நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, October 28, 2018

உறவினர்கள் பார்க்க வருவதில்லையாம்: யாழ் சிறையில் கைதி தற்கொலை முயற்சி!



யாழ்ப்பாணம் விளக்கமறியல் சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதி ஒருவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். அவரை ஆபத்தான நிலையில் மீட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.

உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த இராஜேஸ்வரன் கஜன் ( 3) என்ற இளைஞனே இவ்வாறு தற்கொலை முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

திருட்டுக் குற்றச்சாட்டில் கடந்த செப்ரெம்பர் மாதம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தன்னைப் பார்ப்பதற்கு உறவினர்கள் எவரும் சிறைச்சாலைக்கு வருவதில்லை என்ற விரக்தியிலேயே அவர் தற்கொலை முயற்சியை மேற்கொண்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment