Friday, October 31, 2025
கிளிநொச்சி சமுர்த்தி உத்தியோகர்த்தர் உட்பட 2 பேர் திருட்டுத்தனமாக ஐரோப்பா செல்லும் வழியில் கடும் சித்திரவதையின் பின் சுட்டுக் கொலை!!
கிளிநொச்சி சமுர்த்தி உத்தியோகர்த்தர் உட்பட 2 பேர் திருட்டுத்தனமாக ஐரோப்பா செல்லும் வழியில் கடும் சித்திரவதையின் பின் சுட்டுக் கொலை!!
கிளிநொச்சி உருத்திரபுரத்தைச்சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஆட்கடத்தல் காரர்கள் மூலம் சட்டவிரோதமாக வெளிநாடு சென்ற நிலையில் வெலாரஸ் எல்லையில் அந்நாட்டு இராணுவத்தினரால் சுடப்பட்டு உயிரிழந்தார். குறித்த உத்தியோகத்தருடன் மற்றுமொரு இலங்கையரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந் நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன. குறித்த இருவரும் பெலாரஸ் நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ள அடர்காட்டுப் பகுதியில் விலங்குகள் நுழையும் பகுதிக்குள்ளால் மற்றை நாட்டுக்குள் நுழைய முற்பட்ட போது அங்கு வந்திருந்த குறித்த நாட்டு இராணுவத்தினர் சிலர் அவர்களை கடும் சித்திரவதைக்குள்ளாக்கி சுட்டுக் கொன்றதுடன் உடலை ஆற்றுக்குள் வீசியதாகத் தெரியவருகின்றது. 2021ம் ஆண்டிலிருந்து இவ்வாறான ஆட்கடத்தல்காரர்கள் மூலம் கொண்டு வரப்பட்ட 78 பேர் அந்த நாட்டு இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரியவருகின்றது.
Thursday, October 30, 2025
மாணவியின் அங்கத்தில் தொட்ட விளையாட்டு ஆசிரியர் கைது!!
மாணவியின் அங்கத்தில் தொட்ட விளையாட்டு ஆசிரியர் கைது!!
விளையாட்டு பயிற்சிகளுக்கிடையில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரின் மார்பகங்களை பிடித்து தள்ளிவிட்ட ஆசிரியர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலையொன்றின் விளையாட்டு துறை ஆசிரியரான 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகார சபையின் தகவலுக்கமைய மாரவில பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகம், பாதிக்கப்பட்ட மாணவியிடம் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் சந்தேக நபரான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Wednesday, October 29, 2025
வெடிகுண்டு விவகாரம்!! இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட வவுனியா இளைஞர்கள் 3 பேர் கட்டுநாயக்காவில் கைது!!
வெடிகுண்டு விவகாரம்!! இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட வவுனியா இளைஞர்கள் 3 பேர் கட்டுநாயக்காவில் கைது!!
வவுனியா – செட்டிகுளம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான குண்டுகள் குறித்து பொலிஸா் விசாரணைகள் தொடங்கியதைத் தொடர்ந்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற மூன்று தமிழ் பிரஜைகள் இந்திய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டனர்.
புதன்கிழமை (29) அன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர், அவர்களை, விமான நிலைய குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
அந்த மூவரும், புதன்கிழமை (29) அன்று அதிகாலை 12.37 மணிக்கு இந்தியாவின் சென்னையில் இருந்து 6E-1175 என்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் வவுனியா, செட்டிகுளம், காந்தி நகரில் வசிக்கும் 30 வயதுடையவர். மற்றை இருவரும் வவுனியா, செட்டிகுளம், மெனிக் பாம், 3வது தொகுதி முகவரிகளில் வசிக்கும் 27 வயதுடையவர்கள்.
கைது செய்யப்பட்ட மூவரும் புதன்கிழமை (29) அன்று சுமார் 04.30 மணியளவில் கொழும்பு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் பலத்த பாதுகாப்பின் கீழ் கட்டுநாயக்க விமான நிலையத்திலிரந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.
சமீபத்தில் கிரிபத்கொட பகுதியில் கைது செய்யப்பட்ட ஒருவரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், வவுனியாவின் செட்டிகுளம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, சம்பவத்தில் தொடர்புடைய மூவரும் இந்தியாவுக்குத் தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில், அங்கு கைது செய்யப்பட்டு நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டனர்.
கிளிநொச்சியில் வெளிநாடு செல்ல ஆயத்தமான நிலையில் காணாமல் போன அப்சரன் காட்டுக்குள் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!
கிளிநொச்சியில் வெளிநாடு செல்ல ஆயத்தமான நிலையில் காணாமல் போன அப்சரன் காட்டுக்குள் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!
கிளிநொச்சி – அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட யூனியன் குளம் பகுதியில் வசித்து வந்த இளைஞன் ஒருவர் வீட்டிலிருந்து 1.5 கிலோமீற்றர் தூரத்திலுள்ள காட்டில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
26 வயதுடைய அப்சரன் எனும் இளைஞனே இவ்வாறு #உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
வெளிநாடு செல்லவிருந்த நிலையில் குறித்த இளைஞன் கடந்த 19 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்தார்.
இந்நிலையில் இளைஞனை கண்டுபிடித்துத் தருமாறு கோரி கடந்த 21 ஆம் திகதி கிளி.அக்கராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் இவரது உறவினர்கள் முறைப்பாடு அளித்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த இளைஞன் காட்டில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இளைஞனின் உயிரிழப்பானது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
யாழி்ல் மீற்றர் வட்டிக்கு காசு வாங்கி பப்ஜி விளையாடி தோல்வி!! சாக முயன்ற அகீபன் சிகிச்சை பலனின்றி பலி!
யாழி்ல் மீற்றர் வட்டிக்கு காசு வாங்கி பப்ஜி விளையாடி தோல்வி!! சாக முயன்ற அகீபன் சிகிச்சை பலனின்றி பலி!
வலி கிழக்கு முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அகீபன் சிவகுமார் மரணமடைந்துள்ளான்.
மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடி தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் யாழ் போதனாவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே மரணமானார். ஆனால் இவர் போதைப் பொருள் கிடைக்காமலே தற்கொலை செய்ததாக கருதப்படுகின்றது.
Sunday, October 26, 2025
ஆயுர்வேத மருத்துவருக்கு அல்வா கொடுத்த 22 வயது காதலி, யாழ் இளைஞனுடன் கைது!
ஆயுர்வேத மருத்துவருக்கு அல்வா கொடுத்த 22 வயது காதலி, யாழ் இளைஞனுடன் கைது!
தெஹிவளையில் உள்ள எபினேசர் வீதி அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டில் வசிக்கும் ஆயுர்வேத மருத்துவருக்குச் சொந்தமான ஒரு வீட்டில் தங்கியிருந்த ஒரு காதல் ஜோடியினர், வெளிநாட்டு மதுபானம் மற்றும் மதிப்புமிக்க மின்சாதனங்கள் உட்பட 1.3 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும், நாற்பத்தைந்து லட்சம் ரூபாய்களையும் திருடிக கொண்டு தப்பியோடிய நிலையில், கடந்த 22 ஆம் திகதி நீர்கொழும்பில் தெஹிவளை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
காதலனும் காதலியும் 24 மற்றும் 22 வயதுடையவர்கள், நீர்கொழும்பில் உள்ள ஒரு பச்சை குத்தல் மையத்தில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த ஆயுர்வேத மருத்துவர் ஜெர்மனியில் வசித்து, ஒரு ஆயுர்வேத சிகிச்சை மையத்தை நடத்தி வருகிறார். தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். தெஹிவளையில் உள்ள வீட்டில் யாருமில்லாமல் வெறிச்சோடியதால், நட்பு ரீதியான ஒரு யாழ் இளைஞர் மூலம் அந்த இளம் பெண்ணை அடையாளம் கண்டு, வீட்டைப் பராமரிக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார்.
பின்னர், அந்த மருத்துவர் அந்த வீட்டில் தங்கியிருந்த இளம் பெண்ணுடன் காதல் வயப்பட்டார். மேலும், அவரது முந்தைய குடும்பங்களை விவாகரத்து செய்த பின்னர், அந்த யுவதியை திருமணம் செய்து ஜெர்மனிக்கு அழைத்துச் செல்வதாக உறுதியளித்த பின்னர், விசா கட்டணமாக ரூ.4.5 மில்லியன் தொகையை மூன்று சந்தர்ப்பங்களில் அவரது கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.
கோட்டை பகுதியில் தனக்குத் தெரிந்த ஒரு பிரெஞ்சு நிறுவனத்தின் பிரதிநிதிக்கு விசாவுக்கா பணம் வழங்கப்பட்டதாகவும், அதற்கான ஆவணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் அந்த யுவதி மருத்துவரிடம் கூறியிருந்தார்.
மேலும், அந்த இளம் பெண்ணின் மாதாந்திர செலவுகளுக்காக மூன்று லட்சம் ரூபாய் அனுப்பப்பட்டதாகவும் தகவல் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் இருந்தபோது மருத்துவரின் தானியங்கி டிரெய்லர் அட்டையின் நகல் அவரது கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட்டு, அதன் மூலம் மாதத்திற்கு மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடியாகப் பெற்றதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதற்கிடையில், தனது மனைவி இலங்கை வருவதால், வேறு வீட்டிற்குச் செல்ல தேவையான பணத்தையும் தருவதாக மருத்துவர் கூறியுள்ளார்.
இலங்கை வேலைகள்
கடந்த 6 ஆம் திகதி இலங்கைக்கு வந்த மருத்துவர், அந்த யுவதியின் மொபைல் போனுக்கு அழைத்தார், ஆனால் அது துண்டிக்கப்பட்டது. அவர் வீடு திரும்பியபோது, அவர் பொீதுபோக்காக சேகரித்த மதிப்புமிக்க உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மதுபான போத்தல்கள், கணினிகள் மற்றும் மின்சாதனங்களைத் திருடிக் கொண்டு தப்பிச் சென்றது கண்டறியப்பட்டது. தெஹிவளை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட பின்னர், நீர்கொழும்பில் உள்ள ஒரு தங்கும் விடுதியில், அவரை அறிமுகப்படுத்திய தமிழ் இளைஞனுடன் அவர் கைது செய்யப்பட்டார்.
நெடுந்தீவு பொலிசாருடன் தாயும் மகளும் இரவிரவாக உறவு! சாராயம் விற்கும் ஜெயந்தியின் கேவலங்கள்!! கடைசி மகள் எங்கே?
நெடுந்தீவு பொலிசாருடன் தாயும் மகளும் இரவிரவாக உறவு! சாராயம் விற்கும் ஜெயந்தியின் கேவலங்கள்!! கடைசி மகள் எங்கே?
யாழ் புறநகர் பகுதி பாடசாலை ஒன்றின் விடுதியில் தங்கி கல்வி கற்றுக் கொண்டிருந்த சிந்துஜா என்ற 15 வயது மாணவியும் மேலும் 2 மாணவியும் விடுதியிலிருந்த தப்பி ஓடிய சம்பவம் ஒன்றை கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். அந்த சிந்துஜா என்ற மாணவி பின்னர் கண்டியில் ஆண் ஒருவனுடன் தங்கியிருந்த போது பொலிசாரால் பிடித்துக் கொண்டு வரப்பட்டதும் அறிந்ததே. அந்த சிந்துஜாவின் தாய்தான் ஜெயந்தி. இவள் நெடுந்தீவில் பல்வேறு சமூகப்புறழ்வான செயற்பாடுகளைச் செய்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிஞ்சி என்று அழைக்கப்படும் இவள் 3 திருமணங்கள் முடித்து அவர்கள் 3 பேரையும் தற்போது துரத்திவிட்டதாகத் தெரியவருகின்றது. கிஞ்சியின் மூத்த மகளும் கிஞ்சியுமாக சேர்ந்து நெடுந்தீவில் சாராயம் விற்பதாகவும் அதற்கு அப்பகுதி பொலிசார் உடந்தையாக இருப்பதுடன் கிஞ்சியின் வீ்ட்டிலேயே இரவில் பொலிஸ் அதிகாரி தங்கி நிற்பதாகவும் நெடுந்தீவைச் சேர்ந்த சிலர் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள கிஞ்சியின் வீட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆட்டு விருந்து பொலிஸ் தரப்புக்கு வழங்கப்பட்டு இரவில் குடியும் கூ்த்துமாக பொலிசார் அங்கு திருவிளையாடல்கள் மேற்கொண்டு வருகின்றார்களாம். திருட்டு இறைச்சி விற்பனை மற்றும் சாராய விற்பனை மற்றும் அப்பகுதியில் சாராயம் வாங்க காசு இல்லாத குடிகாரர்கள் வீட்டில் உள்ள பொருட்களை களவாக எடுத்துக் கொண்டு வந்து கிஞ்சியிடம் கொடுத்து சாராயம் வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.. நன்றாக சிங்களம் கதைக்கத் தெரிந்த கிறிஸ்டிவேல் ஜெயந்தியுடன்(கிஞ்சி) கள்ளத் தொடர்பில் இருந்த காரணத்தால் 3 பொலிசாருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதாகவும் ஆனாலும் பொலிசார் தற்போதும் அவளுடனு்ம் மூத்த மகளுடனும் நெருக்கத்தைப் பேணி வருவதாகவும் தெரியவருகின்றது,
அம்மாவுடன் பொலிஸ்கார அங்கிள் படுத்திருப்பதைப் பார்த்த பின்னரே தான் வீட்டை விட்டு வெளியேறியதாக ஏற்கனவே பாடசாலை விடுதியிலிருந்து கற்று வந்த சிந்து என்ற 15 வயது மகள் கடந்த 18ம் திகதி வீட்டை வி்ட்டு வெளியேறி கிஞ்சியின் 2 புருசனுடன் தங்கியிருந்து பலருக்கும் கூறி வருகின்றாராம். மகள் வீட்டை விட்டு வெளியேறிமை தொடர்பாக கிஞ்சி எந்தவித கருசனையும் இல்லாது இருப்பதாகத் தெரியவருகின்றது,
யாழ்ப்பாணததில் பல்வேறு ஊழல்கள் துஸ்பிரயோகங்கள் செய்த பொலிஸ்காரர்களை நெடுந்தீவுக்கு அனுப்புவது வழமையாகும். அந்தப் பொலிஸ்காரர்களுக்கு கிஞ்சியும் மகளும் சொர்க்கத்தகை் காட்டி வருவதால் நெடுத்தீவில் கிஞ்சி உட்பட்டவர்களால் ஏற்பட்டுள்ள சமூகப்புரள்வுகளை பொலிசார் கண்டு கொள்வதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Wednesday, October 22, 2025
பத்மேவை டுபாயில் இரவில் சந்தித்த பியமி!! பத்மே அழகாக தெரிய காரணம் இதுதானாம்!!
பத்மேவை டுபாயில் இரவில் சந்தித்த பியமி!! பத்மே அழகாக தெரிய காரணம் இதுதானாம்!!
நடிகையும், அழகுசாதன உற்பத்தி விற்பனையாளருமான பியூமி ஹன்சமாலி, அண்மையில் கைது செய்யப்பட்ட “கெஹெல்பத்தர பத்மே” உடன் தமக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என மறுத்துள்ளார்.
இன்று வெளியான ஊடக செய்திகளின்படி, பத்மேவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் விவகாரத்தில் குற்றவியல் விசாரணைத் திணைக்களம் (CID) பியூமி ஹன்சமாலியை விசாரித்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பியூமி ஹன்சமாலி தனது பேஸ்புக் பதிவில், 2022 மார்ச் மாதம் துபாயில் நடைபெற்ற புத்தாண்டு விழாவில் பத்மேவை ஒருமுறை மட்டுமே சந்தித்ததாகவும், அந்த சந்திப்பு சாதாரணமானதாக இருந்ததாகவும் விளக்கியுள்ளார்.
“அந்த நிகழ்வில் அவரை முதன்முறையாக அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் பார்த்தேன். அவர்கள் என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். அவர் வெள்ளையாகவும் அழகாகவும் மாற விரும்புவதாக சொன்னதால், என் ‘Piumi Skin’ தயாரிப்புகளை பயன்படுத்தச் சொன்னேன்,” என அவர் எழுதியுள்ளார். பத்மே தற்போது அழகாகத் தெரிகிறார் என்பதால், அவர் அந்த தயாரிப்புகளை பயன்படுத்தியிருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
பத்மேவுடன் எந்தவிதமான நிதி தொடர்பும் இல்லையென பியூமி ஹன்சமாலி குறிப்பிட்டுள்ளதுடன்,
“CID என்னிடம் பண பரிவர்த்தனை குறித்து கேட்டது — ஒருபோதும் இல்லை! எனக்கு போதைப் பொருள் பணம், சட்டவிரோத பணம், அல்லது கருப்பு பணம் தேவையில்லை. நான் என் சொந்த முயற்சியால் ‘Piumi Skin Private Limited’ என்ற நிறுவனத்தை உருவாக்கிய சுயாதீனமான பெண்,” என அவர் தெரிவித்துள்ளார்.
பாதாள உலக குற்றவாளிகளுடன் தமக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என அவர் நகைச்சுவையாக தெரிவித்துள்ளதுடன், அந்த விடயங்களை கண்டு நான் பயப்படுகிறேன் – வீணாக துப்பாக்கி சூட்டில் இறக்க விரும்பவில்லையென்றுள்ளார்.
அவரது தோல் பராமரிப்பு தயாரிப்புகளை “வெள்ளையாகவும் அழகாகவும் மாற” யாரும் பயன்படுத்தலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவ முழு விபரம்: மாத்தறை, வெலிகம பிரதேச சபை தலைவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!
சம்பவ முழு விபரம்: மாத்தறை, வெலிகம பிரதேச சபை தலைவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!
சமகி ஜன பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர என்பவர் இன்று (ஒக்டோபர் 22, 2025) வெலிகம பிரதேச சபை வளாகத்தினுள் வைத்து அடையாளந் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். "மிதிகம லசா" (Midigama Lasa) என்ற புனைப்பெயரால் இவர் அறியப்படுபவர்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த அவர், உடனடியாக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் வழங்கிய தகவலின்படி, சம்பவம் நடந்தது எப்படி என்று தெரியருவதாவது:
காலை வேளையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டபோது, பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர, சபை மண்டபத்தினுள் (Pradeshiya Sabha Chamber) தனது நாற்காலியில் அமர்ந்திருந்தார்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந் தெரியாத இரு நபர்கள் சபையின் உள்ளே நுழைந்து இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
இந்தக் கொலையைச் செய்வதற்கு பிஸ்டல் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் நடந்தவுடன் சந்தேகநபர்கள் இருவரும் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
கொல்லப்பட்டவர் பற்றிய முழு விவரங்கள்:
பெயர்: லசந்த விக்ரமசேகர (Lasantha Wickramasekara) - புனைப்பெயர்: "மிதிகம லசா".
வயது: 38
வசிப்பிடம்: மிதிகம.
அரசியல் : சமகி ஜன பலவேகய - ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சியைச் சேர்ந்தவர், வெலிகம பிரதேச சபைத் தலைவர்.
மேலும்,
பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் குற்றப் பின்னணியை ஒட்டியே இப்படுகொலை நடந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகித்து வருகின்றனர்.
வெலிகம பொலிஸார் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழில் மாணவிகளை காலில் விழ வைத்து பிறந்தநாள் கொண்டாடிய போதைப்பொருள் விற்கும் காவாலி டில்லுவின் வீடு சுற்றிவளைப்பு!! எம்.பி இளங்குமரனுக்கு நன்றி!!
யாழில் மாணவிகளை காலில் விழ வைத்து பிறந்தநாள் கொண்டாடிய போதைப்பொருள் விற்கும் காவாலி டில்லுவின் வீடு சுற்றிவளைப்பு!! எம்.பி இளங்குமரனுக்கு நன்றி!!
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் காவாலிகளை ஒன்று கூட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினர் எனும் குற்றச்சாட்டில் போதைப்பொருள் விற்கும் காவாலி டில்லுவின் வீட்டினை இன்றைய தினம் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தப்பட்டது. தேடுதல் நடவடிக்கையின் போது வீட்டில் காவாலி டில்லு இல்லாத நிலையில் , சந்தேகத்திற்கு இடமான முறையில் வீட்டில் தங்கியிருந்த இரு காவாலிகளை கைது செய்துள்ள பொலிஸார் , வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் காவாலி டில்லு பிறந்த தினத்தினை முன்னிட்டு , பெருமளவான காவாலிகள் ஒன்று கூடி பெருமெடுப்பில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அவை தொடர்பிலான காணொளிகள் ரிக் ரொக்க உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டன.
குறித்த சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது அதிருப்தியை வெளியிட்டு இருந்த நிலையில் ,சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் பகிரங்கமாக கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் , சட்ட விரோதமான முறையில் காவாலிகளை ஒன்று கூட்டியமை , காவாலிகளை வன்முறைக்கு தூண்டும் வகையில் செயற்பட்டமை , சட்டவிரோத சொத்துக்குவிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் காவாலி டில்லுவின் வீட்டில் சோதனை நடாத்த யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் பொலிஸார் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை அனுமதி கோரி இருந்தனர்.
பொலிசாரின் கோரிக்கைக்கு அமைவாக நீதிமன்று அனுமதி வழங்கியதை அடுத்து , இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை காவாலி டில்லுவின் வீட்டினை பொலிஸ் அதிரடி படையினரின் ஒத்துழைப்புடன் , யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் முற்றுகையிட்டு , வீட்டில் தேடுதல் நடாத்தினர்.
வீட்டில் பொலிஸார் தேடுதல் நடாத்திய வேளை காவாலி டில்லுவின் வீட்டில் இல்லாத நிலையில் , வீட்டில் தங்கியிருந்த இரு காவாலிகளையும் பொலிஸார் சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்.
அதேவேளை , வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.










