திருகோணமலை-ஹபரன பிரதான வீதியின் ஹதரஸ் கொட்டுவ யகா ஒழுங்கையில் இடம்பெற்ற விபத்தில் யானை ஒன்று பலியாகியுள்ளது.
சிறிய ரக வாகனம் ஒன்று வீதியில் நின்ற யானையொன்றுடன் மோதியதனாலேயே இந்த விபத்து ஏற்படுள்ளது. இதனால் அந்த யானை ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளதுடன் வாகனத்தில் பயணித்த இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக கல்ஒயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்துச் சம்பவம் இன்று(25) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிப்பதோடு, உயிரிழந்த யானை நிறைமாதக் கர்ப்பமான நிலையில் இருந்ததாகவும் கூறுகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்ஒயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment