நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, October 29, 2023

19 கொலைகளைச் செய்து இலங்கையை அதிர வைத்த “தங்கல்லே சுதா” வின் வாக்குமூலம்!!


கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் தங்கல்லே சுதா” என அழைக்கப்படும் நிலந்த குமார கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் கொலைக்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியும் உனவடுன பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலந்த குமார எனப்படும் தங்கல்லே சுதாவை 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்தனர்.சந்தேகநபர் 7 நாட்கள் தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில், தான் துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதல் மூலம் 19 கொலைகளைச் செய்ததாக விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதேவேளை, மாகந்துரே மதுஷ் உட்பட பல பிரபல குற்றவாளிகளின் கூலிப்படையாக செயற்பட்டதாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.இதனையடுத்து, சந்தேகநபர் கூறிய கொலைகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job