This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, July 31, 2024

யாழில் ஓந்வு பெற்ற அதிபர் நிர்வா ண நிலையில் சடலமாக மீட்பு!


யாழில் ஓந்வு பெற்ற அதிபர் நிர்வா ண நிலையில் சடலமாக மீட்பு!

தனியாக வீட்டில் வசித்து வந்த ஓய்வு நிலை அதிபர் ஒருவர் புதன்கிழமை (31) அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மயிலங்காடு வீதி புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியைச் சேர்ந்த வேலாயுதர் பாலசுப்பிரமணியம் (வயது 68) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் மனைவியை பிரிந்து கடந்த 10 ஆண்டுகள் தனியாக வசித்து வந்துள்ளார். அவரது பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். குறித்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்து விட்டு வீட்டை விட்டு சென்றவர்கள் தமது பொருட்களை எடுப்பதற்கு வீட்டுக்கு வந்தவேளை குறித்த நபர் நிர்வா ண நிலையில் வீட்டினுள் சடலமாக காணப்பட்டார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜேயபாலசிங்கம் மேற்கொண்டார். சடலமானது மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடொன்றில் கஞ்சிபானி இம்ரான் கைது! | Kanjipani Imran Arrested In Belarus


ஐரோப்பிய நாடொன்றில் கஞ்சிபானி இம்ரான் கைது!
கிளப் வசந்த என்ற  வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலையின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் பாதாள உலக தலைவர் கஞ்சிபானி இம்ரான் மற்றும் பாதாள உலக உறுப்பினர் லொக்கு பட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கஞ்சிபானி இம்ரான் ஐரோப்பிய நாடான பெலரஸிலும் (Belaurs) , லோகு பட்டி துபாயிலும் (Dubai) கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்படுகிறது.

கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலை பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிபானி இம்ரானால் திட்டமிடப்பட்டதாகவும், டுபாயைச் சேர்ந்த பாதாள உலகக் குழு உறுப்பினர் லொகு பட்டி என்பவரால் நடத்தப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது நடவடிக்கை

ஆதாரங்களின்படி, பிரான்சில் பதுங்கியிருந்த கஞ்சிபானி இம்ரான், பெலாரஸுக்குத் தப்பிச் செல்ல முயன்றதாகவும், பிரான்ஸ் எல்லையில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிபானி இம்ரான், கிளப் வசந்தவைக் கொலை செய்ய ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் செலவிட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லண்டன் மெட்ரோ தொடருந்து நிலைய தாக்குதல்: நீதிமன்றம் விடுத்துள்ள எச்சரிக்கை | London Metro Station Attack Alert


லண்டன் மெட்ரோ தொடருந்து நிலைய தாக்குதல்: நீதிமன்றம் விடுத்துள்ள எச்சரிக்கை
பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்டு சர்க்கஸ் மெட்ரோ தொடருந்து நிலையத்தில் பயணி ஒருவரை திடீரென தண்டவாளத்தில் தள்ளிய ஒருவர் மீது கொலை முயற்சி குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 2023 பெப்ரவரி 3ஆம் திகதியன்று 24 வயதான குர்திஷ் குடியேற்றவாதியான ப்ருவா ஷோர்ஷ்(Brwa Shorsh) என்ற நபர், 61 வயதான தபால்காரரான டேடீஸ் போடோசெக்கை(Tadeusz Potoczek)தொடருந்து நிலையத்தில் வைத்து தாக்கியுள்ளார்.

வழக்கு விசாரணை

இது தொடர்பில் வெளியான அதிர்ச்சியூட்டும் சிசி ரீவி காட்சிகளில், ப்ருவா ஷோர்ஷ் தண்டவாளத்திற்கு முன் நின்று கொண்டிருந்த தபால்காரர் போடோசெக்கை கடுமையாக தள்ளியதில் அவர் தண்டவாளத்தில் தடுமாறி விழுவது தெளிவாக தெரிகிறது.

இந்நிலையில் தொடருந்து வருவதற்கு முன் போடோசெக் தண்டவாளத்தில் இருந்து வெளியேறி உயிர் தப்பியுள்ளார்.

London Metro Station Attack Alert

குறித்த வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான 24 வயதான ப்ருவா ஷோர்ஷ், தன்னை அவனமானப்படுத்தும் செயலைக் கண்டித்து தாக்கியதாக தெரிவித்தார்.

ஆனால், குற்றவாளி திட்டமிட்டு கொலை செய்யும் நோக்கத்துடன் தாக்குதல் நடத்தியதாக குற்றப் பிரிவினர் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளனர்.

இறுதியில், ப்ருவா ஷோர்ஷை குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும், இந்த குற்றத்தை மிகவும் தீவிரமானது என்றும் ஷோர்ஷ்க்கு நீண்ட கால சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் நீதிபதி எச்சரித்துள்ளதோடு,  தண்டனை செப்டம்பர் 26ஆம் திகதி அன்று விதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடா செல்ல ஆயத்மான ஜீவன் வவுனிக்குளத்தில் நெரித்துக் கொலை!! பொலிசார் கூறும் பரபரப்பு தகவல்!!


கனடா செல்ல ஆயத்மான ஜீவன் வவுனிக்குளத்தில் நெரித்துக் கொலை!! பொலிசார் கூறும் பரபரப்பு தகவல்!!

வவுனிக்குளத்தில் இருந்து புதன்கிழமை (30) சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடா செல்வதற்கு தயாராக இருந்த முல்லைத்தீவு யோகபுரம் மல்லாவி பகுதியை சேர்ந்த ஆனந்தராசா ஜீவன் (வயது 27) என்ற இளைஞன் வவுனிக்குளத்தில் இருந்து நேற்றியதினம் சடலமாக மீட்கப்பட்டார்.

உயிரிழப்பதற்கு முன்னர் இளைஞன், சுமார் இருபது இலட்சம் ரூபாய் பணத்துடன் யோகபுரத்தில் திங்கட்கிழமை (29) இரவு பாண்டியன் குளம் சென்றிருந்தார்.

அதன்பின்னார் வீடு திரும்பாத இளைஞரை உறவினர்கள் அவரை தேடிய நிலையில் வவுனிக்குளம் குளத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை (30) சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்து உடலத்தை பார்வையிட்ட முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். ஏச் .மக்ரூன்ஸ், சடலத்தை உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனை இடம்பெற்றது. உடற்கூற்று பரிசோதனையின் முடிவில் இளைஞன் கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நட்டாங்கண்டல் பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணையைமுன்னெடுத்து வருகின்றனர்.

மட்டக்களப்பில் துப்பாக்கிகளுடன் இஸ்லாமிய மதகுரு ஒருவர் கைது | An Islamic Cleric Arrested With Guns In Batticaloa


மட்டக்களப்பில் துப்பாக்கிகளுடன் இஸ்லாமிய மதகுரு ஒருவர் கைது
மட்டக்களப்பு - மாஞ்சோலை பிரதேசத்தில் இஸ்லாமிய மதகுரு  ஒருவர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற போது விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலன்னறுவை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, அரலகங்வில விசேட அதிரடிப்படையினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது நடவடிக்கை 

ஓட்டமாவடி, மாஞ்சோலை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய இஸ்லாமிய மதகுரு ஒருவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, சந்தேகநபரின் மோட்டார் சைக்கிளில் இருந்து இரண்டு T.56 துப்பாக்கிகள், அறுபது தோட்டாக்கள், இரண்டு மகசீன்கள் மற்றும் ஒரு பைனாகுலர் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  

மேலும், கைது செய்யப்பட்ட  சந்தேகநபரை மன்னம்பிட்டி விசேட அதிரடிப்படை முகாமிற்கு கொண்டு சென்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இவரை கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tuesday, July 30, 2024

அருச்சுனா என்ற இந்தப் பன்னாடையை தேவையில்லாமல் தலையில் துாக்கி வைச்சிட்டமோ? அடேய் சாவகச்சேரி டொக்டர்மாரே!!


அருச்சுனா என்ற இந்தப் பன்னாடையை தேவையில்லாமல் தலையில் துாக்கி வைச்சிட்டமோ? அடேய் சாவகச்சேரி டொக்டர்மாரே!!

அருச்சுனா என்ற இந்தப் பன்னாடை வைத்தியரை ஊடகங்கள் தேவையில்லாமல் தலையில் துாக்கி வைத்துக் கொண்டாடியதன் விளைவு இன்னும் சில மாதங்களில் ஒவ்வொரு வீட்டிலும் எதிரொலிக்கும்… அப்பன், அம்மாவுக்கு முன்பாகவே குடிச்சு கூத்தடிக்கும் நிலை எதிர்காலச்சந்ததிகளுக்கு ஏற்படும்….. இந்த விசர் முத்திய அருச்சுனா என்ற வெங்காயத்தை தலையில் துாக்கி வைத்துக் கொண்டாடியதற்கு காரணமே சாவகச்சேரி வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில்  செயற்பட்ட சுயநல வைத்தியர்களேதான்….

கட்டின மனைவியுடனும் கள்ளக்காதலிகளுடனும் பலரும் படுத்தெழும்புவது வழமை…. பெரும்பாலான ஆண்கள் அவ்வாறு செய்வதும் உண்மை. ஆனால் குறித்த ஆண்கள் ஒன்லைனில் மனைவியுடன் படுத்தெழும்புவதையோ அல்லது கள்ளக்காதலிகளுடன் படுத்தெழும்புவதையோ காட்டுவதை விரும்பமாட்டார்கள். வெளியில் சொல்லவே வெக்கப்படுவார்கள். காசு சம்பாதிப்பதற்காக சிலர் தவறான இணையத்தளங்களில் தனது மனைவியுடன் படுத்தெழும்புவதையும் வீடியோவாக அனுப்பி இவ்வாறு செய்வார்கள். கிளுகிளுப்பான திரைப்படங்களில் கூட சாராயம் குடிப்பது, புகைப்பிடிப்பது தொடர்பான காட்சிகள் வந்தால் அவற்றிற்கான எச்சரிக்கை அறிவுறுத்தல் அந்த திரைப்பட திரையில் கீழ் தற்போது வருகின்றது. ஆனால் இந்த வெங்காய அருச்சுனா செய்யும் திருவிளையாடல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது.

சில நேரம் அருச்சுனா என்ற இந்த வெங்காயம் தன்னோடு படுத்தெழும்பும் யுவதிகளையும் ஒன்லைனில் காட்டும் நிலை ஏற்படலாம்… அதற்கும் ஆயிரக்கணக்கான லைக்குகள் பறக்கும். ஏற்கனவே சாராய போதையில் திரியும் இந்த பன்னாடைக்கு அந்த லைக் போதையில் எதையும் அலம்பத் தொடங்கும்….

சாவகச்சேரியில் வைத்தியம் பார்த்த டொக்டர்மார் ஒழுங்காக வேலை செய்து அதிகாரிகள் ஒழுங்காக செயற்பட்டிருந்தால் இந்தப் பன்னாடையை ஊடகங்கள் துாக்கி வைத்திருக்க வேண்டிய அவசியம் வந்திராது….இப்போ ஊரில இருக்கிற அப்பாவிகளான, நல்லவர்களான டொக்டர்மாரையும் கேவலப்படுத்தி சனத்தையும் பேயன் விசரன் ஆக்கிறான் இந்த அருச்சுனா என்ற பைத்திய வைத்தியன்…..

சாவகச்சேரியில பணியாற்றும் வைத்தியர்கள் தங்களது சுயநலனுக்காக இந்த பைத்தியக்காரனை எதிர்த்து அவசரசிகிச்சைகளை எல்லாம் நிறுத்தி வைத்தியசாலையை முடக்கி கண்ட பலன் என்ன? கடைசியில் இவனை நம்பி புலம்பெயர் அப்பாவிகளும் இங்குள்ள அப்பாவிகளும் குடிகாரக்கூட்டங்களும் இவனை தங்களது கடவுள் என்ற நிலைக்கு கொண்டு வந்தததுதான் மிச்சம்….

அடேய் சாவகச்சேரி டொக்டர்மாரே இந்தப் பாவம் உங்களைச் சும்மாவிடாதுடா……

மன்னாரில் குழந்தை பிரசவித்த பட்டதாரியான இளம் தாய் மரணம்!! வைத்தியர்களின் தவறா?? நடந்தது என்ன?


மன்னாரில் குழந்தை பிரசவித்த பட்டதாரியான இளம் தாய் மரணம்!! வைத்தியர்களின் தவறா?? நடந்தது என்ன?

மன்னார், மதவாச்சி பிரதான வீதி, தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான இளம் தாய் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்றுள்ளது.

மரணமடைந்த இளம் தாய் பட்டப்படிப்பை நிறைவு செய்த மரியராஜ் சிந்துஜா (27) என தெரிய வந்துள்ளது.

இறந்த இளம் தாய்க்கு முதலாவது ஆண் குழந்தை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 09ம் திகதி பிறந்துள்ளது. 11ம் திகதி மருத்துவமனையில் இருந்து தாய் சேய் நலமாக வெளியேறியுள்ளார்கள்.

7 நாட்களின் பின்னர் முருங்கன் வைத்தியசாலையில் தையல் வெட்டுமாறு கூறியதையடுத்து கடந்த 16ம் திகதி முருங்கன் வைத்தியசாலையில் தையல் வெட்டப்பட்டதாக இறந்த பெண்ணின் தாயார் தெரிவித்தார்.

தனது மகளை அவரே மருத்துவமனையில் வைத்து பராமரித்து வந்துள்ளார்.

அதன் பின்னர் கடந்த சனிக்கிழமை (27) தாய்க்கு குருதிப் பெருக்கு ஏற்பட்டதை அடுத்து அன்று இரவு நோயாளர் காவு வண்டி மூலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று ஓ.பி.டி பதிவுகளின் பின்னர் உரிய நோயாளர் விடுதியில் அனுமதிக்கப்பட்டார்.

குருதி ஓட்டம் கட்டுப்படாமல் தொர்ச்சியாக கசிந்து கொண்டே இருந்ததன் காரணத்தினால் விடிய காலை ஆறு முதல் ஏழு மணி அளவில் சுய நினைவை அவர் இழந்ததாக தாயார் தெரிவித்தார்.

அதன்பின் அவசர சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்ட போது நண்பகல் 11 மணியின் பின்னர் இளம் தாய் மரணித்து விட்டதாக செய்தி எமக்கு கிடைத்தது.

குருதிப் பெருக்கு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அன்று இரவு வைத்தியர்கள் பார்வையிட்டு இருந்தால் தனது மகளை காப்பாற்றியிருக்கலாம் என இந்த பெண்ணின் தாய் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இறந்த இளம் தாயான சிந்துஜா சிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த போதும் பட்டமளிப்பு நிகழ்வு இன்னும் நடைபெறவில்லை. குறித்த பட்டமளிப்பு நிகழ்வு இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறு சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த இளம் தாய் இனி உயிருடன் மீளப் போவதில்லை. ஆனால் இறுதி நேரத்தில் கூடவே இருந்து பராமரித்து வந்தவரும் இறந்த பெண்ணின் தாயுமானவர் தெரிவித்த குற்றச்சாட்டில் ஏதேனும் உண்மை இருக்கிறதா? என்று நீதியான விசாரணை செய்து உண்மைத் தன்மையை வெளிப்படுத்த சுகாதாரத் துறையினர் முன்வர வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபாவை வினவிய போது,,,

குறித்த பெண்ணின் மரணம் தொடர்பாக விசேட சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனை நேற்று (29) முன்னெடுக்கப்பட்டது.

அதிக குருதிப் பெருக்கு காரணமாக மரணம் நிகழ்ந்துள்ளதாகவும், மேலதிக பரிசோதனைகளுக்காக உடற்பாகங்கள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

குறித்த பரிசோதனை அறிக்கை வெளிவந்தால் மரணத்திற்கான காரணத்தை முழுமையாக அறிய முடியும்.

எப்படி இருந்தாலும் வைத்தியசாலை தரப்பினர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Monday, July 29, 2024

“அம்மா, நான் மீன் கொண்டு வருகிறேன்” என கூறிச்சென்ற மாணவனுக்கு ஏற்பட்ட துயரம்


“அம்மா, நான் மீன் கொண்டு வருகிறேன்” என கூறிச்சென்ற மாணவனுக்கு ஏற்பட்ட துயரம்

அவிசாவளை, நாச்சிமலை நீரோடையின் கொனவல பகுதியில் நீரில் மூழ்கி 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் நேற்று (28) மாலை உயிரிழந்துள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் உயிரிழந்தவர் கஹதுடுவ, பொல்கஸ்ஹோவிட்ட பலகம பிரதேசத்தை சேர்ந்த, ஹொரண வித்யாரத்ன வித்தியாலயத்தில் 12 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவன் பாடசாலையின் வலைப்பந்தாட்ட அணி வீரர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.நேற்று மதியம் நண்பர் ஒருவர் வீட்டுக்கு வந்த நிலையில், ‘அம்மா, நான் மீன் கொண்டு வருகிறேன்’ என்று கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றதாக தாய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்

10 பேர் கொண்ட குழு ஒன்று கெப் வண்டியில் குளிப்பதற்குச் சென்றதாகவும், உயிரிழந்த பாடசாலை மாணவனும் மற்றுமொருவரும் திடீரென நீரில் குதித்து இருவரும் நீரில் மூழ்கி காணாமல் போனதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.அப்போது, ​​அங்கிருந்தவர்கள் உதவி கோரி கூச்சலிட்டதால், கிராம மக்கள் வந்து நீரில் குதித்து, ஒருவரை உடனடியாக கரைக்கு கொண்டு வந்த நிலையில், மற்றைய மாணவன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக இரத்தினபுரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

யாழில் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக கைதான பெண்! எதற்காக?


யாழில் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக கைதான பெண்! எதற்காக?

யாழ்ப்பாணம் (Jaffna) சிவபூதராயர் கோவிலடி, சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவர் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக கசிப்பு மற்றும் கோடாவுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (28) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, 80 ஆயிரம் மில்லிலீட்டர் கோடா மற்றும் 2250 மில்லிலீட்டர் கசிப்புடன் குறித்த பெண் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சியில் சிறுமியை சிதைத்தவனுக்கு 13 வருட சிறை!!


கிளிநொச்சியில் சிறுமியை சிதைத்தவனுக்கு 13 வருட சிறை!!

கிளிநொச்சி பகுதியில் பதின்ம வயது சிறுமியை பாலி யல் துஷ்பி ரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபருக்கு 13 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் சிறுமியை பாலி யல் துஷ்பி ரயோகத்துக்கு உட்படுத்திய நிலையில் தலைமறைவாகியிருந்தார். இதனைஉஅடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டு பொலிஸாரால் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

அதோடு சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த வியாழக்கிழமை (25) கைது செய்யப்பட்டு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து தண்டனை விதிக்கப்பட்டது.

Sunday, July 28, 2024

கனடாவில் வேலைவாய்ப்பு: 450 பேருக்கு அரிய சந்தர்ப்பம் | Employment In A Scientific Laboratory In Canada


கனடாவில் வேலைவாய்ப்பு: 450 பேருக்கு அரிய சந்தர்ப்பம்
Canada Ottawa

450 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் கனடாவின் (Canada) ஒட்டாவாவில் (Ottawa) புதிய விஞ்ஞான ஆய்வு கூடம் உருவாக்கப்பட உள்ளது.

குறித்த ஆய்வு கூடமானது, சுமார் ஒரு பில்லியன் டொலர் முதலீட்டில் ஒட்டாவா தேசிய ஆய்வு பேரவையால் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொருளாதார அபிவிருத்தி

இந்த நிலையில், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை சமூக அபிவிருத்தி அமைச்சர் ஜின்னா சொட்ஸ் அறிவித்துள்ளார்.

Employment In A Scientific Laboratory In Canada

இதன் படி, இந்த ஆய்வு கூடமானது, கார்பன் வெளியீட்டை குறைத்து, பொருளாதார அபிவிருத்தி திட்டங்களுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிர்மாண பணிகள்

மேலும், இதன் கட்டட நிர்மாணத்திற்கான ஒப்பந்தங்கள் ஏற்கனவே செய்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்த கட்டடத்தின் வடிவமைப்பு நடவடிக்கைகள் இந்த ஆண்டு ஆரம்பமாகும் எனவும், நிர்மாண பணிகள் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நால்வர் கைது | Chines Girl Arrested Katunayaka Airport


கட்டுநாயக்க விமான நிலையத்தில் நால்வர் கைது!
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளுடன் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் நுழைய முற்பட்ட வெளிநாட்டு பெண் உட்பட நான்கு பயணிகள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில், 29,200 சிகரெட்டுகள் அடங்கிய 146 சிகரெட் பெட்டிகளை மறைத்து வைத்திருந்த 37 வயதுடைய சீனப்பெண் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நான்கு பேர் கைது

மேலும், கொழும்பில் கிளப் ஒன்றில் பணிபுரியும் பெண் ஒருவரும், பாணந்துறை பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய நபரும், மத்துகம பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய சாரதி ஒருவரும் சட்டவிரோதமான முறையில் 39,000 சிகரெட்டுகள் அடங்கிய 195 அட்டைப்பெட்டி சிகரெட்டுகளை தமது பயணப் பொதிகளில் மறைத்து வைத்திருந்த போது சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Saturday, July 27, 2024

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு European Union Sri Lanka World


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு
European Union Sri Lanka World

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதற்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், ஐரோப்பிய ஒன்றியம் (EU) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடித்துள்ளது.

இதற்கு கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சு, பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு மற்றும் அதன் தாக்கங்களை ஒப்புக் கொண்டு இன்று (27) அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 

நிதி மற்றும் பிற நிதி சொத்துக்கள்

இந்நிலையில், பட்டியலிடப்பட்ட பிற நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களுடன் விடுதலைப் புலிகளும் தொடர்ந்து நிதித் தடைகளை எதிர்கொள்வதையே இந்த புதுப்பித்தல் அர்த்தப்படுத்துகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு | Ban On The Ltte Continues

இந்த தடைகளில் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் உள்ள நிதி மற்றும் பிற நிதி சொத்துக்கள் அல்லது பொருளாதார ஆதாரங்கள் முடக்கம் ஆகியவை உள்ளடங்கும்.

மேலும், தடைசெய்யப்பட்ட நிறுவனங்களுக்கு நிதி மற்றும் பொருளாதார ஆதாரங்களை வழங்குவதற்கும் ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.

யாழில் காசு மோசடியில் சிறை சென்ற கணவன் பெண் சட்டத்தரணியுடன் சல்லாபம்!! மனைவியின் பரபரப்பு வாக்குமூலம்!!


யாழில் காசு மோசடி வழக்கில் சிறைக்குச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் தற்போது பெண் சட்டத்தரணி ஒருவரின் அந்தரங்க நாயகனாக இருப்பதாக கூறி குடும்பஸ்தரின் மனைவி பெண் சட்டத்தரணியுடன் சண்டையிட்டுள்ளார். அத்துடன் யாழில் உள்ள நீதிமன்றம் ஒன்றின் முன் தான் தீ மூட்டி தற்கொலை செய்யப்போவதாகவும் கத்திக் குளறியுள்ளார். 7 மாத குழந்தைக்கு தந்தையான 29 வயதான இளம் குடும்பஸ்தரின் மனைவியே இவ்வாறு கண்ணகி வேசம் இட்டு தற்கொலைக்கு ஆயத்தமாகியுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக அறிந்து விசாரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவருக்கு குறித்த குடும்பஸ்தரின் மனைவி தெரியப்படுத்திய தகவல்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

எனது கணவர் 2021ம் ஆண்டு தன்னைக் காதலித்து திருமணம் செய்தார். திருமணம் செய்யும் போது அவரிடம் நெல் அறுவடை செய்யும் இயந்திரம் உட்பட, கல் உடைக்கும் இயந்திரம் உட்பட பல கனரக வாகனங்கள் சொந்தமாக இருந்தன. அத்துடன் கார் ஒன்றையும் வைத்திருந்தார். கோயில் செயலாளராகவும் அவர் இருந்தார். கோயிலுக்கு சென்று வந்த போதே அவர் என்னை காதலித்தார். பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம். திருமணத்தின் பின்னரே அவர் வைத்திருந்த வாகனங்கள் எல்லாம் லீசிங் வாகனங்கள் என தெரியவந்தது. கொரோன மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கணவரின் வியாபாரம் படுத்துவிட்டது. அத்துடன் வட்டியும் அதிகரித்தது. அத்துடன் அவர் சிலரிடம் காசோலை கொடுத்து 40 லட்சத்திற்கு மேல் வட்டிக்கும் பணம் வாங்கியுள்ளது தெரியவந்தது. வட்டி கட்ட முடியாது எனது நகைகள் மற்றும் தாலிக்கொடியை அடகு வைத்தே வட்டியும் கொஞ்ச முதலும் கட்டினார். இருந்தாலும் கடன் முடியவில்லை. அந் நிலையில் வட்டிக்கு கொடுத்த ஒருவன் பொலிசாரிடம் முறையிட்டு நீதிமன்ற வழக்காகியது. பொலிஸ் விசாரணைகளின் போதே பெண் சட்டத்தரணி ஒருவருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. நீதிமன்றில் குறித்த பெண் சட்டத்தரணியே அவருக்கு சார்பாக வாதாடியிருந்தாள். இருப்பினும் கணவன் காசு கட்ட முடியாது 2 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அதன் பின்னர் எனக்கு தந்தை சீதனமாகத் தந்த காணி ஒன்றை விற்று எனது கணவனை சிறையில் இருந்து வெளியே எடுத்தேன்.

கணவன் சிறையில் இருந்து வந்த பின்னர் அவரது நடத்தையில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டது. அவர் போதைப்பொருள் பாவிக்கும் கும்பலுடன் தொடர்பில் இருக்கின்றார் என சந்தேகிக்கின்றேன். சில வேளைகளில் இரவில் மூர்க்கமாக செயற்படுவார். 7 மாதக் குழந்தையின் தாய் என்பதைக் கருதாது கடுமையாக இயற்கைக்கு மாறாக செயற்படுவார். அத்துடன் அவரை வாதாடி வெளியே எடுத்த குறித்த பெண் சட்டத்தரணியின் வீட்டுக்கு தொடர்ச்சியாக செல்லத் தொடங்கினார். கேஸ் விசயமாக செல்வதாகவே நான் நினைத்தேன். குறித்த பெண் சட்டத்தரணி தனது கணவனை பிரிந்து வாழ்பவர். எனது கணவனிலும் விட பல வயது கூடியவர். பெண் சட்டத்தரணி தொலைபேசியில் கோல் எடுத்தவுடனேயே கணவர் எந்த வேலையில் இருந்தாலும் விட்டுவிட்டு அவளது இடத்திற்குச் சென்றுவிடுவார். அவர் இரவில் நீண்ட நேரத்தின் பின் வருவார். ஒரு தடவை அவர் இரவு வந்த போது அவரது நெஞ்சுப் பகுதியில் பற்களால் ஏற்பட்ட கண்டல் காயம் ஒன்றைக் கண்டேன். இது தொடர்பாக நான் கேள்வி கேட்ட போது குழந்தை ஒன்று கடித்துவிட்டது என சமாளித்தார். அதன் பின்னர் தனது தொலைபேசியில் குறித்த பெண் சட்டத்தரணியின் இலக்கத்தை எனக்கு சந்தேகம் வராதவாறு ஒரு ஆணின் பெயரில் குறித்து வைத்திருந்தார்.அத்துடன் தொலைபேசியின் பாஸ்வேட்டையும் நான் ஆராய்ந்து பார்க்காதவாறு மாற்றிவிட்டார். அதற்கும் சண்டையிட்டு தோல்வியடைந்தேன்.

குறித்த பெண் சட்டத்தரணி தனது வீட்டிலும் இன்னொரு தனியான வீட்டிலும் பெயர்ப்பலகையிட்டு தொழில் செய்கின்றார். அண்மையிலேயே அந்த வீட்டில் பெயர்ப்பலகையிட்டுள்ளார். எனது உறவினர் ஒருவர் காணி பிணக்கு ஒன்றிற்காக சட்டத்தரணியின் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு எனது கணவனின் மோட்டார் சைக்கிள் நின்றதை கண்டுள்ளார். ஆனால் அவர் அங்கு கணவரைக் காணவில்லை. இது தொடர்பாக அவர் எனக்கு தெரியப்படுத்தி கணவனின் கேஸ் இன்னும் முடியவில்லையா? என கேட்ட போதே நான் உசாரானேன்.அவரிடம் சட்டத்தரணியின் அலுவலக இடத்தை கேட்டு அறிந்தேன். கணவன் ஒரு நாள் மாலை 6 மணியளவில் வீட்டில் இருந்து வெளியேறிய பின் நான் குறித்த சட்டத்தரணியின் அலுவலக வீட்டுக்கு திடீரென சென்றேன். அங்கு கணவனின் மோட்டார் சைக்கிள் மாமரம் ஒன்றின் பின்னால் மறைக்கப்பட்டபடி நின்றிருந்தது. வீட்டு கேற் மூடப்பட்டிருந்தது. குறித்த வீட்டின் சட்டத்தரணிக்கான அலுவலக அறையும் மூடப்பட்டிருந்தது. கேற்றை ஒருவாறு திறந்து அறை ஜன்னலை திறந்து பார்த்தேன். அங்கு யாரையும் காணவில்லை. அதன் பின்னர் வீட்டின் பின்பக்கம் சென்று சாத்தியிருந்த வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்றேன். சட்டத்தரணி செற்றியில் இருந்து ரீவி பார்த்துக் கொண்டிருக்க எனது வீட்டில் இருந்து ரிப்ரொப்பாக வெளியேறிய கணவன் அங்கு சாரமும் உள் பெனியனுடனும் சட்டத்தரியின் அருகே இருந்தார். நான் அங்கு சண்டையிட்டேன். எனது தலை முடியைப் பிடித்து என்னை வெளியே தள்ளினாள் சட்டத்தரணி. அத்துடன் கணவனையும் வெளியே போகச் சொன்னாள். கணவன் அதற்கிடையில் மீண்டும் ரிப்ரொப்பாக வெளிக்கிட்டு கத்திக் கொண்டிருந்த என்னை இழுத்துக் கொண்டு வெளியே வந்தார்.

அயலவர்கள் எட்டிப் பார்க்கத் தொடங்கினார்கள். அப்போது குறித்த சட்டத்தரணி உடனடியாக கதையை திசை திருப்பினாள். உங்களின் குடும்ப விசயத்தை இங்கு வந்து சொல்லி சண்டை பிடிக்க வேண்டாம். உனது கணவனை பிடிக்காது விட்டால் நீ விவாகரத்துக்கு விண்ணப்பம் செய் நான் வாதாடி கணவனை விவாகரத்து செய்ய வைக்கின்றேன் என கூறி எனக்கும் கணவருக்குமான குடும்ப பிரச்சனை என அங்கு நின்றவர்களை ஏமாற்ற நினைத்தாள். நான் கத்தியபடி உண்மையை சொன்ன போது கணவரே எனக்கு மனநிலை சரியில்லை என அங்கிருந்தவர்களுக்கு கூறத் தொடங்கினார்….

அதன் பின்னர் தற்போது நான் உண்மையில் மனநிலை சரியில்லாத நிலையில் இருக்கின்றேன். தன்னை சட்டத்தரணி அச்சுறுத்தி வைத்திருப்பதாக கணவர் கூறுகின்றார். சட்டத்தரணி சொல்வது போல் நடக்காவிட்டால் மீண்டும் ஜெயிலுக்கு போகவேண்டி வரும் என அவரை சட்டத்தரணி அச்சுறுத்துவதாகவும் அதனாலேயே சட்டத்தரணி சொல்வதற்கு எல்லாம் உடன்படுவதாகவும் கணவன் கூறுகின்றார். தனக்கான வழக்குச் செலவு 3 லட்சம் சட்டத்தரணிக்கு கொடுக்க வேண்டும் எனவும் அதைவிட காசோலை மோசடிக்கான பணத்தில் சட்டத்தரணியும் பண உதவி செய்துள்ளதாகவும் கூறுகின்றார். இவற்றை எல்லாம் நான் பொலிசாருக்கு கூறி முறையிட்ட போது பொலிசார் குறித்த சட்டத்தரணியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பின்னர் என்னையே மீண்டும் அச்சுறுத்தி திருப்பி அனுப்புகின்றார்கள். சட்டத்தரிணியுடன் கணவன் தொடர்பு கொள்வது அவரது தனிப்பட்ட விருப்பம். அதற்கெல்லாம் நாங்கள் முறைப்பாடு பதிவு செய்ய இயலாது என கூறுகின்றார்கள். அத்துடன் இனிமேல் அத்துமீறி சட்டத்தரணியின் வீட்டுக்குள் புகுந்தால் உன்னைக் கைது செய்து சிறைக்குள் அடைப்போம் என பொலிசார் அச்சுறுத்துகின்றார்கள்.

எனது நண்பியின் அறிவுறுத்தலுக்கு அமைய இன்னொரு ஆண் சட்டத்தரணியிடம் சென்று எனது நிலையைச் சொன்ன போது குறித்த சட்டத்தரணி அவற்றை எல்லாம் கேட்டு விட்டு ” அந்த சட்டத்தரணி அப்படித்தான். இது தொடர்பாக சட்டநடவடிக்கை எடுக்க இயலாது. நீரும் அழகாக இருக்கிறீர். உமது கணவர் தப்புச் செய்தால் நீரும் தப்பு செய்யலாம்.. இவை எல்லாம் இப்ப சாதாரணமாக நடக்குது..” என்றவாறு மிகக் கேவலமாக எனக்கு கூறினார். அத்துடன் எனது தொலைபேசி இலக்கத்தை வாங்கி இரவில் பலதடவைகள் எனக்கு மெசேஜ் மற்றும் கோல் எடுத்தார். நான் பதிலளிக்கவில்லை. அவரது இலக்கத்தை தடை செய்துவிட்டேன்… எனக்கு இவற்றை எல்லாம் எண்ணிப் பார்த்த போது பெரும் அதிர்ச்சியாக இருக்கின்றது.

ஒரு மாதத்துக்கு மேலாக கணவன் என்னைத் தொடுவதற்கு நான் அனுமதிப்பதில்லை. அவரிடம் தற்போது பணம் புரள்கின்றது தெரிகிறது. ஏனோதானோ என வீட்டுக்கு வந்து செல்கின்றார். குழந்தையை கண்டு கொள்வதுமில்லை. சட்டத்தரணியுடனான தொடர்புகளை முற்றாக முறிக்குமாறு எச்சரித்துள்ளேன். அவ்வாறு செய்யாதுவிடின் சட்டத்தரணி வாதாடும் நீதிமன்றத்தின் முன் தீக்குளிப்பேன். அதற்கு முன் எனது தற்கொலைக்கு காரணம் யார் என்பதை அங்கு தெரிவித்து விட்டே தீக்குளிப்பேன். இவ்வாறு குறித்த பட்டதாரிப் பெண் ஊடகவியலாளருக்கு வீடியோவாகவே வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

குறித்த பெண் சட்டத்தரணியை ஊடகவியலாளர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பட்டதாரிப் பெண்ணின் முறைப்பாடு தொடர்பாக கேட்ட போது சட்டத்தரணி ஊடகவியலாளரை அச்சுறுத்தினார். சிறைக்குள் ஊடகவியலாளரை அடைப்பேன் என பயமுறுத்தியுள்ளார். அத்துடன் சட்டத்தரணியுடன் தொடர்பு கொண்டு சில மணி நேரங்களில் குறித்த ஒரு பொலிஸ் நிலையத்திலிருந்து ஊடகவியலாளருக்கு அந்த பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அங்கு சென்ற போது தனிப்பட்ட பிரச்சனைகளை ஊடகங்கங்களில் பதிவு செய்தால் கைது செய்வோம் என அச்சுறுத்தி அனுப்பியுள்ளார்கள் பொலிசார்.

Friday, July 26, 2024

வங்கிகளில் தங்க நகை அடகு வைத்திருக்கும் நபர்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை | Sri Lankans Who Have Pawned Gold Jewelery In Banks


வங்கிகளில் தங்க  நகை அடகு வைத்திருக்கும் நபர்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Sri Lanka Government Gold

வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, 2024 ஜூன் மாதம் 30 திகதி அல்லது அதற்கு முன்னர் உரிமம் பெற்ற வங்கிகளில் பெற்ற முற்பணத்துக்கு வருடாந்தம் 10% உச்ச எல்லைக்கு உட்பட்ட சலுகை வட்டியை திறைசேரியிலிருந்து வழங்குவதற்கு பொருத்தமான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு இவ்வாறு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு நிவாரணம் 

நாட்டில் சமீபகாலமாக நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியானது பொருளாதாரத்தின் அனைத்து துறைகளையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதித்துள்ளது.

Sri Lankans Who Have Pawned Gold Jewelery In Banks

இதன் விளைவாக தங்க நகைகளை அடமானம் வைக்கும் செயற்பாடு பொதுமக்களிடத்தில்  வேகமாக அதிகரித்துள்ளது.

2019 ஆண்டில் ரூபா 210 பில்லியன் அளவிலிருந்த அடகு முற்பண நிலுவைத் தொகை 2024 ஆண்டு மார்ச் மாதமளவில் 571 பில்லியன் வரை அதிகரித்து 172 சதவீத அதிகரிப்பை காட்டியுள்ளது.

குறித்த நிலையை கருத்திலெடுத்து உரிமம் பெற்ற வங்கிகள் மூலம் அடகு முற்பணம் பெற்றுள்ள குறைந்த வருமானம் பெறும் நபர்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டிய தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, வாடிக்கையாளர்கள் தனிநபர் அடிப்படையில் 2024 ஜூன் மாதம் 30 திகதி அல்லது அதற்கு முன்னர் உரிமம் பெற்ற வங்கிகளில் பெற்ற முற்பணத்துக்கு வருடாந்தம் 10% உச்ச எல்லைக்கு உட்பட்ட சலுகை வட்டியை திறைசேரியிலிருந்து வழங்குவதற்கு பொருத்தமான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு   அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

காதலியை காண யாழ்ப்பாணம் சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி | A Gang Abducted Youth Tortured Him With A Sword


காதலியை காண யாழ்ப்பாணம் சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் காதலியை காண சென்ற இளைஞன் ஒருவனை கடத்திச் சென்ற கும்பல் வாளால் வெட்டி சித்திரவதை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் இன்று(26) மாலை இடம்பெற்றுள்ளது.

தாக்குதல் சம்பவம்

கிளிநொச்சியில் இருந்து தனது காதலியை பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதிக்கு குறித்த  இளைஞர் சென்றுள்ளார்.

இதன்போது, அங்கு கூடிய அடையாளம் தெரியாத நபர்கள் இளைஞனை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்று தலை முடியை வெட்டி வாளால் உடலில் வெட்டி சித்திரவதை செய்துள்ளனர்.

A Gang Abducted Youth Tortured Him With A Sword

இதன்பின்னர், அந்த இளைஞனை உடுவில் பகுதியிலுள்ள வீதியொன்றில் போட்டுவிட்டு கும்பல் தப்பிச் சென்றுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சுழல் ஏற்பட்டுள்ளது.

பூநகரி கிராஞ்சியை சேர்ந்த பிரதீபன் வினுஜன் என்ற இளைஞரே சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளதுடன் பொலிஸாருக்கு நடந்தவற்றை தெரிவித்து விட்டு மயக்கமடைந்துள்ளார்.

இதையடுத்து, படுகாயமடைந்துள்ள இளைஞனை நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வாள் வெட்டு சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் நொண்டி நொண்டி வீதியில் சென்றவனை நம்பி வாள் முனையில் மோட்டார் சைக்கிளை பறி கொடுத்த அப்பாவி!!


யாழில் நொண்டி நொண்டி வீதியில் சென்றவனை நம்பி வாள் முனையில் மோட்டார் சைக்கிளை பறி கொடுத்த அப்பாவி!!

 யாழ்ப்பாணத்தில் வாள் முனையில் மோட்டார் சைக்கிளில் வழிப்பறி செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோண்டாவில் வீதியில் இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை, கோண்டாவில் இந்துக் கல்லூரிக்கு முன்பாக காலை நொண்டியவாறு இளைஞன் ஒருவர் மோட்டார் சைக்கிளை வழி மறித்துள்ளார்.

அதனால் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் மோட்டார் சைக்கிளை நிறுத்திய வேளை, நொண்டிக் கொண்டிருந்த நபர் தனது உடைமையில் மறைத்து வைத்திருந்த வாளினை எடுத்து மோட்டார் சைக்கிள் ஓட்டியை வெட்ட முயன்றுள்ளார்.

அதற்கு இளைஞன் எதிர்ப்பு காண்பிக்க , வீதியின் ஓரத்தில் மறைந்திருந்த மற்றுமொரு இளைஞனும் வாளுடன் வெளியே வந்து இளைஞனை வெட்ட முயன்ற வேளை இளைஞன் அவ்விடத்தில் இருந்து தப்பியோடியுள்ளார்.

அதனை அடுத்து மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்ட தாக்குதலாளிகள் இருவரும் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞன் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழில் பெண்ணை மோதிக் கொலை செய்தவர்கள் புலனாய்வாளர்களா?? வாள்களுடன் பொலிஸ் நிலையம் முன்பே அட்டகாசம்!!


யாழில் பெண்ணை மோதிக் கொலை செய்தவர்கள் புலனாய்வாளர்களா?? வாள்களுடன் பொலிஸ் நிலையம் முன்பே அட்டகாசம்!!

மானிப்பாய் பொலிஸ் நிலையம் முன்பாக இடம்பெற்ற போராட்டத்தின் போது , மூன்று மோட்டார் சைக்கிளில் வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்த வன்முறை கும்பல் மக்களை அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
மானிப்பாய் கட்டுடை பகுதியில் , நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை ஹயஸ் ரக வாகனம் மோதி பெண்ணொருவர் உயிரிழந்துடன் , அப்பெண்ணின் மகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தினை ஏற்படுத்திய ஹயஸ் வாகன சாரதி தப்பியோடிய நிலையில் , வாகனத்தில் இருந்த இருவரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

வாகனத்தில் வந்த சாரதி உள்ளிட்ட நால்வரும் நிறை போதையில் காணப்பட்டதாகவும் , சாரதி போதையில் வாகனம் செலுத்தியே விபத்தினை ஏற்படுத்தினார். அதனால் அவரை விரைந்து கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் மானிப்பாய் பொலிஸ் நிலையம் முன்பாக இரவு கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவ்வேளை மூன்று மோட்டார் சைக்கிளில் வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் வந்த 06 பேர் கொண்ட வன்முறை கும்பல் மக்களை அச்சுறுத்தும் விதமாக செயற்பட்டனர்.

அதன்போது மக்கள் மத்தியில் இருந்த சில இளைஞர்கள் வன்முறை கும்பலை மடக்கி பிடிக்க முயன்ற போது அவர்கள் அவ்விடத்தில் இருந்து தப்பியோடியுள்ளனர்.

தப்பியோடியவர்களை இளைஞர்கள் துரத்திய வேளை ஒருவருடைய மோட்டார் சைக்கிள் பழுதடைந்து வீதியில் நின்ற நிலையில் மோட்டார் சைக்கிளுடன் அந்நபரை இளைஞர்கள் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். ஏனைய ஐவரும் தப்பியோடியுள்ளனர்.

பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நபரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, குறித்த வன்முறை கும்பல் சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள கடையொன்றின் மீது தாக்குதல் நடத்தி விட்டு, சங்கானை பகுதியில் இளைஞன் ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதலை நடத்தி விட்டே , மானிப்பாய் பொலிஸ் நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அச்சுறுத்த வந்திருந்தமை தெரிய வந்துள்ளது.

குறித்த வன்முறை கும்பலுக்கும் , விபத்தினை ஏற்படுத்திய கும்பலுக்கும் இடையில் தொடர்புகள் இருக்கலாம். பொலிஸ் நிலையம் முன்பாகவே தைரியமாக வாள்களுடன் நடமாடி அச்சுறுத்தல் விடுத்துள்ளார். எனவே தப்பியோடிய ஐவரையும் கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என மக்கள் கோரியுள்ளனர்.

இதே வேளை யாழ்ப்பாணத்தில் நடக்கும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் புலனாய்வாளர்கள் இருப்பதாக மக்கள் குற்றம் சுமத்திவருவதும் குறிப்பிடத்தக்கது.

கனடா ஐயப்பன் கோவில் தலைவரின் உத்தரவில் யாழில் நின்ற கனடாத் தமிழ்க் குடும்பம் மீது கொலை வெறித் தாக்குதல்!! பெண் கைது!!


கனடா ஐயப்பன் கோவில் தலைவரின் உத்தரவில் யாழில் நின்ற கனடாத் தமிழ்க் குடும்பம் மீது கொலை வெறித் தாக்குதல்!! பெண் கைது!!

 யாழ்ப்பாணம் அனலைதீவில் கனேடிய தமிழ் குடும்பம் மீது வன்முறை கும்பலொன்று நடாத்திய தாக்குதல் மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பான பிரதான சந்தேக நபரொருவர் ஒரு வருடத்தின் பின்னர் நேற்று கைது செய்யப்பட்டார்.

பரந்தன் பகுதியில் உள்ள பெண்ணொருவரே யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

அனலைதீவில் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 23ம் திகதி கனேடிய தமிழ் குடும்பமொன்றின் மீது வன்முறை கும்பலொன்று வாள்வெட்டு தாக்குதலை நடத்தியதுடன், பெருமளவு வெளிநாட்டு நாணயம் மற்றும் பொருட்கள், நகைகள் என்பனவும் கொள்ளையடித்துச் சென்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர்.

அதேவேளை பிரதான சந்தேக நபரை தேடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் ஒரு வருடத்திற்கு பின்னர் குறித்த சம்பவத்தை வெளிநாட்டில் உள்ள ஒருவரின் பணிப்பில் உள்ளூரில் வழிநடத்தியதாக கருதப்படும் பெண் கைது செய்யப்பட்டார்.

குறித்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கனடாவில் உள்ள ஐயப்பன் கோயிலொன்றின் தலைவர் சொல்லியே தாக்குதல் நடத்தியதாக தெரிவித்ததுடன் அதற்குரிய ஆதாரங்களையும் சமர்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் சில குற்ற சம்பவ வழக்குகளுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பெண் சந்தேக நபர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது 48 மணி நேரம் பொலிஸ் தடுப்புக் காவலில் விசாரிக்க நீதவான் அனுமதியளித்தார்.

Thursday, July 25, 2024

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பிளவுபடுத்தியது ரணில் தான்: நாமல் குற்றச்சாட்டு | Ranil Divided The Ltte Namal Also Pointed


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பிளவுபடுத்தியது ரணில் தான்: நாமல் குற்றச்சாட்டு
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட அமைப்புக்கள்,என பல அரசியல் கட்சிகளையும் பிளவுபடுத்தியது ரணில் விக்ரமசிங்கதான் என நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “சிறி லங்கா பொதுஜன பெரமுன கட்சி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு(Ranil Wickremesinghe) ஆதரவு வழங்கியதன் ஊடாக பிளவடைந்தது. ரணில் விக்ரமசிங்கவிற்கு நாம் முழுமையான ஆதரவை வழங்கினோம்.

அரசியல் தீர்மானம்

எமக்கு ஏற்புடையதற்ற செயற்பாடுகளை செய்தாலும், வார்த்தையில் கூட நாம் எதுவும் சொல்லவில்லை. எனினும், கட்சி என்ற விதத்தில், கட்சியை பிளவுபடுத்தியதே எமக்கு கிடைத்த ஆதரவாகும். அதனால், எதிர்காலத்தில் நாம் அரசியல் தீர்மானமொன்றை எடுப்போம்.

நாம் ரணில் விக்ரமசிங்கவிற்கு உண்மையாகவே உதவி புரிந்தோம். அவர் மொட்டு கட்சிக்கு அவ்வாறு செய்யவில்லை. அவரது பழக்கத்திற்கு அதனை செய்தார்.

அவரை கொண்டு வரும் போது, நாம் அதனை அறிந்திருந்தோம். ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, நல்லாட்சி அரசாங்கம், மக்கள் விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஆகியவற்றையும் அவர் பிளவுபடுத்தினார்.

ஜனாதிபதித் தேர்தல் 

at ரணில் விக்ரமசிங்கவுடன் நாம் இன்றும் கலந்துரையாடுகின்றோம். சரியான இடத்திற்கு வருவாரேயானால், அரசாங்கம் தொடர்பில் கலந்துரையாடுவோம்.

Ranil Divided The Ltte Namal Also Pointed

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைவருடனும் கலந்துரையாடுவோம். அதன் பின்னர் இறுதி தீர்மானத்தை எடுப்போம்” என குறிப்பிட்டுள்ளார்

தந்தையின் மண்டையை உடைத்த யாழில் பிரபல ஆசிரியர்!


தந்தையின் மண்டையை உடைத்த யாழில் பிரபல ஆசிரியர்!

யாழ் தொல்புரம் பகுதியில் வசித்து வரும் பிரபல ஆண் ஆசிரியர் ஒருவர் தனது தந்தையின் தலையில் பலமாகத் தாக்கியதில் படுகாயம் அடைந்த நிலையில் தந்தை யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்றைய தினம் வியாழக்கிழமை இரவு எட்டு மணி அளவில் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையிலும் பொலிசார் குறித்த இடத்துக்கு செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

யாழில் சற்று முன் வாகன விபத்தில் பெண் பலி!! வாகனச் சாரதியை தப்ப விட்டு வேறொருவரை பிடித்த பொலிசாால் பதற்றம்!!


யாழில் சற்று முன் வாகன விபத்தில் பெண் பலி!! வாகனச் சாரதியை தப்ப விட்டு வேறொருவரை பிடித்த பொலிசாால் பதற்றம்!!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுடை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார்.

நிச்சாமம் பகுதியைச் சேர்ந்த பெண்ணே சம்பவ இடத்தில்  உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில்  சென்ற பெண்ணை வாகன மோதியதில் இந்த  உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. .

மானிப்பாய் பொலிசார் வாகனம் செலுத்தி சென்ற சாரதியை விட்டு விட்டு வீதியில் சென்ற வேறொருவரை கைது செய்து வைத்திருந்ததால் அப்பகுதியில் பெரும் பதட்ட நிலை உருவாகியிருந்தது

வவுனியாவில் கணவனையும் மனைவியையும் எரித்துக் கொன்றவார்களின் விளக்கமறியல் நீடிப்பு!!


வவுனியாவில் கணவனையும் மனைவியையும் எரித்துக் கொன்றவார்களின் விளக்கமறியல் நீடிப்பு!!

இரட்டை கொலை சந்தே நபர்களின் விளக்கமறியலை நீடித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசர் இளஞ்செழியன் கட்டளை பிறப்பித்துள்ளார்.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த வருடம் யூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சப்பவத்தில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவர் மரணமடைந்திருந்தனர்.

குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், அவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு வருடமாக வழக்கு இடம்பெற்று வருவதுடன் சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிரிவு 296 கட்டளை சட்டக் கோகையின் வி-1390ஃ23 வழக்கில் விளக்கமறியல் நீடிப்பு தொடர்பில் மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

பிணைக்கு எதிராக விளக்கமறியல் நீடிப்பது தொடர்பாக சட்டப்பிரிவு 17 இன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அரச சட்டத்தரணி ஆறுமுகம் தனுசன் மற்றும் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் பிணைக்கு எதிராக வாதிட்டு ஒரு வருட காலம் விளக்கமறியலை நீடிக்க கோரியிருந்தனர். இதன்போது சந்தேக நபர்கள் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தலைமையில் 9 சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

மேலும் வழக்கு விசாரணை தொடர்பில் கவனம் செலுத்திய மேல் நீதிமன்று, அவர்களது விளக்கமறியலை நீடித்து கட்டளை பிறப்பித்தது. இதன்படி மன்று 1- 6 வரையான சந்தேகநபர்களுக்கு எதிர்வரும் நவம்பர் 01 திகதி வரை விளக்கமறியல் நீடித்து கட்டளை வழங்கியதுடன், 7 ஆவது சந்தேக நபரான பிரதான சந்தேக நபருக்கு எதிர்வரும் பெப்ரவரி 25 வரை விளக்கமறியலை நீடித்து கட்டளை பிறப்பித்தது.

யாழில் வெடிமருந்துடன் பஸ்சில் பயணம் செய்த இளைஞன் கைது!!


யாழில் வெடிமருந்துடன் பஸ்சில் பயணம் செய்த இளைஞன் கைது!!

 யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தில் வெடி மருந்துகளை கொண்டு வந்த இளைஞன் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொடிகாமம் பகுதியில் இருந்து  யாழ்ப்பாணம் நோக்கி இன்றைய தினம் வியாழக்கிழமை பயணித்த பேருந்தில் இளைஞன் ஒருவர் வெடிமருந்துகளை கொண்டு செல்வதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் , பேருந்தினை மறித்து சோதனையிட்டனர்.

அதன் போது பேருந்தில் இருந்து 01 கிலோ கிராம் வெடி மருந்து (ரி.என்.ரி) மீட்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து , அதனை கொண்டு வந்த அரியாலை பகுதியை சேர்ந்த 32 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் அழுகிய நிலையில் வீட்டிலிருந்து சடலம் மீட்பு!!


யாழில் அழுகிய நிலையில் வீட்டிலிருந்து சடலம் மீட்பு!!

யாழ். ( jaffna) இளவாலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் இளவாலை பண்டத்திரிப்பு – செட்டிக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 74 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இறந்தவரின் வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதால், அயலவர்கள் அது குறித்து சோதித்த போது சடலம் வீட்டின் முன்புறத்தில் கிடப்பதை அவதானித்து பின்னர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இந்தநிலையில், மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக  யாழ்ப்பாணம் (Jaffna) வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இளவாலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

வடக்கு கல்வி அதிகாரி உட்பட ஒரே நேரத்தில் இருவருடன் பூநகரிக் காட்டுக்குள் ரீச்சர் ஜல்சா!! பிடிபட்டது எப்படி?


வடக்கு கல்வி அதிகாரி உட்பட ஒரே நேரத்தில் இருவருடன் பூநகரிக் காட்டுக்குள் ரீச்சர் ஜல்சா!! பிடிபட்டது எப்படி?

பூநகரி வெட்டுக்காட்டுப் பகுதியில் வடக்கு மாகாண கல்வி அதிகாரி மற்றும் இன்னொரு இளைஞனுடன் ஒரே நேரத்தில் உறவு கொண்டிருந்த திருமணமான ஆசிரியை ஒருவர் சிங்கள சுற்றுலாப் பயணிகள் சிலரால் பிடிபட்டுள்ளார்கள். இச் சம்பவம் ஒரு சில வாரங்களுக்கு முன் நடந்துள்ளது என்றாலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட வீடியோ தற்போதே வட்சப்குறுாப் சிலவற்றில் பகிரப்பட்டு வருகின்றன.

அண்மையில் நடைபெற்ற கலைப்பிரிவுக்கான பிரயோகப் பரீட்சை மேற்பார்வையாளராக கடமைக்குச் சென்ற யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரும் வடக்கு மாகாண கல்வி அதிகாரி ஒருவரும் இன்னொரு இளைஞனுமே பிடிபட்டவர்களாவர். பூநகரி கௌதாரிமுனைக்கு அண்மையில் உள்ள வெட்டுக்காடு என அழைக்கப்படும் காட்டுப்பகுதியுடன் கூடிய மணல் பிரதேசப்பகுதிக்கு சுற்றுலாவாகச் சென்ற தென்பகுதி சிங்களகுடும்பத்தவர்கள் அடங்கிய ஒரு குழுவிடமே இவர்கள் பிடிபட்டுள்ளார்கள்.

அவர்களால் எடுக்கப்பட்ட வீடியோவில்,

வாகனம் ஒன்றை விட்டு இறங்கிய குறித்த சிங்களச் சமூகத்தைச் சேர்ந்த சிலர் அப்பகுதியை வீடியோவாக எடுத்துக் கொண்டு சென்ற போது இளைஞன் ஒருவன் இவர்களைக் கண்டு ஓடத் தொடங்கியுள்ளான். உடனடியாக அவனை துரத்தி பிடித்துள்ளார்கள். அவன் ஓடிய இடத்திற்கு சற்றுத் தொலைவில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் வயதான தோற்றத்துடன் கூடிய ஆண் ஒருவரும் அரைகுறை ஆடைகளுடன் காணப்பட்டனர். அவர்களை சிங்களவர்கள் விசாரணை செய்வதும் இளைஞனையும் விசாரணை செய்வதும் வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. அதன் பின்னர் பெண்ணின் அடையாள அட்டை மற்றும் ஆவணங்கள் அடங்கிய கைப்பையை பரிசோதித்த போது பெண் ஒரு ஆசிரியர் என்பதுடன் பூநகரிப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பரீட்சை மேற்பார்வையாளராக கடமையாற்றும் ஆவணங்களும் காணப்பட்டுள்ளது. அதே நேரம் அந்த வயதான தோற்றத்தை கொண்ட ஆணின் ஆவணங்களைப் பரிசோதனை செய்த போது அவர் வடக்கு மாகாண கல்வி அதிகாரிகள் தரத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்படக்கூடிய ஆவணங்கள் காணப்பட்டுள்ளன. குறித்த இளைஞன் பூநகரிப் பாடசாலை ஒன்றில் கல்விசாரா ஊழியராக கடமையாற்றுவதுடன் ஆட்டோவில் கல்வி அதிகாரியையும் குறித்த பெண்ணையும் ஏற்றி வந்தவர் என சிங்களவர்கள் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த வீடியோவில் சிங்களவர்களை 3 பேருமாக கெஞ்சுவது தொடங்கி சற்று தொலைவில் காணப்படும் படைமுகாமுக்கு அவர்களை கொண்டு செல்ல ஆயத்தமான காட்சிகளும் அடங்கியுள்ளன. அதன் பின்னர் அவர்களை படைமுகாமுக்கு கொண்டு சென்றார்களா அல்லது விட்டுவிட்டார்களா என்ற தகவல்கள் வீடியோவில் காணப்படவில்லை. 4 நிமிடங்கள் அடங்கிய குறித்த வீடியோ தற்போது சிங்கள ஊடகவியலாளர்கள் சிலரின் வட்சப் குறுாப்களிலும் உலாவருவதாக தெரியவருகின்றது.

“அம்மா கவலைப்படாதே.. நான் கிளம்புகிறேன்” – கடிதம் எழுதி வைத்துவிட்டு பல்கலை மாணவன் மரணம்!!


“அம்மா கவலைப்படாதே.. நான் கிளம்புகிறேன்” – கடிதம் எழுதி வைத்துவிட்டு பல்கலை மாணவன் மரணம்!!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கணனி விஞ்ஞான பிரிவில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்று வந்த 22 வயது மாணவரொருவர் உயிர்மாய்த்துக் கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடுகன்னாவ, பிரிமத்தலாவ, பரகடவெல்ல, கிராகமவில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் உள்ள தேயிலை தோட்டத்தில் உள்ள மரத்திலே அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

கடந்த 23 ஆம் திகதி காலை அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக கடுகன்னாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், மாணவனின் அறையில் “அம்மா… கவலைப்படாதே “நான் கிளம்புகிறேன்” என்று எழுதப்பட்ட கடிதமொன்றும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவரது தாயார் பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் எனவும், நான்கு குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தில் இரண்டாவதாக பிறந்த குறித்த மாணவன் கையடக்கத் தொலைபேசிகளில் அடிமையாகியிருந்தமையும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தினத்தன்று மாணவனின் அறைக்கு பெற்றோர் சென்றபோது அவர் அங்கு இல்லை எனவும், இதனையடுத்து மாணவனின் மூத்த சகோதரர் கடுகன்னாவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் வந்து சோதனை செய்தபோது, ​​தேயிலை தோட்டத்தில் உள்ள மரத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முட்களுடன் கூடிய மரம் என்பதால் உடலில் தழும்புகள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கசுன் ஏகநாயக்கவினால் சடலத்தின் மீதான பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

சாட்சியங்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகளை கருத்திற்கொண்ட மரண விசாரணை அதிகாரி சேனக கருணாரத்ன, கழுத்து நெரிக்கப்பட்டதன் காரணமாக இந்த மரணம் இடம்பெற்றுள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Wednesday, July 24, 2024

விசேட மாதாந்த கொடுப்பனவு: ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மகிழ்ச்சி தகவல் | Monthly Special Allowance For Pensioners


விசேட மாதாந்த கொடுப்பனவு: ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்
A D Susil Premajayantha Economy of Sri Lanka Department of Pensions Pensioner Associations

அரசாங்க சேவையின் ஓய்வூதியதாரர்களுக்காக விசேட மாதாந்த கொடுப்பனவாக 3000 ரூபா வழங்குவதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்டுகின்றது.

குறித்த தகவலை இன்று (24) அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த விசேட கொடுப்பனவுகள் 2024 செப்டெம்பர் மாதம் முதல் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பள முரண்பாடுகள்

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், அரசு சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் தொடர்பாக தனி குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அனைத்து துறைகளிலும் உள்ள சம்பள முரண்பாடுகளை ஒரேயடியாக தீர்க்க குழு நியமிக்கப்பட்டது.

இதற்கிடையில் அந்த குழுவின் ஆலோசனைப்படி, செப்டம்பர் மாதம் முதல் ஓய்வூதியதாரர்களுக்கு 3000 ரூபாய் வழங்கப்படும். சுமார் 7 லட்சம் பேர் இதனால் பலன் பெறுவார்கள் என  அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

எனது அரசியல் பிரவேசம் ஆரம்பம்: வைத்தியர் அர்ச்சுனா அதிரடி அறிவிப்பு | Doctor Ramanathan Archuna Into Politic


எனது அரசியல் பிரவேசம் ஆரம்பம்: வைத்தியர் அர்ச்சுனா அதிரடி அறிவிப்பு

இன்றில் இருந்து தனது அரசியல் பிரவேசம் ஆரம்பமாகி உள்ளதாக யாழ்ப்பாணம் (jaffna) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா ((Ramanathan Archchuna) அறிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் அரசியலில் ஈடுபடுவதில் தனக்கு விருப்பம் இருக்கவில்லை என்றும் ஆனால் இன்று தான் நேரடி அரசியலில் குதிக்க உள்ளதாகவும் வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தனது தனிப்பட்ட சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள காணொளி பதிவொன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

சொந்த கட்சி

அத்துடன் சொந்த கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் ஏனைய அரசியல் கட்சிகள் இணையும் தனக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பெரும்பாண்மையான மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் ஒரு அரசியல்வாதியாக தான் இருப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job