சமைப்பதற்காக எடுத்துச் சென்ற அரிசி பக்கட்டில் இருந்து எலியொன்று மீட்கப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் ஜெர்மனியில் பதிவாகியுள்ளது. ஜெர்மனியில் உள்ள நபர் ஒருவர், சமைப்பதற்காக கடைக்குச் சென்று பொருட்களை வாங்கி வந்துள்ளார்.
இதன்போது குறித்த நபர் பிரபல நிறுவனத்தில் இருந்து தயாரிக்கப்படும் அரிசி பக்கட் ஒன்றையும் கொள்வனவு செய்துள்ளார்.
பின்னர் வீட்டிற்கு வந்த நபர், அரிசியை கொதிக்க வைத்த போது, இறந்த நிலையில் இருந்த எலியைக் கண்டுள்ளார்.
இதனை அடுத்து பெரும் அதிர்ச்சியடைந்த குறித்த நபர், சம்பவம் தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக, அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
0 comments:
Post a Comment