யாழில் 22 வயது யுவதி ரஜனி வாய்க்குள் உள்ளாடையை அடைந்து படையினரால் கொடூரமாக க ற்ப ழிப்பு!!
1996 ஆம் ஆண்டின் காலப்பகுதியில் யாழ்ப்பாணம், சுண்டுக்குளி மகளீர் கல்லூரி மாணவி கிருசாந்தி படையினரால் கொடூரமாக வ ல்லு றவுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக, கிருசாந்தி கொலைக்கு முன்னும் பின்னும் யாழ்ப்பாணத்தில், குறிப்பாக யாழ் பகுதிகளில் நடந்த சம்பவங்களைப் பற்றி.
யாழ் குடாநாடு முழுவதும் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1996 ஆம் ஆண்டு மே மாதம் சந்திரிக்கா செருக்குடன் கூறியபடி, யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு படையினரால் நடந்த மிகக் கேவலமான, கொடூரமான செயல்பாடுகள் ஏராளமாக நடைபெற்றன.
19 வயதான கிருசாந்தி, ஜேசுநாதர் உயிர் பெற்றதுபோல், மக்களின் மனதில் ஆறாத நினைவாக உயிர்வாழ்ந்து வருகிறார். அவள் இறந்த பின் குடாநாட்டில் வாழ்ந்த ஏராளமான பெண்கள் மறைமுகமாக ஓரளவு பாதுகாக்கப்பட்டனர்.
அதற்கு முன்னர்:
படையினரின் சில செயற்பாடுகள் தொடர்பாக வெளியிடுவதற்கு முன், 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் இறுதி வாரத்திலிருந்து யாழ்ப்பாணத்தின் அப்போதைய நிலவரங்களை உங்கள் கண் முன் கொண்டு வர விரும்புகின்றோம்.
சிவில் நிர்வாகம் படையினரின் கைகளில் இருந்தது.
நீதிமன்றங்கள் முறையாக செயல்படவில்லை.
சிறைச்சாலைகள் இல்லாத நிலையில் இருந்தன.
போலீஸ் நிலையங்கள் பெயருக்கே இயங்கின.
ஊடகங்கள் தணிக்கை அமுலில் இருந்தன.
ஒவ்வொரு ஊரிலும் இருந்த இராணுவ முகாம்களின் பொறுப்பாளர்கள் "குட்டி ஜனாதிபதிகளாக"வும் நீதிபதிகளாகவும் இருந்தனர். அவர்கள் யாரையும் கைது செய்யலாம், சித்திரவதை செய்யலாம், கற்பழிக்கலாம், கொலை செய்யலாம், தண்டனை வழங்கலாம் என்ற சகல அதிகாரங்களும் இருந்தன.
உதாரணமாக, ஒரு பெண்ணை சந்தேகத்தின் பேரில் வீடு புகுந்து எப்போது வேண்டுமானாலும் கூட்டிச் செல்லலாம், எவ்வளவு காலமும் முகாமுக்குள் வைத்திருக்கலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் யாரும் கேட்க முடியாது. படை பொறுப்பதிகாரி விரும்பினால் மட்டும் கைது செய்தவரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கலாம். இவ்வாறான சூழ்நிலையே அப்பகுதியில் இருந்தது.
சிவில் நிர்வாக அலுவலகங்கள் என்ற பெயரில் படையினரால் உருவாக்கப்பட்ட அலுவலகங்கள் ஒவ்வொரு பிரதேசத்திலும் இருந்தன. அங்கு யாரிடமாவது படையினருக்கு சந்தேகம் வந்தால் அல்லது யாராவது காட்டிக் கொடுத்தால் அந்த அலுவலகத்திற்கு அழைக்கப்படுவார்கள். அங்கு இருந்து தப்பிப்பது அவர்களின் அதிசடத்தைப் பொறுத்தது.
1987 முதல் 1990 ஆம் ஆண்டுவரை, ஜே.வி.பி இயக்க உறுப்பினர்கள் என சந்தேகப்பட்டவர்களுக்கு பட்டலந்தை வதை முகாம் மற்றும் பல முகாம்களில் நடந்த சம்பவங்கள் யாழ்ப்பாணம் முழுவதும் பரவியிருந்தன.
மலக்குழியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட ரஜனி வேலாயுதபிள்ளை...
22 வயதான அழகிய யுவதி ரஜனி வேலாயுதபிள்ளை கோண்டாவில் பகுதியில் 30.09.1996 அன்று காணாமல் போனார். இவர் தாய் மற்றும் உறவுகளுடன் சேர்வதற்காக வெளிநாட்டுப் பயணமாவது முன் காணாமல் போனார்.
மாநிப்பாய் பகுதியிலுள்ள உறவுகளுக்கு தகவல் தெரிவிக்க, பல்கலைக்கழக இராமநாதன் வீதியில் கலட்டி சந்தியிலுள்ள காவலரண ஊடாக சென்றார். பிறகு வீடு திரும்பவில்லை. ஆரம்பத்தில் போக்குவரத்து சிக்கலாக நினைத்து உறவுகள் தேடவில்லை. அடுத்த நாளும் மதியம் வரை வீடு திரும்பாததால், அவரது அண்ணன் மானிப்பாய்க்கு சென்று உறவினர்களிடம் விசாரித்த போது, ரஜனி அப்பேதே சென்று விட்டதாக கூறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அண்ணன் உட்பட உறவினர்கள் ரஜனியை முகாம் முகாமாகத் தேடத் தொடங்கினர்.
போலிசாரிடம் முறையிட்டனர்; ஆனாலும் பயனில்லை.
இவ்வாறு காணாமல் போயின் இரண்டாவது நாளில், கோண்டாவில் பஸ்டிப்போவுக்கு பின் உள்ள மக்கள் வசிக்காத வீடு ஒன்றில் துர்நாற்றம் வீசுவதைக் கவனித்து சிலர் பார்த்தபோது, பாதி திறந்து மூடிய மலக்குழி ஒன்றில் பெண்ணின் சடலம் இருப்பதை கண்டுபிடித்து போலீசாருக்கு தெரிவித்தனர். சடலம் ரஜனி என அடையாளம் காணப்பட்டது.
அவள் அணிந்த சங்கிலி, தோடு, உடைகள் மற்றும் சைக்கிள் ஆகியன அடையாளமாக இருந்தன.
போலிசார் விசாரணையில் அப்பகுதியில் கடமையிலிருந்த 6 படையினர் கைது செய்யப்பட்டனர்.
ரஜனியின் வாய்க்குள் உள்ள ஆடை தொண்டை வரை அடையப்பட்டு காணப்பட்டது.
வீதியால் சென்ற ரஜனியை மறித்து காவலரணுக்குள் வைத்திருந்துவிட்டு, பிறகு ஆட்கள் இல்லாத வீட்டுக்குள் தூக்கிச் சென்று 6 இராணுவத்தினர் மாறி மாறி ரஜனியை கொடூரமாக சீரழித்து. ஆறாவது மற்றும் ஐந்தாவது இராணுவ சிப்பாய்கள் அரசு சாட்சியாக இருந்தனர்.
இரு சிப்பாய்களும் ரஜனியை சீரழிக்க முயன்ற போது அவள் இறந்துவிட்டதாக கூறினர்.
அவர்கள் சடலத்தை தூக்கி மலக்குழியில் போட்டு மறைத்தனர்.
கொலை வழக்கில் அரச சட்டத்தரணி
கொழும்பு நீதிமன்றில் பரிசீலிக்கப்பட்ட வழக்கில், அரச சட்டத்தரணியாக பிரசாந்தி என்ற சிங்கள பெண் இருந்தார். இவர் கிருசாந்தி கொலை வழக்கிலும் அரச வழக்குகளில் தொடர்புபட்ட இராணுவ அதிகாரிகளை காப்பாற்ற அக்கறை கொண்டவராக சந்தேகிக்கப்படுகிறார்.
பிரசாந்தியுடன் சேர்ந்து ரஜனியின் குடும்ப நலன்களை கவனித்தனர் என். ரவிராஜ் மற்றும் க. பூபாலசிங்கம்.
சாட்சி விளக்கம்:
போலீசார் உபாலி கூறியதாவது:
"நான் காவலரண் கோண்டாவில் மற்றும் யாழ்ப்பாணத்திற்கிடையில் பலாலி வீதியில் இருந்தேன். காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடு ஒன்றுக்குள் ரஜனியை குண்டுக் கட்டாக தூக்கிக் கொண்டு செல்லும் நிகழ்வைக் கவனித்தேன். ஒரு மணி நேரம் கழித்து 3-ம் மற்றும் 4-ம் இராணுவ அதிகாரிகள் என்னையும் அழைத்தனர். நான் மறுத்தபின் அவர்கள் மேலும் ஒரு மணி நேரம் ரஜனியுடன் இருந்தனர். வெளியே வந்தபோது அதிர்ச்சியான நிலையில் இருந்தனர். என்ன நடந்தது என்று கேட்டபோது, அவள் இறந்துவிட்டதாக கூறினர். மேலும் யாரிடமும் கூறாதீர்கள் என அச்சுறுத்தினர். நான் பயந்ததால் யாருக்கும் இதை சொல்லவில்லை."
இதேபோல் இலங்கை இராணுவம் பல பெண்களை சிரித்து கொலைசெய்து
0 comments:
Post a Comment