நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, October 28, 2018

கொலை சதித்திட்டம் தொடர்பாக ஜனாதிபதி என்னிடம் தெரிவித்தார் – சம்பந்தன்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனக்கு உயிராபத்து இருந்ததாக தன்னுடன் கருத்துப் பகிர்ந்துகொண்டதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திடீரென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கைகோர்த்தமைக்கான காரணம் தொடர்பில் தான் வினவியபோதே ஜனாதிபதி குறித்த விடயத்தை குறிப்பிட்டதாக அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (சனிக்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது ஜனாதிபதிக்கு ஏற்படவிருந்த உயிராபத்து குறித்து மிகவும் உணர்வு பூர்வமாக கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதோடு அதற்கான சாட்சியங்கள் காணப்படுவதாகவும் ஜனாதிபதி கூறியதாக சம்பந்தன் தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது, தேசியப் பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட புதிய அரசியலமைப்பு விவகாரங்கள் தொடர்பிலும் தாம் ஜனாதிபதிக்கு மீண்டும் வலியுறுத்தியதாக குறிப்பிட்ட இரா.சம்பந்தன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களில் கூட்டமைப்பு கொண்டுள்ள கரிசனையையும் அவர் எடுத்துக்கூறியுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதியுடன் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்துவதென்றும் அதன்போது தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் மேலும் குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job