நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, August 12, 2024

22 மாணவர்களால் வன்பு ணர்வுக்கு உட்படுத்தப்பட்ட 16 வயது மாணவி : அதிரடியாக கைதுசெய்யப்பட்ட 17 பேர்


22 மாணவர்களால் வன்பு ணர்வுக்கு உட்படுத்தப்பட்ட 16 வயது மாணவி : அதிரடியாக கைதுசெய்யப்பட்ட 17 பேர் 

புதிய இணைப்பு

மொனராகலை - தனமல்வில பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவியை ஒரு வருட காலமாக வன்பு ணர்வுக்கு உட்படுத்திய 17 பாடசாலை மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் ஒரு பெண்ணும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

முதலாம் இணைப்பு

மொனராகலை (Moneragala) மாவட்டம் தனமல்வில பகுதியில் 16 வயதான சிறுமி ஒருவர் 22 பாடசாலை மாணவர்களினால் வன்பு ணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சில மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ள நிலையில் வன்பு ணர்வுக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்னர் தனக்கு பலவந்தமாக மதுபானத்தை வழங்கியதாக குறித்த சிறுமி காவல்துறையினரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

தான் கல்வி பயிலும் பாடசாலையிலுள்ள 19 வயதான மாணவனொருவனை சிறுமி காதலித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் தனது காதலனின் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு பாடசாலை மாணவர்களினால் வன்பு ணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கர்ப்பமடைந்த சிறுமி 

இந்தநிலையில், சிறுமி குறித்த சம்பவத்தை காணொளியாக பதிவு செய்துள்ள சந்தேகநபர்கள் அந்த காணொளியை வெளியிடுவதாக அச்சுறுத்தி ஒரு வருட காலம் சிறுமியை பல்வேறு சந்தர்ப்பங்களில் வன்பு ணர்வுக்கு உட்படுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மேலும், சிறுமி காதலித்த மாணவன் உள்ளிட்ட மேலும் 21 மாணவர்கள் குறித்த சிறுமியை  வன்பு ணர்வுக்கு உட்படுத்தியுள்ள நிலையில் சிறுமி கர்ப்பமடைந்தமையினால் ராகமை வைத்தியசாலையில் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

மேலதிக விசாரணை

இந்த சிறுமி கர்ப்பமடைந்ததை அறிந்துக்கொண்ட பெற்றோர்கள், சிறுமியை ராகமையிலுள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பியுள்ளதோடு சிறுமி குழந்தை பெற்றெடுத்ததை அடுத்து ராகமை வைத்தியசாலை நிர்வாகத்தினால் புத்தல காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், விசாரணைகளை ஆரம்பித்த புத்தல காவல்துறையினர், சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job