This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, May 4, 2025

சிறுமியை போதைப்பொருள் கொடுத்து அடைத்து வைத்து வல் லுறவுக் குள்ளாக்கிய இலங்கைத் தமிழன் கைது!


சிறுமியை போதைப்பொருள் கொடுத்து அடைத்து வைத்து வல் லுறவுக் குள்ளாக்கிய இலங்கைத் தமிழன் கைது!

கனடாவில் 14 வயதான சிறுமியை பல நாட்களாக வீடொன்றில் அடைத்து வைத்து, போதைப்பொருள் கொடுத்து பா லியல் வல் லு றவுக்கு உள்ளாக்கிய இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அஜாக்ஸைச் சேர்ந்த 30 வயதான கௌரிசங்கர் கதிர்காமநாதன் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

அஜாக்ஸில் 14 வயது சிறுமி பல நாட்களாக பா லியல் வன்கொ டுமைக்கு ஆளாக்கப்பட்டு வலுக்கட்டாயமாக அடைத்து வைக்கப்பட்டதாக ஹாமில்டன் காவல்துறையினரிடமிருந்து தகவல் கிடைத்ததை அடுத்து, சிறப்பு பாதிக்கப்பட்டவர்கள் பிரிவு அதிகாரிகள் புதன்கிழமை விசாரணையைத் தொடங்கியதாக டர்ஹாம் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.

ஹாமில்டனை சேர்ந்த சிறுமியை, ஒரு நபர் அஜாக்ஸுக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது, அங்கு “சிறுமி பல நாட்களாக அடைத்து வைக்கப்பட்டு பாலி யல் வன்கொ டுமைக்கு ஆளானார்”. என பொலிசார் தெரிவித்தனர்.

பின்னர் ஒரு சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

அஜாக்ஸைச் சேர்ந்த 30 வயதான கௌரிசங்கர் கதிர்காமநாதன் மீது ஐந்து பா லியல் வன் கொ டுமை குற்றச்சாட்டுகள், ஐந்து பாலி யல் தலையீடு குற்றச்சாட்டுகள், அத்துடன் வலுக்கட்டாயமாக அடைத்து வைத்தல், அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல், மற்றும் ஒரு குற்றத்தைச் செய்வதற்கு/போதைமருந்து வழங்கிய ஆகிய தலா ஒரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

பிணை விசாரணைக்காகக் காத்திருக்கும் போது குற்றம் சாட்டப்பட்டவர் காவலில் வைக்கப்பட்டார்.

“பாதிக்கப்பட்டவரும் குற்றம் சாட்டப்பட்டவரும் பரஸ்பர தொடர்பு மூலம் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள்” என்று சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் பொலிசார் கூறினர்.

பெண் கரும்புலியை நேரில் கண்ட அதிர்ச்சியில் 2 வாரம் தூக்கமில்லாமல் இருந்த மைத்திரி!


பெண் கரும்புலியை நேரில் கண்ட அதிர்ச்சியில் 2 வாரம் தூக்கமில்லாமல் இருந்த மைத்திரி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விவசாய அமைச்சராக இருந்தபோது 2008 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேர் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது இந்த வாரம் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தெரியவந்தது.

புதன்கிழமை விசாரணை தொடங்கியபோது, மொரிஸ் என்ற செல்வராஜா கிருபாகரன் மற்றும் தனுஷ் என்ற தம்யையா பிரகாஷ் ஆகிய இருவரின் சட்டத்தரணிகள் தங்கள் வாடிக்கையாளர்களை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றத்தை கோரினர். வழக்குத் தொடரை வழிநடத்திய அரச சட்டத்தரணி தம்மிக உடவத்த, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்குவதை எதிர்த்தார், மேலும் வழக்குத் தொடரின் ஆட்சேபனையை ஏற்றுக்கொண்டு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சப்புவிட பிணை வழங்குவதற்கான கோரிக்கையை நிராகரித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களை எந்த நிபந்தனையின் கீழும் பிணையில் விடுவிக்குமாறு பிரதிவாதிகள் கோரியிருந்தாலும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான விசாரணை இப்போது தொடங்கியுள்ளதால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் இப்போது பிணையில் விடுவிக்கப்பட்டால் அது வழக்கிற்கு தடையாக இருக்கும் என்று உடவத்த கூறினார்.

ஒக்டோபர் 9, 2008 அன்று பொரலஸ்கமுவவில் நடந்த தாக்குதலில் மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு அதிகாரிகள் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

சண்முகராசா கஜாலினி என அடையாளம் காணப்பட்ட தற்கொலை குண்டுதாரி சிறிசேனவை கொலை செய்யும் நோக்கில் தாக்குதலை நடத்த உதவியதாகவும், உடந்தையாக செயல்பட்டதாகவும் உட்பட 17 குற்றச்சாட்டுகளின் கீழ் இரண்டு விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

புதன்கிழமை சாட்சியமளித்த முன்னாள் ஜனாதிபதி சிறிசேன, இந்த சம்பவத்தால் மிகவும் அதிர்ச்சியடைந்ததாகவும், அதன் பிறகு சுமார் இரண்டு வாரங்கள் கடுமையான மன அழுத்தத்தால் அவதிப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். சம்பவம் குறித்து எந்த காவல்துறை அதிகாரியும் தனது வாக்குமூலத்தை பதிவு செய்யவில்லை என்றும் சிறிசேன மேலும் கூறினார்.

தாக்குதலை நினைவுகூர்ந்த முன்னாள் ஜனாதிபதி, மொபைல் போனில் யாரோ ஒருவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு பெண் தங்கள் வாகனத்தை நோக்கி வேகமாக நடந்து வருவதைக் கவனித்த பின்னர் தனது ஓட்டுநர் வேகமாக ஓட்டிச் சென்றதாகக் கூறினார். ஓட்டுநரின் விரைவான செயல்களால் குண்டுதாரி தனது வாகனத்தை இடைமறிக்க முடியவில்லை, தமக்கு பின்னால் இருந்த காப்பு வாகனத்தை மோதி வெடிபொருட்களை வெடிக்கச் செய்ததாக முன்னாள் ஜனாதிபதி கூறினார்.

இந்த சம்பவம் 2008 ஆம் ஆண்டு நடந்தாலும், 2024 ஆம் ஆண்டு அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது, மேலும் இந்த வாரம் விசாரணை தொடங்கியது. வழக்கின் மேலதிக விசாரணை செப்டம்பர் 1 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Saturday, May 3, 2025

Sri Lanka tamil news

Sri Lanka tamil news

இராமநாதன் இந்துக்கல்லுாரி ஆசிரியரால் பல தடவைகள் துஸ் பிர யோகம் செய்யப்பட்ட மாணவி அம்சிகா மாடியிலிருந்து குதித்து இறந்தது ஏன்?


இராமநாதன் இந்துக்கல்லுாரி ஆசிரியரால் பல தடவைகள் துஸ் பிர யோகம் செய்யப்பட்ட மாணவி அம்சிகா மாடியிலிருந்து குதித்து இறந்தது ஏன்?

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்.

மாதா பிதா இவர்களுக்கு அடுத்ததாக இவர்களை போன்று பிள்ளைகள் இடத்தில் குரு இருக்க வேண்டும் என்பது நம்பிக்கையாக நியதியாக கருதப்பட்டு வருகின்றது. ஆனால் அவை தற்போது மாற்றம் கண்டுள்ளது.

அண்மையில் கொழும்பு இராமநாதன் இந்துக் கல்லூரியில் கல்வி கற்று வந்த மாணவி ஒருவர் ஐந்தாம் மாடியில் இருந்து விழுந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

கொழும்பு இராமநாதர் இந்துக் கல்லூரியில் கல்வி கற்பிற்கும் கணித பாட ஆசிரியர் குறித்த மாணவியை துஷ் – பிரயோகத்தித்திற்கு உள்ளாக்கினார். இது தொடர்பாக பாடசாலை சமூகத்திடம் முறையிட்ட போதும் பாடசாலை நிர்வாகம் மாணவியின் மீது போலியாக மனநிலை சரியில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து ஆசிரியரை காப்பாற்றினார்கள்.

இந்த விடயம் தொடர்பில் மாணவிக்கு மன அழுத்தம் மற்றும் அவமானம் ஏற்பட்ட நிலையில் மாணவி விரக்தியடைந்த நிலையில், பாடசாலை நிர்வாகமும் ஆசிரியருக்கு துணை நின்றதால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாமல் பெற்றோர்கள் இருந்த சமயத்தில் குறித்த மாணவி மன அழுத்தம் மற்றும் அவமானம் தாங்க முடியாமல் ஐந்தாம் மாடியில் இருந்து தற் கொலை செய்து கொண்டார்.

குறித்த ஆசிரியர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவர். இதற்கு முழுப் பொறுப்பும் பாடசாலை சமூகமே ஆகும். இவ்வாறு குறித்த பாடசாலையில் இது தொடர்பில் பல்வேறு மாணவர்களும் பாதிப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் தோன்றுகின்றது. இங்கு கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோரகள் தங்களது பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறான சம்பவம் இலங்கை முழுவதுமாக உள்ள சில பாடசாலைகளில் இடம்பெற்று வருகின்றது. ஆனால் சில விடயங்கள் மூடி மறைக்கப்பட்டு வருகின்றது. ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினரால் உங்களது பிள்ளைகளின் கல்வியை சீர்குலைத்து விடுவோம் என்று மிரட்டும் சந்தர்ப்பத்தில் இவ்வாறான விடயம் மறைக்கப்பட்டு வருகின்றது.

ஒட்டு மொத்த பெற்றோர்களுகளும் தங்களது பெண் பிள்ளைகளின் விடயத்தில் அக்கறை செலுத்துங்கள், பாடசாலை முடிந்து வரும் பிள்ளகைளிடம் அன்றைய நாள் நிலைமை பற்றி கலந்துரையாடல் செய்யுங்கள்.

தரம் 11ல் கல்வி பயிலும் மாணவிக்கு நடந்த சம்பவம் போன்று பல்வேறு இடங்களில் நடைபெறுகின்றது. இனிவரும் காலங்களில் இவ்வாறு நடாக்காது இருக்க அனைவரும் முன்வாருங்கள். குறித்த ஆசிரியருக்கு தகுந்த தண்டனையை கல்வி சமூகம் வழங்காவிடில் கல்வி சமூகமும் பாலியல் சமூகமாக மாறுவதற்கு வழிவகுத்து வருவது தெட்டதெளிவாக விளங்குகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை. குறித்த ஆசிரியருக்கும் பொலிஸாருக்கும் ஏதேனும் தொடர்புகள் உள்ளதா எனும் சந்தேகம் எழுகிறது.

குறித்த ஆசிரியருக்கும், இவ்வாறான செயல்களில் ஈடுபடும் ஏனைய ஆசிரியர்களுக்கும் தண்டை வழங்கும் வரை மற்றும் இவர்கள் திருந்தும் வரை இதை பகிர்ந்து பெண் பிள்ளைகளின் வாழ்க்கையில் ஒளியேற்றுங்கள்.

முல்லைத்தீவில் தலைவரின் புகைப்படத்துடன் வீட்டுக் கட்சிக்கு நோட்டீஸ் அடித்து வாக்கு கேட்ட வெங்காயம்!!


முல்லைத்தீவில் தலைவரின் புகைப்படத்துடன் வீட்டுக் கட்சிக்கு நோட்டீஸ் அடித்து வாக்கு கேட்ட வெங்காயம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறை பற்ற பிரதேச சபை தேர்தலுக்காக வீட்டு சின்னத்தில் தமிழரசு கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தனது போஸ்டர்கள் கொடுத்த அச்சிடப்பட்ட சம்பவம் ஒன்று தொடர்பில் போலீசார் வேட்பாளரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

முள்ளியவளை கிழக்கு பிரதேசத்தில் வேட்பாளர் பல வீடுகளுக்கு சென்று வே.பிரபாகரன் அவர்களின் படம் பொறிக்கப்பட்ட வீட்டு சின்னத்துக்கு புள்ளடி இடுமாறு துண்டு பிரசுரங்களை வழங்கி வந்துள்ளார்.

இந்த சம்பவம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து குறித்த பகுதியில் போலீசார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதுடன் இவ்வாறு துண்டு பிரசுரங்கள் வாங்கிய மக்களிடம் வாக்குமூலம் பெற்று வழக்கு பதிவு ஒன்று செய்துள்ளார்கள்.

இதேவேளை குறித்த வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளரை வலைவீசி தேடு நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றார்கள், இதுவரை அவர் எந்தவித தொடர்புகள் அற்ற நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை வேட்பாளரின் இந்த செயற்பாட்டுக்கு ஏனைய கட்சிகளும் விசனம் வெளியிட்டுள்ளார்.

யாழில் டக்ளஸ் மீது தாக்குதல்!! ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!!


யாழில் டக்ளஸ் மீது தாக்குதல்!! ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!!

யாழ். ஊர்காவற்றுறையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் மேற்கொள்ள முயன்றவர் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஊர்காவற்றுறை, கரம்பன் பகுதியில் நேற்று மாலை தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது அந்தப் பகுதிக்குச் சென்ற முன்னாள் ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவர் குழப்பம் விளைவிக்கும் வகையில் அவருடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

பலர் சமரசம் செய்ய முயன்றபோதும், அதனை ஏற்க மறுத்து, டக்ளஸ் தேவானந்தாவை நெருங்கித் தர்க்கத்தில் ஈடுபட்ட அவர், திடீரென டக்ளஸ் தேவானந்தா மீது தாக்க முற்பட்டதுடன் கூட்டத்தினரால் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.

அந்தப் பகுதியில் பிரசார நடவடிக்கை நிறைவடைந்த பின்னர், அந்த நபரின் வீட்டிற்கு சென்ற சிலர் அவரை தாக்கப்பட்டுள்ளனர்.

இதனால் படுகாயமடைந்த அவர் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Friday, May 2, 2025

மாங்குளத்தில் சுவிஸ் அங்கிள் நையப்புடைக்கப்பட்டதற்கு காரணம் லட்சக் கணக்கில் காசு வாங்கிய பின் ஏமாற்றிய யுவதியின் லீலைகளா?


மாங்குளத்தில் சுவிஸ் அங்கிள் நையப்புடைக்கப்பட்டதற்கு காரணம் லட்சக் கணக்கில் காசு வாங்கிய பின் ஏமாற்றிய யுவதியின் லீலைகளா?

மாங்குளம், பனிக்கன்குளம் பகுதியில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்து, பெண்களை தாக்கியதாக குறிப்பிட்டு நபர் ஒருவர் அயலவர்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டார்.

2 வருடங்களின் முன்னரும் இதேநபர், இதே வீட்டுக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டு, பொலிசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர், நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு மனநல காரணங்களின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

யாழ்ப்பாணம், பருத்தித்துறையை பூர்வீகமாகவும் தற்போது சுவிஸில் வசிப்பவருமான நபர் ஒருவரே இவ்வாறு கட்டி வைத்து நையப்புடைக்கப்பட்டுள்ளார்.

தான் சில வருடங்களின் முன்னர் வரை பனிக்கன் குளத்தை சேர்ந்த பெண்ணொருவருடன் நட்பாக இருந்ததாகவும், அவருக்கு பெருமளவு பணம் அனுப்பியுள்ளதாகவும் கட்டிவைத்து நையப்புடைக்கப்பட்ட நபர் கூறுகிறார்.

அந்த பெண் தற்போது, திருமண வாழ்க்கைக்குள் நுழைந்த பின்னர், சுவிஸ் நபர் தொந்தரவு கொடுப்பதே சர்ச்சையின் பின்னணி.

2 வருடங்களின் முன்னர் அந்த நபர், குறிப்பிட்ட பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்த போது அயலவர்களால் பிடித்து தாக்கப்பட்டார்.

நேற்றும் அந்த நபர் பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். அந்த பெண்ணையும், தாயாரையும் அவர் தாக்கியதாக முறையிடப்பட்டுள்ளது. அயலவர்கள் அந்த நபரை பிடித்து, மரத்தில் கட்டிவைத்து நையப்புடைத்துள்ளனர்.

பின்னர் மாங்குளம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளதால் மாங்குளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Thursday, May 1, 2025

யாழ் மாநகரசபையில் ஜேவிபிக்கு வாக்களித்து வாக்கை வீணாக்காதீர்கள்! வழக்கு தொடர்ந்து அவரை வெளியேற்றுவோம் - சுமந்திரன்


யாழ் மாநகரசபையில் ஜேவிபிக்கு வாக்களித்து வாக்கை வீணாக்காதீர்கள்! வழக்கு தொடர்ந்து அவரை வெளியேற்றுவோம் - சுமந்திரன்

தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாநகர சபை முதல்வர் வேட்பாளர் சுந்தரமூர்த்தி கபிலன் மாநகர சபை முதல்வராக அல்ல, யாழ் மாநகர சபையின் உறுப்பினராக கூட பதவி வகிக்க முடியாது என தெரிவித்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், அவர் உறுப்பினராக வந்தாலே வழக்கு தொடர்ந்து அவரை வெளியேற்றுவோம் – என்றார்.

நேர்காணல் ஒன்றில் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்தார்.

யாழ் மாநகர சபையின் எல்லைக்குள் வசிக்காத தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாநகர சபை முதல்வர் வேட்பாளர் சுந்தரமூர்த்தி கபிலன் மாநகர சபை முதல்வராக அல்ல, யாழ் மாநகர சபையின் உறுப்பினராக கூட பதவி வகிக்க முடியாது. அவர் உறுப்பினராக வந்தாலே வழக்கு தொடர்ந்து அவரை வெளியேற்றுவோம் – என்றார்.

கொழும்பு தொடர்மாடியில் இருந்து குதித்த 16 பாடசாலை மாணவி பலி!! ஏன் குதித்தார்?


கொழும்பு தொடர்மாடியில் இருந்து குதித்த 16 பாடசாலை மாணவி பலி!! ஏன் குதித்தார்?

“கொழும்பு – கொட்டாஞ்சேனை , கல்பொத்த வீதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றின் மேல் மாடியிலிருந்து கீழே குதித்து பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்”
இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை (29) இடம் பெற்றுள்ளது. 

கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் 11 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த மாணவி தொடர்மாடி குடியிருப்பின் மேல் மாடிக்கு சென்று மேசை ஒன்றில் ஏறி நின்று கீழே குதித்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

காயமடைந்த பாடசாலை மாணவி சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

மாணவியின் உயிரிழப்புக்கான் காரணம் வெளியாத நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் 13 வயதுச் சிறுமியை சீரழித்தவர்களைக் காப்பாற்ற பரிமாறப்பட்ட 20 லட்சம் ரூபா பணம்!! அதிர்ச்சித் தகவல்கள்!!



யாழில் சிறுமி து ஷ்பிர யோகம் குற்றவாளிகளை தப்ப வைக்க கை மாறிய 20 இலட்சம் ரூபா பணம்!

வட்டுக்கோட்டை – தொல்புரம் பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியை சீரழி த்த மரக்காலையின் உரிமையாளரான, வட்டுக்கோட்டை பொலிஸாரால் பொடி மல்லி என்று அழைக்கப்படும் சின்னத்தம்பி என்பவரிடம் வட்டுக்கோட்டை பொலிஸார் இலஞ்சம் பெற்றுவிட்டு அவர் உட்பட மூவரை வழக்கில் இருந்து விடுவித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் கடந்த 3 வருடங்களாக சிறுமி ஒருவர் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளார்.

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாத சிறுமி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்தார். அந்தவகையில் முதற்கட்டமாக இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மூவர் கைது செய்யப்பட்டனர். குறித்த பெண்கள் இந்த தவறான நடத்தைக்கு உடந்தையாக இருந்த காரணத்தினாலேயே இவ்வாறு இரண்டு பெண்களை கைது செய்தனர்.

இந்நிலையில் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்கள் மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பின்னர் மேலும் இரண்டு ஆண்கள் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். இவ்வாறான சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி சிறுவர் காப்பகத்தில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய மரக்காலையின் உரிமையாளரான சின்னத்தம்பிக்கும் வட்டுக்கோட்டை பொலிசாருக்கும் இடையே நெருக்கமான உறவு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் பொலிசார் அவரை கைது செய்யாது அவரிடம் இலஞ்சம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் குறித்த மரக்காலை உரிமையாளரின் வீட்டிற்கு சென்ற வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிசார், அவரை பொலிஸ் நிலைய முச்சக்கர வண்டியில் ஏற்றிக்கொண்டு சங்கானைப் பகுதியிலுள்ள மதுபான நிலையம் ஒன்றுக்கு அழைத்துச் சென்று மூன்று மதுபான போத்தல்களை வாங்கியதுடன் வசந்தா என்ற பெண் ஊடாக 5 லட்சம் ரூபா இலஞ்சமுமம் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

மேலும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் தொல்புரத்தை சேர்ந்த ஜனனி என்ற பெண்ணொருவர் கடமை புரிகின்றார். இவர் மரக்காலை உரிமையாளரான சின்னத்தம்பி என்பவருக்கு உறவுக்காரர் ஆவார். இந்நிலையில் சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் சிறுமி வழங்கிய முறைப்பாட்டில் உள்ள சின்னத்தம்பி, நந்தகுமார் உட்பட நால்வரது பெயர்களை நீக்கியதுடன் அவர்களை இந்த வழக்கில் இருந்து தப்பிக்க வைப்பதற்கு உதவி புரிந்துள்ளார். இதற்கு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகமும் உடந்தையாக இருந்துள்ளது. இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக மொத்தமாக 20 இலட்சம் ரூபா பணம் கைமாறியுள்ளதாகவும், இவர்களை விட இன்னமும் பலர் அந்த சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய வழக்கில் இன்னமும் கைது செய்யப்படாமல் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிறுமியை சீர ழித்த கொடூரர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுக்கொடுக்காது தமது சுயலாபங்களுக்காக வட்டுக்கோட்டை பொலிஸாரும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி அலுவலகமும் இலஞ்சத்தை வாங்கிவிட்டு இவ்வாறு குற்றவாளியை தப்பிக்க வைத்தது மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த இலஞ்சத்தை பெற்ற பொலிஸார் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தினரின் தாய் அல்லது சகோதரிகளுக்கும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் அவர்கள் இவ்வாறுதான் பணத்தினை வாங்கிவிட்டு வழக்கில் இருந்து விலகுவார்களா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகின்றது.