This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

50% OFFICERS 👇👇🔴👇👇

50% OFFICERS 👇👇🔴👇👇
I found this great deal on Daraz! Check it out! Product Name: MAVIC 3 Clone Aerial Drone with Camera - Explore the Skies with Confidence Product Price: Rs.15,000 Discount Price: Rs.7,189

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, September 21, 2025

கொடிகாமம் பகுதியில் மணற்கொள்ளையர்களின் உழவுயந்திரம் மோதி பெண் பலி..!


கொடிகாமம் பகுதியில் மணற்கொள்ளையர்களின் உழவுயந்திரம் மோதி பெண் பலி..!

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கச்சாய் வீதி வாகையடிச் சந்தியை அண்மித்து 21.09.2025 ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்ற விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மோட்டார்சைக்கிளில் தனது மகனை ஏற்றிச் சென்ற 44வயதான பெண்ணை சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற உழவியந்திரம் மோதி விட்டு தப்பிச் சென்றிருந்த நிலையில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அதேநேரம் அவருடைய 15வயதான மகன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கிளிநொச்சியில் 16 வயது மாணவர்கள் 6 பேர் போதைப் பொருள் பாவித்து மாணவிகளுடன் லீலை!! அதிபர் செய்தது என்ன?


 கிளிநொச்சியில் 16 வயது மாணவர்கள் 6 பேர் போதைப் பொருள் பாவித்து மாணவிகளுடன் லீலை!! அதிபர் செய்தது என்ன?

கிளிநொச்சியில் உள்ள பிரபல தேசி்ய பாடசாலையில் 16 வயதான மாணவர்கள் 6 பேர் போதைப் பொருள் பாவித்த நிலையில் பாடசாலைக்கு வந்து மாணவிகளுடன் பா லி யல் சேட்டை புரிந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து பாசடாலை அதிபர் பொலிசாருக்கு முறையிட்டு குறித்த மாணவர்களை பொலிசார் கைது செய்து பொலி்ஸ் நிலையம் கொண்டு சென்றதாகவும் அதன் பின்னர் மாணவர்களுக்கு போதைப் பொருள் வழங்கிய நபர் கைது செய்யப்பட்டதாகவும் தெரியவருகின்றது. 

இதே வேளை கைது செய்யப்பட்ட குறித்த மாணவர்களை அதிபர் பொலிசாருடன் கதைத்து விடுவித்துவிட்டதாகவும் பாடசாலைத் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த சம்பவம் தொடர்பாக அதிபர் கல்வி மேலதிகாரிகளுக்கு தெரிவிக்காது மறைத்துள்ளதாகவும் போதையுடன் இருந்த மாணவர்களை பொலிசாருடன் தொடர்பு கொண்டு அதிபர் தனது விருப்பப்படி எவ்வாறு விடுவிக்கலாம் என்று குறித்த மாணவர்களால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் தரப்பிலிருந்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

குறித்த மாணவர்கள் மாணவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட வேண்டியவர்கள் எனவும் அம் மாணவர்கள் தொடர்ச்சியாக குறித்த பாடசாலையில் கடும் சிக்கல்களை ஏற்படுத்தி வருபவர்கள் எனவும் பாடசாலை வட்டாரங்கள் மூலமாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய கொடியேற்றம் இன்று | Jaffna Vallipuram Alvar Temple Annual Festival


 யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய கொடியேற்றம் இன்று

யாழ்ப்பாணம் - வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின்  2025 ஆம் ஆண்டுக்கான பெருந்திருவிழா இன்று (21) கொடியேற்றதுடன் ஆரம்பமானது.

வருடாந்த பெருந்திருவிழாவானது ஆலய பிரதம குரு கணபதீஸ்வரக்குருக்கள் தலமையிலான குருமார் திருவிழா கிரியைகளை மேற்கொண்டதுடன் சுப வேளையில் 9.00 மணிக்கு கொடியேற்றும் இடம்பெற்று சிறப்பு பூஜைகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன.

இன்று ஆரம்பமான வருடாந்த பெருந்திருவிழா தொடர்ந்து 17 தினங்கள் நடைபெற உள்ளது.

விசேட திருவிழாக்கள் 

இந்தநிலையில், எதிர்வரும் முதலாம் திகதி பாம்பு திருவிழாவும், இரண்டாம் திகதி கம்சன்போர் திருவிழாவும், மூன்றாம் திகதி வேட்டைத் திருவிழாவும், நான்காம் திகதி சப்பறத் திருவிழாவும், 5ஆம் திகதி தேர்த் திருவிழாவும், ஆறாம் திகதி சமுத்திர தீர்த்த திருவிழாவும், ஏழாம் திகதி  கேணித் தீர்த்த திருவிழாவும் இடம்பெற்று மாலை கொடி இறக்கமும் இடம்பெறும்.

திருவிழாவிற்கான சுகாதார வசதிகளையும் ஏனைய பணிகளையும் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் பருத்தித்துறை பிரதேச சபையும், வடமராட்சி வடக்கு பிரதேச செயலகமும் வழங்குகின்றது.

பருத்தித்துறை காவல் நிலையம் மக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



கனகராயன்குளத்தில் கணவருடன் சண்டை!! பொலிசாரிடம் முறையிடச் சென்ற பெண்ணை மோதிக் கொன்றுவிட்டு தப்பிய வாகனம் பிடிபட்டது எப்படி?


 கனகராயன்குளத்தில் கணவருடன் சண்டை!! பொலிசாரிடம் முறையிடச் சென்ற பெண்ணை மோதிக் கொன்றுவிட்டு தப்பிய வாகனம் பிடிபட்டது எப்படி?

கனகராயன்குளம் பகுதியில் பெண் ஒருவரை மோதிக்கொன்றுவிட்டு தப்பிச்சென்றிருந்த வாகனம் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் இன்று மீட்கப்பட்டதுடன் இருவரும் கைது செய்யப்பட்டனர். கனகராயன்குளம் பகுதியை சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் கடந்த 16ஆம் திகதி இரவு கணவருடன் ஏற்பட்ட முரண்பாட்டை தொடர்ந்து கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்க சென்றுள்ளார்.

இதன்போது ஏ-9வீதியில் வைத்து வாகனம் ஒன்று அவரை மோதியதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்ப்படுத்திய வாகனம் நிறுத்தாமல் அங்கிருந்து தப்பிச்சென்றிருந்தது.சம்பவத்தில் அந்தபகுதியை சேர்ந்த ம. இதயரஞ்சினி என்ற 32 வயதான நான்கு பிள்ளைகளின் தாயே உயிரிழந்திருந்தார்.

இது தொடர்பாக வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். இந்த நிலையிலேயே விபத்தை ஏற்படுத்திய வாகனத்துடன் சாரதி மற்றும் உரிமையாளர் ஆகியோர் விசுவமடுப் பகுதியில் வைத்து வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டனர். வாகனத்தின் நிறம் உட்பட ஏனைய அமைப்புக்களை மாற்றியமைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

Saturday, September 20, 2025

பிருத்தானியாவில் ஆடைகளைக் களைந்து திருவிளையாடல்!! இலங்கைத் தமிழன் சுகிர்தன் நீதிமன்றில் ஆயர்!!


பிருத்தானியாவில் ஆடைகளைக் களைந்து திருவிளையாடல்!! இலங்கைத் தமிழன் சுகிர்தன் நீதிமன்றில் ஆயர்!!

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 37 வயதுடைய சுகிர்தன் தங்கராசா, நியூ வீதி, ஃபிராட்டன், இங்கிலாந்தில் பல குற்றங்களுக்காக பிரித்தானிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். 

அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பின்வருமாறு: 

சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைந்தமை

நிர்வாணமாகச் சென்றமை

சவுத்தாம்ப்டனில் ஒரு நபரைத் தாக்கியமை

போர்ட்ஸ்மவுத்தில் பொது ஒழுங்கை மீறியமை

செப்டம்பர் 19, 2025 அன்று போர்ட்ஸ்மவுத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், ஒக்டோபர் 20 அன்று நகரத்தின் அரச நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்படவுள்ளார்

Friday, September 19, 2025

கிளிநொச்சியில் பஸ்சிலிருந்து வீழ்ந்து இளைஞன் மரணம்!!பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.


 கிளிநொச்சியில் பஸ்சிலிருந்து வீழ்ந்து இளைஞன் மரணம்!!பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் வீதியில் அறிவியல் நகர் திசையிலிருந்து உருத்திரபுரம் திசை நோக்கி பயணித்த பேருந்தில் இருந்தே நேற்று (18) இரவு இவ்வாறு ஒருவர் தவறி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

உருத்திரபுரத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்தார்.

சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்திலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதுடன், பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Tuesday, September 16, 2025

என்னுடன் இன்பமாக இருக்கலாம் என இளைஞர்களை அழைத்து குஞ்சுமணியில் ஸ்ரெப்லர். கிளிப் அடித்து சித்திரவதை செய்த ரஷ்மி!!

 


என்னுடன் இன்பமாக இருக்கலாம் என இளைஞர்களை அழைத்து குஞ்சுமணியில் ஸ்ரெப்லர். கிளிப் அடித்து சித்திரவதை செய்த ரஷ்மி!!

இந்தியாவில் இரண்டு இளைஞர்களை உல்லாசத்திற்கு அழைத்து பணம்-செல்போனை பறித்துவிட்டு மர்ம உறுப்பில் ‘ஸ்டேப்ளர் பின்’ அடித்து சித்ரவதை செய்த தம்பதியை பொலிஸார் கைதுசெய்தனர்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சரல்குன்னு பகுதியைச்சேர்ந்தவர் ஜெயேஷ்(வயது29). இவருடைய மனைவி ரஷ்மி(23). இவருக்கு, ஆலப்புழையை சேர்ந்த ஒரு வாலிபருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

இந்தநிலையில் ரஷ்மி அந்த வாலிபரை, நாம் உல்லாசமாக இருக்கலாம் எனக்கூறி வீட்டிற்கு அழைத்துள்ளார். அதை நம்பிய அந்த வாலிபர், கடந்த 1-ந் திகதி ரஷ்மியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டிற்குள் சென்ற அந்த இளைஞன், ரஷ்மியிடம் நெருங்கி சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த ரஷ்மியின் கணவர் ஜெயேஷ், அதை தனது செல்போனில் படம் எடுத்துள்ளார்.

சிறிதுநேரத்தில் அங்கு வந்த ஜெயேஷ், மனைவியுடன் சேர்ந்து அந்த வாலிபரை மிரட்டி அவரிடம் இருந்த விலை உயர்ந்த செல்போன் மற்றும் ரூ.6 ஆயிரத்தை பறித்தனர்.

தொடர்ந்து வாலிபரின் கைகளை கட்டித்தொங்கவிட்டு மர்ம உறுப்பில் 26 ‘ஸ்டேப்ளர் பின்’களை அடித்து சித்ரவதை செய்துள்ளனர். மேலும், அவரது கை விரல் நகங்களை பிடுங்கினர். இதில் வலி தாங்கமுடியாமல் அலறினார்.

உடனே அவரது வாயை துணியால் கட்டி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்குக்கொண்டு போட்டுவிட்டுச்சென்றனர். அப்போது அந்த வழியாக சென்ற ஒருவர், இளைஞனின் முனகல் சத்தம்கேட்டு அவரை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த ஆரன்மூளா பொலிஸார், வாலிபர் சிகிச்சை பெறும் வைத்தியசாலைக்கு சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து ஜெயேஷ், அவரது மனைவி ரஷ்மியை கைதுசெய்தனர்.

பின்னர் பொலிஸார் நடத்திய விசாணையில், பகீர் தகவல்கள் வெளியானது. அதாவது பணத்துக்காக ரஷ்மி வாலிபர்களை குறிவைத்து முதலில் ஆசைவார்த்தை கூறி வலையில் வீழ்த்தியுள்ளார்.

பின்னர் வீட்டிற்கு அழைத்து பணம், செல்போன் உள்னிட்டவற்றை பறித்துள்ளார். மனைவிக்கு உடந்தையாக ஜெயேஷ் இருந்துள்ளார்.

கடந்த 5-ந்திகதி ஓணம்விழா அன்று ரான்னியை சேர்ந்த தன்னுடன் வேலைபார்த்து வந்த ஒரு இளைஞனையும் ரஷ்மி வீட்டிற்கு அழைத்து அவரிடம் இருந்தும் பணத்தை பறித்து கட்டிதொங்கவிட்டு சித்ரவதை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து ஆரன்முளா பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Saturday, September 13, 2025

எதற்காக கனடாப் பொலிசாரால் தமிழ்க் காவாலி மகிபன் தேடப்படுகின்றார்?

 


எதற்காக கனடாப் பொலிசாரால் தமிழ்க் காவாலி மகிபன் தேடப்படுகின்றார்?

கனடாவில் துப்பாக்கி சூடு நடத்திய தமிழ் இளைஞன் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். ஒன்டாரியோ பிராட்போர்ட் பகுதியை சேர்ந்த 33 வயதான மகிபன் பேரின்பநாதன் என்ற இளைஞனே தேடப்பட்டு வருகிறார்.கடந்த மாதம் பிக்கரிங் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக குறித்த இளைஞனை சந்தேக நபராக டர்ஹாம் பிராந்திய பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

ஒகஸ்ட் 16 ஆம் திகதி அதிகாலை 1.10 மணியளவில், லிவர்பூல் மற்றும் கிங்ஸ்டன் வீதிகளை சந்திக்கும் பகுதியில் உள்ள ஒரு வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள், துப்பாக்கிச் சூட்டால் காயமடைந்த 2 நபர்களை கண்டுபிடித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். எனினும் அவர்களின் நிலைமை குறித்து அதிகாரிகள் மேலதிக தகவல் வெளியிடவில்லை.

சம்பவம் தொடர்பாக நடத்திய விசாரணையின் அடிப்படையில் மகிபன் பேரின்பநாதன் என்பவர் தற்போது சந்தேக நபராக பொலிஸாரால் தேடப்பட்டு வருகிறார்.

Friday, September 12, 2025

யாழில் tiktok ஊடாக தொடர்பை ஏற்படுத்தி 15 வயது மாணவியுடன் உறவு கொண்டவன் பிடிபட்டது எப்படி? அவதானம் பெற்றோரே!!


யாழில் tiktok ஊடாக தொடர்பை ஏற்படுத்தி 15 வயது மாணவியுடன் உறவு கொண்டவன் பிடிபட்டது எப்படி? அவதானம் பெற்றோரே!!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் tiktok ஊடாக தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட சிறுமியை 

து ஷ்பி ரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோரால் சாவகச்சேரி காவல்நிலையத்தில் முறைபாடளிக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டிற்கு அமைய, துன்னாலைப் பகுதியை சேர்ந்த சந்தேகநபரான 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

யாழ் வடமராட்சியைச் சேர்ந்த வனிதா பலியாகியது ஏன்? ஒருவர் கைது!! நடந்தது என்ன?


யாழ் வடமராட்சியைச் சேர்ந்த வனிதா பலியாகியது ஏன்? ஒருவர் கைது!! நடந்தது என்ன?

யாழ்ப்பாணம் வடமராட்சிகிழக்கு வத்திராயன் வடக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டு விசுவமடு கண்ணகிநகர் வீதி 12ம் கட்டையை தற்காலிக முகவரியாக கொண்ட மோகனபவன் வனிதா என்னும் இளம் குடும்ப பெண் இந்த வாரத்தின் முற்பகுதியில் வீதி விபத்தில் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் இன்றைய தினம் மரணமாகியுள்ளார்.

கடந்த 09.09.2025 அன்றைய தினம் உறவினருடன் உந்துருளியில் வைத்தியசாலைக்கு சென்ற பொழுது திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக உந்துருளியில் இருந்து தவறி விழுந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த பெண் நேற்றையதினம் (11) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் மோகனபவன் வனிதா எனும் 40 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயார் ஆவார்.  இவர் பல மேடைகளில் நடனமாடி பாராட்டுப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய உந்துருளியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். திசாநாயக தெரிவித்துள்ளார்.

Thursday, September 11, 2025

விடிந்ததும் அதி பயங்கரம்.. மொட்டை மாடியில் தலை இல்லாமல் 2 உடல்கள்..!


விடிந்ததும் அதி பயங்கரம்.. மொட்டை மாடியில் தலை இல்லாமல் 2 உடல்கள்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம், வரஞ்சரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மலைக்கோட்டாளம் கிராமத்தில் நடந்த பயங்கரமான இரட்டை படுகொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூர சம்பவத்தில், கிராமத்தைச் சேர்ந்த குளஞ்சியின் மனைவி லட்சுமி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த தங்கராசு ஆகிய இருவரும் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த வரஞ்சரம் காவல் நிலைய காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை தொடங்கியுள்ளனர். குளஞ்சியின் வீட்டு மொட்டை மாடியில் லட்சுமி மற்றும் தங்கராசு ஆகியோரின் உடல்கள் தலை இல்லாமல் கிடந்தது கண்டறியப்பட்டது.

தலை துண்டிக்கப்பட்ட இந்தக் கொலைச் சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.முதற்கட்ட விசாரணையில், லட்சுமிக்கும் தங்கராசுக்கும் இடையே முறையற்ற உறவு இருந்திருக்கலாம் எனவும், இதனை அறிந்த குளஞ்சி ஆத்திரத்தில் இருவரையும் தலை துண்டித்து படுகொலை செய்திருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

மேலும், கொலை செய்யப்பட்டவர்களின் தலைகள் எங்கு கொண்டு செல்லப்பட்டன என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட குளஞ்சி தற்போது வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்தக் கொடூரமான இரட்டை படுகொலை சம்பவம் மலைக்கோட்டாளம் கிராமத்தில் பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் இந்த வழக்கு தொடர்பாக மேலும் விவரங்களை ஆராய்ந்து வருகின்றனர்.

யாழில் இளம் குடும்பப் பெண்ணான ஆசிரியை குகாசினி மரணம்!!


யாழில் இளம் குடும்பப் பெண்ணான ஆசிரியை குகாசினி மரணம்!!

புற்று நோயினால் பாதிக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் ஆசிரியர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.திருகோணமலையை சொந்த இடமாககொண்ட குறித்த ஆசிரியர் சக்கோட்டை பகுதியில் இளைஞர் ஒருவரை காதல் திருமணம் செய்து மூன்று வயதில் மகளுடன் சக்கோட்டையில் வாழ்ந்து வரும் நிலையில் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் குகாசினி நிஷாந்தன் வயது 37என்ற ஒரு பிள்ளையின் தாயை இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவர் ஆவார். இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது 

Tuesday, September 9, 2025

அமெரிக்காவில் பெண்களையும் தன் பின்னால் சுற்ற வைத்த யாழ்ப்பாணத் தமிழன் திருக்குமார்!!


அமெரிக்காவில் பெண்களையும் தன் பின்னால் சுற்ற வைத்த யாழ்ப்பாணத் தமிழன் திருக்குமார்!!

அமெரிக்காவின் ஹாட்-டாக் மற்றும் டோனட்ஸ் மீதான அன்பைத் தாண்டி, நியூயோர்க் நகர மக்கள் தோசைகளை விரும்பி சாப்பிட தொடங்கி இருக்கின்றனர். அதற்கு காரணம் நியூயோர்க் நகரின் புகழ்பெற்ற தோசை மனிதர் என்று அழைக்கப்படும் திருக்குமார் கந்தசாமி.

திருக்குமார் கந்தசாமி யாழ்ப்பாணத்தில் ஒரு நீச்சல் பயிற்சியாளராக இருந்து 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏராளமான கனவுகளுடன் நியூயோர்க்கிற்கு குடிபெயர்ந்த இலங்கைத் தமிழர் தான் திருக்குமார் கந்தசாமி.

இன்று நியூயோர்க் தெருவோர தோசை கடைகளின் அடையாளமாக மாறி இருக்கிறார். ஆனால் தனது அம்மா மற்றும் பாட்டியிடம் இருந்து கற்றுக்கொண்ட காரம் நிறைந்த சீஸ் மசாலா தோசை தான் கடைசியில் அவரின் அடையாளமாக மாறியுள்ளது.

காலை 9 மணியளவில், வாஷிங்டன் ஸ்கொயர் பார்க் தெருக்களில் இவரது தள்ளு வண்டிக் கடையின் தோசையை சுவைக்க இந்தியர்களை கடந்து அதிகளவில் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களே கூடிவிடுவார்கள்.

திருவின் தோசைக்கு கனடா, ஜப்பான் மற்றும் கலிஃபோர்னியாவில் கூட ரசிகர்கள் இருக்கிறார்கள். தோசை மனிதன், NYDOSAS உள்ளிட்ட பக்கங்களே அதற்கு சாட்சி. திருவின் தோசை வண்டியின் சுவர்கள் உலகெங்கிலும் இருந்து அவருக்கு கிடைத்த செய்தித்தாள் வெட்டுக்கள் மற்றும் சான்றிதழ்களால் நிரம்பி காணப்படுவதாக குறிப்பிடுகின்றனர்.

அதேபோல் மசாலா தோசைகளுடன் காரம் நிறைந்த தேங்காய் சட்னி மற்றும் 11 வெவ்வேறு காய்கறிகளுடன் கூடிய பருப்பு சூப் வழங்கப்படுகின்றன.

Sunday, September 7, 2025

இன்று முதல் போக்குவரத்து சட்டம் கடுமையாக அமுல்.!

 


இன்று முதல் போக்குவரத்து சட்டம் கடுமையாக அமுல்.!

இன்று (08) முதல் போக்குவரத்து சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்காக வாகனங்களை சோதனை செய்ய நாடு முழுவதும் பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என போக்குவரத்து பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது போக்குவரத்திற்கு தகுதியற்ற வாகனங்கள் மற்றும் வண்ணங்கள் மாற்றப்பட்ட வாகனங்கள் குறித்தும் சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதுடன் வெவ்வேறு வண்ணங்களில் கூடுதல் விளக்குகளுடன் இயங்கும் வாகனங்கள், வாகனங்களின் முன், பின் மற்றும் இரு பகுதிகளின் சித்திர வடிவமைப்புகள் மற்றும் விளம்பரங்கள் பிரசுரித்தல் மற்றும் சட்டவிரோத மேலதிக உதிரி பாகங்கள் தொடர்பிலும் சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அதிக சத்தம் எழுப்பும் ஒலிப்பான் மற்றும் அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்கள் கொண்ட வாகனங்கள் தொடர்பாக இன்று முதல் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த சயீனா மரணம்!!


கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த சயீனா மரணம்!!

கனடாவில் வாழ்ந்து வரும் வடமராட்சி கல்லுவம் பகுதியைச் சேர்ந்த குடும்பம் தனது மகளின் மருத்துவத் தேவைக்காக வடமராட்சி கல்லுவம் பகுதியில் உள்ள தமது வீட்டிற்கு வந்துள்ளார்.

புற்று நோயினால் பாதிக்கப்பட்ட மகளின் மருத்துவத் தேவைக்காக வந்த நிலையில் குறித்த சிறுமி நேற்று முன்தினம் (05) வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

கனடா ஸ்காபுரோவை வசிப்பிடமாகக் கொண்ட சத்தீஸ்வரன் சயினகா என்ற சிறுமியே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இத்துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியின் இறுதிக்கிரியைகள் நாளை திங்கட்கிழமை (08) வடமராட்சி கல்லுவத்தில் உள்ள வீட்டில் இடம்பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாலியிலிருந்த வந்த தனபாலசுந்தரம் யாழில் பற்றைக்குள் சடலமாக மீட்பு!!

 


இத்தாலியிலிருந்த வந்த தனபாலசுந்தரம் யாழில் பற்றைக்குள் சடலமாக மீட்பு!!

யாழில் நடை உடற்பயிற்சியில் ஈடுபட்ட நபர் ஒருவர் பற்றைக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கே.கே.எஸ்.வீதி, யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த சிவசாமி தனபாலசுந்தரம் (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் இத்தாலியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நடை உடற்பயிற்சிக்கு சென்றவேளை காணாமல் போயிருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (05) கொக்குவில் கல்வாரி தேவாலயத்திற்கு அருகாமையில் உள்ள பற்றைக்குள் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இடம் தெரியாமல் அந்தப் பகுதிக்கு சென்றவேளை குருதியமுக்கம் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Saturday, September 6, 2025

மட்டு’வில் குடும்பப் பெண் விதுசாவைக் கொன்றது யாழ்ப்பாண நகைக்கடைக்காரனா? பொலிசார் விரைகின்றனர்!! நடந்தது என்ன?


குடும்ப பெண் படுகொலையில் பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நகைக்கடை உரிமையாளர் தலைமறைவாகி உள்ள நிலையில் குறித்த சந்தேக நபரை கைது செய்வதற்காக D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் யாழ்ப்பாணம் நோக்கி பயணமாகியுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனித்திருந்த 38 வயது மதிக்கத்தக்க இரண்டு பிள்ளைகளின் தாயான திருமதி மனோதர்ஷன் விதுஷா என்ற குடும்பப்பெண் கடந்த மே மாதம் வெள்ளிக்கிழமை(30) படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த குடும்பப் பெண்ணின் படுகொலை தொடர்பில் கடந்த ஜுன் மாதம் 25 ஆந் திகதி சந்தேகத்தின் அடிப்படையில் சகோதரிகளான இரட்டையர் குறித்த குடும்பப் பெண்ணின் வீட்டியில் பணிப்பெண்களாக பணியாற்றிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தனர்.குறித்த கைது நடவடிக்கை படுகொலை நடைபெற்று 24 நாட்களின் பின்னர் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு குறித்த படுகொலை தொடர்பில் 34 வயதுடைய இரட்டையரான சகோதரிகளை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த விசாரணையில் ஏதோ ஒரு அடிப்படையில் தொய்வு ஏற்பட்டதை உணர்ந்த படுகொலை செய்யப்பட்ட குடும்பப்பெண்ணின் கணவர் நாட்டின் ஜனாதிபதி உட்பட பொலிஸ் மா அதிபர் குற்றப் புலனாய்வு பிரிவினர் என பல தரப்பினருக்கு உரிய நீதி கோரி கடிதம் ஒன்றினை எழுதி உரிய படுகொலையின் சூத்திரதாரிகள் என நம்பப்படும் பலரது பெயரினை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி இருந்தார்.

இதற்கமைய மீண்டும் துரிதமாக செயற்பட்ட D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் நீண்ட பல்வேறு வடிங்களில் விசாரணைகளை முன்னெடுத்து களுவாஞ்சிக்குடி பகுதியில் உள்ள நகைக்கடை உரிமையாளர் தான் இப்படுகொலையின் பிரதான சூத்தரதாரி என கண்டறிந்துள்ளதுடன் குறித்த கடையில் பணியாற்றிய உரிமையாளரின் சகோதரர் உட்பட அக்கடையின் நம்பிக்கைக்குரிய பணியாளரையும் வெள்ளிக்கிழமை(05) கைது செய்தனர்.

இக்கைது நடவடிக்கையை அறிந்த பிரதான சந்தேக நபர் தற்போது அவரது சொந்த இடமான யாழ்ப்பாணத்திற்கு தப்பி சென்ற நிலையில் அச்சந்தேக நபரை தேடி D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை தப்பி சென்ற பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டதுடன் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரின் தங்கையை திருமணம் செய்து பெரிய நீலாவணையில் வசித்து வந்தவராவார்.இச்சந்தேக நபரே நீண்ட காலமாக குறித்த கொலை திட்டம் தீட்டி அரங்கேற்றியுள்ளதை ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

மேலும் 94 நாட்களின் பின்னர் கைதான பிரதான சூத்தரதாரியின் கடையில் பணியாற்றிய சூத்தரதாரியின் சகோதரர் உட்பட அக்கடையின் நம்பிக்கைக்குரிய பணியாளரையும் அம்பாறைக்கு அழைத்து சென்று மேலதிக விசாரணைகளை அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

38 வயது மதிக்கத்தக்க இரண்டு பிள்ளைகளின் தாயான குறித்த பெண் மீது கழுத்து பகுதியில் காயங்கள் ஏற்படக் கூடிய வகையில் வெட்டப்பட்டு தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்திருந்தது.மேலும் இப்படுகொலை இடம்பெற்ற வேளை மரணமடைந்த குடும்ப பெண்ணின் கணவர் வெளிநாடு ஒன்றில் தொழில் நிமிர்த்தம் தங்கி இருந்ததுடன் சம்பவம் நடைபெற்ற வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கேமராவின் காணொளிகளை சேமிக்கும் கருவி (DVR) கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களால் எடுத்துச்செல்லப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இது தவிர படுகொலை செய்யப்பட்ட குறித்த பெண்ணின் கடந்த கால கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மிக நீண்ட விசாரணை மேற்கொண்டு அவற்றை மீள தன்னிடம் பெற்று வழங்கியதற்காகவும் துரித கதியில் கொலையாளிகளை இனங்கண்டு பாதிக்கப்பட்ட எங்கள் தரப்பினருக்கு பல்வேறு உதவிகளை வழங்கியதற்காக படுகொலையான பெண்ணின் கணவர் உருக்கமாக நன்றிகளை கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாருக்கு தெரிவித்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Friday, September 5, 2025

மலையகப் பகுதி பயணங்களில் நடக்கும் நியூட்ரல் (Neutral) மரணங்கள்…


சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்…. 

நியூட்ரல் (Neutral) மரணங்கள்…

மலையக பகுதிகளில் இடம்பெறும் அனேக வாகன விபத்துக்கள் வாகனங்களை சாரதிகள் நியூட்ரலில் செலுத்துவதால் இடம்பெறுகிறது. அதே போன்ற ஒரு நியூட்ரல் விபத்தாகவே எல்ல பஸ் விபத்தை பார்க்கவேண்டியிருக்கிறது.

தப்பியவர்களின் கூற்றுப்படி சாரதியின் இறுதி வார்த்தைகள் “பிரேக் பிடிக்குதில்லை” என்பதாக இருக்கிறது. குறித்த பஸ்சானது எல்ல எனும் உயர் நில பகுதியில் இருந்து அம்பாந்தோட்டையின் தங்காலை எனும் தாழ் நிலை பகுதிநோக்கி பயணித்துகொண்டிருந்தது. உயர்வான இடத்தில் இருந்து தாழ்வான பகுதிநோக்கி பள்ளத்தில் பயணிக்கும் ஒரு வாகனம் திடீரென பிரேக் பிடிக்கவில்லையெனில் அது ஏற்படுத்தும் விளைவு பாரதூரமானது. எனினும் முறையான சாரதியெனில் அதையும் தடுத்திருக்கலாம்.

குறிப்பாக மலையக பகுதிகளில் வாகனம் ஓடுபவர்கள் மலைப்பிரதேசங்களிலிருந்து கீழ் நோக்கி வரும்போது நியூட்ரலில் வாகனத்தை செலுத்துவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். எரிபொருளை மீதப்படுத்த இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுக்கின்றனர் இது ஒரு பாரதூரமான ஆபத்தான பயணமுறை என்பதை சாரதிகள் உணர்வதில்லை.

பள்ளத்தை நோக்கி பயணிக்கும் ஒரு வாகனம் கியர் இன்றி நியூட்ரலில் சென்றால் சாதாரண எஞ்சின் உந்துதலை விடவும் அதிக உந்துதலை கொண்டிருக்கும் அந்த உந்துதலை சமாளித்து வேகத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க பிரேக் மாத்திரமே உதவியாக இருக்கும். இயந்திரத்தில் இருந்து கியர் தொடர்பு துண்டிக்கப்பட்ட வாகனம் கட்டறுத்த காட்டெருமை போலாகிவிடும் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு வாகனத்தை கட்டுப்பாட்டோடு வைத்திருப்பது எஞ்சினேயொழிய பிரேக் இல்லை என்பதை பல சாரதிகள் உணர்வதில்லை.

உயர்வான இடத்தில் இருந்து தாழ்வான பகுதி நோக்கி வாகனம் ஒடும்போது எப்போதும் Low கியரில் பயணிப்பதே மிகவும் பாதுகாப்பானது. ரொப் கியர் வாகனமாக இருப்பின் 3th கியரில் பயணிப்பது பாதுகாப்பானது ஹை கியர் வாகனமாக இருப்பின் ரொப் கியரில் பயணிப்பது பாதுகாப்பானது இது முழுக்க முழுக்க வாகனம் இயந்திர கட்டுப்பாட்டில் இருக்கும் நீங்கள் பிரேக் பாவிக்க சந்தர்ப்பங்கள் குறைவாகவே இருக்கும். எரிபொருளை மிச்சம் பிடிக்கிறோம் என்ற பெயரில் High கியரிலோ நியூட்ரலிலோ பயணித்தால் விலைமதிப்பற்ற உயிருக்கு உத்தரவாதம் இருக்காது.

உயர் நிலத்தில் இருந்து தாழ் நிலம் நோக்கி வாகனங்கள் ஓடும்போது வேகத்தை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக பிரேக்கினை அழுத்தும் செயற்பாட்டில்தான் அனேக சாரதிகள் ஈடுபடுகின்றனர். பிரேக் சூ என்பது இரும்பினால் ஆன பொருள் இல்லை அது தேயக்கூடிய பேப்பர் கலவையினால் ஆனது. அதிக அழுத்தம் பிரயோகிக்கப்படும்போது அது எரிந்துபோய்விடும். பிரேக் பிடிக்க பிரேக் சூ எரியும் நாற்றத்தோடும் ரிம்கள் சூடாகி புகை பறக்கவும் விரைந்துசெல்லும் வாகனங்களின் பிரேக் எந்நேரத்திலும் செயலிழந்து போகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எல்ல விபத்தில் சிக்கிய இந்த பேருந்துக்கும் அதுதான் நிகழ்ந்துள்ளது. சாரதி நியூட்ரலில் அல்லது ரொப் கியரில் பயணித்துள்ளார் முழுக்க முழுக்க வாகனம் பிரேக்கின் கட்டுப்பாட்டில்தான் இருந்திருக்கிறது தொடர்ச்சியாக பிரேக்கினை அழுத்தி வளைவுகளில் வேகத்தை குறைத்துக்கொண்டு வர பிரேக் சூ முற்றாக எரிந்துபோயிருக்கிறது. ஈற்றில் கைவிட்டு விட்டது. கட்டறுத்த காட்டெருமையாய் பள்ளத்தை நோக்கி பாய்ந்து பலியெடுத்திருக்கிறது.

மலைப்பிரதேசங்களில் நியூட்ரலில் பயணிக்க வேண்டாம் என வீதியோரங்களில் அறிவித்தல் பலகைகள் வைக்கப்பட்டும் இருக்கிறது அதை எவரும் கவனத்தில் கொள்வதில்லை. சில உயர் மலைப்பகுதிகளை கொண்ட நாடுகளில் கீழ்நோக்கி பயணிக்கும் போது நீங்கள் எத்தனையாவது கியரில் பயணிக்கவேண்டும் எனவும் கூட அறிவித்தல் பலகை வைத்திருப்பார்கள் அதை விடுத்து பிரேக்கை பிடித்து பிடித்து உயர் நிலை கியரில் சென்றால் நடுவழியில் பிரேக் பெயிலியர் ஆகி நிற்கவேண்டிவரும் அல்லது பள்ளத்தில் பாய்ந்து படுகொலையாகவேண்டிவரும்.

குறிப்பாக ஒயில் மூலம் பிரேக் சிஸ்டம் இயங்கும் வாகனங்கள் மலைப்பகுதிகளில் கீழ் நோக்கி பயணிக்கும் போது கியர்களில் வராது பிரேக்கில் வந்தால் மிக குறுகிய காலத்தில் பிரேக் லெதர்கள் சூடாகி எரிந்தோ அல்லது பிரேக் சூக்கள் எரிந்து பிரேக் பம் பிஸ்டன்கள் வெளியேறி ஒயில் ஓடியோ பிரேக் செயலிழந்துபோக வாய்ப்புக்கள் அதிகம்.

Air மூலம் பிரேக் சிஸ்டம் வேலை செய்யும் வாகனங்கள் கொஞ்சம் பாதுகாப்பானது ஏதேனும் சந்தர்ப்பங்களில் பைப்புக்கள் வெடித்தோ வேறு வழியிலோ ஏர் வெளியேறினால் தானாகவே கேன்பிரேக் ஓப்பன் ஆகிவிடும் வாகனம் பிரேக் ஆகி நின்றுவிடும். ஆனால் தொடர்ச்சியாக பிரெக் பிடித்ததன் மூலம் பிரேக் சூ எரிந்துபோயிருந்தால் பிரேக் பிடித்தாலும் பிடிபடாது. எல்ல பஸ் பள்ளத்தில் பாய்ந்தமைக்கும் இதுவே காரணம். சாரதியின் முறையாற்ற நடத்தையே அவரையும் பலிகொண்டு மேலும் 14 பேரையும் காவு கொண்டிருக்கிறது.

சு.பிரபா

வவுனியாவில் கோவில் சப்பறத் திருவிழாவுக்கு பட்டாசு கொண்டு வந்த வாகனம் வெடித்து எரியும் காட்சி!!


வவுனியாவில் கோவில் சப்பறத் திருவிழாவுக்கு பட்டாசு கொண்டு வந்த வாகனம் வெடித்து எரியும் காட்சி!!

வவுனியாவில் சப்பறத் திருவிழாவுக்கு பட்டாசுடன் வந்த வாகனம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.வவுனியா, வெளிக்குளம் பிள்ளையார் ஆலயத்தின் சப்பறத் திருவிழா நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற இருந்த நிலையில், சப்பற திருவிழாவின் போது வெடி கொளுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட பட்டாசுகளை இறக்கிக் கொண்டிருந்த பட்டா ரக வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதன்போது வாகனத்தில் இருந்த பட்டாசுகளும் வெடித்துள்ளன. சம்பவம் தொடர்பில் வவுனியா மாநகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு அறிவித்ததை அடுத்து தீயணைப்பு பிரிவினரும் ஆலயத்தில் நின்ற மக்களும் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், பட்டா ரக வாகனத்தின் பின்பகுதி முழுமையாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இது தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Thursday, September 4, 2025

எல்ல பேருந்து விபத்தில் 10 பேர் பலி!


எல்ல பேருந்து விபத்தில் 10 பேர் பலி!

வியாழக்கிழமை தங்காலை நகராட்சி மன்ற ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 10 பேர் கொல்லப்பட்டனர். 15 பேர் காயமடைந்தனர்.

நகராட்சி ஊழியர்களை சுற்றுலாவுக்கு ஏற்றிச் சென்ற பேருந்து, சாலையின் 24வது கிலோமீட்டர் தூண் அருகே, வீதியை விட்டு விலகி சரிவில் விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர், அதே நேரத்தில் அவசரகால குழுவினரும் காவல்துறையினரும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணையைத் தொடங்கியுள்ளன. இது சமீபத்திய மாதங்களில் இந்தப் பகுதியில் பதிவான மிக மோசமான வீதி விபத்துகளில் ஒன்றாகும்.


யாழ் வல்லைவெளியில் தந்தை வாகன விபத்தில் பலி!! மகள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி!!


யாழ் வல்லைவெளியில் தந்தை வாகன விபத்தில் பலி!! மகள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி!!

வடமராட்சி அல்வாய் கிழக்கு பகுதியில் தாயின் வயிற்றில் ஐந்து மாத கருவாக இருந்த போது தந்தை வல்லை வெளியில் வாகன விபத்தில் உயிரிழந்தார் ,

தாயார் ஒரு ஆசிரியர் தனது வீட்டில் மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வந்தார் , தாயின் சகோதரர்கள் புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் நிலையில் வறுமையிலும் , அயலவர்கள் தமது பிள்ளைகளை அயற்கிராம பாடசாலைகளில் சேர்த்த போதும் தனது மகளை யா / அல்வாய் அம்பாள் வித்தியாலயத்தில் சேர்த்து கல்வி கற்பித்து வந்தார்,

பாடசாலை , கோட்டம் , வலய மாவட்டம் மாகாணம் மட்ட போட்டிகளிலும் முதலிடம் பெற்ற பிரசன்னா ரஸ்வீனா தற்போது வெளியாகியுள்ள புலமைப்பரிசில் பரீட்சையில் 149 புள்ளிகளை பெற்று சித்தியடைந்து தாயாருக்கும் , பாடசாலைக்கும் , அல்வாய் மண்ணுக்கும் , உறவுகளுக்கைம் பெருமையை தேடித் தந்திருப்பதுடன் தாயாரின் முயற்சியினால் கஷ்டங்கள் துயரங்களை கடந்து சித்தியடைந்துள்ளார் ;

Tuesday, September 2, 2025

செம்மணியில் பெரிய எலும்புக்கூடுத் தொகுதியுடன் மீட்கப்படு்ம் சிறிய எலும்புக்கூட்டுத் தொகுதி!!


செம்மணியில் பெரிய எலும்புக்கூடுத் தொகுதியுடன் மீட்கப்படு்ம் சிறிய எலும்புக்கூட்டுத் தொகுதி!!

செம்மணி மனித புதைகுழியில் ஒரு பெரிய எலும்புக்கூட்டு தொகுதியுடன் , ஒப்பிட்டளாவில் சிறிய எலும்பு கூட்டு தொகுதி அருகருகே அடையாளம் காணப்பட்டுள்ளது .செம்மணி புதைகுழியின் இன்றைய அகழ்வு பணிகளின் போது பெரிய எலும்பு கூட்டு தொகுதியின் தோள் பட்டையுடன் , தொடுகையுற்றவாறு , ஒப்பிடளாவில் சிறிய எலும்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த எலும்பு கூடுகளை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் , அவை நாளைய தினம் முற்றாக அகழ்ந்து எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை , கடந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, மூன்று சந்தர்ப்பங்களில் ஒன்றன் மேல் ஒன்றாக 06 எலும்பு கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் , தற்போது மேலும் இரு எலும்பு கூட்டு தொகுதிகள் ஒன்றுடன் ஒன்று தொடுகையுற்ற நிலையில் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,

Monday, September 1, 2025

யாழில் பன்றிக்கு வைத்த மின்சார வேலியில் சிக்கி சிவகுமார் மரணம்!!

 


யாழில் பன்றிக்கு வைத்த மின்சார வேலியில் சிக்கி சிவகுமார் மரணம்!!

மின்சார வேலியில் இருந்து மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பழை – தும்பளையைச் சேர்ந்த குணரத்தினம் சிவகுமார் (வயது 64) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் கிளானை பகுதியில் தோட்டம் செய்கின்றார். இவர் சகோதரியின் வீட்டில் இருந்தே தோட்ட வேலைகளில் ஈடுபட்டு வருகின்றார்.பன்றியிடம் இருந்து தனது மரவள்ளி தோட்டத்தை பாதுகாப்பதற்காக மின்சார வேலி அமைத்துள்ளார். இரவில் மாத்திரம் மின்சாரம் பாய்ச்சப்படும். காலையில் மின்சாரத்தை நிறுத்துவது வழமை.

அவருக்கு இரண்டு தோட்டங்கள் உள்ள நிலையில் மற்றைய தோட்டத்துக்கு சென்றுவிட்டு பின்னர் குறித்த தோட்டத்திற்கு வந்துள்ளார். மின்சார இணைப்பு நிறுத்தப்பட்டதாக நினைத்து வேலியில் கை வைத்தவேளை அவரை மின்சாரம் தாக்கியது. இதன்போது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job