50% OFFICERS 👇👇🔴👇👇

50% OFFICERS 👇👇🔴👇👇
I found this great deal on Daraz! Check it out! Product Name: MAVIC 3 Clone Aerial Drone with Camera - Explore the Skies with Confidence Product Price: Rs.15,000 Discount Price: Rs.7,189

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, December 23, 2024

யாழில் பைக்கில் ஜி.பி.எஸ் பொருத்தி லண்டன் அங்கிளுடன் சேர்த்து மனைவியைப் பிடித்த ஐயர்!!


யாழில் பைக்கில் ஜி.பி.எஸ் பொருத்தி லண்டன் அங்கிளுடன் சேர்த்து மனைவியைப் பிடித்த ஐயர்!!

யாழ் வலிகாமம் பகுதியில் கோவில் ஒன்றின் குருக்கள் தனது மனைவியை லண்டனிலிருந்து வந்த அங்கிள் ஒருவருடன் வீடு ஒன்றில் வைத்து கையும் மெய்யுமாக பிடித்துள்ளார். வலிகாமம் பகுதியில் உள்ள கோவில் ஒன்றின் சொந்தக்காரரான குறித்த ஐயரின் மனைவி அரச ஊழியராக பணியாற்றி வருகின்றார். ஐயரின் கோவில் திருவிழா ஒன்றின் உபயகாரரான லண்டனில் வசிக்கும் தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் குறித்த கோவிலுக்காக நண்கொடைகளை வழங்கி வந்துள்ளார். அத்துடன் ஐயரின் மனைவியின் ஒத்துழைப்புடன் அறக்கொடை நிதியம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார். அத்துடன் புலம்பெயர் தேசங்களில் இருப்பவர்களிடம் நிதி வசூலித்து அறக்கொடை ஊடாக அப்பகுதியைச் சேர்ந்த ஏழைகளின் பிள்ளைகளுக்கு கல்வி வசதிக்காக சில உதவிகளையும் குறித்த லண்டன் குடும்பஸ்தர் செய்து வந்துள்ளாராம். இந்த உதவிகளை கோவில் ஐயரின் மனைவி ஊடாகவே குறித்த குடும்பஸ்தர் செய்து வந்துள்ளார்.

லண்டன் குடும்பஸ்தருடன் இரவில் தொடர்ச்சியாக வட்சப்பில் தனது மனைவி கதைப்பது தொடர்பாக கோவில் ஐயருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தனது மனைவி மீது ஐயருக்கு சந்தேகம் இருந்ததாக தெரியவருகின்றது. கோவில் திருவிழாவுக்கு உதவிகள் செய்யவரும் இளைஞன் ஒருவனுடன் தனது மனைவி தொடர்ச்சியாக நட்பில் இருப்பதாக தெரிவித்து குறித்த இளைஞனுடன் முரண்பட்டு கோவிலுக்கு இளைஞனை வர தடையும் விதித்திருந்தார் ஐயர். இதன் பின்னர் ஐயர் தனது மனைவியைக் கண்காணிக்கத் தொடங்கியதாக தெரியவருகின்றது. மனைவியின் மோட்டார் சைக்கிளுக்குள் இரகசியமாக ஜி.பி.எஸ் கருவியை ஐயர் பொருத்தி மனைவியின் நடமாட்டத்தை அவதானித்து வந்துள்ளார். மனைவி வங்கிக்கு வேலைக்காக செல்வது தொடங்கி வீடு வந்து சேரும் வரையான மனைவியின் போக்குவரத்து நடவடிக்கைகளை ஐயர் வீட்டிலிருந்தே அவதானித்து வந்துள்ளார்.

இவ்வாறான நிலையில் லண்டன் குடும்பஸ்தருடன் மனைவி வட்சப்பில் தொடர்பு கொண்டு கதைப்பதையும் சந்தேகக் கண்ணுடன் அவதானித்து வந்துள்ளார் ஐயர். கடந்த வாரம் லண்டன் குடும்பஸ்தர் யாழ்ப்பாணம் வந்துள்ளார். இதன் பின்னர் ஐயர் மும்முரமாக மனைவியை அவதானிக்கத் தொடங்கியதாக தெரியவருகின்றது. கடந்த வியாழக்கிழமை மனைவி அலுவலகம் செல்வதாக கூறிச் சென்றுள்ளார். நண்பகலின் பின் மனைவியின் இருப்பிடம் அலுவலகத்திற்கு அப்பால் வேறு ஒரு பகுதியைக் காட்டிக் கொண்டிருந்ததை ஐயர் அவதானித்துள்ளார். அதன் பின் அலேட்டான ஐயர் குறித்த ஜி.பி.எஸ் கருவி காட்டிய அடையாளத்தை வைத்து மனைவி தங்கி நின்ற வீட்டை கண்டு பிடித்து அவளது மோட்டார் சைக்கிளை அவதானித்து தன்னுடன் வந்த இன்னொரு உறவுக்காரரான ஐயருடன் வீட்டுக்குள் புகுந்ததாக தெரியவருகின்றது.

குறித்த வீடு லண்டனிலிருந்து வந்த குடும்பஸ்தரால் நாள் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீடு என தெரியவருகின்றது. இந் நிலையிலேயே ஐயரும் உறவுக்காரனும் அங்கு புகுந்து மனைவியை லண்டன் குடும்பஸ்தருடன் பிடித்துள்ளார்கள். அங்கு கை கலப்பு உருவாகியுள்ளது. லண்டன் குடும்பஸ்தரும் ஐயரின் மனைவியும் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்கள். குறித்த வீட்டில் சச்சரவுகள் இடம்பெற்றதால் அயலவர்கள் அங்கு திரண்டனர். அதன் பின்னர் அங்கு நடந்தவற்றை அறிந்து அவர்கள் சண்டையில் தலையிடாமல் விலகிச் சென்றுள்ளார்கள். தாக்குதலுக்கு உள்ளாகிய மனைவியை ஐயர் மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்றுள்ளார். அதன் பின்னர் தாக்குதலுக்கு உள்ளான குறித்த வீட்டுக்கு பொலிசார் வந்து விசாரணைகளை மேற்கொண்டதாகத் தெரியவருகின்றது.

நேற்று முன்தினம் லண்டன் குடும்பஸ்தரை தாக்கிய குற்றச்சாட்டில் பொலிசார் ஐயரையும் மனவைியையும் விசாரித்துள்ளார்கள். லண்டன் குடும்பஸ்தரின் அறக்கொடை நிதியக் கணக்கு வழக்குகளை தெரிவிக்கவே தான் குறித்த குடும்பஸ்தர் வீட்டுக்கு சென்றதாகவும் அதனை தனது கணவன் தவறாக எடுத்து தாக்கியதாகவும் மனைவி முறைப்பாடு கொடுத்ததுடன் லண்டன் குடும்பஸ்தர் கணவன் மீது போட்ட முறைப்பாட்டை மீளப் பெறுமாறு கேட்டு முறைப்பாட்டை மீளப்பெற்றுள்ளார். பொலிசாரின் விசாரணையின் போதே ஐயர் தனது மனைவியின் மோட்டார் சைக்கிளில் ஜி.பி.எஸ் கருவியைப் பொருத்திய விடயம் தெரியவந்ததாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிசாரின் விசாரணைகளின் போது ஐயருக்கு 49 வயது எனவும் ஐயரின் மனைவிக்கு 33 வயது எனவும் இருவரும் 11 வருடங்களு்ககு முன் திருமணம் ஆகி 2 குழந்தைகளும் உள்ளது எனவும் தெரியவருகின்றது. திருமணம் முடித்த பின்னரே ஐயரின் மனைவி பட்டதாரியாக பட்டம் பெற்றார் எனவும் தெரியவருகின்றது. லண்டன் குடும்பஸ்தரும் ஐயரின் வயதானவர் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job