Thursday, July 31, 2025
யாழில் கணவனுடன் இரவு ஒன்றாகப் பக்கத்தில் படுத்திருந்த 25 வயது நிஸ்ரலா சென்றது எங்கே? கணவன் பொலிசாரிடம் முறைப்பாடு!!
யாழில் கணவனுடன் இரவு ஒன்றாகப் பக்கத்தில் படுத்திருந்த 25 வயது நிஸ்ரலா சென்றது எங்கே? கணவன் பொலிசாரிடம் முறைப்பாடு!!
யாழ். வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் நேற்றுமுன்தினத்தில் இருந்து 25 வயதுடைய டினுசன் நிஸ்ரலா எனும் குடும்ப பெண் ஒருவர் காணாமல் போய் உள்ளார்.இந்த பெண்ணை கண்டுபிடிக்க உதவுமாறு பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் உதவி கோரியுள்ளனர்.
கடந்த 29ம் திகதி இரவு கணவனுடன் இருந்த குடும்ப பெண், இரவு 11 மணியளவில் தூக்கத்தில் இருந்து கணவன் எழுந்து பார்த்தபோது காணாமல் போயுள்ளார்.
அதனையடுத்து கணவன் மனைவியின் தாயிடம் மனைவி வந்துள்ளாரா என கேட்டுள்ளார். அங்கும் குறித்த பெண் போகவில்லை. இதன்பின் பதற்றமடைந்த கணவன் மற்றும் உறவினர்கள் குடும்ப பெண்ணை தேடியுள்ளனர்.
இதனை தொடர்ந்து காணாமல் போன பெண் சம்பந்தமாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் மருதங்கேணி பொலிஸாரும் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றுடன் குறித்த பெண் காணாமல் போய் மூன்று நாட்கள் கடந்து செல்லும் நிலையில் அனைவரின் உதவியினையும் பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் கேட்டு நிற்கின்றனர்.
Wednesday, July 30, 2025
செம்மணியில் புதைக்கப்பட்ட அழகிய இளம் குடும்பப் பெண் சுமதி சொர்க்கத்தில் இருந்து எழுதும் கடிதம்!
பொதுவாகவே உதவி கேட்பவர்கள் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் வரும் பதிவுகளை நாம் பிரசுரிப்பதில்லை. மிகவும் மோசடியான செயற்பாடுகள் அவற்றில் நிறைந்துள்ள காரணத்தால் நாம் அவற்றை பிரசுரிப்பதை தவிர்த்து வருகின்றோம். ஆனால் jaffnahero என்ற சமூகவலைத்தளத்தில் வந்த இந்தப்பதிவு எம்மை கொஞ்சம் சிந்திக்க வைத்துள்ளது. நீங்களும் வாசித்து, பாா்த்து அறிந்து கொள்ளுங்கள்.
1996ம் ஆண்டு செம்மணியில் வைத்து கணவனின் முன் படையினரால் கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டு பின்னர் கணவனையும் மனைவியையும் ஒரே நேரத்தில் மண்வெட்டியால் அடித்துக் கொன்று ஒரே புதை குழியில் புதைக்கப்பட்ட 2 குழந்தைகளின் சொந்தக்காரர்களான சுரேஸ்வரன், மனைவி சுமதி ஆகியோரின் பிள்ளைகளின் தற்போதைய நிலையை கொல்லப்பட்ட சுமதி சொர்க்கத்தில் எழுதும் கடிதம் என்ற தலைப்பில் வெளியாகிய பதிவினை அப்படியே நாம் தந்துள்ளோம்….
செம்மணி புதைகுழிகளை தோண்டி எடுத்து எலும்புக்குவியலுக்குள் நின்று உலகத்தின் கவனத்தை ஈர்ப்பவர்களே!! ஜனநாயகத்தின் 4 வது துாணாகிய ஊடகவியலாளர்களே!! சமூகவலைத்தளப் பதிவாளர்களே!! எனது குழந்தைகளையும் உலகின் கவனத்தின் முன் கொண்டு வாருங்கள்…கும்பிட்டுக் கேட்கின்றோம். அவர்களுக்கு ஏதாவது வழி வகை செய்யுங்கள்.
நான் அழகானவள் என்ற காரணத்தால் கொல்லப்பட்டேனா? எனது கூந்தல் நீளமானது என எனது கணவன் அடிக்கடி வர்ணிப்பாரே! அதனால் கொல்லப்பட்டேனா? இலங்கையைப் பெண் ஒருவர் அரசாண்டுகொண்டிருந்த காலத்தில் பயங்கரவாதத்திலிருந்து எம்மை மீட்கவே போர் செய்கின்றோம் என கூறிக் கூறி மீட்க வந்த படையினரே அரியாலையில் கணவன் சுரேஸ்வரனுடன் சந்தோசமாக வாழ்ந்து வந்த என்னை, என் பெண்மையை என் கணவன் முன்னாடியே குதுகலித்துச் சூறையாடி என்னையும் எனது கணவனையும் கொன்று புதைகுழியில் தள்ளிவிட்டார்கள். 23 வயதில் எனது குடும்பக் கனவை சிதைத்து, எனது முத்தான இரு பிள்ளைகளையும் அநாதைகளாக்கி எமது வாழ்க்கையையே சிதைத்துவிட்டார்கள். பறவாயில்லை… நானும் கணவனும் சொர்க்கத்தில் இருக்கின்றோம். ஆனால் எனது 2 பிள்ளைகளும் என்ன நிலையில் உள்ளார்கள் தெரியுமா?
மூத்த மகள் 1991ல் பிறந்த போது உன்னைப் போல் வெள்ளையாக இல்லையென்றாலும் என்னைப் போல் முத்தாய் ஜொலிக்கின்றாள் என கணவன்அடிக்கடி கூறுவான். தற்போது அவனும் மகளின் துன்பத்தைப் பார்த்து சொர்க்கத்தில் அழுகின்றான்.
கணவனும் நானும் அரச படைகளால் கொல்லப்பட்டதற்காக எந்தவித நட்ட ஈடும் என் பிள்ளைகளுக்கு கொடுக்கவில்லை. எனது மகனைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அவன் ஆண்பிள்ளை. எப்படியோ பிழைத்துக் கொள்வான். ஆனால் எனது மகள்? எனது உறவுகளும் பணக்காரர்களாக இல்லை. நினைத்துப் பாருங்கள் நாங்கள் புதைக்கப்பட்ட பின்பு இரு பாலகர்களும் என்னவெல்லாம் துன்பப்பட்டிருப்பார்கள். எனது மகள் எத்தனை சிக்கல்களை எதிர்நோக்கியிருப்பாள். எவ்வாளவு சங்கடங்களை சகித்துக் கொண்டிருந்திருப்பாள். தற்போது திருமணமாகியும் அவள் துன்பத்திலேயே இருக்கிறாள் என நினைக்கும் போது எப்படி என்னால் நிம்மதியாக இருக்க முடியும்.
கணவன் பிரிந்த பின்னரும் தற்போதும் கூலி வேலைக்குப் போய் யாரையும் எதிர்பார்க்கது வைராக்கியத்துடன் தனது இரு குழந்தைகளையும் வளர்த்து வரும் அவளைப் பார்க்க எனக்கு நிம்மதியாக இருக்க முடியவில்லை. அவளது கைகளைப் பாருங்கள். அவளது நகங்கள் கிழியக் கிழிய வெங்காயத் தோட்டத்திற்குள் புல் பிடுங்கி உழைத்து வரும் பணத்திலேயே அவள் தன் வாழ்க்கையை ஓட்டுகின்றாள்.
சொந்தமாக காணி உண்டு. வீடு இல்லை. நகைகள் இல்லை. சிமாட் போன் இல்லை. ரீவி இல்லை. மோட்டார்சைக்களில் இல்லை. . ஏழ்மையே உள்ளது. எந்தவித சொகுசும் இல்லாத ஏழ்மையாக வாழ்கின்ற எனது மகளை கவனிக்கமாட்டீர்களா? நாங்கள் கொல்லப்பட்ட பின் 35 வருடங்களாக துன்பத்தில் துவண்டு கொண்டிருக்கும் எனது பிள்ளைகளை உங்கள் பிள்ளைகளாக நினைத்து அவர்களை நிமிர்த்தி விடுவீர்களா?
புலம்பெயர் தமிழர்களே… எதிரிகள் அடிக்க அடிக்க மீண்டும் மீண்டும் எமது இனம் எழுந்து நின்றது உங்களால்தான் என்பது எமக்குத் தெரியும். ஏழ்மையில் விழுந்துகிடக்கும் எனது மகளை எழுந்து நிற்கச் செய்வீர்களா? உங்களில் ஒருவர் நினைத்தால் கூட என் மகளை எழுந்து நிற்கச் செய்யலாம். யாழ்ப்பாணத்தில், கோவில்களில் குடியிருக்கும் கடவுள்களுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து குடமுழுக்கு செய்துள்ளீர்கள்… எனது மகளும் ஒரு வீட்டில் குடியிருக்க உங்களால் உதவி புரிய முடியாதா? அவள் சுயமாக உழைத்து வாழ உங்களால் உதவி செய்ய முடியாதா?
எனது மகள் தற்போது கோப்பாய் பிரதேசசெயலர் பிரிவில் அச்செழுப்பகுதியில் வாழ்ந்து வருகின்றாள். எனது மகளின் பெயர் -சுரேஸ்வரன் தஜீவா ( sureshwaran.thageeva) தொலைபேசி இலக்கம் (+94770744148) , வங்கிக் கணக்கிலக்கம் ( இலங்கை வங்கி யாழ்ப்பாணம். 91342873) என்பவற்றை நான் தந்துள்ளேன். ஒரு பெண்ணின் தொலைபேசி இலக்கத்தை கண்டவுடன் அதனை வைத்து கேவலப்படுத்தும் செயற்பாடுகள் எனக்குத் தெரியும். தயவு செய்து அவ்வாறான செயற்பாடுகளை எனது மகளுக்கு செய்யவேண்டாம். தயவு செய்து உதவி செய்யும் மனப்பாங்கு உள்ளவர்கள் மாத்திரம் அவளுடன் தொடர்பு கொள்ளுங்கள். அவளின் தேவைகளை அறிந்து அவளுக்கு உதவுங்கள். உங்களுக்கு நான் கூறுவதில் நம்பிக்கை இல்லாதுவிடின் கோப்பாய் பிரதேசசெயலக அதிகாரிகளிடம் விசாரியுங்கள். எனது மகளின் பிரதேசத்தில் நீண்டகாலம் கடமையாற்றிய கிராமசேவகரான திருமதி.குலலோஜினி கருணஜீவாவிடம் அறிந்து கொள்ளுங்கள். அவரது தொலைபேசி இலக்கத்தையும் தந்துள்ளேன். (+94778512379) அவர் ஊடாகவும் நீங்கள் எனது மகளை அணுகி அவளுக்கு உதவிகள் புரியலாம்.
அன்பான உறவுகளே… 35 வருடங்களாக துன்பத்திலேயே வாழும் எனது மகளையும் 2 பேரக்குழந்தைகளையும் உங்கள் உறவுகளாக நினைத்து உயர்த்திவிடுங்கள்…. எனதும் எனது கணவனினதும் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு கிடைத்துக் கொண்டேயிருக்கும்.
செம்மணியில் குழந்தையின் எலும்புக்கூட்டை அரவணைத்தவாறு எலும்புக்கூடொன்று மீட்பு!!
செம்மணியில் குழந்தையின் எலும்புக்கூட்டை அரவணைத்தவாறு எலும்புக்கூடொன்று மீட்பு!!
செம்மணியில், ஒரு பெரிய எலும்பு கூட்டு தொகுதி ஒன்று, சிறு குழந்தையின் எலும்புக்கூட்டினை அரவணைத்தவாறு அடையாளம் காணப்பட்ட நிலையில் அவ்விரு எலும்புக்கூட்டு தொகுதிகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் புதன்கிழமை புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 03 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பாரம்பரிய உணவகம்
அதன் அடிப்படையில் கடந்த 10 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு அகழ்வு பணியில், 37 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது
செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 25 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது
இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி கடந்த 10 ஆவது நாட்களாக முன்னெடுக்கப்படும் நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை வரையில் 37 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 34 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதன் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 03 எலும்பு கூட்டு தொகுதியுடனுமாக 102 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 115 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழில் 48 லட்சம் ரூபா நகையை காதலி களவெடுத்து நவீன மோட்டார் சைக்கிள் எடுத்து கொடுத்த மன்மதன் இவர்தானா? காதலி உட்பட 3 பேர் சிறைக்குள்!!
யாழில் 48 லட்சம் ரூபா நகையை காதலி களவெடுத்து நவீன மோட்டார் சைக்கிள் எடுத்து கொடுத்த மன்மதன் இவர்தானா? காதலி உட்பட 3 பேர் சிறைக்குள்!!
ரிக்ரொக் காதலனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்க தனது வீட்டு 19 பவுண் நகையை திருடிய காதலி 42 இலட்சம் ரூபாய்க்கு விற்று காதலனுக்கு நவீன ரக மோட்டார் சைக்கிளை வாங்க பணம் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
தூள் படத்தில மயில்சாமிக்கு விவேக் சொன்ன மாதிரி “லட்டுக்கு பதிலா ஜிலேபிய கொண்டு வந்திருக்க…”
யாழ் சாவகச்சேரியில் யுவதி ஒருவர் 48 லட்சம் ரூபா பெறுமதியான நகைகளைக் களவெடுத்து தனது காதலனுக்கு கொடுத்து நவீன மோட்டார் சைக்கிள் வாங்க உதவி புரிந்துள்ளார். அந்தக் காதலன் இவன்தான் என சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன. அந்த வீடியோவை நாம் கீழே தந்துள்ளோம். அதே வேளை குறித்த காதலன், காதலி உட்பட்ட 3பேர் சிறைக்குள் தள்ளப்பட்ட விடயங்கள் கீழே விபரமாக தரப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரிக் ரொக் பிரபலங்களில் ஒருவரான இளைஞன், அந்த இளைஞனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுக்க, நகைகளை களவாடிய யுவதி, யுவதிக்கு உடந்தையாக செயற்பட்ட யுவதியின் நண்பி ஆகிய மூவரையும் எதிர்வரும் 06ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் ரிக் ரொக் சமூக வலைத்தளங்களில் தனது காணொளிகளை பதிவேற்றி பிரபலமானவராக தன்னை காட்டிக்கொண்டு வந்துள்ளார்.
குறித்த இளைஞனுடன் ரிக் ரொக் மூலம் அறிமுகமான சாவகச்சேரி பகுதியை சேர்ந்த யுவதி , அவரை காதலித்து வந்துள்ளார்.
அந்நிலையில் தனது காதலனுக்கு , அதிநவீன மோட்டார் சைக்கிள் ஒன்றினை கொள்வனவு செய்வதற்காகவும் , காதலன் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காவும் , தனது வீட்டில் இருந்து சுமார் 19 பவுண் நகையை களவெடுத்து , அதனை காதலனிடம் கொடுத்துள்ளார்.
வீட்டில் இருந்த நகைகள் காணாமல் போனமை தொடர்பில், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , யுவதி மீது சந்தேகம் கொண்டு அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது, வீட்டில் இருந்த நகைகளை தான் களவெடுத்து காதலனுக்கு வழங்கியதை ஒப்புக்கொண்டுள்ளார்.
யுவதியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் , காதலனை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.
அதன் அடிப்படையில் வீட்டில் நகைகளை களவெடுத்த யுவதி , அவரது காதலன் , யுவதி வீட்டில் நகைகளை
களவெடுப்பதற்கு உடந்தையாக செயற்பட்ட யுவதியின் நண்பி , நகைகளை விற்க உதவியவர்கள் , நகைகளை வாங்கியவர்கள் என ஏழு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஏழு நபர்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்திய போது, நகைகளை திருடிய யுவதி, அவரது காதலன் மற்றும் திருட்டுக்கு உடந்தையாக செயற்பட்ட யுவதியின் நண்பி ஆகிய மூவரையும் எதிர்வரும் 06ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் ஏனைய நால்வரையும் பிணையில் செல்ல அனுமதித்தார்.
அதேவேளை , திருடப்பட்ட நகைகளில் ஒரு தொகையும் , நகைகளை விற்று வாங்கிய அதிநவீன மோட்டார் சைக்கிள் என்பவற்றை பொலிஸார் மீட்டு , சான்று பொருளாக , சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்தியதை அடுத்து , அவை நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது.
Tuesday, July 29, 2025
ஜப்பானில் 1.9 மில்லியன் மக்களுக்கு வெளியேற அறிவிப்பு: டோக்கியோ அருகே சுனாமி அலைகள்
ஜப்பானில் 1.9 மில்லியன் மக்களுக்கு வெளியேற அறிவிப்பு: டோக்கியோ அருகே சுனாமி அலைகள்
ஜப்பான் முழுவதும் 1.9 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சுனாமி அலைகள் கடலோரப் பகுதிகளின் பல்வேறு இடங்களைத் தாக்கியுள்ளன, மேலும் நாடு முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அலைகளின் அளவு முன்னர் கணிக்கப்பட்டதை விட மிகச் சிறியதாகவே உள்ளது.
தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை நிறுவனம் 21 மாகாணங்களில் 1,905,596 மக்களைப் பாதிக்கும் உள்ளூர் வெளியேற்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின்படி, சுமார் 30 முதல் 50 சென்டிமீட்டர் உயரமுள்ள சுனாமி அலைகள் கிழக்கு கடற்கரையில் பதிவாகி வருகின்றன, இவை டோக்கியோ பெருநகரப் பகுதியை நெருங்கி வருகின்றன. இது ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட மூன்று மீட்டர் உயரத்தை விட மிகக் குறைவு என்றாலும், நிலைமை மாறக்கூடும் என்றும், கூடுதல் அலைகள் வரலாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் சுகன்ஜா நோர்வேயில் துாக்கில் பலி !
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் சுகன்ஜா நோர்வேயில் துாக்கில் பலி !
வடமராடசி பொலிகண்டி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது ,
நோர்வே நாட்டில் கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த குறித்த பெண் சில தினங்களுக்கு முன்னர் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.
இறப்புக்கான காரணம் அறியமுடியவில்லை , யாழ் பொலிகண்டி பகுதியைச் சேர்ந்த சுகன்ஜா ஹரிகரன் வயது 34 என்ற இரண்டு பிள்ளைகளின் தாயை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்
நேற்றைய தினம் நோர்வேயில் குறித்த பெண்ணின் இறுதிக்கிரியைகள் இடம் பெற்றது இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
அம்பாறையில் காதலியை கொடூரமாக கொலை செய்து உயிரை மாய்த்த காதலன் – பின்னணி குறித்து வெளியான தகவல்
அம்பாறையில் காதலியை கொடூரமாக கொலை செய்து உயிரை மாய்த்த காதலன் – பின்னணி குறித்து வெளியான தகவல்
அம்பாறை, பதியதலாவ காதலியின் கழுத்தை அறுத்து கொல்லப்பட்டமை தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
மரங்கல பகுதியில் கடந்த 23 ம் திகதி அதிகாலைவேளை வீட்டிற்குள் நுழைந்த இளைஞன் வீட்டில் இருந்த தனது 22 வயது காதலியின் கழுத்தை அறுத்து, அவரது தாயையும் தந்தையையும் பலத்த காயப்படுத்தி, பின்னர் தனது கழுத்தை அறுத்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
பெண் தனது மூன்று வருட உறவை முறித்துக் கொண்டதால் கோபமடைந்த காதலன் இந்தக் குற்றத்தைச் செய்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
காதல் தோல்வி..
காதலனால் கத்தியால் குத்தப்பட்டவர் 22 வயதுடைய டி.எம். சரோஜா உதயங்கனி என தெரியவந்துள்ளது. மேலும் தாக்குதலுக்குள்ளான 62 வயதுடைய தந்தை மற்றும் 60 வயதுடைய தாயார், மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணான சரோஜா, மொனராகலையை சேர்ந்த இளைஞனுடன் சுமார் மூன்று ஆண்டுகளாக காதல் உறவில் இருந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த இளைஞன் சரோஜாவுக்கு பணம் மற்றும் பல்வேறு வழிகளில் உதவி செய்து, அவரை திருமணம் செய்து கொள்ள எதிர்பார்த்திருந்ததாக தெரியவந்துள்ளது.
எனினும் சில காலத்திற்கு முன்பு, சரோஜா அந்த இளைஞனுடன் கொண்டிருந்த காதல் உறவை நிறுத்தியுள்ளார். அவருடைய பெற்றோரும் அந்த இளைஞனை எதிர்த்தனர். இதன் காரணமாக, அந்த இளைஞன் சரோஜா மீதும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீதும் கடும் வெறுப்பைக் கொண்டிருந்தார்.
இளைஞனின் மிரட்டல் காரணமாக சரோஜாவுக்கு கொழும்பில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் வேலைக்குச் சென்றிருந்தார். இந்த நிலையில் சரோஜா வேறொரு இளைஞனுடன் புதிய காதல் உறவைத் ஏற்படுத்தியதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சரோஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் பதியதலாவாவில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பியிருந்தார். தனது காதலி வீடு திரும்பியதை அறிந்த இளைஞன், சம்பவ தினத்தன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.
சரோஜா அதிகாலை 2.30 மணியளவில் கொழும்புக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில், கூர்மையான ஆயுதத்துடன் இளைஞன், முதலில் வீட்டிற்குள் நுழைந்து சரோஜாவின் கழுத்தை அறுத்துள்ளார். பின்னர் வீட்டில் இருந்த அவரது பெற்றோரை கத்தியால் குத்தி காயப்படுத்திவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
இளைஞனால் கத்தியால் குத்தப்பட்ட இளம் பெண், வீட்டை விட்டு வெளியே ஓடி உறவினர் வீட்டிற்குச் சென்று அங்கு உயிரிழந்துள்ளார். வீட்டை விட்டு தப்பிச் சென்ற இளைஞன், கூர்மையான ஆயுதத்தால் தனது கழுத்தை அறுத்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
மொனராகலையில் இருந்து தனது காதலியின் வீட்டிற்கு அந்த இளைஞன் வந்த மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் பயங்கரம்!! நள்ளிரவில் வீடு புகுந்த 3 பேர் அக்காவைக் கட்டி வைத்து கொடூரம்!! தம்பியும் பலி!!
யாழில் பயங்கரம்!! நள்ளிரவில் வீடு புகுந்த 3 பேர் அக்காவைக் கட்டி வைத்து கொடூரம்!! தம்பியும் பலி!!
யாழில் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் ஒருவர் இரவு படு கொலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் முதலாம் குறுக்குத் தெரு, மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த வைரமுத்து சாந்தலிங்கம் எனும் 54 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் பாரம்பரிய உணவகம்
நடந்தது என்ன?
குறித்த நபரும் 56 வயதுடைய சகோதரியும் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில் அவர் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரது சகோதரி வழங்கிய வாக்குமூலத்தில், நான் குறி சொல்லும் வேலை செய்து வருகிறேன். இரவு மூவர் வீட்டுக்கு வந்து தண்ணீர் கேட்டனர்.அவர்களுக்கு தண்ணீர் எடுப்பதற்காக உள்ளே சென்றவேளை அவர்கள் உள்ளே வந்து என்னை கட்டி போட்டுவிட்டு நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.பின்னர் அதிகாலை 3 மணியளவில் நான் கட்டினை அவிழ்த்துவிட்டு வெளியே வந்து பார்த்தவேளை தம்பி சடலமாக காணப்பட்டார் என கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Monday, July 28, 2025
நாமலை கைது செய்ய பிடியாணை உத்தரவு..!
நாமலை கைது செய்ய பிடியாணை உத்தரவு..!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கொன்றில் அவர் நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியமையினால், அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இன்றைய தினம் (28) இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.அவர் தற்போது ஒரு தனியார் நிகழ்விற்காக மாலத்தீவில் உள்ளார் அவர் நாளை நாடு திரும்ப உள்ள நிலையில் விமான நிலையத்தில் வைத்து கைதாகலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை,
ஜனாதிபதியும் நாமல் ராஜபக்சவும் ஒரே விமானத்தில் மாலைதீவுக்கு பயணம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநயாக்கவும்,ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபகசவும், ஒரே விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.
ஜனாதிபதி திசாநாயக்க, மாலைதீவு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் அதிகார விஜயமொன்றை மம்றகொண்டு மாலே நகருக்குச் சென்றுள்ளார். அதே நேரத்தில், நாமல் ராஜபக்ஷா, அங்கு நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்க மாலைதீவிற்கு சென்றுள்ளார். இவர்கள் இருவரும் கொழும்பு முதல் மாலே வரை பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL 101 இன் வணிக (Business Class) பிரிவில் இருந்தனர். இந்த தற்செயலான சந்திப்பு அரசியல் ஆர்வலர்களிடையே ஒரு ஆர்வத்தைக் கிளப்பியுள்ளது.
Sunday, July 27, 2025
யாழில் 17 வயது மாணவி விகாசினியைக் காணவில்லை!! பொலிசார் அசமந்தம் என குற்றச்சாட்டு!! நடந்தது என்ன?
யாழில் 17 வயது மாணவி விகாசினியைக் காணவில்லை!! பொலிசார் அசமந்தம் என குற்றச்சாட்டு!! நடந்தது என்ன?
பாடசாலைக்கு சகோதரனை ஏற்ற சென்ற மாணவி 10 நாட்களாகியும் வீடு திரும்பவில்லை என தாயார் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்
யாழ்ப்பாணம் செல்லர் வீதியில் வசிக்கும் 17 வயதுடைய மாணவி பிரதீபன் விகாசினி என்பவரை கடந்த 15 ஆம் திகதியிலிருந்து காணவில்லை என அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
கடந்த யூலை 15 ஆம் திகதி பாடசாலைக்கு சென்ற தனது சகோதரனை அழைத்து வருவதற்காக வீட்டிலிருந்து நண்பகல் வேளை வழமை போன்று சென்றுள்ளார்.
ஆனால் அவர் பாடசாலைக்கு சென்று மகனை ஏற்றிவரவில்லை அத்துடன் வீட்டுக்கும் வரவில்லை என தாயார் குறிப்பிட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக உடனடியாக யாழ்ப்பாண பொலிசில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்றுடன் இரு வாரங்கள் ஆகியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து யாழ் பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளரிடம் குறித்த விடயத்தை தெரியப்படுத்தியதாகவும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தமக்கு இல்லை என அவர் தெரிவித்ததாக தாயார் தெரிவித்துள்ளதுடன் தனது மகளை கண்டுபிடித்து தர உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
Saturday, July 26, 2025
கிளிநொச்சி கணித ஆசிரியர் துபாரகன் புளியங்குளத்தில் பலி!! நடந்தது என்ன?
கிளிநொச்சி கணித ஆசிரியர் துபாரகன் புளியங்குளத்தில் பலி!! நடந்தது என்ன?
புளியங்குளம் பகுதியில் இன்று அதிகாலை (27) இடம்பெற்ற விபத்தில், இளம் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சியைச் சேர்ந்த 24 வயதுடைய ஜெயசீலன் துபாகரன் எனும் கணிதபாட ஆசிரியரே உயிரிழந்தவர் ஆவார்.
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
இன்று அதிகாலை 12.15 மணியளவில், உந்துருளியில் பயணித்த போது அவரது உந்துருளி கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த ஆசிரியர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Friday, July 25, 2025
கிளிநொச்சி பொலீஸ் சிறை கூண்டில் ஒருவர் தூக்கில் தொங்கி பலி!
கிளிநொச்சி பொலீஸ் சிறை கூண்டில் ஒருவர் தூக்கில் தொங்கி பலி!
கிளிநொச்சி போலீஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் இன்றைய தினம் ( ஜூலை 25) குடும்பப் பிணக்கு தொடர்பாக விசாரணைகளுக்காக அழைத்து வரப்பட்ட சந்தேக நபர் ஒருவர் விசாரணைகளுக்காக பொலீஸ் நிலையத்தின் விசாரணை கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மதியம்12.20 மணி அளவில் தான் அணிந்திருந்த சாரத்தின் ஒரு பகுதியை கிழித்து தூக்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த இரத்தினம் ராசு 66 வயதுடைய கிளிநொச்சி புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்தவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-மு.தமிழ்ச்செல்வன்-
Thursday, July 24, 2025
கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த மரியதாசன் சடலமாக மீட்பு!
கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த மரியதாசன் சடலமாக மீட்பு!
கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவர் இன்றைய தினம் (24) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதன்போது யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் இருந்து பி.மரியதாசன் (வயது 63) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபரின் மூன்று பிள்ளைகளும், மனைவியும் கனடாவில் உள்ளனர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனடாவில் இருந்து அவரது மச்சான் முறையானவருடன் யாழ்ப்பாணம் வந்திருந்தார்.
யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்தவேளை இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். இன்று பிற்பகல் அவரது வீட்டுக்குச் சென்ற மச்சான் அவர் சடலமாக இருப்பதை அவதானித்த நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸாராருக்கு தகவல் வழங்கினார்.
அவரது சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சாட்சிகளை யாழ்ப்பாணம் பொலிஸார் நெறிப்படுத்தினர்.
யாழில் 48 வயதான முன்னாள் காதலிக்கு கலியாணம்! கடுப்பில் அவளது 100 மேற்பட்ட அந்தரங்க வீடியோக்களை பகிர முற்பட்ட 30 வயது காதலன் கைது!!
யாழில் 48 வயதான முன்னாள் காதலிக்கு கலியாணம்! கடுப்பில் அவளது 100 மேற்பட்ட அந்தரங்க வீடியோக்களை பகிர முற்பட்ட 30 வயது காதலன் கைது!!
யாழ்ப்பாணத்தில் 48 வயது முன்னாள் காதலியின் திருமண மோதிரத்தை பறித்ததுடன், இருவரும் உல்லாசமாக இருந்த அந்தரங்க புகைப்படங்களை வெளியிடவுள்ளதாக மிரட்டிய 30 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் மானிப்பாய் பொலிஸ் பிரிவில் இந்த சம்பவம் நடந்தது.
வடமராட்சி, பருத்தித்துறையை சேர்ந்த இளைஞன் மானிப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்ட பின்னர், நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைதான இளைஞனும், பெண்ணும் சில காலமாக காதல் வசப்பட்டு இருந்துள்ளனர். அப்போது இருவரும் பல முறை உல்லாசமாக இருந்துள்ளனர். இதை இளைஞன் தனது கையடக்க தொலைபேசியில் புகைப்படம், வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளார்.
அண்மையில் அந்த பெண்ணுக்கு வேறொரு ஆணுடன் பதிவுத்திருமணம் நடந்தது.
48 வயது காதலி தன்னை கழற்றி விட்டதால் மனமுடைந்த காதலன், தன்னை திருமணம் முடிக்குமாறு அந்த பெண்ணை வற்புறுத்தி வந்தார்.
கடந்த வாரம், மானிப்பாய் பொலிஸ பிரிவிற்குட்பட்ட பகுதியில் அந்தப் பெண் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது, அவரை வழிமறித்த இளைஞன், அந்த பெண் அணிந்திருந்த பதிவுத்திருமண மோதிரத்தை பறித்தெடுத்துடன், பதிவுத்திருமணம் செய்தவரை பிரிந்து தன்னுடன் வராவிட்டால், இருவரும் உல்லாசமாக இருந்த போது எடுத்த புகைப்படம், வீடியோக்களை வெளியிடப் போவதாக மிரட்டல் விடுத்தார்.
இது தொடர்பில் அந்தப் பெண் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். மானிப்பாய் பொலிசார் அந்த இளைஞனை கைது செய்து மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.
இளைஞனும், அந்த பெண்ணும் உல்லாசமாக இருந்த போது எடுத்த வீடியோ, புகைப்படங்கள் சுமார் நூறு வரையில் இளைஞனின் கையடக்க தொலைபேசியில் மீட்கப்பட்டிருந்தது.
இளைஞன் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவில் கிணற்றிலிருந்து தாயும் இரண்டு பிள்ளைகளும் சடலமாக மீட்பு
முல்லைத்தீவில் சோகம்!முல்லைத்தீவில் கிணற்றிலிருந்து தாயும் இரண்டு பிள்ளைகளும் சடலமாக மீட்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் அமைந்திருக்கின்ற அரச வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரின் கிணற்றிலிருந்து தாயும் இரண்டு பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில் இரண்டு பிள்ளைகளோடு வசித்து வந்த நிலையில் குறித்த தாய் ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் அவர் வசித்து வந்த வீட்டில் இருந்து சுமார் 500 மீற்றருக்கு அப்பால் உள்ள அரச வீட்டு திட்டத்தில் உள்ள வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரின் வீட்டு கிணற்றிலிருந்து சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளனர்
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்
இன்று காலை குறித்த கிணற்றின் அருகில் கான் பேக் ஒன்றும் இதர பொருட்கள் சிலவும் காணப்பட்டதை அடுத்து ஊரில் உள்ள மக்கள் அந்த விடயம் தொடர்பில் கிராம அலுவலர் மற்றும் பொலிசாருக்கு தகவல் வழங்கியதன் அடிப்படையில் அங்கு வருகை தந்த கிராம அலுவலர் மற்றும் பொலிசார் கிணற்றில் உடலங்கள் இருப்பதை அடையாளம் கண்டனர்
இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டதன் பின்னர் உடலங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது
மீட்கப்பட்ட உடலங்களை மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார்
உடலங்களாக மீட்கப்பட்டவர்கள் உசாகரன் மாலினி( வயது38) தாய் மற்றும் உசாகரன் மிக்சா ( வயது11) மகள் உசாகரன் சதுசா (வயது 04) ஆகியவர்களாவர்
இவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது என்ன நடந்தது என்பது தொடர்பில் மாங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
தனது மருமகளுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தவனை அடித்துக் கொன்ற மாமன், 2 மகன்களுக்கு மரணதண்டனை!!
தனது மருமகளுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தவனை அடித்துக் கொன்ற மாமன், 2 மகன்களுக்கு மரணதண்டனை!!
தனது மகனின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த ஒருவரை தடிகளால் அடித்துக் கொன்ற குற்றச்சாட்டில் தந்தை மற்றும் இரண்டு மகன்கள் குற்றவாளிகள் எனக் கண்டறிந்த பொலன்னறுவை மேல் நீதிமன்ற நீதிபதி ருச்சிர வெலிவத்த, நான்கு பிரதிவாதிகளுக்கும் மரண தண்டனை விதித்தார்.
இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஹிங்குராக்கொட, உனகலவெஹெர, சந்தன பொக்குண 10 ஐச் சேர்ந்த ஏ.எம். விஜேரத்ன மற்றும் ஏ.எம். ரசிக பிரதீப் பண்டார மற்றும் ஏ.எம். ரோஷன் பிரதீப் பண்டார ஆகிய இரண்டு தந்தை மற்றும் மகன் பிரதிவாதிகளுக்கும், ஏ.பி. சிசிர குமார ஆகியோருக்கும் இந்த தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் 5வது மற்றும் 6 வது பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்ட டி.எம். நிமல் திசாநாயக்க மற்றும் ஏ.ஜி. ஹீன் பண்டா ஆகியோரிடமும் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகையை ஒப்படைத்திருந்தார்,
மேலும் இரண்டு பிரதிவாதிகளும் விசாரணையின் போது இறந்துவிட்டனர். பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதித்த மேல் நீதிமன்ற நீதிபதி ருச்சிர வெலிவத்த, பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதில் அரசு தரப்பு வெற்றி பெற்றதாகக் கூறினார். அதன்படி, பிரதிவாதிகள் கொலைக் குற்றத்தில் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
Wednesday, July 23, 2025
கழுத்தறுப்பு தொடர்கின்றது!! அம்பாறையிலும் காதலி சரோஜாவின் கழுத்தை அறுத்து கொலை தானும் மரணமான காதலன்!!
கழுத்தறுப்பு தொடர்கின்றது!! அம்பாறையிலும் காதலி சரோஜாவின் கழுத்தை அறுத்து கொலை தானும் மரணமான காதலன்!!
அம்பாறை, பதியதலாவ, மரங்கல பகுதியை சேர்ந்த இளம் பெண்ணொருவர் இன்று (23) அதிகாலை அவரது காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் காதலனும் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு பிரவேசித்த இளைஞன், இளம் பெண்ணின் தாய் மற்றும் தந்தை மீதும் வெட்டுக்காயங்களை ஏற்படுத்தியதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவத்தில் காயமடைந்த தாயும் தந்தையும் தற்போது மஹா ஓயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொலை செய்யப்பட்டவர் 23 வயதான சரோஜா உதயங்கனி என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கொலையைச் செய்த இளைஞன் மொனராகலை பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து பதியதலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழில் அடக்கம் செய்த பெண்ணின் சடலத்தை தோண்டி எடுத்து எரித்தது ஏன்!
யாழில் அடக்கம் செய்த பெண்ணின் சடலத்தை தோண்டி எடுத்து எரித்தது ஏன்!
இவ் வருடம் ஜனவரி மாதம் 30 ஆம் தேதி கொக்குவில் பகுதியில் பெண் ஒருவர் மரணமானார். இவரது மரணம் தொடர்பாக சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்ததையடுத்து இவ்விடயம் கோப்பாய் போலீசார் ஊடாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது இதனை தொடர்ந்து குறித்த பெண்ணின் மரணம் தொடர்பாக மரண விசாரணை நடத்துமாறு நீதிமன்றம் பணித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து உடற்கூற்று பரிசோதனையும் இடம் பெற்றது. எனினும் குறித்த பெண்ணினுடைய மரணத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை என தெரிய வந்ததை தொடர்ந்து அவருடைய உடலை அவருடைய கணவரிடம் கையளிக்குமாறும் குறித்த பெண்ணை தகனம் செய்யுமாறும் நீதிமன்றம் கட்டளையிட்டிருந்தது.
எனினும் விளக்கமின்மை காரணமாக குறித்த பெண்ணினுடைய உடலம் அடக்கம் செய்யப்பட்டிருந்தது குறித்த பெண் இந்து மதத்தை சார்ந்தவராக இருந்ததாலும் அவருடைய உடல் தகனம் செய்யப்படுவதற்கு பதிலாக அடக்கம் செய்யப்பட்டு இருந்ததாலும் அவருடைய கணவர் தன்னுடைய மனைவியுடைய உடலை மீண்டும் அகழ்ந்து எடுத்து தகனம் செய்ய வேண்டுமென யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் மூலம் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்த மாவட்ட நீதிமன்றம் பெண்ணினுடைய கணவருடைய கோரிக்கையை ஏற்று அவருடைய மனைவியினுடைய உடலை மீண்டும் தோண்டி எடுத்து தகனம் செய்யுமாறு கட்டளை வழங்கி இருந்தது. இக் கட்டளையின் பிரகாரம் இன்றைய தினம் கோப்பாய் போலீசாரின் முன்னிலையில் நல்லூர் பிரதேச சபை மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர், கிராம சேவை உத்தியோகத்தர் மற்றும் சட்டத்தரணிகள் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டு கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இவ் வழக்கில் சட்டத்தரணி T.நீதன் அனுசரணையில் சட்டத்தரணி மகேஸ்வரன் மயூரன் முன்னிலையாகியிருந்தார்.
Tuesday, July 22, 2025
யாழில் கலியாணம் கட்டி 15 நாள்!! சுவிஸ் மாப்பிளை விவாகரத்துக்கு முடிவு!!கற்பு ஏற்கனவே பறிபோய் விட்டதாம்!!
சுவிஸ்லாந்திலிருந்து யாழ் வந்து கடந்த 7ம் திகதி திருமணம் முடித்த 32 வயதானவர் மனைவியை விவாகரத்துச் செய்யும் முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரியவருகின்றது. 26 வயதான சாவகச்சேரிப் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு ஏற்கனவே காதலன் இருந்துள்ளதாக திருமணத்தின் பின்னர் மாப்பிளைக்கு யாரோ AI மூலம் சித்தரித்து பெறப்பட்ட புகைப்படங்களுடன் கூடிய தகவலை அவரது வட்சப் எண்ணுக்கு அனுப்பியுள்ளார்கள். அதனால் மனைவியுடன் சந்தேகப்பட்டு மனைவியை தாக்கியதுடன் மனைவிக்கு அடிவயிற்றுபு் பகுதியில் சத்திரசிகிச்சை செய்ததற்கான தளம்பு உள்ளதாகவும் அத்துடன் கற்பும் பறிபோயுள்ளதாகவும், அது தொடர்பாக தான் திருமணத்தின் அன்று இரவு அறிந்து சந்தேகப்பட்டு மனைவியைக் கேட்டதாகவும், அதற்கு வயிற்றுக் குத்து காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை செய்த போது உடனடியாக சத்திரசிகிச்சை மேற்கொண்டதாக மனைவி கூறி சமாளித்தாகவும் தெரிவித்து சண்டையில் இறங்கியுள்ளார். இதனையடுத்து மனைவியின் பெற்றோர் மற்றும் உறவுகள் 2017ம் ஆண்டு யாழ் போதனா வைத்தியசாலையில் “அப்பண்டிஸ்” என்ற நோய்த் தாக்கத்திற்காக அறுவைச்சிகிச்சை செய்த ஆவணங்களை மாப்பிள்ளைக்கு காட்டி நிரூபித்தும், அதே வேளை அந்தப் புகைப்படங்கள் போலியானது என கூறி அதையும் நிரூபித்தும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாக மணமகன் உடனடியாக மனைவியை விட்டுப் பிரிந்து கொழும்பு சென்றுள்ளதாகவும் தற்போது விவாகரத்துக்கு ஆயத்தப்படுத்தி வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
குறி்தத முட்டாள் மாப்பிளையின் பெயர், விபரங்கள் மற்றும் புகைப்படங்கள், அவனின் பெற்றோர் மற்றும் சகோதரிகளின் புகைப்படங்கள் போன்றவை எமக்கு மாப்பிளையி்ன் உறவினர் ஒருவரால் அனுப்பப்பட்டுள்ளது. பெண்ணின் மருத்துவ சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை மாப்பிளை வைத்தியநிபுணர் ஒருவரிடம் கேட்டு ஆலோசனை பெறாது முட்டாள் தனமாக விவாகரத்துக்கு விண்ணப்பித்தால் அவரின் சகல விபரங்களையும் நாம் வெளியிடுவோம்.
Monday, July 21, 2025
முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது!!
முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது!!
புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பின்னர் ராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட ரமேஷ் என்பவர் சற்று முன்னர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரிபத்கொடை புதிய வீதியில் வைத்து பேலியாகொடை பொலிசார் சந்தேகத்தின் பேரில் அவரைக் கைது செய்துள்ளனர்.
அவரிடம் இருந்து டி- 56 ரக துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
குற்றச் செயல் ஒன்றை மேற்கொள்ளும் நோக்குடன் குறித்த நபர் துப்பாக்கியொன்றைத் தம் வசம் வைத்திருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்
சிவப்பு நிறக் கார் ஒன்றில் வந்தவர்கள் அவரிடம் துப்பாக்கியைக் கையளித்து தங்களிடம் இருந்து தகவல் வரும் வரை ஹோட்டல் அறையில் ரமேஷைத் தங்கியிருக்குமாறு கூறிச் சென்றுள்ளனர்.
இதற்கிடையே பொலிசாருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழில் பனையில் 25 அடி உயரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அசோகபதியின் சடலம் மீட்பு!
யாழில் பனையில் 25 அடி உயரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அசோகபதியின் சடலம் மீட்பு!
பனைமரத்தின் 25 அடி உயரத்தில் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் 7 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவத்தில் கொற்றாவத்தை பொலிகண்டி வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த 7 பிள்ளைகளின் தந்தையான கந்தசாமி அசோகபதி (வயது 54) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பனை சீவல் தொழிலாழியான இவர் நேற்று சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் பனை மரத்தில் சுமார் 25 அடி உயரத்தில் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மரண விசாரணை அதிகாரி வேலுப்பிள்ளை பாஸ்கரன் அவர்கள் சடலத்தை பார்வையிட்டு பிரேதப் பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் அதிகரிப்பதற்கான காரணம் இதுதான்: பிரதமர் விளக்கம்
பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் அதிகரிப்பதற்கான காரணம் இதுதான்: பிரதமர் விளக்கம்
புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் முப்பது நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நேர்காணலின் போது பேசிய பிரதமர் அமரசூரிய, ஒரு பாடத்தின் நேரம் 45 நிமிடங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
“பாடம் அல்லது தொகுதி அவசரமின்றி கற்பிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இது செய்யப்படுகிறது. குழு ஆராய்ச்சி மற்றும் விளக்கக்காட்சிகள் போன்ற பல நடைமுறை செயல்பாடுகளை நாங்கள் சேர்த்துள்ளோம். மாணவர்களுக்கு கற்பிக்க ஆசிரியருக்கு போதுமான நேரம் இருக்க வேண்டும், அதே நேரத்தில் மாணவர்கள் அவசரமின்றி இந்த நடவடிக்கைகளில் பங்கேற்க நேரம் தேவை,” என்று அவர் விளக்கினார்.
பாடசாலைகளை காலை 08.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை இயக்குவதற்கு ஆரம்பத்தில் முன்மொழியப்பட்டதாக வெளிப்படுத்திய பிரதமர் அமரசூரிய, இருப்பினும், பாடசாலை நேரத்தை அரை மணி நேரம் மட்டுமே நீட்டிக்க முடிவு செய்யப்பட்டதாக கூறினார்.
போக்குவரத்து போன்ற பிற தளவாட சிக்கல்களைக் கருத்தில் கொண்ட பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
யாழில் கள்ளக்காதல் சந்தேகம்!! நிறை வெறியில் மனைவியை உயிருடன் எரித்துக் கொன்ற கணவன் கைது!!
யாழில் கள்ளக்காதல் சந்தேகம்!! நிறை வெறியில் மனைவியை உயிருடன் எரித்துக் கொன்ற கணவன் கைது!!
யாழ்ப்பாணம், வடமராட்சியில் கணவனால் தீமூட்டி எரிக்கப்பட்ட குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.வடமராட்சி துன்னாலை பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
கடந்த 17ஆம் திகதி 38 வயதான குடும்பப் பெண்ணொருவர் தீயில் எரிந்த நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவர் ஆபத்தான நிலையில் இருந்ததால் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அவர் பொலிசாரிடம் வழங்கிய வாக்குமூலத்தில், தனது கணவர் தன்னை எரித்ததாக தெரிவித்திருந்தார்.கசிப்பு குடித்து விட்டு வந்த கணவன், வேறொரு ஆணுடன் அந்த பெண்ணுக்கு தொடர்பிருப்பதாக குறிப்பிட்டு, தகராறில் ஈடுபட்ட பின்னர், அந்த பெண்ணை தீமூட்டி எரித்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்னி இன்று உயிரிழந்தார்.அவரது கணவர் நெல்லியடி பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
Sunday, July 20, 2025
சம்பூர் மனிதப் புதைகுழி கண்டுபிடிப்பு: 35 வருடக் கோரமான வரலாற்றின் வடுக்கள் மீண்டும் வெளிச்சத்திற்கு
திருகோணமலை, சம்பூர் கடற்கரை ஓரமாக நிலக்கீழ் கண்ணிவெடி அகழும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மனித எச்சங்கள் வெளிவந்தததையடுத்து, குறித்த கண்ணிவெடி அகழும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இக்கண்டுபிடிப்பு, இலங்கையின் உள்நாட்டுப் போரின் கொடூரமான காலப்பகுதியையும், குறிப்பாகச் சம்பூரில் நிகழ்ந்த படுகொலைகளின் நினைவுகளையும் மீண்டும் மக்கள் மனதில் எழுப்பியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை (ஜூலை 17) மூதூர் - சம்பூர் கடற்கரையோரப் பகுதியில் நிலக்கீழ் கண்ணிவெடி அகழும் பணி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோரப் பகுதியில், கடந்த ஒரு வாரகாலமாக எம்.ஏ.ஜி (MAG) எனப்படும் கண்ணிவெடி அகழும் நிறுவனம், தங்களுக்குரிய தளபாடங்கள் மற்றும் பொருட்களுடன் முகாமிட்டு, கடந்த வியாழக்கிழமை முதல் கண்ணிவெடி அகழும் பணியைத் தொடர்ந்தது.
இந்நிலையில், இன்று (ஜூலை 20) குறித்த பகுதியில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அகழ்வுப் பணி உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் நீதிமன்றக் கட்டளையைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பூர் படுகொலையின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியை அண்மித்த பகுதியிலேயே இந்த மனித எலும்புப் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
சம்பூர் படுகொலை: 35 வருட வரலாறு:
திருகோணமலை சம்பூர் பகுதி, இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது பல மனித உரிமை மீறல்களுக்கும், பொதுமக்கள் படுகொலைகளுக்கும் சாட்சியாக இருந்துள்ளது. குறிப்பாக, சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 1990 ஜுலை 7 ஆம் திகதி, இப்பகுதியில் நடந்த ஒரு கோரமான சம்பவத்தில், அப்பாவிப் பொதுமக்கள் பெருமளவில் இராணுவம் எனக் கருதப்படும் சீருடை அணிந்தவர்களால் படுகொலை செய்யப்பட்டனர். சம்பூர் கிராமத்தில் வெட்டியும் சுட்டும் 57 பேர் க்கொல்லப்பட்டதாகப் பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவங்களின் விளைவாக, அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்து, பெரும் துன்பங்களை அனுபவித்தனர். உயிரிழந்த பலரின் உடல்கள் மீட்கப்படாமலோ, முறையாக அடையாளம் காணப்படாமலோ புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் நீண்டகாலமாக நிலவி வருகிறது. இந்தப் படுகொலைகளின் நினைவாகவே சம்பூர் கடற்கரையோரத்தில் தூபியொன்று அமைக்கப்பட்டு, நீதிக்கான குரல் தொடர்ந்து ஓங்கி ஒலிக்கிறது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித எச்சங்கள், அந்தப் பழைய காயங்களை மீண்டும் கீறி, நீதி மற்றும் உண்மைக்கான தேடலுக்கு மேலும் உந்துதல் அளித்துள்ளன.
சுவிஸ்லாந்தில் புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களை அவர்களின் கடைகளை வி்ட்டு வெளியேற உத்தரவு!!
சுவிஸ்லாந்தில் புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களை அவர்களின் கடைகளை வி்ட்டு வெளியேற உத்தரவு!!
சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய நகரமான சூரிச்சில் லிட்டில் ஸ்ரீலங்கா எனப்படும் தமிழ் கடைகள் அமைந்துள்ள கட்டிடங்களில் 40 குத்தகைதாரர்களையும் வெளியேறுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
புதுபித்தல் பணிகள் இடம்பெறுவதன் காரணமாக அவர்களை வெளியுமாறு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சூரிச் மாவட்டம் ஐது பகுதியிலுள்ள குடியிருப்பு தொகுதி மற்றும் வணிக கட்டிடம் ஒன்றில் விரிவாக்கப்பணிகள் இடம்பெறவுள்ளதால் இந்நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் குத்தகைதாரர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிட்டிருக்கிறது.
பிரபலமான பேக்கரி கடை உள்ளிட்ட 40 குத்தகைதாரர்கள் 2026 இல் வெளியேற வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
பல புதிய தொழிநுட்பங்களுடன் குறித்த கட்டிடத்தொகுதி மேம்படுத்தப்படவுள்ளது.
1980 ஆம் ஆண்டுகளில் குறித்த கட்டிடம் பல விற்பனை நிலையங்களுடன் சேர்ந்து லிட்டில் சிறிலங்கா என்ற விற்பனை மையமாக மாறியது.
விரிவாக்கப்பணிகளின் பின்னர் தற்போதய குத்தகைதாரர்கள் மீண்டும் இணைய முடியுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெண்களை கர்ப்பமாக்க 15 லட்சம் சம்பளம்!
திருமணம் ஆன பெண்களை கர்ப்பமாக்க 15 லட்சம் சம்பளம்! எங்கே? எப்படி? ஒரு விசித்திரமான மோசடியின் கதை இந்தியாவின் பீகார் மாநிலத்தில், குறிப்பாக நவாதா மாவட்டத்தில், 'ஆல் இந்தியா ப்ரெக்னன்ட் ஜாப் சர்வீஸ்' (All India Pregnant Job Service) என்ற பெயரில் நடைபெற்ற ஒரு விசித்திரமான சைபர் மோசடி சமீபத்தில் காவல்துறையால் கண்டறியப்பட்டு, பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த மோசடி, இளைஞர்களை குறிவைத்து, குழந்தையில்லாத பெண்களை கர்ப்பமாக்குவதற்கு பணம் வழங்கப்படும் என்று பொய்யான வாக்குறுதிகளை அளித்து, அவர்களை ஏமாற்றியது.
இந்தக் கட்டுரையில், இந்த ஊழலின் விவரங்கள், அதன் செயல்பாடு, மற்றும் சமூகத்திற்கு இது ஏற்படுத்திய தாக்கம் பற்றி விவாதிக்கப்படுகிறது.
ஊழலின் பின்னணி,
நவாதா மாவட்டம், பீகாரில் மோசடிகளுக்கும், ஏமாற்று வேலைகளுக்கும் பெயர் பெற்ற ஒரு பகுதியாகும். 2,000 களின் ஆரம்பத்தில், புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்துகள் மற்றும் ஆற்றல் அதிகரிக்கும் மாத்திரைகள் என்ற பெயரில் மாவு நிரப்பப்பட்ட மோசடி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.
இப்போது, டிஜிட்டல் யுகத்தில், மோசடிகள் மேலும் தீவிரமடைந்து, சமூக ஊடக தளங்களான டெலிகிராம், பேஸ்புக், மற்றும் வாட்ஸ்அப் மூலம் பரவி வருகின்றன. இந்த கர்ப்ப ஊழல், இத்தகைய டிஜிட்டல் மோசடிகளின் ஒரு உதாரணமாகும்.
மோசடியின் செயல்பாடு,
இந்த மோசடி, 'ஆல் இந்தியா ப்ரெக்னன்ட் ஜாப் சர்வீஸ்' என்ற பெயரில் ஒரு இணையதளத்தை உருவாக்கி, இளைஞர்களை குறிவைத்து செயல்பட்டது.
மோசடி கும்பல், குழந்தையற்ற பெண்களை கர்ப்பமாக்குவதற்கு உதவினால், 10 முதல் 15 லட்சம் ரூபாய் வரை பணம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது.
மேலும், கர்ப்பமாக்க முடியாவிட்டாலும், 50,000 ரூபாய் ஆறுதல் தொகையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மோசடியின் செயல்முறை பின்வருமாறு இருந்தது,
விளம்பரங்கள் மற்றும் தொடர்பு,
பேஸ்புக்கில் 'Call me' என்ற வாசகத்துடன் ஒரு பெண்ணின் படத்தைப் பயன்படுத்தி விளம்பரங்கள் பரப்பப்பட்டன. ஆர்வம் காட்டியவர்களை வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்டனர்.
பதிவு கட்டணம், ஆரம்பத்தில், 799 ரூபாய் பதிவு கட்டணமாகவும், பின்னர் 5,000 முதல் 20,000 ரூபாய் வரை பாதுகாப்பு வைப்புத் தொகையாகவும் வசூலிக்கப்பட்டது. ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்களும் சேகரிக்கப்பட்டன.
பொய்யான வாக்குறுதிகள், பணம் செலுத்தியவர்களுக்கு, ஒரு பெண்ணை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், எந்த சந்திப்பும் நடைபெறவில்லை, மாறாக மேலும் பணம் கோரப்பட்டது.
உதாரணமாக, வைசாலியைச் சேர்ந்த 27 வயது தொழிலாளி முகேஷ் குமார், 15 லட்சம் ரூபாய் பரிசு வாக்குறுதியால் ஈர்க்கப்பட்டு, இந்த மோசடியில் சிக்கினார்.
பதிவு கட்டணம் மற்றும் ஹோட்டல் முன்பதிவு கட்டணம் என்ற பெயரில் பணம் செலுத்திய அவர், இறுதியில் ஏமாற்றப்பட்டார்.
பொலிஸாரின் நடவடிக்கை,
2023 டிசம்பர் இறுதியில், நவாதா மாவட்ட பொலிஸார் இந்த மோசடியை அம்பலப்படுத்தியது. கஹுவாரா கிராமத்தில் இயங்கிய இந்த கும்பலில் இருந்து முதலில் 08 பேர் கைது செய்யப்பட்டனர்.
2024 இல் மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து அழைப்பு பதிவுகள், வாட்ஸ்அப் புகைப்படங்கள், ஆடியோ பதிவுகள் மற்றும் பண பரிவர்த்தனை விவரங்கள் உள்ளிட்ட ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன.
காவல்துறையின் புலனாய்வு, இந்த மோசடி ஒரு பெரிய நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று குறிப்பிடுகிறது. இருப்பினும், 'நூறு பேரை கைது செய்தாலும், 101 ஆவது நபர் இதே மோசடியை தொடரலாம்' என்று பொலிஸ் அதிகாரி ஒருவர் கவலை தெரிவித்தார், இது மோசடியின் ஆழத்தை உணர்த்துகிறது.
சமூக தாக்கம்,
இந்த ஊழல் பீகார் மாநிலத்தில் பலருக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், சமூக அளவில் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
இளைஞர்களின் வேலையின்மை மற்றும் பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி, மோசடி கும்பல்கள் எவ்வாறு அவர்களை எளிதாக இலக்காக்குகின்றன என்பதை இது வெளிப்படுத்துகிறது.
மேலும், டிஜிட்டல் தளங்களின் தவறான பயன்பாடு, சைபர் குற்றங்களின் புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது.பொது மக்களிடையே விழிப்புணர்வு இல்லாததும், எளிதில் பணம் சம்பாதிக்கும் ஆசையும் இத்தகைய மோசடிகளுக்கு வழிவகுக்கின்றன.
இந்த ஊழல், குறிப்பாக ஆண்களை இலக்காக்கி, பா லி ய ல் மற்றும் கர்ப்பம் தொடர்பான உணர்வுகளை தவறாக பயன்படுத்தியது, இது சமூகத்தில் ஒரு புதிய விவாதத்தை தூண்டியுள்ளது.
Saturday, July 19, 2025
யாழ்ப்பாண யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது: போலி ஆவணங்களுடன் இத்தாலி செல்ல முயற்சி!
யாழ்ப்பாண யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது: போலி ஆவணங்களுடன் இத்தாலி செல்ல முயற்சி!
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 26 வயது யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (ஜூலை 18) இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, சந்தேகநபர் போலி கடவுச்சீட்டு, போலி விமான அனுமதி அட்டை (boarding pass) மற்றும் போலி குடிவரவு முத்திரைகளுடன் பிடிபட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்ட இந்த யுவதி, குடிவரவு அதிகாரிகளை ஏமாற்றி, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி டுபாய் வழியாக இத்தாலி செல்ல திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
போலித் தகவல்களை வழங்கியமை, உத்தியோகபூர்வ ஆவணங்களைத் திரிபுபடுத்தியமை, மற்றும் போலியான வீசாவுடன் சட்டவிரோத வெளிநாட்டுப் பயணத்திற்கு முயற்சித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
கண்டி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு!
கண்டி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு!
கண்டி, உடுதும்பர-மீமுரே பகுதியில் வான் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(19.07.2025) மாலை ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்களும், ஆண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்த மேலும் 3 பேர் தெல்தெனிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யுத்தம் நடந்த மண்ணில் புதைகுழிகள் இருக்குமாம் – உதய கம்மன்பில தெரிவிப்பு..!
யுத்தம் நடந்த மண்ணில் புதைகுழிகள் இருக்குமாம் – உதய கம்மன்பில தெரிவிப்பு..!
“யுத்தம் நடந்த மண்ணில் எங்கு தோன்றினாலும் மனிதப் புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும். செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணி மேற்கொள்வது தேவையற்றது”என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு யுத்தம் நடந்த மண். இந்த மண்ணில் எங்கு தோன்றினாலும் மனிதப் புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும். யுத்தத்தில் உயிரிழந்தவர்கள் பலர் மண்ணுக்குள்தான் புதைக்கப்பட்டார்கள். எனவே, அந்தப் புதைகுழிகள் யுத்தத்தின் பின்னர் வெளிக்கிளம்பும் போது பலரும் வெவ்வேறு விதமாக கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
செம்மணியில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியை, பெருமளவு நிதிகளை வீண்விரயம் செய்து அரசு அகழ்கின்றது. இது தேவையற்றது.
அந்தப் புதைகுழிக்குள் இருந்து எலும்புக்கூடுகளாக மீட்கப்படுபவர்கள் உண்மையில் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியாது. ஏனெனில் யுத்தத்தில் மூன்று இனத்தவர்களும் உயிரிழந்தனர். எனவே, செம்மணி மனிதப் புதைகுழியைத் தோண்டுவது மீண்டும் இன வன்முறைக்கே வழிவகுக்கும்” என்றார்.
பிருத்தானியாவில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் உட்பட்டவர்களுக்கு வைக்கப்பட்ட ஆப்பு!!
எதிர்வரும் ஜூலை 22ஆம் திகதி முதல் புதிய புலம்பெயர்தல் விதிகளை அறிமுகம் செய்ய உள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி, திறன்மிகுப் பணியாளர்கள் விசாவில் பிரித்தானியா செல்பவர்களுக்கான (skilled workers) குறைந்தபட்ச வருமான வரம்பு, 38,700 பவுண்டுகளில் இருந்து 41,700 பவுண்டுகளாக உயர்த்தப்பட உள்ளது.
மேலும், பிரித்தானியாவில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வருமான வரம்பு உயர்த்தப்படுவதைத் தொடர்ந்து, புதிய விதிகளுக்கு அமைய, 111 வகையான தொழில் வாய்ப்புக்கள் வெளிநாட்டவர்களுக்கு இல்லாமல் போகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரம்பு
மேலும், இனி பிரித்தானியாவில் வெளிநாட்டவர்கள், பராமரிப்பு பணியாளர் (care worker) தொழிலுக்கு அமர்த்தப்பட மாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, குறித்த விதிகள் அனைத்தும் இம்மாதம் 22ஆம் திகதி நடைமுறைக்கு வரவுள்ளன என்று பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன், 2026ஆம் ஆண்டின் இறுதியில், பட்டப்படிப்பு படிக்காதவர்களுக்கான வேலைகள் செய்பவர்கள் முதல் சில பிரிவைச் சேர்ந்தவர்கள் தங்கள் குடும்பத்தினரை பிரித்தானியாவுக்கு அழைத்துவர முடியாது எனவும் விதிகள் கூறுகின்றன.
மேலும், ஆண்டு இறுதியில் மொழித்தகுதி, ஸ்பான்சர்ஷிப் சான்றிதழ்கள் (CoS), மற்றும் குடும்ப விசா தொடர்பிலும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய அரசாங்கத்தின் இந்த திடீர் முடிவால் பல நாடுகளில் உள்ள பல்வேறுபட்ட மக்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் இல்லாது போகும் அபாயம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Friday, July 18, 2025
சுவிஸ்லாந்தில் 150 பிறாங் பணத்திற்கு சாறி வாங்கிய கிளிநொச்சி மேனகாவின் தலையை உடைத்த கணவன் பொலிசாரால்
சுவிஸ்லாந்தில் 150 பிறாங் பணத்திற்கு சாறி வாங்கிய கிளிநொச்சி மேனகாவின் தலையை உடைத்த கணவன் பொலிசாரால் கைது!!
சுவிஸ் ஜெனிவா பகுதியில் மனைவியைத் தாக்கிய குற்றச்சாட்டில் கிளிநொச்சி வட்டக்கச்சியைச் சொந்த இடமாகக் கொண்ட கணவனை ஜெனிவா பொலிசார் கைது செய்துள்ளனர். இந்தியாவிலிருநு்து வந்த சாறி ஒன்றை மலிவு விலையில் விற்கும் கடை ஒன்றழல் 150 சுவிஸ் பிறாங்கிற்கு மனைவி வாங்கியதிலிருந்து ஏற்பட்ட சண்டையின் போதே கணவனால் மனைவி தாக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி கனகபுரம் வீதியைச் சேர்ந்த 34 வயதான மேனகா என்பவரே கணவனின் தாக்குதலுக்கு உள்ளாகி தலையில் வெடிப்புக்குள்ளான நிலையில் ஜெனிவா வைத்தியசாலையில் அனுமதிக்க்பபட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
Thursday, July 17, 2025
சாவகச்சேரி உதவி செயலாளர் தமிழினியை கணவன் சதீஸ் எரித்தானா?கொழும்பு விசேட பொலிசாரால் கைது!!
சாவகச்சேரி உதவி செயலாளர் தமிழினியை கணவன் சதீஸ் எரித்தானா?கொழும்பு விசேட பொலிசாரால் கைது!!
சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய போது தீயில் எரிந்து உயிரிழந்த தமிழினியின் கணவரான கிராம சேவையாளர் சதீஸ் கொழும்பில் இருந்து வருகை தந்த பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த இரண்டாம் மாதம் தீயில் எரிந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சாவகச்சேரி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் தமிழினி சிகிச்சை பலனின்றி இன்றி உயிரிழப்பு –
ஆறு மாதகர்ப்பிணியாக இருந்த குறித்த உதவி பிரதேச செயலாளரான பெண் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தாய் மற்றும் ஆறு மாத சிசுவை உயிருடன் மீட்கும் பணிகளும் இடம் பெற்ற நிலையில் பயனளிக்காத நிலையில் அவரது மரணம் சம்பவித்தது.இந்நிலையில் இறந்த தமிழினியின் பெற்றோர் தரப்பில் கணனான கோபாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும் சதீஸ் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திலும் கால் பதிக்கின்றார் அன்னபூரணிக் கடவுள்!! விசர் சனங்கள் போவார்களா?
யாழ்ப்பாணத்திலும் கால் பதிக்கின்றார் அன்னபூரணிக் கடவுள்!! விசர் சனங்கள் போவார்களா?
தமிழ்நாட்டில் பல திருமணங்கள், புருசனைக் கொன்ற வழக்கு போன்றவற்றை கொண்ட பின்னணியுள்ள ஒரு பச்சைக் கள்ளி சுவாமி வடிவில் யாழ்ப்பாணத்திலும் காலடி வைக்கின்றார். நல்ல பழுக்கக்காய்ச்சிய கம்பியை எடுத்து குறித்த நிகழ்வை நடத்துபவனின் பின் பகுதியில் குறிசுடவும்…..
நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இந்த ஐட்டம் வரவுள்ளதாக தகவல்- யாழ் மண் சைவ பூமி இவ்வாறான அசிங்கங்கள் கால் பட அனுமதிக்க கூடாது!
யாழ் சைவ அமைப்புகள் ஒன்றினைந்து விரட்டியடியுங்கள்! இவர்களை போன்றவர்களை கவனத்தில் எடுக்காது விட்டால் கோயில் கட்டுவார்கள் யாழ்ப்பான முட்டாள் தமிழர்கள்!
லண்டனில் நீக்ரோவுடன் கள்ளக்காதல்!! வவுனியா மனைவி அகல்யாவைக் கொலை செய்ய முற்பட்ட ஜெகதீஸ்வரன் கைது!!
லண்டனில் நீக்ரோவுடன் கள்ளக்காதல்!! வவுனியா மனைவி அகல்யாவைக் கொலை செய்ய முற்பட்ட ஜெகதீஸ்வரன் கைது!!
லண்டன் சௌதால் பகுதியில் மனைவியைக் கொலை செய்ய முற்பட்ட கணவன் பொலிசாரா்ல கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியாவைச் சேர்ந்த 32 வயதான தனது மனைவியான அகல்யாவைக் கட்டி வைத்து நச்சு திரவத்தை ஊசியில் ஏற்றியுள்ளார் ஜெகதீஸ்வரன். அதன் பின் மயங்கிய மனைவியை இறந்ததாக கருதி வீட்டு படுக்கையில் விட்டுவிட்டு வழமையாக வேலைக்கு செல்வது போல் சென்றுள்ளார்ஜெகதீஸ்வரன்.
கணவன் சென்ற பின் மயக்கம் தெளிந்து எழுந்த அகல்யா தொலைபேசியில் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் போது தனது மனைவி ஆபிக்க இளைஞன் ஒருவருடன் கள்ளத் தொடர்பில் இருப்பதாகவும் அதனை பலதடவைகள் தான் சுட்டிக் காட்டியும் மனைவி கேட்காததால் மனைவியை தாக்கியதுடன் மனைவிக்கு அதிர்ச்சியளிப்பதற்காக சாதாரண வெற்று ஊசிக்குள் நீரை எடுத்து அவளது உடலில் செலுத்தியதாகவும் பொலிசாரிடம் கணவன் கூறியுள்ளார்.
மாணவர் விசாவில் 2014ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற மட்டக்களப்பைச் சேர்ந்த 35 வயதான ஜெகதீஸ்வரன் ஏற்கனவே அங்கு மாணவர் விசாவில் சென்று கற்று வந்த அகல்யாவை காதலித்து திருமணம் முடித்து வாழ்ந்து வந்ததாகத் தெரியவருகின்றது. தற்போது அவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்,
Wednesday, July 16, 2025
சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை
அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவான நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்தனர். அந்நாட்டு நேரப்படி 12.37 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள அலஸ்காகா மாகாணம் நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படக்கூடிய ரிங்க் ஆப் பயர் என்ற இடத்தில் அமைந்து இருப்பதால் இங்கு அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கம்.
எனினும், சமீப காலமாக சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவது மக்களை அச்சமடைய வைத்து இருக்கிறது. கடந்த 1964 ஆம் ஆண்டு ரிக்டர் அளவில் 9.2 என்ற அளவுக்கு நிலநடுக்கம் அலஸ்காவில் ஏற்பட்டது.
அமெரிக்க வரலாற்றில் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக இது அமைந்தது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அலஸ்காவின் வளைகுடா மற்றும் ஹவாய், அமெரிக்க மேற்கு கடற்கரை பகுதிகளை சுனாமி தாக்கியது
கனடாவில் கணவன்!! யாழ் விடுதியில் இளம் குடும்பப் பெண்ணுடன் பொலிஸ் அதிகாரி ஜல்சா!! கணவனின் தம்பி புகுந்த போது நடந்தது என்ன?
கனடாவில் கணவன்!! யாழ் விடுதியில் இளம் குடும்பப் பெண்ணுடன் பொலிஸ் அதிகாரி ஜல்சா!! கணவனின் தம்பி புகுந்த போது நடந்தது என்ன?
யாழ் திருநெல்வேலிப் பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் இளம் குடும்பப் பெண் ஒருவருடன் அறை ஒன்றினுள் தங்கியிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் அரை குறை ஆடையுடன் ஓடித்தப்பினார். கடந்த ஞாயிறு பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. யாழ் கொக்குவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 29 வயதான ஒரு பிள்ளையின் தாயாரான இளம் குடும்பப் பெண்ணின் கணவன் அண்மையில் கனடா சென்றுள்ளார். இந் நிலையில் கணவனின் பெற்றோருடன் குறித்த பெண் தனது குழந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார். பெண்ணின் கணவனின் தம்பி மானிப்பாய் பகுதியில் திருமணம் முடித்து வாழ்ந்து வந்த நிலையில் தனது பெற்றோரைப் பார்க்க வரும் சந்தர்ப்பங்களில் தனது அண்ணனின் மனைவியான அண்ணியுடன் சண்டை ஏற்பட்டு அது பொலிஸ் நிலையம் வரை சென்றுள்ளது. இந்த சம்பவத்திற்காக குறித்த குடும்பப் பெண் சில தடவைகள் பொலிஸ் நிலையம் சென்று வந்துள்ளார். அந்த சந்தர்ப்பத்திலேயே குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த சிறுகுற்றத்தடுப்பு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரியுடன் தொடர்பு ஏற்பட்டதாக தெரியவருகின்றது.
இதன் காரணமாக விசாரணை என்ற பெயரில் சில தடவைகள் கணவனின் பெற்றோரின் வீட்டுக்கு குறித்த பொலிஸ் அதிகாரி வந்து சென்றதுடன் கணவனின் தம்பியாரையும் பெற்றோரைப் பார்க்க அங்கு வரக்கூடாது என எச்சரிக்கை செய்து ஒரு நாள் பொலிஸ் சிறைக் கூடத்தினுள்ளும் அடைத்து வைத்திருந்துள்ளார்.
இதன் பின்னர் தம்பியார் தனது நண்பர்களுடன் சேர்ந்து புலனாய்வில் இறங்கி பொலிஸ் அதிகாரிக்கும் அண்ணிக்குமான கள்ளத் தொடர்பை கண்டு பிடித்தாகத் தெரியவருகின்றது. இது தொடர்பாக பல தடவைகள் கனடாவில் உள்ள அண்ணனுக்கு தெரியப்படுத்தியும் அண்ணன் அதை நம்பாது தனது மனைவியிடம் கூறியதால் குறித்த பொலிஸ் அதிகாரி மீண்டும் தம்பியை பொலிஸ் நிலையம் அழைத்து சிறைக்குள் தள்ளுவேன் என எச்சரித்ததாகவும் தெரியவருகின்றது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை திருநெல்வேலிப் பகுதியில் நாள் வாடகைக்கு விடும் வீடு ஒன்றில் பொலிஸ் அதிகாரியும் அண்ணியும் தங்கியிருந்த போது உள்ளே கைத் தொலைபேசிகள் மூலம் வீடியோ எடுத்தபடி நுழைந்த தம்பி மற்றும் அவனது நண்பர்களால் இருவரும் கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டுள்ளனர். குறித்த வீடியோ கணடாவில் உள்ள அண்ணனுக்கும் அனுப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
Tuesday, July 15, 2025
யாழில் கந்துவட்டி காவலிகளால் கடத்திச் செல்லப்பட்டு நி ர்வா ணமாக்கி வீடியோ எடுத்து கடும் சித்திரவதை!! 4 பேருக்கு சிறை!!
யாழில் கந்துவட்டி காவலிகளால் கடத்திச் செல்லப்பட்டு நி ர்வா ணமாக்கி வீடியோ எடுத்து கடும் சித்திரவதை!! 4 பேருக்கு சிறை!!
யாழ்ப்பாணத்தில் கந்து வட்டி கும்பலை சேர்ந்த நால்வர் மல்லாகம் நீதவான் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்
குடும்பஸ்தர் ஒருவருக்கு கந்து வட்டிக்கு பணம் கொடுத்த நபர் ஒருவர், பணத்தினை பெற்றவர் மீள கொடுக்க தவறியமையால் மேலும் மூவருடன் இணைந்து , பணம் பெற்றவரை இளவாலை பகுதிக்கு கடத்தி சென்று , நி ர்வா ணமாக்கி , அவரை மோசமாக தாக்கி ,சித்திரவதைகள் புரிந்து அதனை தமது திறன்பேசியில் காணொளியாகவும் பதிவு செய்துள்ளனர்.
பின்னர் பணம் பெற்றவரை மிரட்டி விடுவித்த நிலையில், அவர் தனக்கு நேர்ந்த கொடுமைகள் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் ,குடும்பஸ்தர் ஒருவரை கடத்தி சென்றமை , தாக்கியமை , சித்திரவதை புரிந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் வட்டிக்கு பணம் கொடுத்தவர் உள்ளிட்ட நால்வரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்
விசாரணைகளின் பின்னர் நால்வரையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் , நால்வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.
அதேவேளை , சித்திரவதை மற்றும் தாக்குதலைகளை காணொளியாக பதிவு செய்த திறன் பேசிகளை பகுப்பாய்வுக்கு உட்படுத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மருதனார் மட பகுதியில் கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர் ஒருவர் கடந்த வருடம் , தன்னிடம் பணம் பெற்று , அவற்றினை திருப்பு செலுத்த தவறியவர்களை கடத்தி சென்று தோட்ட வெளி ஒன்றில் நி ர்வா ணமாக்கி தாக்கி , சித்திரவதைகள் புரிந்து அவற்றை தனது தொலைபேசியில் காணொளியாக பதிவேற்றி வைத்துள்ளார்.
அவற்றில் சில காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியதை அடுத்து , அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாக பொலிஸார் குறித்த கந்து வட்டி கும்பலை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர்.
இந்நிலையிலையே தற்போதும் அதே பாணியில் வட்டி பணம் வாங்க முற்பட்ட கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழில் ஏற்கனவே செயற்படும் கந்துவட்டிக்காவாலிகள் சிலரின் புகைப்படங்கள் தந்துள்ளோம்…
இவர்தான் யாழ்ப்பாணம் மருதனார்மடம் வசூல் ராஜா கந்துவட்டி ஜெகன்!!!
சாதாரண கோயில் காணியில் வசித்து வந்த கந்தையா கைலாயம் எனும் மருதனார்மட ஜெகன் அவரது மருமகன்களான யோகரசா சயந்தன், முத்து ஆகியோருடன் இணைந்து வட்டிக்கு பணம் வசூலித்து இன்று எத்தனையோ அப்பாவி மக்களது வீடுகளை அறுதியாக்கி உள்ளார்கள், அத்துடன் இவர் பல பெ,ண்களை மிரட்டி தவறு செய்யவும் அழைத்துள்ளார்.
பல கோடிகளை வட்டிக்கு விட்டு உள்ளார்கள் எத்தனையோ வாகனங்கள் அடித்துப்பறித்து வைத்து உள்ளார்கள், இவை அனைத்தும் பொதுமக்களை அடித்து வாங்கிய பணம், இவர்களிடம் கேள்வி கேட்டால் சுன்னாக பொலிசார் பொய் வழக்குகள் போட்டு உள்ளே அனுப்பி விடுவார்கள் என்று மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்,
பிரதேசசபை அதற்கு மேல் அவர்களிடம் காசை வாங்கி வட்டி தொழில் செய்ய கடைகளை வழங்கி உள்ளனர், சாதாரண மக்களால் என்ன தான் செய்ய முடியும் இதற்கு அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுத்து இவர்களது சொத்துகளை பறிமுதல் செய்வது மட்டும் இன்றி இவர்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று மக்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்,
படங்களில் உள்ளவர்கள் வட்டி ஜெகன் மற்றும் கந்துவட்டி வசூல் கும்பல்கள், மதியம் வெளியான வீடியோவில் அப்பாவியைத் தாக்குவது இவர்கள்தான்.
பொத்துவில் கடற்கரையில் நிர்வா ணமாக சென்ற தாய்லாந்து யுவதி!! வீடியோ
பொத்துவில் கடற்கரையில் நிர்வா ணமாக சென்ற தாய்லாந்து யுவதி!! வீடியோ
மேலாடையின்றி வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் பொத்துவில் பொலிஸ் நிலைய மகளிர் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் பீச் ஹட் ஹோட்டலில் இருந்து ஓஷன் ஸ்கை ஹோட்டலின் நுழைவாயில் வரை நிர்வா ணமாக நடந்து சென்றுள்ளார். இந்தப் பெண் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் என பொத்துவில் பொலிஸ் நிலைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொத்துவில் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பெண் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று சென்று அந்தப் பெண்ணைக் கைது செய்து பொத்துவில் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
வெளிநாட்டுப் பெண் தனது காதலனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இவ்வாறு செயற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட வெளிநாட்டுப் பெண் பொத்துவில் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வாரங்கள் மற்றும் ஒருமாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Monday, July 14, 2025
யாழில் வெளிநாட்டிலிருந்து வந்து கோயிலுக்கு சென்ற 14 வயது சிறுமியுடன் உறவு கொண்ட காமு கன் கைது!!
யாழில் வெளிநாட்டிலிருந்து வந்து கோயிலுக்கு சென்ற 14 வயது சிறுமியுடன் உறவு கொண்ட காமு கன் கைது!!
புலம்பெயர் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்து 14 வயது சிறுமியை பா லி யல் து ஸ்பி ரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆலயத்திற்கு சென்ற சிறுமியுடன் பா லி யல் து ஸ்பி ரயோகத்தில் ஈடுபட்டமை தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோருடன் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்திருந்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்து விசாரணைகளுக்கு பின்னர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் குறித்த நபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி: திகிலூட்டும் பகுப்பாய்வு அறிக்கை - 31 பெண்கள் உட்பட 52 சடலங்கள், வெடிப்புக் காயங்களால் பலர் மரணம்!
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி: திகிலூட்டும் பகுப்பாய்வு அறிக்கை - 31 பெண்கள் உட்பட 52 சடலங்கள், வெடிப்புக் காயங்களால் பலர் மரணம்!
முல்லைத்தீவு, ஜூலை 15, 2025: முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட 52 மனித எலும்புக்கூடு தொகுதிகளின் பகுப்பாய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை, அந்தப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட சடலங்களின் பாலினம், வயது, மற்றும் மரணத்திற்கான காரணங்கள் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளது. இது, இலங்கையின் உள்நாட்டுப் போரின் கொடூரமான முகத்தை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
மனிதப் புதைகுழி கண்டுபிடிப்பின் பின்னணி:
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி கடந்த ஆண்டு ஜூன் 29, 2024 அன்று அடையாளம் காணப்பட்டது. கொக்குத்தொடுவாய் - முல்லைத்தீவு பிரதான வீதியோரம், குழாய் நீர் பொருத்தும் நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின்போதே இந்த பாரிய புதைகுழி கண்டெடுக்கப்பட்டது. இது தமிழ் மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான காணாமல் போனோர் விவகாரம் மற்றும் போர்க்கால அட்டூழியங்கள் குறித்த விசாரணைகளுக்கு மீண்டும் ஒருமுறை முக்கியத்துவம் அளித்துள்ளது.
கண்டுபிடிப்பைத் தொடர்ந்து, முல்லைத்தீவு நீதிமன்றம், முல்லைத்தீவு சட்ட மருத்துவ அதிகாரி கே. வாசுதேவா மற்றும் யாழ்ப்பாணம் சட்ட மருத்துவ அதிகாரி செ. பிரணவன் ஆகியோரின் நேரடி கண்காணிப்பு மற்றும் பங்குபற்றுதலுடன் அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. தொல்லியல்துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த அகழ்வு நடவடிக்கையில் மொத்தமாக 52 மனித என்புத்தொகுதிகள் மீட்கப்பட்டன. அத்துடன், சடலங்களுடன் ஆடைகள், துப்பாக்கி ரவைகள் உட்படப் பல முக்கிய தடயப் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டிருந்தன.
பகுப்பாய்வு அறிக்கையின் திகிலூட்டும் தகவல்கள்:
முல்லைத்தீவு நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வு அறிக்கையில், உயிரிழந்தவர்கள் யார், எதனால் இறந்தார்கள், அவர்களின் வயது போன்ற விவரங்கள் துல்லியமாகப் பதிவாகியுள்ளன.
பாலினம்: மீட்கப்பட்ட 52 என்புத்தொகுதிகளில் 31 பெண்களுடையவை என்றும், 21 ஆண்களுடையவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இது, போரின்போது பெண்கள் சந்தித்த பாதிப்புகள் குறித்த முக்கியமான ஒரு சான்றாக அமைகிறது.
வயது: உயிரிழந்தவர்களின் வயது எல்லை 12 முதல் 53 வயது வரை உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் 13 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்பது மேலும் கவலைக்குரிய விடயமாகும்.
மரணத்திற்கான காரணங்கள்:
32 பேரின் உயிரிழப்புக்கு வெடிப்புச் சம்பவம் அல்லது வெடிப்புக்காயம் காரணமாகவுள்ளது. (உதாரணமாக, எறிகணைத் தாக்குதல்கள், குண்டு வெடிப்புகள்)
7 பேர் துப்பாக்கிச்சூட்டுக் காயத்தால் உயிரிழந்துள்ளனர்.
12 பேர் வெடிப்புச் சம்பவம் மற்றும் துப்பாக்கிச்சூடு ஆகிய இரண்டு காரணங்களாலும் உயிரிழந்துள்ளனர்.
முக்கிய கண்டுபிடிப்பு: பெரும்பாலான உயிரிழப்புகள் வெடிப்புக் காயங்களால் ஏற்பட்டுள்ளன என்பது பகுப்பாய்வில் தெளிவாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது, குறித்த பகுதியில் நடந்த பெரும் தாக்குதல்களின் விளைவுகளை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
அடுத்தகட்ட நடவடிக்கை:
மீட்கப்பட்ட இந்த மனித எச்சங்கள் மற்றும் தடயப் பொருட்கள் அனைத்தும் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, உயிரிழந்தவர்களின் அடையாளம் காணும் பணிகள், DNA பரிசோதனைகள் மற்றும் மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி, போர்க்காலத்தில் காணாமல் போன ஆயிரக்கணக்கானவர்களின் நிலைமை குறித்து ஒரு சிறிய ஆனால் வலிமையான நினைவூட்டலாகத் தொடர்கிறது.
யாழில் 22 வயது யுவதி ரஜனி வாய்க்குள் உள்ளாடையை அடைந்து படையினரால் கொடூரமாக க ற்ப ழிப்பு!!
யாழில் 22 வயது யுவதி ரஜனி வாய்க்குள் உள்ளாடையை அடைந்து படையினரால் கொடூரமாக க ற்ப ழிப்பு!!
1996 ஆம் ஆண்டின் காலப்பகுதியில் யாழ்ப்பாணம், சுண்டுக்குளி மகளீர் கல்லூரி மாணவி கிருசாந்தி படையினரால் கொடூரமாக வ ல்லு றவுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக, கிருசாந்தி கொலைக்கு முன்னும் பின்னும் யாழ்ப்பாணத்தில், குறிப்பாக யாழ் பகுதிகளில் நடந்த சம்பவங்களைப் பற்றி.
யாழ் குடாநாடு முழுவதும் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1996 ஆம் ஆண்டு மே மாதம் சந்திரிக்கா செருக்குடன் கூறியபடி, யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு படையினரால் நடந்த மிகக் கேவலமான, கொடூரமான செயல்பாடுகள் ஏராளமாக நடைபெற்றன.
19 வயதான கிருசாந்தி, ஜேசுநாதர் உயிர் பெற்றதுபோல், மக்களின் மனதில் ஆறாத நினைவாக உயிர்வாழ்ந்து வருகிறார். அவள் இறந்த பின் குடாநாட்டில் வாழ்ந்த ஏராளமான பெண்கள் மறைமுகமாக ஓரளவு பாதுகாக்கப்பட்டனர்.
அதற்கு முன்னர்:
படையினரின் சில செயற்பாடுகள் தொடர்பாக வெளியிடுவதற்கு முன், 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் இறுதி வாரத்திலிருந்து யாழ்ப்பாணத்தின் அப்போதைய நிலவரங்களை உங்கள் கண் முன் கொண்டு வர விரும்புகின்றோம்.
சிவில் நிர்வாகம் படையினரின் கைகளில் இருந்தது.
நீதிமன்றங்கள் முறையாக செயல்படவில்லை.
சிறைச்சாலைகள் இல்லாத நிலையில் இருந்தன.
போலீஸ் நிலையங்கள் பெயருக்கே இயங்கின.
ஊடகங்கள் தணிக்கை அமுலில் இருந்தன.
ஒவ்வொரு ஊரிலும் இருந்த இராணுவ முகாம்களின் பொறுப்பாளர்கள் "குட்டி ஜனாதிபதிகளாக"வும் நீதிபதிகளாகவும் இருந்தனர். அவர்கள் யாரையும் கைது செய்யலாம், சித்திரவதை செய்யலாம், கற்பழிக்கலாம், கொலை செய்யலாம், தண்டனை வழங்கலாம் என்ற சகல அதிகாரங்களும் இருந்தன.
உதாரணமாக, ஒரு பெண்ணை சந்தேகத்தின் பேரில் வீடு புகுந்து எப்போது வேண்டுமானாலும் கூட்டிச் செல்லலாம், எவ்வளவு காலமும் முகாமுக்குள் வைத்திருக்கலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் யாரும் கேட்க முடியாது. படை பொறுப்பதிகாரி விரும்பினால் மட்டும் கைது செய்தவரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கலாம். இவ்வாறான சூழ்நிலையே அப்பகுதியில் இருந்தது.
சிவில் நிர்வாக அலுவலகங்கள் என்ற பெயரில் படையினரால் உருவாக்கப்பட்ட அலுவலகங்கள் ஒவ்வொரு பிரதேசத்திலும் இருந்தன. அங்கு யாரிடமாவது படையினருக்கு சந்தேகம் வந்தால் அல்லது யாராவது காட்டிக் கொடுத்தால் அந்த அலுவலகத்திற்கு அழைக்கப்படுவார்கள். அங்கு இருந்து தப்பிப்பது அவர்களின் அதிசடத்தைப் பொறுத்தது.
1987 முதல் 1990 ஆம் ஆண்டுவரை, ஜே.வி.பி இயக்க உறுப்பினர்கள் என சந்தேகப்பட்டவர்களுக்கு பட்டலந்தை வதை முகாம் மற்றும் பல முகாம்களில் நடந்த சம்பவங்கள் யாழ்ப்பாணம் முழுவதும் பரவியிருந்தன.
மலக்குழியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட ரஜனி வேலாயுதபிள்ளை...
22 வயதான அழகிய யுவதி ரஜனி வேலாயுதபிள்ளை கோண்டாவில் பகுதியில் 30.09.1996 அன்று காணாமல் போனார். இவர் தாய் மற்றும் உறவுகளுடன் சேர்வதற்காக வெளிநாட்டுப் பயணமாவது முன் காணாமல் போனார்.
மாநிப்பாய் பகுதியிலுள்ள உறவுகளுக்கு தகவல் தெரிவிக்க, பல்கலைக்கழக இராமநாதன் வீதியில் கலட்டி சந்தியிலுள்ள காவலரண ஊடாக சென்றார். பிறகு வீடு திரும்பவில்லை. ஆரம்பத்தில் போக்குவரத்து சிக்கலாக நினைத்து உறவுகள் தேடவில்லை. அடுத்த நாளும் மதியம் வரை வீடு திரும்பாததால், அவரது அண்ணன் மானிப்பாய்க்கு சென்று உறவினர்களிடம் விசாரித்த போது, ரஜனி அப்பேதே சென்று விட்டதாக கூறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அண்ணன் உட்பட உறவினர்கள் ரஜனியை முகாம் முகாமாகத் தேடத் தொடங்கினர்.
போலிசாரிடம் முறையிட்டனர்; ஆனாலும் பயனில்லை.
இவ்வாறு காணாமல் போயின் இரண்டாவது நாளில், கோண்டாவில் பஸ்டிப்போவுக்கு பின் உள்ள மக்கள் வசிக்காத வீடு ஒன்றில் துர்நாற்றம் வீசுவதைக் கவனித்து சிலர் பார்த்தபோது, பாதி திறந்து மூடிய மலக்குழி ஒன்றில் பெண்ணின் சடலம் இருப்பதை கண்டுபிடித்து போலீசாருக்கு தெரிவித்தனர். சடலம் ரஜனி என அடையாளம் காணப்பட்டது.
அவள் அணிந்த சங்கிலி, தோடு, உடைகள் மற்றும் சைக்கிள் ஆகியன அடையாளமாக இருந்தன.
போலிசார் விசாரணையில் அப்பகுதியில் கடமையிலிருந்த 6 படையினர் கைது செய்யப்பட்டனர்.
ரஜனியின் வாய்க்குள் உள்ள ஆடை தொண்டை வரை அடையப்பட்டு காணப்பட்டது.
வீதியால் சென்ற ரஜனியை மறித்து காவலரணுக்குள் வைத்திருந்துவிட்டு, பிறகு ஆட்கள் இல்லாத வீட்டுக்குள் தூக்கிச் சென்று 6 இராணுவத்தினர் மாறி மாறி ரஜனியை கொடூரமாக சீரழித்து. ஆறாவது மற்றும் ஐந்தாவது இராணுவ சிப்பாய்கள் அரசு சாட்சியாக இருந்தனர்.
இரு சிப்பாய்களும் ரஜனியை சீரழிக்க முயன்ற போது அவள் இறந்துவிட்டதாக கூறினர்.
அவர்கள் சடலத்தை தூக்கி மலக்குழியில் போட்டு மறைத்தனர்.
கொலை வழக்கில் அரச சட்டத்தரணி
கொழும்பு நீதிமன்றில் பரிசீலிக்கப்பட்ட வழக்கில், அரச சட்டத்தரணியாக பிரசாந்தி என்ற சிங்கள பெண் இருந்தார். இவர் கிருசாந்தி கொலை வழக்கிலும் அரச வழக்குகளில் தொடர்புபட்ட இராணுவ அதிகாரிகளை காப்பாற்ற அக்கறை கொண்டவராக சந்தேகிக்கப்படுகிறார்.
பிரசாந்தியுடன் சேர்ந்து ரஜனியின் குடும்ப நலன்களை கவனித்தனர் என். ரவிராஜ் மற்றும் க. பூபாலசிங்கம்.
சாட்சி விளக்கம்:
போலீசார் உபாலி கூறியதாவது:
"நான் காவலரண் கோண்டாவில் மற்றும் யாழ்ப்பாணத்திற்கிடையில் பலாலி வீதியில் இருந்தேன். காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடு ஒன்றுக்குள் ரஜனியை குண்டுக் கட்டாக தூக்கிக் கொண்டு செல்லும் நிகழ்வைக் கவனித்தேன். ஒரு மணி நேரம் கழித்து 3-ம் மற்றும் 4-ம் இராணுவ அதிகாரிகள் என்னையும் அழைத்தனர். நான் மறுத்தபின் அவர்கள் மேலும் ஒரு மணி நேரம் ரஜனியுடன் இருந்தனர். வெளியே வந்தபோது அதிர்ச்சியான நிலையில் இருந்தனர். என்ன நடந்தது என்று கேட்டபோது, அவள் இறந்துவிட்டதாக கூறினர். மேலும் யாரிடமும் கூறாதீர்கள் என அச்சுறுத்தினர். நான் பயந்ததால் யாருக்கும் இதை சொல்லவில்லை."
இதேபோல் இலங்கை இராணுவம் பல பெண்களை சிரித்து கொலைசெய்து
யார் என்றே அடையாளம் தெரியாத ரிக்ரொக் இளைஞனுடன் உறவு கொண்டு கர்ப்பமான 15 வயது களுத்துறைச் சிறுமி!!
யார் என்றே அடையாளம் தெரியாத ரிக்ரொக் இளைஞனுடன் உறவு கொண்டு கர்ப்பமான 15 வயது களுத்துறைச் சிறுமி!!
ரிக்ரொக் மூலம் அடையாளம் காணப்பட்ட பெயரோ, முகவரியோ தெரியாத காதலன் மூலம், 15 வயது சிறுமி கர்ப்பமாக்கிய சம்பவம் குறித்து வடக்கு களுத்துறை பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடக்கு களுத்துறை காவல் பிரிவில் வசிக்கும் 15 வயதான சிறுமி, ஜனவரி மாதம் ரிக்ரொக் மூலம் ஒருவரை அடையாளம் கண்டுள்ளார். அந்த இளைஞன், பெப்ரவரி மாதம் தனது வீட்டிற்கு வந்து, இருவரும் காதல் உறவில் இருப்பதாகவும், அதற்கு அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்ததாகவும் தனது பெற்றோரிடம் பேசியதாகவும், அவர் தனது வீட்டில் இரவைக் கழித்ததாகவும் சிறுமி கூறியதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், கடந்த 10 ஆம் திகதி உடல்நலக்குறைவு காரணமாக தனது தந்தையுடன் ஹொரணை ஆதார மருத்துவமனைக்குச் சென்றபோது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த ரிக்ரொக் காதலனின் முழுப் பெயரோ முகவரியோ தனக்குத் தெரியாது என்று சிறுமி போலீசாரிடம் கூறியுள்ளார்.
Sunday, July 13, 2025
பொலிஸ் புலனாய்வாளர்கள் என கூறி குடும்பஸ்தரைக் கடத்திச் சென்று கொலை வெறித் தாக்குதல்!! வீடியோ
பொலிஸ் புலனாய்வாளர்கள் என கூறி குடும்பஸ்தரைக் கடத்திச் சென்று கொலை வெறித் தாக்குதல்!! வீடியோ
பொலிஸ் புலனாய்வாளர்கள் என்று தம்மை அறிமுகம் செய்ததுடன், பொலிஸ் என்று எழுதப்பட்ட மேலங்கியும் அணிந்திருந்த நால்வரால் விசாரணைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் படுகாயங்களுடன் பளை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
பலாத்காரமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற அவர்கள் தம் மீது தாக்குதல் நடத்திவிட்டு இடையில் இறக்கி விட்டுச் சென்றனர் என்று பாதிக்கப்பட்ட இளைஞர் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பளை – வண்ணான்கேணியைச் சேர்ந்த சிறீதரன் காந்தன் என்ற குடும்பஸ்தரே புலனாய்வாளர்கள் என்று கூறப்படுவோரால் கடுமையாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் அறியவருவதாவது,
பாதிக்கப்பட்ட நபரின் நண்பர் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அவர் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் விசாரணைக்குச் செல்லாமல் தலைமறைவாகிவிட்டார் என்று கூறப்படுகின்றது.
இந்தநிலையில், தலைமறைவானவர் தொடர்பில் தகவல் அளிக்க வருமாறு பாதிக்கப்பட்டவரிடம் தம்மைப் புலனாய்வாளர்கள் என்று அறிமுகம் செய்த – பொலிஸ் என்று அடையாளமிடப்பட்ட மேலங்கி அணிந்த நால்வர் அழைத்துள்ளனர். இதற்கு அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அவரை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற நால்வரும் அவரைத் தாக்கி விட்டு இடையில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர் என்று பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளார்.
பளை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நபரிடம் பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
யாழில். கள்ளப் பாஸ் செய்து மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது!!
யாழில். கள்ளப் பாஸ் செய்து மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது!!
போலி அனுமதிப்பத்திரங்களை தயாரித்து மணல் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சாவகச்சேரி பொலிஸார் , யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் புத்தூர் சந்தியை அண்மித்த பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இசைக் கருவிகள்
அதன் போது , வீதியில் பயணித்த இரண்டு டிப்பர் வாகனங்களை வழிமறித்து சோதனை செய்தனர். அதன் போது வாகனத்தினுள் ஆற்று மணல் காணப்பட்டுள்ளது. அது தொடர்பில் சாரதிகளிடம் விசாரணைகளை மேற்கொண்ட வேளை , மணல் எடுத்து செல்வதற்கு வழங்கப்பட்டதாக அனுமதி பத்திரம் ஒன்றினை சாரதிகள் பொலிசாரிடம் கையளித்துள்ளனர்.
அவற்றினை பொலிஸார் சோதனை செய்த போது , அவை போலியான அனுமதி பத்திரம் என்பதனை பொலிஸார் கண்டறிந்து , மணல் கடத்தி சென்ற குற்றச்சாட்டில் இரு சாரதிகளையும் கைது செய்தனர்.
அதேவேளை மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் வாகனத்தினையும் பறிமுதல் செய்து பொலிஸ் நிலையம் எடுத்து சென்றனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் இருவரையும் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Saturday, July 12, 2025
வவுனியாவில் பான்சி, புடவைக்கடைகளில் நடக்கும் கா மக்களியாட்டக் காட்சிகள்!! வீடியோ
வவுனியாவில் பான்சி, புடவைக்கடைகளில் நடக்கும் கா மக்களியாட்டக் காட்சிகள்!! வீடியோ
சமூககவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்…
வவுனியாவில் இளம் பெண்களை குறிவைத்து ஒரு சில பான்சி மற்றும் சில புடவையகங்களில் நடாத்தப்படும் கா மலீலைகள் அம்பலத்திற்கு வந்துள்ளது
அதிகமாக வெளிநாட்டில் கணவன் உள்ள பெண்களும் இதில் அதிகம் பாதிக்கபடுவதுடன் மத்தியகிழக்கு நாடுகளிற்க்கு செல்ல காத்திருக்கும் வறிய பெண்களும் இதில் பாதிப்படைகின்றனர்
எமது தமிழ் பெண்களோ சற்று மனதளவில் பாசத்திற்கு அடிமையானவர்கள் என்பதும் தம்மை அழகு என யார் கூறினாலும் அவர்கள் மீது ஈர்ப்பு கொள்ளக்கூடிய மனநிலை அதிகமாக கொண்டவர்கள் எமது தமிழ் பெண்கள் இதனை தமக்கு சாதகமாக வைத்து சில தமிழ் பெண்களை தம் வலையில் வீழ்த்தி தம் கா ம இச்சைகளை தீர்த்துக்கொள்வதுடன் பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் பொழுது அவர்கட்கு தெரியாமல் அதனை காணொளியாக எடுத்து அதனை கணவனுக்கு அனுப்புவேன் அல்லது இணையத்தில் பதிவிடுவேன் என மிரட்டல் விடுத்து பணம் வசூழிக்கும் கும்பல் பற்றி ரகசிய தகவல்கள் வந்துள்ளதுடன்
இவ்வாறானவர்களுக்கு எதிராக வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளும் பாதிக்கப் பட்ட ஒரு சில பெண்கள் மேற்கொண்டுள்ளனர்
தமது கடைக்கும் வரும் பெண்களை
“வாங்க டீச்சர்..” ,
”வாங்க மேடம்..” ,
”நீங்க டீச்சர் தானே உங்கள பார்க்க அப்படிதான் தெரியுது..” ,
“உங்கட கலருக்கு இது சுப்பரா இருக்கும்….”
காசு கொஞ்சம் கூடதான் ஆனா மிஸ் உங்களுக்காக இந்த விலைக்கு தாரன் சரியா மிஸ்” ,
மிஸ் பரவாயில்லை காசு இல்லாட்டி இதை இப்ப கொண்டு போங்க அடுத்த முற வரைக்க தாங்க மிஸ்..”
மிஸ் வாரகிழமை புது டிசைன்ஸ் கொஞ்சம் வருது நம்பர தந்துட்டு போங்க வந்ததும் கோல் பன்னுறன் வந்து பாருங்க உங்கட நிறத்துக்கு சுப்பரா இருக்கும் மிஸ்(ஆனால் அந்த டிசைன்ஸ் அந்த நேரம் கூட கடையில் தான் இருக்கும்)
இவ்வாறான கதைகளை கூறியதும் எம் சில பெண்கள் மதிமயக்கத்தில் நிற்பார்கள், அத்துடன் அவர்களிடம் தம் தொலைபேசி இலக்கத்தை கொடுத்துவிட்டு வீடு திரும்பியதும் ஒரு கோல் வரும், ”மிஸ் அளவா இருக்கா மிஸ் அளவு இல்லைனா கொண்டுவாங்க மிஸ் இல்லாட்டி யார்டையும் கொடுத்து விடுங்க மிஸ் நான் மாத்தி கொடுத்து விடுறன்,,, உங்களுக்காக இது கூட செய்யமாட்டமா,,,? என்று ஆரம்பிக்கும் தொலை பேசி உரையாடல்…, வீட்ட அம்மா இல்லையா இப்ப வீட்ட வரட்டா..? என்று வந்து முடியும்
பின் கணவன் குளிரிலும் வெயிலிலும் தமது உடலை மணித்தியால கணக்காக வருத்தி தன் மனைவி பிள்ளைகளுக்காக உயிரைகொடுத்து உழைத்து அனுப்பும் பணமும், இந்த கயவர்களின் பைகளை நிரப்ப செய்கிறார்கள் காம மயக்கத்தில் உள்ள எம் பெண்கள்..
தர்மலிங்கம் வீதியில் உள்ள ஆடை கடையொன்றில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்று கையும் களவுமாக பிடிபட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட பெண் அந்த கயவனின் தொந்தரவு தாங்க முடியாமல் தற்கொலை முயற்சிக்கும் சென்று, காப்பாற்றப்பட்டு உள்ளார்
இதேவேளை வவுனியா மன்னார் வீதியில்(சாந்தி கிளினிக் அண்மையில்), அத்துமீறி வீதியின் ஓரத்தில் மரத்துக்கருகில் துணி மற்றும், கதவு மறைப்பு துணி(கேர்ட்டின்ஸ்) விற்பனையில் ஈடுபடும் நபர்கள் பற்றியும் தகவல்கள் காணொளிகளும் வெளியாகியுள்ளது,, பெண்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவற்றை பதிவேற்றவில்லை என்பதுடன், தொடர்ந்தும் அவதாணிக்கபட்டு எமது கலாச்சார்த்தையும், தமிழரின் தனித்துவத்தை இழிவுபடுத்தப்படும் பட்சத்தில், அவற்றை நிச்சயம் ஊடக தர்மத்தின் அடிப்படையில் காணொளிகள் பதிவேற்றப்படும் எப்பதையும் அறியத்தருகிறோம்
மேலும் பின்தங்கிய கிராமங்களில் இருந்து வரும் சில பெண்களை இலக்கு வைத்து மத்திய கிழக்கு நாடுகளிற்கு அனுப்புவதாக கூறி காம இச்சை தீர்க்கும் இஸ்லாமிய நபர் ஒருவர் பற்றியும் பல தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன, வவுனியா தர்மலிங்கம் வீதியில் பள்ளிவாசல் நிர்வாகத்தால் அமைத்துகொடுக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள பகுதியில் உள்ள ஆடை கடை ஒன்றில் பணி புரிந்த ஒருவனே இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளான், எனவே இவர்கள் குறித்து எம் பெண்களும் அவதானமாக இருப்பதுடன், கணவன்களே நீங்களும் சற்று உங்கள் மனைவிகளை உற்று நோக்குங்கள் எனவும் கேட்டு நிற்கின்றோம்
உலகில் இஸ்லாமிய மார்க்கம் என்பது மிகவும் கட்டுப்பாடுகளை கொண்ட ஓர் மார்க்கமாகும் மது அருந்துதல் பெண்களை இச்சையுடன் உற்று நோக்குதல் போன்றன அந்த மார்க்கத்தை பொறுத்தவரையில் ஹராம் என்பார்கள். ”ஹராம்” என்பது இழுக்கு அல்லது சாத்தான் எனபொருள்படும், அனாலும் ஒருசில கயவர்கள் செய்யும் இழிவான செயற்பாடுகளால் ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகத்தையும் தவறான எண்ணத்திலேயே நோக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது
இதற்கும் ஓர் காரணம் உள்ளது உதாரணமாக இஸ்லாமிய பெண் ஒருவரை தமிழ் இளைஞர் காதலித்து அழைத்து சென்றுவிட்டார் என்றால் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகம் அவனை தேடி படையெடுக்கும்,, பள்ளி நிர்வாகமும் தலையிடும் இரகசியமாக பொலிஸாருக்கும் பள்ளி நிர்வாகாம் அழைப்பு கொடுத்து அவர்களை தேட சொல்லும்,
ஆனால் இதே தமிழ் பெண் மீது இஸ்லாமிய இளைஞன் காம இச்சை தீர்த்து அவளுக்கு மிரட்டல் விட்டாலோ,, அதனை கருத்தில் கொள்ளாது என்ன என்றாலும் பேசி தீர்ப்போம்,, என்றும் நீங்கள் பொலிஸில் முறைபாடு செய்யுங்கள் நாங்கள் தலையிட மாட்டோம் என கலன்றுவிடுவார்கள் ,, இதில் என்னப்பா நியாயம் இருக்கு?
இவ்வாறான செயற்பாடுகளும் ஒரு சிலர் விடும் தவறுகளால் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தையும் தவறாக எண்ண தோன்ற வைத்துள்ளது அனால் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் வர்த்தகர்களே….. வியாபாரமே உங்கள் வாழ்வாதாரம் நீங்கள் இவ்வாறு செயற்படும் பட்சத்தில் தமிழர்கள் தமிழர்களின் கடைகளில் மாத்திரம் வியாபாரங்களை மேற்கொள்ளுங்கள் என்றும், வெளிநாட்டில் உள்ள உண்மையாகவே தமிழ் உணர்வுள்ள, அல்லது தன் மணைவியை உண்மையாகவே நேசிக்கும் கணவன் மார்கள், தமது மனைவியரை இஸ்லாமிய கடைகளுக்கு செல்ல வேண்டாம் என கட்டளையிட்டால்,,,,,, உங்களின் நிலைமை என்னவாகும் ??என்று சிந்தியுங்கள்
எனவே சற்று சிந்தித்து செயற்படுமாறும் இவ்வாறான கயவர்களுக்கு அடைக்கலம் கொடுக்காமலும் உங்கள் மார்க்கத்தின் படி அவர்களுக்கு தணடனை பெற்றுக்கொடுக்க முன் வாருங்கள்
இதேவேளை எம் குல பெண்களே உங்கள் கணவர் உங்களுக்காக புலம்பெயர் தேசத்தில் இரத்தம் சிந்தி உழைக்கும் பணத்தையும் உங்கள் மானத்தையும் மாற்றான் கையில் கொடுக்காதீர்கள்
அவதாணிக்கபடுகிறீர்கள் நிச்சயமாக தமிழினத்தின் மானத்தை காப்பதற்காக உங்கள் புகைபடங்கள் காணொளிகள் பதிவேற்றப்படும் திருந்துங்கள்..
online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job