நோர்வே நாட்டு பிரதமரை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவந்தனவை வாழ்த்தி பாரிய விளம்பர பதாகை ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.
ஜாஎல நகரில் இந்த பாரிய விளம்பர பதாகை ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பதாகை தொடர்பில் பாரிய சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளதுடன், சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.
ஜாஎல நகரத்தின் பிரதான வீதிக்கு மேல் இந்த பாதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
எந்தவொரு நாட்டு அரச தலைவரை சந்தித்தாலும், அதற்கு பாராட்டி பதாகை ஒட்டும் நடவடிக்கை இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் காவிந்த ஜயவந்தனவை பாராட்டி காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment