எனினும் அளவுக்கு அதிகமாக பாணை உண்பது உடல் நலத்தை அதிகமாகப் பாதிக்கின்றது. என்றாலும் வீட்டில் உள்ள குழந்தைகள் அதிகமாக பாணையே கேட்டு வாங்கி உண்பார்கள்.
இவ்வாறு உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் பாணை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம், பல பிரச்சனைகளை சந்திக்க நேரும் என்பதே உண்மை.
பாணை அளவுக்கு அதிகமாக உண்ணும் போது, உடல் எடை அதிகரிக்கும் அபாயம் ஏற்படும். சிறு வயதிலேயே அதிகரித்த உடல் எடையால் உங்கள் குழந்தைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அத்துடன் பாணை அதிகமாக சாப்பிட்டாலும், சிறிது நேரத்தில் அதிக பசி எடுக்கும். எனவே மேலதிகமாக உணவு உண்டு வயிற்றை நிரப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால் அதிக சோர்வு ஏற்படும்.
அத்துடன் பாணை அதிகமாக சாப்பிட்டால் நீரிழிவு,மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment