நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, October 25, 2018

விக்கி புதுக்­கட்சி அறி­வித்த நாள் தமி­ழர் வாழ்­வில் கறை­ப­டிந்த நாள்


80 வய­தி­லும் பத­வி­வெறி பிடித்து, தமி­ழீழ தேசி­யத் தலை­வர் பிர­பா­ர­க­ரன் உரு­வாக்­கிய தமிழ் மக்­க­ளின் அர­சி­யல் இருப்­பான தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை உருக்­கு­லைக்க சிங்­க­ளப் பேரி­ன­வா­தத்­தால் சூச­க­மாக கள­மி­றக்­கப்­பட்ட தமி­ழின துரோ­கியை அடை­யா­ளம் காட்­டி­ய­நாள் நேற்று (நேற்­று­முன்­தி­னம்). இது தமி­ழர் வர­லாற்­றில் கறை­ப­டிந்த நாள் என்று வர­லாறு தமி­ழ­ருக்கு குறித்­துச் சொல்­லும். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் வன்னி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிவ­மோ­கன் தெரி­வித்­தார்.

அவ­ரது இல்­லத்­தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யா­ளர் சந்­திப்­பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

சிங்­க­ளத்­து­டன் இரண்­ட­றக் கலந்து, நீதி அர­சர் பத­வி­பெற்று சிங்­க­ளச் சட்­டத்­தின் கீழ் தமிழ் இளை­ஞர்­களை சிறை­யில் தள்­ளிய, வேட­தா­ரி­யின் போலி வணக்­கத்­து­டன் தொடங்­கிய உரையை நேற்று (நேற்­று­முன்­தி­னம்) அனை­வ­ரும் கேட்­டி­ருப்­பீர்­கள்.

தமி­ழி­னத்தை கூறு­போட்டு உருக்­கு­லைக்க செயற்­ப­டும் சிங்­க­ள­தே­சத்­துக்கு சாம­ரம் வீசும் முன்­னாள் முத­ல­மைச்­ச­ரின் கட்­சி­யின் முயற்­சியே இது. கட்சி அர­சி­யல் இன்றி தமி­ழர்­களை ஒன்­றாக்கி தமிழ்­மக்­கள் பேரவை ஊடாக சாத்­வீக போராட்­டம் மூலம் தமி­ழர் உரி­மையை நிலை­நாட்­டப் போகின்­றோம் என்று சொன்­ன­வர்­க­ளின் சாயம் வெளுத்­து­போ­னது.

அறி­வா­ளி­க­ளாக தம்மை அடை­யா­ளம் காட்டி தமிழ் மக்­கள் பேர­வை­யூ­டாக போராட்­டங்­க­ளைக் கட்சி வேறு­பா­டு­கள் இன்­றி­முன்­னெ­டுக்க இருந்த சந்­தர்ப்­பத்­தை­யும் தவி­டு­பொ­டி­யாக்கி தடம்­பு­ரண்டு வேட­தா­ரி­யின் புதிய கட்­சி­யில் சங்­க­மித்த பேர­வைக்கு ஒரு வாச­கம் சொல்­கி­றேன். மறத் தமி­ழ­னால் ஒதுக்­க­பட்ட பின் போலி­வே­சம் போட்டு புதிய கட்சி ஆரம்­பித்த பேரவை, உங்­களை நீங்­களே சுய­ப­ரி­சோ­தனை செய்­து­கொள்­ள­வேண்­டி­யது அவ­சி­யம்.

தமிழ் மக்­கள் பேர­வை­யின் உரு­வாக்­கத்­தின் போது முத­ல­மைச்­சர் பூண்­டு­கொண்ட வேடத்தை தானே கூக்­கு­ர­லிட்டு தடம்­பு­ரண்டு ஆற்­றி­ய­உரை அவ­ரது சுய மதிப்­பைக் கேள்­விக்­கு­றி­யாக்கி நீங்­கள் ஒரு பொய்­யன் என்­பதை பறை­சாற்­றி­யுள்­ளது.

பொறு­மை­யின் விளிம்­பி­லும் துரோ­கத்­த­ னங்­க­ளின் எல்­லை­யி­லும் கூட்­ட­மைப்பு புதிய விருட்­சம் எடுக்­கும் என்­ப­தற்­கான ஒரு உதா­ர­ணமே நேற்­று­ந­டந்த நிகழ்வு. 99 வரு­ட­கால அர­சி­ய­லைப் பற்­றிப் பேசி­னார். அந்த அர­சி­யல் போராட்­டத்­திலோ, அல்­லது ஆயு­தப் போராட்­ட­திலோ உங்­க­ளது பங்கு எங்கே இருந்­தது? நீங்­கள் சிங்­க­ளத்­தில் தொங்கி, சிங்­க­ளத்­தில் நீதி­அ­ர­ச­ராகி, சொந்­தப் பரம்­ப­ரை­யையே சிங்­க­ளத்­துக்கு தாரை­வார்த்து அங்­கு­தான் பத­விப் பிர­மா­னம் எடுப்­பேன் என்று கூறி சிங்­கள அடி­வ­ரு­டி­க­ளு­டன் அதனை செவ்­வனே நிறை­வேற்றி முடித்த நீங்­களா தமிழ் மக்­க­ளின் விடு­த­லையை முன்­னெ­டுத் துச் செல்­லப் போகின்­றீர்­கள். புலி­க­ளின் போராட்­டத்தை ஒரு நோயாக தன்­னு­டைய வாயால் சித்­த­ரித்­தி­ருக்­கின்­றார். அவர் பின்­னால் அணி திரள்­வானா மறத்­த­மி­ழன்? அது ஒரு­போ­தும் நடக்­காது.

முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக கூட்­ட­மைப்­பில் போட்­டி­யி­டு­வதை தன்­னால் நினைத்­தும் பார்­கக முடி­ய­வில்லை என்று கூறி­யி­ருந்­தார். எழு­திக் கொடுத்­ததை அப்­ப­டியே வாசிப்­பது அவ­ரது வழக்­கம். அனைத்­துக் கட்­சி­க­ளும் கேட்­டுக்­கொண்­டால் மீண்­டும் போட்­டி­யி­டு­வேன் என்று அவர்­முன்­னம் கூறி­யதை மறந்­து­விட்­டார் போல.

கலா­சா­ரத்­தை­காக்­கப் போவ­தாக இறு­தி­யில் சொல்­கி­றார். பாலி­யல் குற்­ற­வாளி பிரே­மா­னந்­தா­வின் சீட­னாக இருந்து கொண்டு பாலி­யல் குற்­றம் செய்த பிரே­மா­னந்­தா­வின் சீடர்­க­ ளிற்கு வக்­கா­ளத்து வாங்­கிய இவர்­தான் கலா­சா­ரத்தை காக்­க­போ­கி­றாரா?

யாழ்ப்­பா­ணம் வந்த மோடியை சந்­திக்க இவ­ருக்கு மாத்­தி­ரமே கூட்­ட­மைப்பு வாய்ப்­புக் கொடுத்­தது.

அந்­தச் சந்­தர்ப்­பத்தை அர­சி­யல் கைதி­க­ளின் விடு­த­லைக்­காக இவர் பயன்­ப­டுத்­தி­யி­ருக்­க­லாம். அல்­லது ராஜீவ் காந்தி கொலை வழக்­கில் சிக்­கி­யுள்ள அப்­பா­வி­க­ளுக்­காக பாவித்­தி­ருக்­க­லாம். மாறாக குற்­றச் செயல்­க­ளில் ஈடு­பட்டு கைது செய்­ய­பட்­டுள்ள பிரே­மா­னந்­தா­வின் சீடர்­களை விடு­விக்க கூறி எழுத்து மூலம்­வேண்­டு­கோளை முன்­வைத்­தார். இந்­தப் போலி­வே­சம் தேவையா? வர­லாற்­றுத் தவ­றின் அடை­யா­ளம் இவர். ஒரு நச்­சு­செடி. என்­னைப் பொறுத்­த­வரை அது வளர்ந்­து­வ­ரு­வ­தற்கு முன்­னர் மக்­க­ளாக அதனை அழித்து விட்டு தீபா­வளி கொண்­டா­ட­வேண்­டும் – என்­றார்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job