Saturday, March 9, 2024

கிளிநொச்சி அரச அலுவலத்தில் மாணவியுடன் ரியூசன் வாத்தியான உத்தியோகத்தர் பாலியல் உறவு!! பெண் பொலிசார் சுற்றி வளைப்பு!! வீடியோ


கிளிநொச்சியிலுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்துக்குள் ஆட்களற்ற நிலையில், நீண்டநேரம் அலுவலகத்தை பூட்டிவிட்டு உள்ளேயிருந்த அலுவலரும், உயர்தர மாணவியொருவரும் பொலிஸ் விசாரணையின் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (9) பிற்பகல் இந்த சம்பவம் நடந்தது.

கிளிநொச்சியில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் சனிக்கிழமையான இன்று மாலை திறக்கப்பட்டு இருவர் உள்ளே சென்றுள்ளனர். இதனையடுத்து சந்தேகமடைந்த சிலர் அங்கு சென்றுள்ளனர். அலுவலக கதவுகள் பூட்டப்பட்டு இருவரும் உள்ளே நீண்டநேரம் தங்கியிருந்தனர்.

அலுவலகத்தின் குளியளறையும் பாவிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து கழிவு நீர் வெளியேறியதும் அவதானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதும், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் அலுவலகத்தை திறக்குமாறு பணித்துள்ளனர்.

பூட்டப்பட்டிருந்த அலுவலகத்தை திறந்து வெளியே வந்தவர், சாரம் அணிந்திருந்தார். தன்னை அந்த அலுவலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் என அடையாளப்படுத்தியுள்ளார்.

வேறு நபர்கள் இருக்கின்றார்களா என அந்த உத்தியோகத்தரிடம் பொலிசார் வினவியபோது, தனது நண்பர் இருப்பதாக கூறியுள்ளார்.

அறையை சோதனையிட்ட பெண் பொலிசார், அங்கு பெண் ஒருவர் இருப்பதை அவதானித்து அவரிடம் வினவினர்.

அந்த அலுவலகத்தை தானே பராமரிப்பதாகவும், மாலை நேரங்களில் ஓய்வு பெறுவதற்காக இங்கு வருவதாகவும் தெரிவித்த அவர், அந்த பெண் தனது நண்பியென்றும், மலசலகூடத்தை பயன்படுத்தவே வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த பெண்ணின் அடையாள அட்டையை பரிசோதித்த பொலிசார், அவர் 20 வயதானவர் என கண்டறிந்தனர். இதனால், அவர்கள் மீது சட்டப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

ஆனாலும், சனிக்கிழமையில் அலுவலகத்தை பயன்படுத்தியமை தொடர்பில் பொலிஸ் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த ஆண் உத்தியோகத்தர் கிளிநொச்சி நகரில் உள்ள பிரபல தனியார் கல்வி நிலையம் ஒன்றில் பிரதான பாடம் ஒன்றை கற்பித்து வருகிறார். அவருடன் அலுவலகத்தில் தங்கியிருந்த பெண்ணும் அக்கல்வி நிலையத்தில் கல்வி கற்று வந்த மாணவி எனவும் தெரிய வந்துள்ளது.

தனியார் கல்வி நிலையங்களுக்கு பெண் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர் தமது பிள்ளைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என பொலிசார் அறிவுறுத்துகின்றனர். தமது பிள்ளைகளுக்கு உறவுகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பிள்ளைகளின் நடத்தை தொடர்பில் அக்கறை செலுத்த வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் திறன் விருத்தி மண்டபம் மற்றும் அரச சுற்றுலாவிடுதி ஆகிய பகுதிகள் அமைத்துள்ள வளாகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


0 comments

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job