12 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் வெயாங்கொடையைச் சேர்ந்த 18 வயதுடைய பெண் என்று பொலிசார் தெரிவித்தனர்.
வெயாங்கொடை காவல் பிரிவின் மாரபொல பகுதியில், நேற்று (18) மாலை நடத்திய சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்தக் கைது நடவடிக்கையின் போது, பொலிசாரின் கடமைகளுக்கு ஒருவர் இடையூறு விளைவித்ததாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட இளம் பெண்ணின் காதலன் பொலிசாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக தெரிவிக்கப்பட்டது. அந்த நபர் தடியால் தாக்கியதில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். சந்தேக நபரின் தலைமறைவான காதலனை கைது செய்ய வெயாங்கொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment