நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, December 11, 2023

மக்களின் கழுத்தை நெரிக்கும் மற்றுமொரு சட்டமூலம் சற்றுமுன் நிறைவேற்றம்



இலங்கையில் வட் எனப்படும் பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் மேலதிக 57 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 98 பேரும் எதிராக 41 பேரும் வாக்களித்துள்ளனர்.


இந்தச் சட்டமூலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முதலில் திட்டமிடப்பட்டிருந்தது, அந்த வகையில் பெறுமதி சேர் வரி திருத்தம் சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நேற்று காலை சபையில் ஆரம்பமானது.

97 பொருட்களுக்கு மீண்டும் வரி
இதன் போது 138 பொருட்களில் 97 பொருட்களுக்கு வட் எனப்படும் பெறுமதி சேர் வரி விதிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

அரச வருவாயை அதிகரிக்கும் முயற்சியில், வரியிலிருந்து விலக்களிக்கப்பட்ட 97 பொருட்களுக்கு மீண்டும் வரி அறவிடப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.






மேலும் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், அனுப்பப்படும் குறுஞ்செய்திகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், நிலையான தொலைபேசி வலையமைப்புகளில் குறுந்தகவல் சேவைக்கும் வட் வரி விதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருந்துகள், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்கள், அரிசி மா , கோதுமை மா, காய்கறிகள், பழங்கள், திரவ பால் மற்றும் சுவசேரிய எனப்படும் நோயாளர் காவு வண்டி சேவை ஆகியவற்றுக்கு வட் எனப்படும் பெறுமதி சேர் வரி விதிக்கப்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டினார்.


இந்த நிலையில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் இன்று மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job