ஜோர்டான் நாட்டில் பெருவெள்ளத்தில் சிக்கி பாடசாலை பேருந்து ஒன்று அடித்துச் செல்லப்பட்டதில் அதில் இருந்த 17 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலியாகியுள்ளனர்.
ஜோர்டானின் சாவுக்கடல் பகுதியில் அமைந்துள்ள ஜாரா மைன் என்ற கிராமத்தில் இந்த பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது.
பாடசாலை ஒன்றில் இருந்து சுற்றுலா சென்ற பேருந்து ஒன்று இந்த பெருவெள்ளத்தில் சிக்கியுள்ளது.
இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட 17 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் 22 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment