This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, August 31, 2023

கொக்குதொடுவாய் மனித புதைகுழி விவகாரம் - சட்டத்தரணிகளுக்கு அச்சுறுத்தல் | Kokkuthuduai Human Burial Case Threat To Lawyers

 

கொக்குதொடுவாய் மனித புதைகுழி விவகாரம் - சட்டத்தரணிகளுக்கு அச்சுறுத்தல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய்மத்தி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் பங்குகொள்ளும் சட்டத்தரணிகளுக்கு புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது

இன்று(31) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இடம்பெற்ற நிலையிலேயே இந்த விடயம் நீதிமன்றத்தின் கவனத்துக்கு சட்டத்தரணிகளால் சுட்டிக்காட்டப்பட்டது

விபரங்களை சேகரித்த புலனாய்வுப்பிரிவினர்

குறிப்பாக இந்த வழக்கு விசாரணைகளுடன் தொடர்புபட்ட சட்டத்தரணிகள் கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைகுழி உள்ள பகுதிக்கு கடந்த 10.08.2023 ம் திகதி கள விஜயம் மேற்கொண்டிருந்த போது அங்கு விஜயம் செய்த சட்டத்தரணிகள் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் பல்வேறு தரப்பினரிடமும் விசாரித்ததோடு குறித்த பகுதி கிராம அலுவலரிடமும் அங்கு சென்ற சட்டத்தரணிகளின் பெயர் என்ன எங்கிருந்து வந்தார்கள் என்பது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்திருந்ததாகவும் அவர்கள் வருகை தந்த வாகன இலக்கங்கள் உள்ளிட்ட தகவல்களை வழங்கி தங்களது விவரங்களை திரட்டி இவ்வாறு புலனாய்வு பிரிவினர் தமக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாக சட்டத்தரணிகளால் மன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

கிராம அலுவலரிடமும்

குறித்த சட்டத்தரணிகள் தொடர்பாக கிராம அலுவலரிடமும் புலனாய்வு பிரிவினர் வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்ததாக கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலரும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்

நீதிமன்றின் கவனத்திற்கு

இவ்வாறான நிலையில் சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்திரன், புலனாய்வு பிரிவினர் என்பவர்கள் இரகசியமாக தகவல்களை பெற்றுக் கொள்பவர்கள் இவர்கள் வெளிப்படையாக வந்து விசாரணைகள் செய்வது என்பது அச்சுறுத்தல் என்பதை மன்றின் கவனத்துக்கு கொண்டு வந்தார்

நீதிபதி உத்தரவு

இது தொடர்பாக கொக்குளாய் காவல் நிலைய பொறுப்பதிகாரி குறித்த விடயமாக சட்டத்தரணிகளை முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யுமாறும் தாங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கையிடப்பட்டு இருப்பதன் அடிப்படையில் அதனை வைத்துக்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிபதி கொக்குளாய் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.  

நேற்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு


நேற்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு

Fuel Price In Sri Lanka Sri Lanka Sri Lanka Fuel Crisis

நேற்று நள்ளிரவு (31.08.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அதிகரித்துள்ளது.

விலை விபரங்கள்

இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 361 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 42 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 417 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு | Srilanka Fule Price Increase

இதன்படி, ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 35 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒட்டோ டீசல் 341 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

மேலும், சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 01 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு லீட்டர் சுப்பர் டீசல் 359 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் ​அதிகரிக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 231 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.

இதேவேளை, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள விலைகளுக்கு ஏற்ப லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.


 


யாழில் முன்னாள் காதலன் சப்ரைஸ் கிப் கொடுக்கவில்லையாம்!! லண்டன் மாப்பிளையும் பொம்பிளையும் மணவறையில் கும்மாம் குத்து!!

யாழில் முன்னாள் காதலன் சப்ரைஸ் கிப் கொடுக்கவில்லையாம்!! லண்டன் மாப்பிளையும் பொம்பிளையும் மணவறையில் கும்மாம் குத்து!!

யாழ்ப்பாணம் உட்பட தமிழர் பகுதிகளில் கலியாண வீடுகள் தற்போது விதம் விதமாக கொண்டாடப்படுகின்றன…. இனி வரும் காலம் உற்றார் உறவினர்கள் விளக்குப் பிடிக்க நிலாக்காயுது நேரம் நல்ல நேரம் என்ற கமலின் பாட்டை படித்தபடி முதலிரவு கொண்டாடுவதையும் வீடியோ பிடித்து ரிக்ரொக்கில் போடத் தொடங்குவார்கள். யாழில் உள்ள கலியாணமண்டபம் ஒன்றில் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன் நடந்த கலியாண வீட்டு கருமாந்திரத்தைத் தான் தற்போது உங்களுக்கு தருகின்றோம்…..

குறித்த மாப்பிளைக்கு யுவதியின் முன்னாள் காதலன் அணில் கொந்திய மாம்பழ சப்ரைஸ் கிப்ட் கொடுக்காத காரணத்தால் மாப்பிளை அடங்காத ஆனந்தத்துடன் ஆடுவதும் யுவதியும் தானும் அதற்கு ஏற்றது போல் நடிப்பதும் பார்ப்பவர்களைப் பரவசப்படுத்த வைத்துள்ளது…

பொம்பிளைக்கு 32 வயதும் மாப்பிளைக்கு 37 வயதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் குறைந்த விலையில் எரிபொருள்! அறிவிக்கப்பட்ட விலைக் கழிவு | Fuel Price Discount In Sri Lanka

இலங்கையில் குறைந்த விலையில் எரிபொருள்! அறிவிக்கப்பட்ட விலைக் கழிவு!

Fuel Price In Sri Lanka

இலங்கையில் எரிபொருள் விலைக் கழிவுடன் சினோபெக் எனர்ஜி லங்கா தனது விநியோக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நிறுவனம், கொழும்பு - மத்தேகொட பகுதியில் உள்ள அதன் முதல் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று தனது உத்தியோகபூர்வ எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்துள்ளது.

விலைக் கழிவு

அதன்படி பெட்ரோல் மற்றும் டீசலுக்கு லீற்றருக்கு 3 தலா ரூபா விலைக் கழிவுடன் தமது விநியோகத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் எரிபொருள் சந்தையில் நுழைவதற்காக சீனாவின் சினோபெக், அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் மற்றும் அமெரிக்காவின் ஆர்.எம் பார்க்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு  அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

மே மாதத்தின் பிற்பகுதியில், இலங்கை அரச பிரதிநிதிகள் மற்றும் சினோபெக் பிரதிநிதிகளுக்கு இடையில் இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் செப்டம்பர் 5 இல் ஆரம்பம்

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி செப்டம்பர் 5 ஆம் திகதி (05.09.2023) அன்று ஆரம்பிக்கப்படும் என நீதிமன்றில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்ச்சியாக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், இன்றையதினம்(31) விசேட வழக்கு இடம்பெற்றிருந்தது.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளில் அனைத்து திணைக்களங்களின் சம்மதத்துடன் எதிர்வரும் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் செப்டம்பர் 5 இல் ஆரம்பம் | Kokkuthoduvai Human Burial Ground Court Order

குறித்த வழக்கு விசாரணைகளில் முல்லைத்தீவு சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவா, யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி எஸ்.பிரணவன், சட்டத்தரணிகளான எம்.ஏ. சுமந்திரன், வி.கே.நிரஞ்சன், ரணித்தா ஞானராசா, வி.எஸ்.தனஞ்சயன், காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகத்தினுடைய சட்டத்தரணிகளான எஸ். துஷ்யந்தினி, ஜெ.தர்பரன், முல்லைத்தீவு மாவட்ட பிரதம கணக்காளர் ம.செல்வரட்ணம், மாவட்ட செயலக தொழில்நுட்ப உத்தியோகத்தர், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ம.உமாமகள், கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர், கிளிநொச்சி, முல்லைத்தீவு மின் பொறியியலாளர், கரைதுறைப்பற்று பிரதேச சபை செயலாளர் கா.சண்முகதாசன், கிளிநொச்சி முல்லைத்தீவு பிராந்திய காவல்துறை மா அதிபர் சமுத்திரஜீவ, முல்லைத்தீவு உதவி காவல்துறை அத்தியட்சகர் அசோக பெரேரா, கொக்குளாய் காவல் நிலைய பொறுப்பதிகாரி, தடயவியல் காவல்துறை பிரிவினர் உள்ளிட்ட தரப்பினர் பலரும் முன்னிலையாகியிருந்தனர். 

இந்நிலையில் அனைத்து தரப்பினருடைய ஒத்துழைப்புக்களுடன் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

Wednesday, August 30, 2023

யாழில் பல்கலை மாணவி தற்கொலை முயற்சி!!காதலனின் பெற்றோர் சாதி பார்த்தனராம்!! பொலிஸ் அதிகாரியும் உடந்தை?

 

யாழ் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த 24 வயதான பேராதனைப் பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவி தற்கொலை முயற்சி மேற்கொண்ட போது காப்பாற்றப்பட்டுள்ளார். வீட்டின் பின் புறத்தில் இருந்த மாமரம் ஒன்றில் கதிரை வைத்து கயிற்றை கட்டி தொங்கிய போது அதனைப் பார்த்த அயல் வீட்டவர்கள் விரைந்து செயற்பட்டு யுவதியைக் காப்பாற்றிள்ளனர்.

யாழ் நகர்ப்பகுதிக்கு அண்மையில் செயற்படும் வாகன சுத்திகரிப்பு நிலைய உரிமையாளரின் மகளான குறித்த யுவதி கண்டிப் பகுதியைச் சேர்ந்த அதே பீடத்தில் கற்கும் சிங்கள மாணவனைக் காதலித்துள்ளார். அந்த மாணவனுடன் சேர்ந்து சமூகவலைத்தளங்களிலும் ஜோடியாக புகைப்படங்களையும் பதிவு செய்து வந்துள்ளார். இந் நிலையில் கடந்த 20ம் திகதி யுவதி காதலித்து வந்த சிங்கள மாணவனின் பெற்றோர் யுவதியின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்கள். இருவரது திருமண விடயம் தொடர்பாக கதைக்கவே அவர்கள் வந்ததாகத் தெரியவருகின்றது. மாணவி வசதியான குடும்பப் பின்னணியைச் சேர்ந்திருந்தாலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவனின் பெற்றோருடன் யாழ்ப்பாணத்திலுள்ள பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் புலனாய்வு அதிகாரியாக கடமையாற்றும் ஒருவரும் சிநேகிதபூர்வமாக மாணவியின் வீட்டுக்கு வந்துள்ளார். இவர்கள் வீட்டுக்கு வந்து சென்ற பின்னர் மாணவியுடனான தொடர்பை மாணவன் முறித்துவிட்டார். அத்துடன் மாணவனது கட்டுப்பாட்டில் இருந்த மாணவியின் சமூகவலைத்தளங்களும் குறித்த மாணவனால் முடக்கப்பட்டுள்ளது. மாணவியின் காதலன் தொடர்பை துண்டித்த காரணத்தை மாணவி மற்றும் பெற்றோர், உறவுகள் அறிய முற்பட்ட போதே சாதிப் பாகுபாடு காரணமாக மாணவனின் பெற்றோர் யுவதியுடனான திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த விடயம் தெரியவந்துளளது. இதன் பின்னணியிலேயே மாணவி தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார்.

மாணவனின் பெற்றோருடன் யுவதியின் வீட்டுக்கு வந்த குறித்த பொலிஸ் புலனாய்வு அதிகாரி மாணவியின் தந்தையின் வேலை மற்றும் வேலை செய்யும் இடம் மற்றும் பல்வேறு அடிப்படை தகவல்களை அவர்களிடம் கதையோடு கதையாக கேட்டு அறிந்துள்ளாராம். அவரே குறித்த மாணவியின் காதல் முறிவுக்கு பிரதான காரணமாக இருக்கலாம் என யுவதியின் உறவுகள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளது.

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் திகதி தொடர்பில் புதிய தகவல்

Ministry of Education Education

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் திகதி தொடர்பில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

2022 ஆம் ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதியில் அல்லது செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சை பெறுபேறுகளை விரைவில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும், திருத்தும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இம்முறை 278,196 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 53,513 தனியார் விண்ணப்பதாரர்களும் பரீட்சைகளில் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உயர்கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு

ministry of education

உயர்தர பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பல்கலைக்கழக அனுமதி மற்றும் உயர்கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

பல தடைகளுக்கு மத்தியில் பரீட்சை பெறுபேறுகளை ஆறு மாதங்களுக்குள் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை பரீட்சைகள் திணைக்களம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

மனைவிக்கு திருமண நாள் பரிசாக ஏகே47 துப்பாக்கி! சர்ச்சையில் சிக்கிய அரசியல் தலைவர்

மனைவிக்கு திருமண நாள் பரிசாக ஏகே47 துப்பாக்கி! சர்ச்சையில் சிக்கிய அரசியல் தலைவர்

முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மனைவிக்கு ஏகே 47 துப்பாக்கியை பரிசளித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருமண நாளில் மனைவிக்கு ஏகே 47 துப்பாக்கி பரிசு

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் (டிஎம்சி) முன்னாள் தலைவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர், தனது திருமண நாளில் மனைவிக்கு ஏகே 47 துப்பாக்கியை பரிசாக அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரியாசுல் ஹக்கியின் மனைவி சபீனா யாஸ்மின் இந்த துப்பாக்கியுடன் போஸ் கொடுக்கும் வீடியோவை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோ சிறிது நேரத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது. கடும் விமர்சனம் காரணமாக இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் இருந்து ரியாசுல் நீக்கியுள்ளார்.

பாஜக மற்றும் CPM தலைவர்கள் கேள்வி 

இந்த வீடியோ மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் தாலிபான் ஆட்சி நடைபெற்று வருவதாக பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு சிபிஎம் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநிலத்தில் அமைதியும், பாதுகாப்பும் மோசமாகிவிட்டதாக மம்தா அரசு மீது கடும் விமர்சனம் வைத்துள்ளனர்.

ராணுவம் மற்றும் துணை ராணுவ நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்ட AK 47 துப்பாக்கி, முன்னாள் TMC தலைவரின் கைகளுக்கு எப்படி வந்தது என்பதை அறிய பாஜக மற்றும் CPM தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், இது போன்ற வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டதன் மூலம் ரியாசுல் என்ன மாதிரியான சமிக்ஞையை தெரிவிக்கிறார் என்று கேள்வி எழுப்பப்படுகிறது.

பொம்மை துப்பாக்கி

ஆனால் ரியாசுல், திருமண பரிசாக மனைவிக்கு 'பொம்மை துப்பாக்கி' மட்டும் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது உண்மையான துப்பாக்கி இல்லை என்றும், தன் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், வீடியோவில் வெறும் பொம்மை துப்பாக்கியுடன் காணப்பட்டதால், இந்த விஷயத்தில் தனது மனைவி மீது எந்த தவறும் இல்லை என்று கூறியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி ரியாசுல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

காதலும் கசக்கும்'- கர்ப்பிணி மனைவியை 22 கிலோமீட்டர் சுமந்து சென்ற கணவனையே விட்டு சென்ற மனைவி!! எல்லோரும் கொண்டாடிய காதலின் உண்மை கதை இதோ

 கர்ப்பிணி மனைவியை 22 கி.மீ துாரம் சுமந்து சென்று சிகிச்சை பெறவைத்து பாராட்டுப் பெற்ற கணவனை விட்டு இன்னொருவனுடன் ஓடிய சிங்கள மனைவி!!

2021 ஆம் ஆண்டு காலி ஹினிதும பிரதேசத்தில் 22 கிலோமீற்றர்கள்  கர்ப்பிணி மனைவியை சுமந்து வைத்தியசாலை சென்ற கணவனின் காதலின் உண்மையான ஆதாரம் பற்றிய கதை இது.

மனைவிக்கு குழந்தை பிறக்க இருக்கும் அந்த நேரத்தில் அன்பான கணவனாக இருந்த குமார, வெள்ளத்தின் நடுவே தன் கர்ப்பிணி மனைவியை தூக்கியப்படி மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். அவரது முயற்சிகள் சமூக ஊடகங்கள் மூலம் பிரபலமாகி பலரும் புகழ்ந்தனார்.

காதலும் கசக்கும் கர்ப்பிணி மனைவியை 22 கிலோமீட்டர் சுமந்து சென்ற கணவனையே விட்டு சென்ற மனைவி!! எல்லோரும் கொண்டாடிய காதலின் உண்மை கதை இதோ

எஸ். எஸ். குமார இலங்கையின் சமூக ஊடகங்களில் அக்காலத்தின் மிகவும் அன்பான கணவர் என்று எல்லோராலும் பாராட்டப்பட்டார்.

உள்ளூர் சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவ கவனிப்பின் அவசியத்தை அவர்களுக்கு அறிவித்தார், ஆனால் வெள்ளம் காரணமாக ஒரு ஆம்புலன்ஸ் கூட அவர்களின் இடத்திற்குச் செல்ல முடியவில்லை.

இந்நிலையில் 7 மாத கர்ப்பிணியான சுரேஷ் குமாரின் மனைவி திடீரென சுகயீனமடைந்துள்ளார். வயிற்றிலுள்ள குழந்தையின் எவ்வித அசைவுகளும் இல்லை என மனைவி குறிப்பிட்டுள்ளார்.

குடும்ப சுகாதார அதிகாரியை தொடர்பு கொண்ட போது 5 மணித்தியாலங்களுக்குள் மனைவியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு குறிப்பிட்டுள்ளனர். முழு பிரதேசமும் நீரில் மூழ்கியுள்ளதுடன், பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் மனைவியை வைத்தியசாலைக்கு தூக்கி செல்ல சுரேஷ் தீர்மானித்தார். அதற்கமைய வைத்தியசாலைக்கு மனைவியை தூக்கி சென்று அனுமதித்துள்ளார்.

மனைவியும் குழந்தையும் ஆபத்தின்றி உயிர் தப்பியதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செய்தியை தொலைக்காட்சி செய்திகளில் பார்த்த மக்கள் சுரேஷ் குமார் வீட்டிற்கு சென்று தொடர்ந்து உதவி செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

காதலும் கசக்கும் - கர்ப்பிணி மனைவியை 22 கிலோமீட்டர் சுமந்து சென்ற கணவனையே விட்டு சென்ற மனைவி!! எல்லோரும் கொண்டாடிய காதலின் உண்மை கதை இதோ

ரங்கனாவின் ஆண்டுவிழா நிகழ்ச்சிக்கு தம்பதியர் அழைத்து வரப்பட்டு அங்கு பரிசுகள் வழங்கினர். அதன்பின் மனைவிக்கு மருத்துவ சிகிச்சை பெற்று பெண் குழந்தை பிறந்தது அதன் பிறகு குடும்பம் பற்றி யாரும் பேசவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, யூடியூப் சேனல் ஒன்று இந்த சம்பவத்தை பின்தொடர்ந்தது.

காதலும் கசக்கும் என்ற வகையில் குழந்தையின் தாய் குழந்தை பிறந்து 9 மாதங்களில் குழந்தையையும் தந்தையையும் விட்டுவிட்டு வேறொரு நபரிடம் சென்று வாழ்ந்து வருகின்றர்.

கண்ணீருடன் தன் கதையைச் சொல்லி இரண்டு வயதுக் குழந்தையைப் பராமரிப்பதில் உள்ள சிரமத்தையும் விபரிக்கிறார் குமார

இதன் மூலம், மனைவிக்காக அதிகம் அர்ப்பணித்த கணவனுக்கு அநீதி இழைக்கப்பட்டது உறுதியானது.

அநியாயம் செய்த மனைவியை திட்டும் வகையில் இந்த கதை மீண்டும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இருப்பினும், இந்த நிகழ்வு குறித்த மூன்றாம் தரப்பு கருத்தும் அதே நேரத்தில் பரிமாறப்படுகிறது.

அங்கே ஒரு வித்தியாசமான கதை சொல்லப்படுகிறது.

இவர்களுக்கு இந்த நபர் சேவைகளை வழங்கியுள்ளார் என்றும் முகநூலில் ஒருவர் கூறிய கருத்துடன் கதை வேறு திசையில் செல்கிறது. அது உண்மையா பொய்யா என்பது தெரியவில்லை.

லண்டனில் பட்டப்பகலில் சிறுமிக்கு நேரவிருந்த அசம்பாவிதம்: புகைப்படம் வெளியிட்ட அதிகாரிகள் | Broad Daylight Man Tried To Snatch Schoolgirl

 

லண்டனில் பட்டப்பகலில் சிறுமிக்கு நேரவிருந்த அசம்பாவிதம்: புகைப்படம் வெளியிட்ட அதிகாரிகள்

லண்டனில் பட்டப்பகலில் 11 வயது பாடசாலை சிறுமியைக் கடத்த முயன்ற நபர் தொடர்பில் பொதுமக்களின் உதவியை பொலிசார் நாடியுள்ளனர்.

இரு ஆண்களிடம் விசாரணை

கண்காணிப்பு கமெரா பதிவுகளை வெளியிட்டுள்ள பொலிசார், இந்த விவகாரம் தொடர்பில் இரு ஆண்களிடம் விசாரணை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Broad Daylight Man Tried To Snatch Schoolgirl Image: Met Police

சம்பவத்தின் போது வழிபோக்கர் ஒருவர் தலையீட்டால் அந்த சிறுமி தப்பியதாகவே பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது. தென்கிழக்கு லண்டனின் ப்ரோம்லி பகுதியில் ஜூன் 24ம் திகதி பகல் சுமார் 11.45 மணியளவில் தொடர்புடைய சம்பவம் நடந்துள்ளது.

நடந்து சென்ற 11 வயது சிறுமியை நபர் ஒருவர் அணுகியுள்ளார். அவருடன் அழைத்துச் செல்ல அந்த சிறுமியை அந்த நபர் கட்டாயப்படுத்தியதாகவும் நம்பப்படுகிறது. ஆனால் ஒரு வழிப்போக்கர் குறித்த சிறுமி தயக்கத்துடன் அசௌகரியமாக இருப்பதைக் கண்டு, சமயோசிதமாக செயல்பட்டு அந்த சிறுமியை அருகில் உள்ள கடைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றியுள்ளார்.

தற்போது இரண்டு ஆண்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள பொலிசார், அந்த விவகாரம் தொடர்பில் இவர்களை விசாரிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இவர்களை அடையாளம் காணும் பொதுமக்கள் உடனடியாக அதிகாரிகளை நாட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இவர்கள் பெயர் அல்லது இவர்கள் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். 

லண்டனில் தமிழ் குடும்பத்தின் வீட்டில் நடந்த பெரும் கொள்ளை! கொள்ளையர்கள் வெளியிட்ட திகில் காணொளி

லண்டனில் தமிழ் குடும்பத்தின் வீட்டில் நடந்த பெரும் கொள்ளை! கொள்ளையர்கள் வெளியிட்ட திகில் காணொளி

London Crime World

லண்டனில் தமிழ் குடும்பத்தின் வீட்டில் பெரும் கொள்ளை சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த வீட்டில் கொள்ளையடித்த கொள்ளையர்கள், தாம் கொள்ளையடிக்கும் காட்சிகளை காணொளியாக பதிவு செய்து வெளியிட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

கொள்ளையர்கள், நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்கும் குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.

இருப்பினும் அந்த காணொளி தொடர்பிலோ கொள்ளை சம்பவம் தொடர்பிலோ மேலதிகமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

அந்த காணொளியில் பெருந்தொகை பணம், பெருமளவிலான நகை என்பன கெள்ளையடிக்கப்படுவது பதிவாகியுள்ளது.

பணம் மற்றும் நகைகளை பாதுகாப்பாக வைத்தும் அதனை சாதாரணமாக கொள்ளையர்கள் கொள்ளையடிக்கின்றனர்.

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையில் இவ்வாறான கொள்ளை சம்பவங்கள் அதிகரிக்கின்றன.

எனவே பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணத்திற்குப் பின்னரும் வாழ்க்கை இருக்கிறது: நிபுணர் கூறுகிறார்

 

அமெரிக்காவில் உள்ள கென்டக்கி மாகாணத்தைச் சேர்ந்த புற்றுநோயியல் நிபுணர் ஜெஃப்ரி லாங், நோயாளிகளின் சுமார் 5000 மரண அனுபவங்களை ஆய்வு செய்துள்ளார். அவர் மரணத்திற்குப் பிறகு வாழ்க்கை இருக்கிறது, அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளார் .

ஜெஃப்ரி லாங் ஒரு புற்றுநோயியல் நிபுணரும், நியர்-டெத் எக்ஸ்பீரியன்ஸ் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் நிறுவனரும் ஆவார். ஜெஃப்ரி லாங் தனது பணியின் போது நடத்தப்பட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்ட ஆதாரங்களை ஆராய்ந்த பிறகு மரணத்திற்குப் பிறகு வாழ்க்கை இருக்கிறது என்று உறுதியாகக் கூறியுள்ளார்.

ஜெஃப்ரி லாங் கூறுகையில், மரணத்திற்குபின் ஆன்மா உடலை விட்டுப் பிரிந்து அலைந்து திரிந்தது , பின்னர் ஆன்மா வேறொரு உலகத்தில் நுழைந்து ஒரு சுரங்கப்பாதை வழியாக நடந்து சென்றது, அதன் முடிவில் சுரங்கப்பாதையில் ஒரு பிரகாசமான ஒளி இருந்தது. நோயாளிகள் இறந்த தங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து வாழ்த்துகளைப் பெற்றதாகவும், அந்த நேரத்தில் அங்கே அவர்களின் உண்மையான வீடு இருப்பதாக அவர்கள் உணர்ந்ததாகவும் மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தாலியை நடுங்க வைக்கும் நீல நண்டு… ! அழிப்பதற்கு 2.9 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கீடு

இத்தாலி தனது சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு அழிவை ஏற்படுத்தும் ஆக்கிரமிப்பு நண்டு இனத்தை சமாளிக்க அவசர பட்ஜெட் என்று 2.9 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கியுள்ளது.

மேற்கு அட்லாண்டிக்கில் இருந்து தோன்றிய `நீல நண்டு’ இத்தாலியில் பல இடங்களில் பரவி உள்ளுர் மட்டி மீன்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களை வேட்டையாடுகிறது. ஆரம்ப காலத்தில் ஒன்று அல்லது இரண்டு நீல நண்டுகளை மட்டுமே இத்தாலியர்கள் பார்த்து வந்தனர். ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. நீல நண்டுகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவிட்டது.

Blue crab |இத்தாலி நீல நண்டு

இதனால் நத்தைகள் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டதாக இத்தாலியர்கள் வேதனையுடன் தெரவித்துள்ளனர்.

சரக்குக் கப்பல்கள் மூலம் இந்த வகை நீல நண்டுகள் இத்தாலிக்கு வந்திருக்கலாம் என்று கூறுகின்றனர். நீல நண்டுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணம் என்ன என்பதை அவர்களால் அறிந்துகொள்ள முடியவில்லை.

வடக்கு இத்தாலியில் உள்ள போ நதிக்கு அருகில் இவற்றின் பரவல் அதிகமாக உள்ளது. கடல் உயிரியலாளர்களின் தரவுகளின்படி, போ நதிப் படுகையில் உள்ள 90 சதவிகித மட்டிகளை நீல நண்டுகள் உண்டு அழித்துவிட்டன.

இதன் காரணமாக வருங்காலத்தில் மட்டி உற்பத்தி துறை பெரும் நெருக்கடியை சந்திக்கும் என அச்சப்படுகின்றனர். இதனால் இத்தாலியின் பல பகுதிகளில் இருந்து தினமும் 12 தொன் வரை நண்டுகளை அழித்து வருகின்றனர். இந்த நிலை மாறாவிட்டால், இத்தாலியின் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரத் துறைகள் இரண்டையும் கடுமையாக பாதிக்கும்.

இத்தாலி நாட்டு விவசாய அமைச்சர் பிரான்செஸ்கோ லோலோபிரிகிடா, வடக்கு இத்தாலியில் உள்ள போ நதி பள்ளத்தாக்கின் டெல்டாவை பார்வையிட்டார். இது மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும். மேலும், இது குறித்து ஒரு கூட்டத்தில் பேசிய அவர் ஆக்கிரமிப்பு நண்டுகளை சமாளிக்க அவசர நிதியை அறிவித்ததோடு, டெல்டா பகுதியில் உள்ள மீனவர்கள் தங்களால் இயன்ற நண்டுகளைப் பிடித்து அழிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

பொதுவாக இத்தாலியர்கள் நத்தைகளை அதிகமாக விரும்பி உண்ணக்கூடியவர்கள். நீல நண்டுகள் அப்பகுதியில் உள்ள நத்தைகளில் 90% வரை உண்கின்றன என்று கடல் உயிரியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால்தான் நீல நண்டுகள் பெருகுவதைத் தடுக்க இத்தாலி அரசு முடிவு செய்துள்ளது.

வெளிநாடு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் | Eliminating Yellow Fever Sri Lanka Economic Crisis

 

வெளிநாடு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்கள் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டிய மஞ்சள் காமாலை தடுப்பூசி தற்போது நாட்டில் இல்லை என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேச சுகாதார விதிகளுக்கமைய, இந்நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது தடுப்பூசியைப் பெற வேண்டும். ஆனால் நாட்டில் தடுப்பூசி இல்லாததால், மஞ்சள் காமாலை பரவும் நாடுகளுக்குச் செல்வதன் மூலம் நோய் தாக்கும் அபாயம் அதிகமாக உள்ளது.

உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளுக்கமைய, மஞ்சள் காமாலையை தடுப்பது இன்றியமையாத பொறுப்பாகும், மேலும் நிலைமையைக் கட்டுப்படுத்த, eliminating yellow fever epidemic eye 2026 எனப்படும் சர்வதேச திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மஞ்சள் காமாலை

உலக சுகாதார அமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளும் அந்த திட்டத்திற்கமைய செயல்பட வேண்டும்.

பல துறைகளில் பலவீனங்கள் காணப்படுவதனால் இலங்கைக்கு சர்வதேச ரீதியில் பெரும் அவப்பெயர் ஏற்படலாம் எனவும் நிபுணர் கலாநிதி சமல் சஞ்சீவ குறிப்பிட்டுள்ளார்.

Tuesday, August 29, 2023

இலங்கை வந்த விமானத்தில் பெண் ஒருவரின் மோசமான செயல் | Sri Lanka To Qatar Flight Woman Arrested Today

இலங்கை வந்த விமானத்தில் பெண் ஒருவரின் மோசமான செயல்

கட்டாரில் இருந்து வந்த விமானப் பயணி ஒருவரின் பயணப் பொதிகளை திருடிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 5 நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்ட வீட்டு பணிப்பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

வீட்டுப் பணிப்பெண்

அவர் கட்டாரில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைக்குச் சென்ற நிலையில் அந்த நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டார்.

பாதிக்கப்பட்ட குறித்த பயணியும் இந்த பெண்ணும் ஒரே விமானத்தில் இலங்கை வந்துள்ளனர்.

விமானத்திலேயே குறித்த பயணியின் பயணப் பொதிகளை அந்த திருடிச் சென்றுள்ளார்.

பாதுகாப்பு கமரா

பாதுகாப்பு கமராக்கள் சோதனை செய்யப்பட்டதையடுத்து சந்தேகநபர் சூட்கேஸ்சுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலும் சந்தேகநபர் 5 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான தங்க நகைகளை திருடி அடகு வைத்திருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

பிஞ்சு குழந்தையின் கழுத்தில் கத்திவைத்து நகை, பணம் கொள்ளை – யாழை அதிர வைத்த சம்பவம்

பிஞ்சு குழந்தையின் கழுத்தில் கத்திவைத்து நகை, பணம் கொள்ளை – யாழை அதிர வைத்த சம்பவம்

சண்டிலிப்பாய், மாகியப்பிட்டியில் உள்ள வீடொன்றில் புகுந்த கொள்ளையர்கள் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி நகைகள், பணம் என்பவற்றையும் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று (ஓகஸ்ட் 29) அதிகாலை நடந்துள்ளது. கொள்ளையிடப்பட்டுள்ள வீடு முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவருடையது. வீட்டில் அவரும் மனைவியும் இருந்த குழந்தைகளுமே சம்பவநேரத்தில் இருந்துள்ளனர்.

குழந்தையின் கழுத்தில் கத்தி
வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் முகமூடி அணிந்து முகங்களை மறைத்திருந்திருந்தனர்.

பிறந்து சிலமாதங்களேயான குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியே நகை, பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சிறு குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தி கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அண்மைக்காலமாக வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையிடும் சம்பவங்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்துள்ளன. அவ்வாறான கொள்ளைகளுடன் தொடர்புடைய நால்வர் நேற்று யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களிடம் இருந்து நகைகளும் மீட்கப்பட்டிருந்தன.

சுவிசிலிருந்து யாழ் வந்த விதுமன் மாயம்..!

 

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி காவல்துறை பிரிவில், சுவிஸ் நாட்டிலிருந்து வந்த இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

கைதடி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஒருவரே காணாமல் போயுள்ளதாகக் காவல் நிலையத்தில் குடும்பத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுவிஸ் நாட்டிலிருந்து தன்னுடைய சொந்த இடமான கைதடி பகுதிக்கு வருகை தந்த இளைஞனே நேற்று முன்தினம் இருந்து காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகராசா விதுமன் என்ற இளைஞரே காணாமல் போயுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கனடாவிலிருந்து யாழ் வந்த 63 வயது தவனேஸ்வரனின் குஞ்சுமணிக்கு 13 வயதுச் சிறுமியின் தாயார் சுடுநீர் அபிசேகம்!! (வீடியோ)

 


யாழ் நல்லுார்ப் பகுதியில் 63 வயதான கனடாத் தமிழ் இளைஞர் சிவலிங்கம் தவனேஸ்வரன் ஆண் உறுப்பு உட்பட்ட பகுதிகள் அவிந்த நிலையில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபின் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு சென்றுள்ளதாகத் தெரியவருகின்றது.

நல்லுார்ப் பகுதியை சொந்த இடமாகக் கொண்ட தவனேஸ்வரனும் அவரது மனைவியும் நீண்ட காலமாக கனடாவில் வசித்து வருகின்றார்கள். நல்லுார் திருவிழாவிற்காக கடந்த வாரம் அவர்கள் கனடாவிலிருந்து வந்துள்ளனர். அவரது வீட்டுக்கு அருகில் பெண் அரச ஊழியரின் குடும்பம் வாடகைக்கு குடியிருக்கின்றது. அந்த வீடு தவனேஸ்வரனின் சகோதரியின் வீடு.சகோதரியும் கனடாவில் வசிக்கின்றார். சகோதரியுடன் காணிப் பிணக்கு காரணமாக இரு வீடுகளுக்குமிடையில் மதில் கட்டாது மேற்பகுதி தகரத்தால் கட்டப்பட்ட நிலையில் கீழ் பகுதி முள்ளுக்கம்பிகளால் வரியப்பட்டுள்ளது. இரு வீட்டுக்கும் கிணறு பங்குக் கிணறாக இருந்தாலும் தவனேஸ்வரன் வீடு குளியலறை வசதியுடன் நவீனமுறையில் மீளமைத்து கட்டப்பட்ட வீடாகும்.

ஆனால் குறித்த பெண் அரச ஊழியர் குடியிருக்கும் சகோதரியின் வீடு புனரமைக்க முடியாதவாறு தவனேஸ்வரன் முட்டுக்கட்டை கொடுத்துக் கொண்டிருந்துள்ளார். தவனேஸ்வரன் தனது வீட்டுக்கு வந்த பின் தங்கையின் வீட்டிலிருந்த பெண் அரச ஊழியரின் மீது மையல் கொள்ளத் தொடங்கியுள்ளார். வீட்டில் குளியலறை இருந்தாலும் கிணற்றில் குளிப்பதை வழங்கப்படுத்தியுள்ளார். அதுவும் அந்த பெண் ஊழியர் குளிக்கும் நேரங்களில் தானும் வந்து மற்றப்பக்கத்தில் நின்று ஜட்டியுடன் குளித்துள்ளர். பெண் ஊழியரின் கணவர் வன்னியிலுள்ள வங்கி ஒன்றின் ஊழியராவர். கடந்த வெள்ளிக்கிழமை கணவர் வந்த போது தவனேஸ்வரனின் திருவிளையாடல்களை பெண் ஊழியர் கூறியுள்ளார். இதனையடுத்து தவனேஸ்வரனை அழைத்து கணவர் எச்சரித்த போது அங்கு வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அயலவர்கள் இருவரையும் சண்டையிடாது தடுத்து அனுப்பியுள்ளார்கள். தவனேஸ்வரனின் 59 வயதான மனைவி யோகமலர் தனது கணவர் வயோதிபர் என கூறி அவரை தவறான பார்வையில் பார்க்க வேண்டாம் எனவும் அவர் யாழ்ப்பாணம் வந்தது கிணற்றில் குளிக்கும் ஆசையில்தான் எனவும், விரும்பினால் கிணற்றை பாதியாக அடைத்து மறைவாக வைத்து குளிக்குமாறும் அயல் வீட்டாருக்கு கூறி கணவருக்கு சார்பாக கதைத்தாராம்.

இவ்வாறான நிலையில் கடந்த திங்கட்கிழமை பெண் அரச ஊழியரின் கணவன் வன்னிக்கு வேலைக்கு சென்ற பின் தவனேஸ்வரன் வேலிக்கு அருகில் கதிரையை போட்டு சண்டிக்கட்டுடன் சாரம் அணிந்து உள்ளே ஜட்டி போடாது குஞ்சுமணியை பக்கத்துவீட்டு பெண் அரச ஊழியர் பார்க்கும் படியான கோணத்தில் வைத்தவாறு ஒரு கையில் கண்ணாடியை வைத்துக் கொண்டு முகச்சவரம் செய்துள்ளார். இவரது இந்த திருவிளையாடலை பார்த்த பெண் ஊழியரின் 13 வயதான சிறுமி இது தொடர்பாக தாயாருக்கு கூறி வெக்கப்பட்டுள்ளார். இதனால் கடும் கோபமுற்ற குறித்த பெண் அரச ஊழியர் அந்த காட்சியை வீடியோவாகப் பிடித்துள்ளார். ( வீடியோ ஆதாரம் உள்ளது) அதன் பின்னர் அந்த வீடியோ சில தரப்புக்களுக்கு குறித்த பெண் ஊழியரால் அனுப்பபட்டது. அந்த வீடியோவில் தவனேஸ்வரன் தனது ஆண்மையை எழுச்சி நிலையிலேயே வைத்திருந்ததும் அப்பட்டமாகத் தெரிந்தது. இதனையடுத்து குறித்த பெண் ஊழியருக்கு சில ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அதற்கமைய தவனேஸ்வரன் நேற்றும் அவ்வாறு தனது ஆண்மையை எழுச்சிநிலையில் வைத்திருந்தவாறு முகச்சவரம் செய்துள்ளார். பெண் ஊழியருக்கு வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைவாக தனது காணிக்குள் வேலிக்கு மிக அருகில் இருந்தவாறு முகச்சவரம் செய்து கொண்டிருந்த தவனேஸ்வரனின் குஞ்சுமணிப் பகுதிக்கு நன்றாக கொதிக்க வைத்த சுடுநீர் அபிசேகம் குறித்த பெண் ஊழியரால் செய்யப்பட்டது.

தவனேஸ்வரன் குளறத் தொடங்கவே தவனேஸ்வரனின் மனைவி உட்பட அயலவர்களும் அங்கு சென்றுள்ளனர், அதன் பின்னர் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தவனேஸ்வரன் சாதாரண நிலையில் முகச்சவரம் செய்யாது ஆண்மை எழுச்சியுடன் அங்கு இருந்த காட்சிகள் குறித்த பெண் ஊழியரால் அயலவர்களுக்கு வீடியோ ஆதாரங்களுடன் காட்டப்பட்டது. இதனையடுத்து பொலிசாருக்கு முறையிடவும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவும் ஆயத்தமான தவனேஸ்வரனின் மனைவி உடனடியாக யாழில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்த பின் இன்று தவனேஸ்வரனை அங்கிருந்து வெளியேறி கொழும்புக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளதாகத் தெரியவருகின்றது.

தவனேஸ்வரன் தனது காணிக்குள் நின்று தொடர்ச்சியாக குஞ்சுமணி எழுச்சியுடன் செய்த திருவிளையாடல்கள் அனைத்தும் எம்மிடம் வீடியோவாக உள்ளது. அத்துடன் அவரது 60வது பிறந்ததின புகைப்படங்கள் அவரது பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுடன் கூடி செய்த நிகழ்வுகள் அனைத்தும் நாம் பெற்றுள்ளோம். இனிவரும் காலம் குறித்த பெண் அலுவலருக்கு பண பலத்தாலோ அல்லது வேறு ஏதாவது செயற்பாட்டாலோ அச்சுறுத்தல்கள் ஏற்படுத்தினால் அவற்றை விபரமாக இங்கு பிரசுரிப்போம்.

யாழில் வாள்கள், அடியாட்களுடன் சென்று தனது மனைவியைக் கடத்திச் சென்ற கணவன்!! அடங்காத ஆசையா?

 

யாழில் வாள்கள், அடியாட்களுடன் சென்று தனது மனைவியைக் கடத்திச் சென்ற கணவன்!! அடங்காத ஆசையா?

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு குடத்தனை கிழக்கு மாளிகைத்திடல் பகுதியில் கணவனால் மனைவி கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று இன்று (29) காலை இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

கணவனும் மனைவியும் சில மாதங்களாக பிரிந்து வாழ்த்து வருவதாகவும் இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் பருத்தித்துறை பொலிசாரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் கணவன் மற்றும் மனைவி ஆகியோர் அவர்களது தாயார் வீடுகளில் வசித்துவந்துள்ளனர். இந் நிலையில் இன்றையதினம் திடீரென கணவரும் அவரது சகாக்கள் சகிதம் வாள் கொண்டு சென்று வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி தனது மனைவியை அவளது விருப்பமின்றி கார் ஒன்றில் ஏற்றிச் சென்றுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச் சம்பவம் அப்பகுதியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் | Dollar Rate Banks Today Exchange Rate

 

டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Commercial Bank Exchange Rate People's Bank

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினமும் (29) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு நிலையாக உள்ளது.

அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதிகள் முறையே 315.56 ரூபாய் மற்றும் 330.38 ரூபாய் ஆக மாறாமலுள்ளது.

சம்பத் வங்கியிலும்

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 314.73 ரூபாய் முதல் 315.70 ரூபாயாக அதிகரித்துள்ளதுடன், விற்பனைப் பெறுமதி 328 ரூபாயாக மாறாமலுள்ளது.

சம்பத் வங்கியிலும், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதிகள் முறையே 317 ரூபாய் மற்றும் 328 ரூபாய் ஆக மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Monday, August 28, 2023

தமிழர் பகுதியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணப்பெண் செய்த மோசமான செயல் | Tamil Wedding Celebration In Sri Lanka

 

தமிழர் பகுதியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணப்பெண் செய்த மோசமான செயல்

திருகோணமலையில் தனது மகனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் 32 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்கப் பொருட்களை திருடியதாக ஆசிரியை ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் திருகோணமலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த ஆண்டு மார்ச் மற்றும் ஒகஸ்ட் ஆகிய ஐந்து மாதங்களில் இந்த திருட்டு நடந்துள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

திருட்டுச் சம்பவம்

திருகோணமலை மாணிக்கவாசகர் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றிலேயே திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Tamil Wedding Celebration In Sri Lanka

தனது மகனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தற்போது வேறு திருமணம் செய்துள்ளதாக 60 வயதுடைய ஆசிரியர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலில் திருகோணமலை பொலிஸில் நிலையத்தில் அவர் முறைப்பாடு செய்திருந்தார். நீதி கிடைக்கவில்லை என தெரிவித்து திருகோணமலை பிரதிப் பொலிஸ் மா அதிபர் லயனல் குணதிலக்கவை ஆசிரியர் சந்தித்துள்ளார்.

தங்க நகை

இதனையடுத்து, இது தொடர்பான விசாரணைகளை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.

சந்தேகநபர் கிள்ளிவெட்டி பிரதேசத்தை சேர்ந்தவர். இவரது தந்தை ஒரு தொழிலதிபர் என்று கூறப்படுகிறது.

திருடப்பட்ட தங்க நகைககளை திருப்பிக் கொடுப்பதன் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க தயாராகி வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழில் ஊசி மூலம் ஹெரோயின் ஏற்றியவர் கிருமித்தொற்றுக்குள்ளாகி மரணம் ஒருவர் ஆபத்தான நிலையில்.


யாழில் ஊசி மூலம் ஹெரோயின் ஏற்றியவர் கிருமித்தொற்றுக்குள்ளாகி மரணம் ஒருவர் ஆபத்தான நிலையில்.

யாழில் ஊசி மூலம் ஹெரோயின் போதை பொருளை பாவித்து வந்த இளைஞர் ஒருவர் இருதயத்தில் கிருமித் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது நீண்ட காலமாக ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நீண்ட காலமாக  ஹரோயின் உயிர்கொல்லிப் போதைப் பொருளை ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் ஊசி மூலம் நோக்கிருமி உடலில் தொற்றுக் கொள்ளாக்கிய நிலையில் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் கடும் காய்ச்சல் காரணமாக யாழ்  போதனா  வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரிடம் பெறப்பட்ட இரத்த மாதிரிகளின் அடிப்படையிலும் அவரிடம் வைத்தியர்களால் வினாவப்பட்ட போது குறித்த நபர் உயிர் கொல்லி ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையான விடயம் தெரிய வந்தது.

 இந்நிலையில் குறித்த நபரை மேலதிக வைத்தியப் பரிசோதனைகளுக்கு உட்படுத்திய நிலையில் கிருமி தோற்று ஆதிகளவில் இதயத்தை தாக்கிய நிலையில் அவரைக் காப்பாற்றுவது கடினம் என வைத்தியர்கள் தெரிவித்த நிலையில் தொடர்ந்து சிகிச்சைகள் வழங்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி யாழ் போதனா வைத்தியசாலை  நோயாளர் விடுதியில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் மேலும் ஒருவர் ஊசி மூலம் உயிர்கொல்லி ஹெரோயின் போதை பொருளை பாவித்த நிலையில் உடலில் அதிகளவு கிருமித் தொற்று ஏற்பட்ட  நிலையில் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக ஊசி மூலம் ஹெரோயின் போதை பொருளை ஏற்றிய சுமார் 8க்கு  மேற்பட்ட இள வயதினர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் இளம் பெண் பொலிஸ் மீது கட்டாயப்படுத்தி தகாத உறவு!! இன்ஸ்பெட்டருக்கு நடந்த கதி!!

 

யாழில் இளம் பெண் பொலிஸ் மீது கட்டாயப்படுத்தி தகாத உறவு!! இன்ஸ்பெட்டருக்கு நடந்த கதி!!

பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இளம்பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் பரிசோதகர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பலாலி பொலிஸ் பிரிவில் பணியாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரால் அவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.

அவர் சனிக்கிழமை (26) துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் துஷ்பிரயோகம் குறித்து குறிப்பேட்டில் ஒரு குறிப்பை வைத்திருந்ததாக பொலிஸ் தகவல்களில் தெரியவந்துள்ளது.

இதன்படி உயர் அதிகாரிகள் இந்த அதிகாரி மீது விசேட கவனம் செலுத்தி காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

“லட்சியம் நிச்சயம் வெல்லும் ” தடைகளை உடைத்தெறிந்த இலங்கை அசானி !

 

“லட்சியம் நிச்சயம் வெல்லும் ” தடைகளை உடைத்தெறிந்த இலங்கை அசானி !

இலங்கை சிறுமி அசானி தடைகள் தாண்டி மீண்டும் சரிகமப மேடையில் பாடியுள்ளார்.

ஆட்டோகிராப் திரைப்படத்தில் இடம்பெற்ற “ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே ” என்ற பாடலை பாடும் போது தடுமாற்றத்தில் அசானி பாதியில் நிறுத்தி விடுகின்றார்.

இது குறித்த ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில், தடைகளை கடந்து அனைவரது ஆதரவுகளுடனும் அசானி மீண்டும் பாடினார்.

இது குறித்த காணொளி வைரலாகி அசானிக்கு ஆதரவு குவிந்து வருகின்றது.

இதேவேளை, அவர் போட்டியாளராக நிகழ்ச்சியில் பங்கு கொள்ள வில்லை என்பதால் எதிர்வரும் வாரங்களில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வரா என்பது குறித்த தகவல் கிடைக்கப்பெற வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோலாகலமாக நடந்த பிக்பாஸ் புகழ் இலங்கை பிரபலம் ஜனனியின் பிறந்தநாள் கொண்டாட்டம் !


கோலாகலமாக நடந்த பிக்பாஸ் புகழ் இலங்கை பிரபலம் ஜனனியின் பிறந்தநாள் கொண்டாட்டம் !

பிக்பாஸ் விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பு தொடர்ந்து 6 சீசன்கள் வரை ஒளிபரப்பாகி முடிந்துவிட்டது.

இடையில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகி வந்தது. சிம்புவை அந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக தொகுத்து வழங்கி வந்தார்.

கடந்த சில நாட்களாக பிக்பாஸ் 7வது சீசன் குறித்த புரொமோக்கள் வெளியாகி வருகின்றன, இந்த முறை ஒரு வீடு இல்லையாம், இரண்டு வீடு உள்ளதாம்.


அந்த புதிய புரொமோ சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடம் பிரபலமானவர் தான் ஜனனி. இவர் பிக்பாஸ் மூலம் நல்ல ரீச் பெற்றார், இப்போது விஜய்யின் லியோ படத்தில் நடித்துள்ளார்க என்கின்றனர்.

ஆனால் இதுவரை படத்தில் இருந்து ஒரு புகைப்படம் கூட வெளியாகவில்லை.

இந்த நிலையில் பிக்பாஸ் புகழ் ஜனனியின் பிறந்தநாள் கொண்டாட்டம் கோலாகலமாக நடந்துள்ளது. அந்த புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

பிரித்தானியாவில் நெட்வொர்க் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள விமான சேவை: ஆயிரக்கணக்கான விமானங்கள் பாதிப்பு | Airline Services Hit Network Problems In Uk


பிரித்தானியாவில் நெட்வொர்க் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள விமான சேவை: ஆயிரக்கணக்கான விமானங்கள் பாதிப்பு

பிரித்தானிய வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு சேவைகள் செயலிழந்ததால், ஆயிரக்கணக்கான விமானங்கள் தாமதமாகும் நிலை உருவாகியுள்ளது.

நெட்வொர்க் பிரச்சினை

பிரித்தானியா முழுவதும் வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்கள் தொழில் நுட்பக் கோளாறு ஒன்றால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால், பிரித்தானியாவுக்கு வெளியில் இருந்து பிரித்தானியாவுக்கு வரும் பயணிகளின் விமானங்கள் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவிலிருந்து புறப்படும் பயணிகள், விமான நிலையம் புறப்படும் முன் தங்கள் விமானம் புறப்படுவது தொடர்பான தகவல்களை இணையதளத்தில் பார்த்து உறுதிசெய்துகொண்டு பின் புறப்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

Airline Services Hit Network Problems In Uk

பிரச்சினை குறித்து வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பு கூறுவதென்ன?

தேசிய வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பான NATS வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பாதுகாப்பு கருதி, நாங்கள் விமான போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளோம்.

பொறியாளர்கள் அந்த கோளாறைக் கண்டுபிடித்து சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்கள். இதனால் ஏற்பட இருக்கும் அசௌகரியத்துக்கு வருந்துகிறோம் என கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்த பிரச்சினையை சரி செய்ய எவ்வளவு நேரமாகும், எதனால் பிரச்சினை ஏற்பட்டது என்பது குறித்து அந்த அறிக்கையில் எதுவும் கூறப்படவில்லை.

பிரான்ஸில் அரசு நடத்தும் பள்ளிகளில் இஸ்லாமிய பெண்கள் “அபாயா” அணிய தடை



பிரான்ஸ் அரசு நடத்தும் பள்ளிகளில் இஸ்லாமிய பெண்கள் அணியும் தளர்வான, முழு நீள அங்கியான அபாயா (பர்தா) எனப்படும் ஆடையை அணிவதை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ், 19 ஆம் நூற்றாண்டு சட்டங்கள் பொதுக் கல்வியில் இருந்து பாரம்பரிய கத்தோலிக்க செல்வாக்கை நீக்கியதில் இருந்து அரசு பள்ளிகளில் மத அடையாளங்களுக்கு கடுமையான தடையை அமுல்படுத்தியது. மேலும், வளர்ந்து வரும் முஸ்லீம் சிறுபான்மையினரைக் கையாள்வதற்கான வழிகாட்டல்களை புதுப்பிக்கவும் போராடியது.

2004ஆம் ஆண்டில், பள்ளிகளில் முக்காடு அணிவதைத் தடைசெய்தது மற்றும் 2010ஆம் ஆண்டில் பொது இடங்களில் முழு முகத்தை மூடுவதற்குத் தடை விதித்தது. இந்த தடை உத்தரவுகள் அங்கு வசித்து வரும் ஐந்து மில்லியன் வலிமையான இஸ்லாமிய சமூகத்தில் சிலரைக் கோபப்படுத்தியது. மதச்சார்பின்மையைப் பாதுகாப்பது என்பது பிரான்சில் ஒரு பேரணியாக உள்ளது.

இந்நிலையில், “பள்ளிகளில் இனி அபாயா அணிய முடியாது என முடிவு செய்துள்ளேன்” என கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டல் குறிப்பிட்டுள்ளார்.

“நீங்கள் வகுப்பறைக்குள் செல்லும்போது, மாணவர்களைப் பார்த்து அவர்களின் மதத்தை நீங்கள் அடையாளம் காண முடியாது,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘தலைவரின் முன்பாக திருமணம் செய்வதாக கூறி 7 முறை கருக்கலைப்பு செய்தார்’: சீமான் மீது நடிகை விஜயலட்சுமி முறைப்பாடு!


“ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து, 7 முறை என் அனுமதியின்றி கருச்சிதைவு செய்து, என்னை தற்கொலைக்கு தூண்டிய சீமானை கைது செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நடிகை விஜயலட்சுமி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,

“2011இல் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நான் கொடுத்த புகாரின் பேரில் பிரிவு 420 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கின் மேல் நடவடிக்கைக்காக நான் முயற்சித்தேன்.

அந்த புகாரில், 2008இல் மதுரை மீனாட்சியம்மன் கோவில் முன்பாக சீமானின் உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் சீமானுக்கும் எனக்கும் மாலை மாற்றி திருமணம் நடைபெற்றது. ‘கிறிஸ்தவர் என்பதாலும் பெரியாரிஸ்ட் என்பதாலும் தாலி கட்ட மாட்டேன்’ என்றார்.

மேலும் ‘பிரபாகரன் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ளும் வரை இதை வெளியில் கூற வேண்டாம்’ என்று தெரிவித்திருந்தார். என்னை திருமணம் செய்து கணவராக வாழ்ந்து 7 முறை என் சம்மதம் இன்றி கருக்கலைப்பு மாத்திரைகளை கொடுத்தார் சீமான். அதன் பின் என்னை ஏமாற்றிவிட்டு கயல்விழியை திருமணம் செய்து கொண்டார்.

நான் புகாரளித்ததும், அப்போது நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவரான மறைந்த தடா சந்திரசேகர் மூலம் சீமான் ஒரு பேச்சுவார்த்தை நடத்தினார். அந்தப் பேச்சுவார்த்தையின்போது, என்னை ஊர் அறிய திருமணம் செய்துகொண்டு மனைவியாகவும், கயல்விழியை துணைவியாகவும் கொண்டு வாழ்கிறேன் என்று கூறியிருந்தார்.

அதை நம்பி, அந்த வழக்கில் மேல் நடவடிக்கை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்திருந்தேன். வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றெல்லாம் எழுதி கொடுக்கவில்லை. ஆனால் சீமான் அவ்வாறு செய்யவில்லை.

எனவே, காவல் ஆணையரகத்தில் இன்று இது தொடர்பாக புகார் அளித்திருக்கிறேன். 2011ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசராணை செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளேன். அதேபோல், தற்கொலை முயற்சி வழக்கு, இது தவிர புதிதாக புகார் ஒன்றையும் கொடுத்துள்ளேன்.

இந்த புகார்களை மீண்டும் மறு விசாரணை செய்ய வேண்டும் என தற்போது தமிழர் முன்னேற்ற படையின் ஒருங்கிணைப்பாளர் வீரலட்சுமியுடன் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்துள்ளோம். தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின் எடுக்கும் நடவடிக்கையில்தான் எனது வாழ்வும் சாவும் உள்ளது.

சீமான் இன்று காலையில்கூட சொல்லியிருக்கிறார், அவர்கள் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள் என்று.

இப்படிப்பட்ட தலைவர் ஒருவர், நாம் தமிழர் என்றொரு கட்சியை நடத்திவருகிறார் என்று நான் மிகவும் வருத்தப்படுகிறேன். எனக்கு இந்த விவகாரத்தை தனிப்பட்ட முறையில் எடுத்துச் செல்ல முடியவில்லை. இதில் எனக்கு முழு ஒத்துழைப்பை வீரலட்சுமி கொடுத்து வருகிறார். ஊடகங்களால்தான் நான் உயிருடன் இருக்கிறேன். வீரலட்சுமி போல, சீமானால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது எனக்கு உதவி செய்ய முடியும் என்றால், உங்களுடைய ஆதரவை எனக்கு தாருங்கள். 2011ஆம் ஆண்டே சீமானை கைது செய்ய வேண்டியது. ஹரி நாடார் கைது செய்யப்பட்டுள்ளார். சீமான் இன்னும் கைதாகவில்லை. எனவே, சீமானை கைது செய்ய வேண்டும் என்று மனுவில் கேட்டிருக்கிறேன்.

முன்னதாக, சீமான் என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறியதைத் தொடர்ந்து, அந்த விவகாரத்தை பேசாமல் நிறுத்திவைத்திருந்தோம். இப்போது அவர் திருமணம் செய்யவில்லை. கேவலப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார். மதுரை செல்வம் மூலம் ஒரு கோடி ரூபாய் எனக்கு கொடுத்துள்ளதாக கூறுவது மிகப் பெரிய விஷயம். எனவே, அவரை கைது செய்யாமல் விட்டதுதான் பெரிய தவறு. என்னுடைய பிரச்சினையில் அதிமுக அரசு பெரிய அளவில் விசாரணை நடத்தவில்லை. என்னிடம் தான் காவல் துறையினர் விசாரணை நடத்தினார்களே தவிர, சீமானிடம் எதுவும் விசாரணை நடத்தவில்லை. ஈழத்துக்கு ஆதரவாக சீமான் பேசியதால், அதிமுக அவருக்கு ஆதரவளித்தது” என்று அவர் கூறினார்.

தொடர்ந்து அவரிடம் ‘11 ஆண்டுகளுக்குப் பின் இப்போது புகார் கொடுப்பதன் காரணம் என்ன?’ என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, அவரை அவதூராக ஒருமையில் பேசிய விஜயலட்சுமி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job