யாழில் அந்தரப்பட்டு அதி வேகமாகப் போன யுவதி!! பரிதாபகரமாக டிப்பருக்குள் நசுங்கிப் பலியான 20 வயது ஜதுஸ்!! நடந்தது என்ன?
யாழ் சாவகச்சேரி ஏ9 வீதி நுணாவில் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளதுடன் பெண் ஒருவர்படுகாயமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் சாவகச்சேரியில் இருந்து யாழ் நோக்கி சென்ற டிப்பரை அதே திசையில் சென்ற மோட்டார்சைக்கிளை செலுத்திய பெண் முந்திச்செல்ல முற்பட்ட வேளை எதிர் திசையில் யாழில் இருந்து சாவகச்சேரி நோக்கி சென்ற இளைஞர் செலுத்திய மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இளைஞர் டிப்பருக்குள் தூக்கி வீசப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயை உயிரிழந்துள்ளார் படு காயமடைந்த பெண் சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இவ் விபத்து சம்பவத்தில் மீசாலை புத்தூர் சந்தி பகுதியை 20வயதான திலகீஸ்வரன் ஜதுஸ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment