நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, August 17, 2024

வெளிநாட்டிலிருந்து வந்த கொலை உத்தரவு - அப்பாவி இளைஞனின் பரிதாபநிலை | Shooting Mistakes Sri Lanka Yesterday Boy Death


வெளிநாட்டிலிருந்து வந்த கொலை உத்தரவு - அப்பாவி இளைஞனின் பரிதாபநிலை
அனுராதபுரம், ஸ்ரீ புர, காவன்ந்திஸ்ஸபுர பிரதேசத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இலக்கு வைக்கப்பட்டவருக்கு பதிலாக அப்பாவி இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனது மனைவியின் முறைகேடான கணவனை கொலை செய்வதற்காக வெளிநாட்டில் மறைந்திருந்து போதைப்பொருள் வலையமைப்பை நடத்தும்  கடத்தல்காரர் ஒப்பந்தம் ஒன்று வழங்கியுள்ளார்.

அந்த ஒப்பந்தத்தின்படி வந்த துப்பாக்கிதாரிகள், கொலை செய்யவேண்டிய நபரை போன்று சாயலை கொண்ட இளம் விவசாயி மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக ஸ்ரீ புரா பொலிஸார் தெரிவித்துள்ளது.

தவறுதலாக கொலை

ஸ்ரீபுர, காவன்ந்திஸ்ஸபுர பிரதேசத்தில் விவசாயம் செய்து வந்த கே. டி. சந்தன மனோஜ் என்ற 26 வயது இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொல்லப்படவுள்ள நபரும், வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் போதைப்பொருள் வியாபாரியும் சில காலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நெருங்கிய நண்பர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மிருகங்களிடமிருந்து நெல்லைப் பாதுகாப்பதற்காக சென்றுக் கொண்டிருந்த ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தப்பியோடிய கொலையாளி

கொலை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டவரின் உருவமும், கொல்லப்பட்ட நபரின் உருவமும் ஒரே மாதிரியானவை எனவும், இந்த நபர் தவறுதலாக சுடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

T56 ஆயுதத்தால் இந்த கொலை மேற்கொள்ளப்பட்டதுடன், தப்பியோடிய கொலையாளிகளை கண்டுபிடித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள பல புலனாய்வுக் குழுக்களை ஈடுபடுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job