Saturday, March 9, 2024

பிறந்தநாளில் கம்பஸ் பெட்டை வைத்த போதைப் பார்ட்டி!! 3 விப ச்சாரிகள், 5 மாணவிகள் உட்பட 27 பேர் கைது!! நடந்து என்ன?

சர்வதேச மகளிர் தினமான நேற்று (08) இரவு பல்கலைக்கழக மாணவி ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு பேஸ்புக் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்ட விருந்தில், பல்கலைக்கழக மாணவிகள் ஐவர் உட்பட இருபத்தேழு பேரை போதைப்பொருள் பாவித்துக் கொண்டிருந்த குற்றச்சாட்டில் கஹதுடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் ஐந்து மாணவிகள் மற்றும் 12 ஆண் மாணவர்கள் உட்பட இருபத்தேழு பேர் இங்கு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் மூவர் பாலி யல் தொழிலாளிகள் ஆவர்.

காலி பிரதேசத்தைச் சேர்ந்த நண்பர்கள் நால்வர் வாடகைக்கு எடுத்த காரில் விருந்துக்கு போதைப்பொருள் கொண்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

தியத்தலாவ பிரதேசத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவி, ஹோமாகம உடுவான பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மாதம் 45,000 ரூபா வாடகை செலுத்தி தங்கியிருக்கிறார். அந்த குடியிருப்பிலேயே அவரது இருபத்தி இரண்டாவது பிறந்தநாளை முன்னிட்டு இந்த விருந்து இடம்பெற்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 20 மில்லிகிராம் ஹஷிஸ் போதைப்பொருள், வேகன் ஆர் ரக கார், மூன்று போதைப்பொருள் டேப்லெட் , மூன்று கையடக்கத் தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

0 comments

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job