நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, July 19, 2024

சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் கடந்த 17 ஆம் திகதி சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரும் மனித உரிமைகள் ஆணைக்குழு.


சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் கடந்த 17 ஆம் திகதி சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரும் மனித உரிமைகள் ஆணைக்குழு.

சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் கடந்த 17.07.2024 அன்று இரவு விசபூச்சியின் கடிக்குள்ளான தனது தந்தையினை  சிகிச்சைக்காக கொண்டு சென்ற வேளையில் மருத்துவமனையில் இரவு வேயைளில் மருத்துவர்களோ, தாதியர்களோ இருக்கவில்லை என்றும் யாரும் அங்கு இல்லாத காரணத்தினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய  நிலை ஏற்பட்டு கொண்டதாகவும் பிரசுரிக்கப்பட்ட செய்தி தொடர்பில் 1996 ஆம் ஆண்டு 21 இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 14 இற்கு அமைய ஆணைக்குழுவின் சொந்த பிரேரணையாக பதிவுசெய்யப்பட்டு சாவகச்சரி ஆதார வைத்திசாலையின் பதில் மருத்துவ அத்தியட்சகர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் யாழ்ப்பாணம், மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வடக்கு மாகாணம் ஆகியோரிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது . குறித்த விளக்க அறிக்கையை எதிர்வரும் 22.07.2024 இற்கு முன் சமர்ப்பிக்க பணிக்கப்பட்டுள்ளது.

த. கனகராஜ் 
பிராந்திய இணைப்பாளர் 
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 
யாழ்ப்பாணம்  .

0 comments:

Post a Comment