செம்மணியில் பெரிய எலும்புக்கூடுத் தொகுதியுடன் மீட்கப்படு்ம் சிறிய எலும்புக்கூட்டுத் தொகுதி!!
செம்மணி மனித புதைகுழியில் ஒரு பெரிய எலும்புக்கூட்டு தொகுதியுடன் , ஒப்பிட்டளாவில் சிறிய எலும்பு கூட்டு தொகுதி அருகருகே அடையாளம் காணப்பட்டுள்ளது .செம்மணி புதைகுழியின் இன்றைய அகழ்வு பணிகளின் போது பெரிய எலும்பு கூட்டு தொகுதியின் தோள் பட்டையுடன் , தொடுகையுற்றவாறு , ஒப்பிடளாவில் சிறிய எலும்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த எலும்பு கூடுகளை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் , அவை நாளைய தினம் முற்றாக அகழ்ந்து எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை , கடந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, மூன்று சந்தர்ப்பங்களில் ஒன்றன் மேல் ஒன்றாக 06 எலும்பு கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் , தற்போது மேலும் இரு எலும்பு கூட்டு தொகுதிகள் ஒன்றுடன் ஒன்று தொடுகையுற்ற நிலையில் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,
0 comments:
Post a Comment