார். தேவைப்பட்டால், சந்தேக நபர் எம்.பி.யின் சட்டத்தரணிக்கு சி.சி.டி.வி. காட்சிகளை வழங்க முடியும் என்றும் சார்ஜென்ட் கூறினார். சந்தேக நபர் எம்.பி. இராமநாதன் அர்ச்சுன தனது மோட்டார் வாகனத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு பயணித்தபோது, அனுராதபுரம் சாலியபுர பகுதியில் பணியில் இருந்த அனுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரது மோட்டார் வாகனத்தை ஆய்வு செய்தனர். எம்.பி. இராமநாதன் அர்ச்சுனவிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை.
பின்னர், காரில் இருந்த தனது ஓட்டுநர் உரிமம் மற்றும் பிற ஆவணங்களை சரிபார்க்க விடாமல், போக்குவரத்து காவல்நிலைய உத்தியோகத்தர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
புத்தளத்தில் இரவிரவாக உல்லாசம்! பெண்ணின் அந்தரங்கத்தினுள் சொருகப்பட்ட 2 பியர் போத்தல்கள் ! 2 ஆண்களும் பெண் முதலாளியும் கைது!! அதிர்ச்சி வாக்குமூலம் இதோ!
வயிற்று வீக்கம் மற்றும் அதிக இரத்தப்போக்கு காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கருப்பையில் இருந்து இரண்டு கண்ணாடிப் போத்தல்களை மாரவில ஆதார மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் நாத்தாண்டியா பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய பெண். கடந்த மாதம் 9 ஆம் திகதி 1990 அவசரசேவை நோயாளர் காவு வண்டி மூலம் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்தப் பெண்ணுக்கு பல பரிசோதனைகள் செய்யப்பட்டன. மேலும் அவரை ஸ்கான் செய்ய பரிந்துரைத்த பிறகு, பெண்ணின் வயிற்றில் இரண்டு போத்தல்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த அறுவை சிகிச்சையின் போது இரண்டு போத்தல்களையும் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
இது தொடர்பாக நோயாளியை மேலும் விசாரித்தபோது, அவர் தேங்காய் சார்ந்த உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், ஜனவரி 1 ஆம் திகதி நிறுவனத்தின் உரிமையாளரின் வீட்டில் ஒரு விருந்து நடைபெற்றதாகவும் கூறினார். விருந்தின் போது, நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு நபர்களுடன் மது அருந்தியதாகவும், குடிபோதையில் இருந்தபோது, அவர்கள் மீண்டும் மீண்டும் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாகவும், பின்னர் இரண்டு போத்தல்களை அவரது அந்தரங்க உறுப்புகளில் செருகியதாகவும் அவர் கூறியுள்ளார்.
உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த சில நாட்களாக தனியார் சிகிச்சை பெற்று வந்ததாகவும், தனது உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
நத்தாண்டிய-வலஹாபிட்டிய மற்றும் பனங்கொட பகுதிகளைச் சேர்ந்த 51 மற்றும் 56 வயதுடைய இருவரையும், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும் 47 வயதுடைய பெண்ணையும் மாரவில பொலிசார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் மூவரையும் மாரவில நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய பின்னர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Sunday, January 11, 2026
மன்னாரில் கணவனுடன் வைத்தியசாலை சென்ற 21 வயது சகாயகீர்த்தனா கணவனைக் கைவிட்டு யாருடன் ஓடினார்!! பொலிசார் தீவிர தேடுதல்!!
மன்னாரில் கணவனுடன் வைத்தியசாலை சென்ற 21 வயது சகாயகீர்த்தனா கணவனைக் கைவிட்டு யாருடன் ஓடினார்!! பொலிசார் தீவிர தேடுதல்!!
மன்னார் சௌத்பார் பகுதியில் வசித்து வந்த 21 வயதுடைய பெண்ணை காணவில்லை என்று உறவினர்களால் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மன்னார் சௌத்பார் பகுதியில் வசித்து வந்த அ. கான்சியூஸ் சகாயகீர்த்தனா வயது (21) எனும் திருமணமான பெண்ணை அவரது கணவர் நேற்றைய தினம் ( 10-1-2025) மன்னார் பொது மருத்துவமனைக்கு பற்சிக்ச்சைக்காக அழைத்துச் சென்று பின்னார் அங்கிருந்து கணவர் வீடு திரும்பி மீண்டும் மனைவியை அழைத்துவர சென்ற போது அந்த பெண் அங்கு இல்லை
இது தொடாபாக மருத்துவமனையிலும் விசாரணை செய்து மன்னார் நகரம் முழுவது தேடியும் பெண் தொடர்பான தகவல் இல்லை என்பதால் உறவினர்களால் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
பொலிஸார் தொடர்ச்சியாக மேற்கொண்ட விசாரணையில் குறித்த பெண் மன்னார் வைத்தியசாலையில் இருந்து முச்சக்கர வண்டி ஒன்றில் மன்னார் பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து வவுனியா செல்லும் பேருந்தில் சென்று வவுனியா குழு மாட்டுச் சந்தியில் இறங்கி வேறு ஒரு முச்சக்கர வண்டியில் சென்றதாக குறித்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்தார்கள்
இன்றைய தினமும் வவுனியா குழு மாட்டுச் சந்தி உட்பட பல இடங்களிலும் பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் தேடி வந்த போதும் பெண் குறித்த எந்த தகவல்களும் கிடைக்கவில்லை காணாமல் போன இந்த இந்த பெண் தொடர்பாக தகவல்கள் தெரிந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கும் அவர்களது 0763302475 இந்த தொலைபேசிக்கும் அழைத்து தெரியப்படுத்துமாறு பெண்ணின் உறவினர்கள் கவலையுடன் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Saturday, January 10, 2026
வவுனியாவில் 15 வயது மகள், 37 வயது தாய் இருவரையும் கர்பமாக்கிய ஜேர்மனி தர்மேந்திரா! அப்பாவிக் காதல் கணவன் நடுவீதியில்! காமுக நாய்கள் திருந்துமா?
வவுனியா ஓமந்தையிலிருந்து துணுக்காய் நோக்கிச் செல்லும் வீதியில் பண்ணை ஆரம்பிப்பதற்காக ஜேர்மனியிலிருந்து வந்த 51 வயது காமுகனின் செயற்பாட்டால் அழகிய ஒரு குடும்பம் சீரழிந்து சின்னபின்னமாகியது.
இறுதி யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் தாயையும் தந்தையையும் வன்னியில் பறி கொடுத்து தனது சகோதரனுடன் அநாதையாக நின்ற 20 வயது யுவதியை வவுனியா தடுப்பு முகாமில் இருக்கும் போது காதலித்து திருமணம் முடித்தான் ராஜ். ( பெயர் மாற்றம்). தடுப்பிலிருந்து வெளியே வந்து தனது மனைவியை வவுனியா வடக்கில் தனது பெற்றோருடன் வசிக்கவிட்டு உழைப்பதற்காக அரபு நாட்டுக்கு சென்றான் ராஜ். 2010ம் ஆண்டு அரபு நாட்டுக்குச் செல்லும் போது மனைவி நிறை மாத கர்ப்பிணி. பெண் குழந்தை பிறந்து 2 வயது வந்த பின்னரே ராஜ் திரும்ப மனைவியுடன் வந்து இணைந்தான். அதன் பின்னர் அரசி ஆலை, மேசன் வேலை என பல வேலைகள் செய்து தனது குடும்பத்தை நன்றாக கவனித்துக் கொண்டிருந்தான். 2021ம் ஆண்டு நண்பனுடன் மேசன் வேலை செய்து கொண்டிருந்த போது கட்டடம் ஒன்றில் இருந்து தவறி வீழ்ந்து இடுப்புப் பகுதியில் அடியுண்டு செயற்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டான் ராஜ். இதன் பின்னர் ராஜின் உறவினர்களின் தயவிலும் ராஜின் மனைவி அப்பகுதியில் சிறு சிறு வேலைகள் செய்து உழைத்த பணத்திலும் ராஜ் குடும்பம் வாழ்ந்து வந்தது. இருப்பினும் ஒரு வருடகாலப்பகுதிக்குள் ராஜ் ஓரளவு எழுந்து நடமாடும் அளவுக்கு குணமடைந்தான். அதன் பின்னர் சிறு சிறு வேலைகள் செய்து வந்தான். இவ்வாறான நிலையில் ஜேர்மனியிலிருந்து வவுனியாவுக்கு வந்து தங்கியிருந்த தர்மேந்திரா மூன்று முறிப்புக்கு செல்லும் வழியில் துணுக்காய் செல்லும் பாதைக்கு அருகாமையில் பண்ணை ஒன்றை நிறுவி வந்தான். அந்தப் பண்ணையில் தங்கியிருந்து வேலை செய்ய ஒரு குடும்பம் தேவை என பலரிடம் கேட்டிருந்த போது ராஜிற்கு இந்த தகவல் தெரியவந்து தர்மேந்திராவை சந்தித்துள்ளான்.
உடனடியாகவே தனது பண்ணையில் அமைத்திருந்த வீட்டில் ராஜ் மற்றும் அவனது மனைவியையும் மகளையும் குடியமர்த்தியுள்ளான் தர்மேந்திரா. ராஜின் மகளுக்கு அப்பகுதியில் கல்வி கற்க பாடசாலை செல்வது சிரமமாக இருந்துள்ளது. இதனை காரணமாக வைத்து தர்மேந்திரா ராஜின் மனைவியையும் மகளையும் வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் உள்ள தனது சகோதரி ஒருவரின் வீட்டில் தங்க வைத்துள்ளான். அவ் வீ்ட்டு உரிமையாளரான சகோதரியும் புலம்பெயர் நாட்டில் உள்ளார். அதன் பின்னர் ராஜ் பண்ணையில் இன்னும் இரு வேலைகாரர்களுடன் தங்கியிருந்து வேலை செய்ததுடன் தனது மனைவி, பிள்ளையைப் பார்ப்பதற்காக தாண்டிக்குளம் சென்று வந்துள்ளார். அக் காலப்பகுதியில் மகளுக்கு பூப்புனிதநீராட்டு விழாவும் அங்கு வைத்தே செய்துள்ளாா்கள்.
இவ்வாறான நிலையில் தனது மனைவியின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படுவதை ராஜ் அவதானித்துள்ளான். தனக்குத் தெரிவிக்காது மனைவி மோட்டார் சைக்கிள் செலுத்துவதற்கான சாரதி அனுமதிப்பத்திரம் எடுத்திருந்தது அவனுக்கு அதிர்சியை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன் வங்கியில் கணக்கிலக்கம் ஒன்றும் அவளால் ராஜிற்கு தெரியாது திறக்கப்பட்டிருந்தது. அவளிடம் ஏரி.எம அட்டையும் காணப்பட்டது. அத்துடன் சிமாட் போன் ஒன்றும் மனைவியிடம் காணப்பட்டது. இவற்றை எல்லாம் கணவன் விசாரித்த போது மனைவி அவற்றுக்கு சரியான பதில் வழங்காது கணவனை புறந்தள்ளத் தொடங்கியிருந்தாள். இதனால் கடும் கோபமுற்ற ராஜ் மனைவியை அந்த வீட்டிலிருந்து வெளியேறி தன்னுடன் வந்து தங்குமாறு கூறவே மனைவி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளாள். இதனால் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பில் முடிவுற்று ராஜ் மனைவியை தாக்கியிருந்தான். இதன் காரணமாக பொலிசாரிடம் மனைவி முறையிட்டு ராஜ் எச்சரிக்கப்பட்டுள்ளான்.
தனது மனைவியை அந்த வீட்டிலிருந்து வெளியேற்றுமாறு ராஜ் தர்மேந்திராவுக்கு கூறிய போது தர்மேந்திரா அதனை மறுத்ததால் ராஜ் தர்மேந்திராவின் பண்ணைக்கு வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டான். அதன் பின்னரும் மனைவியை அந்த வீட்டிலிருந்து வெளியேறி தன்னுடன் வருமாறு சண்டையிட்டு வந்துள்ளான். தனது மகளை தன்னுடன் வருாறு கூறிய போதும் மகளும் ராஜடன் செல்ல மறுத்துள்ளாள்.
இந் நிலையில் தர்மேந்திர கடந்த வருட தொடக்கத்தில் ஜேர்மனியிலிருந்து வவுனியாவுக்கு வந்துள்ளான். அங்கு வந்த தர்மேந்திரா தனது பண்ணையில் காணப்பட்ட சில பெறுமதி வாய்ந்த பொருட்கள் மற்றும் உழவு இயந்திர உபகரணங்களை ராஜ் திருடி விட்டதாக கூறி பொலிசாரிடம் முறையிட்டு ராஜ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தான். அதே நேரம் தர்மேந்திரா ராஜின் மனைவி தங்கியிருந்த வீட்டில் சென்று வசிக்கத் தொடங்கியுள்ளான். இதனை அறிந்த ராஜ் அங்கு சென்று பெரும் அமளிதுமளிப்படவே பொலிசாரிடம் அறிவித்து ராஜ் அங்கிருந்து பொலிசாரால் பிடித்துச் செல்லப்பட்டு மீண்டும் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தான்.
குறித்த காலப்பகுதிக்குப் பின் ஒரு வருடங்களுக்கு மேலாக மனைவியுடன் எந்தவித உடல் தொடர்பும் ராஜ் வைக்கவில்லை எனத் தெரியவருகின்றது. தற்போது தனது மனைவி கர்ப்பமாக உள்ளதாகவும் அதே நேரம் 2010.11.06ம் திகதி பிறந்த 15 வயதான மகளும் கர்ப்பமாக உள்ளதாகவும் ராஜ் கூறுகின்றான். தனது மனவைி மற்றும் மகள் கர்ப்பமாக உள்ளதால் அவர்கள் இருவரையும் அவன் வவுனியாவிலிருந்து வெளியேற்றி கொழும்பில் தங்க வைத்துள்ளதாக கூறி வருகின்றான். இது தொடர்பாக ராஜ் அப்பகுதி கிராமசேவையாளர் மற்றும் பொலிசார் மற்றும் மகள் கற்கும் பாடசாலை போன்றவற்றுக்கு தெரியப்படுத்தியும் எந்தவித பிரயோசனமும் இல்லை என கூறுகின்றான்.
தனது மனைவி கர்ப்பமடைந்துள்ளமை தொடர்பாக அவள் வாழ்ந்து வந்த வீட்டுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு தெரியும் என கூறியும் கிராமசேவகர் அதனைப் பொருட்படுத்தவில்லை எனவும் மகளின் நிலை தொடர்பாக கூறியும் அதனையும் அவர் காதில் வாங்கவி்லலை எனவும் ராஜ் கூறுகின்றான்.
வெளிநாடுகளிலிருந்து வந்து குடும்பங்களைக் குலைத்து நடுத்தெருவில் விடும் கேவலம் கெட்ட வேலைகளை செய்யும் காமுகர்களில் தர்மேந்திராவும் ஒருவனாக உள்ளான்.
Friday, January 9, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல் இன்றைய வானிலை முன்னறிவித்தல் !
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது இன்று (10) அதிகாலை 4.00 மணியளவில் திருகோணமலையிலிருந்து வடகிழக்கு திசையில் சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து இன்று அதிகாலை 5:30 மணியளவில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக (Depression) வலுவிழந்து, இன்றைய பகல் வேளையில் திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் இலங்கைக் கடற்கரையூடாகக் கடந்து செல்ல அதிக வாய்ப்புள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளது.
பல கொட்டைகளை பார்த்த யாழ்ப்பாண சுவிஸ் அன்ரி!
பிருத்தானியா குடும்பப் பெண்களை உணர்ச்சிவசப்படுத்தி மோசடி!! கொழும்பு ஊடகக் காவாலி பிரசாத் மீது பொலிசில் முறைப்பாடு!!
பிருத்தானியா குடும்பப் பெண்களை உணர்ச்சிவசப்படுத்தி மோசடி!! கொழும்பு ஊடகக் காவாலி பிரசாத் மீது பொலிசில் முறைப்பாடு!!
பிரித்தானியாவில் இலங்கைப் பெண்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக, மற்றுமோரு இலங்கையருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் வசிக்கும் ஊடகவியலாளரான மோக்ஷ பிரசாத் தங்களிடமிருந்து பெருந்தொகை பணத்தை மோசடி செய்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பாதிகப்பட்ட பெண்கள் பிரித்தானிய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
பெருந்தொகை பண மோசடி
லண்டனில் வசிக்கும் ஷானிகா மற்றும் நாதினி ஆகிய இரண்டு இலங்கைப் பெண்களால் இந்தப் முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டன. குறித்த இலங்கி பெண்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 25 ஆம் திகதி கிறிஸ்துமஸ் தினத்தன்று, முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இசைக்கலைஞர் ரொமேஷ் சுகதபாலா நடத்தும் வெள்ள நிவாரணத் திட்டத்திற்காக குற்றம் சாட்டப்பட்டவர் தங்களிடமிருந்து பெருந்தொகை பணத்தை மோசடி செய்ததாகவும் பெண்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பிரித்தானிய பொலிஸார் இலங்கை பொலிஸ் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு தகவல் வழங்கியுள்ளனர். இந்த முறைப்பாட்டு அளித்த பெண்களில் ஒருவர், தனக்கும் மோக்ஷவுக்கும் தொலைபேசி அழைப்புகளுக்கு மட்டுமே தொடர்பு இருந்ததாகக் கூறியுள்ளார்.
அதோடு மோக்ஷ தன்னை ஏமாற்றி பலமுறை பணம் மற்றும் பரிசுகளை பெற்றதாக பிரித்தானிய பொலிஸாரிடம் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பான வட்ஸ்அப் கணக்கு தகவல் மற்றும் செய்திகளின் நகல்களும் பிரித்தானிய பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக் கலியாணம்!! கள்ள மாப்பிளைக்கு காசு கொடுக்காததால் லண்டன் செல்லும் கனவில் இருந்த பெண்ணுக்கு நடந்த கதி!!
கள்ளக் கலியாணம்!! கள்ள மாப்பிளைக்கு காசு கொடுக்காததால் லண்டன் செல்லும் கனவில் இருந்த பெண்ணுக்கு நடந்த கதி!!
லண்டனில் வசிக்கும் நபர் ஒருவர் தனது மனைவி எனக் காட்டி போலி திருமணச் சான்றிதழைத் தயாரித்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் இடபெற்றுள்ள இச்சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது,
லண்டன் நபருக்கும் பெண் குடும்பத்திற்கும் பண தகராறு
இந்தியா குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில், போலி திருமண மற்றும் விவாகரத்து ஆவணங்களைப் பயன்படுத்தி, ஒரு பெண் ‘சார்ந்திருப்பவர் விசா’ (Dependent Visa) மூலம் ஐக்கிய இராச்சியத்திற்கு (UK) செல்ல முயன்ற சட்டவிரோத குடியேற்றத் திட்டத்தைப் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்த மோசடியில் பெண்ணின் கணவர் என்று ஆவணங்களில் காட்டப்பட்ட நபருக்கும், பெண்ணின் குடும்பத்தாருக்கும் இடையே ஏற்பட்ட பணத் தகராறே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வரக் காரணமாகியுள்ளது.
சட்டவிரோத குடியேற்றத்திற்காகப் பேசப்பட்ட பணம் சரியாக வழங்கப்படாததால், அந்த நபர் காவல்துறையில் முறைப்பாடளித்துள்ளார்.
விசாரணையில், இந்த சட்டவிரோதத் திட்டம் 2024 பெப்ரவரி மாதம் அரங்கேறியது தெரியவந்துள்ளது. லண்டனில் வசிக்கும் ஒருவர் தனது மனைவி எனக் காட்டி போலி திருமணச் சான்றிதழைத் தயாரித்துள்ளார்.
அதன் பின் பெண் வீட்டாரிடம் ஏற்பட்ட பணத் தகராறு குறித்த மோசடியை அம்பலப்படுத்த உதவியாக அமைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Thursday, January 8, 2026
கனடாவில் 57 வயத மனைவி மீது சந்தேகம்!! கட்டி வைத்து அந்தரங்கத்தை தைத்த 62 வயது குகநேசன் கைது!! மனைவியின் அதிர்ச்சி வாக்குமூலம் இதோ!
கனடாவை வசிப்பிடமாகக் கொண்டவரும் யாழ் தீவப்பகுதியைச் சொந்த இடமாகக் கொண்டவருமான 62 வயது கதிாகாமதம்பி குகநேசன் தாய்லாந் பொலிசாரால் Khao Yai National Park காட்டுப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் கைது செய்யப்பட்டள்ளார். தனது மனைவியை குறித்த விடுதியில் வைத்து கடுமையான சித்தரவதை புரிந்தமை மற்றும் மனைவியின் அந்தரங்க உறுப்பினை ஊசி நுாலால் தைத்து சித்தரவதை செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்களில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.தற்போது குகநேசன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தற்போது குகநேசனின் மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக கனடாவில் உள்ள குகநேசனின் பிள்ளைகளுக்கு பொலிசார் மற்றும் குகநேசனின் மனைவி தெரியப்படுத்தியதை அடுத்து குகநேசனின் மூத்த மகன் தாய்லாந் சென்றுள்ளதாகத் தெரியவருகின்றது.
தாய்லாந்தில் காணப்படும் kratom என்ற இயற்கையான போதை மருந்து ஒன்றை பாவித்த பின்னரே குகநேசன் மனைவியை கட்டி வைத்து சித்திரவதை புரிந்துள்ளார் என மனைவி பொலிசாருக்கும் தனது பிள்ளைகளுக்கும் தெரிவித்துள்ளார். குறித்த போதைப்பொருளை அவர் வாங்கி வந்து தீமையற்ற ஆரோக்கியமான இயற்கை மூலிகை என கூறி தனக்கு தெரிவித்து அவர் பாவித்ததாகவும் அதை பாவித்து சிறிது நேரத்தின் பின் குகநேசன் தன்னுடன் உறவு கொண்டு பின்னர் தன்னை கட்டி வைத்து வாய்க்குள் உள்ளாடைகள் அடைந்த பின் சித்தரவதை செய்ததாகவும் பொலிசாருக்கு வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.இதே வேளை தாய்லாந் பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் போது குகநேசன் மனைவி மீது தற்செயலாக சித்திரவதை செய்யவில்லை என்றும் திட்டமிட்ட ரீதியிலேயே சித்தரவதை செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்கள். போதை மருந்து பாவிக்கும் முன்னரே குகநேசன் செருப்பு தைக்கும் ஊசி மற்றும் பிளாஸ்டிக் நுால் ஆகியவற்றை கொள்முதல் செய்துள்ளார். இது மனைவிக்கு தெரியாது கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த kratom என்ற போதைப்பொருள் வீரியம் கூடிய போதைப்பொருள் அல்ல எனவும் பொலிசார் நீதிமன்றில் கூறியுள்ளார்கள்.
இதே வேளை கனடாவில் உள்ள தனது மகன் வயதான இளைஞனையும் தன்னையும் தொடர்புபடுத்தி தன்னை கட்டி வைத்து குகநேசன் சுயநினைவற்ற நிலையில் சித்திரவதை புரிந்ததாக மனைவி தனது பிள்ளைகளுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
குகநேசனும் மனைவியும் அடிக்கடி பல்வேறு நாடுகளுக்கும் சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தவர்கள் என்பதுடன் எந்தவித சண்டை சச்சரவுகளும் இன்றி வாழ்ந்து வந்தவர்கள் என குகநேசனுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளார்கள். கடந்த வருடம் குகநேசன் தம்பதிகள் இந்தியா முழுவதும் சுற்றுலா சென்று வந்தவர்கள் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
முல்லைத்தீவில் பெண் பிரதேசசபை செயலாளரை கண்டம் பண்ண முற்பட்ட உபதவிசாளர் காவாலி அனோஜன்!!
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் செயலாளரை மக்கள் மத்தியில் அவதூறாக பேசிய தாக்க முயற்சித்த உப தவிசாளரின் நடவடிக்கை குறித்து உயர் மட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துறைப்பற்று பிரதேச சபை பேசுபொருளாக காணப்படுகின்றது
இந்த நிலையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜக்கியமக்கள் சக்தி கட்சியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்டு றிசாட்பதியூதீன் அவர்களின் கட்சியால் தெரிவுசெய்யப்பட்டுள்ள யோகேஸ்வரன் அனோஜன் என்ற மக்கள் பிரதிநிதி கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் உபதவிசாளராக செயற்பட்டு வருகின்றார்.
கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் செயலாளராக இராஜயோகினி ஜெக்குமார் அவர்கள் கடமையாற்றி வருகின்றார்.
இன்று (08) குமாரபுரம் பகுதியில் பிரதேச செயலகத்தால் தற்காலிகமாக வீதி புனரமைப்பு பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது ஒப்பந்த தாரர்களுக்க அந்த வீதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரதேச சபையின் ஜே.சி.பி இயந்திரத்தினை குறித்த உபதவிசாளர் குறித்த பகுதிக்கு தேவை என கோரியுள்ளார் இந்த வீதி ஒப்பந்த வேலை என்ற காரணத்தினால் கனரக இயந்திரத்தினை கொடுக்கமறுத்துள்ளார்
பிரதேச சபையின் வேலைக்காக இயந்திரங்கள் பயன்படுத்தப்படுமாயின் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் பார்வையிட்ட பின்னரே இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் குறித்த வீதியினை பார்வையிடுவதற்காக பிரதேச சபையின் செயலாளர் சென்றுள்ளார் அந்த இடத்தில் கிராம சேவையாளர் அபிவிருத்தி உத்தியோகத்தர் பொதுமக்கள் என பலர் நின்ற வேளை உபதவிசாளரும் குறித்த இடத்தில் நின்று பிரதேச சபை செயலாளரை அவதூறாக பேசியதுடன் பெண் அதிகாரி என்று பார்க்காமல் அடிப்பதற்கும் முயற்சி செய்துள்ளார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
உபதவிசாளரின் இந்த நடவடிக்கை தொடர்பில் உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதுடன்
கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் இவ்வாறு அநாகரிகமான முறையில் நடந்துகொண்டுள்ளதுடன் பெண்அதிகாரியினையும் தாக்கமுற்பட்ட சம்பவத்தினை தொடர்ந்து அரச ஊழியர்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
கனடாவில் சற்று முன் இடம் பெற்ற விபத்தில் யாழ் குடும்ப பெண் அனுசா பலி! வீடியோ
கனடாவில் சற்று முன் இடம் பெற்ற விபத்தில் யாழ் குடும்ப பெண் அனுசா பலி! வீடியோ
யாழ்ப்பாணத்தைச் சேர்நதவரும் கனடாவில் வாழ்ந்துவந்தவருமாகிய 3 பிள்ளைகளின் தாயான 35 வயதான ராஜகாந் அனுஷா இன்று காலை Etobicoke Dixon வீதியில் இடம்பெற்ற கனரக வாகன விபத்தில் சிக்குண்டு பலியாகியுள்ளார் என தெரியவருகின்றது. வெள்ளைக் கோட்டின் ஊடாக வீதியைக் கடக்கும் போது வெள்ளை ரக் வண்டியை ஓட்டி வந்த 26 வயதான சாரதி ரக் வண்டியை கட்டுப்படுத்த முடியாது அனுஷா மீது மோதியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மோதிய பின் குறித்த சாரதி ஓடித் தப்பாது அந்த இடத்திலேயே நின்று பொலிசாருக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும்
பிரித்தானியா செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: இன்று முதல் புதிய குடிவரவு சீர்திருத்தம்
பிரித்தானியா செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: இன்று முதல் புதிய குடிவரவு சீர்திருத்தம் நடைமுறை
இன்று (ஜனவரி 8, 2026) முதல், பிரித்தானிய குடிவரவு விதிகளின் புதிய சீர்திருத்தங்கள் அமுலுக்கு வந்துள்ளன.
2025ஆம் ஆண்டு குடிவரவு வெள்ளை அறிக்கையில் வெளியிடப்பட்ட மாற்றங்களின் தொடர்ச்சியாக, 2026ஆம் ஆண்டு முதல் பணி விசாக்களுக்கான ஆங்கில மொழித் திறன் தேவைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
பிரித்தானிய அரசாங்கம், இந்த மாற்றம் பணியிடத்தில் தொடர்பாடலையும் சமூக ஒருங்கிணைப்பையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது எனத் தெரிவித்துள்ளது.
இந்த முடிவு அதிகாரபூர்வ ஆவணங்கள் மற்றும் நாடாளுமன்ற விளக்கங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Wednesday, January 7, 2026
இறப்பதற்கு சற்றுமுன், அக்கா தனது தம்பிக்கு கொடுத்த அறிவுரை 😢😢😢
ஒரு மருத்துவமனை அறையில் நிலவிய உறையவைக்கும் அமைதியை உடைத்து, சிறுவன் அழுதுகொண்டிருந்தான். வெள்ளை விரிப்பால் மூடப்பட்ட மருத்துவமனை படுக்கையில், உயிருக்கும் மரணத்துக்கும் இடையிலான நூல் பாலத்தில் அவனின் அன்பான அக்கா படுத்திருந்தாள்.
நோய் அவளது உடலைச் சிதைத்திருந்தது; பேசுவதற்கே கூட அவளுக்கு சக்தி இல்லை. ஆனாலும், தன் தம்பியைப் பார்த்தவுடன் அவள் கண்களில் அளவற்ற அன்பு பொங்கியது.
இனி திரும்பும் வாய்ப்பு இல்லை என்பதை அவள் அறிவாள். மெதுவாக நடுங்கும் கைகளை உயர்த்தி, அவன் முகத்தைத் தொட்டாள். அந்தத் தொடுதலில் ஒரே நேரத்தில் ஒரு தாயின் அக்கறையும், ஒரு தோழியின் பாசமும் கலந்திருந்தது. வெடித்து அழும் தம்பியை நோக்கி அவள் சொன்னாள்:
“நீ அழ வேண்டாம்… எனக்கு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆனால் நீ மனம் தளரக் கூடாது. என் ஒரே ஆசை என்ன தெரியுமா? நீ நன்றாக படிக்க வேண்டும். நிறைய படித்து, உயர்ந்த நிலையை அடைந்து, நல்ல மனிதனாக மாற வேண்டும். அதுவே அக்காவுக்கு நீ தரக்கூடிய மிகப் பெரிய பரிசு.”
அவள் சொன்ன வார்த்தைகளை கேட்டு அவன் தலையாட்டினான்; ஆனால் துயரத்தை தாங்க முடியாமல், அவள் கைகளில் முகத்தை புதைத்தான். அவள் கடைசியாக அவன் தலையை மென்மையாக தடவினாள். தானில்லாத போதும், தன் கனவுகளிலும், அவன் அடையும் வெற்றிகளிலும் தம்பி வாழ்வான் என்ற உறுதி அவளுக்கிருந்தது. அந்த அறையில் இருந்த அனைவரின் கண்களையும் நனைத்த தருணம் அதுவாகும்.
இது சமூக ஊடகங்களில் பரவிய, கண்களை நனைக்கும் ஒரு வீடியோ. அது எங்கே நடந்தது, அந்தக் குழந்தைகள் யார் என்பது தெளிவில்லை. ஒருவேளை அந்த அக்கா இன்று உயிருடன் இல்லாமல் இருக்கலாம். ஆனால் “நன்றாக படிக்க வேண்டும்” என்ற அவளின் இறுதி வார்த்தைகள், அந்தத் தம்பியின் இதயத்தில் இன்று கூட ஒரு தீப்பந்தமாக எரிந்து கொண்டிருக்கும். மரணம் கொண்டு போவது உடலை மட்டுமே; அன்பு என்றென்றும் மரணத்தைக் கடந்ததே 🙏🙏🙏
#school
#footballteam
#schoollife
#NFLTeam
#sports
#pittsburgh
#schoolevents
#SundayService
#highschool
#sermon
மன்னாரில் 15 வயதுச் சிறுமியுடன் 8 காவாலிகள் ஒரே நேரத்தில் உல்லாசம்!! 6 பேர் கைது! காவாலிகளின் பெயர் விபரங்கள் இதோ!!
மன்னாரில் 15 வயதுச் சிறுமியுடன் 8 காவாலிகள் ஒரே நேரத்தில் உல்லாசம்!! 6 பேர் கைது! காவாலிகளின் பெயர் விபரங்கள் இதோ!!
சமூகவலலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்.
மன்னார் எமில்நகர்ப் பகுதிக்கு அண்மையாக 15 வயதுச் சிறுமி ஒருவர் அவளது காதலன் மற்றும் நண்பர்களால் கடுமையான பா லிய ல்துஸ் பிரயோகத்துக்குள்ளான நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள். இவளை துஸ்பிரயோகத்துக்குள்ளாக்கிய காதலன் உட்பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் இருவர் தேடப்படுகின்றார்கள். அவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
1).ஜீவகுமார் கீஷான் (முக்கிய சந்தேக நபர்)
முகவரி: பானங் கட்டு கொட்டு கிழக்கு மன்னார்
வயது: 20, பிறந்த தேதி: 2006.04.11
2).ராமு டீலக்ஸ்
முகவரி – எமில் நகர் மன்னார்
என்.எச்.ஏ. 199925411078
வயது: 26
3.)ஆனந்த குமார் கிஷான் ரொட்ரிகோ
ஜிம்ரோ நகர், எமில் நகர்
வயது – 20 வயது, பிறந்த தேதி 2006.06.05
4.)சதீஷ் குமார் சரோன்
முகவரி: ஜீவபுரம், மன்னார்
200430804637
வயது – 21 ஆண்டுகள்
5.)ஞாநேந்திரன் மதுர்வர்ஷன்
முகவரி: சின்னகடை மன்னார்
வயது 16,
பிறந்த தேதி – 2009.05.03.
6.)எல்மோவின் பார்வை
முகவரி- பனங்கட்டுக்கோட்டு கிழக்கு மன்னார்
பிறந்த தேதி -2006.01.08
இந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டு 5 பேர் வவுனியா சிறைசாலைக்கும் ஒருவர் யாழ் சிறுவர் சீர்திருத்த நிலையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
#இது_எமது_சமூக_விழிப்புணர்வுக்கான_வெளியீடு.
இதுபோல பல சம்பவங்கள் நாளாந்தம் நடைபெற்றாலும் வெளிவருவதில்லை .
தயவு செய்து பெற்றோர்கள் ,உறவினர்கள் உங்களது பெண்பிள்ளைகள் ,ஆண் பிள்ளைகளை அறிவுரை மட்டுமல்லாது கண்காணிக்கவும்…
#தெருவில திரியிற காவாலிகள் இனி கடும் நடவடிக்கையுடன், வியாபார தளம் என்ற போர்வையில் தரிகெட்டு திரிகிறவர்களும் கவனம் .
அமெரிக்காவில் எதற்காக நிகிதா கொல்லப்பட்டார்? தங்கை சரஸ்வதி கூறும் பரபரப்புத் தகவல் இதோ!
அமெரிக்காவில் எதற்காக நிகிதா கொல்லப்பட்டார்? தங்கை சரஸ்வதி கூறும் பரபரப்புத் தகவல் இதோ!
கொலை சம்பவத்திற்கு முன்னர் நிகிதா அர்ஜூன் ஷர்மாவிடம் 4,500 டொலர் கடன் கொடுத்திருந்தார். அதில் 3,500 டொலர் மட்டும் திருப்பிக் கொடுக்கப்பட்டு, மீதம் 1,000 டொலர் கேட்ட போது, நிகிதா மேலும் கடன் கொடுக்க மறுத்து கொடுத்த கடனை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார்.
டிசம்பர் 31ஆம் திகதி, பணத்தை வாங்குவதற்காக அர்ஜூனிடம் நிகிதா சென்றதாக நிகிதாவின் தங்கை சரஸ்வதி தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் நிகிதா கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க பொலிஸார் கருதுகின்றனர். நிகிதாவின் உடல், அர்ஜூன் வாழ்ந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் கண்டறியப்பட்டது. உடலில் கத்திக்குத்துக் காயங்கள் இருந்துள்ளன. இதன்பிறகு, அர்ஜூன் தலைமறைவாகியதால், பொலிஸார் அவர் இந்தியாவுக்கு தப்பியோடியிருக்கலாம் என சந்தேகித்து, கைது வாரண்ட் பிறப்பித்துள்ளனர்.இதேவேழள, நிகிதாவின் தந்தை ஆனந்த் Godishala, அர்ஜூன் நிகிதாவின் முன்னாள் காதலர் அல்ல என தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், அர்ஜூனும் ஏனைய இரண்டு நபர்களும், நிகிதா தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்தனர். ஆனால் அர்ஜூன் நிகிதாவின் அறையில் தங்கியிருந்தவர் மட்டுமே.
நிகிதாவின் உடலை இந்தியாவிற்கு கொண்டுவர மத்திய மற்றும் மாநில அரசுகளும் உதவ வேண்டும் என ஆனந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
Tuesday, January 6, 2026
குடும்பத்தையே பெற்றோல் ஊற்றி எரித்த கணவன்! எதற்காக? நடந்தது என்ன?
அனுராதபுரம், கலன்பிந்துவெவ காவல் பிரிவுக்குட்பட்ட பண்டிகாரமடுவ பகுதியில் உள்ள நுவரகம் காலனியில் நேற்று (06) அதிகாலை ஒரு கணவனால் அவர்களது வீடு தீக்கிரையாக்கப்பட்டதில், கணவர், அவரது மனைவி மற்றும் அவர்களது 13 வயது மகள் ஆகியோர் எரிந்து உயிரிழந்தனர். தீக்காயமடைந்த அவரது மாமியார் (மனைவியின் தாய்), 15 வயது மகள் மற்றும் 20 வயது மகன் ஆகியோர் அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கலன்பிந்துவெவ பொலிசார் தெரிவித்தனர்.
இறந்தவர்கள் தச்சுத் தொழிலாளியான சமன் அனுருத்த பிரதீப்பிரிய (43), அவரது மனைவி பிரபாஷா சந்தமாலி ஜெயரத்ன (36) மற்றும் அவர்களது மகள் திமால்கா ஜெயஷானி (13) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மனைவியின் தாயார், 66 வயது ஓய்வுபெற்ற ஆசிரியர் பி. கமலவத்தே, மகன் தருசா தில்ஹான் (20) மற்றும் மகள் நிஷா இதுலி (15) ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
சந்தேக நபர் அடிக்கடி குடிபோதையில் வீட்டிற்கு வந்து தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் தாக்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. பல சந்தர்ப்பங்களில் அவர் காவல்துறைக்கு வந்தபோது, பிரச்சினை தீர்க்கப்பட்டு அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டதாக காவல்துறை மேலும் கூறுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு தாக்குதலுக்குப் பிறகு, மனைவி தனது மூன்று குழந்தைகளுடன் பண்டிகாரமடுவவில் உள்ள தனது தாயார் வீட்டில் வசிக்க வந்திருந்தார்.
இந்த தீ வைப்பை செய்த தந்தை கலன்பிந்துவெவவின் கரவக்குளம் பகுதியில் வசித்து வந்தார்.
தீ விபத்தில் இறந்த 13 வயது மகளின் பிறந்தநாள் நேற்று முன்தினம் (05) வந்தது.
சந்தேக நபர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருந்த தாயின் வீட்டிற்கு பிறந்தநாளைக் கொண்டாட கேக் மற்றும் பரிசுகளுடன் வந்ததாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. விருந்துக்குப் பிறகு தான் செல்வதாக அவர் கூறியிருந்தாலும், அவர் செல்லவில்லை, வீட்டிற்கு அருகில் இருந்தார்.
பின்னர் சந்தேக நபர் ஒரு லொரியின் கூரையில் ஏறி, இரண்டு மாடி வீட்டிற்குள் நுழைந்து, மனைவி மற்றும் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்த அறைக்குச் சென்று, எரியக்கூடிய திரவத்தை ஊற்றி தீ வைத்ததாக சந்தேகிக்கப்படுகிறது. அந்த நேரத்தில், மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் மனைவியின் தாய் மட்டுமே வீட்டில் இருந்ததாகவும், 20 வயது மகன் வீட்டில் இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தை அறிந்த மகன் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தனது தாயையும் சகோதரிகளையும் காப்பாற்ற முயன்றார், ஆனால் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று பொலிசார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் முதலில் ஹுருலு வேவா பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அனுராதபுரம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தாயும் உயிரிழந்ததாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
கண்ணாடி விரியன் கடித்து கிளிநொச்சியில் 22 வயது கிருசிகன் பலி!! அவதானம் மக்களே!!
கண்ணாடி விரியன் கடித்து கிளிநொச்சியில் 22 வயது கிருசிகன் பலி!! அவதானம் மக்களே!!
கிளிநொச்சி – கல்மடு நகர் பகுதியில் பாம்புக்கடிக்கு இலக்கான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று(06.01.2026) ஆலய வளாகத்தில் சிரமதான பணியில் ஈடுபட்ட போதே இவ்வாறு பாம்பு கடிக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர், 23 வயதுடைய சிறிகாந்தன் கிருசிகன், கல்மடு நகர் பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
சிரமதான பணியில் ஈடுப்பட்ட பொழுது பாம்பு கடிக்கு இலக்கான இளைஞரை அங்கிருந்தவர்கள், தர்மபுரம் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, குறித்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை இராமநாதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Monday, January 5, 2026
பிரான்சில் மற்றுமொரு சம்பவம்! தமிழ் யுவதி ஜெரினாவின் அஜால் குஜால் வீடியோ காட்சிகள் வெளியாகின!!
பிரான்சில் மற்றுமொரு சம்பவம்! தமிழ் யுவதி ஜெரினாவின் அஜால் குஜால் வீடியோ காட்சிகள் வெளியாகின!!
பிரான்ஸ் நாட்டில் வாழும் ஏராளமான தமிழ் மக்கள் கலை கலா்சாரங்களைப் பேணி சிறப்பான முறையில் வாழ்ந்துவரும் போது புலம்பெயர்ந்து சென்ற சிலர் அங்கு திருமணமாகி குழந்தைகளைப் பெற்று அவர்களை மிகக் கேவலமான கலாச்சார பிறழ்வுகளுடன் வளர்ந்து வருகின்றனர். அவ்வாறு வளர்த்த தமது குழந்தைகளின் செயற்பாட்டை அவர்கள் அறுவடை செய்யும் காட்சிகள் பரவலாக தற்போது வெளிவரத் தொடங்கிவிட்டன. ஒரே நேரத்தில் 4 காவாலிகளுடன் அதிலும் 2 பேர் துருக்கி நாட்டுக்காவாலிகளுடன் 18 வயது தமிழ் யுவதி செய்யும் கேவலமான செயற்பாடு மீண்டும் ஒருமுறை தமிழர்களை தலைகுனிய வைத்துள்ளது. குறித்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் வெளியிட்ட காவாலி தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. இருப்பினும் இனிமேலாவது இவ்வாறான வீடியோக்களை பார்த்தாவது புலம்பெயர் தமிழ்ச் சமூகம் திருந்துமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஏற்கனவே தன்னுடைய வீடீயோவை லீக் ஆக்கி பிரபலமடைந்த பிரான்ஸ் தமிழ் யுவதியின் பதிவுகள் கீழே.. click here
யாழில் மார்புகளுக்கு நடுவில் tattoo குத்திய புதுமணப் பெண்!! மாப்பிளை விவாகரதத்து செய்ய முடிவு!
யாழில் மார்புகளுக்கு நடுவில் tattoo குத்திய புதுமணப் பெண்!! மாப்பிளை விவாகரதத்து செய்ய முடிவு!
யாழில் கடந்த நவம்பர் மாதம் மிகவும் சிறப்பாக திருமணம் நடைபெற்று சந்தோசமாக இருந்த புதுமணத் தம்பதிகள் தற்போது எலியும் பாம்புமாக மாறியுள்ளார்கள். குறித்த மணமகள் தனது மார்பின் நடுப்பகுதியில் குத்திய tattoo வே இதற்கு காரணம் எனத் தெரியவருகின்றது.
திருமணமாகி சில நாட்களிலேயே கணவர் இதனை கண்டு பிடித்தள்ளார். அதன் பின்னர் தனது மனைவியை குறித்த tattoo ஏன் குத்தப்பட்டது, யார் மூலமாக குத்தினாய் என கேட்டு தொல்லைப்படுத்தி வந்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரி மாணவியான குறித்த மணமகள் அங்கு கற்கும் போது சில மாணவிகளுடன் சேர்ந்து அழகுகலை நிலையத்தில் குறித்த tattooi வை குத்தியதாக கூறியதுடன் அந்த tattoo பச்சை மயில் தோகையுடன் காணப்படும் அழகிய உருவமாக இன்னுமொரு மாணவியிடம் காணப்பட்டதால் அதனைப் பார்த்தே தானும் அவ்வாறு குத்தியதாக கூறியும் கணவன் சமாதானம் அடையவில்லை எனத் தெரியவருகின்றது.
மற்றைய மாணவிகளையும் tattoo குத்திய அழகுகலை நிலையத்தையும் தனக்கு காட்டும்படி கூறியதால் கடுப்பான மனைவி கணவனை கண்டபடி ஏசியதுடன் இது தொடர்பாக தனது சமூகவலைத்தளத்திலும் பதிவு ஒன்றை இட்டுள்ளார். இதனால் கடும் கோபமடைந்த கணவன் தற்போது மனைவியை விவாகரத்து செய்வதற்கு முற்பட்டுள்ளதுடன் அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தெரியவருகின்றது.
தீவிரம் பெறும் தாழமுக்கமும் மிகக் கனமழையும் தொடர்பான முன்னெச்சரிக்கை
05.01.2026 திங்கட் கிழமை மாலை 4.30 மணி
தீவிரம் பெறும் தாழமுக்கமும் மிகக் கனமழையும் தொடர்பான முன்னெச்சரிக்கை
இது மக்களைப் பதட்டத்துக்குள்ளாக்கும் பதிவல்ல. மாறாக மக்களை விழிப்பூட்டித் தயார்ப்படுத்தும் பதிவு
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு பகுதியில் தற்போது காணப்படும் தாழ்வு நிலை வலுப்பெறுகின்றது.
இன்றைய நிலையில் இது இலங்கையின் கிழக்கு கரையூடாக வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வடக்கு மாகாணத்தை மிக அண்மித்து தமிழ்நாட்டை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தாழமுக்கம் காரணமாக வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய தென் மாகாணங்கள் கன மழையைப் பெறும் வாய்ப்புள்ளது.
கிழக்கு மாகாணத்தில் கனமழையும் வெள்ள அனர்த்தமும் தொடர்பான எச்சரிக்கை
இந்த தாழமுக்கத்தினால் இன்று முதல் எதிர்வரும் 11.01.2026 வரை கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளும் பரவலாக கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளது. அத்தோடு இத்தாழமுக்கம் கிழக்கு பகுதியை அண்மித்தே( நிலப்பகுதியோடு இணைந்ததாக) வடக்கு நோக்கி நகரும் என்பதனால் வேகமான காற்றோடு இணைந்த கனமழையும் இடி மின்னல் நிகழ்வுகளும் இடம்பெறும்.
வடக்கு மாகாணத்திற்கான மிகக் கனமழையும் வெள்ள அனர்த்தத்துக்கான எச்சரிக்கையும்.
இந்த தாழமுக்கம் கிழக்கு கரையூடாக வடக்கு நோக்கி நகர்ந்து வடக்கு கரையூடாக தமிழ்நாட்டை அடையும் என்பதனால், இன்று முதல் வடக்கு மாகாணம் மிதமான மழையைப் பெறும்.
ஆனால் எதிர்வரும் 07.01.2026 முதல் வடக்கு மாகாணம் பரவலாக மிகக் கனமழையைப் பெறும்.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அதிகனமழையும் வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட முன்னெச்சரிக்கை
உருவாகியுள்ள தாழமுக்கத்தினால் எதிர்வரும் 07.01.2026 முதல் யாழ்ப்பாண மாவட்டமும் கிளிநொச்சி மாவட்டமும் அதிகனமழையைப் பெறும் வாய்ப்புள்ளது.
ஊவா மாகாணத்தில் கனமழை
உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக ஊவா மாகாணம் இன்று முதல் கனமானது முதல் மிகக்கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
வடமத்திய மாகாணத்தில் கனமழை
உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் பரவலாக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இந்த தாழமுக்கத்தின் காரணமாக மழை தொடர்ச்சியாக கிடைக்கும் என்பதனாலும், சில நாட்களில் மிகககனமழை கிடைக்கும் என்பதனாலும் யாழ்ப்பாணம்( மாவட்டத்தின் பல பகுதிகள்), கிளிநொச்சி(மாவட்டத்தின் பல பகுதிகள்), முல்லைத்தீவு(மாவட்டத்தின் பல பகுதிகள்), வவுனியா(மாவட்டத்தின் பல பகுதிகள்), மன்னார் (மாவட்டத்தின் சில பகுதிகள்) திருகோணமலை (மாவட்டத்தின் பல பகுதிகள்), மட்டக்களப்பு (மாவட்டத்தின் பல பகுதிகள்), அம்பாறை (மாவட்டத்தின் பல பகுதிகள்), பதுளை(மாவட்டத்தின் பல பகுதிகள்), மொனராகலை (மாவட்டத்தின் பல பகுதிகள்), அனுராதபுரம் ( மாவட்டத்தின் பல பகுதிகள்) பொலன்னறுவை (மாவட்டத்தின் பல பகுதிகள்), புத்தளம்( மாவட்டத்தின் சில பகுதிகள்), குருநாகல் ( மாவட்டத்தின் பல பகுதிகள்) அம்பாந்தோட்டை (மாவட்டத்தின் சில பகுதிகள்) வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புக்கள் உள்ளன.
வடக்கு கிழக்கு, வட மத்திய மற்றும் மத்திய மாகாணங்களின் குளங்களின் நீரை தற்போதே சற்று குறைந்த மட்டத்தில் பேணுவது சிறந்தது.
இந்நாட்களில் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளதனால் அதனோடு இணைந்த நிலச்சரிவு அனர்த்தங்களும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
நாளை முதல் (06.01.2026) இலங்கையின் வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
தயவு செய்து இந்த கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு நிகழ்வுகளினால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ள மக்களைத் தாயார்ப்படுத்தும் திணைக்களங்களின் அதிகாரிகள் இது தொடர்பாக மக்களை விழிப்பூட்டுவது அவசியம்.
தயவு செய்து மேற்குறிப்பிட்ட மாகாணங்களிலுள்ள மக்கள் இந்த தாழமுக்கம், கனமழை, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு மற்றும் கடற்கொந்தளிப்புத் தொடர்பில் அவதானமாக இருப்பது மிக மிக அவசியம்.
- நாகமுத்து பிரதீபராஜா -
Sunday, January 4, 2026
யாழில் மனைவியின் 9 பவுண் தாலிக்கொடியை கள்ளக்காதலிக்கு அணிவித்து றுாம் போட்ட வங்கி ஊழியர்! கள்ளக்காதலி தாலிக்கொடியுடன் தலைமறைவு!! வங்கி ஊழியரும் நண்பனும் மனைவிகளால் விவாகரத்து ஆகும் நிலை!!
யாழில் மனைவியின் 9 பவுண் தாலிக்கொடியை கள்ளக்காதலிக்கு அணிவித்து றுாம் போட்ட வங்கி ஊழியர்! கள்ளக்காதலி தாலிக்கொடியுடன் தலைமறைவு!! வங்கி ஊழியரும் நண்பனும் மனைவிகளால் விவாகரத்து ஆகும் நிலை!!
யாழ் வலிகாமம்பகுதியைச் சேர்ந்த 32 வயதான வங்கி ஊழியர் ஒருவர் தற்போது விவாகரத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மனைவிக்குத் தெரியாது மனைவியின் தாலிக்கொடியை எடுத்து தனது கள்ளக்காதலிக்கு அணிவித்து வவுனியாப் பகுதிக்கு அவளுடன் சென்று ரூம் எடுத்து தங்கியுள்ளார் குறித்த ஊழியர். கள்ளக்காதலியுடன் தங்கியிருந்த போது அவர் நல்ல நித்திரையில் இருந்த சமயத்தில் காதலி தாலிக்கொடியுடன் தலைமறைவாகியதாகத் தெரியவருகின்றது. கொழும்பு புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த 19 வயதான விபச்சாரத்தில் ஈடுபடும் யுவதி ஒருவரை வங்கி ஊழியரின் நண்பனான இன்னொரு வங்கி ஊழியரே இவருக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். அந்த யுவதியை சந்தித்த குறித்த ஊழியர் வவுனியாவுக்கு அழைத்துச் செல்ல முற்பட்ட போது பொலிசாரிடம் சிக்கிக் கொண்டால் கணவன் மனைவியாக கூறி தப்பலாம் என யுவதி ஆலோசனை கூறி மனைவியின் தாலிக்கொடியை கொண்டுவரச் செய்து அதனை அணிந்தவாறு ரூமில் தங்கிய பின்னரே தலைமறைவாகியுள்ளார்.
திருடனுக்கு தேள் கொட்டிய நிலையில் இருந்த ஊழியர் குறித்த யுவதியை தனக்கு அறிமுகப்படுத்திய நண்பனுடன் சேர்ந்து கொழும்பில் யுவதியைச் தேடித்திரிந்து சோர்ந்து போனார்கள். அத்துடன் யுவதி தங்கியிருந்த பகுதியில் அவளது சித்தி என கூறிய ஒருத்தியிடம் தகவல்களை கூறி யுவதியின் இருப்பிடத்தை அறிய முற்பட்ட போது அந்த யுவதிக்கு 16 வயது எனவும் எவ்வாறு அவளுடன் நீங்கள் தங்கியிருக்கலாம் என கூறி பொலிசாரிடம் முறையிடப் போவதாக கூறி அச்சுறுத்தியதால் இருவரும் செய்வதறியாத நிலையில் திரும்பி வந்துள்ளார்கள்.
யாழ்ப்பாணம் வந்து தமக்கு தெரிந்த தமிழ் பொலிஸ் ஒருவரை அணுகி தமது நிலையை கூறி அதன் பின்னர் வவுனியா பொலிசாருக்கு கொடுக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக யுவதியை தேடிப்பிடிக்கும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டு வருவதாகத் தெரியவருகின்றது. இருப்பினும் யுவதி இன்னும் பிடிபடவில்லை.
இந் நிலையில், குறித்த சம்பவம் 3 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றிருந்தாலும் மனைவியால் அண்மையிலேயே கண்டு பிடிக்கப்பபட்டுள்ளது. மறைத்து வைத்திருந்த தாலிக்கொடியை கோவில் நிகழ்வு ஒன்றுக்காக மனைவி எடுக்க முற்பட்ட போதே தாலிக்கொடி மாத்திரம் இல்லாது போனதைக் கண்டு மனைவி அதிர்ந்துள்ளார். தனக்கும் கணவனுக்கும் தெரிந்த மறைவான இடத்தில் தாலிக்கொடியை மட்டும் எடுத்தது யார்? என மனைவி விசாரணைகளைத் தொடங்கியுள்ளார்.
நீண்ட விசாரணைகளின் பின் குறித்த தாலிக்கொடியை தனது நண்பன் அவசர பண உதவிக்கு கேட்டதால் அடகு வைக்க கொடுத்தேன் எனவும் அவன் இன்னும் சில நாட்களில் அதனைத் தந்துவிடுவான் எனவும் வங்கி ஊழியர் கூறியுள்ளார். இருப்பினும் சந்தேகமடைந்த மனைவி நண்பனிடம் தன்னைக் கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார். நண்பர்கள் ஏற்கனவே திட்டமிட்டதற்கு அமைவாக குறித்த தாலிக்கொடியை தானே அவசர தேவைக்காக அடகு வைத்ததாக கூறியதுடன் சில நாட்களில் அதனை மீட்டுத்தருவதாக கூறி சமாளித்துள்ளார் நண்பன்.
அதன் பின்னர் தொடர்ச்சியாக வங்கி ஊழியரின் நண்பனிடம் தொல்லை கொடுக்கத் தொடங்கியுள்ளார் மனைவி. ஒரு கட்டத்தில் நண்பனின் வீட்டுக்குச் சென்று ரகளை பண்ண முற்பட்ட போதே நண்பனின் மனைவிக்கு தனது கணவன் யாரிடமோ தாலிக்கொடி வாங்கி அடகு வைத்த விடயம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து நண்பனையும் அவனது மனைவி கழுத்துப்பிடி பிடித்து விசாரித்த போதும் சரியான விபரங்களை நண்பன் கொடுக்காததால் வங்கி ஊழியரின் மனைவி பொலிசாரை அணுகியுள்ளார்.
அங்கு சென்ற பின்னரே இருவரது திருவிளையாடல்களும் வெளியாகியுள்ளது. தாலிக்கொடியுடன் யுவதி மாயமானது தொடர்பாக வவுனியாவில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் முறைப்பாடு கொடுத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை இருவரது மனைவிகளும் அறிந்து அதிர்ந்துள்ளார்கள்.
தற்போது இரு வங்கி ஊழியர்களும் தமது மனைவிகளை பிரியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
Saturday, January 3, 2026
சுவிஸ்லாந்தில் கள்ளத் தொடர்பு என சந்தேகபட்ட கணவன் வாலி படப் பாணியில் தமிழ் குடும்பப் பெண்ணை கொன்றது எப்படி? நடிப்புக்கு ஒஸ்கார் விருது கொடுக்கலாம் என நீதிபதி கூறியது ஏன்?
சுவிஸ்லாந்தில் கள்ளத் தொடர்பு என சந்தேகபட்ட கணவன் வாலி படப் பாணியில் தமிழ் குடும்பப் பெண்ணை கொன்றது எப்படி? நடிப்புக்கு ஒஸ்கார் விருது கொடுக்கலாம் என நீதிபதி கூறியது ஏன்?
சுவிட்சர்லாந்தில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவரை படுகொலை செய்த கணவன் மற்றும் அவரது சகோதரருக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. திட்டமிட்ட வகையில் மனைவியை கொ*லையை செய்த கணவனுக்கு 19 வருடங்கள் சிறைத் தண்டனையும் சகோதரனுக்கும் ஆயுள் தண்டனையும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.கடந்த வருடம் செப்டம்பர் 11ஆம் திகதி சுவிட்ஸர்லாந்தின் டிசினோ பகுதியில் வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த 40 வயது பெண்மணி, மர்மமான முறையில் உயிரிழந்தார்.
குற்றவாளிகள் இணைந்து கொலை செய்த நிலையில், இயற்கையான மரணம் என நாடகமாடியதாக நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.கொலை செய்யப்பட்ட தமிழ் பெண் உறங்கிக் கொண்டிருந்த போது, கணவர் மற்றும் அவரது சகோதரர் ஆகிய இருவரும் சேர்ந்து அவர் மீது பாய்ந்துள்ளனர்.
கணவனினின் சகோதரன் பெண்ணின் கால்களை அழுத்திப் பிடித்திருக்க பெண்ணின் தலையில் பிளாஸ்டிக் பையை மாட்டி, சுமார் 10 நிமிடங்கள் மூச்சுத் திணறச் செய்து அவரைக் கொலை செய்துள்ளனர்.
பின்னர், அவர் தூக்கத்திலேயே இயற்கையாக இறந்தது போல் காட்டுவதற்காக உடலை சரி செய்து கட்டிலில் நகர்த்தி வைத்துள்ளனர். அதன் பின்னர் கணவன் ஒன்றும் நடவாதது போல் பாடசாலை சென்ற தனது மகளை அழைத்து வந்துள்ளார். மகள் வீட்டினுள் வந்தவுடன் ”அம்மா உள்ளே படுத்திருக்கின்றார்… போய் எழுப்பி சாப்பாட்டை கேட்டு உண்” என கூறியுள்ளார். உள்ளே சென்ற மகள் தாயை தட்டி எழுப்பிய போது தாய் பேச்சு மூச்சு அற்று கிடக்கவே தந்தைக்கு தெரியப்படுத்தியுள்ளார் மகள். அதன் பின்னர் ஏதும் அறியாதவர் போல் அங்கு சென்ற தந்தை உடனடியாக வைத்தியசாலைக்கு அறிவித்துள்ளார். இதன் பின்னரே விசாரணைகள் ஆரம்பமாகி உண்மை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கணவனின் திட்டமிட்ட இந்தச் செயற்பாட்டை ஒஸ்கார் விருதுக்கு தகுதியானது என்று நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். கள்ளக்காதல் என்ற சிறிய விடயத்திற்காக ஒருவரைக் கொலை செய்துள்ளதாக நீதிபதி தனது தீா்ப்பில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Friday, January 2, 2026
யாழ் உடுவில் பகுதியில் கலியாணம் கட்டாமலே 6 யுவதிகளை கர்ப்பமாக்கிய காவாலிகள் யார்?
யாழ் உடுவில் பகுதியில் கலியாணம் கட்டாமலே 6 யுவதிகளை கர்ப்பமாக்கிய காவாலிகள் யார்?
யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் திருமணம் ஆகாத 6 பெண்கள் கர்ப்பம் தரிந்துள்ளதாக பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
உடுவில் பிரதேச செயலக பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த வருட 2025 இறுதியை அண்மித்த மாதங்களில் ஆறு பெண்கள் திருமணம் ஆகாமல் கர்ப்பம் தரித்துள்ள நிலையில் அவர்களுக்கான உளவளத் துணை வழங்கப்பட்டுவருகிறது.
அதேபோல் குறித்த தபிரதேச செயலக பகுதிகளுக்கு உட்பட்ட பகுதியில் 8 பேர் பாலியல்துன்புறுத்தல்களுக்கு ஆளானதுடன் 9 குடும்ப வன்முறைகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
Thursday, January 1, 2026
பிரான்சில் 2 பிள்ளைகளுடன் கணவனைத் தவிக்க விட்டு துர்க் இன காவாலியுடன் ஓடிய வவுனியா தமிழ்ப் பெண்!! திரும்பி வருமாறு கெஞ்சும் கணவன்!!
வவுனியாவைச் சொந்த இடமாகவும் பிரான்ஸ் பாரிஸ் Seine-Saint-Denis பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட 37 வயதான குடும்பப் பெண் ஒருவர் தனது கணவன் மற்றும் 2 சிறு பிள்ளைகளையும் கைவிட்டுவிட்டு அதே பகுதியில் வசித்து வந்த துர்க் இனத்தைச் சேர்ந்த காவாலி ஒருவனுடன் குடும்பம நடாத்தி வருவதாக தெரியவருகின்றது. இது தொடர்பாக கணவன் எமது ஊடகத்தரப்பினரை தொடர்பு கொண்டு சில விடயங்களைத் தெரிவித்துள்ளார்.
வவுனியாவைச் சேர்ந்த தனது மனைவியை மிகுந்த சிரமத்தின் மத்தியில் பல்லாயிரம் யூரோ செலவு செய்து தான் 2010 ஆண்டு இலங்கைக்கு சென்று திருமணம் முடித்து 2011ம் ஆண்டு இறுதிப் பகுதியில் அவளை பிரான்சிற்கு அழைத்துவிட்டேன். சந்தோசமாக குடும்பம் நடாத்தி தற்போது 11 வயது மற்றும் 7 வயதில் இரு பெண்பிள்ளைகளும் இருக்கும் போது தனது மனைவி தன்னை விட்டுப் பிரிந்து துர்க் இனத்தைச் சேர்ந்த ஒரு காவாலியுடன் குடும்பம் நடாத்தி வருவதாகவும் அவன் போதைப்பொருளுக்கு அடிமையானவன் என்பதுடன் சோசல் உதவியுடன் வாழ்பவன் எனவும் கணவன் தெரிவித்துள்ளார். அத்துடன் தனது மனைவி திருந்தி வரும் பட்சத்தில் அவளை தான் மீண்டும் ஏற்றுக் கொள்வேன் என குரல் தடுமாறத் தடுமாற எமக்கு தெரிவித்துள்ளார். அத்துடன் தனது மூத்த மகள் இன்னும் ஒரிரு மாதங்களில் பருவ வயதை அடைந்துவிடுவாள் என்பதால் மனைவி தயவு செய்து மகள்களின் நலன்களுக்காவது தன்னுடன் வந்து சேருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
அதே நேரம் தன்னை முன்னாள் கணவன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொல்லைப்படுத்தி அச்சுறுத்துவதாக துர்க் இன காவாலியுடன் குடும்பம் நடாத்தும் மனைவி பொலிசாருக்கு முறையிட்டதன் பிரகாரம் தற்போத கணவனு்ககு கடும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. மனைவியின் தொலைபேசி இலக்கம் எமக்கு கணவனால் தரப்பட்டது. மனைவியின் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு எடுத்து கதைக்க முற்பட்ட போது மனைவி தொலைபேசி இணைப்பை துண்டித்தார். புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ்க் குடும்பங்களின் கலாச்சாரம் மிகக்கேவலமான முறையில் சீரழிந்து கொண்டு செல்வது குறிப்பிடத்தக்கது.
மனைவி மற்றும் குறித்த துர்க் காவாலி உட்பட்டவர்களின் புகைப்படங்கள் மற்றும் பல வீடியோக்கள் எம்மிடம் உள்ளது. இருப்பினும் கணவனின் வேண்டுகோளின் படி நாம் அவற்றை பிரசுரிக்கவில்லை.
பிரான்சில் மனைவி கிருஜா பலருடன் தொடர்பு? மனைவியை இலங்கை அழைத்து வந்து நையப்புடைத்த சுரேஸ்! மனைவியின் பாஸ்போட்டுடன் பிரான்ஸ் தப்பி ஓட்டம்!!
தனது மனைவி பிரான்சில் பலருடன் அந்தரங்கத் தொடர்பில் இருப்பதாக சந்தேகித்த கணவன் தனது மனைவியை தந்திரமாக இலங்கை்ககு அழைத்துச் சென்று அங்கு வைத்து கட்டி வைத்து கடுமையாகத் தாக்கிய பின் மனைவியின் பாஸ்போட் உட்பட்ட முக்கிய ஆவணங்களுடன் பிரான்சிற்கு மீண்டும் தப்பி வந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக இலங்கையில் பொலிசாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
கிளிநொச்சி கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான கிருாஜா என்ற இளம் குடும்பப் பெண்ணுக்கே இந் நிலை ஏற்பட்டுள்ளது. ஒட்டிசுட்டான் பகுதியைச் சேர்ந்தவனும் பிரான்சில் வசித்து வந்தவனுமாகிய 31 வயதான தப்பிராசா சுரேஸ் என்பவனுடன் கிருஜாவுக்கு கடந்த 2022ம் ஆண்டு இந்தியாவில் திருமணம் நடைபெற்று 2023ம் ஆண்டு கிருஜா பிரான்ஸ் சென்றுள்ளார். இன்னும் கிருஜாவுக்கு நிரந்தர விசா கிடைக்கவில்லை எனத் தெரியவருகின்றது.
இவ்வாறான நிலையில் கிருஜாவுக்கு பிரான்ஸ்சில் பல பாடசாலை நண்பர்களுடன் தொடர்பு ஏற்பட்டு அவர்களில் பலர் கிருஜாவிடம் நட்பு ரீதியாக கதைத்து வந்துள்ளார்கள். இதனை அறிந்த சுரேஸ் அவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டாம் என எச்சரித்து வந்துள்ளார். இருப்பினும் சுரேஸ்சின் எச்சரிக்கைகளை மீறி கிருஜா தனது பாடசாலை நண்பர்களுடன் தொடர்பில் இருந்ததாகத் தெரியவருகின்றது. இதன் காரணமாக ஒரு தடவை கிருஜாவை சுரேஸ் தாக்கியுள்ளதாகவும் இதனையடுத்து கிருஜா பிரான்ஸ் பொலிசாரிடம் முறையிட்டு சுரேஸ் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் தெரியவருகின்றது. இச் சம்பவம் கடந்த வருடம் மார்ச் மாதம் அளவில் இடம்பெற்றுள்ளது.
கிருஜாவின் தாயாரின் 50 ஆவது பிறந்தநாளை மிகச் சிறப்பாக கொண்டாட வேண்டும் எனவும் அதற்காக கிருசாவின் தாயாருக்கு தெரியாது சப்ரைஸ்சாக கிளிநொச்சிக்கு செல்ல வேண்டும் எனவும் கிருசாவுக்கு ஆசை வார்த்தைகள் கூறி தாயாருக்கு அணிவிப்பதற்கு 3 பவுணில் சங்கிலியும் வாங்கி கிருசாவிடம் கொடுத்தே கிருசாவை கடந்தவாரம் இலங்கைக்கு வந்துள்ளான் சுரேஸ். கிருசாவை கிளிநொச்சிக்கு கொண்டு செல்லாது தாயின் பிறந்த நாளுக்கு வீட்டுக்குச் சென்று சந்திக்க வேண்டும் என கூறி கொழும்பு புறநகர்ப் பகுதியில் வீடு ஒன்று எடுத்து கிருசாவுடன் தங்கியுள்ளான் சுரேஸ். அன்று இரவே கிருசாந்தியை கட்டி வைத்து கொடூரமாகத் தாக்கியதுடன் அவளை கட்டி வைத்துவிட்டு அவளது 11 பவுண் பெறுமதியான தாலிக்கொடி உட்பட்ட 25 பவுண் நகைகள் மற்றும் தாய்க்கு கொடுக்க கொண்டு சென்ற சங்கிலி மற்றும் கிருசாவின் பாஸ்போட், இலங்கை அடையாள அட்டை உட்பட்ட பெறுமதி வாய்ந்த ஆவணங்கள் உட்பட்டவைகளுடன் சுரேஸ் அங்கிருந்து தப்பி கட்டுநாயக்காவிலிருந்து உடனடியாகவே பிரான்ஸ் வந்துவிட்டதாகத் தெரியவருகின்றது. அடுத்த நாள் மாலையே கிருசாவின் முனகல் சத்தம் கேட்டு வீட்டை வாடகைக்கு கொடுத்தவர்கள் கிருசாவை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்கள். இச் சம்பவம் தொடர்பாக கொழும்பில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரியவருகின்றது. இதே வேளை கிருஜா தற்போது 3 மாத கர்ப்பமாக உள்ளதாகவும் கிருசாதரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுரேஸ் செய்த இந்தச் செயல் தொடர்பாக கிருஜாவின் பிரான்ஸ் நண்பர்கள் அங்குள்ள பொலிசாருக்கும் முறைப்பாட்டை கொடுத்துள்ளதுடன் ஊடகங்களுக்கும் தகவல்கள் அனுப்பியுள்ளார்கள்.










