This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

50% OFFICERS 👇👇🔴👇👇

50% OFFICERS 👇👇🔴👇👇
I found this great deal on Daraz! Check it out! Product Name: MAVIC 3 Clone Aerial Drone with Camera - Explore the Skies with Confidence Product Price: Rs.15,000 Discount Price: Rs.7,189

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, October 15, 2025

தொட்டிலில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுமி மதுமதன் ஜென்சியா சடலம் மீட்பு!!


தொட்டிலில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுமி மதுமதன் ஜென்சியா சடலம் மீட்பு!!

பொகவந்தலாவ பொகவானை தோட்டப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், தொட்டிலில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (14) மாலை 5:45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

குறித்த சிறுமியின் வீட்டுக்கு உறவினர்கள் வந்திருந்த நிலையில், உறவினரின் குழந்தைக்காகக் கட்டப்பட்ட தொட்டிலில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, சிறுமி தொட்டிலில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக உறவினர்கள் கூறுகின்றனர்.

சிறுமி தொட்டிலில் தொங்கிக் கொண்டிருந்ததை அவரது சகோதரன் அயலவர்களுக்கு தெரிவித்ததைத் தொடர்ந்து, அயலவர்கள் சிறுமியை மீட்டெடுத்து, பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

இருப்பினும், சிறுமி உயிரிழந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஆரம்பக் கட்ட விசாரணைகளின்படி, சடலமாக மீட்கப்பட்டவர் பொகவானை தோட்டத்தைச் சேர்ந்த 13 வயது மதுமதன் ஜென்சியா என்ற சிறுமியே என்பது உறுதியாகியுள்ளது.

அவர் பொகவானை தமிழ் வித்தியாலயத்தில் 7ஆம் தரத்தில் கல்வி கற்பதாகவும் தெரிகிறது.

இதேவேளையில், தொட்டிலின் சாரியால் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பாக ஹட்டன் நீதிமன்ற பதில் நீதிவான் புபூது ஜிந்தக தலைமையில் மரண விசாரணை நடத்தப்பட்டு, சிறுமியின் சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேதப் பரீட்சைக்காக டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புங்குடுதீவில் தேசித்தலைவரின் துணைவியார் வீட்டுக்கு முன் அகிலனை வெட்டிக் கொன்ற ஆவா குழு டினோ உட்பட்ட கொலைகாரர்கள் இவர்கள்தான்!!


புங்குடுதீவில் தேசித்தலைவரின் துணைவியார் வீட்டுக்கு முன் அகிலனை வெட்டிக் கொன்ற ஆவா குழு டினோ உட்பட்ட கொலைகாரர்கள் இவர்கள்தான்!!

புங்குடுதீவு பிரதேசத்தில் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் துணைவியார் திருமதி. மதிவதனி பிரபாகரன் அவர்களின் இல்லத்தின் முன்பாகவே நடைபெற்ற படுகொலை தொடர்பாக பொலிசாரால் தேடப்படும் நபர்கள்

புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தில் கடந்த ஓகஸ்ட் பத்தாம் திகதி மிகவும் கோரமான முறையில் தனியார் பேருந்து உரிமையாளர் ஐயாத்துரை அற்புதராசா என்கிற அகிலன் வாளால் வெட்டிக்கொல்லப்பட்டிருந்தார்.

இப்படுகொலை தொடர்பில் அனலைதீவு கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் என்கிற நபரை யாழ் மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் துணுக்காய் தென்னியங்குளம் காட்டு பிரதேசத்தில் கடந்த செப்டம்பர் பத்தாம் திகதி கைது செய்திருந்தனர்.

குறித்த செல்வக்குமார் எனும் நபர் பொலிசாருக்கு வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணத்திலிருந்து வழங்கப்பட்ட ஒப்பந்த அடிப்படையில் இப்படுகொலை மேற்கொள்ளப்பட்டதாகவும் இப்படுகொலையின் பிரதான சூத்திரதாரியாக ஆவா வன்முறை கும்பலோடு தொடர்புடைய டினோ என்றழைக்கப்படும் செல்லத்துரை டினேஷ்குமார் ( ஏழாம் வட்டாரம் ஊரதீவு, புங்குடுதீவு ) விளங்குவதாகவும் அவரே அகிலனை மோசமான முறையில் வாளால் வெட்டியதாகவும் அவரது நெருங்கிய நண்பரான புங்குடுதீவு ஐந்தாம் வட்டாரம் கேரதீவினைச் சேர்ந்த சிவலிங்கம் நருமதன் ( 952453912v ) என்பவரும் தம்மோடு இணைந்து அகிலனை வெட்டிக்கொன்று விட்டு தப்பிச் சென்றதாகவும் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.

கொக்குவில் பிரதேசத்தினை தற்காலிக முகவரியாக கொண்ட டினோ என்கிற டினேஷ்குமார் அகிலனை வெட்டிய பின்னர் தப்பிச்செல்லும்போது அப்பகுதி மக்களின் கல்லெறி தாக்குதலில் தலையில் காயமடைந்ததால் யாழ்ப்பாணம் கந்தர்மடம் பலாலி வீதியில் அமைந்துள்ள வீனஸ் என்கிற தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே இந்த இரு நபர்களும் புங்குடுதீவு ஊரதீவு பிரதேசத்தில் இடம்பெற்ற வீடு எரிப்பு சம்பவம், புங்குடுதீவு நாலாம் வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதல், புங்குடுதீவு ஆலடி சந்தியில் உள்ள வீடொன்றில் புகுந்து வாள் வெட்டில் ஈடுபட்டமை , கால்நடைகளை இறைச்சியாக்கி கடத்தல் போன்ற குற்றச்செயல்களோடும் , யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பல குற்றச்செயல்கள் , போதைப்பொருள் விற்பனை , போதைப்பொருள் கடத்தலோடும் தொடர்புடைய நபர்கள் என்றும் இவர்களை காண்கிற இடத்திலிருந்து உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறும் பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்.

இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டது எப்படி ?பொலிஸார் வெளிப்படுத்திய முக்கிய விடயங்கள்...

 


இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டது எப்படி ?பொலிஸார் வெளிப்படுத்திய முக்கிய விடயங்கள்...

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய "கணேமுல்ல சஞ்சீவ" கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி என்பவர், நாட்டை விட்டுத் தப்பிச் சென்று நேபாளத்தில் தலைமறைவாக இருந்த நிலையில், சர்வதேச மற்றும் இலங்கை பொலிஸாரின் கூட்டு நடவடிக்கையின் மூலம்  கைது செய்யப்பட்டுள்ளார். 

இன்று செவ்வந்தியும் அவருடன் கைது செய்யப்பட்ட ஐவரும் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்.

குறித்த கைது நடவடிக்கையில், இஷாரா செவ்வந்தி, கம்பஹா பாபா, நுகேகொட பேபி, ஜேகே பாய், போலி செவ்வந்தி(தக்சி), ஜப்னா சுரேஷ் என்ற சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களது புகைப்படங்கள் முதற்தடவையாக பொலிசாரால் வெளியிடப்பட்டுள்ளன.

இவரைக் கைது செய்த முறை மற்றும் இவர் தப்பிச் சென்ற விதம் குறித்த தகவல்களைப் பொலிஸார் தற்போது வெளியிட்டுள்ளனர்.

நேபாளத்தில் 3 நாட்கள் தேடுதல் வேட்டை

கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி, பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த "கணேமுல்ல சஞ்சீவ" சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற நிலையில், நேபாள அரசாங்கத்தின் உதவியுடன், இலங்கை பொலிஸார் மற்றும் சர்வதேசப் பொலிஸார் (Interpol) இணைந்து மேற்கொண்ட மூன்று நாட்கள் நீடித்த விசேட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டார்.

படகு மூலம் இந்தியா, பின்னர் ரயில் மூலம் நேபாளம்

பொலிஸ் விசாரணையில் இஷாரா செவ்வந்தியின் தப்பித்தல் திட்டம் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன:

இவர், பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த “ஜேகே பாய்” என்பவரின் உதவியுடன், படகு மூலம் இந்தியாவிற்குத் தப்பிச் சென்றுள்ளார்.

இந்தியாவிலிருந்து ரயில் மூலம் நேபாளத்தை அடைந்துள்ளார்.

நேபாளத்தில் போலி அடையாளங்களுடன் ஒரு சொகுசு வாடகை வீட்டில் தலைமறைவாக இருந்துள்ளார்.

துப்பு கொடுத்தவர்: “கெஹெல்பத்தர பத்மே”

இஷாரா செவ்வந்தி தலைமறைவாக இருந்த இடம் குறித்த முக்கியத் தகவல்கள் பொலிஸாருக்குக் கிடைத்தது குறித்து பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர். அண்மையில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு, தற்போது பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுவின் உறுப்பினரான “கெஹெல்பத்தர பத்மே” என்பவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்தத் தகவல்கள் கிடைத்துள்ளன.

போலி கடவுச்சீட்டில் ஐரோப்பா தப்பிக்கும் திட்டம்

இலங்கை பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்ட ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில், விசேட பொலிஸ் குழு ஒன்று நேபாளத்திற்கு விரைந்து இந்தக் கைது நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.

மேலும் வெளியான தகவல்கள்:

இஷாரா செவ்வந்தியுடன் சேர்ந்து, அவருக்கு உதவியாக இருந்த ஜேகே பாய் உட்பட மேலும் நால்வர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இஷாரா செவ்வந்தி ஒரு யாழ்ப்பாணப் பெண்ணின் பெயரில் போலியான கடவுச்சீட்டைத் தயாரித்து, அதன் மூலம் ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தார் என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே இடம்பெற்ற இந்தப் பகிரங்கக் கொலைச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சர்வதேசக் கைது நடவடிக்கை, பாதாள உலகக் குழுக்களுக்கு எதிரான பொலிஸாரின் தேடுதல் வேட்டைக்குக் கிடைத்த குறிப்பிடத்தக்க வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

Tuesday, October 14, 2025

ஒரு தொலைபேசி அழைப்பை நம்பி மறைவிடத்திலிருந்து வெளியே வந்த செவ்வந்தி நேபாளத்தில் சிக்கியது இப்படித்தான்!


நேபாள காவல்துறையினருடன் இணைந்து நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் மூன்று இடங்களில் இலங்கை காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட ஆறு இலங்கை சந்தேக நபர்களும் இன்று அல்லது நாளை நாட்டிற்கு அழைத்து வரப்பட உள்ளனர்.

இந்த சந்தேக நபர்களை நாட்டிற்கு அழைத்து வர மேலதிகமாக குற்றப் புலனாய்வுத் துறையின் இரண்டு அதிகாரிகள் இன்று நேபாளத்தின் காத்மாண்டுவுக்குச் செல்ல உள்ளனர்.

மேற்கு மாகாணத்தின் வடக்கு மாவட்ட குற்றப் பிரிவின் இயக்குநர், உதவி காவல் கண்காணிப்பாளர் ரோஹன் ஒலுகல மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் ஒரு அதிகாரி ஆகியோர் நேபாளத்தில் அந்நாட்டு காவல்துறையினருடன் இணைந்து நடத்திய நடவடிக்கையின் விளைவாக இந்த சந்தேக நபர்களைக் கைது செய்ய முடிந்தது.

செவ்வந்தியும் மற்றொரு பெண்ணும், மேலும் 4 ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மற்றப் பெண் இஷாரா செவ்வந்தியுடன் சிறிது தோற்ற ஒற்றுமையைக் கொண்டுள்ளார் என்று ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கூறினார்.

இஷாரா மற்றும் அந்தப் பெண்ணைத் தவிர, கைது செய்யப்பட்ட மற்ற இரண்டு சந்தேக நபர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற இரண்டு சந்தேக நபர்களும் கொழும்பு மற்றும் கம்பஹாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கெஹல்பத்தர பத்மேவின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் போதைப்பொருள் கும்பலில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இஷாரா சேவ்வந்தியைப் போன்ற சந்தேக நபர் விசாரணைக்கு முக்கியமான நபர் என்றும், அவரை நாட்டிற்கு அழைத்து வந்த பிறகு விசாரிப்பதன் மூலம் பல தகவல்கள் வெளிப்படும் என்றும் சிஐடி நம்புகிறது.

இஷாரா சேவ்வந்தியைத் தவிர மற்ற சந்தேக நபர்கள் நாட்டிற்கு நாடு கடத்தப்பட உள்ளனர் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன. அவர்கள் நேபாளத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள். இஷாரா செவ்வந்தியை அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ள அதே விமானத்தில் அவர்கள் நாட்டிற்கு நாடு கடத்தப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. அதற்காக ஏற்கனவே இலங்கை விமானம் ஒன்று தயாராக இருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

செவ்வந்தி கைதான நேரத்தில் அவரிடம் இருந்து ஒரு வெளிநாட்டு பாஸ்போர்ட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பாஸ்போர்ட்டில் இஷாராவின் புகைப்படம் இருந்தது, ஆனால் போலியான பெயர். பாஸ்போர்ட்டின் படி, அவர் தனது அடையாளத்தை இலங்கையர் அல்லாதவராக மாற்றியிருந்தார். பாஸ்போர்ட் தொடர்பாக இன்டர்போலின் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பெப்ரவரி 19 அன்று அளுத்கடே மாஜிஸ்திரேட் நீதிமன்ற எண் 05 இன் கூண்டில் கனேமுல்லே சஞ்சீவவை சட்டத்தரணி போல் வேடமிட்டு வந்த பாதாள உலக துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சுட்டுக் கொன்றார். இஷாரா செவ்வந்தி தண்டனைச் சட்டத்தின் ஒரு பக்கத்தை வெட்டி அதில் மறைத்து வைத்து, நீதிமன்ற வளாகத்திற்கு துப்பாக்கியைக் கொண்டு வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியவரிடம் கொடுத்தது தெரியவந்தது. சில மணி நேரங்களுக்குள் சிலாபத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரை காவல்துறை சிறப்புப் படை கைது செய்த போதிலும், இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு ஓடிவிட்டார்.

கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவினரால் கனேமுல்லே சஞ்சீவவின் கொலை, அவர் வெளிநாட்டில் இருந்தபோது நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்தோனேசியாவில் நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கையில் கெஹல்பத்தர பத்மே உட்பட ஐந்து பாதாள உலகக் குற்றவாளிகள் இந்த நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட பின்னர், குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் மேற்கு மாகாண வடக்கு குற்றப் பிரிவு, கனேமுல்லே சஞ்சீவவின் கொலை உட்பட பல கொலைகள் குறித்த தகவல்களைக் கண்டறிய முடிந்தது. 

கனேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இஷாரா இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டதாக கெஹல்பத்தர பத்மே விசாரணையின் போது தெரிவித்திருந்தார். அவர் படகு மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்தியாவில் சிறிது காலம் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் வலுக்கட்டாயமாக நேபாளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கெஹல்பத்தர பத்மே தெரிவித்தார். போலி வெளிநாட்டு பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி நேபாளத்திலிருந்து ஒரு ஐரோப்பிய நாட்டிற்கு அவளை கடத்துவதே திட்டமாக இருந்தது. இதற்காக கெஹல்பத்தர பத்மே பெரும் செலவில் பல ஏற்பாடுகளைச் செய்திருந்தாலும், இந்தோனேசியாவில் அவர் கைது செய்யப்பட்டபோது இவை அனைத்தும் நிறுத்தப்பட்டன.

இஷாரா செவ்வந்தி மற்றும் பலர் ஏற்கனவே நேபாளத்தில் சிக்கியுள்ளதாக கெஹல்பத்தர பத்மே தெரிவித்ததை அடுத்து, சிஐடி அதிகாரிகள், இன்டர்போலின் உதவியுடன், அந்தக் குழுவைப் பிடிக்க நேபாள காவல்துறையிடம் உதவி கோரியுள்ளனர். கெஹல்பத்தர பத்மேவின் விசாரணையின் போது தெரியவந்த தகவலின் அடிப்படையில், இஷாரா செவ்வந்தியின் மறைவிடம் பற்றிய தகவல்களைக் கண்டறிந்த சிஐடி அதிகாரிகள், இது குறித்து நேபாள காவல்துறையினருக்கும் தகவல் அளிக்க நடவடிக்கை எடுத்திருந்தனர். அதன்படி, இஷாரா செவ்வந்தி காத்மாண்டுவில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருப்பது நேபாள காவல்துறையினரின் உதவியுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, உதவி காவல் கண்காணிப்பாளர் ரோஹன் ஒலுகல மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரி ஒருவர் கடந்த சனிக்கிழமை நேபாளத்திற்குச் சென்றனர். செவ்வந்தியை கைது செய்வதற்கான இரகசிய நடவடிக்கையின்படி, அவர் ஏற்கனவே தங்கியிருந்த இடத்திலிருந்து வெளியே அழைக்கப்பட்டார்.

ஒரு குறிப்பிட்ட நபரிடமிருந்து இஷாரா செவ்வந்திக்கு வந்த தொலைபேசி அழைப்பின்படி, அவர் தங்கியிருந்ததாகக் கூறப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியே வந்து நெடுஞ்சாலைக்கு வந்தபோது பொலிசார் அவரைக் கைது செய்தனர். நேபாள காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ரோஹன் ஒலுகல மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரி சம்பவ இடத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் செந்ந்தியை அடையாளம் கண்டுள்ளனர். அவரது விசாரணையின் போது தெரியவந்த தகவலின் அடிப்படையில், நேபாளத்தில் அவருக்கு அடைக்கலம் கொடுத்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது விசாரணை மற்றும் கெஹல்பத்தர பத்மே வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில் இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் மற்ற நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த சந்தேக நபர்களில், இஷாரா செவ்வந்திக்கு மட்டுமே சர்வதேச காவல்துறையினரால் சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது, எனவே அதிகாரிகள் அவரை ஏற்றுக்கொண்டு நாட்டிற்கு அழைத்து வர நேபாளம் சென்றதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சோதனையின் போது, அவளிடம் இருந்து ஒரு வெளிநாட்டு பாஸ்போர்ட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பாஸ்போர்ட்டில் இஷாராவின் புகைப்படம் இருந்த ஒரு வெளிநாட்டு பாஸ்போர்ட் இருந்தது. பாஸ்போர்ட்டின் படி, அவள் தனது அடையாளத்தை இலங்கையர் அல்லாதவராக மாற்றியிருந்தாள். பாஸ்போர்ட் தொடர்பாக இன்டர்போலின் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவருடன் கைது செய்யப்பட்ட மற்ற 5 சந்தேக நபர்களும் சட்டவிரோதமாக நேபாளத்தில் இருந்தவர்கள். எனவே, அவர்களை இந்த நாட்டிற்கு நாடு கடத்துவது எளிதாகிவிட்டது. இஷாரா சேவ்வண்டி உள்ளிட்ட இந்த சந்தேக நபர்களை இந்த நாட்டிற்கு அழைத்து வந்த பிறகு, நிறைய தகவல்கள் வெளியாகும் என்று போலீசார் நம்புகின்றனர்.

Monday, October 13, 2025

பூநகரி- சங்குப்பிட்டி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பப்பெண்ணின் மரணம் தொடர்பில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.


பூநகரி- சங்குப்பிட்டி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பப்பெண்ணின் மரணம் தொடர்பில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணம்- காரைநகர் பகுதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 36 வயதான பெண்ணொருவர், சங்குப்பிட்டி பாலத்தினடியில் நேற்று (12) சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

அவரது சடலம் இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன் முன்னிலையில் உடற்கூறாய்வுக்குட்படுத்தப்பட்டது.

இதன்போது, அந்த பெண் படுகொலை செய்யப்பட்ட விடயம் வெளியாகியுள்ளது.

அந்த பெண்ணின் தலையில் குத்தப்பட்டு, முகம் உள்ளிட்ட பகுதிகளில் எரியக்கூடிய திரவம் ஊற்றப்பட்டு எரிக்கப்பட்டு, கடலுக்குள் வீசப்பட்டுள்ளார்.

அவரது நுரையீரலில் நீர் புகுந்து, மூச்சுத்திணறலால் உயிரிழந்தது உடற்கூராய்வில் தெரிய வந்துள்ளது.

அந்த பெண் வீட்டை விட்டு புறப்பட்ட போது, 10 பவுண் நகை அணிந்துள்ளார். அவரது சடலத்தில் நகைகள் காணப்பட்டிருக்கவில்லை.

அவர் வீட்டை விட்டு புறப்பட்ட போது, தனது நண்பியுடன் வவுனியா செல்வதாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இதுவரையான விசாரணையில் வெளியான தகவலின்படி, அந்த பெண் தனது கணவரிடம் குறிப்பிட்டவர்களுடன் சென்றிருக்கவில்லையென்பது தெரிய வந்துள்ளது.

அந்த பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானதாக செய்திகள் வெளியாகியிருந்த போதும், உடற்கூராய்வில் அது உறுதிப்படுத்தப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

வெகுவிரைவில் குற்றவாளிகள் கைதாவார்கள் என பொலிசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.     நகை கொள்ளை யில் ஈடுபட்டவர்கள்  கொலை செய்ததாக  சந்தேகம் வெளியாகி உள்ளது                                                                            இந்த சகோதரியின் ஆத்மா சாந்தியடைய 

ஆண்டவனை பிரார்திக்கின்றோம்.

Sunday, October 12, 2025

யாழ் சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் கரையொதுங்கிய 22 வயது மதிக்கத்தக் யுவதியின் சடலம்! கடல்அட்டைப் பண்ணைக்குள் கூட்டு வ ல்லு றவா?


யாழ் சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் கரையொதுங்கிய 22 வயது மதிக்கத்தக் யுவதியின் சடலம்! கடல்அட்டைப் பண்ணைக்குள் கூட்டு வ ல்லு றவா?

யாழ்ப்பாணம் – சங்குப்பிட்டி பாலத்திற்கு அண்மையில் பெண்ணின் உடல் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

இன்று காலை இவ்வாறு சடலம் கரையொதுங்கியுள்ளது.

18 முதல் 22 வயதிற்குட்பட்ட பெண்ணின் #சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இவ்வாறு உயிரிழந்த பெண்ணின் விபரம் இதுவரை வெளியாகவில்லை இந்நிலையில் மேலதிக விசாரணைகள் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதே வேளை யாழ் மற்றும் பூநகரி கடற் பகுதிகளில் கடல் ்அட்டை பண்ணைகளுக்காக போடப்பட்டுள்ள கூடாரங்களுக்குள் பல்வேறு பட்ட குற்றச்செயல்கள், வி பச்சா ரம், போதைப்பொருள் விற்பனை போன்றவை இடம்பெற்று வருவதாகத் தெரியவருகின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்னரும் 2 யுவதிகள் 7 இளைஞர்களுடன் இரவிரவாக கடல் அட்டை பண்ணை கூடாரத்தினுள் கூத்தாடியதாக தெரியவருகின்றது

Saturday, October 11, 2025

வவுனியாவில் பிரபல பாடசாலையில் ஆசிரியர் ரூபதாசன் ஆய்வுகூடத்தில் கிளுகிளுப்பு! மாணவியும் உடந்தை!

 


வவுனியாவில் பிரபல பாடசாலையில் ஆசிரியர் ரூபதாசன் ஆய்வுகூடத்தில் கிளுகிளுப்பு! மாணவியும் உடந்தை!

வ்வுனியாவில் உள்ள பிரபல  பாடசாலையில் வாணிவிழா நடைபெற்ற சூழலில் கலைநிகழ்வுகளில் கலந்து கொண்ட மாணவிகளளை உடைகளை மாற்றுவதற்கு பௌதிகவியல் ஆய்வுகூடத்தை பயன்படுத்த அனுமதித்தது மட்டுமல்லாமல் குறித்தமாணவிகள் உடைமாற்றும்போது மேற்படி ஆசிரியரும் அதற்குள் மாணவிகளுடன் சேர்ந்து நின்று இரசித்துள்ளார் பாடசாலையின் பௌதீகவியல் ஆசிரியர் ரூபதாசன்.

இவரின் லீலைகளுக்கு ஒருமாணவி உடந்தை அவரை குறித்த ஆய்வு கூடத்தை உடை மாற்றுவதற்கு ஆசிரியர் ரூபதாசன் கேட்டதாகவும் சக மாணவிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

ரூபதாசனின் ஆசை மாணவி ஒருவரின் திட்டத்தை அறியாத மற்றைய மாணவிகள் ஏதோ சூழ்நிலையை சமாளித்து நின்ற நிலையில் நீண்டநேரமாக மாணவிகளை காணாத ஆசிரியர் ஒருவர் அங்கு சென்று மாணவிகளை விசாரித்த போது நிலையை புரிந்து கொண்டு எச்சரித்துள்ளார்.

மாணவியை எச்சரித்த ஆசிரியரை ரூபதாசன் மிரட்டியுள்ளதுடன் விடையம் வெளியில் கசிந்தால் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை குழப்பி போராட்டம் செய்வேன் என மாமக் கள்ளன் ரூபதாசன் எச்சரித்துள்ளானாம்.

Thursday, October 9, 2025

நெடுந்தீவைச் சேர்ந்த இளம் தாய் தர்சிகாமேரி குழந்தைப் பேற்றின் போது மருத்துவ கொலை!! உறவினர்கள் குழப்பம்!


நெடுந்தீவைச் சேர்ந்த இளம் தாய் தர்சிகாமேரி குழந்தைப் பேற்றின் போது மருத்துவ கொலை!! உறவினர்கள் குழப்பம்!

நெடுந்தீவைச் சேர்ந்த இளம் தாய் மரணம்….

நெடுந்தீவைச் சேர்ந்த கில்மன் நோபட் தர்சிகாமேரி என்ற இளம் தாய் நேற்றையதினம் (ஒக். 09) இரவு யாழ் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது மரணமடைந்துள்ளதாக உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறப்புக்கான சரியான காரணம் , நேரம் என்பன வைத்தியசாலையில் தெரிவிக்கப்படாமையால் உடலத்தை ஏற்க உறவினர்கள் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாணவிகளின் மார்பைத் தடவிய யாழ் நாவலர் பாடசாலை வாத்தி செந்தாளன்!! எப்படி தடவினாய் என ரசித்த கல்வி அமைச்சின் செயலாளர்!!


மாணவிகளின் மார்பைத் தடவிய யாழ் நாவலர் பாடசாலை வாத்தி செந்தாளன்!! எப்படி தடவினாய் என ரசித்த கல்வி அமைச்சின் செயலாளர்!!

யாழ் வண்ணை நாவலர் பாடசாலையில் தரம் 10இல் கல்வி கற்கும் பெண் மாணவிகளுடன் அதே பாடசாலையில் கல்வி கற்ப்பிக்கும் சமய பாட ஆசிரியரியரான செத்தாளன் அங்க சேட்டையில் ஈடுபட்டமை தொடர்பில் பாடசாலை நிர்வாகம் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் பெற்றோர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் சில மாணவிகளின் பெற்றோர் பாடசாலை நிர்வாகத்திற்கு தெரியப்படுத்திய நிலையிலும் பாடசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.

பாடசாலை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் வடமாகண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றி நிரஞ்சனிடம் பெற்றோர் முறையிட்டுள்ளனர்.

எனினும் குறித்த ஆசிரியரை அழைத்த கல்வி அமைச்சின் செயலாளர் பற்றி எப்பிடித் தடவினாய் எங்கு தடவினாய் என கேட்டு இரசித்து விட்டு நடவடிக்கை எடுக்கவில்லையாம்.


இதன் காரணமாக மாணவிகளுக்கு நடந்த அநீதி தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்திற்கு செய்த முறைப்பாட்டு அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Wednesday, October 8, 2025

தென்னிலங்கையில் கள்ளக்காதலனையும் மதுபாஷினியையும் கதறக் கதற கொன்ற 5 பேர் கைது? எதற்காக கொலை?


 தென்னிலங்கையில் கள்ளக்காதலனையும் மதுபாஷினியையும் கதறக் கதற கொன்ற 5 பேர் கைது? எதற்காக கொலை?

ஹுங்கம, வாடிகல பகுதியிலுள்ள வீடொன்றில் இளம் தம்பதியை கொடூரமாக கொலை செய்த குற்றச்சாட்டில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணைகளில், போதைப்பொருள் தொடர்பான தகராறு மற்றும் திருமணத்திற்கு புறம்பான உறவு ஆகியவையே இந்தக் கொலைகளுக்கு முக்கியக் காரணங்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்தக் கொலை சம்பவம் நேற்று அதிகாலை முகமூடி அணிந்த குழுவால் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்கள் 28 வயதான இமேஷா மதுபாஷினி மற்றும் அவருடன் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்த போபசிந்து என அழைக்கப்படும் 28 வயதான பசிந்து ஹேஷன் என்பவர்களாகும்.

கூர்மையான ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்தனர். சம்பவத்தின் போது வீட்டின் உரிமையாளரும் அங்கு இருந்ததாகக் கூறப்படுகிறது. பிரதான நபரான அதுபெலேன பிந்து மற்றும் கொலை செய்யப்பட்ட பசிந்து ஆகியோர் சிறிது காலமாக நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட பசிந்து ஏற்கனவே கொலை மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டிருந்தார். கடந்த ஆண்டு அவர் பணிபுரிந்த மீன்பிடி படகின் உரிமையாளரை கொன்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

போலிச் செய்திகளை நம்ப வேண்டாம்!! அருச்சுனா எம்.பி!! சுவிஸ் அங்கிள்மார் அவிழ்ந்துவிட்ட கதையா

 


போலிச் செய்திகளை நம்ப வேண்டாம்!! அருச்சுனா எம்.பி!! சுவிஸ் அங்கிள்மார் அவிழ்ந்துவிட்ட கதையா?

அர்சுனா எம்பி சுவிஸ்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரி இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த நிலையில். யாழ் ஊடகவியலாளர் ஒருவரின் பதிவினை அப்படியே தந்துள்ளோம்…

”அவருடன் தற்போது பேசினேன். அவ்வாறான செய்திகளில் உண்மையில்லை நாடு திரும்புவேன் என்றார். சுவிஸ்லாந்தில் ஜெனிவாவை மையமாக வைத்து தமிழ் மக்களின் அவலங்களை விற்று பிழைப்பு நடத்தும் சில அமைப்புக்கள் இந்த போலி செய்தியை பரப்பி உள்ளதாக தெரிவித்தார்.” என குறித்த ஊடகவியலாளர் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை சுவிஸ்லாந்தில் உள்ள தமது மனைவிகளை பாதுகாப்பதற்காக இவ்வாறன போலி உசுப்பேற்றல்களை அர்ச்சுனாவுக்கு விட்டு அர்ச்சுனாவின் தன்மானத்தை கிளறச் செய்து அவனை இலங்கைக்கு திரும்ப ஓடச் செய்யவே அங்குள்ள அங்கிள்மார்கள் திட்டமிட்டு குறித்த தகவலைப் பரப்பியுள்ளதாக சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளது.

Tuesday, October 7, 2025

ஐ.நா சபையில் போய் தனது குஞ்சாமணி தொடர்பாக கதைத்த அர்ச்சுனா!! தென்மராட்சியாரை குளக்காட்டான் என்று எதற்கு சொல்வது என்றால்…. வீடியோவைப் பாருங்கள் புரியும்!!

 


ஐ.நா சபையில் போய் தனது குஞ்சாமணி தொடர்பாக கதைத்த அர்ச்சுனா!! தென்மராட்சியாரை குளக்காட்டான் என்று எதற்கு சொல்வது என்றால்…. வீடியோவைப் பாருங்கள் புரியும்!!

அருச்சுனாவுக்கு  யாழ்ப்பாணத்தில் வோட்டுப் போட்ட ஒவ்வொரு மொக்கு மண்டைகளுக்கும்  இது சமர்ப்பணம்….

ஐ.நா சபையில் போய் தனது குஞ்சாமணி தொடர்பாக கதைத்துள்ளான் அருச்சுனா வெருளி

வீடியோ

Monday, October 6, 2025

வெடுக்குநாறி மலை ஆலய நிர்வாகிகள் இருவருக்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அழைப்பாணை!


வெடுக்குநாறி மலை ஆலய நிர்வாகிகள் இருவருக்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அழைப்பாணை!

வவுனியா, நெடுங்கேணிப் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் முன்னாள் தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய இருவரை விசாரணைக்காக ஆஜராகுமாறு பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவுப் பொலிஸார் (TID) அழைத்துள்ளனர்.

இந்த அழைப்பாணை கடிதங்கள் திங்கட்கிழமை (அக்டோபர் 06) நெடுங்கேணிப் பொலிஸார் ஊடாகக் குறித்த இருவருக்கும் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டன.

விசாரணைக்கான அழைப்பு

ஆலயத்தின் முன்னாள் தலைவர் சசிகுமார் மற்றும் முன்னாள் செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் எதிர்வரும் அக்டோபர் 9 ஆம் திகதி காலை 10 மணிக்கு பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவின் வவுனியாவில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த அழைப்பாணையில், இருவரிடமும் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காகவே வருகை தருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் சிவாரத்திரி தினத்தன்று குறித்த இரு நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இருப்பினும், பின்னர் அவர்கள் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். இந்தச் சம்பவங்களின் பின்னணியிலேயே தற்போது பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு மீண்டும் இவர்களை விசாரணைக்கு அழைத்துள்ளது.

அத்துடன், இந்தச் சம்பவம் நடந்த பின் ஆலயத்திற்குப் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு பல மாதங்கள் கடந்துள்ள நிலையில், முன்னாள் நிர்வாகிகளுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, October 5, 2025

பெடியலுடன் படுக்க ஆசைப்படும் லண்டன் கணவன்!! யாழில் மனைவி விவாகரத்து நோட்டீஸ்!!


 பெடியலுடன் படுக்க ஆசைப்படும் லண்டன் கணவன்!! யாழில் மனைவி விவாகரத்து நோட்டீஸ்!!

யாழில் 31 வயதான குடும்பப் பெண் ஒருவர் தனது கணவன் ஓரினச்சேர்க்கையாளர் என்பதை அறிந்து விவாகரத்துக்கு செய்ய கணவனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தெரியவருகின்றது. நீண்ட காலம் லண்டனில் வசித்து வந்த 40 வயதான யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட ஒருவர் மீண்டும் யாழ் வந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். அந் நேரத்திலேயே அவருக்கு திருமணம் யாழில் நடைபெற்றுள்ளது. ஆனால் மனைவியுடன் தங்காத கணவர் கொடிகாமம் பகுதியில் உள்ள அவருக்குச் சொந்தமான பண்ணையில் தங்கியிருந்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். 16, 17 வயதான சிறுவர்களுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதுடன் அந்த காட்சிகளை தனது தொலைபேசியிலும் பதிவு செய்து வைத்திருந்துள்ளார். இதனையெல்லாம் தட்டிக்கேட்ட மனைவியை கணவர் தாக்கியதாகவும் தெரியவருகின்றது. இதனையடுத்து லண்டன் கணவனை விவாகரத்து செய்ய மனைவி நோட்டீஸ் அனுப்பியதாகவும் ஆனால் அவர் குறித்த நோட்டீஸ் அனுப்பபட்ட வீட்டிலிரு்நது வெளியேறி மீண்டும் லண்டன் சென்றுவிட்டதாகவும் அதனையடுத்து அவரது லண்டன் முகவரிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

Friday, October 3, 2025

கர்ப்ப காலத்தில் பெண்கள் இந்தச் செயற்பாட்டை மேற்கொள்ளலாமா? வயதுக்கு வந்த ஆண்களும் வாசியுங்கள்…


கர்ப்ப காலத்தில் பெண்கள் இந்தச் செயற்பாட்டை மேற்கொள்ளலாமா? வயதுக்கு வந்த ஆண்களும் வாசியுங்கள்…

வாழைப்பழத்தின் நன்மையைச் சொல்வதற்கு கூட எப்படி எல்லாம் தலையங்கம், புகைப்படம் போட வேண்டியுள்ளது…  வாங்கோ… வாசியுங்கோ…

வாழைப்பழம் ஆண்கள், பெண்கள் என அனைவரும் தினமும் சாப்பிடுவது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. வாழைப்பழத்தின் முக்கியமான சிலவற்றை பார்ப்போம்:

1. சிறந்த சக்தி ஆதாரம்

வாழைப்பழத்தில் இயற்கை சர்க்கரை (குளுகோஸ், ஃப்ரக்டோஸ், சுக்கோஸ்) மற்றும் நார்ச்சத்து இருப்பதால் உடனடி சக்தியையும் நீண்டநாள் எரிசக்தியையும் தரும்.காலை உணவிலும், உடற்பயிற்சி முன்/பின் சாப்பிடுவதற்கு சிறந்தது.

2. செரிமானத்திற்கு உதவும்

வாழைப்பழத்தில் இருக்கும் நார்ச்சத்து (dietary fiber) மலச்சிக்கலை தடுக்கும்.குடல் ஆரோக்கியம் மற்றும் நல்ல பாக்டீரியா வளர்ச்சிக்குச் சாதகமாக இருக்கும்.

3. இதய ஆரோக்கியம்

வாழைப்பழம் பொட்டாசியம் நிறைந்தது. இது இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தி இதய நோய் அபாயத்தை குறைக்கிறது. குறைந்த சோடியம் இருப்பதால் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நல்லது.

4. மூளை செயல்பாடு & மனநிலை

வாழைப்பழத்தில் உள்ள டிரிப்டோபான் (tryptophan) மற்றும் விட்டமின் B6 serotonin உற்பத்தியை தூண்டி மனஅழுத்தத்தை குறைத்து மனநலத்திற்கு உதவுகிறது. நினைவாற்றல் மற்றும் கவனத்தை மேம்படுத்தும்.

5. எலும்பு ஆரோக்கியம்

வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம், மக்னீசியம் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கிறது.

6. தோல் & முடி ஆரோக்கியம்

விட்டமின் C, B6 மற்றும் ஆன்டி-ஆக்சிடண்டுகள் தோலின் ஒளிவுமிக்க தன்மையையும் முடி வளர்ச்சியையும் மேம்படுத்துகின்றன.

7. எடை கட்டுப்பாடு

நார்ச்சத்து அதிகமுள்ளதால் நீண்ட நேரம் பசியில்லாமல் இருக்க உதவும்.குறைந்த கலோரி (சுமார் 100–120 கலோரி மட்டும் ஒரு பழத்தில்) இருப்பதால் டயட்டுக்கு ஏற்றது.

8. உடற்பயிற்சி நண்பன்

தசை வலி, cramps ஆகியவற்றை குறைக்க வாழைப்பழம் உதவுகிறது.

👉 ஆனால் சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழத்தை அளவாக (மிக அதிகம் அல்லாமல்) சாப்பிட வேண்டும், ஏனெனில் இயற்கை சர்க்கரை அதிகம் உள்ளது.

வாழைப்பழம் மிகவும் ஆரோக்கியமான பழமாகும், அதில் பல சத்துக்கள் அடங்கியுள்ளன:

பொட்டாசியம் (Potassium) – இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.

ஃபைபர் (Fiber) – செரிமானத்தை மேம்படுத்தும்.

விடமின்கள் (Vitamin B6, Vitamin C) – நோய் எதிர்ப்பு சக்தி, இரத்த உருவாக்கம் ஆகியவற்றுக்கு உதவும்.

இயற்கை சர்க்கரை (Natural sugars) – உடல் சக்தியை விரைவில் தரும்.

பெண்களுக்கு சிறப்பு நன்மைகள்:

கர்ப்ப காலத்தில் வாந்தி, சோர்வு குறைக்க உதவும். மாதவிடாய் காலத்தில் மன அழுத்தம், உடல் பலவீனம் குறைக்க உதவும்.ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.

⚠️ ஆனால், சர்க்கரை நோய் (Diabetes) உள்ளவர்கள் அதிகமாக சாப்பிடக் கூடாது. மிதமாக (ஒரு நாளைக்கு 1–2 வாழைப்பழம்) எடுத்துக்கொள்வது சிறந்தது.

யாழில் 2ம் மாடியிலிருந்து குதித்த உடுவில் மகளீர் கல்லுாரி மாணவி!! இதுக்கெல்லாம் போய் இப்படி குதிக்கலாமா விசரி!!

 


யாழில் 2ம் மாடியிலிருந்து குதித்த உடுவில் மகளீர் கல்லுாரி மாணவி!! இதுக்கெல்லாம் போய் இப்படி குதிக்கலாமா விசரி!!

யாழ்ப்பாணம் – உடுவில் மகளீர் கல்லுாரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் விளையாட்டு ஒன்றில் முதலிடம் பெற்றதால் அவரது வகுப்பு மாணவிகள் அவரிமிருந்து விலகி இருந்ததால் குறித்த மாணவி 2வது மாடியில் இருந்து குதித்த நிலையில் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவமானது நேற்றையதினம் (02) இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவை சேர்ந்த 14 வயதுடைய குறித்த மாணவி அந்த கல்லூரியின் மாணவிகள் விடுதியில் கடந்த ஒரு வருட காலமாக தங்கி நின்று கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில் அவர் விளையாட்டு ஒன்றில் பங்குபற்றி முதலிடம் பெற்றுள்ளார். இதனால் அவரது வகுப்பு மாணவிகள் அவரிடம் இருந்து விலகி இருந்தனர். இதன் காரணமாக மனமுடைந்த மாணவி விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்ததால் காலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுன்னாகம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட போது தனது வாக்குமூலத்தில் குறித்த மாணவி இதனை தெரிவித்துள்ளார். படுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதேவேளை குறித்த மாணவி வேறு ஒரு சம்பவம் அல்லது சிக்கலுக்காக தற்கொலை செய்ய முற்பட்டிருக்கலாம் எனவும் அது தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறித்த பாடசாலை பழைய மாணவிகள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

Thursday, October 2, 2025

கிளிநொச்சி பெண்ணுக்கு ATM க்குள் நடந்த கொடுமை!! அவதானம் பெண்களே!!


கிளிநொச்சி பெண்ணுக்கு ATM க்குள் நடந்த கொடுமை!! அவதானம் பெண்களே!!

இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்.

கிளிநொச்சி பொன்னகர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டு

மின்சார கட்டணத் செலுத்துவதற்காக வங்கிக்கு சென்று அங்குள்ள பண

வைப்பு இயந்திரத்தில் பணத்தை வைப்பிட தெரியாத அவர் மின் கட்டணத்தை

வைப்புச் செய்வதற்கு அருகில் உள்ள இளைஞன் ஒவவனின் உதவியை நாடியுள்ளார்.


இதன் பொருட்டு குறித்த இளைஞனிடம் தனது வீட்டு மின்சார கணக்கு

இலக்கத்தையும், ஆறாயிரம் ரூபா பணத்தையும் வழங்கியுள்ளார். அந்த இளைஞனும்

குறித்த பெண்ணுக்கு உதவி செய்வது போல் அவர் வழங்கிய கணக்கு

இலக்கத்திற்கு பணத்தை வைப்புச் செய்வது போன்று பசாங்கு காட்டி தனது வங்கி

கணக்கு இலக்கத்திறகு பணத்தை வைப்புச் செய்துவிட்டு அருகில் இருந்த குப்பை

கூடைக்குள் இருந்து பணம் வைப்புச் செய்த ஒரு சிட்டையை குறித்த

பெண்ணிடம் கொடுத்து விட்டு சென்றுவிட்டார்.


வீடு திரும்பிய பெண் மகனிடம் சிட்டையை கொடுத்த போதே அது தங்களுடைய

மின்சாரக் கட்டணத்திற்கு செலுத்தப்பட்டது அல்ல என்பது தெரிய வந்தது. இதன் பின்னர் வங்கிக்கு சென்ற பெண் குறித்த இளைஞனின் வங்கி கணக்கு விபரங்களை

கோரிய போது வங்கி நிர்வாகம் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துவிட்டு

முறைப்பாட்டு சிட்டையுடன் வந்தால் மாத்திரமே விபரங்களை வழங்க முடியும் என

தெரிவிக்க அப் பெண் பொலீஸ் நிலையம சென்றிருக்கின்றார். ஆனால் கிளிநொச்சி

பொலீஸ் நிலையத்தில் ஆறாயிரம் ரூபாவுக்கு எல்லாம் முறைப்பாடு எடுக்க முடியாது என கூறியதனால் எதுவும் செய்ய முடியாது வீடு திரும்பிவிட்டார்.

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job