யார் என்றே அடையாளம் தெரியாத ரிக்ரொக் இளைஞனுடன் உறவு கொண்டு கர்ப்பமான 15 வயது களுத்துறைச் சிறுமி!!
ரிக்ரொக் மூலம் அடையாளம் காணப்பட்ட பெயரோ, முகவரியோ தெரியாத காதலன் மூலம், 15 வயது சிறுமி கர்ப்பமாக்கிய சம்பவம் குறித்து வடக்கு களுத்துறை பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடக்கு களுத்துறை காவல் பிரிவில் வசிக்கும் 15 வயதான சிறுமி, ஜனவரி மாதம் ரிக்ரொக் மூலம் ஒருவரை அடையாளம் கண்டுள்ளார். அந்த இளைஞன், பெப்ரவரி மாதம் தனது வீட்டிற்கு வந்து, இருவரும் காதல் உறவில் இருப்பதாகவும், அதற்கு அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்ததாகவும் தனது பெற்றோரிடம் பேசியதாகவும், அவர் தனது வீட்டில் இரவைக் கழித்ததாகவும் சிறுமி கூறியதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், கடந்த 10 ஆம் திகதி உடல்நலக்குறைவு காரணமாக தனது தந்தையுடன் ஹொரணை ஆதார மருத்துவமனைக்குச் சென்றபோது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த ரிக்ரொக் காதலனின் முழுப் பெயரோ முகவரியோ தனக்குத் தெரியாது என்று சிறுமி போலீசாரிடம் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment