நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, October 27, 2018

கொழும்பில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவம்! மைத்திரியின் அதிரடி நடவடிக்கை


கொழும்பில் அமைந்துள்ள முக்கிய பிரபுகளின் வீடுகளுக்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பிற்கு இலங்கை இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு, பெஜட் வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு விமான படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கடற்படையினர் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

ரணில் விக்ரமசிங்கவின் வீடு மற்றும் அலரி மாளிகையின் பாதுகாப்பிற்கு பொலிஸ் விசேட அதிரடைப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சராக செயற்படுகின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு அமைய செயற்படுவதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

நெருக்கடியான நிலை ஏற்பட்டால் நாட்டில் அனைத்து முகாம்களிலும் உள்ள இராணுவத்தினர் தயார் நிலையில் உள்ளதாக இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job