லண்டனில் இரு வாரங்களுக்கு முன் தமிழ் பெண்களைப் பாலியல்துஸ்பிரயோகம் செய்தவர் என்று குற்றம்சாட்டப்பட்ட புளிக்கள் முரளிகிருஷ்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்க்பட்டு இருந்தது. ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்ந்த குற்றத்திற்காகவும் அவர் மீது பாலியல் வன்புணர்வுக்கு முயன்றமைக்காகவும் அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டணை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இத்தண்டனை விதிக்கப்பட்டு இரு வாரங்களுக்குள்ளாக அட்லான்டிக் சமுத்திரத்தின் மறுமுனையில் கனடாவில் 44 வயது நிரம்பிய பிரவின் என்ற ஆன்மிக குருவாகக் கருதப்பட்டவரை யோர்க் பொலிஸார் தமிழ் புத்தாண்டு அன்று கைது செய்துள்ளனர். தமிழ் திருமணங்களை முன்நின்று நடாத்துகின்ற இவர், மாணவர்களுக்கு ஆன்மீகமும் கற்பிப்பவராக இருந்தள்ளார். இவர் தான் வாழ்கின்ற பிக்கரிங் பகுதியில் உள்ள வாழ்விடத்தில் இருந்து ஆன்மிக – சமயக் கல்வியைப் போதித்து வருபவர் என யோர்க் பிரதேச பொலிஸாரின் பாதிக்கப்பட்டவர்களுக்கான விசேட பிரிவு தெரிவிக்கின்றது.
குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரவின் ரனிஜன் தன்னிடம் ஆன்மீக – சமயக் கல்வி கற்க வந்த மாணவியை ஆறு தடவைகள் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கியதாக குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பலர் இவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கலாம் என அப்பகுதி தமிழ் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். இப்பாலியல் தாக்குதல்கள் 2021 முதல் 2024 வரையான காலகட்டத்தில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மற்றுமொரு இளம்பெண் தன்னை குறித்த நபர் 2024இல் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியதாகக் குற்றம்சாட்டியுள்ளார் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்னும் பல பாதிக்கப்பட்ட பெண்கள் பொலிஸாரிடம் முறைப்பாடுகளை பதிவு செய்ய முன் வருவார்கள் எனப் பொலிஸார் எதிர்பார்க்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண்கள் துணிச்சலுடன் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை பொலிஸில் முறையிட வேண்டும் என அங்குள்ள பெண்கள் அமைப்புகள் தெரிவிக்கின்றன.
தமிழ் தேசியப் பரப்பில் உள்ள ஆண்கள், பெண்களை பாலியல் பண்டமாக நோக்கும் போக்கு பாரிய அளவில் அதிகரித்து வருகின்றது.
0 comments:
Post a Comment