50% OFFICERS 👇👇🔴👇👇

50% OFFICERS 👇👇🔴👇👇
I found this great deal on Daraz! Check it out! Product Name: MAVIC 3 Clone Aerial Drone with Camera - Explore the Skies with Confidence Product Price: Rs.15,000 Discount Price: Rs.7,189

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, December 27, 2024

தாயின் கள்ளக்காதலனால்13வயது கௌசல்யா பலி!! நடந்தது என்ன?


தாயின் கள்ளக்காதலனால்13வயது கௌசல்யா பலி!! நடந்தது என்ன?

தாயின் கள்ளத்தொடர்பு காரணமாக 13 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பிலியந்தலை பிரதேசத்தில்  பதிவாகியுள்ளது.

தாய்க்கும் கள்ளக்காதலனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தலையிட்டதில் கத்திக்குத்துக்கு இலக்காகி குறித்த சிறுமி உயிரிழந்துள்ளார்.

நேற்று (26) பிற்பகல் 1 மணியளவில் இடம்பெற்ற இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தில் பிலியந்தலை போகுந்தர பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றின் மேல் மாடியில் வசித்து வந்த இரண்டு பெண் பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இளையவரான பி.எம். ஓஷாதி கௌசல்யா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.

இவர் பிலியந்தலை ஆனந்த சமரக்கோன் கல்லூரியில் 8ஆம் தரத்தில் கல்வி கற்கும் சிறுமியாவார்.

சம்பவ தினம் ஓஷாதி தனது தாய் மற்றும் 15 வயது மூத்த சகோதரியுடன் வீட்டில் இருந்ததாகவும், அப்போது தாயின் கள்ளக்காதலன் வீட்டிற்கு வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணுடன் அதே நிறுவனத்தில் குறித்த நபர் பணிபுரிவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவ்வாறு வந்த நபர் வீட்டில் இருந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் கள்ளத் தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ள நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் குறித்த நபர் அந்த பெண்ணை கத்தியால் பல தடவைகள் குத்தியுள்ள நிலையில், தாயை காப்பாற்ற குறித்த இரண்டு சிறுமிகளும் குறுக்கிட்டு அதனை தடுத்துள்ளனர்.

இதன்போது சந்தேக நபர் அவர்களையும் கத்தியால் தாக்கியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், சந்தேக நபர் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ள போதும், அதற்கு பயன்படுத்தப்பட்ட கயிறு அறுந்தததால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

பின்னர் கீழே இருந்தவர்களிடம் பொலிசில் சரணடைவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

காயமடைந்த தாய் மற்றும் இரண்டு மகள்கள் தாய் பணிபுரிந்த அதே நிறுவனத்தின் ஊழியர் ஒருவரால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவ்வாறு வெரஹெர இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஆபத்தான நிலையில் இருந்த 13 வயதான ஓஷாதி கௌசல்யா உயிரிழந்துள்ளார்.

பொலிஸில் சரணடைவதாகக் கூறிவிட்டு தப்பிச் சென்ற சந்தேக நபர் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைக் தேடி கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த சந்தேக நபர் சில வருடங்களுக்கு முன்னர் மஹாஓயா பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டவர் என தெரியவந்துள்ளது.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job