Wednesday, March 13, 2024

ஹொட்டல் அறையில் காதலியை கொன்றுவிட்டு, தூக்கில் தொங்கிய 52 வயது காதலன்: பொத்துவிலில் சம்பவம்


ஹொட்டல் அறையில் காதலியை கொன்றுவிட்டு, தூக்கில் தொங்கிய 52 வயது காதலன்: பொத்துவிலில் சம்பவம்!

படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரின் சடலம் பொத்துவில், அறுகம்பே பகுதியில் உள்ள ஹோட்டல் அறையொன்றில் இருந்து நேற்று (12) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதன் அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலமும் காணப்பட்டதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண் மஹகளுகல பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவர் எனவும், ஆண் நபர் 52 வயதான உல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவருக்கும் தொடர்பு இருந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தம்பதியினர் நேற்று (12) அறையொன்றை முன்பதிவு செய்துவிட்டு குறித்த விடுதிக்கு வந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் நேற்று (12) பிற்பகல் ஆகியும் அவர்கள் இருவரும் அறையை விட்டு வெளியே வராததால் ஹோட்டல் உரிமையாளர் இது குறித்து அறுகம்பே சுற்றுலா பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே அவர்களின் சடலங்கள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இந்தக் குற்றங்கள் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

0 comments

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job