நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, December 6, 2023

இந்த நபர்களை தெரியுமா...! மக்களின் உதவியை நாடும் பொலிஸார்



நுரைச்சோலை வீடொன்றில் கொள்ளையில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க மக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

நாவக்காடு பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்டனர்.

சுமார் ஒன்றரைக் கோடி ரூபாவுக்கும் அதிகமான தங்க ஆபரணம் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டிருந்தன.

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

சந்தேகநபர்கள்
முறைப்பாட்டாளர்களால் வழங்கப்பட்ட தகவல்களுக்கு அமைய, குற்ற அறிக்கை பிரிவின் சித்திரக் கலைஞரால் சந்தேகநபர்கள் இருவரின் தோற்றம் வரையப்பட்டுள்ளது.


குறித்த சந்தேக நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் நுரைச்சோலை பொலிசாரிடம் அறிவிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் – புத்தளம் பிரிவு : 071 8591289

உதவி பொலிஸ் அத்தியட்சகர் – கற்பிட்டி : 071 8591301

நுரைச்சோலை பொலிஸ் பொறுப்பதிகாரி : 071 8592126

0 comments:

Post a Comment