நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, September 26, 2024

கர்ப்பிணி ஆசிரியையும், அவரது கணவரும் விபத்தில் மரணம்!!


கர்ப்பிணி ஆசிரியையும், அவரது கணவரும் விபத்தில் மரணம்!!

அக்குரஸ்ஸ சியம்பலாகொட – பிடபெத்தர வீதியில் போபகொட சந்திக்கு அருகில் புதன்கிழமை (26) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை ஆசிரியை ஒருவரும் அவரது கணவரும் உயிரிழந்துள்ளதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிடபெத்தரை, மெதிரிபிட்டிய பாடசாலையில் கிடைத்த பரிசில்களுடன் மோட்டார் சைக்கிளில் மகதுரையில் உள்ள தமது வீட்டை நோக்கி கணவருடன் பயணித்துள்ளனர்.
பிடபெத்தரவை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தனது சொகுசு வேனில் அக்குரஸ்ஸ பகுதியிலிருந்து பிடபெத்தரை நோக்கி பயணித்த போது வேனை கவிழ்த்து அருகில் உள்ள மண்ணில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் மகடூர பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான பாக்யா பொரலஸ்ஸ மற்றும் அவரது கணவர் இந்திக்க சம்பத் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகத்திற்குரிய வர்த்தக சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர் மதுபோதையில் இருந்தாரா என்பதை கண்டறிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.பாக்யாவின் சடலம் அக்குரஸ்ஸ வைத்தியசாலைக்கும், இந்திகவின் சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த பாக்யா கர்ப்பமாக இருந்ததாக ​பொலிஸார் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job