Thursday, March 7, 2024

கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 இலங்கையர்களைச் சுட்டுக் கொன்ற 19 வயது இலங்கை மாணவன்!!



கனடாவில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 6 இலங்கையர்கள் உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.இச்சம்பவம் கனடா தலைநகர் ஒட்டாவாவில் இடம்பெற்றுள்ளது.மேலும் குறித்த சம்பவத்தில் இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தாய் மற்றும் பிள்ளைகள் உயிரிழந்துள்ளதுடன் தந்தை பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்தக் குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்தனர்.

கனடாவில் 6 இலங்கையர்கள் படுகொலை தொடர்பில் 19 வயது டைய இலங்கை மாணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கைப் பிரஜையான Febrio De-Zoysa, என்ற 19 வயது ஆண் மீது ஆறு முதல்தர கொலை மற்றும் ஒரு கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்L கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் ஒரு மாணவர் என்றும், அப்போது வீட்டில் வசித்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

0 comments

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job