நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, September 30, 2024

யாழ் சிறைக்குள் வைத்தியர் அர்ச்சுனா மீது கடும் தாக்குதல்? சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா காரணமா?


யாழ் சிறைக்குள் வைத்தியர் அர்ச்சுனா மீது கடும் தாக்குதல்? சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா காரணமா?

யாழ் சிறைச்சாலைக்குள் வைத்து சாவகச்சேரி முன்னாள் வைத்திய அதிகாரி அர்ச்சுனா மீது கடும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளது.இந் நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளால் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அர்ச்சுனா சற்று முன் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் குறித்த பதிவுகளிலிருந்து தெரியவருகின்றது.

குறித்த தாக்குதலுக்கு யாழ் போதனாவைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரியின் திட்டமிட்ட செயற்பாடே காரணம் என அர்ச்சுனா சார்பான சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன. அர்ச்சுனா தாக்குதல் தொடர்பாக தற்போது சட்டவைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா அர்ச்சுனாவை தனது வைத்தியசாலைக்குள் வைத்து அச்சுறுத்துவதற்கு ஆயத்தமாகி வருவதாகவும் தனக்கு முன்னால் அர்ச்சுனாவை முட்டுக்காலில்இருத்தி வைக்கப் போறேன் என தனது வைத்தியத்துறை நண்பர்களுக்கு பிரணவன் கூறியுள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இந் நிலையில் இத் தகவல்களை உறுதிப்படுத்தும் முகமாக விசாரணை செய்த போது அர்ச்சுனா சற்று முன் யாழ் போதனாவைத்தியசாலைக்கு சிறை அதிகாரிகளுன் வந்துள்ளாதாக மட்டுமே எமது செய்தியாளர்களால் உறுதிப்படுத்த முடிந்தது.  அத்துடன் சிறைச்சாலை உத்தியோத்தர்களின் தகவல்களின் படி அர்ச்சுனா தொற்றா நோய்களுக்கான கிளினிக் சிகிச்சைக்காக பொது வைத்திய நிபுணரிடம் சிகிச்சை பெற வந்துள்ளதாக எமது செய்தியாளர் மூலம் தெரியவந்துள்ளது.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job