யாழில் வெளிநாட்டு தமிழ் குடும்பஸ்தர்களுடன் சிறுமிகளை உறவு கொள்ளச் செய்து நடக்கும் கொடூரம்!! கதறும் மனைவிகள்!!
யாழில் பல பயங்கரச் சம்பவங்கள் சத்தம் சந்தடியில்லாது நடந்து கொண்டிருக்கின்றன. அண்மையில் கோண்டாவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 15 வயது சிறுமி விபச்சாரத்தில் ஈடுபட்ட போது பிடிபட்டதாகவும் அச் சிறுமியுடன் உறவு கொள்வதற்காக 15 ஆயிரம் ரூபா வாங்கப்பட்டதாகவும் ஊடங்களுக்கு பொலிசார் தகவல்களைத் தெரிவித்திருந்தனர். ஆனால் அது ஒரு சாதாரண சம்பவம். அதை விட பயங்கரமான சம்பவங்கள் யாழில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்கு பொலிஸ்தரப்பைச் சேர்ந்த ஒரு சிலரும் துணை போவதாகத் தெரியவருகின்றது.
கடந்த வருட இறுதிப் பகுதியில் ஜேர்மனியிலிருந்து 45 வயதான ஒரு குடும்பஸ்தர் தனது உறவு ஒருவரின் நிகழ்வுக்காக யாழ்ப்பாணத்திற்கு தனியே வந்துள்ளார். வந்தவர் மீண்டும் ஜேர்மனிக்கு கடந்த மாத இறுதிப் பகுதியில் செல்லும் போது மனநோயாளியான நிலையிலேயே சென்று விமான நிலையத்தில் இறங்கியதாகத் தெரியவருகின்றது. யாழ்ப்பாணத்தில் அவர் நிற்கும் போது அவர் அணிந்து கொண்டு வந்த 10 பவுண்களுக்கு மேலான சங்கிலிகள், கைச்சங்கிலி, மற்றும் மோதிரங்கள் உட்பட்டவற்றையும் இழந்து சுமார் 8 ஆயிரம் யூரோக்களையும் இழந்து நடைப்பிணமாகவே அவர் ஜேர்மனி திரும்பியிருந்தார். அத்துடன் தனது மனைவியிடமிருந்தும் 7 ஆயிரம் யுரோக்களை உண்டியல் மூலம் பெற்று அதையும் யாழ்ப்பாணத்திலேயே இழந்து ஜேர்மன் திரும்பிச் சென்றுள்ளார். இவரது நகை, பணம் இழப்பு தொடர்பாக மனைவி விசாரித்த போது அவர் மௌனமாக அழுததால் மனைவி அலேட் ஆகினார். குடும்பஸ்தரின் தொலைபேசியை மனைவி கைப்பற்றி ஆராயத் தொடங்கினார். அவ்வாறான நேரத்தில் காணிப் பதிவு தொடர்பான ஆதாரங்கள் சில கணவனின் தொலைபேசி வட்சப் இலக்கத்திற்கு வந்திருந்தது. அது தொடர்பாக கணவனை விசாரிக்கும் போதும் கணவன் மௌனமாக இருந்துள்ளார். இதனால் மனைவி பெரும் குழப்பத்தில் இருந்ததுடன் அவரது யாழ்ப்பாண உறவுகளிடம் விசாரித்த போதும் அவருக்கு நடந்தது என்ன என்று கண்டு பிடிக்க முடியாது போனது.
இந் நிலையில் காணிப்பதிவுக்கான 80 லட்சம் ரூபா பணத்தை உடனடியாக அனுப்பு என அச்சுறுத்தும் தொனியில் அவரது வட்சப் இலக்கத்திற்கு மெசேஜ் வரத் தொடங்கியது. இதனால் அந்த இலக்கத்திற்கு தொடர்பு எடுத்து தான் அவரின் மனைவி என கூறி விபரம் கேட்ட போது அது தொடர்பாக புருசனிடம் கேள்.. எல்லாம் கூறுவார்… அவனை உடனடியாக காசை அனுப்பச் சொல்லு..இன்னும் 15 நாள் அவகாசம்… இல்லாவிட்டால் அவன் துாக்கில் தொங்குவான்.. என அச்சுறுத்தி ஆண் ஒருவன் கதைத்துள்ளான். அதன் பின்னர் பல தடவைகள் மனைவி அந்த இலக்கத்திற்கு தொலைபேசி எடுத்தும் பதில் வரவில்லை. ஆனால் இன்னும் 13 நாள், 12 நாள் என அவகாச நாள் தொடர்பாக அந்த இலக்கத்திலிருந்து மெசேஜ் வந்து கொண்டிருந்தது. 7 நாள் அவகாசம் இருக்கும் போது திடீரென ஒரு வீடியோ அந்த இலக்கத்திலிருந்து வட்சப்பிற்கு வந்துள்ளது. அந்த வீடியோவைப் பார்த்த மனைவி அதிர்ச்சியடைந்துள்ளார்.
தனது கணவன் சிறுமி ஒருவருடன் படுக்கையில் இருக்கும் காட்சிகள் அதில் காட்டப்பட்டிருந்தன. இதன் பின்னர் கணவனை மனைவி கடுமையாக அச்சுறுத்தி ஜேர்மன் பொலிசாரிடம் முறையிடப்போவதாக கூறிய பின்னரே கணவர் தான் செய்த தவறை கூறியுள்ளார். யாழில் உள்ள ஒரு ஹோட்டலின் மதுபாண பிரிவில் நட்பாகிய ஒருவன் தன்னை இவ்வாறு சபலத்துக்கு உள்ளாக்கி தவறு செய்ய வைத்து தன்னை அச்சுறுத்தி பெருமளவு பணம், நகைகளை பெற்றுவிட்டதாகவும் கூறியுள்ளார். 19 வயது யுவதி என கூறியே தன்னை உறவு கொள்ள வைத்ததாகவும் கூறியுள்ளார். அத்துடன் உரும்பிராய் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு அழைத்துச் சென்றே அங்கு வைத்தே இந்த செயலை செய்துள்ளார். குறித்த சிறுமியுடன் சேர்ந்து கொண்டிருந்த போது திடீரென 5 பேருக்கு மேல் வீட்டுக்குள் புகுந்து சுற்றி வளைத்து தன்னை அச்சுறுத்தி வீடியோ எடுத்தனர் என்றும் 15 வயதுச் சிறுமியை கற்பழித்த உனக்கு ஆயுள்வரை சிறை கிடைக்கும் என கூறி தன்னை அச்சுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். அதன் பின்னரே தான் அவர்களுக்கு கட்டுப்பட்டு பணம் மற்றும் நகைகளைக் கொடுத்தாகவும் அதன் பின்னர் காணி ஒன்றை தனக்கு விற்கப் போவதாக கூறி அதற்கான ஏற்பாடுகளை அவர்கள் செய்து தன்னிடம் 80 லட்சம் ரூபா தருமாறு கூறி அச்சுறுத்தினர் எனவும் குறித்த ஜேர்மன் குடும்பஸ்தர் மனைவிக்கு கூறியுள்ளார்.
தன்னை வீட்டுக்குள் புகுந்து அச்சுறுத்தியவர்களில் இருவர் பொலிசார் எனவும் அவர்கள் பொலிஸ் உடையிலேயே இருந்ததாகவும் குடும்பஸ்தர் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்ட மனைவி குறித்த பணப்பறிப்பு தொடர்பாக பொலிசாரிடம் முறையிடப் போவதாக மெஜேஸ் போட்டுள்ளார், அதன் பின்னர் சில இலங்கை இலக்கங்களிலிருந்து தங்களை பொலிசார் என அறிமுகப்படுத்தி சிறுமியுடன் உறவு கொண்டதற்காக கணவனை கைது செய்யப் போவதாக கூறி வருகின்றனர் எனவும் மனைவி தெரிவித்துள்ளார். கணவனை அச்சுறுத்தி கணவனுக்கு விற்பனை செய்ததாக கூறப்பட்ட குறித்த 2 பரப்பு காணி ஆணைக்கோட்டை கோம்பயன்சுடலைக்கு அருகில் காணப்படும் வயல் காணி எனவும் மனைவி கூறுகின்றார். அந்த காணிக்கான பணத்தை கணவன் தரவில்லை என கூறி பொலிசாரிம் அவர்கள் முறையிட்டு அதற்காகவும் தனது கணவனைக் கைது செய்ய முற்பட்டுள்ளதாகவும் மனைவி தெரிவித்துள்ளார்,
இதே போல் இன்னும் பல சம்பவங்கள் வெளிநாட்டிலிருந்து வந்த சபலபுத்தியுள்ள குடும்பஸ்தர்களுக்கு நடந்துள்ளது. அவையும் சிறுமிகளுடன் உறவு கொள்ள வைத்து அச்சுறுத்தி பணம் பறிக்கும் செயல்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த சம்பவங்களுக்கு பின்னணியில் யாழில் செயற்பட்டுவரும் அருன்சித்தார் என்ற படைப்புலனாய்வாளனுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது. ஏனெனில் குறித்த சம்பவங்களில் குடும்பஸ்தர்களுடன் உறவு கொண்ட சிறுமிகள் தொடர்பாக குடும்பஸ்தர்களை அச்சுறுத்தும் நபர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறுமிகளை நீங்கள் என்ன வேணுமென்றாலும் செய்வீர்களா,? எனக் கேட்டும் உங்களை நுாறு வருடம் சிறைக்குள் தள்ள வேண்டும் என கூறியும் பாதுாப்புத்தரப்பைச் சேர்ந்தவர்கள் என தம்மை இனங்காட்டிய சிலரை அழைத்தும் குடும்பஸ்தர்களை அச்சுறுத்தி பெருமளவு பணம், நகைகள் மற்றும் பொருட்களை கொள்ளையடிப்பதுடன் குறித்த குடும்பஸ்தர்கள் வெளிநாடு போன பின்னரும் அவர்களை தங்களின் அடிமைகளாக மாற்றி தாங்கள் சொல்வதை செய்ய வைக்க முயன்று வருவதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் ஆகக் குறைந்தது 15 இற்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழர்கள் இவ்வாறான சிறுமிகளுடன் உறவு கொண்டு மாட்டுப்பட்டு செய்வதறியாத நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் யாழில் உள்ள சபல புத்தியுள்ள செல்வந்த வர்த்தகர்கள் மற்றும் அரச உயரதிகாரிகளை சிறுமிகளுடன் உறவு வைக்கச் செய்து அச்சுறுத்தி தங்கள் வசப்படுத்தி காரியங்களைச் சாதிப்பதில் அருன்சித்தார்த் தரப்பு வெற்றி கண்டுள்ளதாகத் தெரியவருகின்றது. அருண்சித்தார்த்திற்கு நிதி உதவி செய்தவர்களில் ஒருவர் காசைக் காலால் மிதித்து சாதனை படைத்த தியாகி அறக்கொடை முதலாளியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment