This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

50% OFFICERS 👇👇🔴👇👇

50% OFFICERS 👇👇🔴👇👇
I found this great deal on Daraz! Check it out! Product Name: MAVIC 3 Clone Aerial Drone with Camera - Explore the Skies with Confidence Product Price: Rs.15,000 Discount Price: Rs.7,189

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, January 2, 2026

யாழ் உடுவில் பகுதியில் கலியாணம் கட்டாமலே 6 யுவதிகளை கர்ப்பமாக்கிய காவாலிகள் யார்?


யாழ் உடுவில் பகுதியில் கலியாணம் கட்டாமலே 6 யுவதிகளை கர்ப்பமாக்கிய காவாலிகள் யார்?

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் திருமணம் ஆகாத 6 பெண்கள் கர்ப்பம் தரிந்துள்ளதாக பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

உடுவில் பிரதேச செயலக பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த வருட 2025 இறுதியை அண்மித்த மாதங்களில் ஆறு பெண்கள் திருமணம் ஆகாமல் கர்ப்பம் தரித்துள்ள நிலையில் அவர்களுக்கான உளவளத் துணை வழங்கப்பட்டுவருகிறது.

அதேபோல் குறித்த தபிரதேச செயலக பகுதிகளுக்கு உட்பட்ட பகுதியில் 8 பேர் பாலியல்துன்புறுத்தல்களுக்கு ஆளானதுடன் 9 குடும்ப வன்முறைகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Thursday, January 1, 2026

பிரான்சில் 2 பிள்ளைகளுடன் கணவனைத் தவிக்க விட்டு துர்க் இன காவாலியுடன் ஓடிய வவுனியா தமிழ்ப் பெண்!! திரும்பி வருமாறு கெஞ்சும் கணவன்!!


வவுனியாவைச் சொந்த இடமாகவும் பிரான்ஸ் பாரிஸ் Seine-Saint-Denis பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட 37 வயதான குடும்பப் பெண் ஒருவர் தனது கணவன் மற்றும் 2 சிறு பிள்ளைகளையும் கைவிட்டுவிட்டு அதே பகுதியில் வசித்து வந்த துர்க் இனத்தைச் சேர்ந்த காவாலி ஒருவனுடன் குடும்பம நடாத்தி வருவதாக தெரியவருகின்றது. இது தொடர்பாக கணவன் எமது ஊடகத்தரப்பினரை தொடர்பு கொண்டு சில விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

வவுனியாவைச் சேர்ந்த தனது மனைவியை மிகுந்த சிரமத்தின் மத்தியில் பல்லாயிரம் யூரோ செலவு செய்து தான் 2010 ஆண்டு இலங்கைக்கு சென்று திருமணம் முடித்து 2011ம் ஆண்டு இறுதிப் பகுதியில் அவளை பிரான்சிற்கு அழைத்துவிட்டேன். சந்தோசமாக குடும்பம் நடாத்தி தற்போது 11 வயது மற்றும் 7 வயதில் இரு பெண்பிள்ளைகளும் இருக்கும் போது தனது மனைவி தன்னை விட்டுப் பிரிந்து துர்க் இனத்தைச் சேர்ந்த ஒரு காவாலியுடன் குடும்பம் நடாத்தி வருவதாகவும் அவன் போதைப்பொருளுக்கு அடிமையானவன் என்பதுடன் சோசல் உதவியுடன் வாழ்பவன் எனவும் கணவன் தெரிவித்துள்ளார். அத்துடன் தனது மனைவி திருந்தி வரும் பட்சத்தில் அவளை தான் மீண்டும் ஏற்றுக் கொள்வேன் என குரல் தடுமாறத் தடுமாற எமக்கு தெரிவித்துள்ளார். அத்துடன் தனது மூத்த மகள் இன்னும் ஒரிரு மாதங்களில் பருவ வயதை அடைந்துவிடுவாள் என்பதால் மனைவி தயவு செய்து மகள்களின் நலன்களுக்காவது தன்னுடன் வந்து சேருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

அதே நேரம் தன்னை முன்னாள் கணவன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொல்லைப்படுத்தி அச்சுறுத்துவதாக துர்க் இன காவாலியுடன் குடும்பம் நடாத்தும் மனைவி பொலிசாருக்கு முறையிட்டதன் பிரகாரம் தற்போத கணவனு்ககு கடும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. மனைவியின் தொலைபேசி இலக்கம் எமக்கு கணவனால் தரப்பட்டது. மனைவியின் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு எடுத்து கதைக்க முற்பட்ட போது மனைவி தொலைபேசி இணைப்பை துண்டித்தார். புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ்க் குடும்பங்களின் கலாச்சாரம் மிகக்கேவலமான முறையில் சீரழிந்து கொண்டு செல்வது குறிப்பிடத்தக்கது.

மனைவி மற்றும் குறித்த துர்க் காவாலி உட்பட்டவர்களின் புகைப்படங்கள் மற்றும் பல வீடியோக்கள் எம்மிடம் உள்ளது. இருப்பினும் கணவனின் வேண்டுகோளின் படி நாம் அவற்றை பிரசுரிக்கவில்லை.

பிரான்சில் மனைவி கிருஜா பலருடன் தொடர்பு? மனைவியை இலங்கை அழைத்து வந்து நையப்புடைத்த சுரேஸ்! மனைவியின் பாஸ்போட்டுடன் பிரான்ஸ் தப்பி ஓட்டம்!!


தனது மனைவி பிரான்சில் பலருடன் அந்தரங்கத் தொடர்பில் இருப்பதாக சந்தேகித்த கணவன் தனது மனைவியை தந்திரமாக இலங்கை்ககு அழைத்துச் சென்று அங்கு வைத்து கட்டி வைத்து கடுமையாகத் தாக்கிய பின் மனைவியின் பாஸ்போட் உட்பட்ட முக்கிய ஆவணங்களுடன் பிரான்சிற்கு மீண்டும் தப்பி வந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக இலங்கையில் பொலிசாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

கிளிநொச்சி கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான கிருாஜா என்ற இளம் குடும்பப் பெண்ணுக்கே இந் நிலை ஏற்பட்டுள்ளது. ஒட்டிசுட்டான் பகுதியைச் சேர்ந்தவனும் பிரான்சில் வசித்து வந்தவனுமாகிய 31 வயதான தப்பிராசா சுரேஸ் என்பவனுடன் கிருஜாவுக்கு கடந்த 2022ம் ஆண்டு இந்தியாவில் திருமணம் நடைபெற்று 2023ம் ஆண்டு கிருஜா பிரான்ஸ் சென்றுள்ளார். இன்னும் கிருஜாவுக்கு நிரந்தர விசா கிடைக்கவில்லை எனத் தெரியவருகின்றது.

இவ்வாறான நிலையில் கிருஜாவுக்கு பிரான்ஸ்சில் பல பாடசாலை நண்பர்களுடன் தொடர்பு ஏற்பட்டு அவர்களில் பலர் கிருஜாவிடம் நட்பு ரீதியாக கதைத்து வந்துள்ளார்கள். இதனை அறிந்த சுரேஸ் அவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டாம் என எச்சரித்து வந்துள்ளார். இருப்பினும் சுரேஸ்சின் எச்சரிக்கைகளை மீறி கிருஜா தனது பாடசாலை நண்பர்களுடன் தொடர்பில் இருந்ததாகத் தெரியவருகின்றது. இதன் காரணமாக ஒரு தடவை கிருஜாவை சுரேஸ் தாக்கியுள்ளதாகவும் இதனையடுத்து கிருஜா பிரான்ஸ் பொலிசாரிடம் முறையிட்டு சுரேஸ் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் தெரியவருகின்றது. இச் சம்பவம் கடந்த வருடம் மார்ச் மாதம் அளவில் இடம்பெற்றுள்ளது.

கிருஜாவின் தாயாரின் 50 ஆவது பிறந்தநாளை மிகச் சிறப்பாக கொண்டாட வேண்டும் எனவும் அதற்காக கிருசாவின் தாயாருக்கு தெரியாது சப்ரைஸ்சாக கிளிநொச்சிக்கு செல்ல வேண்டும் எனவும் கிருசாவுக்கு ஆசை வார்த்தைகள் கூறி தாயாருக்கு அணிவிப்பதற்கு 3 பவுணில் சங்கிலியும் வாங்கி கிருசாவிடம் கொடுத்தே கிருசாவை கடந்தவாரம் இலங்கைக்கு வந்துள்ளான் சுரேஸ். கிருசாவை கிளிநொச்சிக்கு கொண்டு செல்லாது தாயின் பிறந்த நாளுக்கு வீட்டுக்குச் சென்று சந்திக்க வேண்டும் என கூறி கொழும்பு புறநகர்ப் பகுதியில் வீடு ஒன்று எடுத்து கிருசாவுடன் தங்கியுள்ளான் சுரேஸ். அன்று இரவே கிருசாந்தியை கட்டி வைத்து கொடூரமாகத் தாக்கியதுடன் அவளை கட்டி வைத்துவிட்டு அவளது 11 பவுண் பெறுமதியான தாலிக்கொடி உட்பட்ட 25 பவுண் நகைகள் மற்றும் தாய்க்கு கொடுக்க கொண்டு சென்ற சங்கிலி மற்றும் கிருசாவின் பாஸ்போட், இலங்கை அடையாள அட்டை உட்பட்ட பெறுமதி வாய்ந்த ஆவணங்கள் உட்பட்டவைகளுடன் சுரேஸ் அங்கிருந்து தப்பி கட்டுநாயக்காவிலிருந்து உடனடியாகவே பிரான்ஸ் வந்துவிட்டதாகத் தெரியவருகின்றது. அடுத்த நாள் மாலையே கிருசாவின் முனகல் சத்தம் கேட்டு வீட்டை வாடகைக்கு கொடுத்தவர்கள் கிருசாவை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்கள். இச் சம்பவம் தொடர்பாக கொழும்பில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரியவருகின்றது. இதே வேளை கிருஜா தற்போது 3 மாத கர்ப்பமாக உள்ளதாகவும் கிருசாதரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுரேஸ் செய்த இந்தச் செயல் தொடர்பாக கிருஜாவின் பிரான்ஸ் நண்பர்கள் அங்குள்ள பொலிசாருக்கும் முறைப்பாட்டை கொடுத்துள்ளதுடன் ஊடகங்களுக்கும் தகவல்கள் அனுப்பியுள்ளார்கள்.
online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job