யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த இரட்டைக் குழந்தைகள்!!
யாழில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழந்து பிறந்ததுடன் மற்றைய குழந்தை பிறந்து 45 நிமிடங்களில் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த நிமலராஜ் சாருமதி தம்பதிகளின் குழந்தைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தைகளின் தாயாருக்கு கடந்த 21 ஆம் திகதி இரவு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
இதன்போது அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்தபோது பெண் குழந்தை இறந்த நிலையில் காணப்பட்டது. ஆண் குழந்தை உயிருடன் பிறந்த நிலையில் 45 நிமிடங்கள் கழித்து உயிரிழந்துள்ளது.
குழந்தைகளின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
0 comments:
Post a Comment