நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, December 6, 2023

முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரில் தொலைந்த மோட்டார் சைக்கிள் 14 ஆண்டுகளுக்கு பின் மீட்பு: உரிமையாளருக்கு ஏற்பட்டுள்ள பரிதாபநிலை



முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரின் போது காணாமல் போயிருந்த மோட்டார் சைக்கிள் 14 ஆண்டுகளின் பின்பு கடத்தல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கிளிநொச்சியைச் சேர்ந்த உரிமையாளர் ஒருவருக்கு நேற்று (06.12.2023) காலி நீதிமன்றத்தில் இருந்து அழைப்பாணை விடுத்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,


கடத்தல் சம்பவம்
இறுதி யுத்த காலத்தில் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவரின் மோட்டார் சைக்கிள் முள்ளிவாய்க்காலில் விடப்பட்ட நிலையில் அது படையினரின் பிடியில் இருந்து காணாமல் போயிருந்த்து.



போர்க் காலத்தில் தொலைந்த மோட்டார் சைக்கிளை உரிமையாளர் நீண்ட காலம் தேடியும் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் 14 ஆண்டுகளின் பின்பு கடத்தல் சம்பவம் ஒன்றுடன் இந்த மோட்டார் சைக்கிள் தொடர்புபட்டு மீட்கப்பட்டுள்ளதால் உரிமையாளரை நாளை 8 ஆம் திகதி நீநிமன்றில் முன்னிலையாகுமாறு காலி நீதிமன்றம் மோட்டார் சைக்கிள் உரிமையாளருக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது.


இறுதி யுத்தத்தின்போது தமிழ் மக்களால் முள்ளிவாய்க்காலில் கைவிடப்பட்ட பல நூறு வாகனங்கள் படையினரின் துணையுடன் தென்னிலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட்டன என்று ஏற்கனவே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job