This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, March 31, 2024

தமிழ்த்தேசியத்தை ஊக்குவிக்கும் விளையாட்டுப் போட்டி அலங்கரப்பு? யாழில் பாடசாலை மீது பாய்ந்த பொலிசார்!! நடந்தது என்ன?

தமிழ்த்தேசியத்தை ஊக்குவிக்கும் விளையாட்டுப் போட்டி அலங்கரப்பு? யாழில் பாடசாலை மீது பாய்ந்த பொலிசார்!! நடந்தது என்ன?

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போதான இல்ல அலங்கரிப்பு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
யூனியன் கல்லூரி இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.

அதன் போது, கார்த்திகைப் பூ வடிவிலும், போர் டாங்கி வடிவிலும், இல்ல அலங்கரிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அவை தொடர்பிலான புகைப்படங்கள் நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தன.

அஅது தொடர்பில் நேற்றைய தினம் விளையாட்டு போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையே பொலிஸார் , இராணுவ புலனாய்வாளர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் பாடசாலைக்கு நேரில் சென்று இல்லங்களை பார்வையிட்டு, புகைப்படங்கள், காணொளிகள் என்வற்றை எடுத்தனர்.

அத்துடன் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தருமாறு பாடசாலை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி இருந்தனர்.

இந்நிலையில் அதிபர் உள்ளிட்டவர்கள் பொலிஸ் நிலையம் சென்று இருந்த நிலையில், பொலிஸார் அவர்களிடம் வாக்கு மூலங்களை பெற்ற பின்னர் அவர்களை விடுவித்து இருந்தனர்.

இதேவேளை அண்மையில் கிளிநொச்சி மாவடத்தில் உள்ள பாடசாலை ஒன்றில், இடம்பெற்ற விளையாட்டு போட்டியில் இல்ல அலங்கரிப்பு மற்றும் விநோத உடை போட்டிகள் தொடர்பிலான படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சைகள் ஏற்பட்டதை அடுத்து, வடமாகாண கல்வி அமைச்சு பாடசாலை அதிபர்களுக்கு , இல்ல அலங்கரிப்பு மற்றும் விநோத உடை போட்டிகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது

Tuesday, March 26, 2024

வவுனியாவில் காதல் பிரச்சனை!! 16 வயது மாணவி அனார்த்தினி ஏன் மரணம்?


வவுனியாவில் காதல் பிரச்சனை!! 16 வயது மாணவி அனார்த்தினி ஏன் மரணம்?

வவுனியாவில் பாடசாலை மாணவி ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா மாதர்பணிக்கர் மகிழங்குளம் பாடசாலையில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த மாணவியே உயிரிழந்துள்ளார். கடந்த சனிக்கிழமை (23) மாலை வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் . சம்பவத்தில் சிறிதரன் அனார்த்தினி வயது 16 என்ற மாணவியை இவ்வாறு உயிரிழந்துள்ளார். மாணவியின் மரணத்திற்கு காதல் பிரச்சனை காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

இலங்கையில் வடக்கு மாகாணத்தில் பெண் ஒருவர் இரு கணவர்களுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வரும் சம்பவம்!



இலங்கையில் வடக்கு மாகாணத்தில் பெண் ஒருவர் இரு கணவர்களுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வரும் சம்பவம்!

இது பலருக்கு வியப்பை ஏற்படுத்தி இருந்தாலும் அந்த சம்பவத்தின் பின்னனி நெகிழவைப்பதாக அமைந்துள்ளது.

2015 ஆம் ஆண்டு திருமணமாகி 10 நாட்களில் கணவர் , கட்டாருக்கு வேலைக்கு சென்ற நிலையில் , அங்கு சென்று ஆறு மாதத்தில் திடீரென ஏற்பட்ட விபத்தில் கணவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டார்.

கட்டாரில் கோமா நிலைக்கு சென்ற கணவரை அவருடன் கூட இருந்த நண்பர் அவரை கண்ணும் கருத்துமாக பார்த்து வந்துள்ளார். கோமாவில் இருந்து மீண்ட கணவன், பக்கவாத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், நாட்டுக்கு திரும்பி வருகின்றார்.

இலங்கை வந்த அவருக்கு மனைவியை பார்த்து மிகவும் வேதனையாகி விட்டது. தீர யோசித்த கணவர், தனது கட்டார் நண்பரிடம் தனது மனைவியை திருமணம் செய்யுமாறு கேட்டுள்ளார்.

இந்நிலையில் நண்பனின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட அவர் , நண்பனின் மனைவியை திருமணம் செய்து இலங்கையில் வசித்து வருகின்றார். முதல் கணரும் அவர்களுடனேயே வசித்து வருவது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனது மனைவிக்கு விவாகரத்து கொடுத்து நணபரை திருமணம் செய்த வைத்த பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கணவரை, மனைவியும் நண்பரும் மிக கவனமாக கவனித்துகொள்கின்ற சம்பவம்தான் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன் நம்பி வந்த பெண்ணின் வாழ்க்கை வீணாகி விடக்கூடாதே என்ற கவலையில், தன் நண்பரையே மனைவிக்கு திருமணம் செய்துவத்த முன்னாள் கணவரும்

இவரை எதற்கு பார்க்கவேண்டும் என எண்ணாமல் தன் முதல் கணவரை தாங்கும் இந்த குடும்பத்தின் செயலும் சமுக வலைத்தள வாசிகளை நெகிழவைத்துள்ளது.

Thursday, March 21, 2024

பக்கத்து வீட்டு ஜோடி ஜன்னலை திறந்து வைத்து உல்லாசம் !! என்னால் தாங்க முடியவில்லை!! பொலிசாரிடம் முறையிட்ட 44 வயது பெண்!!


பக்கத்து வீட்டில் குடியிருக்கும் இளம் ஜோடி ஜன்னல்களை திறந்து வைத்துவிட்டு உல்லாசம் அனுபவித்து தொல்லை கொடுப்பதாக 44 வயதான பெண்ணொருவர் பொலிசில் புகார் கொடுத்துள்ளார். அந்த ஜோடியின் அந்த ரங்க பேச்சும், உல்லாசத்தின் போதான முனகல் சத்தங்களும் அவர்களின் படுக்கையறையிலிருந்து கேட்கிறது, இது தனது வீட்டின அமைதியை குலைக்கிறது என முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு கிரிநகர் பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட பி.டி.ஏ. லே-அவுட்டில் 44 வயது பெண் வசித்து வருகிறார். இவரது வீட்டையொட்டி இளம் தம்பதி வசித்து வருகிறார்கள். இந்த தம்பதியின் படுக்கை அறை ஜன்னல், அந்த பெண் வீட்டின் முன்பக்க கதவின் முன்பாகவே அமைந்துள்ளது. இந்த நிலையில், அந்த தம்பதி தனது வீட்டின் படுக்கை அறையில் இரவிலும், பகலிலும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

அந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் ஜன்னல் கதவை திறந்து வைத்து கொண்டு லூட்டி அடித்ததுடன், கிளுகிளுப்பான உரையாடலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. தம்பதியின் களியாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்துள்ளது. காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு தம்பதி பேசிய ஆபாச பேச்சுகளால், பக்கத்து வீட்டு பெண் தனது வீட்டின் முன்பகுதிக்கு செல்ல முடியாத அளவுக்கு தொல்லையை அனுபவித்து வந்துள்ளார்.

தம்பதியின் களியாட்டத்தை பொறுத்துக்கொள்ள முடியாத அந்த பெண் பொங்கி எழுந்து, நேரடியாக தம்பதியிடமே இதுபற்றி கூறியுள்ளார். அதாவது படுக்கை அறையில் உள்ள ஜன்னல் கதவை அடைத்து விட்டு நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள் என அவர் கூறியுள்ளார்.

ஆனால் அந்த பெண்ணின் வார்த்தைகளை அந்த தம்பதி ஒரு பொருட்டாக கண்டுகொள்ளவில்லை. தினந்தோறும் தம்பதி தங்களது பாணியிலேயே மன்மத லீலையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதன் காரணமாக அடிக்கடி தம்பதி மற்றும் பெண் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டு வந்துள்ளது. வாக்குவாதம் முற்றி, அந்த பெண்ணை பாலி யல் வல்லு றவுக்குளாக்கி கொன்று விடுவோம் என அந்த ஜோடி மிரட்டியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கிரிநகர் போலீஸ் நிலையத்தில் அந்த பெண், தம்பதி மீது ஒரு புகார் அளித்துள்ளார்.

அதில், தம்பதி தனது வீட்டின் படுக்கை அறை ஜன்னல் கதவை திறந்து வைத்து உல்லாசம் அனுபவிக்கிறார்கள். அது தனக்கு முகம் சுளிப்பை தருகிறது. நான் பல முறை கூறியும் கேட்பதில்லை. மாறாக தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கூறி இருந்தார்.

புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Monday, March 18, 2024

யாழ் சந்தி சலூனுக்குள் 13 பேரால் சீரழிக்கப்பட்ட 14 வயது சிறுமி: 70 வயது தாத்தாவும் ஒருவர்!


அநுராதபுரத்தில் உள்ள முடிதிருத்தும் நிலையம் ஒன்றில் 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் 4 வருடங்களாக பலா த்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது

இச்சம்பவம் தொடர்பாக, அநுராதபுரம், யாழ்ப்பாணம் சந்தியில் உள்ள ரத்னசிறி சலூன் நடத்துனரான 57 வயதான டி.எம்.திலகரட்ன, அவருடன் குற்றத்தில் ஈடுபட்ட 47 வயதான முச்சக்கர வண்டி சாரதி அனில் பியரத்ன ஆகிய இருவருமே  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் அனுராதபுரம் பிரதான நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி நாலக சஞ்சீவ ஜயசூரிய முன்னிலையில் நேற்று (18) ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

14 வயதுடைய பாடசாலை மாணவியை ஒரு குழுவினர் தொடர்ச்சியாக பலா த்காரம் செய்வதாக கிடைத்த தகவலின் பிரகாரம், பாதிக்கப்பட்ட சிறுமியை பொலிஸ் காவலில் எடுத்து அவரிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

முதலாவது சந்தேக நபரான டி.எம்.திலகரட்னவுக்குச் சொந்தமான யாழ் சந்தியில் உள்ள ரத்னசிறி சலூனின் பின் அறைக்குள் சிறுமியை அழைத்துச் சென்று, சந்தேகநபர்கள் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாகவும், சிறுமியை பலமுறை பாலி யல் பலா த்காரம் செய்த மேலும் 11 சந்தேக நபர்களை கைது செய்ய உள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை பொலிஸ் குழு ஆரம்பித்துள்ளதாகவும் பொலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சந்தேக நபர்களால் பலா த்காரம் செய்யப்பட்ட 14 வயது சிறுமி பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், இந்த இரு சந்தேக நபர்களைத் தவிர, தன்னை வன்பு ணர்ச்சி செய்த சந்தேக நபர்களில் 70 வயதுடைய ஒருவரும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த முதியவர், ஒரு குறிப்பிட்ட காவல் நிலையத்தின் குழந்தைகள் மற்றும் மகளிர் பிரிவில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டரின் தந்தையாவார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சலூன் உரிமையாளர் சிறுமியை நான்கு வருடங்களாக வன்பு ணர்ச்சி செய்து 100, 200, 250 ரூபா பணத்தைக் கொடுத்து ஏமாற்றி வீட்டுக்கு அனுப்பி வந்துள்ளார்.

இந்த மாணவி வலைப்பந்து, உதைபந்தாட்டம், கிரிக்கட் மற்றும் எல்லே பாடசாலை மட்ட மற்றும் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சிறுமி என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Sunday, March 17, 2024

யூரியூப்பரின் திருவிளையாடல்!!கிளிநொச்சியில் அம்மாவையும் 16 வயது மகளையும் ஒரே நேரத்தில் கர்ப்பமாக்கிய ஜேர்மன் தமிழன்!!

யூரியூப்பரின் திருவிளையாடல்!!கிளிநொச்சியில் அம்மாவையும் 16 வயது மகளையும் ஒரே நேரத்தில் கர்ப்பமாக்கிய ஜேர்மன் தமிழன்!!

கணவன் மலேசியாவுக்கு வேலை வாய்ப்பு பெற்று சென்று ஒரு வருடம் கழிந்த நிலையில் கிளிநொச்சி கல்மடுப்பகுதியில் 38 வயதான குடும்பப் பெண் ஒருவரும் அவளது 16 வயதான மகளும் ஒரே தடவையில் கர்ப்பமாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு பெண் பிள்ளைகளின் தாயாரான குறித்த பெண், படையினரின் விவசாயப் பண்ணையில் வேலை செய்து வந்துள்ளார். மூத்த பெண் பிள்ளை 15 வயதுடன் பாடசாலைக்கு செல்வதை கை விட்டுள்ளார். 12 வயதான இரண்டாவது பெண் பிள்ளை தற்போதும் பாடசாலைக்கு சென்று வருகின்றாள். கடந்த வருட முற்பகுதியில் கணவன் மலேசியா சென்ற பின்னர் பண்ணை வேலையை கைவிட்டு சுயதொழில் தொடங்கப் போவதாக கூறி யூரியூப்பர் ஒருவரிடம் தொடர்பு கொண்டு வெளிநாட்டு உதவி பெற்றுள்ளாள். கடந்த ஓகஸ்ட் மாதம் ஜேர்மன் நாட்டிலிருந்து வந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் குறித்த பெண்ணின் வீட்டுக்கு பல தடவைகள் யூரியூப்பருடன் வந்து சென்றுள்ளார். அதன் பின்னர் குறித்த பெண்ணும் அவளது இரண்டு மகள்களும் சில நாட்கள் வீட்டில் தங்காது ஜேர்மன் நபருடன் வாகனத்தில் திரிந்தாக அப்பகுதியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான நிலையில் குறித்த பெண்ணின் மூத்த மகள் திடீர் சுகவீனமடைந்துள்ளார். வாந்தி மற்றும் தலைச்சுற்றல் காரணமாக டெங்கு அச்சத்தில் மூத்த மகளை பரிசோதனை செய்த போது அவள் கர்ப்பமாக உள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே அறிகுறிகள் தாயாருக்கும் காணப்பட்டதால் அயலவர்கள் சந்தேகமடைந்து அவளையும் பரிசோதனைக்கு உள்ளாக்க முற்பட்ட போது தனது இரு மகள்களையும் அழைத்துக் கொண்டு தமது வீட்டிலிருந்து மாயமானதாக அயலவர்கள் கூறுகின்றார்கள். மகள் கர்ப்பமான தகவலை தாயாருக்கு வைத்தியர் தெரிவித்த போதும் தாயார் அதிர்ச்சியடையாமல் சாதாரணமாக இருந்ததாக அயலவர்கள் கூறுகின்றார்கள். தற்போது குறித்த குடும்பப் பெண்ணும் இரு பெண் பிள்ளைகளும் வவுனியாவுக்கு சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த யூரியூப்பர் ஒருவரே இவ்வாறான கேவலமான செயற்பாடுகளை புலம்பெயர் தமிழர்களை குளிர்விப்பதற்காக செய்து வருவதாகவும் உண்மையில் ஏராளமான கஸ்டப்பட்ட விசேட தேவையுடையவர்கள் இருக்கும் போதும் அவர்களை எல்லாம் விட்டுவிட்டு பெண்களை குறி வைத்து உதவி செய்வதாக கூறி அசிங்கமான செயற்பாடுகளை செய்துவருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

Saturday, March 16, 2024

ஜேர்மனியில் 15 வயது இலங்கைத் தமிழ்ச் சிறுமி. தற்கொலை செய்தது ஏன்?

 

ஜேர்மனியில் 15 வயது இலங்கைத் தமிழ்ச் சிறுமி. தற்கொலை செய்தது ஏன்?

ஜேர்மனியின் பகுதியில் தமிழ்ச் சிறுமியான தருனா மூர்த்தி என்ற 15 வயதுச் சிறுமி கடந்த வாரம் தற்கொலை செய்துள்ளார். குறித்த சிறுமி தான் படிக்கும் பாடசாலையில் உள்ள ஏனைய மாணவர்களால் துன்புறுத்தப்பட்டதாக குறித்த மாணவியின் சகோதரி ஜேர்மனியின் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார். தனது சகோதரி மீது ஆசிரியர்கள் மற்றும் ஏனைய மாணவர்கள் வன்முறையைப் பிரயோகித்ததாகவும் அதனால் தருனா கடும் விரக்தியில் இருந்ததாகவும் சகோதரி ஜேர்மனிப் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார். இதே வேளை குறித்த மாணவியான தருனா தனக்கு சொந்தமான ரிக்டொக் தளத்தில் எனது வாய்கள் கட்டப்பட்டுள்ளன… எனது கண்கள் மூடப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார். இவரது தற்கொலை அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் மற்றுமொரு குடும்பம் மர்மமான முறையில் உயிரிழப்பு!!

கனடாவில் மற்றுமொரு குடும்பம் மர்மமான முறையில் உயிரிழப்பு!!

கனடாவின் ஒன்டோரியோ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களது மகள் உயிரிழந்துள்ளனர். இந்த தீ விபத்து சம்பவம் கடந்த 7ம் தேதி நடந்துள்ளது. இறந்தவர்களின் உடல்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்ட நிலையில் அது தொடர்பான தகவலை போலீசார் வெளியிட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த இந்திய வம்சாவளி குடும்பம் பிராம்டன் பகுதியின் பிக் ஸ்கை வே மற்றும் வான் கிர்க் டிரைவ் பகுதியில் வசித்து வந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள், ராஜீவ் வாரிகோ (51), அவரது மனைவி ஷில்பா கோத்தா (47) மற்றும் அவர்களது 16 வயது மகள் மகேக் வாரிகோ என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் ராஜீவ் ஒன்டோரியோ அரசாங்கத்தின் சுகாதார துறையில் பணிபுரிந்து வந்தவர் என்பது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில்…

விபத்து ஏற்பட்ட வீட்டின் அருகில் வசிப்பவர்கள் தந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு நாங்கள் சென்றோம். அங்கு விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து உடனடியாக கண்டறிய முடியவில்லை. தீ முற்றிலும் அணைக்கப்பட்ட பின்னர் 3 மனித உடல்கள் கண்டறியப்பட்டன.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்த தகவல் இன்னும் கண்டறியவில்லை, சந்தேகத்துக்குரிய விபத்து இது என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்த காவல்துறை அறிக்கையில், “இந்த வழக்கை நாங்கள் எங்களின் கொலை விசாரணை அமைப்பு மூலம் விசாரித்து வருகிறோம். இந்த தீ விபத்து தற்செயலானது இல்லை என்று ஒண்டோரியோ தீயணைப்பு அதிகாரி கருதியது போல, நாங்களும் இந்த தீ விபத்து சந்தேகத்துக்குரியதாகவே கருதுகிறோம்” என்றார்.

Friday, March 15, 2024

‘பலான’ படங்கள் வைத்திருந்தாலும் பயங்கரவாத தடைச்சட்டம் பாயுமா?: இலங்கையில் நடந்த சம்பவம்!


‘பலான’ படங்கள் வைத்திருந்தாலும் பயங்கரவாத தடைச்சட்டம் பாயுமா?: இலங்கையில் நடந்த சம்பவம்!

தனது தனிப்பட்ட கையடக்கத் தொலைபேசியில் பா லியல் வீடியோக்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தொடரப்பட்ட வழக்கில் சந்தேக நபரான 35 வயதுடைய திருமணமான ஒருவரை விடுதலை செய்து கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன நேற்று (15) உத்தரவிட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தேடுதல் உத்தரவின் அடிப்படையில் தனது வாடிக்கையாளர் கைது செய்யப்பட்டார், மேலும் அவர் கூறப்பட்ட பாலி யல் காட்சிகளை யாருக்கும் விநியோகிக்கவில்லை, ஆபா சமான பாலி யல் காட்சிகளை வைத்திருந்தமை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் எவ்வாறு குற்றமாக கருதப்படுகின்றது என சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தீஷ்ய வேரகொடவின் சமர்ப்பணங்களை பரிசீலித்த மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

குறிப்பிட்ட அமைச்சர் மற்றும் மற்றுமொரு நபர் தொடர்பில் இணையத்தில் வெளியிட்ட குறிப்பின் அடிப்படையில் தனது கட்சிக்காரரை கைது செய்தமை தொடர்பான தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சட்டத்தரணி தீஷ்ய வேரகொட நீதிமன்றில் தெரிவித்தார்.

மேலும், புகார்தாரரிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலம் மற்றும் பிற ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சட்டத்தின் பிரகாரம் பாலி யல் வீடியோக்களை வைத்திருப்பது குற்றமல்ல எனவும், அவற்றை இணையத்தளத்திலோ அல்லது வேறு வழிகளிலோ எவருக்கும் விநியோகிக்கவில்லை எனவும் சட்டத்தரணி தீஷ்ய வேரகொட நீதிமன்றில் சுட்டிக்காட்டினார். விசாரணை அதிகாரிகள் தனது வாடிக்கையாளரின் கைத்தொலைபேசியை கைப்பற்றி அவர்களுக்கிடையில் பாலியல் வீடியோக்களை பகிர்ந்து மகிழ்ந்ததாக நீதிமன்றில் சுட்டிக்காட்டிய சட்டத்தரணி தீஷ்ய வேரகொட, குற்றச்சாட்டை தனது கட்சிக்காரர் மீது சுமத்த முடியாது என நீதிமன்றில் தெரிவித்தார்.

மொடலிங் ஆசையிலிருந்த கன்னிப் பெண்களின். கன்னித் தன்மையை பரிசோதித்து உறவு. கொண்ட கண்டி போலி வைத்தியர்!! நடந்தது என்ன?

மொடலிங் ஆசையிலிருந்த கன்னிப் பெண்களின். கன்னித் தன்மையை பரிசோதித்து உறவு. கொண்ட கண்டி போலி வைத்தியர்!! நடந்தது என்ன?

மொடலிங் துறைக்கு யுவதிகளை இணைத்துக் கொள்வதாக முகநூல் பக்கத்தில் விளம்பரம் செய்து, யுவதிகளை அறைகளுக்கு அழைத்து வந்து துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கண்டி ராஜவெல்லவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் 15 யுவதிகள் இரகசிய பொலிஸில் செய்த முறைப்பாடுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பிரனீத் லக்மால் என்ற சந்தேக நபர் இன்று (14) இரவு கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

அழகிய இளம் பெண்களை மொடலிங் வேலைக்கு சேர்த்துக் கொள்வதாக முகநூல் பக்கத்தில் விளம்பரம் செய்த சந்தேகநபர், தொடர்பு கொள்ளும் இளம் யுவதிகளின் படங்கள் வீடியோக்களை வற்புறுத்தி பெற்றுக் கொண்டுள்ளார்.

பின்னர், அவர்களின் கன்னித் தன்மையை பரிசோதிக்க ஒரு வைத்தியரிடம் நேர்காணலுக்கு பரிந்துரைத்துள்ளார்.

இதே சந்தேகநபர், பின்னர் அந்த வைத்தியராக நடித்து, யுவதிகளின் நிர்வாண புகைப்படங்களை எடுத்து, அச்சுறுத்தி, பல்வேறு வழிகளில் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக, இரகசிய பொலிஸார் தெரிவித்தனர்.

Thursday, March 14, 2024

மட்டக்களப்பில் ஒளிித்துப் பிடித்து விளையாடி 7 வயது சிறுமி துஸ்பி ரயோகம்!! 4 சிறுவர்கள் பிடிபட்டது எப்படி?

மட்டக்களப்பில் ஒளிித்துப் பிடித்து விளையாடி 7 வயது சிறுமி துஸ்பி ரயோகம்!! 4 சிறுவர்கள் பிடிபட்டது எப்படி?

மட்டக்களப்பு வாகரையில் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 சிறுவர் உட்பட 5 பேரில் 4 சிறுவர்களையும் பிணையில் விடுவித்ததுடன் 18 வயதுயை ஒருவரை எதிர்வரும் 27 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று புதன்கிழமை (13) உத்தரவிட்டார்.

வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் கணவனை இழந்த தாயார் ஒருவர் அவரது 7 வயது சிறுமியை வீட்டில் தனியாக விட்டுவிட்டு தினமும் வேலைக்கு சென்றுவரும் நிலையில் சிறுமியுடன் அந்தபகுதியைச் சேர்ந்த 11 சிறுவன் ஒருவன் ஒளித்து தொட்டு விளையாட்டில் தோல்வியடைந்த சிறுமிக்கு தண்டனை என்ற ரீதியில் சிறுமியை  பா லியல் து ஸ்பி ரயோகம் மோற்கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த சிறுவன் எனைய 14,15,18 வயதுடைய நண்பர்களுக்கும் இந்த சூட்சமத்தை தெரிவித்துள்ளதையடுத்து குறித்த சிறுமியுடன் தனிதனியாக சிறுவர்கள் சென்று ஒளித்து தொட்டு விளையாட்டு என்ற பேர்வையில் பாலி யல் து ஸ்பி ரயோகம் மேற்கொண்டுள்ள நிலையில் இதனை அவதானித்த அந்தபகுதி இளைஞன் ஒருவர் சிறுமியின் தாயாருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் பொலிசாரிடம் முறையிட்ட தையடுத்து 11 வயதுடைய ஒருவரையும், 14 வயதுடைய இருவரையும் 15 வயதுடைய ஒருவரையும் 18 வயதுடைய ஒருவர் உட்பட 5 பேரை நேற்று புதன்கிழமை (13) கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை வாழைச்சேனை நீதவான் நீதிநீதி மன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து 15 வயதுக்கு உட்பட் 4 சிறுவர்களையும் சட்ட வைத்தியரிடம் சேதனைக்கு உட்படுத்துமாறும் அடுத்த வழக்கிற்கு ஆஜராகுமாறும் பிணையில் விடுவத்ததுடன் 18 வயதுடையவரை எதிர்வரும் 27 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அம்பாறையில் இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்ற அப்பா!! தானும் தற்கொலை முயற்சி!!

 
அம்பாறையில் இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்ற அப்பா!! தானும் தற்கொலை முயற்சி!!

இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்று தற்கொலை முயற்சி மேற்கொண்ட தந்தை தொடர்பிலான செய்தி அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பகுதியில் இடம்பெற்றுள்ளது.சம்பவ தினமான இன்று(14) காலை பெரிய நீலாவணை முஸ்லீம் பிரிவு பாக்கியதுல் சாலியா வீதியில் உள்ள வீட்டில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவ இடத்தில் இரு பிள்ளைகளின் சடலம் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டது.

அத்துடன் தனது மனவளர்ச்சி குன்றிய இரு பிள்ளைகளை கொன்று தற்கொலையில் ஈடுபட்ட தந்தையும் காயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவத்தில் முஹம்மது மிர்சா முகமது கலீல் (வயது-63) தற்போது காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் முஹம்மது கலீல் முகம்மது றிகாஸ்(வயது-29) முஹம்மது கலீல் பாத்திமா பஸ்மியா(வயது-15) ஆகியோர் சம்பவ இடத்தில் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தவர்களாவர்.

குறித்த மரணமடைந்த பிள்ளைகளின் தாய் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் மரணமடைந்திருந்ததாக மேலதிக விசாரணைகளில் வெளியாகியுள்ளது.சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க வழிநடத்தலில் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Wednesday, March 13, 2024

கனடாவில் மற்றுமொரு படுகொலை : இருவர் பலி | Another Massacre In Canada Two Killed

கனடாவில் மற்றுமொரு படுகொலை : இருவர் பலி
கனடாவின் டொரன்டோவிலுள்ள Regent Park பகுதியில், இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸாரும் மருத்துவ உதவிக்குழுவினரும் சென்றபோது இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்த நிலையில் கிடப்பதைக் கண்டுள்ளனர்.

காயமடைந்த ஆண்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்ற இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.

Another Massacre In Canada Two Killed

மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி இரண்டாவது ஆணும் உயிரிழந்துவிட்ட நிலையில் மற்ற பெண்ணின் உயிருக்கு ஆபத்து இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உறவினர்கள் 

இதற்கிடையில், சம்பவ இடத்திலிருந்து தாக்குதல்தாரி தப்பியோடுவதைக் கண்ட பொலிஸார் அவரைத் துரத்த, பொலிஸாரையும் குறித்த சந்தேகநபர் தாக்கியுள்ளார். இருப்பினும் குறித்த நபரை பொலிஸார் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.

இதேவேளை பெயர் முதலான எந்த விவரங்களையும் இப்போதைக்கு வெளியிட இயலாது என்று கூறியுள்ள பொலிஸார், தாக்கப்பட்டவர்களும் தாக்குதல்தாரியும் உறவினர்கள் என தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

என்னுடன் உறவு கொண்ட பின் ஹன்சிகா இன்னொருவனுடன் உறவில் இருந்தாள்!! அதனால் கழுத்தறுத்து கொன்றேன்!! அத்தானின் பரபரப்பு வாக்குமூலம்!!


என்னுடன் உறவு கொண்ட பின் ஹன்சிகா இன்னொருவனுடன் உறவில் இருந்தாள்!! அதனால் கழுத்தறுத்து கொன்றேன்!! அத்தானின் பரபரப்பு வாக்குமூலம்!!

எல்பிட்டிய பிரதேசத்தில் சிறுமியொருவரை கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் குற்றச் செயலைச் செய்துவிட்டு தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று (12ஆம் திகதி) கைது செய்யப்பட்டுள்ளார்.

கரந்தெனிய, தல்கஹாவத்தை பகுதியைச் சேர்ந்த ஹன்சிகா நடிஷானி என்ற 17 வயதுடைய சிறுமியே தனது மூத்த சகோதரியின் கணவனால் கொல்லப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சுதேஷ் பிரியங்கர என்ற நபருக்கு கொலை செய்யப்பட்ட சிறுமியுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

சந்தேக நபர் அளித்த வாக்குமூலத்தில், சிறுமி வேறு ஒருவருடன் உறவில் இருந்ததால் கொலை செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.

தனது சகோதரியின் இரண்டு குழந்தைகளையும் கவனித்துக் கொண்டு, க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தயாராகிக் கொண்டிருந்த சிறுமிக்கும், அத்தானுக்கும் காதல் ஏற்பட்டது. சிறுமியின் மூத்த சகோதரியையும், இரண்டு குழந்தைகளையும் கைவிட்ட அத்தான், சிறுமியுடன் ஓடிச்சென்று, பிறிதொரு பிரதேசத்தில் தலைமறைவாக வாழ்க்கை நடத்தியுள்ளார்.

4 மாதங்கள் இருவரும் குடும்பம் நடத்திய பின்னர், கடந்த மதம் தலாவ பகுதியிலுள்ள வீடொன்றை வாடகைக்கு பெற்று, அங்கு குடிவந்தனர். அத்தான் இல்லாத சமயத்தில் தனது தாயாருக்கு தொலைபேசியில் தகவல் வழங்கிய சிறுமி, அத்தான் இல்லாத சமயத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இது தொடர்பில் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு இரு தரப்பினரும் அழைக்கப்பட்டிருந்தனர். கடந்த 8ஆம் திகதி பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு சென்ற சிறுமி, அத்தானால் கடத்தி செல்லப்பட்டிருந்தார்.

பின்னர், 9ஆம் திகதி கழுத்து அறுத்து கொல்லப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எல்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஹொட்டல் அறையில் காதலியை கொன்றுவிட்டு, தூக்கில் தொங்கிய 52 வயது காதலன்: பொத்துவிலில் சம்பவம்


ஹொட்டல் அறையில் காதலியை கொன்றுவிட்டு, தூக்கில் தொங்கிய 52 வயது காதலன்: பொத்துவிலில் சம்பவம்!

படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரின் சடலம் பொத்துவில், அறுகம்பே பகுதியில் உள்ள ஹோட்டல் அறையொன்றில் இருந்து நேற்று (12) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதன் அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலமும் காணப்பட்டதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண் மஹகளுகல பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவர் எனவும், ஆண் நபர் 52 வயதான உல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவருக்கும் தொடர்பு இருந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தம்பதியினர் நேற்று (12) அறையொன்றை முன்பதிவு செய்துவிட்டு குறித்த விடுதிக்கு வந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் நேற்று (12) பிற்பகல் ஆகியும் அவர்கள் இருவரும் அறையை விட்டு வெளியே வராததால் ஹோட்டல் உரிமையாளர் இது குறித்து அறுகம்பே சுற்றுலா பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே அவர்களின் சடலங்கள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இந்தக் குற்றங்கள் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

யாழில் சுஜீவனின் உயிரைப் பறித்த கனடா விசா!! நடந்தது என்ன?


யாழில் சுஜீவனின் உயிரைப் பறித்த கனடா விசா!! நடந்தது என்ன?

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் மாற்றுத் திறனாளி ஒருவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தெல்லிப்பழையில் நேற்றையதினம் (11-03-2024) இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவத்தில் அக்குடுவன, கொல்லங்கலட்டி, தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த 32 வயதான தனபாலசுப்பிரமணியம் சுஜீவன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடரில் மேலும் தெரியவருவதாவது,குறித்த நபரின் சகோதரி ஒருவர் கனடாவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இறந்த நபருக்கும், அவரது தாயாருக்கும் கனடாவுக்கான சுற்றுலா விசா கிடைத்துள்ளது.

ஆனால் குறித்த நபருக்கு கனடா செல்வதில் விருப்பம் இருக்கவில்லை. இந்நிலையில் அவர் தனது சக்கர நாற்காலியை கிணற்றுக்கு அருகே நிறுத்திவிட்டு கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.இந்நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் இன்றையதினம் (12-03-2024) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tuesday, March 12, 2024

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு வெட்டிக்கொலை: சாதி மாறி திருமணம் செய்ததால் எழுந்த சர்ச்சையால் விபரீதம்!

யாழ்ப்பாணம், பொன்னாலை கடற்படை முகாம் முன்பாக நேற்று மாலை தாக்கப்பட்டு கடத்தப்பட்டவர், அடித்து கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் சிலர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலையுடன் தொடர்புடைய மேலும் பலரை கைது செய்ய பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சாதிய விவகாரம் ஒன்றினால் ஏற்பட்ட மோதலே வாள்வெட்டாகி, கொலையில் முடிந்துள்ளது.

நேற்று (11) மாலை இந்த கடத்தல் சம்பவம் நடந்தது.

காரைநகரில் இருந்து பொன்னாலையூடாக வட்டு தென்மேற்கு பகுதியில் உள்ள தனது வீடு நோக்கி மனைவியுடன் 24 வயதான தவச்செல்வம் பவித்திரன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.

கார் மற்றும் வாகனமொன்றில் வந்த மற்றொரு குழுவினர் அவரை தாக்க முயல, பவித்திரன் தனது மனைவியுடன் பொன்னாலை கடற்படை முகாமுக்குள் தஞ்சம் கோரி ஓடினார்.

எனினும், கடற்படையினர் அப்போது பொறுப்புணர்வுடன் செயற்பட்டிருக்கவில்லை.

தமக்கு தேவையற்ற பிரச்சினை வரும், முகாமை விட்டு வெளியில் செல்லுங்கள் என குறிப்பிட்டு, தம்பதியினரை முகாமுக்கு வெளியில் கலைத்துள்ளனர்.

அவர்கள் முகாமை விட்டு வெளியேற்றப்பட்ட போது, முகாம் வாசலில் வைத்து, பவித்திரனின் முகத்தில் முனை மழுங்கிய ஆயுதமொன்றினால் கடத்தல் குழு தாக்கியுள்ளது. அந்த குழுவிலிருந்த படையப்பா என்பவனே தாக்குதலை நடத்தியுள்ளான்.

இந்த தாக்குதலினால் நிலைகுலைந்த பவித்திரனை கடத்தல் குழு, காருக்குள் தூக்கிப் போட்டது. பவித்திரனின் மனைவியை மற்றைய வாகனத்தில் இழுத்து ஏற்றிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

பவித்திரன் வெட்டுக்காயங்களுடன் வட்டுக்கோட்டை ஆதார வைத்தியசாலை வளாகத்தில் கடத்தல்காரர்களினால் தூக்கிப் போடப்பட்டுள்ளார். அவரது இரண்டு கைகளிலும் ஒவ்வொரு விரல்கள் வெட்டப்பட்டிருந்தன. காலிலும் வெட்டுக்காயம் காணப்பட்டது.

உயிராபத்தான நிலையில் காணப்பட்ட பவித்திரன் மீட்கப்பட்டு, உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேவேளை மனைவி அராலியிலுள்ள வீடொன்றில் பூட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் அயலவர்கள் முரண்பட்டமையினால், வன்முறைக்கும்பலினால் சித்தன்கேணி பகுதியில் குறித்த பெண்ணை இறக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர்

தொடர்ந்து இறந்த நபரின் மனைவியால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் பொலிசார் சந்தேகநபர்களை அடையாளம் கண்டு, கைது செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்தனர்.

சந்தகநபர்களின் குழுவொன்று கிளிநொச்சி மாவட்டத்தின் பகுதியொன்றில் பதுங்கியிருந்த போது, பொலிசார் அவர்களை மடக்கிப் பிடித்துள்ளனர். ஏனைய சந்தேகநபர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த வருடம் நடந்த வாள்வெட்டு சம்பவத்திற்கு பழிவாங்க இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நேற்று கடத்தப்பட்டு கொல்லப்பட்ட இளைஞனின் சகோதரன் ஒருவர், இரண்டு வருடங்களின் முன்னர் சாதி மாறி திருமணம் செய்துள்ளார். பின்னர் 2022ஆம் ஆண்டு, வட்டுக்கோட்டையில் அவர்களின் பிரதேசத்தில் உள்ள கோயில் திருவிழாவின் போது, அந்த இளைஞன் சுவாமி தூக்க முயன்றார். அப்போது சிலர் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். சாதி மாறி திருமணம் செய்ததால் சுவாமி தூக்க முடியாது என அவர்கள் காரணம் கூறியுள்ளனர்.

கோயிலில் இருந்து வெளியேறிய அந்த இளைஞன், தனது மூத்த சகோதரனன பவித்திரனிடம் நடந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

சம்பவத்தை கேள்விப்பட்டு ஆத்திரமடைந்த பவித்திரன், தனது தம்பியை அவமானப்படுத்தியவர்களை பழிவாங்குவதாக குறிப்பிட்டு, வட்டுக்கோட்டை, மாவடியில் வைத்து, சம்பவத்துடன் தொடர்புடைய 3 இளைஞர்களை வாளால் வெட்டியுள்ளார்.

அதன்பின்னர், பிரதேசத்தை விட்டு வெளியேறிய அவர், மானிப்பாய்க்கு அண்மையிலுள்ள பகுதியொன்றில் திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். நேற்று, மாலை 3 மணியளவில் வட்டு தென்மேற்கிலுள்ள தனது வீட்டுக்கு சென்ற போது, அவர் வருவதை அறிந்த குழுவினர் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.

Monday, March 11, 2024

இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை ; வட்டுக்கோட்டையில் பயங்கரம் .! கொலையாளிகளுக்கு வலைவீசும் பொலிஸார் ...!

இளம் குடும்பஸ்தர்  வெட்டிக்கொலை ;    வட்டுக்கோட்டையில்  பயங்கரம் .! கொலையாளிகளுக்கு வலைவீசும் பொலிஸார் ...!

மனைவியுடன் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவரை கும்பல் ஒன்று கடத்திச் சென்று வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டநிலையில்அந்தகுடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் 
 வட்டுக் கோட்டை மாவடி  பகுதியை சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன் வயது 23 என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் . குறித்த குடும்பஸ்தரும் அவரது மனைவியும் காரைநகரில் இருந்து வட்டுக்கோட்டை  - மாவடியில் உள்ள வீட்டுக்கு சென்று கொண்டிருந்த வேளை பொன்னாலை கடற்படை முகாமுக்கு  அருகாமையில் இரண்டு கார்களில் ஆயுதங்களுடன் நின்ற சிலர் அவர்களை வழி மறித்தனர்

இதன் போது இருவரும் தம்பித்து கடற்படை முகாமுக்குள் உள் நுழைந்தனர்  இந்நிலையில் கடற்படையினர் அவர்களை வெளியே விரட்டினர் இதனால் அவர்கள் வெளியே வந்தவேளை ஒரு காரில் மனைவியையும் அடுத்த காரில் குறித்தநபரையும்  ஏற்றிக்கொண்டு குறித்த  குழு அங்கிருந்து சென்றது

பின்னர் மனைவியை சித்தங்கேணி சந்தியில் இறக்கி விட்டனர் அதன்பின்னர் மனைவி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்வதற்கு சென்றுள்ளார்  இந் நிலையில் குறித்த நபரை கடத்திச் சென்றவர்கள் அவர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொண்ட பின்னர் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் உள்ள மாமரத்துக்கு கீழே அவரை தூக்கி வீசிவிட்டு சென்றனர்

இந்நிலையில் வைத்தியசாலையில் இருந்த சுகாதார பணியாளர்கள் இது குறித்து வைத்தியருக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தினர்  அவ்விடத்திற்கு  வந்த வைத்தியர் நோயாளர் காவுவண்டி  மூலம் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை சில நிமிடங்களில் அவர் உயிரிழநனதுள்ளதாகத் ரெிவிக்கப்படுகின்றது  கொலையாளிகளை விசேட பொலிஸ் குழு அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்

கனடாவில் 6 சிங்களவர்களை குடும்பமாகக் கொன்ற சிங்கள இளைஞன் தொடர்பாக மேலும் சில தகவல்கள்!!

கனடாவில் 6 சிங்களவர்களை குடும்பமாகக் கொன்ற சிங்கள இளைஞன் தொடர்பாக மேலும் சில தகவல்கள்!!

கனடாவில் ஒட்டாவாவின் புறநகர் பகுதியில் 6 இலங்கையர்கள், அவர்களின் உறவினரான ஒலங்க்லை இளைஞரால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் கொலைச் சம்பவம் தொடர்பான மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த கொலைகளுடன் தொடர்புடையவர் என கூறப்படும் 19 வயதுடைய மாணவன் பயன்படுத்திய பிற ஆயுதங்கள் தொடர்பில் ஒட்டாவா காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உறவினர்கள் தொடர்பு கொள்ளவில்லை
கொலை நடந்த வீட்டில் உள்ள ரத்தக்கறைகளை கனடா அதிகாரிகள் சுத்தம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம், சந்தேகநபரின் உறவினர்கள் எவரும் இதுவரை கனடாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை தொடர்பு கொள்ளவில்லையென ஒட்டாவாவிலுள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் அன்சுல் ஜான் தெரிவித்துள்ளார்.

கனடாவில் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பார்ஹேவனில் வசித்து வந்த இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் நான்கு பிள்ளைகள் உட்பட 6 பேர் கடந்த ஆறாம் திகதி கொலை செய்யப்பட்டிருந்தனர். சம்பவத்தில் காயமடைந்த குடும்பத்தின் தந்தையான தனுஷ்க விக்ரமசிங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொலைச் சந்தேகநபரான 19 வயதுடைய பெப்ரியோ டி சொய்சாவிடம் ஒட்டாவா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கூரிய ஆயுதம் ஒன்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஒட்டாவா காவல்துறையினர் கூறியதுடன், கொலைக்கு வேறு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், சந்தேகநபரின் தாய் மற்றும் தந்தையின் வசிப்பிடம் தொடர்பில் குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள ஒட்டாவாவிலுள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் அன்சுல் ஜான் , அவரது உறவினர்கள் எவரும் உயர்ஸ்தானிகரகத்தை தொடர்பு கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையர்கள் கொலைக்கு வருத்தம் தெரிவித்த இலங்கை வெளியுறவு அமைச்சு, கொல்லப்பட்டவர்களின் இலங்கையில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் தனியுரிமைக்கு மதிப்பளிப்பதாகவும், அவர்களின் கோரிக்கைகளை எளிதாக்குவதாகவும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sunday, March 10, 2024

மனைவியின் அந்தரங்க காட்சிகளை உறவினர்களுக்கு அனுப்பி மகிழ்ந்த சிங்களக் கணவன்!!

மனைவியின் அந்தரங்க காட்சிகளை உறவினர்களுக்கு அனுப்பி மகிழ்ந்த சிங்களக் கணவன்!!

மனைவியின் நி ர்வாண புகைப்படத்தை உறவினர்களுக்கு அனுப்பிய கணவர் தொடர்பில் மின்னேரியா பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இந்த சம்பவம் மின்னேரியா பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட மனைவி இது தொடர்பில் நேற்று (8) மின்னேரியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீராடிக்கொண்டிருந்த போது கணவர் தன்னை புகைப்படம் எடுத்ததாகவும் பின்னர், அவர் அதனை உறவினர்களுக்கு அனுப்பியதாகவும் மனைவி முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மின்னேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கனடாவில் 6 சிங்களவர்களைக் கொன்ற 19 வயது மாணவனிடமிருந்து தப்பிப் பிழைத்தவரின் பரபரப்பு வாக்குமூலம்!!

கனடா தலைநகர் ஒட்டாவாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இலங்கையர்கள் 6 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், சம்பவத்தில் உயிர்பிழைத்த குடும்பத் தலைவரான 34 வயதான தனுஷ்க விக்கிரமசிங்க வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

தான் வேலை முடிந்து வீடு திரும்பிய போது தனது மனைவி உள்ளிட்ட 4 குழந்தைகளும் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டதாக கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், சந்தேகநபரின் தாக்குதலுக்கு இலக்கான போதிலும் அங்கிருந்த தப்பிக்க முடிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

கண்ணிலும் ஒரு கையிலும் வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ள போதிலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டைய வீட்டாரை உதவிக்கு அழைத்த விக்கிரமசிங்க கொலைசெய்யப்பட்ட குடும்பத்துடன் வசித்து வந்த 19 வயதுடைய இலங்கை மாணவர் ஒருவரே இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

விக்கிரமசிங்கவின் குடும்பம் கொல்லப்பட்ட இரவு பற்றிய புதிய விவரங்கள், ஒட்டாவாவில் உள்ள உள்ளூர் பௌத்த மடாலயத்தில் வசிக்கும் துறவியான பாண்டே சுனீதா வெளிப்படுத்தியுள்ளார்.

வியாழன் அன்று வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் விக்கிரமசிங்கவை சந்தித்த சுனீதா, என்ன நடந்தது என்பதில் தான் பெரும் அதிர்ச்சியில் இருப்பதாக கூறியுள்ளார்.

புதன்கிழமை உள்ளூர் நேரப்படி 22:52 மணியளவில் (03:52 GMT) அவசர அழைப்புகளுக்குப் பதிலளித்த பின்னர், Barrhaven புறநகரில் உள்ள வீட்டில் இருந்து கொல்லப்பட்டவர்களின் சடலத்தை கண்டதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விக்ரமசிங்க, உதவிக்கு அழைக்குமாறு அண்டை வீட்டாரை நோக்கி கத்தியதை அடுத்து இந்த அவசர அழைப்புகள் வந்ததாக ஒட்டாவா பொலிஸ் சேவையின் தலைமை அதிகாரி எரிக் ஸ்டப்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விக்ரமசிங்கவின் மனைவி மற்றும் அவர்களது நான்கு சிறு பிள்ளைகளின் சடலங்களை மீட்டுள்ளனர்.

குடும்பத்துடன் வசித்து வந்த 40 வயதுடைய அமரகோன் முதியன்சேல காமினி அமரகோன் என்பவரின் சடலத்தையும் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

பெற்றோர்களுக்கு அவசர எச்சரிக்கை இவர்கள் அனைவரும் கடந்த ஆண்டு கனடாவில் குடியேறியதாக ஒட்டாவாவில் உள்ள இலங்கை கனடா சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் நாரத கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இலங்கையைச் சேர்ந்த சர்வதேச மாணவரான ஃபெப்ரியோ டி-சொய்சா, எந்தவித அசம்பாவிதமும் இன்றி வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவத்தை அடுத்து ஒட்டாவாவில் உள்ள Algonquin கல்லூரி வியாழன் அன்று ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தில், ஃபெப்ரியோ டி-சொய்சா கல்லூரியில் சேர்ந்தார் என்பதையும், அவரது கடைசி செமஸ்டர் வருகை 2023 குளிர்காலம் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து கனடா போன்று வெளிநாடுகளில் கல்விப் பயிறும் தங்கள் பிள்ளைகள் தொடர்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்” என பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொலைக்கான காரணத்தை பொலிஸார் வெளியிடவில்லை. “பாதிக்கப்பட்டவர்கள் அப்பாவிகள்” என்றும், விசாரணைகள் நடந்து வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

டி-சொய்சா க்டந்த வியாழன் அன்று ஒட்டாவா நீதிமன்றத்தில் முதன்முறையாக ஆஜரானார்,

இதன்போது அவருக்கு எதிராக ஆறு முதல் நிலை கொலை மற்றும் ஒரு கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Saturday, March 9, 2024

17 வயது சிறுமி கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு: அத்தான் தலைமறைவு!

நேற்று (09) எல்பிட்டிய, தலாவ பிரதேசத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலத்தை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

கரந்தெனிய தல்கஹாவத்தை பிரதேசத்தில் வசிக்கும் ஹன்சிகா நடிஷானி என்ற சிறுமியின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த சிறுமி தனது மூத்த சகோதரியின் கணவருடன் தொடர்பு வைத்துள்ளமை தெரியவந்துள்ளது.

இவர் தனது சகோதரியின் இரண்டு குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக, சகோதரியின் வீட்டிற்கு சென்ற போது இந்த உறவு ஆரம்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த உறவின் காரணமாக கடந்த பெப்ரவரி மாதம் 23ம் திகதி வீட்டுக்கு வந்த சிறுமியின் அத்தான் அவரை கடத்தி சென்றதாக பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அங்கு சில நாட்கள் தனது அத்தானுடன் வசித்து வந்த சிறுமி, அங்கு தனது பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வலுக்கட்டாயமாக அத்தான் அடைத்து வைத்துள்ளதாகவும், தன்னை காப்பாற்றுமாறும் கூறியுள்ளார்.

அதன்படி பெற்றோர் அங்கு சென்று சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்தனர், பின்னர் மீண்டும் ஹன்சிகா வீட்டிற்கு வந்த அத்தான் அவரை அழைத்து சென்றார்.

கடந்த 5ம் திகதி தாயார் சென்று ஹன்சிகாவை வீட்டுக்கு அழைத்து வந்ததாக மேலும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கடந்த 6ஆம் திகதி நடந்த விசாரணைக்காக, ஹன்சிகா தனது தாயாருடன் முச்சக்கரவண்டியில் எல்பிட்டிய பொலிஸ் நிலையம் சென்றார்.

பொலிஸ் நிலையம் செல்லும் வழியில், மேலும் இருவருடன் வந்த  அத்தான் ஹன்சிகாவை வலுக்கட்டாயமாக மற்றொரு முச்சக்கர வண்டியில் ஏற்றி அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து, ஹன்சிகாவின் பெற்றோர் பொலிசில் புகார் அளித்த நிலையில், புகார் அளித்த 24 மணி நேரத்தில், ஹன்சிகா கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

முதற்கட்ட விசாரணையில், வேறொரு இடத்தில் கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்து கொலை செய்து, தேயிலை தோட்டத்திற்கு உடல் கொண்டு வரப்பட்டது தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், கொல்லப்பட்ட ஹன்சிகாவின் அத்தான் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார், மேலும் அவரைக் கண்டுபிடிக்க போலீஸ் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன

கிளிநொச்சி அரச அலுவலத்தில் மாணவியுடன் ரியூசன் வாத்தியான உத்தியோகத்தர் பாலியல் உறவு!! பெண் பொலிசார் சுற்றி வளைப்பு!! வீடியோ


கிளிநொச்சியிலுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்துக்குள் ஆட்களற்ற நிலையில், நீண்டநேரம் அலுவலகத்தை பூட்டிவிட்டு உள்ளேயிருந்த அலுவலரும், உயர்தர மாணவியொருவரும் பொலிஸ் விசாரணையின் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (9) பிற்பகல் இந்த சம்பவம் நடந்தது.

கிளிநொச்சியில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் சனிக்கிழமையான இன்று மாலை திறக்கப்பட்டு இருவர் உள்ளே சென்றுள்ளனர். இதனையடுத்து சந்தேகமடைந்த சிலர் அங்கு சென்றுள்ளனர். அலுவலக கதவுகள் பூட்டப்பட்டு இருவரும் உள்ளே நீண்டநேரம் தங்கியிருந்தனர்.

அலுவலகத்தின் குளியளறையும் பாவிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து கழிவு நீர் வெளியேறியதும் அவதானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதும், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் அலுவலகத்தை திறக்குமாறு பணித்துள்ளனர்.

பூட்டப்பட்டிருந்த அலுவலகத்தை திறந்து வெளியே வந்தவர், சாரம் அணிந்திருந்தார். தன்னை அந்த அலுவலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் என அடையாளப்படுத்தியுள்ளார்.

வேறு நபர்கள் இருக்கின்றார்களா என அந்த உத்தியோகத்தரிடம் பொலிசார் வினவியபோது, தனது நண்பர் இருப்பதாக கூறியுள்ளார்.

அறையை சோதனையிட்ட பெண் பொலிசார், அங்கு பெண் ஒருவர் இருப்பதை அவதானித்து அவரிடம் வினவினர்.

அந்த அலுவலகத்தை தானே பராமரிப்பதாகவும், மாலை நேரங்களில் ஓய்வு பெறுவதற்காக இங்கு வருவதாகவும் தெரிவித்த அவர், அந்த பெண் தனது நண்பியென்றும், மலசலகூடத்தை பயன்படுத்தவே வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த பெண்ணின் அடையாள அட்டையை பரிசோதித்த பொலிசார், அவர் 20 வயதானவர் என கண்டறிந்தனர். இதனால், அவர்கள் மீது சட்டப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

ஆனாலும், சனிக்கிழமையில் அலுவலகத்தை பயன்படுத்தியமை தொடர்பில் பொலிஸ் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த ஆண் உத்தியோகத்தர் கிளிநொச்சி நகரில் உள்ள பிரபல தனியார் கல்வி நிலையம் ஒன்றில் பிரதான பாடம் ஒன்றை கற்பித்து வருகிறார். அவருடன் அலுவலகத்தில் தங்கியிருந்த பெண்ணும் அக்கல்வி நிலையத்தில் கல்வி கற்று வந்த மாணவி எனவும் தெரிய வந்துள்ளது.

தனியார் கல்வி நிலையங்களுக்கு பெண் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர் தமது பிள்ளைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என பொலிசார் அறிவுறுத்துகின்றனர். தமது பிள்ளைகளுக்கு உறவுகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பிள்ளைகளின் நடத்தை தொடர்பில் அக்கறை செலுத்த வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் திறன் விருத்தி மண்டபம் மற்றும் அரச சுற்றுலாவிடுதி ஆகிய பகுதிகள் அமைத்துள்ள வளாகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


பிறந்தநாளில் கம்பஸ் பெட்டை வைத்த போதைப் பார்ட்டி!! 3 விப ச்சாரிகள், 5 மாணவிகள் உட்பட 27 பேர் கைது!! நடந்து என்ன?

சர்வதேச மகளிர் தினமான நேற்று (08) இரவு பல்கலைக்கழக மாணவி ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு பேஸ்புக் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்ட விருந்தில், பல்கலைக்கழக மாணவிகள் ஐவர் உட்பட இருபத்தேழு பேரை போதைப்பொருள் பாவித்துக் கொண்டிருந்த குற்றச்சாட்டில் கஹதுடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் ஐந்து மாணவிகள் மற்றும் 12 ஆண் மாணவர்கள் உட்பட இருபத்தேழு பேர் இங்கு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் மூவர் பாலி யல் தொழிலாளிகள் ஆவர்.

காலி பிரதேசத்தைச் சேர்ந்த நண்பர்கள் நால்வர் வாடகைக்கு எடுத்த காரில் விருந்துக்கு போதைப்பொருள் கொண்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

தியத்தலாவ பிரதேசத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவி, ஹோமாகம உடுவான பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மாதம் 45,000 ரூபா வாடகை செலுத்தி தங்கியிருக்கிறார். அந்த குடியிருப்பிலேயே அவரது இருபத்தி இரண்டாவது பிறந்தநாளை முன்னிட்டு இந்த விருந்து இடம்பெற்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 20 மில்லிகிராம் ஹஷிஸ் போதைப்பொருள், வேகன் ஆர் ரக கார், மூன்று போதைப்பொருள் டேப்லெட் , மூன்று கையடக்கத் தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

Friday, March 8, 2024

மகன் தன்னுடன் கட்டாய உறவு கொண்டதை மறைத்த சிங்களத் தாய்-இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்..!


59 வயது தாயை பாலியல் துஷ்பி ரயோகம் செய்த குற்றச்சாட்டில் 20 வயது இளைஞர் ஒருவர் நேற்று (6) களுத்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 20 வயதுடைய களுத்துறை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

இவர் கடந்த 4 ஆம் திகதி தனது தாயை பா லியல் துஷ்பிர யோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட தாய் சுகயீனமடைந்து ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் பாலி யல் துஷ்பிர யோகத்துக்கு உள்ளாகியதுள்ளதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

விசாரணையில் சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் சம்பவத்தின் போது அவர் போதையில் இருந்துள்ளதாகவும் அவருக்கு எதுவும் நினைவில்லை எனவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இதே வேளை மகன் தன்னை வல்லுறவுக்குள்ளானததை தாயார் முதலில் மறுத்தார் எனவும் தெரியவருகின்றது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கனடாவில் சிங்களக் குடும்பத்தை ஒரே நாளில் கொலை செய்த 19 வயது சொய்சா நீதிமன்றில் கூறியது என்ன?

கனடாவின் ஒடாவாவின் புறநகர் பகுதியான பெர்ஹெவனில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 06 இலங்கையர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய இலங்கையை சேர்ந்த இளைஞன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

அங்கு, சந்தேக நபர் மிகக் குறைவாகவே பேசியுள்ளதாகவும், நீதிமன்றத்தில் மீண்டும் அமர்வதற்கு முன்பு தனது பெயரையும் பிறந்த இடத்தையும் மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் 14ம் திகதி அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

சந்தேகநபர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய 6 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும், இந்த சந்தேக நபர் விக்கிரமசிங்க குடும்பத்தை ஏன் கொலை செய்தார் என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை.

5 பேரின் பெயர்களை குறிப்பிட்டு, அவர்களிடம் பேச வேண்டாம் என நீதிமன்றம் சந்தேகநபருக்கு உத்தரவிட்டுள்ளது.

அவர்களில் ஒருவரான தனுஷ்க விக்கிரமசிங்க படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கனடாவில் கல்வி கற்கும் ஃபேப்ரியோ டி சொய்சா என்ற 19 வயதுடைய இலங்கை இளைஞரே இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த படுகொலையில் பயங்கரவாதி கூரிய ஆயுதத்தை பயன்படுத்தியதாக கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் கொலை செய்யப்பட்ட குடும்பத்துடன் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

புதன்கிழமை இரவு 10:52 மணியளவில் 911 என்ற எண்ணுக்கு இரண்டு அழைப்புகள் வந்ததாகக் ஒட்டாவா பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சந்தேக நபரை சம்பவ இடத்திலேயே கைது செய்துள்ளனர்.

கொலைச் சம்பவத்திற்கு முன்னர் இந்த இலங்கைக் குடும்பத்திடமிருந்து பொலிஸாருக்கு எவ்வித முறைப்பாடும் கிடைக்கவில்லை என ஒட்டாவா பொலிஸ் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் வருமாறு:

தாய் – தர்ஷனி பண்டாரநாயக்க – 35 வயது
இனுக விக்கிரமசிங்க – 07 வயது
அஸ்வினி விக்கிரமசிங்க – 04 வயது
றின்யானா விக்கிரமசிங்க – 02 வயது
கெலீ விக்கிரமசிங்க – 02 மாதங்கள்

காமினி அமரகோன் என்ற 40 வயதுடைய நபரே கொல்லப்பட்ட மற்றைய நபராவார்.

குழந்தைகளின் தந்தையான தனுஷ்க விக்கிரமசிங்க படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை எதிர்கொண்டவர்கள் சமீபத்தில் கனடாவுக்கு குடிபெயர்ந்துள்ள நிலையில், இரண்டு மாத வயதுடைய இளைய மகள் மட்டுமே கனடாவில் பிறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சுமார் ஒரு மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஒட்டாவாவில் இதுபோன்ற படுகொலைகள் ஒரு அரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

கடந்த மூன்று தசாப்தங்களில் தலைநகரில் நடந்த மிகக் கொடூரமான படுகொலை இது என்று கனேடிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த படுகொலைக்கு கண்டனம் தெரிவித்த கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உயிரிழந்த இலங்கை குடும்ப உறுப்பினர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்தார்.

Thursday, March 7, 2024

கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 இலங்கையர்களைச் சுட்டுக் கொன்ற 19 வயது இலங்கை மாணவன்!!



கனடாவில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 6 இலங்கையர்கள் உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.இச்சம்பவம் கனடா தலைநகர் ஒட்டாவாவில் இடம்பெற்றுள்ளது.மேலும் குறித்த சம்பவத்தில் இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தாய் மற்றும் பிள்ளைகள் உயிரிழந்துள்ளதுடன் தந்தை பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்தக் குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்தனர்.

கனடாவில் 6 இலங்கையர்கள் படுகொலை தொடர்பில் 19 வயது டைய இலங்கை மாணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கைப் பிரஜையான Febrio De-Zoysa, என்ற 19 வயது ஆண் மீது ஆறு முதல்தர கொலை மற்றும் ஒரு கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்L கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் ஒரு மாணவர் என்றும், அப்போது வீட்டில் வசித்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job