This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

50% OFFICERS 👇👇🔴👇👇

50% OFFICERS 👇👇🔴👇👇
I found this great deal on Daraz! Check it out! Product Name: MAVIC 3 Clone Aerial Drone with Camera - Explore the Skies with Confidence Product Price: Rs.15,000 Discount Price: Rs.7,189

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, August 27, 2025

யாழில் புலம்பெயர்தமிழனிடம் கொள்ளையில் ஈடுபட்ட பயங்கரக் கொள்ளையர்கள்!!

யாழில் புலம்பெயர்தமிழனிடம் கொள்ளையில் ஈடுபட்ட பயங்கரக் கொள்ளையர்கள்!! 

வடமராட்சி அல்வாய் கிழக்கு பகுதியில் புலம் பெயர்ந்த நாட்டில் இருந்து விடுமுறைக்கு வந்து தனது வீட்டில் வசித்து வந்த ஒருவரின் வீட்டில் ஒரு கோடியை ஆறுபது இலட்சம் பெறுமதியான இலங்கை ரூபாவை கொள்ளை அடித்த கொள்ளையர்கள் தனது சக நண்பர்களுடன் சிறிது நாட்களாக மோட்டார் சைக்கிள், புதிய தொலைபேசி வாங்குவது, மற்றும் பொழுது போக்கு செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். நெல்லியடி பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவு அதிரடி நடவடிக்கையால் குறித்த கொள்ளையுடன் தொடர்புடைய 10 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

நெல்லியடி பகுதியில் களவு, போதைப் பொருள் பாவனை மற்றும் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக சிரேஷ்ட பொலிஸ் மா அதிபரினால் கரவெட்டி நெல்லியடி பொலீஸ் பிரிவிற்கு பொலீஸ் பரிசோதகர் கஜான் புத்திக நியமிக்கப்பட்டார்.

அவரின் வழிநடாத்தலில் பாரிய கொள்ளைச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுவிஸ்லாந்து நாட்டில் இருந்து தாயகம் திரும்பி நெல்லியடியில் வசித்து வந்த நபரின் பணத்தினை களவாடிய குற்றச்சாட்டில் கைதானவர்களை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்தியதை அடுத்து அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் 03 பெண்களும் 2 ஆண்களையும் தேடி வருவதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சுவிஸ் நாட்டவரிடம் திருடிய பணத்தில், 75 இலட்ச ரூபாய் பணம், 09 ஆயிரம் சுவிஸ் பிராங், அதிநவீன மோட்டார் சைக்கிள் ஒன்று, அதிநவீன கையடக்க தொலைபேசிகள் – 05 என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சுவிஸ் நாட்டில் வேலையில் இருந்து ஓய்வு பெற்று , ஓய்வு கொடுப்பனவான பெருந்தொகை பணத்துடன், தாயகம் திரும்பி நெல்லியடி பகுதியில் பகுதியில் வயோதிபர் ஒருவர் வசித்து வந்துள்ளார்.

அவர் தனது வீட்டில் வெளிநாட்டு நாணய தாள்கள் உள்ளிட்ட சுமார் ஒரு கோடியே 40 லட்சத்திற்கும் அதிகமான பணத்தினையும் வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக தனது பணம் காணாமல் போவதனை அறிந்து , அது தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , குறித்த நபரின் வீட்டுக்கு வேலைக்கு வந்து செல்லும் இருவர் தொடர்பில் சந்தேகமடைந்து இருவரையும் கைது செய்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் அவர்கள் இருவரும் , தாம் பணத்தினை வீட்டில் இருந்து சிறிது சிறிதாக திருடி வந்ததாகவும், அவற்றினை நண்பர்கள் , தெரிந்தவர்கள் ஊடாக நெல்லியடி பகுதியில் உள்ள வெளிநாட்டு பணங்களை மாற்றி கொடுக்கும் நிலையத்தில் பணத்தினை மாற்றியதாகவும் கூறியுள்ளனர்.

அதன் அடிப்படையில் தொடர் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், திருட்டுக்கு உடந்தையாக செயற்பட்டமை , திருடப்பட்ட பணத்தினை உடைமையில் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் மேலும் 10பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களை விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் புதன்கிழமை நீதிமன்றில் முற்படுத்திய வேளை 08 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெற்றோரை கொன்றவரை கொன்று, எரித்து, புதைத்த மகன் கைது - 2019 சம்பவத்திற்கு பழிக்குப் பழி வாங்கிய கடற்படை வீரர்!


பெற்றோரை கொன்றவரை கொன்று, எரித்து, புதைத்த மகன் கைது - 2019 சம்பவத்திற்கு பழிக்குப் பழி வாங்கிய கடற்படை வீரர்!

கலேவெல, தேவஹுவ பகுதியில் ஆறு வருடங்களுக்கு முன்பு தமது பெற்றோரைக் கொலை செய்ததற்கு பழிவாங்கும் விதமாக, ஒருவரைத் தாக்கி கொலை செய்து, அவரது உடலை எரித்ததாக சந்தேகத்தின் பேரில் கடற்படையில் பணியாற்றும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கலேவெல மகுலுகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கலேவெல, தேவஹுவ பகுதியைச் சேர்ந்த 59 வயதான ஏ.ஜி. விமலசேன என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர் கடந்த 25 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக மகுலகஸ்வெவ பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

அதற்கமைய, இறந்தவர் சார்பில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டை உடனடியாக விசாரித்த பொலிஸார், நேற்றையதினம் (26) காலை விடுமுறையில் இருந்த ஒரு கடற்படை வீரரைக் கைது செய்துள்ளனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது குறித்த கொலை குறித்த தகவல்கள் தெரிய வந்துள்ளன.

கடந்த 2019 ஏப்ரல் 16ஆம் திகதி, தேவஹுவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த ஒரு தம்பதியினர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலையைத் தொடர்ந்து, தம்பதியரின் இரண்டு மகன்களும் தனிமையில் அநதாரவாகியுள்ளனர்.

இளைய மகன் அப்போது கடற்படையில் இணைந்து தனது பயிற்சி முடித்திருந்தார்.

குறித்த தம்பதியினரை இறந்த பெண்ணின் இரண்டு சகோதரர்கள் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். காணித் தகராறுதான் கொலைக்குக் காரணமென பொலிசார் தெரிவிக்கின்றனர்.

​​அவர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்த நிலையில், அவர்களுக்கு பிணை வழங்கப்பட்ட பின்னர் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.

2019 ஆம் ஆண்டு தமது பெற்றோரின் கொலையில் தொடர்புடையதாகக் கூறப்படும், நீதிமன்றத்தில் இருந்து பிணையில் வந்த இறந்த பெண்ணின் சகோதரதே இவ்வாறு கொலை செய்யப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

#tamilnewsupdates #NewsUpdate #srilanka #TamilNews #SriLankaNews #news #newsfeed

Tuesday, August 26, 2025

news

News sle 

Monday, August 25, 2025

சுவிஸ்லாந்தில் பொலிஸ் துரத்தியதில் 17 வயது இளைஞன் பலி!! பொலிசாருடன் மோதிய இளைஞர்கள்!!


சுவிஸ்லாந்தில் பொலிஸ் துரத்தியதில் 17 வயது இளைஞன் பலி!! பொலிசாருடன் மோதிய இளைஞர்கள்!!

லொசானில்  நேற்று மாலை விபத்து ஒன்றை அடுத்து, இளைஞர்கள் பொலிசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.

பொலிசாரிடமிருந்து தப்பிச் செல்லும் போது ஏற்பட்ட விபத்தில்  17 வயது இளைஞன் இறந்த செய்தியை அறிந்ததும் நேற்று இரவு 9:30 மணி பிரெலாஸ் மாவட்டத்தில் சுமார் நூறு இளைஞர்கள் கூடியிருந்தனர்.

முகமூடி அணிந்த இளைஞர்கள் வாணவேடிக்கை பொருட்களால் பொலிசாரை குறிவைத்தனர். வீதியில் குப்பைக் கொள்கலன்களையும் அவர்கள் தீயிட்டு எரித்தனர்.

 லொசான் போக்குவரத்து நிறுவனமான TL க்கு சொந்தமான பேருந்தும்  சேதமாக்கப்பட்டது. நள்ளிரவுக்குப் பிறகு அமைதி திரும்பியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். எனினும் அங்கு தொடர்ந்தும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைக் குற்றவாளிகளான சுவிஸ் குமார் உட்பட்டவர்கள் விடுதலையாகும் சாத்தியம் உள்ளதா?

 


புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைக் குற்றவாளிகளான சுவிஸ் குமார் உட்பட்டவர்கள் விடுதலையாகும் சாத்தியம் உள்ளதா?

யாழ்ப்பாணத்தில் 2015 ஆம் ஆண்டு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை நவம்பர் 6 ஆம் திகதி விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் பிரீத்தி பத்மன் சூரசேன, அச்சலா வெங்கப்புலி மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் இன்று (25) விசாரிக்கப்பட்டன.

பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்து, வழக்கின் தமிழ் மொழி பெயர்ப்புகளைப் பெற நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக ஆனதாக சுட்டிக்காட்டினார்.

அதன்படி, மேல்முறையீட்டு விசாரணைக்கு குறுகிய கால அவகாசம் வழங்குமாறு பிரதிவாதி வழக்கறிஞர் நீதிமன்றத்தை கோரினார்.

இந்த மேல்முறையீடுகளை விரைவாக விசாரிக்க குறுகிய கால அவகாசம் வழங்கப்படும் என்று தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன தெரிவித்தார்.

அதன்படி, தொடர்புடைய மேல்முறையீட்டை நவம்பர் 6 ஆம் தேதி விசாரிக்க நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.

2015 மார்ச் 3 ஆம் திகதி பாடசாலையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது சிவலோகநாதன் வித்யா என்ற 18 வயதான மாணவியைக் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததற்காக “சுவிஸ் குமார்” உட்பட 7 பிரதிவாதிகளுக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் 2017 ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.

பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட விதம் சட்டத்துக்கு முரணானது என்றும், எனவே அவர்களை விடுதலை செய்து குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும் கூறி, பிரதிவாதிகள் தங்கள் சட்டத்தரணி கள் மூலம் உயர் நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

Sunday, August 24, 2025

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் சுஜிதா ஜேர்மனியில் பலியானது


யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் சுஜிதா ஜேர்மனியில் பலியானது ஏன்?

யாழ் வடமராட்சி பொலிகண்டி சேர்ந்த பெண் ஜேர்மனியில் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்து கடந்த வருடம் ஜேர்மனி சென்ற குறித்த பெண் உயிரிழந்துள்ளார் .தயாபரன் சுஜிதா வயது 39 என்ற பெண்ணே 21-08-2025 அன்று இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் , இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

Saturday, August 23, 2025

கனடாவில் நிரந்தர வதிவிட உரிமைக்கு இனி இலகுவான வழி-ஓடித் தப்ப நினைக்கும் இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்..!

 


கனடாவில் நிரந்தர வதிவிட உரிமைக்கு இனி இலகுவான வழி-ஓடித் தப்ப நினைக்கும் இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்..!

கனடா நிரந்தர வதிவிட விண்ணப்பதாரர்களுக்கான ஆங்கில சோதனைகளில் புதிய மாற்றம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கமைய, TOEFL Essentials எனும் புதிய தெரிவை கனடா அரசாங்கம் ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இந்தியா, இலங்கை உள்ளிட்ட பட நாடுகளிலிருந்து நிரந்தர வதிவிட உரிமைக்காக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோர் அதிக வசதியை பெற முடியும்.

TOEFL Essentials test தற்போது Express Entry உள்ளிட்ட முக்கிய வதிவிட வழிகளுக்குப் பொருந்தும்.

இதில் Federal Skilled Worker Program, Federal Skilled Trades Program மற்றும் Canadian Experience Class ஆகியவை அடங்கும்.

Atlantic Immigration Program மற்றும் பல மாநில தெரிவு திட்டங்களிலும் (PNPs) இந்த தெரிவு ஏற்கப்படும். ஆனால், மாநிலங்கள் தனித்தனியாக முடிவெடுப்பதால், அங்குள்ள விதிகள் மாறுபட வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், TOEFL Essentials test குறித்த கீழ்வரும் முக்கிய தகவல்கள் கவனிக்கப்பட வேண்டியவை,

இந்த தெரிவு 90 நிமிடங்கள் நீளமுடையது

கேட்கும் திறன், வாசிப்பு, எழுத்து, மற்றும் பேசும் திறன் ஆகிய நான்கு பகுதிகளையும் மதிப்பீடு செய்கிறது

தெரிவுக்குப் பின் கேட்கும் மற்றும் வாசிப்பு திறனுக்கான முடிவுகள் உடனே கிடைக்கும்

முழுமையான மதிப்பீடு 6 நாட்களில் வெளியிடப்படும்

சுவிஸ்லாந்தில் தமிழ் போதகர் குமார் பல யுவதிகள், சிறுமிகளுடன் லீலை!! பெர்ன் உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு என்ன?


சுவிஸ்லாந்தில் தமிழ் போதகர் குமார் பல யுவதிகள், சிறுமிகளுடன் லீலை!! பெர்ன் உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு என்ன?

பெர்னில் தமிழ் சுதந்திர திருச்சபையின் தலைவரான போதகர் குமார் வில்லியம்ஸ் பெர்ன் உயர் நீதிமன்றத்தால் குற்றவாளியாக காணப்பட்டு,  5,600 சுவிஸ் பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஐந்து ஆண்டுகள் நாட்டில் வசிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மோசடி செய்ய தூண்டுதல், ஆவணங்களை மோசடி செய்தல் மற்றும் சமூக உதவியை சட்டவிரோதமாகப் பெறுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அவருக்கு நேற்று இந்த தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

போதகர் குமார் வில்லியம்ஸ் தனது தேவாலயத்திலிருந்து வருமானத்தை மறைத்து, அதே நேரத்தில் கோனிஸ் சமூகத்திடமிருந்து சமூக உதவியைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

எனவே சமூக நல அலுவலகம், ருண்ட்ஷாவ் தெரிவித்தபடி, மோசடி மற்றும் சமூக உதவியை து ஷ்பிர யோகம் செய்ததாக புகார் அளித்தது.

அண்மைய ஆண்டுகளில், போதகர்  வில்லியம்ஸ் மீண்டும் மீண்டும் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.

சிறார்கள் உட்பட பல பெண்கள் அவர் மீது பா லி யல் து ஷ்பிர யோகம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். வில்லியம்ஸ் எப்போதும் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார்.

2023 ஆம் ஆண்டில், போதகர் வில்லியம்ஸ் நெருக்கமான வீடியோ அரட்டைகளில் ஈடுபடுவதைக் காட்டும் வீடியோக்கள் வெளிவந்தன.

ஒரு கிளிப்பில், அவர் ஒரு பெண்ணை ஆடைகளை அவிழ்க்க உத்தரவிடுகிறார்.

இந்த காட்சிகள் திருச்சபையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தின என்று, முன்னாள் சபை உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.

அதைத் தொடர்ந்து, மற்ற பெண்கள் முன்வந்து இதே போன்ற அனுபவங்களை விவரித்தனர்.

வில்லியம்ஸ் ஒரு தேவதை போன்ற ஆன்மீக வேடங்களில் நடித்து பா லிய ல் து  ன்பு றுத்தல் செய்ததாக சில பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

மற்றொரு பெண், பேய்களை விரட்டுவதாக சாக்குப்போக்கில் தனது தனிப்பட்ட அங்கத்தை  தொட்டதாக கூறினார்.

உயர் பிராந்திய நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் இறுதியானது அல்ல என்றும் அவர்,  பெடரல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, August 22, 2025

“கழுதையே. உன்னை இல்லாமல் ஆகிவிடுவேன்” என கூறி 2015ல் பதிவியை விட்டு துரத்திய ரணிலை சிறைக்கு அனுப்பிய அந்த கெட்ட பயல் யார்?


“தொலைந்து விடு, கழுதையே. உன்னை இல்லாமல் ஆகிவிடுவேன்” – இவை அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2015-ல், மத்திய வங்கி பிணை மோசடியை விசாரித்த CID இயக்குநர் ஷானி அபேசேகரக்கு கூறிய வார்த்தைகள்.

பின்னால், ஷானி அபேசேகர சில போலிக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, சுமார் ஒரு வருடம் மறியலில் இருந்தார்.

சரியாக 10 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், ஓய்வு பெற்ற ஷானி, இன்று CID இயக்குனராக மீண்டும் நியமிக்கப்பட்டு, ரணிலை மறியலுக்கு அனுப்பியுள்ளார்.

கெட்டபய சார் இந்த ஷானி!

ரணிலை கொஞ்சம் மரியாதையாக நடத்தியிருக்கலாம் என்பதில் நியாயம் இருந்தாலும், சமயங்களில் சட்டத்தின் ஆட்சியில் ரணில் சதுரங்கம் விளையாடியதை நினைவில் கொள்ள வேண்டிய தருணம் இது.

1988-களின் “பட்டலந்த” சித்தரவதை முகாம் போன்ற பழைய பைல்களை மறந்தாலும்,

இறுதியாக ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில்:

– உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர்களை நியமிக்காமல் இழுத்தடித்தமை,

– தேர்தல்களை தாமதப்படுத்தியமை அல்லது தடுத்தமை,

– உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை பாராளுமன்றத்தில் மறுபரிசீலனை செய்ய முயற்சித்தமை,

என சில உதாரணங்களை கூறலாம்

ரணில் ஒரு சட்டத்தரணியாக இருந்தும் இவ்வாறு செயற்பட்டது கவலைக்குரியது. இன்றும் கூட நீதிமன்றத்தில் காலுக்கு மேல் கால் போட்டு ரணில் இருந்தது, சட்டவாட்சியின் மீதும், நீதித்துறையின் மீதமுள்ள அவரது மனநிலையை வெளிப்படுத்துகிறது.

ரணில் விக்கிரமசிங்க நாட்டிற்குச் செய்த சேவையை மதிக்கும் அதேவேளை, இந்த நிகழ்வை, எந்தத் தலைவரும் சட்டத்திற்கு மேலானவர் அல்ல என்பதையும், ஜனநாயகத்தில் சட்டத்தின் ஆட்சியை மதிப்பது கட்டாயம் என்பதையும் வலியுறுத்தும் தருணமாகவே பார்க்கப்பட வேண்டும்.

ரணில் விக்ரமசிங்க கைது!


 ரணில் விக்ரமசிங்க கைது!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று அவர் முன்னிலையாகியிருந்தார்.

ஜனாதிபதியாக இருந்த காலத்தில்உத்தியோகபூர்வ அழைப்பின்றி பிரித்தானியாவுக்கு விஜயம் செய்தபோது, ​​16.9 மில்லியன் ரூபா அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக குறித்த விசாரணை இடம்பெற்றது.

முன்னதாகவே அரசாங்கத்துக்கு மிகவும் நெருக்கமான யூடியூபர் ஒருவர் இன்றைய தினம் (22) ரணில் கைது செய்யப்படுவது உறுதி என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.     

Thursday, August 21, 2025

மட்டு’வி்ல் சம்பவம்!! இரகசிய திருமணம் செய்த காதலி!! வெளிநாட்டிலிருந்து வந்த காதலனால் கடத்தப்பட்டது ஏன்?

 


மட்டு’வி்ல் சம்பவம்!! இரகசிய திருமணம் செய்த காதலி!! வெளிநாட்டிலிருந்து வந்த காதலனால் கடத்தப்பட்டது ஏன்?

மட்டக்களப்பில் நீதிமன்றத்துக்கு முன்னால் இளம் பெண் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

27 வயது பெண் ஒருவர் 29 வயதுடைய ஆண் ஒருவரை காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் கடந்த 2023 பதிவு திருமணம் செய்துவிட்டு அவரவர் பெற்றோர் வீட்டில் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் சில காலங்களுக்கு பின்னர் இந்த பதிவு திருமணம் செய்து கொண்டது தொடர்பாக பெற்றோருக்கு தெரிய வந்துள்ள நிலையில் குறித்த காதலன் வெளிநாடு சென்றுள்ளதுடன், பல தீய பழக்கத்தில் ஈடுபட்டிருப்பதாக காதலிக்கு தெரியவந்துள்ளது.

இதனால் குறித்த பெண் விவாகரத்து கோரி மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இதனையடுத்து வெளிநாடு சென்றுள்ள காதலனுக்கு பதிலாக அவரது சகோதரியார் நீதிமன்றில் ஆஜராகி வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து காதலன் திரும்ப நாட்டுக்கு வந்து வழக்கிற்கு நீதிமன்றில் ஆஜராகி வழக்கு விசாரணையில் பங்கெடுத்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ தினமானத்தன்று குறித்த வழக்கு விசாரணைக்கு காதலி அவரது சகோதரி மற்றும் உறவினர்களுடன் சென்றுள்ளார். காதலன் அவரது சகோதரி மற்றும் ஒரு குழுவினருடன் சென்று நீதிமன்றுக்கு சென்றுள்ளார்.வண்டியில் கடத்த முற்பட்டுள்ளனர். காப்பாற்ற முற்பட்ட காதலியின் உறவினர் ஒருவரை சுமார் 50 மீட்டர் தூரம் இழுத்து சென்று தள்ளி விட்டு சினிமா பாணியில் குறித்த பெண்ணை காதலன் அவரது சகோதரியும் கடத்தி சென்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக கடத்தப்பட்ட பெண்ணின் சகோதரி மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


நல்லுார் கோவிலுக்கு அருகில் காவாலிகளால் வீடு தீ வைப்பு!! வீட்டார் நல்லுார் சென்ற பின் சம்பவம்!!


 நல்லுார் கோவிலுக்கு அருகில் காவாலிகளால் வீடு தீ வைப்பு!! வீட்டார் நல்லுார் சென்ற பின் சம்பவம்!!

நல்லூர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றினுள் அதிகாலை வேளை புகுந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டில் இருந்த தளபாடங்களை தீ வைத்துள்ளது.  நல்லூர் ஆலயத்திற்கு 500 மீற்றர் தூரத்தில் உள்ள வீடொன்றில் வசிக்கும் குடும்பத்தினர் இன்றைய தினம் காலை நல்லூர் தேர் திருவிழாவிற்கு சென்ற சமயம் , வீட்டில் யாருமில்லாத நேரம் வீட்டினுள் அத்துமீறி நுழைந்த கும்பல் வீட்டின் வரவேற்பறையில் காணப்பட்ட தளபாடங்களுக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர். வீட்டில் இருந்து பெரும் புகை வருவதனை அவதனித்த கோயிலுக்கு சென்றவர்கள் . அயலவர்களுக்கு அறிவித்தது ,  அயலவர்களுடன் இணைந்து தீயினை அணைத்துள்ளனர்.

சம்பவத்தை அறிந்து , ஆலயத்திற்கு சென்ற வீட்டாரும் வீடு திரும்பினார். சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


லண்டனிலிருந்து பிரான்ஸ் வந்த பாடசாலை நண்பனுடன் புங்குடுதீவு சியாமளா உல்லாசம்!! நகைகளை நண்பனுக்கு கொடுத்து விட்டு களவு போய்விட்டது என நடித்து பிடிபட்டது எப்படி?

 


லண்டனிலிருந்து பிரான்ஸ் வந்த பாடசாலை நண்பனுடன் புங்குடுதீவு சியாமளா உல்லாசம்!! நகைகளை நண்பனுக்கு கொடுத்து விட்டு களவு போய்விட்டது என நடித்து பிடிபட்டது எப்படி?

பிரான்ஸ் றேம்ஸ் பகுதியில் வசிக்கும் யாழ்ப்பாணம் புங்குடுதீவுப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட 41 வயதான சர்மிளா என்பவரை பிரான்ஸ் பொலிசார் கைது செய்துள்ளதாகத் தெரியவருகின்றது. அவருடன் அவரது வீட்டில் தங்கியிருந்த லண்டனைச் சேர்ந்த யாழ்ப்பாணம் புங்குடுதீவுப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட 41 வயதான சுரேஸ்குமார் என்பவரும் பொலிசாரால் தேடப்படுகி்ன்றார்.

நடந்தது என்ன?

வர்ணகுலன் சியாமளா என்ற 41 வயதான குடும்பப் பெண், கணவன் வியாபார தேவை கருதி இந்தியா சென்ற நிலையிலும், 17 வயதான மகன் நண்பர்களுடன் வேறு நாடு ஒன்றுக்கு சுற்றுலாவுக்கு சென்ற நிலையில் லண்டனில் வசிக்கும் குடும்பஸ்தரான தனது பாடசாலை நண்பனான சுரேஸ்குமார் என்பவரை தனது வீட்டுக்கு வரவழைத்து சில நாட்கள் இருவரும் வீ்ட்டில் தனிமையில் இருந்துள்ளனர். சுரேஸ்குார் மீண்டும் லண்டன் சென்ற பின் சியாமளா வீட்டில் வைத்திருந்த தனது 50 பவுண் நகைகளைக் காணவில்லை என பொலிசாருக்கு முறையிட்டுள்ளார், பொலிசார் தீவிர விசாரணைகளில் இறங்கிய போது சியாமளாவின் வீட்டு CCTV சில நாட்கள் செயலிழந்துள்ளதை அவதானித்ததுடன் அது வேண்டுமென்றே நிறுத்தப்பட்டதையும் கண்டு பிடித்துள்ளனர். அத்துடன் அருகில் உள்ள பகுதிகளின் காணப்பட்ட CCTV பதிவுகளின் படி சியாமளாவுடன் கணவர் அல்லாத ஒருவர் உள்ளே சென்று வருவதையும் கண்டு பிடித்துள்ளனர். அயலவர்களை விசாரித்த போது அவர்களும் சந்தேகப்படும்படியான நடமாட்டாங்கள காணப்படவில்லை என கூறியிருந்தனர். அத்துடன் சியாமளா வீட்டின் வெளிக் கதவு திருடன் உடைப்பது போல் உடைக்கபடாது வித்தியாசமான முறையில் சேதப்படுத்தப்பட்டிருந்ததையும்  அலுமாரியும் அதே போல் உடைக்கப்பட்டிருந்ததையும் அவதானித்து விசாரணைகளைத் தொடங்கிய போதே சியாமளா தனது கள்ளக்காதலனுக்கு நகைகளைக் கொடுத்த பின்னர் காப்புறுதி பெறுவதற்காக நாடகமாடியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சியாமளா பொலிசாரால் கைது செய்யப்பட்டு்ள்ளதாகவும் அவருடன் தங்கியிருந்த லண்டன் சுரேஸ்குமாரும் பொலிசாரால் தேடப்படுவதாகவும் பிரான்ஸ் தமிழ் ஊடகத்தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளார்கள்.

Wednesday, August 20, 2025

தோட்டத்துக்கு சென்ற 28 வயது சுபாசினியும் தாயார் குமாரியும் யானை மிதித்து பலி!! நடந்தது என்ன?


தோட்டத்துக்கு சென்ற 28 வயது சுபாசினியும் தாயார் குமாரியும் யானை மிதித்து பலி!! நடந்தது என்ன? 

குருணாகல் பிரதேசத்தில் பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கச் சென்ற தாயும் மகளும் யானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் மஹாவ, நிகவலயாய மதியாவ பகுதியை சேர்ந்த 28 வயதான தக்ஷிலா சுபாஷினி என்ற இளம் பெண் மற்றும் 53 வயதுடைய அவரது தாயார் இனோகா குமாரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யானை தாக்கியதில் தாயும் மகளும் அம்பன்பொல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகள் ஏற்கனவே இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாயும் மகளும் மரணம்

பலத்த காயமடைந்த தாய், மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவர் உயிரிழந்தார்.

அம்பன்பொல பிரதேச செயலகத்தின் மேலாண்மை சேவைகள் அதிகாரியான இனோகா குமாரி செயற்பட்டுள்ளார். காட்டு யானைகள் தொடர்ந்து அந்தப் பகுதிகளில் சுற்றித் திரிவதாகவு கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

காட்டு யானைகள் வழக்கம் போல் வந்திருக்கலாம் எனவும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளார். நேற்று காலை 9.00 மணியளவில், வயலில் தாயையும் மகளையும் காட்டு யானை தாக்கியது.

தாக்குதலுக்குள்ளான மகளையும் தாயையும் மருத்துவமனையில் சேர்க்க குடியிருப்பாளர்கள் நடவடிக்கை எடுத்தனர். எனினும் அவர்களை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

நாடாளுமன்ற உறுப்புரிமையை துறந்து வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக திட்டம்: அர்ச்சுனா எம்.பி அறிவிப்பு!


 நாடாளுமன்ற உறுப்புரிமையை துறந்து வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக திட்டம்: அர்ச்சுனா எம்.பி அறிவிப்பு!

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, எதிர்காலத்தில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யத் தயாராகி வருவதாகக் கூறினார்.

நேற்று (20) இரவு சிங்கள தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான நேரடி அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே நாடாளுமன்ற உறுப்பினர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்த ஆவலுடன் இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்

Tuesday, August 19, 2025

மகளின் குழந்தைப் பேற்றை பார்வையிட யாழிலிருந்து சுவிஸ் சென்ற 51 வயது பெண் அதிகாரி மருமகனால் க ற்பழி க்கப்பட்டார் !! மருமகன் கைது!!


மகளின் குழந்தைப் பேற்றை பார்வையிட யாழிலிருந்து சுவிஸ் சென்ற 51 வயது பெண் அதிகாரி மருமகனால் க ற்பழி க்கப்பட்டார் !! மருமகன் கைது!!

யாழ்ப்பாணத்திலிருந்து சுவிஸ்லாந்துக்குச் சென்ற 51 வயது குடும்பப் பெண் தனது மகளின் கணவனால் க ற்பழி க்கப்பட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் அங்குள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. 

சில வருடங்களுக்கு முன் சுவிஸ்லாந்துக்கு திருமணம் முடித்துச் சென்ற மகள் தனது 2 வது மகப் பேற்றுக்காக தனது தாயாரை சுவிஸ்லாந்துக்கு வரவழைத்துள்ளார். யாழில் உள்ள அரச அலுவலகம் ஒன்றில் முகாமைத்துவ அதிகாரியாகக் கடமையாற்றும் குறித்த குடும்பப் பெண் சுவிஸ்லாந்து சென்று மகளுடன் தங்கியிருந்த போது மகப்பேறு நடந்து ஓரிரு நாட்கள் கழிந்த நிலையில் மருமகனால் க ற்பழி க்கப்பட்டதாக தெரியவருகின்றது. பிள்ளையுடன் படுத்திருந்த மகளை அறைக்கு வெளியே பூட்டி விட்டு தாய் படுத்திருந்த அறைக்குள் புகுந்த மருமகன் நித்திரையில் கிடந்த மாமியுடன் உறவு கொள்ள முற்பட்ட போது மாமியார் திமிறி மறுத்துள்ளார். 

அதன் காரணமாக தாயாரை கடுமையாகத் தாக்கி காயப்படுத்திய பின்னர் தாயாரை வ ல்லு றவு க்குள்ளாக்கியதாக மகள் பொலிசாரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். பொலிசார் மருமகனை கைது செய்யும் போது அவர் நிறை வெறியில் இருந்துள்ளதாகத் தெரியவருகின்றது. சுவிஸ்லாந்தில் தலைநகரான பேர்னில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 மாமியாரைக் க ற்பழி த்த மருமகனின் தந்தை பேர்னில் பிரபல மோட்டார் கார் உற்பத்தி நிறுவனத்தில் முக்கிய பதவியில் உள்ளவர் எனவும் யாழ்ப்பாணத்தில் கே.கே.எஸ் வீதியில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வர்த்தக கட்டம் ஒன்றின் உரிமையாளராக உள்ளதாகவும் சுவிஸ்தமிழ்த் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

Sunday, August 17, 2025

நல்லுார் முருகனின் சிவப்புச்சட்டை பரதேசிகளின் ரவுடித்தனம்!! பெண்கள் மீது கொடூர தாக்குதல்!!


நல்லுார் முருகனின் சிவப்புச்சட்டை பரதேசிகளின் ரவுடித்தனம்!! பெண்கள் மீது கொடூர தாக்குதல்!!

இன்று (17) நல்லூர் கந்தசுவாமி ஆலய கைலாசவாகன திருவிழா சுவாமி வீதியுலா முடிந்து வசந்த மண்டபத்திற்கு போகும்போது வசந்த மண்டபத்திற்கு முன்பாக சுவாமி கும்பிடுவதற்காக காத்திருந்ந்த பெண்களை விலகிப் போகவில்லை என்று சிவப்புச் சால்வை கட்டிய ரவுடி ஒருவன் தாக்கியுள்ளான்.

இதனால் வசந்த மண்டபத்திற்கு முன்பாக முறுகல் நிலை ஏற்பட்டது. தாக்குதலை நடாத்திய ரவுடியை பாதிக்கப்பட்ட பெண்களும் அங்கிருந்த பலரும் கடிந்தார்கள்.

 சிவப்பு சால்வை கட்டிக்கொண்டு நல்லூரில் சுற்றித் திரிபவர்கள் சிலர் அராஜகமான செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

நல்லுார் முதலாளியான சயந்தன் செம்மறி குறித்த ரவுடிகளுக்கு ஆதரவான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றான். பின் வீதியை திறக்காது மூடி வைத்துள்ள சயந்தன் செம்மறி வெளிவீதியில் பெருமளவு மக்கள் திரண்டுள்ள நேரத்தில் சிவப்பு கயிறு கட்டி சுவாமிக்கு அப்பாலும் ஒருவரும் வராதவாறு தடுத்து நிறுத்துவதால் பெரும் சன நெரிசல் ஏற்பட்டு வருகின்றது.   அத்துடன் சேட்டுடன் வரும் பக்தர்களை சயந்தன் செம்மறியின் சிவப்பு சட்டை ரவுடிகள் மிகக் கேவலமாக ஏசித் துரத்தி வருவதாகவும் சுவாமிக்கு தொலைவில் அவர்கள் நின்றாலும் அவர்களை கலைப்பதாகவும் பக்தர்கள் தரப்பில் கடும் விசனம் தெரிவிக்கப்படுகின்றுது. இன்று சயந்தன் செம்மறியின் ரவுடி ஒன்று ஒலிவாங்கியால் பெண்ணை கடுமையாகத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.எனவே இந்தப் பிரச்சினையை ஆலய நிர்வாகம் தீர்க்க வேண்டும் எனவும் தீர்க்க தவறும் பட்சத்தில் பக்தர்களுக்கும், அவர்களுக்குமிடையே வீண் முரண்பாடுகள் ஏற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஓமந்தை பகுதியில் விபத்து இருவர் உயிருக்கு பலர் காயம்!


ஓமந்தை பகுதியில் விபத்து இருவர் உயிருக்கு பலர் காயம்

வவுனியா-யாழ்ப்பாணம் பிரதான வீதியில் ஓமந்த பகுதியில் கெப் வண்டியொன்றும் லொறியொன்றும் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 9 பேர் காயமடைந்துள்ளனர்.

32 வயது ஆசிரியையை கர்ப்பமாக்கிய 23 வயது யாழ் பல்கலைக்கழக மாணவன் உயிர்மாய்க்க முயற்சி!!


32 வயது ஆசிரியையை கர்ப்பமாக்கிய 23 வயது யாழ் பல்கலைக்கழக மாணவன் உயிர்மாய்க்க முயற்சி!!

திருமணமாகத நிலையில் கர்ப்பமாகிய 32 வயது ஆசிரியை ஒருவர் தனது கர்ப்பத்திற்கு காரணமான 23 வயதான யாழ் பல்கலைக்கழகத்தி்ல கலைப் பீடத்தில் கற்கும் வவுனியா மாணவனை, தன்னைத் திருமணம் செய்யக் கோரி அழுத்தம் கொடுத்த காரணத்தால் குறித்த மாணவன் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளான். குறித்த சம்பவம் கடந்த புதன்கிழமை வவுனியா பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா வடக்குப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட ஆசிரியை ஒருவர் அங்குள்ள வீடு ஒன்றில் தங்கி கல்வி கற்பித்து வந்துள்ளார். அவர் யாழ்ப்பாணம் சென்று வரும் போது யாழ் பல்கலைக்கழக மாணவனுடன் பஸ்சில் நட்பாகியதாகத் தெரியவருகின்றது. இந்த நட்பு பின்னர் தவறான நட்பாக மாறி ஆசிரியை தற்போது 5 மாத கர்ப்பமாகியுள்ளார். இதனையடுத்து ஆசிரியை குறித்த மாணவனை தன்னைத் திருமணம் செய்ய வற்புறுத்தி வந்ததாகத் தெரியவருகின்றது. இது தொடர்பாக குறித்த மாணவனின் பெற்றோரிடமும் ஆசிரியை நியாயம் கேட்டு வந்ததுடன் அடுத்த கட்ட நடவடிக்கையாக தன்னைத் திருமணம் செய்யாது விடின் பொலிசாரின் உதவியை நாட போவதாக மாணவனை அச்சுறுத்தியுள்ளார். இதனையடுத்தே குறித்த மாணவன் தற்கொலைக்கு முயன்றதாகத் தெரியவருகின்றது. தற்போது மாணவன் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சென்ற ஆசிரியை மாணவனுடன் விடுதியிலும் தனது கணவர் என்று கூறி சர்ச்சைகளை உருவாக்கி வருவதாகவும் இதனால் மாணவனின் உறவுகள் கடும் கோபத்தில் காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Saturday, August 16, 2025

வவுனியாவில் மாணவிகளும் VSC ரியூசன் முதலாளியும் ஜல்சாவா? கிணற்றில் சடலமாக மிதந்த மாணவி!! நடப்பது என்ன?


 வவுனியாவில் மாணவிகளும் VSC ரியூசன் முதலாளியும் ஜல்சாவா? கிணற்றில் சடலமாக மிதந்த மாணவி!! நடப்பது என்ன?

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்…. 

2022 ஆம் ஆண்டு கல்வி நிலையத்துக்குள் மாணவிகளும் அந்த கல்வி நிலையத்தின் நிர்வாகியும் மதுபானம் அருந்தியதாக கூறி சீல் வைக்கப்பட்ட ஒரு கல்வி நிலையம் எப்படி மறுபடியும் ஓபன் ஆனது?

ஒருமுறை மட்டுமில்லை பலமுறை ஆசிரியர்களும் மாணவிகளும் மதுபானம் அருந்துவது என்று சொல்லி பலமுறை இந்த கல்வி நிலையத்தின் மீது முறைப்பாடுகள் நடந்துள்ளது..

இலங்கையில் இருக்கும் எல்லா தனியார் கல்வி நிலையங்களும் ஆறு மணி ஆறரை கடைசியாக 7:00 மணிக்கு மூடப்பட்டு விடும்,ஆனால் இந்த கல்வி நிலையத்தில் மட்டும் இரவு ஒன்பதரை மணி வரை வகுப்புகள் நடக்கிறது..

போதை வஸ்து கொடுத்து இந்த மாணவியை க ற்ப ழித்து கொலை செய்து கிணத்துக்குள் போட்டார்கள் என்ற சந்தேகம் அங்கிருக்கும் மக்களுக்கு எழுகிறது..

சக மாணவிகளையும் அந்த வகுப்பு நடத்திய ஆசிரியரையும் விசாரிக்குமாறு பெற்றோர்கள் போலீசார்ரிடம் முறையிட்டு இருந்தார்கள் ஆனால் இதுவரை எந்த ஒரு விசாரணையும் நடக்கவில்லை..

அவ்வளவு ஆழமான கிணற்றில் ஒரு பாரமான பொருள் விழும்போது பெரிய ஒரு சத்தத்தை எழுப்பும் அந்த சத்தம் ஏன் இந்தப் பிள்ளையோடு படித்த சக மாணவிகளுக்கும் அங்குள்ள ஆசிரியர்களுக்கும் கேட்கவில்லை..?

இறந்து போன மாணவியின் பாதணிகள் கிணத்துக்கு அருகாமையில் திக்கு திசையில் சிதறி கிடக்கிறது..

தற்கொலை பண்ணியிருந்தால் அந்த காலணியை அந்தப் பெண் கழட்டி விட வாய்ப்பு இல்லை பாதணியோடு குதித்து தற்கொலை செய்திருக்கும்..

நன்றாக படிக்கக் கூடிய மாணவி எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லை எப்படி இறந்து போகும்??

பல பா. லியல் குற்றங்கள் மதுபானங்கள் போதை வாஸ்து பயன்படுத்திய இந்த கல்லூர் தனியார் கல்வி நிலையத்தை எவ்வாறு மறுபடியும் திறந்து நடத்துகிறார்கள்.

யாழில் 25 பவுண் நகைகளை நண்பியிடம் கொடுத்து ஏமாந்த சுகாசினி தற்கொலை!!


யாழில் 25 பவுண் நகைகளை நண்பியிடம் கொடுத்து ஏமாந்த சுகாசினி தற்கொலை!!

நண்பியிடம் 25 பவுண் நகையை கொடுத்து ஏமாந்த குடும்பப் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். பண்டத்தரிப்பு – சில்லாலை பகுதியைச் சேர்ந்த ரொபேட் ராஜ்குமார் ஆன் சுகாசினி (வயது 43) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணின் சினேகிதி ஒருவர் தனது மகனின் திருமணத்திற்கு செலவழிப்பதற்கு பணம் தேவைப்படுவதால் அடகு வைப்பதற்கு என 25 பவுண் நகையை குறித்த பெண்ணிடம் வாங்கியுள்ளார். இருப்பினும் அவர் அந்த நகையை திருப்பி கொடுக்காமல் தொடர்ச்சியாக குறித்த பெண்ணை ஏமாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினமும் (15) அந்த நகையை நண்பியிடம் கேட்டுள்ளார். அவர் அந்த நகையை வழங்க மறுக்க மனவிரக்தியில் இன்று (16) அதிகாலை தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். இளவாலை பொலிஸார் சாட்சிகளை நெறிப்படுத்தினர்.

சற்று முன் நல்லுாரில் வாள் வெட்டு!! ஆலயத்தின் முன் இரத்தம் ஒழுக ஒழுக துடி துடித்து விழுந்த 4 பேர்!!


சற்று முன் நல்லுாரில் வாள் வெட்டு!! ஆலயத்தின் முன் இரத்தம் ஒழுக ஒழுக துடி துடித்து விழுந்த 4 பேர்!!

யாழ்ப்பாணம், நல்லூர் ஆலய சூழலில் இன்று (16) இரவு நடந்த வாள்வெட்டு சம்பவத்தில் 4 இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.

நல்லூர் ஆலயத்தின் பின்புறமாக- அரசடி சந்திக்கு அண்மையாக இளைஞர் குழுவொன்றின் மீது மற்றொரு குழு வாள்வெட்டு தாக்குதல் நடந்துள்ளது. இதில் 4 இளைஞர்கள் காயமடைந்தனர். படுகாயமடைந்த ஒரு இளைஞன் இரத்தம் வழிந்தோடிய நிலையில், நல்லூர் ஆலய பக்கமாக தப்பியோடி, நல்லூர் ஆலயத்தின் பின்புறமுள்ள பிள்ளையார் ஆலயத்தின் முன்பாக விழுந்தார்.

நோயாளர் காவு வண்டியின் மூலம் காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர். வாள்வெட்டில் ஈடுபட்ட குழுவினர் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

நல்லூரானுக்கு வெடிகுண்டு மிரட்டல்!!


நல்லூரானுக்கு வெடிகுண்டு மிரட்டல்!!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் பகுதியில் வெடிகுண்டு இருப்பதாக வந்த அநாமதேய நபரொருவரின் தொலைபேசி அழைப்பால் இன்று ஆலயத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இன்று அதிகாலை வந்த தொலைபேசி அழைப்பையடுத்து விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் ஆலய சூழலில் அதிகளவில் மோப்ப நாய் சகிதம் குவிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா, ஒரு விஷமியினால் குறித்த அழைப்பு எடுக்கப்பட்டதாகவும் அதில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் தெரிவித்தார்.

Friday, August 15, 2025

கட்டிய கணவன், 2 பிள்ளைகளை விட்டு விட்டு பிரான்ஸ் குடும்பஸ்தருடன் கம்பி நீட்டி கிளிநொச்சி மாதங்கி!!


கட்டிய கணவன், 2 பிள்ளைகளை விட்டு விட்டு பிரான்ஸ் குடும்பஸ்தருடன் கம்பி நீட்டி கிளிநொச்சி மாதங்கி!!

யுத்தம் நிறைவடைந்த பின்னர் வட மாகாணத்தில் பல கலாசார சீரழிவுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை கவலைக்குரியது. இள வயது திருமணங்கள், பல தார திருமணங்கள், பதின்ம வயது திருமணங்கள் மற்றும் பதின்ம வயது கர்ப்பம் காரணமாக வட மாகாணத்தின் கல்வித் தரம் குறைவடைகின்றது.

இது ஒருபுறம் இருக்க, புலம்பெயர் தேசங்களில் இருந்து உதவி வழங்கும் போர்வையில் வருபவர்களும், இங்குள்ள குடும்பப் பெண்களின் வாழ்க்கையை புரட்டிப் போடுகிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது என்னவோ ஏதுமறியாத குழந்தைகள்தான்.

புகைப்படத்தில் உள்ள ரங்கா என்று அழைக்கப்படும் தனுராஜ் மதுரங்கி 1994 ஆம் ஆண்டு பிறந்தவர். திருமணம் முடித்து,

11 வயது ஆண் பிள்ளை மற்றும் 6 வயது பெ2ண் பிள்ளை என இரண்டு பிள்ளைகள் மற்றும் கணவனுடன் கிளிநொச்சியில் வாழ்ந்தவர். யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை இலக்கு வைத்து புலம்பெயர் நாடான பிரான்ஸில் இருந்து கிடைக்கும் நிதி உதவிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டபோது, தொலைபேசியில் சசி என்பவருடன் மலந்த காதல் (காமம்) காரணமாக இன்று கணவரும் குழந்தைகளும் நிர்க்கதியான நிலையில் தவிக்கிறார்கள்.

ஆனால் ரங்காவோ (மதுரங்கியோ) இரண்டு குழந்தைகளையும் கணவரையும் உதறித் தள்ளிவிட்டு, சட்டரீதியான விவாகரத்து ஏதுமின்றி, வெளிநாட்டு முகவர் ஊடாக சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேறி, பிரான்ஸ் சென்றடைந்துள்ளார்.

அதுமாத்திரம் அல்லாமல், அங்கு ஏற்கனவே திருமணமான சசியுடன் சட்டவிரோதமாக குடும்பம் நடத்திவருவதுடன், ஒரு குழந்தைக்கும் தாயார் ஆகியுள்ளார்.

கணவன் மற்றும் பிள்ளைகளுடன் கிளிநொச்சியில் வாழும்போது, கணவரை அருகில் வைத்துக் கொண்டு, பிரான்ஸ் சசியுடன் இரவிரவாக தொலைபேசியில் காதல் லீலைகளை புரிந்தார். அதனால் கணவன் – மனைவிக்கு இடையில் அடிக்கடி பிரசரசினைகள் எழுந்தன. ஆனால் ரங்காவோ வாய் கூசாமல் கணவன் எயிட்ஸ் நோயாளி என கதை கட்டியதுடன், தன்னை அடித்து துன்புறுத்துவதாக பொலிஸிலும் முறைப்பாடு செய்தார். பிரான்ஸ் காதல் (காமம்) தொடர்புக்கு கிளிநொச்சியில் அரசியல் தொடர்புடைய ஹோட்டல் உரிமையாளரும் உதவியாம். அவரின் மகன் பி்ரான்ஸ் நாட்டில் குடியுரிமை பெறுவதற்கான தொழில் வாய்ப்பை பிரான்ஸ் சசி வழங்கியதற்கான கைமாறாம் இது. இறுதியில் கணவன் – பிள்ளைகளுக்கு டாட்டா காட்டிவிட்டு, பறந்துவிட்டார் ரங்கா (மதுரங்கி)

யாரை யார் நோவது?

Thursday, August 14, 2025

விசா இன்றிய வருகை : மேலதிக நாடுகளுக்கு இடமில்லை | Visa Free Entry No More Countries Considered

 


விசா இன்றிய வருகை : மேலதிக நாடுகளுக்கு இடமில்லை!

இலங்கைக்கு வருகை தரும் தங்கள் நாட்டினருக்கு விசா இல்லாத வசதியை மேலும் பல நாடுகள் கோரியுள்ளதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, அமைச்சரவை சமீபத்தில் அங்கீகரித்த 40 நாடுகளின் பட்டியலைத் தவிர வேறு எந்த நாட்டையும் பரிசீலிக்க தற்போது எந்தத் திட்டமும் இல்லை என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை பொதுப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வருகிறது.

மேலும் பல நாடுகளுக்கு விரிவுபடுத்தும் திட்டம் இல்லை

  இது தொடர்பாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிக்கையில், “40 நாடுகளுக்கு இலவச விசா வசதியை வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நாங்கள் சமர்ப்பித்தோம். அந்தப் பட்டியல் சட்டமா அதிபரால் (AG) அங்கீகரிக்கப்பட வேண்டும், அதன் பிறகு அது நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படும். தற்போது, அந்த வசதியை மேலும் பல நாடுகளுக்கு விரிவுபடுத்தும் திட்டம் இல்லை.”

 இலங்கை முன்பு ஏழு நாடுகளுக்கு இலவச விசா வசதியை வழங்கியிருந்தது. சமீபத்திய கொள்கை முடிவில் மேலும் 40 நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன, இந்த திட்டம் இப்போது சட்ட மா அதிபரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. ஒப்புதல் அளிக்கப்பட்டதும், அது நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு, இந்த மாத இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்த நாடுகளின் குடிமக்கள் இலவச சுற்றுலா விசாவிற்கு ஒன்லைனில் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 

 இதேவேளை இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் சுற்றுலா மூலம் கிடைக்கும் வருமானத்தின் அடிப்படையில் நாடுகளை மதிப்பிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் 40 நாடுகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டதாக அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ சமீபத்தில் தெரிவித்தார். அதைத் தொகுக்கும்போது எந்த நாட்டிற்கும் சிறப்பு சலுகை வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

  தற்போது, அந்நிய செலாவணி வருவாயின் முக்கிய இயக்கியாக இலங்கை தனது சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. நுழைவுத் தேவைகளை தளர்த்துதல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் உலக சந்தைகளில் பாதுகாப்பான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இடமாக நாட்டை ஊக்குவிப்பதன் மூலம் அதிக பார்வையாளர்களை ஈர்க்க அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.

சாராயம் கொடுத்து 12 வயது சிறுமியுடன் பல தடவைகள் உறவு கொண்ட தாயின் 2 வது கணவன்!! நடந்தது என்ன?


சாராயம் கொடுத்து 12 வயது சிறுமியுடன் பல தடவைகள் உறவு கொண்ட தாயின் 2 வது கணவன்!! நடந்தது என்ன?

12 வயது சிறுமிக்கு மதுபானம் கொடுத்து பா லி யல் வ ன்கொ டுமை செய்த, அவரது தாய் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட கணவர் (சித்தப்பா) கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மொனராகலை, கோனகம் ஆர பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சிறுமியின் தாய் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு வெளிநாடு சென்றுள்ளதுடன் சிறுமியை அவரது சித்தப்பா (தாயின் இரண்டாவது திருமண கணவர்) மற்றும் பாட்டி கவனித்துக் கொண்டுள்ளனர்.

இந்த ஆண்டு ஜனவரி முதல், சந்தேக நபரான சித்தப்பா அவ்வப்போது தனது இடுப்பை தொடுமாறு சிறுமியிடம் கூறி சிறுமியை தொட்டு பா லி யல் சேஷ்டை புரிந்துள்ளார். சந்தேக நபர் கூறியபடி செய்யாவிடின்,சிறுமியை அடித்து சித்திரவதை செய்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் ஒரு நாள், பாட்டி பிபில பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அன்று சிறுமி பாடசாலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த போது சந்தேக நபர் சிறுமியை அறைக்குள் அழைத்துச் சென்று மதுபானம் கொடுத்து குடிக்க வற்புறுத்தி போதையில் மயக்கமடைந்த பின்னர் பா லி யல் வ ன்கொ டுமை செய்துள்ளார்.

அதற்கு பின்னரும் பல முறை சிறுமி பாடசாலை முடிந்து வீடு திரும்பிய போது சிறுமியை தாக்கி பா லி யல் வ ன்கொ டுமை செய்துள்ளார்.

இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் 32 வயதுடைய சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Wednesday, August 13, 2025

காதலனை சந்திப்பதற்கா மன்னாரிலிந்து உயிரைப் பணயம் வைத்து கடல் வழியாக தனியே சென்ற விதுர்ஷியா கைது!! நடந்தது என்ன?


காதலனை சந்திப்பதற்கா மன்னாரிலிந்து உயிரைப் பணயம் வைத்து கடல் வழியாக தனியே சென்ற விதுர்ஷியா கைது!! நடந்தது என்ன?

தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் நேற்று அதிகாலை இளம்பெண் ஒருவர் தனியாக நடந்து சென்றுள்ளார். இது குறித்து அப்பகுதி மீனவர்கள் போலீஸாருக்குத் தகவல் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்குச் சென்ற கடலோரப் பாதுகாப்பு குழுமம் மற்றும் க்யூ பிரிவு போலீஸார் அப்பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.இந்த விசாரணையில் இலங்கை திருகோணமலை மாவட்டம் ஆண்டான்குளம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகனின் மகளான விதுர்ஷியா (24), 2003-ம் ஆண்டு இலங்கையில் போர் தீவிரமடைந்த நிலையில் தனது பெற்றோருடன் அகதியாக இந்தியா வந்துள்ளார்.அப்போது பழனியில் உள்ள அகதிகள் முகாமியில் தங்கியிருந்துள்ளார். பின்னர் 2016-ம் ஆண்டு தனது பெற்றோருடன் விதுர்ஷியா இலங்கைக்கு விமானம் மூலம் திரும்பிச் சென்றார்.

இந்நிலையில் விதுஷியாவிற்கு அங்குக் கல்வி கற்கச் சிரமம் ஏற்பட்டதால் விமானம் மூலம் தமிழகம் திரும்பியுள்ளார். பழனிக்கு வந்த அவர் தனியாக வாடகை வீட்டில் தங்கி கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார்.அப்போது தன்னுடன் படித்த கவி பிரகாஷ் என்பவருடன் காதல் கொண்டுள்ளார். இதையடுத்து பெற்றோரின் சம்மதத்துடன் இருவரும் பதிவு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.ஆனால் விதுர்ஷியாவின் விசா காலம் முடிவடைந்ததால் திருமணம் செய்ய முடியாத நிலை உருவானது. இதனைச் சரிசெய்ய உரியக் காலம் முடிந்து கூடுதலாகத் தங்கியிருந்த நாள்களுக்கு அபராத தொகையினைச் செலுத்திவிட்டு மீண்டும் இலங்கையிலிருந்து முறையாக வரும் நோக்கத்துடன் கடந்த ஏப்ரல் மாதம் இலங்கைக்குத் திரும்பிச் சென்றார். அங்கிருந்து இந்தியா வர இந்தியத் தூதரகத்தில் விண்ணப்பித்தபோது விதுர்ஷியாவுக்கு விசா மறுக்கப்பட்டது.

இதனால் காதலனைத் திருமணம் செய்துகொள்வதில் உறுதியாக இருந்த விதுர்ஷியா, காதலுக்காக உயிரைப் பணயம் வைத்து தலைமன்னாரில் இருந்து சட்டவிரோதமாக படகில் தனுஷ்கோடி வந்தார். இதற்கென இலங்கை படகோட்டிகள் விதுர்ஷியாவிடம் இலங்கை மதிப்பிலான ரூபாய் 2 லட்சம் வாங்கிக் கொண்டு அவரை நேற்று முன் தினம் நள்ளிரவு அரிச்சல்முனை பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர் எனத் தெரியவந்தது.

இதையடுத்து மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாமில் விதுர்ஷியாவைத் தங்க வைத்த கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tuesday, August 12, 2025

யாழில் பாடசாலை ஆசிரியை மாலினி மரணம்!!


 யாழில் பாடசாலை ஆசிரியை மாலினி மரணம்!!

 குமுழமுனையைச் சேர்ந்தவரும் யா/சென். ஜேம்ஸ் மகளிர் பாடசாலையின் ஆசிரியையுமாகிய திருமதி. மாலினி விஜய் அவர்கள் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைபாட்டால் இன்றைய தினம் (2025.08.12) இறைவனடி சேர்ந்துள்ளார். இறுதிக் கிரிகைகள் 14.08.2025 வியாழன் அன்று சுண்டிக்குளி,யாழ்ப்பாணத்தில் நடைபெறும்.

பரந்தன் சந்தியில் டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்து நடந்தது என்ன?


 பரந்தன் சந்தியில் டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்து நடந்தது என்ன?

நொடிப்பொழுது இழைக்கும் தவறு வாழ்வில் நீங்காத வடுக்களைத் தந்துவிடுகிறது

மேகங்கள் அங்கும் இங்கும் அலைமோதிக் கொண்டிருக்க சூரியன் தன் பிஞ்சுக்கரங்களை நீட்டிக்கொண்டு மெல்ல எழுந்தான். அன்றைய நாள் விடியல் எல்லோருக்கும் நல்லதாக அமைய வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும், அவ்வாறு தான் யதுகிரியின் எண்ணங்களும். வழமைபோல் தன் கனவுகளுடன் பல எண்ணங்கள் அவளது உள்ளத்தில் ஓடிக்கொண்டிருக்க புறப்பட்டாள் யதுகிரி கனவாலும் நினைத்திருக்க மாட்டாள் இன்றுதான் தன் கடைசி நாள் என்று. வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் வந்தவளை காலனவன் டிப்பர் வடிவில் வந்து பறித்தெடுத்தான் அவள் உயிரிழந்த செய்திகேட்டு பதறிய தாய் உள்ளம் கதறியபடி ஓடினாள் காலனை விரட்டி மகளின் உயிரை பறிக்க கிணற்றடிக்கு. அவரின் தாய்ப்பாசம் சொல்கிறது யதுகிரியின் வளர்ப்பைப் பற்றி

கிளிநொச்சி மாவட்டத்தின் இயற்கை அன்னையின் மொத்த அழகையும் தனக்குள் வைத்துள்ளது பரந்தன் எனும் அழகு தேவதை. அவ்வாறான எழில் கொஞ்சும் அழகிய பரந்தனின் குமரபுரத்தைச் சேர்ந்த சந்திரசேகரம் ஐயாவினுடைய மகளின் இறப்புச் செய்தி கேட்டு அவரின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வேளை, வீதியோரமாக ஒரு வயோதிபர் நடந்து செல்வதைக் கண்டு எனது மோட்டார் சைக்கிளை நிறுத்தினேன். ஏனென்றால் எனக்கு வீடு இருக்கும் இடம் சரியாக தெரியாது அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வோம் என ஐயா நேற்று பரந்தன் சந்தியில் டிப்பர் அடிச்சு செத்த பிள்ளையின்ட வீடு எவடத்த எண்டு கேட்ட போது கலங்கிய கண்களோடு என்னை நிமிர்ந்து பார்த்தார். நானும் அங்குதான் செல்கின்றேன் என்று தன்னிலை மறந்து கதைகூற ஆரம்பித்தார். அவர் நிலைகண்டு என்னை மறந்த நான் மோட்டார் சைக்கிளில் வந்ததை மறந்து அவருடன் நடந்தேன். அப்போது அவர்மெதுவாக என்னிடம் கேட்டார் தம்பி செத்த பிள்ளைய உனக்கு தெரியுமோ என்று. இல்லை ஐயா நான் அவருடைய உறவினர் உடைய பழக்கத்தில் தான் அங்கு செல்கின்றேன் என்று கூறினேன்.

என்ன வாழ்க்கை அப்பு இது சாகும் வயதில் நானிருக்கின்றேன் வாழும் வயதில் யதுகிரி என்று மௌனமாக அவரது கண்கள் கண்ணீர் சொரிந்தன. அப்பன் இந்த 96ஆம் ஆண்டு இடம்பெயர்வில் இங்க இருந்து போய் வன்னியில இருக்கேக்க தான் இவள் பிறந்தவள். நான் நினைக்கிறேன் சந்திரசேகரனின்ட நான்காவது பிள்ளை 1996ஆம் ஆண்டு இவள் பிறந்து நான்கு வயது மட்டும்நடக்கவே மாட்டாள். அதுகள் வேண்டாத தெய்வம் இல்ல. நான்கு வயதுக்கு பிறகுதான் மெது மெதுவா நடக்கத் தொடங்கினாள் பிறகு இப்படியே 2002 ஆம் ஆண்டு இங்க வந்திட்டினம்.

நல்ல கெட்டிக்காரி விளையாட்டிலும்

சரி. படிப்பிலும் சரி பிறருக்கு உதவி செய்வதிலும் ஒரு வித்தியாசமானவள். இவளின் அளவில் யாரையும் நான் பாத்ததில்லை எல்லோருக்கும் அன்பை சரிசமமாக காட்டுபவள் சாப்பாட்டைத்தான் எள்ளானாலும் ஏழாப் பிரி’ என்பாள் இவள் காட்டும் கருணை, அன்பு. பாசம் யாவுமே சமனாக தான் இருக்கும் என்று கூறிக்கொண்டிருக்கும் போதே வீட்டிற்கு வந்துவிட்டோம். வீட்டிலிருந்து 100m தூரமளவு வரை பனர்கள் இருபுறமும் எனக்கு முதியவர் சொன்னதிற்கும் இதனை பார்த்ததிற்கும் தூக்கி வாரிப் போட்டது இப்படி ஒரு பிள்ளையா என்று அத்தனையும் உண்மை என உணரும் தருணமாக வானம் சிறுக சிறுக மழைத்துளிகளை பொழிந்தது. அந்த மழைத்துளிகள்பனர்களில் பட்டு கண்ணீர் சிந்துவது போல சிந்தின. அத்தனையும் பார்த்த நான் யதுகிரியின் வாழ்க்கை இவ்வளவு சீக்கிரம் முடிந்திருக்கக் கூடாது கடவுளே என்று நினைத்துக் கொண்டே உள்ளே சென்றேன்.

உள்ளே சென்றதும் யதுகிரியின் உடலுக்கு அருகில் தாயவள் அழுதுகொண்டிருந்தாள். எனக்கொரு வருத்தம் என்றால் என்னை பெற்றவள் போல் நான் பெற்ற செல்லம் என்னை பார்த்தாளே அவள் இங்கு மூச்சு பேச்சின்றி கிடக்கின்றாள் என்னால் எதுவும் செய்யமுடியவில்லை. என் பிள்ளைக்கு சொந்த பந்தம் கூட்டி கல்யாணம் செய்ய ஆசைப்பட்டேன். கடைசியில் அவளது இறுதி ஊர்வலத்திற்கு எல்லோரையும் வரும்படியாக செய்துவிட்டதே விதி. சிறுவயதில் இருந்து பெருமையும் பேரும் வாங்கித்தந்த என் பிள்ளைக்கு கல்யாண மாலை போட முடியாமல் போய்விட்டதே என்பிள்ளைக்கு என்கையால் கருமாரிக்கு

மாலையிட வைத்துவிட்டாயே என புலம்பிய புலம்பல் எல்லோரதும் கண்களிலும் கண்ணீர் ஆறாக பாய்ந்தது. அந்த தாயின் அழுகுரல் எல்லோரது மனதையும் கண்ணாடி போல் சுக்குநூறாக உடைத்துவிட்டது.

அப்படியே போய் ஒரு ஓரமாக இருந்தேன் யாரைப் பார்த்தாலும் யதுகிரி அப்படி செய்தாள்.இப்படி செய்தாள் என்று. யதுகிரி இறந்து கிடக்கிறாள் என்பதை மறக்கும் அளவில் கதைத்துக் கொண்டிருந்தனர். இவ்வாறு எல்லோரும் கதைத்துக் கொண்டிருக்கும் போது யதுகிரியின் உறவினர் ஒருவர் பக்கத்தில் இருந்தவருக்கு கூறிக்கொண்டிருந்தார். யதுகிரி சிறு வயதிலிருந்து விளையாட்டிலும் சரி மற்றும் கலைகள் எல்லாவற்றிலும் சிறந்தவள். விளையாட்டு என்றால் முதலிடம் யதுகிரி. அதே போல் பாடசாலையில் ஏதும் நிகழ்வாக இருந்தாலும் விழாவாக இருந்தாலும் சரி யதுகிரியின் நிகழ்வு இருக்கும். அவள் இல்லாத நிகழ்வு இருக்காது. அவளின் திறமை எல்லாவற்றிலும் புறம்பானது அவளுக்கு அந்த திறன் பிறக்கும் போதே கடவுள்கொடுத்தவரம் என்றுதான் சொல்ல வேண்டும்.

சிறு பறவைகள்.மரம்,செடிகள் என இயற்கையின் அழகை இரசிப்பதிலும் அவளைப்போல் யாரும் இல்லை. அவளின் இழப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை இத்தனைக்கும் அவள் ஒரு பட்டதாரி கிழக்கு பல்கலைக்கழகம் சென்று பட்டபடிப்பு முடித்தவள். படித்து முடிய அரச வேலை கிடைக்கும் வரை தாமதிக்காமல் தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்துகொண்டிருக்கிறாள். அங்கு செல்லும்போது தான் இவ்வாறு நடந்துவிட்டது என்று அவளை நினைத்து குமுறி அழுதார். அவரைச் சுற்றியுள்ள வர்கள் சமாதானம் செய்தனர்.

அவரைச் சமாதானம் செய்து கொண்டிருக்கும் போது எனக்கு பக்கத்தில் ஒருவர் வந்து அமர்ந்தார். நான் எதர்ச்சியாக அவரின் முகத்தைப் பார்த்தேன்.எனது நிறுவனத்தில் தான் யதுகிரி வேலை செய்கிறாள். எனது அனுபவத்தில் இப்படி ஒரு பிள்ளையை பார்த்ததில்லை அவரின் இழப்பை ஜீரணிக்க முடியவில்லை. கொஞ்ச நாளைக்கு முன்னால் வந்து நான் வேலையை விடப்போகிறேன் என்றாள். ஏன் என்று கேட்டேன் என் அம்மாவிற்கு கண் ஒப்ரேசன் செய்திருக்கு. நான் தான் அவரைப் பார்க்கவேண்டும் எனக்கு அம்மாவிற்கு பிறகு தான் எல்லாமே என்று கூறினாள். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஏனென்றால் அவளின் திறமை,அவளின் ஆர்வம். வேலையில்

காட்டும் பற்றுணவர்வு இதுவரை யாரிலும் பார்த்தில்லை. அதனால் நீ வேலையை விட வேண்டாம் எத்தனை நாள் வேண்டுமானாலும் லீவு எடுத்துக்கொள் அம்ம்மாவிற்கு சுகமானதும் வேலைக்கு வா என்று கூறி அனுப்பினேன் எனக்கூறி அழுதார்.

இவ்வாறு ஒவ்வொருவராக யதுகிரியின் ஒவ்வொரு விடயங்களை புலம்பிக்கொண்டிருந்த போது கிளி/பரந்தன் இந்துக்கல்லூரி முதல்வர் கண்ணீர் அஞ்சலி உரை ஆற்றினார். அவர் உரை ஆற்றும் முன்பே அவரது கண்ணில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்திருந்தன. அவர் சொன்ன விடயங்கள் எல்லோரும் சொன்னதையும் கேட்டவையாக இருந்தாலும் திகட்டாதவையாக கேட்டுக் கொண்டிருந்தனர் அனைவரும். அப்போது அவர் ஒரு விடயம் சொன்னார். நான் ஒருநாள் யதுகிரியிடம் உனக்கு யதுகிரி என பெயர் வைத்தது யார் எனக் கேட்டேன். அதற்கு அவள் கர்வமாகவும் விளையாட்டாகவும் பதிலளித்தாள். என் அப்பாதான் வைத்தார் என்றாள் யதுகிரி. யதுகிரி என்றால் என்ன தெரியுமா உங்களுக்கு? பாரதிக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசான் தான் சேர் யதுகிரி. அவரின் பெயரைத்தான் அப்பா எனக்கு வைத்துள்ளார் என்றாள். அவள் கூறியது முற்றிலும் உண்மை அந்த பெயர் அவளுக்கு அவ்வளவு பொருத்தம் எனக்கலங்கினார்.

இங்கு நடைபெறும் ஒவ்வொரு விடயமும் எனக்குள் பல எண்ணங்களை எழுப்பின. ஒரு சாதாரண பெண்அவள். அவள் வாழ்ந்த வாழ்க்கை எல்லோர் மனதிலும் இப்படி இடம்பிடித்திருக்கின்றதே. கிழக்கு பல்கலைக்கழக பட்டதாரி, அதோடு ஒரு புகைப்பட கலைஞர். இலக்கிய வாதியாகவும் இருக்கிறாள். அதோடு ஊர்மக்களின் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவளாக இருக்கிறாள். வேலை செய்யும் இடத்தில் ஒரு சிறந்த வழிகாட்டி ஒரு தந்தைக்கு ஒப்பாகப் பார்க்கப் படுகிறாள். ஒரு மனிதரால் இத்தனை யாகவும் எவ்வாறு இருக்க முடியும். இந்த சிறுவயதில் இயற்கை கூட விடை பெறமுடியாமல் தன் வருத்தம் தெரிவிக்கும் முகமாக மழைத்துளியாக தன் கண்ணீர் பூக்களை தெளிக்கின்றது.

இவ்வாறு வாழ வேண்டிய பிள்ளைகள் பலரின் உயிரை சர்வசாதாரணமாக எடுத்துவிடுகிறது வீதி விபத்து என்ற அரக்கன்.

சட்டங்கள் இறுக்கமடைந்தால் தவறுகள் குறைக்கப்படும் என்று கூறுவார்கள். வீதி விபத்தென்பது சாரதிகளின் கவனயீனத்தால் ஏற்படுவது.

ஒரு சாரதியின் சிறு கவனயீனம்ஒரு உயிரையே எடுக்கிறது எனின் நிச்சயம் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தற்போது அதிகளவான விபத்துக்கள் டிப்பர் போன்ற கனரக வாகனங்களால் நடைபெறுகின்றன.

எனவே வீதி விதிகளில் டிப்பர் போன்ற கனரக வாகனங்களின் மீதான சட்டங்கள் இறுக்க வேண்டும் இல்லையேல் இன்னும் பல யதுகிரிகளை எம் சமூகம் இழக்க வேண்டிவரும்.

கிளி குமார்

Monday, August 11, 2025

🔴 #வவுனியாவில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட மாணவி..!


🔴 #வவுனியாவில் கிணற்றிலிருந்து 

சடலமாக மீட்கப்பட்ட மாணவி..!

வவுனியாவில் வைரவப் புளியங்குளத்திலுள்ள V.S.C தனியார் 

கல்வி நிலைய வளாகத்திலுள்ள 

கிணற்றில் இருந்து  உயர்தர வகுப்பு மாணவி ஒருவர் இன்று மாலை 

சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் 

தெரியவருவதாவது,

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் உயர்தர வர்த்தகப் பிரிவு மாணவர்களுக்கு காலையில் இருந்து மதியம் 12 மணிவரை வகுப்பு நடைபெற்றுள்ளது. குறித்த கல்வி நிலையத்தில் உயர்தர வர்த்தகபிரிவு 2025 இல் கல்வி கற்ற குறித்த மாணவி நீண்ட நேரமாகியும் வீடு வந்து சேராமையால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குறித்த மாணவியை தேடியுள்ளனர்.

இதன்போது, குறித்த மாணவியின் புத்தகப்பை, துவிச்சக்கர வண்டி என்பன மாணவி கல்வி பயின்ற தனியார் கல்வி நிலையத்தில் காணப்பட்டதுடன், அக் கல்வி நிலைய வளாகத்தில் இருந்த கிணற்றின் அருகே மாணவியின் செருப்பும் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பெற்றோர் மற்றும் கல்வி நிலைய நிர்வாகத்தினர் வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார், மாநகர சபையினர், கிராம அலுவர், கிராம மக்கள், மாணவர்கள் எனப் பலரும் இணைந்து 40 அடி ஆழமான கிணற்றில் தேடுதல் மேற்கொண்டு குறித்த மாணவியை சடலமாக மாலை மீட்டு எடுத்தனர்.

குறித்த சம்பவத்தில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி பயிலும் வவுனியா, கோமரசன்குளம் பகுதியைச் சேர்ந்த மாணவியே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

சடலமாக மீட்கப்பட்ட மாணவியின் உடலம் வவுனியா வைத்தியாசலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

Sunday, August 10, 2025

பலாங்கொடையில் கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவியைத் தேடிச் சென்ற கணவன்!! வீட்டில் தீயில் கருகி பலியான 8 வயது சிறுவன்!


பலாங்கொடையில் கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவியைத் தேடிச் சென்ற கணவன்!! வீட்டில் தீயில் கருகி பலியான 8 வயது சிறுவன்!

பலாங்கொடை, மஹவத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், வீடு முற்றிலுமாக எரிந்து எட்டு வயது சிறுவன் எரிந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தந்தை, தாய் மற்றும் தாயின் காதலன் ஆகியோர் நேற்று (09) இரவு கைது செய்யப்பட்டதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் பலாங்கொடை ஆதார மருத்துவமனையில் பலத்த தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்ப தகராறு காரணமாக 08 திகதி இரவு மனைவி வேறொரு நபருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதுடன், குறித்த பெண்ணின் கணவரும் மனைவியை தேடி வீட்டை விட்டு வெளியேறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அச் சமயத்தில் எட்டு வயது மட்டும் வீட்டில் இருந்துள்ளதுடன் அதிகாலையில் வீடு தீப்பிடித்து எரிந்ததுள்ளது. அதனை பார்த்த அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் அளித்ததுடன் அந்த நேரத்தில் கணவரும் வீடு திரும்பியிருந்தார்.

இது தொடர்பாக, இரத்தினபுரி குற்றப் புலனாய்வு அதிகாரிகளும் பலாங்கொடை பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.முதற்கட்ட விசாரணையில் மனைவிக்கு சிறிது காலமாக திருமணத்திற்கு புறம்பான தொடர்பு இருந்ததும் அதன் காரணமாக தம்பதியினரிடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளதுடன் வீடு தீப்பிடித்தது தொடர்பாக சந்தேகங்கள் எழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பலாங்கொடை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Saturday, August 9, 2025

முத்தையன்கட்டில் இளைஞன் கொலைச் சம்பவம்!! 5 இராணுவ அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது!!


முத்தையன்கட்டில் இளைஞன் கொலைச் சம்பவம்!! 5 இராணுவ அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது!!

முல்லைத்தீவில் இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு மாயமான நபர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் ஐந்து இராணுவ அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை, குறித்த இளைஞனின் உடலை உடற்கூற்று பரிசோதனைக்கு எடுத்துச் செல்லுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, உடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.குறித்த இராணுவ முகாமிற்கு சென்ற ஐவரில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதுடன் மற்றுமொரு நபருக்கு முதுகுப் பகுதிகளில் பலத்த அடிகாயங்கள் இருக்கும் நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, August 8, 2025

யாழில் 12 வயது மாணவன் நண்பிக்கு அனுப்பிய தனது குஞ்சு மணி வீடியோ!! மாணவியின் தாயார் பார்த்து அதிர்ச்சி!! பெற்றோரே அவதானம்!!

 


யாழில் 12 வயது மாணவன் நண்பிக்கு அனுப்பிய தனது குஞ்சு மணி வீடியோ!! மாணவியின் தாயார் பார்த்து அதிர்ச்சி!! பெற்றோரே அவதானம்!!


யாழில் தான் கல்வி கற்கும் ரியூசனில், தனது வகுப்பைச் சேர்ந்த மாணவியின் தாயின் வட்சப் இலக்கத்திற்கு தனது குஞ்சுமணியின் வீடியோவை அனுப்பியுள்ளான் 12 வயது மாணவன். குறித்த மாணவனும் மாணவியும் யாழில் உள்ள முன்னணி ஆண்கள், பெண்கள் பாடசாலையில் கற்று வருவதுடன் மாணவனின் தாயும் தந்தையும் அரச அதிகாரிகள் எனவும் மாணவியின் தந்தை வர்த்தகர் என்பதுடன் தாயாரும் அரச உத்தியோகத்தர் எனத் தெரிவருகின்றது.

ரியூசன் வட்சப் குறுாப்பில் காணப்பட்ட மாணவியின்  இலக்கத்திற்கு மாணவன் பல தடவைகள் தொடர்பு கொண்டு சற்றிங் செய்துள்ளதும் மாணவியும் அதற்கு பதிலளித்த பின் அந்த மெசேஜ்களை அழித்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் குறித்த மாணவன் 2 நிமிடங்கள் அடங்கிய தனது குஞ்சுமணியின் வீடியோவை மாணவிக்கு மதியம் 3 மணியளவில் அனுப்பியுள்ளான். மாணவி பாடசாலை வி்ட்டு வந்த பின்னர் ரியூசனுக்கு செல்லாத நேரங்களில் இவ்வாறான விளையாட்டுக்கள் தொடந்து நடந்துள்ளன. மாணவியின் தாயாரின் 2 தொலைபேசிகளில் ஒரு தொலைபேசி மாணவியின் பாவனையில் இருந்துள்ளதாகத் தெரியவருகின்றது, இந் நிலையில் மாணவியின் தாயார் தனது தொலைபேசியில் ஏற்பட்ட பழுது காரணமாக மாணவியின் தொலைபேசியை சிம் மாற்றி வி்ட்டு அலுவலகத்திற்கு கொண்டு சென்ற போதே குறித்த மாணவன் தனது குஞ்சுமணியின் வீடியோவை வட்சப்பிற்கு அனுப்பியிருந்தார். இதனையடுத்து மேற்கொண்ட விசாரணைகளின் போதே இருவரது திருவிளையாடல்களும் பிடிபட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இதையடுத்து மாணவனின் பெற்றோரிடம் தாயார் முறையிட்ட போது அவர்கள் மாணவியையும் தாயாரையும் தரக்குறைவாக விமர்சித்ததாகத் தெரியவருகின்றது. இதன் பொலிசாருக்கு செல்லும் நிலை ஏற்பட்டு, பின்னர்  மோதலை மாணவர்கள்  கற்கும் ரியூசன் நிர்வாகி தீர்த்து வைத்ததாகத் தெரியவருகின்றது.

சமூகவலைத்தளப் பயன்பாடு இளம் சமூகத்தில் எந்த அளவுக்கு சீரழிந்துள்ளது என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும். ஆகவே பெற்றோரே உங்கள் பிள்ளைகளை அவதானித்து வாருங்கள்.

Saturday, August 2, 2025

யாழில் கள்ளக் காதலனுடன் ஓடிய தாய் பிரதேசசெயலகத்தில் வைத்து மகளை நையப்புடைத்த போது வேடிக்கை பார்த்த உத்தியோகத்தர்கள்!!



யாழில் கள்ளக் காதலனுடன் ஓடிய தாய் பிரதேசசெயலகத்தில் வைத்து மகளை நையப்புடைத்த போது வேடிக்கை பார்த்த உத்தியோகத்தர்கள்!!

யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேசசெயலகத்தில் வைத்து கடந்த சில நாட்களுக்கு முன் குடும்பப் பெண் ஒருவர் தனது மகளை அங்கு கடமையாற்றிய உத்தியோகத்தர்களுக்கு முன் நையப்புடைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த குடும்பப் பெண் தனது கணவனைப் பிரிந்து கள்ளக்காதலனுடன் வாழ்ந்து வந்துள்ளார். அவ்வாறு வாழ்ந்து வந்த போதும் கணவரையும் தனது பிள்ளைகளையும் வெறுப்பேற்றும் வகையில் கணவனின் தொலைபேசிக்கு வட்சப் மூலம் படங்கள் மற்றும் தகவல்களை அனுப்பி வந்துள்ளார். இதனால் கடுப்பான குறித்த குடும்பப் பெண்ணின் மகளான பாடசாலை மாணவி மருதங்கேணிப் பிரதேசசெயலகத்தில் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களிடம் முறையிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த குடும்பப் பெண்ணை அங்கு வரவழைத்த உத்தியோகத்தர்கள் மகளின் முன் விசாரித்துக் கொண்டிருக்கும் போது அக் குடும்பப் பெண் தன்னைப் பற்றி முறையிட்டதற்காக குறித்த உத்தியோகத்தர்களுக்கு முன் தனது மகளைத் தாக்கியதாகத் தெரியவருகின்றது. இருப்பினும் இச் சம்பவம் தொடர்பாக உத்தியோகத்தர்கள் பொலிசாரிடம் முறையிடாமல் அம் மாணவி மற்றும் குறித்த பெண்ணை அங்கிருந்த அகற்றியதாகவும் இது தொடர்பாக அப்பகுதி கிராமசேவகருக்கு மாணவியும் தந்தையும் முறையிட்ட போது குறித்த குடும்பப் பெண் தாக்கியதற்கான வீடியோ ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே பொலிசாரிடம் முறையிட முடியும் என கிராமசேவகர் கூறிய அவர்களை அங்கிருந்து வெளியேற்றியதாகவும் பிரதேசசெயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

யாழில் பௌத்த பிக்கு சடலமாக மீ்ட்பு!!



யாழில் பௌத்த பிக்கு சடலமாக மீ்ட்பு!!

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்த பௌத்த பிக்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பதுளை வீதி, பசற பகுதியைச் சேர்ந்த வனபதுலே சரணஹர தேரர்  என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்திருந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை சில இடங்களை சுற்றிப்பார்த்த பின்னர் நாகவிகாரைக்கு சென்று அங்கு இரவு உறக்கத்திற்கு சென்றுள்ளார். மறுநாளான நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்

ரயில் கழிவறைக்குள் தொப்புள் கொடியுடன் பெண் சிசுவின் சடலம்!! தாயைத் தேடுகின்றது பொலிஸ்!!



ரயில் கழிவறைக்குள் தொப்புள் கொடியுடன் பெண் சிசுவின் சடலம்!! தாயைத் தேடுகின்றது பொலிஸ்!!

மாளிகாவத்தை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 8346ஆம் எண் ரயிலின் மூன்றாம் வகுப்பு பெட்டியின் கழிப்பறையில் தொப்புள் கொடியுடன்  பெண் சிசுவின் சடலம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட சிசுவுக்கு வயது சுமார் மூன்று நாட்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இரவு பயணத்தை முடித்து புத்தளத்திலிருந்து கல்கிசை நோக்கி வந்த ரயில் மாளிகாவத்தை நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

அதைப் பராமரிக்கச் சென்ற தொழிலாளர்கள் குழுவினர், மூன்றாம் வகுப்பு பெட்டியிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுவதை உணர்ந்து சோதனை செய்தபோது, ஒரு பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசுவின் சடலத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

தெமட்டகொட பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அளுத்கம நீதவானும் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தையும் ரயில் பெட்டியையும் பார்வையிட்டார்.

சிசுவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன்,

சம்பவத்திற்கான காரணம் மற்றும் குற்றவாளியை கண்டறிய விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

Friday, August 1, 2025

ஆசிரியையான மனைவியுடன் உ டலு றவு கொண்ட வீடியோவை மனைவியிடம் கற்கும் மாணவிக்கு அனுப்பிய கணவன்!! கொழும்பில் நடந்தது என்ன?



ஆசிரியையான மனைவியுடன் உ  டலு றவு கொண்ட வீடியோவை மனைவியிடம் கற்கும் மாணவிக்கு அனுப்பிய கணவன்!! கொழும்பில் நடந்தது என்ன?

பாடசாலை மாணவிக்கு ஆ  பாச வீடியோ அனுப்பிய ஆசிரியையின் கணவரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் கசுன் காஞ்சன திசாநாயக்க நேற்று (31) உத்தரவிட்டுள்ளார்.

ஆசிரியர் அளித்த முறைப்பாடு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜரானபோது, பொலிஸ் சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் அளித்த அறிக்கைகளை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஆ  பாசப் படங்களுக்கு அடிமையானதாகக் கூறப்படும் சந்தேகநபர், தனது மனைவியுடன் உ டலு றவில் இருந்த தருணங்களை இரகசியமாகப் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், குடும்ப தகராறில் மனைவியிடம் கல்வி கற்கும் மாணவிக்கு அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

முறைப்பாடு அளித்த ஆசிரியையான மனைவிக்கும் அவரது கணவருக்கும் இடையில் அண்மையில் தகராறினால் ஆ  பாசப் படங்களை பகிர்ந்து சந்தேகநபர் பழிவாங்க எண்ணியமை நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் மனச்சோர்வு எனப்படும் உளவியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது . இது ஆ  பாசப் படங்களுக்கு அதிகமாக அடிமையாகியிருப்பதால் ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது எனவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இட்ய்ஹனையடுத்து அறிக்கைகளை பரிசீலித்த பின்னர், சந்தேக நபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி பொலிஸ் சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆணுறை அணிவது எப்படி என வட மாகாணசபை பெண் உத்தியோகத்தர்களுக்கு வகுப்பு எடுப்பது எதற்காக ?


சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்….

அண்மையில் வெளிவந்த சாதாரண தரப்பரீட்சை முடிவுகள் வடமாகாணத்தின் கல்வித்தகைமையினையும் வடமாகாணசபையின் அதிகாரிகளது வண்டவாளங்களையும் தண்டவாளத்தில் ஏற்றிவைத்துள்ளது.
விருதுப்போட்டிகளில் ஏதோ முன்கூட்டியே சமாளிப்புக்களை செய்து விருதுகளை ஒருவாறாக பெற்றுக்கொள்ளும் வடமாகாண அதிகாரிகள் உண்மையில் வாழ்க்கையினை தீர்மானிக்கும் மாணவர்களிற்கான பரீட்சையில் கோட்டைவிட்டு தமது வண்டாளங்களை அம்பலப்படுத்திவிடுவது வழமையாகும்.

வடமாகாணசபையினை பொறுத்தவரையில் யாழப்பாணத்தில் குளிரூட்டிய அறையில் வேலை மற்றும் கைநிறைய காசு என்பதே அதிகாரிகளது கனவாகும்.முன்னாள் யாழ்.போதனாவைத்தியசாலை வைத்திய அதிகாரியும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினருமான பவானந்தராசா தனது மனோ ஓட்டத்தை அண்மையில் வெளிப்படுத்தியிருந்தார்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் யாழ்ப்பாணத்திற்கு முன்னுரிமையென அவர் போட்டுடைத்திருந்தார்.

இந்நிலையில் வடமாகாணசபையின் கைதடி ஆச்சிரமத்தில் நாள் தோறும் அரங்கேறும் கூத்துக்கள் வடமாகாணத்தின் மானம் மரியாதையை நாறடித்துக்கொண்டிருக்கின்றது.சம்பளம், கிம்பளத்துடன் மதியம் மனுசியின் சாப்பாடு என்பது பெரும்பாலான கைதடி மாகாணசபை ஆச்சிரம உரிமையாளர்கள் பெரும்பாலானவர்களது கனவு.சிலரோ அதையும் தாண்டி விபரீத கனவுகளை கண்டுவிடுகின்றனர்.

உதவி செயலாளர் ஒருவர் ஆணுறை பயன்படுத்துவது பற்றி தனது பெண் பணியாளர்களிற்கு நேரடி பயிற்சி வழங்கிய செய்தி அனைவரையும் காறித்துப்ப வைத்துள்ளது.

ஏற்கனவே 2020ம் ஆண்டில் வடமாகாண சிறுவர் நன்னடத்தை பணிப்பாளராக நியமிக்கப்பட்ட ஒருவர் அச்சுவேலியில் அநாகரிமாக நடந்துகொண்ட குற்றச்சாட்டையடுத்து ஒருவருடத்தினுள்ளாகவே பதவியிறக்கி கைதடி ஆச்சிரமத்திற்கு அனுப்பப்பபட்டிருந்தார்.இந்நிலையில் கைதடி ஆச்சிரமத்திலும் ஆணுறை பயன்படுத்துவது பற்றி வகுப்பெடுத்து குருவாகவும் பரனாகவும் அனைவரையும் நாறடித்துள்ளார் அந்த அதிகாரி.
அதற்காக அலுவலகத்தினுள் எவ்வாறு ஆணுறையென எவரும் அவதிப்படவேண்டாம்.தனது இரு கைவிரல்களில் எவ்வாறு ஆணுறையை பொருத்தி பயன்படுத்துவதென குருவான பரனாக அவர் காண்பித்த காணொளி பயிற்சி ஜனாதிபதி வரை சென்றுள்ளது.ஆனாலும் அலுவலக மேசை லாச்சியினுள் தயார் நிலையில் உள்ள ஆண் உறை ஏன் என்பது புரியவில்லையென அவரது அலுவலக பணியாளர்கள் கூறுகின்றனர்.

ஏற்கனவே உள்ளுராட்சி ஆணையாளர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமையெனவும் பாராது ஆளுநர் சாள்ஸ் அம்மணி சிபார்சில் கதிரை போய்விடுமென கைதடி ஆச்சிரமத்தில் உள்ளுராட்சி அமைச்சு செயலாளர் கதிரையில் குந்தியிருந்து நாறடித்த கதை பிரபலமானது. அவரது சகபாடியாக அதே அமைச்சில் குந்திக்கொண்ட நபரே தற்போது ஆணுறை சகிதம் அகப்பட்டுள்ளார்.

ஏற்கனவே ஆளுநர் சாள்ஸ் சிபார்சில் வந்த செயலாளர் காற்றுப்போய் கைதடியில் மூலையில் அமர்த்தப்பட்டுள்ள போதும் ஆணுறை உதவி செயலாளரோ அனைவரையும் வெருட்டியவாறே திரிவதாக பெண் உத்தியோத்தர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய வீடியோ சான்றில் பகிர்ந்துள்ளதாக தெரியவருகின்றது. தன்னையே எப்போதும் 24 கரட் தங்கமென காட்டிக்கொள்ளும் அவர் எழுதிய கள்ளக்காணி உறுதி விபரங்களை வெளிப்படுத்த சக பெண் உத்தியோகத்தர்கள் சிலர் தயாராகியுள்ளதாக கிசுகிசுப்புக்கள் வெளிவந்துள்ளன.

முன்னதாக சிங்கக்கொடி மற்றும் மாகாணசபை கொடி சகிதம் கதிரையில் சாய்ந்தவாறு ஆணுறைக்கென அவர் வழங்கிய விளம்பரம் இன்னும் சில நாட்களில் சமூக ஊடகங்களில் காணக்கிடைக்குமென்கின்றன தகவல்கள் சில.
ஆனால் அதில் தங்கள் முகங்களும் அகப்பட்டுவிடுமோவென அச்சத்திலுள்ளனராம் சில அம்மணிகள்.
online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job